கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3075 topics in this forum
-
அழகாபுரி ஊர் மக்கள் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். அதற்குக் காரணம், அன்றுதான் பொங்கல் பண்டிகை ஆரம்பம் ஆனது. பரமார்த்தரும் சீடர்களும் கூட மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தனர். மறுநாள் - மாட்டுப் பொங்கலும் வந்து விட்டது. "குருவே...குருவே.." என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் மண்டு. "இன்று சாயுங்காலம், ஊர் எல்லையில் நிறைய பந்தயம் எல்லாம் நடக்கப் போகுதாம்!" "பந்தயமா? என்ன அது?" என்றபடி குருவும் சீடர்களும் அவனைச் சூழ்ந்து கேட்டார்கள். "காளை மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் பூச வேண்டுமாம். அப்புறம், ஜல்லிக் கட்டுகூட நடக்கப் போகுதாம். வெற்றி பெறுபவர்களுக்குப் பல கிராமங்களைத் தரப் போகிறாராம் நம் அரசர்" என்று சொன்னான் மண்டு. இதைக் கேட்டதும் பரமார்த்தரின் மூளை தீவ…
-
- 0 replies
- 768 views
-
-
அன்று கடும் வெக்கையாக இருந்ததால் மாலைக் காற்றின் ஈரலிப்பில் களித்திருக்க வீட்டுத்தோட்டத்துக்கு வந்த நந்தினி அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கூலா ஒரு கோலா குடிக்க ஆரம்பித்திருந்தாள். அப்போது அவள் அருகே இருந்த செவ்வரத்தையில் இரண்டு சிட்டுக்குருவிகள் அருகருகே இருந்து அலகுகளால் ஒன்றை ஒன்று கோதியபடி காதல் மொழி பேசிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்து வியந்து கொண்டே ஆகாயத்தைப் பார்த்து வெறித்துக் கொண்டாள். அப்போது வீட்டு கேற்றடியில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஓ.. சங்கர் வந்திட்டார் போல. அவருக்கும் ஒரு கோலா எடுத்துக் கொண்டு வந்து வைப்பம்.. களைச்சு விழுந்து வந்திருப்பார் என்று எழுந்து நடக்க முயன்றவளுக்கு சங்கரின் அவசரத்துடன் கூடிய அதட்டல் காதில் விழுந்தது. நந்தின…
-
- 26 replies
- 2.3k views
-
-
அடோ ப(B )ள்ளா ! கொய்தி தியன்னே. கியபங். (அட நாயே ..எங்கடா இருக்கு சொல்லுடா) அந்த சீருடை அணிந்த மிருகம், அவனை எட்டி வயிற்றில் உதைத்தது. எனக்கு தெரியாது. அவன் இதை ஐம்பத்து மூன்றாம் தடவை சொல்லுகிறான். தலையை நீரினுள் அமிழ்த்தி, முகத்தில் பெற்றோல் பை கட்டி, மூக்கிலே மிளகாய் தூள் தூவி, வாய்க்குள்ளே சுடுதண்ணி ஊத்தி, உடம்பிலே மின் பாய்ச்சி, தலைகீழாக கட்டி அடிச்சு, குறட்டினாலே நகம் புடுங்கி, கையிலே ஆணி அடிச்சு, ஆணுறுப்பை உயிர் போக அழுத்தி, கால்களை அமில வாளிக்குள் தோய்த்து, அந்த மிருகத்துக்கு தெரிந்த சித்திரவதை எல்லாம் பண்ணி பார்த்தாச்சு. இப்போ அவன் முதுகிலே மின்அழுத்தியை (Iron Box ) அழுத்தியபடி மீண்…
