நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2474 topics in this forum
-
ஈழத்தில் மிக பிரபல்யமான காலை உணவு என்று இதை சொல்லலாமா? பெயர் கூட ஊருக்கு ஊர் மாறி இருக்கலாம்.. ஆரம்பத்தில் நான் இந்த பதார்த்தத்தை அப்பப்பா வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன். ஒரு தடவை வரணி சென்ற போது, பனாட்டுடன் சாப்பிடுவதை கண்டேன். சிலர் சுட்ட கருவாடுடனும் சாப்பிடுவார்களாம். அடுத்து ஊறுகாய், வற்றல் மிளகாயுடனும் சாப்பிடுவதுண்டு. இதை சமைப்பது மிக மிக இலகு. சோறு/சாதம் சமைக்க தெரிந்தவர்களுக்கு, இது ஒரு பெரிய விடயமே அல்ல. செய்முறையை பார்க்க: http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...st_27.html#more
-
- 8 replies
- 3.7k views
-
-
பயத்தம் பருப்பு தோசை.. வழக்கமான தோசை சாப்பிட்டு அலுத்துப் போனவர்கள் மாறுதலுக்கான பயத்தம் பருப்பு தோசை செய்து சாப்பிடலாம். அதற்கான செய்முறை இதோ. தேவையானவை: பச்சரிசி - 1/2 ஆழாக்கு பயத்தம் பருப்பு - 1 ஆழாக்கு பச்சை மிளகாய் - 2 மிளகாய் வற்றல் - 2 பெருங்காயம் - சிறிது வெங்காயம் - 1 (பெரியது) தேங்காய் - 1 மூடி (துருவியது) உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளவும். அரிசி, பருப்பை தனியே ஊறப் போடவும். இரண்டையும் அரைத்து, மிளகாய், பெருங்காயத்தையும், உப்பையும் சேர்த்து அரைக்கவும். அரிந்த வெங்காயத்தையும் போட்டுக் கலந்து, மாவைக் கரைத்து, தோசைப் பதமாகச் சுடவும். இரண்டு பக்கமும் திருப்பிப் போ…
-
- 4 replies
- 3.7k views
-
-
வெந்தயக்கீரை மீன் குழம்பு வெந்தயக்கீரையின் கசப்புத்தன்மை குழந்தைகளுக்கு பிடிக்காது. ஆனால் அவைகள் நமது உடல் சூட்டை தனித்து நமக்கு குளிர்ச்சி அளிப்பவை. ஆகையால் இந்த கீரையை மீன் குழம்புடன் சேர்த்து சமைக்கும் போது, மீன் குழம்பின் சுவை அதிகரிப்பதோடு, உப்பு, புளி, காரம் சரியான பக்குவத்தில் சேர்த்தால் கீரையின் கசப்புத்தன்மையே தெரியாமல் குழந்தைகள் கூட சாப்பிட்டு விடுவார்கள்! தேவையான பொருட்கள்: வஞ்சிரமீன் - 1/2 கிலோ வெங்காயம் 200 கிராம் தக்காளி - 350 கிராம் தக்காளி பேஸ்ட் - 50 கிராம் பச்சை மிளகாய் - 2 மிளகாய் தூள் 2 டீ ஸ்பூன் தனியாத்தூள் 2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள், சீரகத்தூள் தலா - 1/2 டீ ஸ்பூன் உப்பு - ருசிக்கு தேவையான அளவு வெந்தயம் -…
-
- 15 replies
- 3.7k views
-
-
தேவைப்படும் பொருட்கள்: * கோழி இறைச்சி- ஒரு கிலோ * பிரியாணி அரிசி- ஒரு கிலோ * பெரிய வெங்காயம்- அரை கிலோ * நெய்- கால் கிலோ * ப.மிளகாய்- 100 கிராம் * இஞ்சி- 50 கிராம் * பூண்டு- 50 கிராம் * கசகசா- ஒரு தேக்கரண்டி * தயிர்- ஒரு கப் * முந்திரி பருப்பு-20 கிராம் * உலர் திராட்சை-20 கிராம் * மல்லி இலை- ஒரு கட்டு * புதினா இலை- அரைகட்டு * எலுமிச்சம் பழம்- ஒன்று * பன்னீர்- 2 மேஜைக்கரண்டி * மஞ்சள் நிற உணவுத்தூள்- சிறிதளவு * கறிமசால் தூள்-3 தேக்கரண்டி * தக்காளி- 100 கிராம். * உப்பு- தேவைக்கு செய்முறை: + கோழி இறைச்சியை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். + பெ.வெங்காயத்தை ந…
