Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பனங்காய்ப்பனியாரம். இங்கை பனங்கழி இல்லாமலே பனங்காய் பனியாராம் செய்யலாம் பாருங்கோ நல்ல பிங்சுகரட்டை எடுது தோலோடா அவியுங்கோ கரையவிடாமல். அப்புறமா தோலைசீவி அதுக்கு அளவான சீனி போட்டு நல்லா அரையுங்கோ அது பனங்கழி மாதிரி நல்லா வரும் வரை. அதுக்கு பிறகு அளவான கோதுமை மாவை போட்டு குழையுங்கோ. கொஞ்சம் பொங்குவதுக்கு அளவான பொடியும் போடுங்கோ 6 மணித்தியாலத்துக்குப் பிறகு எடுத்து சுடுங்கோ சரியா பனங்காய் பனியாரம் போல இருக்கு சாப்பிடு போட்டு சொல்லுங்கோ :wink:

    • 47 replies
    • 10.4k views
  2. சில வருடங்களாக நண்பர்கள்/உறவுகளாகிவிட்டோமே எப்போதும் தொந்தரவு குடுப்பது நியாயம் இல்லை என நினைத்து சில வாரங்களாக செய்முறைகள் எழுதுவதை தவிர்த்து வந்தேன். ஆனால் விதி வலியது என்பது எனக்கு சில நாட்களாக புரிகின்றது. காரணம் தொடர்ந்து என்னை சமையல் செய்முறைகளை எழுத சொல்லி வரும் கருத்துக்களும், மின்னஞ்சல்களுமே. இனிமேல் உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என சொல்லியபடியே மறுபடி சமையல்கட்டிற்குள் போகின்றேன். புதிதாக சமையல்கட்டிற்குள் நுழைந்திருக்கும் அன்பு அண்ணன் ஜோசப் பால்ராஜுக்காக [யாழ் கள சகோதரர்]ஒரு செய்முறை. [இந்த வாய்ப்பை விட்டால் ஜோண்ணா சமைக்க ஆரம்பித்திருப்பதை எப்படி தான் உலகிற்கு சொல்வது! கிகிகி] இச்செய்முறை விரைவில் செய்யக்கூடியது மட்டுமில்லாது உடலிற்கும் சத்துள்ள ஒர…

  3. வணக்கம், ரெண்டு நாளைக்கு முன்னம் ஒரு சின்னப்பிரச்சனை. என்ன எண்டால் வீட்டில இரவு சாப்பிடும்போது சோற்றுக்கு நல்ல கறி ஒண்டும் இருக்க இல்லை. வயிற்றில சரியான பசி. என்ன செய்வது எண்டு யோசிச்சுபோட்டு கடைசியாக ஒரு போத்தலுக்க இருந்த கடையில வாங்கி வச்சு இருந்த மிக்ஸரை (அந்த முறுக்கு, கச்சான், பருப்பு, கஜு, மிளகாய்த்தூள், உப்பு இந்தக்கலவை) சோற்றுக்க போட்டு கலந்து சாப்பிட்டன். பசியுக்கு நிறைவாக இருந்திச்சிது. இதுமாதிரி சிலவேளைகளில தயிர், ஊறுகாய், வேண்டுமானால் ketchup இதுகளையும் ஊத்தி வேற கறி ஒண்டும் போடாமல் சோற்றோட, புட்டு, பாணோட கலந்து சாப்பிடுறது. இப்பிடி வித்தியாசமான சாப்பாட்டு கலவைகளை நீங்களும் சாப்பிட்டு இருக்கக்கூடும். சின்னனில புட்டும், சம்பலும், சீனியும் கலந்து சாப்பிடுறத…

  4. யாழ்கள சமையல் விற்பனர்களே,விற்பினிகளே வெங்காயத்தோசை செய்வது எப்படி என்று அறியத்தாருங்கள்.

