Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புராதன இடங்களை அடையாளப்படுத்த விசேட குழு தொல்பொருள் திணைக்களத்தினால் அனுப்பி வைப்பு Dicksith மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புராதன இடங்கள் என தொல்பொருள் திணைக்களத்தினால் பட்டியலிடப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டு அவற்றை அளவைமேற்கொண்டு எல்லைப்படுத்தவென விசேட குழுவொன்று தொல்பொருள் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்விசேட குழு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான க.கருணாகரணை இன்று (26) மாவட்ட செலயகத்தில் வைத்து சந்திப்பொன்றை மேற்கொண்டது. இக்குழுவின் முதற்கட்ட செயற்பாடாக ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 102 இடங்களைப் பார்வையிட்டு அளவை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.இதன்போது அரசா…

  2. தமிழ் அரசு கட்சிக்குள் குழு செயற்பாடு தொடர்ந்தால் கூட்டமைப்பை விட்டு வெளியேறுங்கள்: இரகசியமாக கூடி ரெலோவிற்கு அங்கீகாரமளித்தது தலைமைக்குழு! October 25, 2020 இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் எம்.ஏ.சுமந்திரன்- சி.சிறிதரன் கூட்டு தொடர்ந்து கூட்டமைப்பு செயற்பாடுகளிற்கு எதிராக செயற்பட்டால், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி புதிய தமிழ் தேசிய அணியொன்றை உருவாக்க தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு நேற்று (24) அங்கீகாரம் அளித்துள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு நேற்று வவுனியாவில் கூடியது. வழக்கத்தை போல ஆர்ப்பாட்டங்களின்றி காதும் காதும் வைத்ததை போலவே இந்த தலைமைக்குழு கூடியது. இதன்போது, எட்டு தலைமைக்குழு உறுப்பினர்க…

    • 3 replies
    • 672 views
  3. யாழில் முஸ்லீம் மக்களை மீளவும் குடியமர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் – நியாஸ் யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் மீளவும் குடியமர்த்துவதற்கான ஒழுங்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளவில்லை என யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நியாஸ்( நிலாம்) தெரிவித்துள்ளார். கடந்த யுத்த அனர்த்தம் காரணமாக 1990 ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் 30 ஆண்டுகளுக்கு பின்னரும் சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்படவில்லை என்பதை கருத்திற்கு கொண்டு இனிவரும் காலங்களில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஒக்டோபர் 25 ஆம் திகதியுடன் முஸ்லீம் மக்கள் இடம்பெயர்ந்த 30 வருட நிறைவை முன்னிட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில் இவ்வேண்டுகோளை கேட்டுள்ளார்.…

  4. மக்களுக்கு சேவையாற்றவே இருபதுக்கு ஆதரவளித்தேன் மக்களுக்கு சேவையாற்றுவதனை நோக்காக கொண்டே 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தாக பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். பொதுஜன முன்னணி அரசாங்கம் எதிர்வரும் 10,15 வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இவ்வாறு இருக்கும் போது எதிர்க் கட்சியில் இருந்துக் கொண்டு மக்கள் நலன்சார் விடயங்களை முன்னெடுக்க முடியாது. எதிர்க் கட்சியில் இருந்துக்கொண்டு வெறுமனே கொள்ளை அரசில் பேசிக்கொண்டிருக்க முடியாது. கடந்த தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியுள்ளேன். அவ்வாறு வழங்கப்பட்ட உறுதிமொழியை காப்பாற்ற வ…

    • 2 replies
    • 668 views
  5. மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், மேல் மாகாணத்துக்கு மட்டுமல்ல கிளிநொச்சியிலும் நிறைய சேவை செய்ய விரும்பினார். அவர் செய்ய நினைத்ததை கட்டாயமாக நிறைவேற்ற வேண்டுமென நாங்கள் தீர்மானித்துள்ளோம் என்று அவரது மகனும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (26) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும், “எனவே தான் இங்கு 35 மில்லியனை ஒதுக்கியுள்ளோம். இங்கே 28 ஆயிரம் வீடுகளை கட்டுவதாக ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்திருந்தார். அதையும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். என்னை பொறுத்தவரை நான் சொன்னதைச் செய்வேன். உங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் கட்டாயம் செய்வோம். நான் தமிழ் பேசும் அமைச்சர், அதிலும் இளமையான அமைச்சராக இருக்கிறேன். நான…