-
- 7 replies
- 3.7k views
-
-
ப்ரோக்கோலி திக் சூப் ப்ரோக்கோலி பலவகையான சத்துக்களை கொண்ட ஒரு காய் வகை. பார்பதற்கு பச்சை நிற காளிப்பிலவரை போல தோன்றும் இந்த ப்ரோக்கோலியை வைத்து சூப் செய்வது எப்படி என பார்ப்போம் தேவையானவை ப்ரோக்கோலி - 1 பெரிய பூ கேரட் - 1 உருளை கிழங்கு - 1 சிக்கென் குயூப் - 1 சிறியது உப்பு - தேவைகேற்ப பால் - 1 கப் செய்முறை குறிப்பிடப்பட்டுள்ள காய்கறிகளை பொடியாக நறுக்கிகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால், நீர்,சிக்கன் குயூப் மற்றும் வெட்டி வைத்த காய்கறிகளை சேர்த்து வேகவைக்கவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும் ப்ளென்டரில் போட்டு மை போல அரைக்கவும். அரைத்ததை மறுபடியும் பாத்திரத்தில் ஊற்றி ஒரு கொதி வந்தததும் இறக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து பரிமாறவும் http://tamil.web…
-
- 18 replies
- 3.6k views
-
-
நேற்று சனவரி முதலாம் திகதி வழக்கம் போன்று சமைக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக சமைத்து வீட்டில் சாப்பிடுவம் என்று நினைத்து சமைத்து ருசித்த உணவு இது. Singapore Chilly crab curry என்பது உலகப் பிரசித்தமான ஒரு நண்டுக் கறி. சிங்கபூர் செல்லும் அசைவ பிரியர்கள் தவறாமல் உண்ணும் உணவு இது. அதைச் செய்யும் முறையை கூகிளின் உதவியுடன் பின் வரும் இணையத்தளத்தில் பார்த்து விட்டு அதில் உள்ளது போன்றே செய்யாமல் சின்ன சின்ன வித்தியாசங்களுடன் செய்து பார்த்தது. http://www.sbs.com.au/food/recipes/singapore-chilli-crab?cid=trending தேவையானவை: நண்டுகள்: 04 (நண்டுக் கறிக்கு நண்டு போடாமல் செய்ய முடியாது) பெரிய வெங்காயம்: 02 செத்த மிளகாய்: 15 (உறைப்பு கூடவாக இருக்க நான் 15 போட்டேன்) எண்ணெய்:…
-
- 11 replies
- 3.6k views
-
-
சுவையான செட்டிநாடு மட்டன் பிரியாணி மட்டன் -1/2kg மிளகாய் தூள்- 1tbsp மஞ்சள் தூள்- 1tbsp இஞ்சி பூண்டு பேஸ்ட் கருவேப்பிலை பாஸ்மதி அரிசி-3 கப் கெட்டி தயிர்-1கப் வெங்காயம் (பொடியாக நறுக்கியது)-2 தக்காளி(பொடியாக நறுக்கியது)-3 பெருஞ்சீரகம் -1tsp பிரியாணி இலைகள் கிராம்பு பட்டை ஏலக்காய் புதினா கொத்தமல்லி இலைகள் அரைக்க தேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய்-3 பச்சை மிளகாய்-4 வெங்காயம்-1/4 கப் பெருஞ்சீரகம் -1tsp கிராம்பு-4 ஏலக்காய்-6 பட்டை -2 இஞ்சி துண்டுகள் பூண்டு-15 புதினா இலைகள்-1/2 கப் செய்முறை: குக்கரில் சிறிது எண்ணெய்…
-
- 0 replies
- 3.6k views
-
-