    • 18 replies
    • 5.1k views
  5. ஊருக்கு சென்றால் மாங்காய், நெல்லிக்காய், புளியங்காய், விளாங்காய் என மிளகாய்தூள்+ உப்புடன் சாப்பிட்டதற்கு; ஒஸ்திரேலியா திரும்பினால் பெரும் சோதனையாக இருக்கும். மாங்காய் மட்டும் சில மாதங்களில் கிடைக்கும். மற்றவை மருந்திற்கும் பார்த்ததில்லை. ஆனால், இதற்கெல்லாம் கவலைப்படுவமா நாங்க? இவற்றிற்கான மாற்றாக Cucumber, Apple, Celary, Carrot, Orange ஆகியவற்றை உண்பதுண்டு. இவை உணவில் சாதாரணமாக சேர்ப்பதுண்டு என்றாலும் உப்புதூளுடன் சாப்பிட்டு பாருங்களேன். அப்படியொரு சுவை. இவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தது Cucumber. Cucumber + மிளகாய் தூள் + மிளகுதூள் + உப்பு சேர்த்தால்....ஆஹா... படம் Cucumber வெள்ளரிக்காய் இனத்தை சேர்ந்தது என பார்த்தாலே தெரியும். அதனால் இனி "வெள்ளரிக்காய்" என்…

  6. நவராத்திரியில் கடலைக்கு [சுண்டல்] எத்தனை முக்கியம் இருக்கோ; அவலுக்கும் உண்டு. 'அவல் கடலை' என்று சேர்த்தே அழைப்பது ஈழத்தில் உள்ள வழக்கம். நவராத்திரி தினங்களில் அவல் நிச்சயம் இருக்கும். ஈழத்தில் காலை நேர உணவாகவும் அவல் ஆவதுண்டு. ஊருக்கு போகும் நேரத்தில் பெரியத்தையின் அவலுக்காகவே காலையில் அவர் வீட்டுக்கு அண்ணன்களுடன் போய்விடுவேன். அத்தனை அற்புதமான சுவை. அப்படி வேறு யாருக்குமே சமைக்க தெரியாது என்பது என் கருத்து. புதிதாக துருவிய தேங்காய் பூவையும், சர்க்கரையையும் சேர்த்தால்...என்ன சுவை..என்ன சுவை... அவல் செய்வது ஒன்றும் பெரிய வேலையே இல்லை. ஆனாலும் கைப்பக்குவம் என சொல்வார்களே; அது அடிக்கடி வேலையை காட்ட தான் செய்கின்றது. அவல் - 250 கிராம் துருவிய தேங்காய் பூ - 50 கிரா…

  7. ஜ... மாம்பழம் அல்வா செய்து பாருங்கள் மா‌ம்பழ‌மே அ‌திக ரு‌சியானதுதா‌ன். அதனை அ‌ல்வா செ‌ய்து சா‌ப்‌பி‌ட்டா‌ல்... ‌எ‌ன்ன சொ‌ல்லு‌ம் போதே நா‌வி‌ல் எ‌ச்‌சி‌ல் ஊறு‌கிறதா... செ‌ய்து பாரு‌ங்க‌ள். எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியவை பழு‌த்த சுவையான மா‌ம்பழ‌ம் - 2 சர்க்கரை - 1 கப் பால் - 2 கப் ஏல‌க்கா‌ய் - 2 நெய் - 1 தே‌க்கர‌ண்டி செ‌ய்யு‌ம் முறை மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு துண்டுகளாக‌ப் போ‌‌ட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும். சு‌த்தமான வா‌ய் அக‌ண்ட பாத்திரத்தில் ம‌சி‌த்த மா‌ம்பழ‌‌த்துட‌ன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள். கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது நெய் சே‌ர்‌க்கவு‌ம். ஏ…