-
- 16 replies
- 1.8k views
-
-
ஐரோப்பிய நாடொன்றில் ...அந்த வதிவிடத்தின் மாடியில் ஒரு அறையில் அந்த முதியவர் வாழ்ந்து கொண்டு இருந்தார் ..இளைப்பாற்று ( பென்ஷன்) சம்பளம் எடுப்பவர் போலும்........அவரது அறையின் ஜன்னல் அருகே கதிரையில் உட்கார்ந்த படி போவோர் வருவோரை பார்த்துக் கொண்டிருப்பது .. பிடித்தமான பொழுது போக்கு. மாதத்தில் ஒரு தடவை வங்கி போன்ற இடங்களுக்கு செல்லும்போது தனக்கு தேவையான் சமையல் பொருட்களை வாங்கி வருவார். தினசரி பத்திரிகை படிப்பார். அவை அவரது குடியிருப்பின் வாயிலுக்கு வந்து விழும். ........இப்பொது பனி கொட்டும் காலம். குடிமனைச்சொந்தகாரர் தான் அவர்களது நடை பாதையை சுத்தம் செய்ய வேண்டும். சிலர் தாங்களாகவே செய்வார்கள் சிலர் வாடகைக்கு கூலியாட்களை அமர்த்தி செய்வார்கள். அந்த வேலையை செய்யும் கூலியாள…
-
- 5 replies
- 891 views
-
-
அந்த தொடர் மாடிக்கட்டத்தின் நான்காம் மாடியில் அமைந்து இருந்தது அவர்களது குடியிருப்பு. தாய் மாலதி .தந்தை வாகீசன் மகன்கள் சுபன் .சுதாகரன் ஆகிய நால்வரும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். முதலில் நாட்டுப்பிரச்சினை காரணமாக் தந்தை வாகீசன் தான் குடிபெயர்ந்து இருந்தார். மனைவி மாலதி அவனது தூரத்து உறவு தான் . அப்போது சவூதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் . திருமணமாகி இரு குழந்தைகள் பிறக்கும் வரை ஒழுங்காக் தான் இருந்தான். ஒரு தடவை விடுப்பில் வந்தவன் நாட்டு பிரச்சினை காரணமாக மீண்டும் போக முடியாது போனது. மதுவகை பாவிக்க் தொடங்கினான். மாலதி இருந்த நகை நட்டு எல்லாம் விற்று சகோதரர்களிடமும் கடன் வாங்கி ஒரு பாடசாலை வாகனம் எடுத்து கொடுத்தாள் பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றி வரும் பண…
-
- 10 replies
- 1.5k views
-
-
அந்த பிரமாண்டமான் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டது ..பல் கற்பனைகள் கடந்த கால நினைவுகளோடு புஷ்பாவும் இரு குழந்தைகள் அருண் அர்ச்சனாவும் விடுமுறைக்கு புறப்படுகிறார்கள். . கனடாவில் இருக்கும் தங்கள் சகோதரியை , பெரியம்மாவை பார்பதற்காக. புஷ்பாவின் எண்ணங்கள் சில கணம் தாய் நாட்டின் கிராமத்து வாழ்வை நோக்கி அசை போடுகிறது. தாய் தந்தைக்கு எழு குழந்தைகள் அரச பணியகத்தில் வரும் அளவான் வருமானத்தில் வளமாக் தான் தாயார் மீனாட்சி குடும்பம் நடத்தினாள். நானு பெண்களும் மூன்று ஆண்க்களுமாக் எழு குழந்தைகள். நான்காவதாக் இந்த பாமா என்னும் கனடாவில் இருப்பவர் ் பிறந்தார். ஐந்தாவ்தாக் புஷ்பா . வாழ்வு தான் காலச்சக்கரத்தில் .. சுழன்று கொண்டே இருந்தது . கடைசி மூவரும் தங்களுக்குள் கொப்ப…
