Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரியநேத்திரன் மட்டக்களப்பில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார் கார்த்திகை 27 இன்று 27/11/2020 மாலை 06.07 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் மண்முனைதென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம் உள்ளிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார நடைமுறைகளை பேணி விளக்கேற்றி மௌன அஞ்சலி வணக்கம் செலுத்தப்பட்டது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் தமது வீடுகளில் சம நேரத்தில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். https://www.meenagam.com/அரியநேத்திரன்-மட்டக்களப/

  2. மாங்குளத்தில் வெடித்தது உள்ளூர் தயாரிப்பு குண்டு! மேலும் ஒரு குண்டு மீட்பு! November 28, 2020 முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் நேற்று முன்தினம் (26.11.20) காலை கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளது. குறித்த கைக்குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக நேற்றைய தினம் (27) தடயவியல் காவற்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அதோடு குறித்த பகுதியில் வேறு வெடி பொருட்கள் இருக்கின்றதா என்பது தொடர்பில் சோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒரு கைகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதோடு குறித்த குண்டு உள்ளூர் பகுதியில் தயாரி…

  3. விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டுபவர்கள் - அவர்களது சகாக்களுக்கு எதிராக இன்டர்போல்! இலங்கையில் எச்சரிக்கை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிதிசேகரிக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நேற்றைய தினம் நியமனம் பெற்ற அவர் செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைக் கூறியுள்ளார். இதன்போது பேசிய அவர், வெளிநாட்டில் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரிப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக இன்டர்போல், சிஐடி மற்றும் புலனாய்வு பிரிவினரின் உதவிகளை பெறவுள்ளோம். வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளிற்கு பலர் நிதி சேகரிக்கின்றனர்…

  4. ஜனாதிபதியின், பொது மன்னிப்பின் கீழ்... சிறைக்கைதிகள் விடுதலை சிறைகளில் கொரோனா தொற்று பரவுவதைக் கருத்திற் கொண்டு கைதிகள் சிலரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யத் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி 600 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்தும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என சிறைச்சாலை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/ஜனாதிபதியின்-பொது-மன்னி-5/

  5. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ளார். இதன்போது அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசின் முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக இலங்கை வரும் அஜித் டோவல், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக தமிழர் தரப்பு அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/139387/hhhh.jpg இதேவேளை கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாகவும் பேச்சுக்கள் நடைபெறும் என்றும் எதிர்…

    • 14 replies
    • 1.9k views
  6. இலங்கையில் மாவீரர் தினம்: தடையை மீறி கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள் படக்குறிப்பு, மாவீரர தினத்தையொட்டி தமது வீட்டு வாயிலில் கொடியேற்றி தீபமேற்றும் இலங்கை தமிழர் இலங்கையில் 36 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை அவர்களின் பற்றாளர்களும் இலங்கை தமிழர்கள் பலரும் நினைவுகூரும் மாவீரர் தினம் புதன்கிழமை (நவம்பர் 27) இலங்கையிலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழர் தொடர்புடைய கட்சியினராலும் அனுசரிக்கப்பட்டது. இலங்கை ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர் துறந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் உள்ளிட்ட போராளிகளுக்காக …

  7. விடுதலை வீரர்கள் என்றும் எம் இதயங்களில் வாழ்வார்கள் – தீபமேத்திய பின் விக்கினேஸ்வரன் November 27, 2020 “தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள் ஒவ்வொருவரும் எம் மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பர்.” தனது வாசஸ்தலத்தில் விடுதலை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய போது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார் https://thinakkural.lk/article/93260

  8. கஜேந்திரகுமாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு November 27, 2020 அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் இந்த வழக்கை தன் சார்பில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை டிசெம்பர் 18ஆம் திகதி அழைக்கப்படும் எனத் தவணையிட்ட யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம், பிரதிவாதிகளை மன்றில் முன்னிலையாக அறிவித்தல் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை நீக்கியதற்கு தடை …

  9. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகம் இன்றைய தினம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்ட நிலையில் எண்ணெய் விளக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இது பற்றி தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவிக்கையில், இம் முறை இறந்தவர்களை பொது இடங்களில் நினைவில் கொள்வதை என்னையும் பிரதிவாதியாகக் கொள்ளப்பட்டு பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாயிலாக நீதிமன்றம் தடைசெய்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பினை நான் மதிக்கின்றேன். அதனை மீறமுடியாது. மீறுவது சட்டப்படியான குற்றமாகவுள்ளது. மேலும் தவிசாளரான எனக்கு எதிராக மாவீரர் தின பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளதாக புலனாய்வு அறிக்கையினைக் கொண்டு மல்லாகம் நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. …