  8. ஒரு இணையத்தளத்தில் சுட்டது சும்மா வீட்டில இருக்கிறாக்கள் செய்யுங்கோ[paraparappu.com] என்னிடம் ஏதும் கேள்வி கேட்கப்படாது ஏனென்றால் எனக்கு தெரியாது சமையல் களத்தில் முன்பு சமையல் குறிப்புகள் கொடுப்பதற்கு ரசிகை ,தூயா இருந்தார்கள் ஆனால் ஆட்களை காணவில்லை அதனால் நான் இணைத்துள்ளேன் எப்படி இருக்கு பக்கோடா யாராவது செய்தால் அனுப்புங்கோ கு.சா ஆமை வடையை கொண்டு வந்து போட்டுத்து போயிட்டார் அது முட்டையா விட்டு கொண்டு இருக்கிறது வெ‌ண்டை‌க்கா‌ய் பகோடா செ‌ய்வது ‌மிகவு‌ம் எ‌ளிது. ஆனா‌ல் ஒரு முறை ரு‌சி‌த்து‌வி‌ட்டீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் செ‌ய்‌வீ‌ர்க‌ள். அத‌ற்கான கு‌றி‌ப்பு இதோ. தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் - 1/4 கிலோ நல்லெண்…

  9. எந்த நாளும் ஒரே மாதிரி உணவை உண்டு அலுத்துப்போய் விட்டீர்களா..? வித்தியாசமாக எதையாவது சாப்பிடனும் போல இருக்கா..அப்படின்னா உடனே கிளம்புங்க சைனாவுக்கு.. சைனாவுக்கு போகமுடியாது என்று சொல்லி நாவூறிக்கொண்டு இருக்கிங்களா?.. கவலைய விடுங்க நான் உங்களை கூட்டிட்டுப்போறேன்.. சரி இதோ வந்தாச்சு அந்த உணவக அங்காடிக்கு..என்ன வாசனை மூக்கத்துளைக்குதா கொஞ்சம் மனசைக்கட்டுப்படுத்திட்டு வாங்க... சுறா எண்ணையில் பொரிக்கப்பட்ட நட்சத்திரமீன்களை பார்த்தீர்களா? சுறாக்குட்டி பொரியல், கடல் உணவுகள் எல்லாம் பிடிச்சு இருக்கா?.. இப்பத்தான் உங்களுக்காக படம்பிடிச்சிட்டு இருந்த பாம்பைப்பிடிச்சு தோலை உரிச்சு ரெடிபண்ணி வைச்சு இருக்காங்க..அப்படியே சாப்பிடலாம்.. …

  10. Started by குமாரசாமி,

    ஆமை வடை தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு - அரை கப் உளுத்தம்பருப்பு - அரை கப் துவரம்பருப்பு - அரை கப் பச்சைமிளகாய் - 6 மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி புளி - சிறு நெல்லிக்காய் அளவு உப்பு - 2 தேக்கரண்டி எண்ணெய் - 2 கப் செய்முறை: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு இவை மூன்றையும் ஊறவைத்து, நன்றாக ஊறியபின் நீரை வடித்துவிட வேண்டும். பருப்புகளுடன், பச்சை மிளகாயையும், உப்பையும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, சீரகம், மிளகினை இலேசாக உடைத்து மஞ்சள்பொடியுடன் அரைத்து வைத்துள்ள பருப்பில் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவினை எலுமிச்சை அளவி…

  11. முட்டை அவிப்பது என்பது ஒரு பெரிய கலை. நம்பினாலும், நம்பாட்டிலும் அது தான் உண்மை. அதிகம் அவித்தாலும் சுவையிருக்காது, சிறுது நேரத்தில் எடுத்தாலும் பச்சைவாடை போகாது. அதிகம் அவிப்பதால் சுவையில் வித்தியாசம் வரப்போவதில்லை. ஆனால் சத்து குறைந்துவிடும். முட்டையை அவித்தோ/பொறித்தோ சாப்பிடலாம். சிலர் அப்படியே பச்சையாகவும் சாப்பிடுவார்கள். அது அனைவருக்கும் பொருந்தாது. தவிர அவித்த முட்டையில் தான் ப்ரோட்டின் சத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் முட்டையை போட்டு அவிக்க வேண்டும். (முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தால், அறை வெப்பத்திற்கு வந்த பின்னர் தான் அவிக்க வேண்டும். )நீர் கொதிக்க தொடங்கியதும், அரை அவியலாக வேண்டும் எனில் 3 நி…