-
- 11 replies
- 1.4k views
-
-
வருத்தம் தான் ...இப்ப அதிகம் இங்கு எழுதுவது இல்லை என்றாலும் ..பலர் தமிழில் இணையத்தில் எழுதுவதை அண்ணாந்து பார்த்திருக்கிறேன் ,,பார்த்த என்னை தமிழ் எழுத பழக்கியது இந்த யாழ் தான்.. எங்கோ மூலையில் மூணு பெக் அடித்து விட்டு குப்பனெ கிடந்த என்னை எல்லாம் கூட இணையத்தில் தெரிய உதவியது இந்த யாழ் தான் ... மூட படப்போகுது என்ற சிவப்பு விளக்கை பார்க்க கவலையாக தான் இருக்கிறது ,,நடத்துபவர்களுக்கு என்ன என்ன கஸ்டமோ தெரியாது ..இதை கேட்டவுடன் பார்த்தவுடன் மிகவும் கஸ்டமாகவும் இருக்கிறது. இதில் சண்டை பிடித்து இருப்போம் தமாசாக கதைத்து இருப்போம் இது எல்லாம் பசுமை நிறைந்த நினைவுகளாக பதிந்து இருக்கின்றன...நாங்கள் கும்மியடித்த பொற்காலத்தில் இருந்த யாழ் கள நண்பர்களை நினைத்து பார்க்கிறேன் புனை பெய…
-
- 13 replies
- 2k views
-
-
சாமிலி கைகளைப் பிடித்து தடவிய படியே அவனின் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி கேட்டாள். ..நீ என்னை உறுதியா காதலிக்கிறா தானே.. கைவிடமாட்டா தானே..?? அதற்கு அவன் "மங் உயா ஆதரேய" என்று அவளைத் தழுவிக் கொண்டே சொன்னான். அவனின் அணைப்பின் இறுக்கத்தில் அவன் அன்பின் உறுதியை தெளிவாக உணர்ந்து கொண்ட சாமிலி.. " சி யு ரூமாரோ" என்று சொல்லி அவனின் இறுக்கத்தை தளர்த்தி வெளிவந்தவள்.. கன்னங்களில் முத்தமிட்டு விட்டு விடை பெற்றாள். அவனும் அவளை பல்கலைக்கழக வாசல் வரை சென்று வழியனுப்பி விட்டு மீண்டும் பல்கலைகழக மரநிழலின் கீழ் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கொட்டகைக்குள் புத்தகங்களுக்குள் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான். வசன்.. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவன். யாழ் பிரபல்ய கல்லூரியில் உயர்தரம்…
-
- 24 replies
- 3k views
-
-
பி.ப 5 : 20 இலக்கு நகர்கிறது.... இண்டைக்கு விட்டால் இனி இந்த இலக்கை பிடிக்க முடியாது.. இந்த இரண்டு வசனமும் தான் மதனின் மனசில் விடாமல் ஒலித்து கொண்டிருந்தது. கொஞ்சம் வியர்த்து தான் போய் இருந்தான். அவன் ஒரு இயக்கி மட்டும் தான். அதை செய்ய வேண்டியவனுக்காக தான் இவ்வளவு காத்திருப்பும். வசந்தன் எங்கே.? ஒரு வேளை சுத்தி வளைப்புக்குள் மாட்டுப்பட்டிருப்பனோ.? இல்லை.. மனசை மாத்தி இருப்பானோ.? ச்சே ச்சே அப்படி இருக்காது அவன் என்னை விட உறுதியானவன் நிச்சயமா வருவான். தன்னை தானே கேள்வியும் கேட்டு சமாதானமும்படுத்தி கொண்டிருந்தான். நேரமாகிறது இலக்கு நகர தொடங்கிவிட்டது இன்னும் பத்து இருபது நிமிசத்திலே இந்த இடத்தை விட்டு போயிடும். அதுக்கு பிறகு இலக்கை நெருங்கவே…