தேவையானப் பொருட்கள் அரிசி - 2 கப் கத்திரிக்காய் - கால் கிலோ பெரிய வெங்காயம் - 4 தக்காளி - கால் கிலோ பச்சை மிளகாய் - 5 தயிர் - 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் தேங்காய்பால் - 1/2 கப் சோம்பு - 1/2 ஸ்பூன் பட்டை - 1 கிராம்பு - 1 மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன மல்லித்தூள் - 3 ஸ்பூன கடலைப்பருப்பு - 50 கிராம முந்திரி - 10 கிராம் எண்ணெய் – தேவையான அளவு நெய் - 50 கிராம் கறிவேப்பிலை - 1 கொத்து உப்பு - தேவையான அளவு செய்முறை: அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து அத்தனுடன் இஞ்சி பூண்டு விழுத…
-
- 8 replies
- 3.6k views
-
-
பயத்தங்காய் பலாக் கொட்டைப் பிரட்டல் இந்துக்களின் முக்கிய விரத நாட்களில் இக் கறியும் சமைக்கப்படும். திவசம், அமாவாசை, பௌர்ணமி போன்ற பிதுருக்கு படைக்க வேண்டிய படையலில் நிச்சயமாக இக் கறியும் இடம் பெறுவது வழக்கம். பீன்ஸ் இனத்தைச் சேர்ந்த இது புரொட்டின் சத்தும் கூடியது. விரத நாட்களில் மட்டுமின்றி வீடுகளில் சாதாரண நாட்களிலும் இது சமையலில் இடம் பிடிக்கும். நீண்ட முற்றல் இல்லாத ஊர்ப் பயிற்றங்காயாக இருப்பது சுவையைக் கூட்டும். இக்காயுடன் வாழைக்காய் அல்லது உருளைக் கிழங்கு சேர்த்து குழம்பு செய்வதுண்டு. இத்துடன் தேங்காய்ப்பால் வெள்ளைக்கறியும் சமைக்கலாம். பொரியல், கூட்டு செய்வதும் வழக்கம். முற்றிய விதைகளைப் பொரித்தெடுத்து சிப்ஸ்சும் செய்து கொள்வார்கள். …
-
- 1 reply
- 3.6k views
-
-
இட்லி மாவு அரைக்கும் போது.... கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
-
- 7 replies
- 3.6k views
-
-
ஆஹா என்ன சுவை! காரைக்குடி நண்டு மசாலா நண்டு மசாலா என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை ஒரு கை பார்த்துவிடுவார்கள், இந்த நண்டு மசாலா பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக சமைக்கப்படுகிறது. இதில் காரைக்குடி நண்டு மசாலா என்றால் தனி சிறப்புதான் இது மற்ற நண்டு மசாலாக்களை விட சற்று வித்தியாசமான சுவையுடையது. இந்த நண்டு மசாலாவை இட்லி, தோசை, சாதம் என எல்லாவகை உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.தேவையான பொருட்கள்:* நண்டு - 1 கிலோ* புளிக்கரைசல் - 1 கப்* பட்டை - 2* பிரியாணி இலை -2* சோம்பு - 1/2 டீஸ்பூன்* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்* வெங்காயம் - 100 கிராம்* தக்காளி - 2* பச்சை மிளகாய் - 2* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்மசாலாவிற்கு:*…
-
- 5 replies
- 3.6k views
-
-
இந்த சிங்கள கிராமிய சமையல் சேனல் லைப் பாருங்கள். மொழியே தேவை இல்லை. மிக அருமையாக தந்துள்ளார்கள். பின்னணி இசை, படப்பிடிப்பு என எம்மை தூக்கிக் கொண்டு போய் அப்படியே ஊரில் கொண்டு போய் சேர்த்து விட்டார்கள். தோட்டத்தில் வெங்காயத்தாளை புடுங்க்குவதாகட்டும், தம்பியர் விறகு வெட்டுவதும், அம்மம்மா வெங்காயத்தாளை சுத்தப்படுத்துவதும்.... தம்பியும், அக்காவும் சமைப்பதும் அருமை. பாராட்டாமல் இருக்க முடியாது.