  6. இயல்பு நிலைமை பாதிக்காதவாறு சுகாதார வர்த்தமானி அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்ற வேண்டும் என இன்றைய (26) கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். வடமாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “வடமாகாணத்தின் கொரோனா தொடர்பான கூட்டத்தில் பொதுவாக மாவட்டங்களுடைய நிலைமைகள் ஆராயப்பட்டு அதனடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிலவரங்கள் பற்றி ஆராய்ந்து அறியபட்டதோடு. அங்குள்ள தொற்று நிலைமைகளுக்கு ஏற்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டன என்பது பற்றியும் ஆராயப்பட்டது. மேலும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள சட்ட ரீதியான ஏ…

  7. கொரோனா தொற்று உறுதியான நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை இனிமேல் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா, இன்று (26) முதல் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள் என்றும் கூறினார். https://newuthayan.com/தொற்றாளியுடன்-தொடர்புடை/

  8. நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என்ற செய்திகளுக்கு மௌனம் காக்கும் பசில் by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/10/Basil.jpg எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என்ற செய்திகளுக்கு பதிலளிக்க முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மறுத்துவிட்டார். அரசியலமைப்பின் 20 வது திருத்தம் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான பாதையை உருவாக்க பயன்படுத்தப்படவுள்ளது என்ற ஊகங்கள் காணப்பட்டன. இருப்பினும் இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பசில் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். தன்னை நாடாளுமன்றத்திற்கு அழைத்துவர பயன்படுத்தப்படுகிறது என கூறி 20…

    • 0 replies
    • 369 views
  9. தமிழ் தேசியக் கூட்டமைப்பு கல்முனை நகரை பறிக்க முற்பட்டது – ஹரீஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக கல்முனை நகரை எம்மில் இருந்து பறிக்க முற்பட்டது என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் குற்றம்சாட்டியுள்ளார். கல்முனை பகுதியில் 20 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் தன்னிலை விளக்கம் அளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , ”தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக கல்முனை நகரை எம்மில் இருந்து பறிக்க முற்பட்டது.வடகிழக்கில் உள்ள கூட்டமைப்பு உறுப்பினர்…

  10. புலிகள் மீதான தடையை நீக்காது பிரிட்டன் அரசு! - கெஹலிய நம்பிக்கை.! "தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை பிரிட்டன் அரசு தடை செய்தது தவறு என்று பிரிட்டனில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான விசேட ஆணையம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும் அதைப் பிரிட்டன் அரசு நடைமுறைக்குக் கொண்டு வரும் என்று நாம் நம்பவில்லை." - இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "வெளிநாடுகள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடைப் பட்டியலிலிருந்து நீக்கினாலும் இலங்கை அரசு ஒருபோதும் அதைச் செய்யவே மாட்டாது. நாட்டில் மீண்டும் ஒரு போரை - இரத்தக்களரியை நாம் விரும்பவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மோசமான பயங…

  11. மோடி - கூட்டமைப்பு பேச்சு தாமதமாகலாம் என்கிறார் சம்பந்தன்.! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான பேச்சு தாமதமாகலாம் என்று தெரியவருகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், "நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் எமது கட்சியுடன் பேசுவதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆர்வம் காட்டியிருந்தார். எனினும், தற்போதைய சூழ்நிலையில் இந்தப் பேச்சு இப்போதைக்கு நடைபெறுமா என்பது தெரியவில்லை. இந்தியப் பிரதமர் மோடியே கூட்டமைப்பினரை பேச்சுக்கு அணுகினார். ஆதலால் இந்தியத் தரப்பினரே சந்திப்புக்கான காலத்தை ஒழுங்குசெய்வார்கள் என்று எதிர்பார்த்துள்ளோம். இந்தப் பேச்சு இணைய தொடர்பாடல் மூலம் நடைபெறும் என்றே நம்புகி…

  12. அச்சுறுத்தலாக மாறியுள்ள தனிமைப்படுத்தல் நிலையம் : பாதுகாப்பை பலப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை யாழ். கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் சுகாதார அமைசரசின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதியில் இருந்து பலர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதுவரை 3 பேர் வரையில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம். கடந்த முறை இதே போன்று தனி…