-
- 20 replies
- 3.1k views
-
-
ரிங்...ரிங்..ரிங்..தொலைபேசியை எடுத்தேன் மறுமுனையில் "மரியா" உங்களுடைய அபோயின்மன்ட் பின்னேரம் 3 மணிக்கு இருக்கு என்றாள்.நான் சரி "we will meet at 3ó clock same place"என்று சொல்லி தொலைபேசியை வைக்க,"சொப்பிக்"முடிவடைந்து வீட்டுகுள் நுழைந்தவள் யாரோட மூன்று மணிக்கு போக போறியல் இங்க நான் ஒருத்தி இருக்கிறேன் என்று இல்லை கண்டவள்கிண்டவளுடன் "போனில்"கதைப்பது பிறகு"அபோயின்மன்ட் விக்ஸ்"பண்ணுறது,இன்றைக்கு நான் கண்டபடியால் தெரிந்துவிட்டது இப்படி எத்தனை நடந்திச்சோ என்று புறுபுறுத்தபடியே உள்ளே சென்றவள் வாங்கிய பொருட்களை குளிர்சாதனபெட்டியில் போட்டாள். சும்மா விசர் அலட்டாதையும் என்னுடன் வேலை செய்யும் "மரியா"வேலை விடயமாக மூன்று மணிக்கு ஒரு "மீட்டிங்"இருக்கு அதை தான் ஞாபகபடுத்தியவள் என்ற…
-
- 20 replies
- 3.4k views
-
-
என்னால் நம்பவே முடியவில்லை. என் எதிரில் நின்று பேசுகிறவர் போன யுகத்தைச் சேர்ந்தவராம். தற்செயலாகத்தான் அவரைக் கடை வீதியில் பார்த்தேன். நல்ல பசி. 'டிபன் எதுவும் செய்யலியா?' என்றேன் மனைவியிடம். 'எது பண்ணாலும் குறை சொல்றீங்க. என்னதான் டிபன் செய்யிறது?' என்று சலித்துக் கொண்டாள். பசியில் கோபமும் சேர்ந்தது. வெங்கடேச பவனில் சுடச்சுட ரவா தோசை கிடைக்கும் என்று மெயின் பஜாருக்கு வந்தேன். யார் மீதோ இடித்துக் கொண்டதும் நிதானித்து 'ஸாரி' சொன்னேன். ஆனாலும் படு குள்ளம். தோற்றம் மட்டும் விசித்திரம். சர்க்கஸ் கோமாளி மாதிரி. பதிலுக்கு அவர் சொன்னது புரியவில்லை. நிச்சயம் தமிழ் இல்லை. என் முகம் போன போக்கைப் பார்த்து அவராகவே சொன்னார். "உங்கள் மொழியிலேயே பேசுகிறேன்" "நீங்க எங்கேர்ந…
-
- 4 replies
- 965 views
-
-
வாசித்ததில் பகிர விரும்பியது அரசியல் புத்தர்: த.அகிலன் (ஆனந்த விகடனுக்காக) புத்தர் ஒரு சுவாரஸ்யமான ஆள்தான். அவரை எனக்கு நல்லாப் பிடிக்கும். யசோதராவை நித்திரையாக்கிப்போட்டு, நைஸா பின் கதவு வழியா எஸ்கேப்பாகும்போது புத்தர் நினைச்சிருப்பார், 'இண்டையோட இந்த அரசியல் சனியனைத் துறக்கிறேன்' என்பதாய். ஆனால், விதி யாரைவிட்டது? புத்தர் அரசியலைவிட்டுப் பேரரசியலை உருவாக்கிவிட்டார். ஆனாலும் புத்தர் அறியார், அழகும் சாந்தமும் நிரம்பிய தனது உருவம் வெறும் எல்லைக் கல்லாகச் சுருங்கிவிட்டதை. இன்றைக்குப் புத்தர் சிலை என்பது இலங்கையில் எல்லைக் கல். விகாரை என்பது காவல் கொட்டில். இதை எல்லாம் பார்த்துக்கொண்டு கையாலாகாதவராக புத்தர் சிரித்துக்கொண்டு இருந்தாலும், நான் அவரைப் பெரிதும் வி…
-
- 5 replies
- 1.5k views
-
-