-
- 38 replies
- 3.6k views
-
-
· முழு அயிலை (mackerel) சுத்தம் செய்தது - 10 · நல்லெண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன் · பெரிய வெங்காயம்- 2,தக்காளி - 3 சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். · புளி - எலுமிச்சை அளவு தண்ணீரில் கரைத்து புளி கரைசலை தயார் செய்யவும். · பச்சை மிளகாய் (கீறியது) - 3 · வெந்தயம் - 3டீஸ்பூன் · கடுகு - 2 டீஸ்பூன் · சீரகம் - 2 டீஸ்பூன் · பூண்டு - 4 · கறிவேப்பில்லை - 1 கொத்து · மீன் மசாலா தூள் - 3 டீஸ்பூன் · மஞ்சல் தூள் -1 டீஸ்பூன் · மிளகாய் தூள் -2டீஸ்பூன் · மல்லிப்பொடி - 2டீஸ்பூன் · தேங்காய்ப்பால் - 1 டம்ளர் · கொத்துமல்லி - 2 டீஸ்பூன் · வதக்கிய வெண்டைக்காய் (நறுக்கியது)-10 · உப்பு தேவைக்கேற்ப * அகன்ற பாத்திரம் சூட…
-
- 18 replies
- 3.6k views
-
-
இங்கு மழையும் நின்றபாடில்லை, நான் சூப் சமைப்பதும் நின்றபாடில்லை என்றாகிவிட்டது. பாவம் வீட்டில் உள்ளவர்கள் நிலமை கவலைக்கிடம் தான். ஆனாலும் எனக்கு கடமைன்னு வந்தால் பாசமெல்லாம் இரண்டாம் பச்சம் தான். சைவ சூப் என்பதால் அனைவயும் முயற்சித்துப்பார்க்கலாம். தேவையானவை: கரட் 1 பீன்ஸ் 5 மிளகு 5 சோளம் 1/2 கப் சோளமா 2 மே.க வினிகர் 1 தே.க சோய்சோஸ் 1 தே.க பச்சைமிளகாய் 2 உப்பு முதலில் செய்ய வேண்டியவை: 1. பச்சை மிளகாயை சின்னதாக அரிந்து எடுங்க. 2. கரட், பீன்ஸை சுத்தம் செய்து சின்னதா அரிந்து எடுங்க. 3. சோள மாவை 1/2 கப் நீரில் கரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்க. 4. மிளகை தூளாக்கி வைக்கவும். செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை சுட வை…
-
- 14 replies
- 3.6k views
-
-
* கோழி இறைச்சி துண்டுகள்- ஒரு கிலோ * தயிர்- அரை கப் * மிளகாய்த்தூள்- ஒன்றரை தேக்கரண்டி * மல்லித்தூள்- ஒன்றரை தேக்கரண்டி * கறிமசால்தூள்- அரை தேக்கரண்டி * இஞ்சி அரைப்பு- ஒரு தேக்கரண்டி * பூண்டு அரைப்பு- ஒரு தேக்கரண்டி * பெ.வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது- அரை கிலோ * தக்காளி நீளவாக்கில் நறுக்கியது- அரை கிலோ * மிளகாய்த்தூள்- நான்கு தேக்கரண்டி * மல்லித்தூள்- ஆறு தேக்கரண்டி * கறிமசால் தூள்- ஒரு தேக்கரண்டி * மல்லி இலை- ஒரு பிடி * கறிவேப்பிலை- ஒரு பிடி * ப.மிளகாய் நீளவாக்கில் நறுக்கியது- ஐந்து செய்முறை: தயிர் முதல் பூண்டு அரைப்பு வரையுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக்கி தேவைக்கு உப்பு சேர்த்து அ…
-
- 13 replies
- 3.6k views
-
-
ஆடி அமாவாசை விரதத்திற்கான சுவையான பாகற்காய் கறி தயாரிக்கும் முறை
-
- 34 replies
- 3.6k views
- 1 follower
-
-
பீட்றுட் வறை _____________ தேவையான பெருட்கள் 2பீட்றுட் 1 வெங்காயம் (சின்னனாக வெட்டப்படல்) 3பொல்லம் உள்ளி(சி--ன்-வெட்டப்படல்) கறிவேப்பிலை வறைக்குஅளவு தேவையான உப்பு (தே--எண்ணெய் தேவையான மஞ்சல் 3 செத்தல்மிளகாய் ( சி.ன்--வெட்டப்படல்) சிறிதளவு பெ--சீரகம் உடன் தேங்காய்புூ சிறிதளவு பீட்றுடை மேல்தோலை சீவிஅகற்றுங்கள் ( சீவிய பீட்றுட்டை நன்றாக தண்ணீரில் கழுவுங்கள்பின்னர் (பீட்றுட்டை சின்னனாக சிவுங்கள் (கரட் எப்படிசிவுறிங்களோ அதை மாதிரி (பீட்றுட்டை சிவுங்கள்) பின்னர் அதனுள் தேவையான ---தேங்காய்ப்புூ--உப்பு---மஞ்சல்---இவற்றை சேர்த்து பிசைந்து ஒரு 3நிமிடம் வையுங்கள் செய் முறை பாத்திரத்தை அடுப்பில் வைத்து தே-எண்ணெய் சிறிது விட்டு கொதித்து வரு…
-
- 8 replies
- 3.6k views
-
-