  13. அர்த்தமற்ற அரசியல் நிலைப்பாட்டில் முஸ்லிம் கட்சிகள்: கூட்டமைப்பு விசனம் (ஆர்.ராம்) முஸ்லிம் சகோதரர்களின் தேசிய கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன அர்த்தமற்ற அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது. மு.க.வின் தலைமை தவிர்ந்த ஏனைய நான்கு உறுப்பினர்களும் அ.இ.ம.க. தலைமை மற்றும் ஒரு உறுப்பினர் தவிர்ந்த ஏனைய இருவரும் 20ஐ ஆதரிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிர்ச்சிகலந்த வியப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிரணியில்…

    • 2 replies
    • 802 views
  14. மட்டக்களப்பு நகரில் ஒன்றுகூடியவர்களினால் பதற்றம் October 25, 2020 Share 36 Views மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் தொடர்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மட்டக்களப்பு நகரில் இன்று ஒன்று கூடியவர்களினால் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இது தொடர்பில் தெரியவருவதாவது, ஜனாதிபதி கோட்டபாயாவின் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சிபாரிசின் கீழ் நியமனம் பெற்றவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு தேவநாயகம் மண்டபத்தில் …

  15. சர்வதேச அல்லது கலப்பு நீதிமன்ற விசாரணையை நான் கோரி வருகிறேன் -டாக்டர் மனோகரன் 30 Views ஓய்வு பெற்ற வைத்தியரும் 2006 ஜனவரியில் திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தையுமான திரு மனோகரன் அவர்கள், நீதிக்குப் புறம்பான பாரிய மனித உரிமை மீறலுக்கு நீதி கோரி கடந்த 14 ஆண்டுகளாகப் போராடி வருகிறார். அவரது இந்தக் காத்திரமான தொடர் முயற்சி தொடர்பாக இலக்கின் நூறாவது சிறப்பிதழுக்காக செவ்வி கண்டோம் . கேள்வி: தாயகத்தில் மருத்துவராக மனிதநேயப் பணியாற்றிய நீங்கள், உலக மன்றில் மனித உரிமை கோரிப் போராட நேர்ந்த 14 ஆண்டுகளைப் பற்றி விளக்கமாகக் கூற முடியுமா? பதில்: 2006 ஜனவரி மாதம் 2ஆம் திக…

  16. வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோருக்கு முக்கிய அறிவித்தல் நாட்டின் தென் பகுதிகளில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கம்பஹா மாவட்டம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, குருநாகல் மாவட்டங்களில் சில பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான பகுதிகளில் வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோர் அவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பான அ…

  17. விடுதலைப் புலிகள்: 33 வருடங்களின் பின் பௌத்த பிக்குகள் கொலை வழக்கு - தமிழர்கள் படுகொலை விசாரணை எப்போது? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக, இலங்கை 24 அக்டோபர் 2020 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராஜபக்ஷ ஆட்சியில் சகல காணாமலாக்கல்களையும் வெளிப்படுத்தக் கோரி பிப்ரவரி 11, 2020 நடந்த போராட்டம். அம்பாறை - அரந்தலாவ பகுதியில் பிக்குகள் உள்ளிட்ட 33 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் 33 வருடங்களின் பின்னர் ஆரம்பித்துள்ளது. அரந்தலாவ பகுதியில் 1987ஆம் ஆண்டு நடத்தப்பட்ட படுகொலை சம்பவம் தொடர…

  18. பொலிஸ், காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் சாத்தியம் இல்லை: நீதி அமைச்சர் புதிய அரசியலமைப்பிலும் பொலிஸ், காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் சாத்தியம் இல்லை; முஸ்லிம் விவாக சட்டங்களில் மாற்றம் - நீதி அமைச்சர் தெரிவிப்பு

    • 0 replies
    • 442 views
  19. முல்லையின் எல்லையிலுள்ள தமிழ் மக்களின் பகுதிகளை மகாவலிக்குள் உள்வாங்கத் திட்டம்; ரவிகரன் October 24, 2020 விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறத் தமிழ்க் கிராமங்களான நாயாற்றிற்குத் தெற்கேயுள்ள, கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய்மேற்கு, கருநாட்டுக்கேணி , கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய ஆறு தமிழ் கிராம அலுவலர் பிரிவுகளையும், மகாவலி அபிவருத்தி அதிகாரசபை தமது எல்லைக்குள் உள்வாங்குவதற்கு முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகத்திடம் கோரியிருந்தது. இந் நிலையில் இவ்விடயத்தினை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுடைய கவனத்திற்குக் கொண்டுவந்ததையடுத்து, அவர் இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு கோரி, பதின் …