    • 1 reply
    • 572 views
  10. முல்லைத்தீவு நகரில் திரும்புமிடமெல்லாம் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர்- அச்சத்தில் உறைந்துள்ள மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முல்லைத்தீவு கடற்கரை வளாகத்தில் 2009க்கு முன்னர் கடற்புலிகளின் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த வளாகத்தில் கடந்த வருடங்களில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் பிரமாண்டமாக இடம்பெற்றன இம்முறை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை தொடர்ந்து குறித்த இடத்தில் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிசார் நீதிமன்ற கட்டளையை மீறி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவிடாது தடுக்கும் முகமாக குறித்த பகுதி வீதியெங்கும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியை விடவும் முல்லைத்தீவு நகருக்குள் திரும்பும் …

    • 6 replies
    • 871 views
  11. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது இல்லத்தில் இன்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/139507/IMG-20201127-WA0023.jpg அவரது இல்லத்தில் இடம் பெற்ற நிகழ்வில் நினைவுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் வடபோர்முனைக் கட்டளைத்தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப் கேணல் கில்மன் ஆகியோரின் தந்தை ஏற்றினார். தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் “தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள்…

  12. கஞ்சிகுடியாறு குளத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும்திட்டம் SAVITHNovember 26, 2020 (காரைதீவு நிருபர் சகா) திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட பாரிய நீர்ப்பாசனக்குளமான கஞ்சிகுடியாறு குளத்தில் ஒரு லட்சத்து50ஆயிரம் திலாப்பியா (செல்வன்) மீன்குஞ்சுகளை விடும் திட்டம் நேற்று(24) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது. அதனூடாக அப்பிரதேசத்திலிருக்கக்கூடிய பின்தங்கிய கிராமங்களின் மீனவர் சமுதாயத்திற்கான புதிய வாழ்வாதாரத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.ஜக்கிய அமெரிக்காவின் "அன்புநெறி" அமைப்பின் அனுசரணையுடன் IMHO அமைப்பின் பரிந்துரைக்கமைவாக் அசிசிஸ்ற் ஆர்ஆர்(Assist RR) அமைப்பு இவ்வேலைத்திட்டத்தை அமுல்படுத்துகிறது. இதற்கு கிழக்குமாகா…

  13. மாவீரர் நாள் நினைவேந்தலை தடுக்கும் நோக்கில் யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு செல்லும் இராசபாதை வீதி இன்று (27) மாலை முதல் இராணுவத்தால், பாரிய பவுசர் ஒன்று வீதியின் குறுக்காக நிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளது. அத்துடன் இதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வீதியில் பவுசரை நிறுத்த இராசபாதையை முடக்கியது இராணுவம்! | NewUthayan

  14. (நா.தனுஜா) காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அந்த அலுவலகத்தினால் காணாமல்போனோர் பெயர்ப்பட்டியலொன்று வெளியிடப்பட்டிருக்கிறது. எனவே அதனடிப்படையில் இனியேனும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதியையும் உண்மையையும் இழப்பீட்டையும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியிருக்கிறது. சர்வதேச மன்னிப்புச்சபையால் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின்படி காணாமல்போனோரின் குட…

  15. மட்டக்களப்பில் மலையகத்தைப் போன்று பனி மூட்டம் (வ.சக்திவேல்) மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் பனிமூட்டம் காணப்பட்டது. இந்தப் பனிமூட்டம் வழமைக்கு மாற்றமாக மலையகத்தைப் போன்று படர்ந்திருந்ததைக் காண முடிந்தது. சூரியன் உதயமாகி கதிர்கள் பரப்பியிருந்தபோதும் பனிமூட்டம் காரணமாக இருள் கௌவி இருந்ததால் வாகனங்கள் முகப்பு வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டே பயணிக்க வேண்டியிருந்தது. இந்தப் பனி மூட்டம் வெள்ளிக்கிழமை (27) காலை 8 மணி வரை படர்ந்திருந்து மெல்ல மெல்ல அகன்றது. மட்டக்களப்பில் மலையகத்தைப் போன்று பனி மூட்டம் – Thinakkural

  16. வாழ்த்து தெரிவித்த நால்வர் கைது கனகராசா சரவணன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66ஆவது பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவரின் புகைப்படத்தை முகநூலில் நேற்று வியாழக்கிழமை (26) பதிவேற்றிய பிறந்ததின வாழ்த்து தெரிவித்த மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 4 பேரை நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை 3 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்துக்கு வாழ்த்து செங்கலடி, சித்தாண்டி, மொறக்கட்டா…

  17. பெசில் மேல் நீதிமன்றில் விடுத்த கோரிக்கை! கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான 2,992 மில்லியன் நிதியை செலவிட்டு திவிநெகும பயனாளிகளுக்கு வீட்டு உதவி வழங்கியதன் ஊடாக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க வாதி தவறிவிட்டார் என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கொழும்பு மேல் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் இருந்து பிரதிவாதியின் அறிக்கையை அழைக்காமல் தன்னை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்குமாறு கோரி பெசில் ராஜபக்ஷ தனது சட்…