    • 34 replies
    • 13.4k views
  12. சுவையான பச்சைமிளகாய் சட்னி செய்வது எப்படி....... சமையல் குறிப்பு தேவையான பொருட்கள் 4 - 7 பச்சை மிளகாய் சின்ன வெங்காயமென்றால் 4 - 6, பெரிய வெங்காயமென்றால் பாதி இஞ்சி துண்டு சிறிதளவு புதினா இலை 3- 5 தேங்காய் பாதி உப்பு சிறிதளவு பாதி எலும்பிச்சம் பழம் இவற்றை எல்லாம் சேர்த்து அடிக்க மிக்சி குறிப்பு: உங்கள் மிக்சி தேங்காயை சொட்டாக வெட்டி போட்டால் அடிக்கும் அளவிற்கு பவரானதாக இருந்தால் தேங்காயை சொட்டாக வெட்டி போடலாம் அல்லது தேங்காயை திருவி போடவும். செய்முறை: மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் மிக்சியில் போடவும். தேங்காயை மாத்திரம் சிறு துண்டாகவோ அல்லது திருவியோ போடவும். எலும்பிச்சம் பாதியையும் பிழிந்து மிக்சிக்குள் புளியையும் விடவும் அத்து…

  13. சுவையான செத்தல் மிளகாய் சட்னி செய்வது எப்படி சமையல் குறிப்பு தேவையான பொருட்கள் 4 - 7 செத்தல் மிளகாய் சின்ன வெங்காயமென்றால் 4 - 6, பெரிய வெங்காயமென்றால் பாதி சிறிதளவு கொத்தமல்லி தேங்காய் பாதி உப்பு சிறிதளவு பழப்புளி சிறிதளவு இவற்றை எல்லாம் சேர்த்து அடிக்க மிக்சி குறிப்பு: உங்கள் மிக்சி தேங்காயை சொட்டாக வெட்டி போட்டால் அடிக்கும் அளவிற்கு பவரானதாக இருந்தால் தேங்காயை சொட்டாக வெட்டி போடலாம் அல்லது தேங்காயை திருவி போடவும். மேலும் , பழப்புளியை 1/4 கப் அளவு கொதி தண்ணீரில் ஊறப்போட்டு 5 - 10 நிமிடங்களுக்கு பிறகு புழிந்து அந்தப் புளியையும் மேற்குறிப்பிட்ட பொருட்களுடன் மிக்சியில் விடவும். செய்முறை: மேலே குறிப்பிட்ட எல்லாவற்றை…

  14. சுவையான தேனீர்.... தேனீர் பிரியர்களுக்கு தேனீர் போடும் பொழுது கேத்தலில் முதன்முதலில் கொதிக்கும் தண்ணீரில் தேனீர் போட்டால் ரொம்ப் சுவையாக இருக்கும். திரும்ப திரும்ப, அதாவது முதலில் கொதித்து ஆறிய தண்ணீரை திரும்பவும் கொதிக்க வைத்து தேனீர் போட்டால் அதன் சுவை குறைந்துகொண்டே போகும். காரணம் திரும்ப திரும்ப கொதிக்கவைக்கும் போது நீரிலிருந்து ஒக்சிஜன் அகற்றப்படுவதினால் தேனீரின் சுவை குறைந்துகொண்டே பொகும். பின் குறிப்பு: கேத்திலில் தண்ணீர் கொதிதவுடன் தேனீர் போடாமல் சில நிமிடங்கள் நீரை ஆறவிட்டு பின்னர் போடவும். மேலும் 2...3 நிமிடங்களுக்கு மேல் தேயிலை பையை கொதி நீருக்குள் விடவேண்டாம். இளங்கவி