  20. யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரி, வல்வெட்டித்துறை பகுதிகளிலும், கிளிநொச்சியிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நெடுங்கேணி பிரதேசத்தில் மாகா ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்களே இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுள்ள மாகா நிறுவனத்தின் ஊழியர்கள் தொடர்ந்து தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இன்றும் மேலும் 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் மேற்படி மூவரும் உள்ளடங்குகிறார்கள். https://www.pagetamil.com/152798/

  21. கிளிநொச்சியில் ஒரு வருடத்தில் 18 மில்லியன் கிலோ கிராம் இரசாயன உரமும், 45 ஆயிரம் லீற்றர் கிருமி நாசினியும் பயன்படுத்தப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வருடம் தோறும் நெற்செய்கை 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது. காலபோகத்தில் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும், சிறுபோகத்தில் 20 ஆயிரம் ஏக்கபர் பரப்பளவுமாக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் போது ஒரு ஏக்கர் நெற் பயிர்ச்செய்கைக்கு அடி உரம், வீ1, யூரியா, ரிஎஸ்பி, ரிடிஎம் போன்ற இரசாயன உரங்கள் சுமார் 200 கிலோ கிராம் பயன்படுத்தப்படல் தேவை எனவும், சில சந்தர்ப்பங்களில் இது 225 கிலோ கிராம் அல்லது 175 கிலோகிராம் என கூடி குறையும் எனவும் தெரிவிக்கும் விவசாயிகள் சராசரியாக ஒரு ஏக்கர் நெற் பயிர்ச்செய்கைக்கு 200 க…

  22. முஸ்லிகளின் வாக்குகளினாலே 20ஐ நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது - முஜிபுர் ரஹ்மான் (ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்) 20ஐ நிறைவேற்றிக்கொள்ள ஆதரவளித்த முஸ்லிம் உறுப்பினர்களின் நடவடிக்கையை கருத்திற்கொண்டேனும் கொரோனா தொற்றில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று கொரோனா சுகாதார நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்று தொடர்பில் உலக சுகாதார அமைப்பு விடுத்திருக்கும் வழிகாட்டலின் அடிப்படையிலே செயற்படுவதாகவும் அதனை மீறி செயற்படுவ…

    • 5 replies
    • 1k views
  23. வவுனியா கொரோனா தொற்றாளர்கள் சாவகச்சேரி, வல்வெட்டித்துறை, கிளிநொச்சியை சேர்ந்தவர்கள்! by : Litharsan http://athavannews.com/wp-content/uploads/2020/10/Coronavirus-Alert-Situation.jpg வவுனியா, நெடுங்கேணி வீதி சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இன்று (சனிக்கிழமை) தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் இருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் எனவும் வடமாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளர். யாழ்ப்பாணத்தில், சாவகச்சேரி மற்றும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது. வவுனியா, பிரா…

    • 0 replies
    • 304 views
  24. திருக்கோவில் பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கியுடன் 5 பேர் கைது! SAVITHOctober 24, 2020 அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் துப்பாக்கிகளுடன் 5 பேரை இன்று(24) அதிகாலை கைது செய்துள்ளதுடன் 5 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர். திருக்கோவில் பொலிசாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயவீரா தலைமையிலான பொலிசார் சம்பவதினமான இன்று அதிகாலையில் விநாயகபுரம், திருக்கோவில், தம்பிலுவில் காஞ்சரம்குடா பிரதேசத்தில் உள்ள வீடுகளை சுற்றிவளைத்து சோதனையிட்டனர். இதன்போது மறைத்துவைக்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பான 5 சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்டதுடன் 5 பேரை கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்…

  25. கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா! நிலைமை கவலைக்கிடம்; சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை October 24, 2020 காரைதீவு சகா கிழக்கு மாகாணத்தில் ஒரேநாளில் 27 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். பொதுமக்கள் இதுவிடயத்தில் உதவவேண்டும். இன்றேல் கிழக்கில் கொரோனா பரவுவதை தடுக்கமுடியாது போகலாம். இவ்வாறு கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திகலாநிதி டாக்டர் அழகையா லதாகரன் எச்சரித்துள்ளார். அவர் மேலும் சமகாலநிலைமை தொடர்பில் தெரிவிக்கையில்: கிழக்கு மாகாணத்தில் திருமலை மாவட்டத்தில் 06பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11பேரும் கல்முனைப் பிராந்தியத்தில் 09பேரும் அம்பாறையில் ஒருவருடாக கொரோனாத் தொற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.