  18. பொலிஸ், சிவில் அதிகாரங்களை உள்ளடக்கிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமனம்.! இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமைச்சுக்களில் ஒன்றாகிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னர் குறித்த நியமனம் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் அதிகாரம் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரம் என்பன பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்ப அமைச்சுக்கள் சில நாட்களுக்கு முன்னர் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே. மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத…

    • 5 replies
    • 550 views
  19. மாவீரர் தினத்தை காரணம் காட்டி மர நடுகைக்கும் தடை மாவீரர் நாள் இடம்பெறும் இந்த வாரத்தில் மரம் நடுகையையும் மேற்கொள்ள முடியாது என மாங்குளம் பொலிஸார் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (25) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட செயலாளர் தவபாலன் தலைமையில் மக்களுக்கு தென்னம் பிள்ளைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை அவ்விடத்துக்கு சென்ற பொலிஸார் மரம் வழங்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரி தடை செய்த்துடன் இந்த வாரத்தில் சிரமதானம் செய்வதோ, மரம் நடுவதோ, வறுமையில் வாடுபவர்களுக்கு உதவிகள் வழங்குவதோ செய்யமுடியாது. மீறிச்செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். மாவீரர் நாள் இன்ற…

    • 2 replies
    • 476 views
  20. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியவர்கள் கைது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி, முகநூல் ஊடாக பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு முகநூல் ஊடாக பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை, ஏறாவூரில் 23பேரும் களுவாஞ்சிக்குடியில் 3பேரும் குறித்த செயற்பாடுகளுக்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் அணியை சேர்ந்த ம…

    • 2 replies
    • 515 views
  21. யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூரும் மாவீரர் நாள் இன்று இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூரும் மாவீரர் நாள் இன்று (வெள்ளிக்கிழமை) வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரினாலும் நினைவு கூறப்படுகின்றது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது போராளியாக கருதப்படும் சங்கர் என்ற செ.சத்தியநாதன், உயிரிழந்த நாளை மையப்படுத்தி, 1989ம் ஆண்டு முதல் மாவீரர் நாள் வடக்கு, கிழக்கு மக்களினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இவ்வருடம் கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களினால் மாவீரர் நாளை பொதுவெளியில் மக்கள் ஒன்றுத்திரண்டு அனுஷ்டிப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில…

  22. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) எமது மக்கள் தமது உறவுகளை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கின்றனர். அதனை தடுப்பது துரதிஸ்டவசமானதும் எமது மக்களை அவமதிக்கும் செயலாகவும் அமைந்துள்ளது. அரசாங்கம் ஏன் நினைவேந்தலுக்கு அஞ்சுகின்றது. அவர்களை கொடூரமாக கொலைசெய்த காரணத்தினாலா அல்லது சர்வதேச சட்டத்தை மீறிய செயற்பாடுகள் இடம்பெற்ற காரணத்தினாலா நினைவேந்தளுக்கு அஞ்சுகின்றீர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று ஊடகம், வெளிவிவகார அமைச்சுகள் மற்றும் பிராந்திய உறவு அலுவல்கள் இராஜாங்க அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்,…

    • 4 replies
    • 821 views
  23. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு (நா.தனுஜா) காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதற்குக் கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் காணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலொன்றை வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலை கொழும்பிலுள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திலும் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மாத்தறையிலுள்ள அதன் பிராந்திய அலுவலகங்களிலும் பார்வையிட முடியும். காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கு நேரடியாகக் கிடைத்த முறைப்பாடுகள், மாவட்ட செயலகங்கள் மூலமாகப் பெறப்பட்டு, பின்னர் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஊடாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் காணாம…

  24. பொத்துவில் ஊறணி மக்களின் காணி விரைவில் கிடைக்கும்: கருணா அம்மான் (காரைதீவு நிருபர் சகா) பொத்துவில் 60ஆம் கட்டை ஊறணி மக்களின் நீண்டகால பிரச்சினையான தாம் குடியிருந்த காணிகள் மிக விரைவில் மீண்டும் பெற்றுக்கொடுக்கப்படும். இவ்வாறு நேற்று அங்கு விஜயம் செய்த பிரதமரின் மட்டு.அம்பாறை இணைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணாஅம்மான்) மக்கள் மத்தியில் தெரிவித்தார். பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஊறணி 60ஆம் கட்டை காணிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக கருணா அம்மான் நேற்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் இ.வ.கமலராஜன் ம…

    • 3 replies
    • 459 views
  25. இலங்கை நாடாளுமன்றில் தலைவர் பிரபாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து! “எங்களுடைய இனத்துக்காக போராடிய எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் இன்று(26) தெரிவித்தார். வரவு செலவுக் கூட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். “மகாவலி அபிவிருத்தி நடவடிக்கைகள் இராணுவத்தினருக்கு ஒத்த மாதிரியே இருக்கின்றன. தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. வவுனியா, முல்லைத்தீவில் 10 சிங்கள கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. வனவளங்கள் …

    • 3 replies
    • 707 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.