  15. நெல்லிக்காயின் சாறு ! நெல்லிகக்காயின் சாறு இருக்கிறதே அதையும் தேனையும் சேர்த்துக் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம் கிடைக்கும்; குடலுக்கும் பலம் கிடைக்கும். மூளை இருதயம் கல்லீரல் முதலிய உறுபபுகளுக்கும் பலம் கிடைக்கும். கொஞ்சம் சாப்பிட்டாலும் போதும். உங்கள் வாய்நாறும். அது உங்களுக்குத் தெரியாது. உங்கள் வாய் நாறுகிறதா என்று மற்றவர்களிடம் கேளுங்கள். நாறுகிறது என்று சொன்னால் எலுமிச்சம் பழச்சாறு கலந்த நீரினால் அடிக்கடி வாயைக் கொப்பளியுங்கள். வாய் நாற்றம் போய்விடும். எலுமிச்சமம் பழம்கலந்த நீரை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. எந்த வகையிலாவது எலுமிச்சம் பழத்தை நீங்கள் அடிக்கடி பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். முட்டைக்கோசை உங்களுக்குப் ப…

  16. பொதுவாகவே சமையல் என்பது மிகவும் இலகுவான வேலை போலவும், சமைப்பவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் போன்றதொரு மாயையும் உலாவுகின்றது. இதை சமையல் செய்யும் ஒருவரால் ஒத்துக்கொள்ள முடியாது. ஒரு வீட்டில்,கிராமத்தில்,நகரத்தி ன்,நாட்டின் பாரம்பரியத்தையோ/கலாச்சாரத்தையோ அறிந்து கொள்ள சிறந்த இடம் சமையல் தான் என்பது என் கருத்து. இப்படிப்பட்ட சமையல் என்பது அத்தனை இலகுவான காரியம் அல்ல. ஒரு உணவை சமைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை எனும் பட்சத்தில் ஒரு தற்கொலையோ,பல கொலைகளோ நிகழ வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த பதிவில் எப்படி தற்கொலையை தவிர்க்கலாம் என பார்ப்போம். கொலைகள் பற்றி பின்னர் யோசிக்கலாம்.கிகிகிகி * சமைக்கும் போது சமையலை மட்டும் பார்க்கவும். கவனம் இல்லா…

  17. அப்படித்தான் முதன் முதல் கேள்விப்பட்ட போது எனக்கு தோன்றியது. உங்களில் எத்தனை பேருக்கு இந்த இனிப்பு பற்றி தெரிந்திருக்கும் என தெரியவில்லை. இது இந்திய இனிப்பு என்பதால் தமிழ்நாட்டு உறவுகள் பலருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஈழத்து உறவுகளுக்கு? இறுதியாக அறிந்து கொண்டது நானாக கூட இருக்கலாம். தற்போதைய பிரச்சனை அது அல்ல. பெயரே சரியாக தெரியாத இனிப்பை நான் செய்தது தான் பெரும் பிரச்சனை. இந்தியாவில் எந்த ஊரில் இருந்து வந்தது என அறிந்து கொள்ள முயன்ற போது கிடைத்த தகவலையும் செய்முறை எனும் சோதனைக்குள் செல்ல மென்னர் பார்க்கலாம். இந்த பதிவை எனது நெடுங்கால யாழ் நண்பர், சகோதரர் திரு.கந்தப்பு அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன். இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் கந்தப்பு…

  18. போன்டா என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிற்றுண்டி. இந்த வசனத்தை எப்படி இத்தனை உறுதியாக சொல்கின்றேன் என கேட்பவர்களுக்காக: 1. சின்ன வயதில் பள்ளியில் போன்டா சாப்பிடாதவர்கள் உண்டோ (குறிப்பாக ஆண்கள்). அதிலும் வகுப்பு வேளையில் போய் வாங்க, அதை ஒரு ஆசிரியர் பார்க்க. அப்புறம் என்ன, கன்னத்துக்கு வெளியிலும் போன்டா, உள்ளும் போன்டா. 2. ஏன் சொல்கின்றார்கள் என்றே புரியவில்லை. ஆனால் வலைப்பூ மக்கள் ஒன்றுகூடலில் இவ்வுணவு பற்றி பேசுகின்றார்களாமே! 3. லக்கிண்ணா கூட போன்டா செய்முறை எழுதியிருக்கின்றார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்!! (இதை விட ஒரு காரணம் வேண்டுமா) 4. யம்மு அடிக்கடி துங்காபியில் போன்டாவுடன் காணப்படுவார். 5. நான் போன்டா செய்முறை எழுதுவது (சோதனை மேல் சோதனை) …