தேவையானப் பொருட்கள் வௌவால் மீன் - 2 புளி எண்ணெய் - 150 மி.லி. கடுகு - ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் - அரை கப் இஞ்சி - 2 மேசைக்கரண்டி (நறுக்கியது) பூண்டு - 3 மேசைக்கரண்டி (நறுக்கியது) மஞ்சள் - அரைத் தேக்கரண்டி பச்சை மிளகாய் - 4 மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி சோம்புத்தூள் - ஒரு தேக்கரண்டி கிராம்பு - 2 ஏலப்பொடி - அரைத்தேக்கரண்டி தேங்காய் - ஒன்று வினிகர் - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு செய்முறை மீனை நன்றாக கழுவி துண்டுகளாக்கிக் கொள்ளவும். நடுத்தரமான சைஸில் சுமார் 12 துண்டுகள் வருமாறு வெட்டிக் கொள்ளவும். புளியை அரை கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். அதில் உப்பு மற்றும் மீன் த…
-
- 10 replies
- 3.6k views
-
-
தேவையான பொருட்கள்:- கரட், கோதுமை பச்சைமா,கோதுமை அவித்தமா,சீனி,எண்ணை,தேவையான அளவு உப்பு,அடுப்பு,தாச்சிசட்டி,பண
-
- 6 replies
- 3.5k views
-
-
-
கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக் கொள்ள என்னவெல்லாம் அழகு சிகிச்கைகள் உள்ளன....? பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார் …இந்தியன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் பியூட்டி தெரபியின் இயக்குனர் ஹசீனா சையத். பழ பேஷியல் முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். …
-
- 7 replies
- 3.5k views
-
-
சமோசா-சுவையான திரையரங்கு இடைவேளை உணவு... ஸ்டஃப்பிற்கு தேவையான பொருட்கள்(சமோசாவின் உள்ளிருக்கும் கறி) உருளைக்கிழங்கு - 4 பட்டாணி - 1/2 கப் முந்திரி பருப்பு-25 கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி மிளகு - 1/4 தேக்கரண்டி உப்பு - தேவைக்கு வத்தல் தூள் - 1/4 தேக்கரண்டி மாங்காய் பவுடர் - 1 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி நெய் - 3 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி எண்ணெய் - 4 கப் (பொரிக்க) செய்முறை மிக சிறியதாக நறுக்கிய கேரட் உருளைக்கிழங்கையும்,பட்டணியையும் சேர்க்கவும்.சிறிது நேரம் கிளரி அதில் கரம் மசாலா,மிளகு,வத்தல் தூள்,மாங்கய் பவுடர்,சீரகத்தூள் சேர்த்து கலந்து விடவும் அத்துடன் கொத்த…
-
- 3 replies
- 3.5k views
-
-
யாருக்காவது கறிவேப்பிலை சட்னி செய்ய தெரியுமா? கறிவேப்பிலை சாப்பிட்டால் தலை முடி கறுப்பாக்கவும் அடர்த்தியாகவும் வளருமாம் .......இங்கு பலருக்கு இந்த பிரச்சனையுண்டு
-
- 10 replies
- 3.5k views
-
-
வணக்கம், இங்க கன பேருக்கு Yarl samayal எண்டு ஒரு யூடியூப் பக்கம் வச்சு இருக்க தெரியும், அந்த பக்கத்தில இது வரைக்கும் 250 க்கும் மேல உணவுகள் போட்டு இருக்கம், அதுல பெரும்பான்மையா யாழ்ப்பாணத்தில செய்யிற உணவுகளை எங்கட பாட்டி எப்பிடி செய்து காட்டிதந்தாவோ அதே மாதிரி செய்து காட்டிற வழக்கம். அத தனி தனி திரட்டுக்களா போடாம, ஒரு திராட்டா போடுறதுக்கு தான் இது. அதோட மட்டும் இல்லாம, உங்களுக்கு இருக்குற சந்தேகங்கள், அடுத்ததா நாங்க என்ன உணவுகள் செய்து காட்டலாம் எண்டு எல்லாம் நீங்க சொல்ல முடியும். அதே மாதிரி ஏதும் பிழைகள் விட்டாலும் நீங்க இதுல சொல்ல முடியும், வாங்க ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல செய்வம்
-
- 26 replies
- 3.5k views
-
-
தேவையான பொருட்கள் : மட்டன் கலவை: மட்டன் – 400 கிராம் தயிர் – 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் – ஒரு டேபிள்ஸ்பூன் மல்லி தூள் – ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் உப்பு – 1/2 டீஸ்பூன் * மேற்கூறிய அனைத்தையம் ஒன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். பாசுமதி அரிசி – 2 கப் பாசுமதி அரிசியை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, அலசி பிறகு வடிகட்டவும். நெய் – 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 நீளவாக்கில் நறுக்கிய தக்காளி – 1 இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன் மல்லி தூள் – 1 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் தயிர் – 1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி …
-
- 8 replies
- 3.5k views
-