பகுதி ....1 என்ன இவள் இப்படிச் சொல்லிக் கொண்டு வாறள் எண்டு எல்லாரும் நினைக்கிறது எனக்கு விளங்குது..என்ன செய்யிறது..?நானும் எனது ஆக்கத்துக்கு பல தரப் பட்ட பெயர்களை வைத்துப் பார்த்தேன் இது தான் தற்போதைய நிலையில் புலம் பெயர்ந்து இருக்கும் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் பொருந்தும் போல இருந்துச்சு "பணம் பந்தியிலே குணம் குப்பையிலே" எண்ட பெயரை வைச்சுட்டன்..எனது எழுதுக்கு பச்சை புள்ளி தராட்டிக்கும் பறவாயில்லை...சிவப்பு மட்டும் குத்திப் போடாதியள்..எனக்கு சிவப்பை கண்டாலே அலர்ஜி..எனது முன்னேற்றத்துக்கு தட்டிக் கொடுப்பதும் தள்ளி விழுத்துவதும் உங்கள் கைகளில் தான் இருக்கு.இனி விடயத்துக் வாறன்.. எல்லோரும் அறிந்த விடயம் பெருவாரியாக 1983,1984 ஆண்டுப் பகுதியிலிருந்து வெளிநாடுகள…
-
- 15 replies
- 3.9k views
-
-
http://www.youtube.com/watch?v=2DAVIb9yzO0 ஹாட்லி கல்லூரியின் லண்டன் கிளையினரின் புதிய நிர்வாகத்தினர் புதிய உத்வேகத்துடன் கல்லூரிக்கு நிதி சேகரிப்பதற்க்கான ஒரு நிகழ்வாக 24.04.10 அன்று ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தி இருந்தனர் . சிறீக்குமார் நெறிப்படுத்த நிகழ்ச்சிகள் நடந்தேறியது .காட்லி பழைய மாணவர் குடும்பத்தினர் அரங்கம் நிறைந்த பார்வையாளராக காணப்பட்டனர் . இதில் குறிப்பிட வேண்டி ய அம்சம் எதுவெனில் காட்லி பழைய மாணவர்களின் புதிய தலை முறையினர் அதிகமான நிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களின் பாரட்டையும் கரகோசத்தையும் பெற்றது. நானும் இந்த கல்லூரியில் மழைக்கு ஒதுங்கி இருக்கிறேன் ..அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒரு பகுதியினரை இந்த வீடியோ மூலம் நீங்கள் காணாலாம்
-
- 22 replies
- 3.7k views
-
-
நான் உள்ளே போக சரியாக மட்டு மட்டாக அந்த நிலக்கீழ் ரயிலின் கதவு சாத்த பட்டது ..ஓடி வந்து ஏறிய பின் இன்னும் பதட்டம் தணியவில்லை .இது தான் இந்த இரவின் கடைசி ரயில் .இதை விட்டிருந்தால் இந்த குளிருக்குள் விடியும் மட்டும் இந்த வெறியுடன் தள்ளாடி திரிய வேண்டி இருக்கும். நினைத்து பார்க்கவே குளிரில் துடிக்குது தேகம்.இது ஒரு சனி இரவு .அதனால் நடுநிசி தாண்டியும் கூட்டமும் கூச்சலும் அதிகமாக காணபட்டது தள்ளாடி தள்ளாடி இருக்க இடம் தேடி கொண்டிருந்தேன் .எனது நிலைமையை பார்த்து எனக்கே ஒரு வெட்கம் வந்தாலும் என்னைப்போல் பல பேர் வெட்கமில்லாமால் அப்படி அப்படி ஆண்களும் பெண்களும் அங்கங்கே .எப்படி குடித்தாலும் நான் நிதானம் தவறுவதில்லை ஆனால் இன்று என்னை அறியாமால் வாய் உளறியது. வேண்டாம் வேண்டாம் …
-
- 6 replies
- 1.3k views
-
-