    • 40 replies
    • 9.2k views
  19. நெத்திலி மீன் குருமா தேவையானவை : நெத்திலி : அரை கிலோ எண்ணெய் : 4 மே.கரண்டி கடுகு : அரை தே.கரண்டி வெந்தயம் : அரை தே.கரண்டி கறிவேப்பிலை : 2 கொத்து ப.மிளகாய் கீறியது : 2 பெ.வெங்காயம் : 2 சி.வெங்காயம் : 2 தக்காளி : 3 மஞ்சள் பொடி : அரை தே.கரண்டி மி.தூள் : 1 தே.கரண்டி தேங்காய் துருவல் : 1 கப் சோம்பு : 1 தே.கரண்டி அரைக்க : தேங்காய், மஞ்சள் தூள், சி.வெங்காயம் மற்றும் சோம்பு இவற்றை நன்கு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை இவற்றைச் சேர்க்கவும். கடுகு வெடித்ததும் பெரிய வெங்காயத்ததை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி மிளகாய் த…

  20. பழைய சாதமும் பழைய மீன் குழம்பும் சாப்பிடுற சுகம் வேறு எதற்கு வரும் என்ற வரிகள் அடிக்கடி என் காதில் விழும். அட அப்படி அதில் என்ன தான் இருக்கு என முயற்சித்து பார்த்தேன். சும்மா சொல்ல கூடாது, சுவையோ சுவைதான் போங்க. (இருக்காத பின்ன, மீனை வெட்டி,சுத்தம் பண்ணுறது நாங்க தானே என வீட்டில் மாமா முணுமுணுப்பதையெல்லாம் சொல்லிட்டா இருக்க முடியும்) என்னுடைய நெடுநாள் வலைப்பூ நண்பர் தீபக் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். சமையலில் என் ஆர்வம் பார்த்து, கேரள சமையல் குறிப்புகள் பலவற்றை தந்துள்ளார். அவற்றிலிருந்து சிலவற்றை முயற்சித்து பார்த்து வருகின்றேன். (இந்த மாதம், கேரளா உணவு மாதம்) அதில் முதல் முயற்சி தான் இந்த கேரள மீன் குழம்பு. எங்களுடைய மீன் குழம்போடு ஒப்பிட்டு பார்க்கும் போது, சுவை கொ…

    • 28 replies
    • 8.8k views
  21. இங்கு மழையும் நின்றபாடில்லை, நான் சூப் சமைப்பதும் நின்றபாடில்லை என்றாகிவிட்டது. பாவம் வீட்டில் உள்ளவர்கள் நிலமை கவலைக்கிடம் தான். ஆனாலும் எனக்கு கடமைன்னு வந்தால் பாசமெல்லாம் இரண்டாம் பச்சம் தான். சைவ சூப் என்பதால் அனைவயும் முயற்சித்துப்பார்க்கலாம். தேவையானவை: கரட் 1 பீன்ஸ் 5 மிளகு 5 சோளம் 1/2 கப் சோளமா 2 மே.க வினிகர் 1 தே.க சோய்சோஸ் 1 தே.க பச்சைமிளகாய் 2 உப்பு முதலில் செய்ய வேண்டியவை: 1. பச்சை மிளகாயை சின்னதாக அரிந்து எடுங்க. 2. கரட், பீன்ஸை சுத்தம் செய்து சின்னதா அரிந்து எடுங்க. 3. சோள மாவை 1/2 கப் நீரில் கரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்க. 4. மிளகை தூளாக்கி வைக்கவும். செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை சுட வை…

  22. Started by nunavilan,

    லசான்யா (Lasagna) இது இத்தாலியன் சமையல். தேவையானப் பொருட்கள் பிரெட் - 1lb கத்தரிக்காய்(eggplant) - 2 பெரியது பட்டர் - சிறிது ஒலிவ் எண்ணெய் - சிறிது உப்பு மைதா/கோதுமை மா - 1 கப் தக்காளி ஸோஸ் - 4 கப் பாஹ்மஜான்/மோற்சரில்லா சீஸ் - 3 கப் செய்முறை அவனை 400 F இற்கு சூடாக்கவும். கத்தரிக்காயை மெல்லிய வட்டமான துண்டுகளாக வெட்டி உப்பு தண்ணீரில் கழுவி பிழிந்து வைக்கவும். ஒரு பானில்(Pan) பட்டரை உருக்கி அதில் பிரெட் துண்டுகளை இரு பக்கமும் திருப்பி போட்டு டோஸ்ட் செய்யவும். வெட்டிய கத்தரிக்காய் துண்டுகளை சிறிது உப்பில் பிரட்டி மைதா/கோதுமை மாவில் புரட்டி சிறிது ஒலிவ் எண்ணெயில் இரு பக்கமும் திருப்பி போட்டு பொரிக்கவும் (sautée) பின்னர் ஒரு…

  23. கோழிப்புக்கை என்று கேள்விப்பட்டிருக்கின்றீர்க

    • 16 replies
    • 14.1k views
  24. வீட்டில் உள்ளவர்களையும், இணையத்தில் உள்ளவர்களையும் பயப்படுத்த என்றே பல செய்முறைகளை தொடர்ந்து சமைத்து, இணையத்திலும் எழுதி வருகின்றேன் என்பது ஒன்றும் பெரிய பிரம்ம ரகசியம் இல்லை. எப்பவும் செய்முறையே போட்டால் சுவாரசியமாக இருக்காதே. ஒரு மாற்றத்திற்கு உங்களை வேறு சில வழிகளிலும் பயப்படுத்தலாம் என யோசித்திருக்கின்றேன். அதன் முதல் படியாக, நீங்கள் சுத்தமான சமையல்காரரா என எப்படி கண்டு பிடிப்பது என பார்க்கலாம். கீழ் வருபவற்றுக்கு ஆம் இல்லை என பதில் அளிக்கவும். 1. பெரிய சமையல்காரர் போல படம் காட்டி சமைத்த பின்னர் உடனடியாக உபயோகித்த சமையல் பாத்திரங்களை நீரில் கழுவி வைக்கின்றீர்களா? 2. சமையலில் குளிக்காமல் இருக்க ஏப்ரன் பயன்படுத்துகின்றீர்களா? 3. கேக் போன்றவற்றை செய்யும் போ…

    • 13 replies
    • 2.6k views
  25. Started by Rasikai,

    இன்டைக்கு எனக்கு வீட்டை பொழுது போகேல்ல. என்ன செய்வம் என்டு யோசிச்சன். அம்மாவும் தனக்கு ஏலாமல் இருக்கு நீ சமை என்டுட்டா சரி புதுசா ஏதாவது செய்வம் என்டு போட்டு களத்துல இறங்கிட்டன். இதோ எனது வீரதீர செயலை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். தேவையானப் பொருட்கள்:- வறுத்த உழுத்தம் மா - 1 சுண்டு வறுத்த சிவப்பு அரிசிமா - 1/4 சுண்டு சீனி அல்லது சக்கரை - 50 கிராம் ( சீனி விருப்பம் இல்லாதவர்கள் சேர்க்க தேவையில்லை) உப்பு - 1 சிட்டிகை தேங்காய்ப்பால் - 4 கப் செய்முறை:- ஒரு பாத்திரத்தில் பால் விட்டு அதில் அரிசிமா, உழுத்தம் மா, உப்பை போட்டு கட்டியில்லாமல் கரைக்கவும். பின்னர் மிதமான தீயில் வைத்து வேக விடவும். மா அடியில் ஒட்ட விடாது கிளறிக் கொண்டே இருக்கவும். …

    • 17 replies
    • 11.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.