வணக்கம் வணக்கம் வாங்கோ என்ன எதிர்க்கட்சியில் சேர சந்தாவும் கொண்டு வந்திருக்கிறீர்கள் போல.இப்போதைக்கு அப்படி எந்த ஒரு எண்ணமும் இல்லை.இப்ப சாமிமாரைப் பற்றி எழுதினால்த் தான் எல்லோரும் வேலையையும் விட்டு போட்டு அரக்க பரக்க ஓடி வருவினம்.அது தான் நானும் ஒரு சாமியைப் பற்றி எழுதலாம் என்று வந்தேன். எல்லோருக்கும் நடிகர் வக்கீல் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியை தெரிந்திருக்கும்.இவரிடம் போய் என்ன ஐயா நீங்கள் யாரையுமே விட்டு வைக்காமல் எல்லோரையும் போட்டு விளாசித் தள்ளுகிறீர்களே அப்படியானால் நீங்கள் எந்தக் கட்சி என்று ஒருக்கா சொல்லுவீர்களோ? இதில பெரிதாக அலட்டிக் கொள்ள எதுவும் இல்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு எதிர்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
விரக்தியே வாழ்வாய்போன விதுசன் விதுசனிற்கு இப்பொழுது வயது 14 .கடந்த வருடம் வன்னியில் தன் 9 வயது தம்பியுடன் துள்ளித்திரிந்த பள்ளிமாணவன்தான் இவனும். வன்னியில் போரின் இறுக்கம் அதிகரித்த காலம் தைமாதம் ஒரு நாள்பொழுதில் எங்கிருந்தோ வந்து வீழ்ந்த செல் குண்டொன்று அவனது தாயாரை பலியெடுத்துப் போனது. தாயின் இழப்பு அவனது வாழ்வில் வீழ்ந்த முதலாவது இடி. தாயாரை இழந்தாலும் தந்தையின் அரவணைப்பில் தாயின் சேகத்திலிருந்து மெல்ல மீண்டெழுந்து கொண்டு வந்தாலும் கொடிய யுத்தம் கூடவே துரத்தியது. வன்னியின் வழமான வாழ்ககைகைள் அத்தனையையும் ஒரு நொடிப்பொழுதில் இழந்துவிட்டு ஓடிய அத்தனை மக்களுடனும் விதுசனின் குடும்பமும் ஓடிக்கொண்டிருந்தது.விதுசனும் தந்தையின் கையை பிடித்தபடி மறுகையால் தம்பியை…
-
- 13 replies
- 2.7k views
-
-
1. அவளைக் காணவில்லை என்று தெரிந்தபோது நான் பெரிதாக முதலில் எடுத்துக்கொள்ளவில்லை. வகுப்பு முடிந்தவுடன் வழமையாகச் சந்திக்கும் இடத்தில் அவள் இல்லாதபோது வேறெதனும் வேலையாகப் போயிருப்பாள் -தாமதமாக வரலாம்- என்று காத்துக்கொண்டிருக்கத் தொடங்கினேன். கோடை காலத்தில் இந்த வளாகத்தைச் சுற்றி ஓடும் நதியிற்கு அதிக வனப்பு வந்துவிடுகின்றது. படிக்கும் நாங்கள் பல்வேறு தாய்மொழிகளைப் பேசிக்கொண்டு திரிவதுபோல நதியும் கலகலப்பாகப் பலமொழிகளைப் பேசிக்கொண்டு நகர்வது போலப்பட்டது. இயற்கைச் சூழலை இரசிக்கத்தொடங்கியதில் நான் எதற்காய் இங்கு வந்து காத்துக்கொண்டிருக்கின்றேன் என்பதும் மறந்துபோய்விட்டது. ஒருக்காய் முறிகண்டிப்பக்கம் ப…
-
- 10 replies
- 2.9k views
-
-
ஓடிப்போன ஒட்டகம் இந்தப்பனிக் குளிருக்கு எவன் வீட்டிற்குள்ளையே அடைபட்டுக்கிடப்பான். என்ரை நாட்டிலைதான் நான் சுதந்திரமாகச் சுத்தலாம் என்று ஒரு துண்டுக் காகிதத்திலை எழுதி வைத்திட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டுக் கிளம்பி டுபாய்க்குக் கப்பல் ஏறின ஒட்டகம், கோடைகாலம் தொடங்க...... போனதுபோலவே சொல்லாமல் கொள்ளாமலுக்கு இரண்டு நாளுக்குமுதல் வந்து தன்ரை அறையுக்கை படுத்துக்கிடந்தது. சரி என்னதான் நடக்குது பார்ப்பம் என்று பேசாமலுக்கு இருந்தால் அது பாட்டுக்குத் திரும்பவும் தன்ரை குணத்தைக் காட்டத் தொடங்கிவிட்டுது. அதுதான் அந்தக் கதையளை உங்களுக்குச் சொல்லுவமென்று வந்து உட்கார்ந்தால் வைத்தியரிடம் மருந்தெடுக்கப்போறதுக்கு நேரமாச்சுது. கோபியாதையுங்கோ போட்டுவந…
-
- 9 replies
- 1.7k views
-
-
அந்த வீடு ....உறவினர்களின் கூட்டமாய் நிறைந்து காணப்பட்டது .....மாடியிலும் நடை பாதை ..வழிகளிலும் ஓரங்களிலும் மங்கல பொருட்களால் நிறைந்து இருந்தது. ..மதிமாறன் என்னும் மாறன் எப்போது உறங்கினான் என்று, அவனுக்கே தெரியாது. விடிந்தால் திருமணம் . உறவுகளும் ..பெரியவர்களுமாய் வீடு, நிறைந்து இருக்கிறது ....தன் தங்கைகளை எண்ணும் போது அவனுக்கு பெருமிதமாய் இருக்கிறது...தாயாய் தந்தையாய் வளர்த்தவன் அவன் அல்லவா.... அவனது குடும்பமும் ....மற்றவர்களை போல தாய் தந்தை ஆசைக்கு ஒரு தங்கை என்று அமைதியாக் தான் போய் கொண்டு இருந்தது. மூன்றாவதாய் ஒரு தங்கை வரு மட்டும். அவள் பிறந்த வீட்டிலேயே தாயார் ...காலமாகி விட்டார் . வைத்தியர்களின் கவன மின்மையோ .. தங்கை சுஜிதாவின் கெட்ட பலனோ ...மாறனு…
-
- 8 replies
- 2.2k views
-
-
காஞ்சக்கடலை..... வகை : அனுபவம்... | author: பிரபாகர் சில நிகழ்வுகள் நம்மை கடைசிவரை பல்லில் மாட்டிய பாக்கென நிரடிக்கொண்டே இருக்கும். அந்த விதத்தில் என்னை மிகவும் பாதித்த ஒன்று இந்த இடுகையில். இரண்டு வருடத்திற்கு முன் ஊருக்கு சென்றபோது தம்பி 'அண்ணா வரும்போது ஒரு நல்ல வாட்ச் வாங்கி வா' என்றான். ’யாருக்கு’ என கேட்டதற்கு ’காஞ்சக்கடலைக்கு’ என்றான். சட்டென சிரிப்பாய்தான் வந்தது. 'அதென்ன காஞ்சக்கடலை?' எனக் கேட்டதற்கு அவரின் பட்டப்பெயர் எனவும், அவர் அவனுக்காக செய்த உதவிகளையும் சொல்ல ஆரம்பிக்க, ஏற்கனவே சொன்னது நினைவிற்கு வர, சரி ஏற்கனவே சொல்லியிருக்கிறாய் என மட்டறுத்து, மறக்காமல் வாங்கிச் சென்று கொடுத்தேன். ஆனால் குறுகிய பயணமாதலால் அவரை சந்திக்க முடியவில்லை. …
-
- 0 replies
- 544 views
-
-
ஊர் இப்ப தோரணங்கள் கொடிகள் சுவரொட்டிகள் உடன் தன்னை அலங்கரித்து தேர்தல் திருவிழாவுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தது.இது வழமையான தேர்தல் அல்ல .ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறு என்ன என்ற இறுக்கமான கோசத்துடன் கிளம்பிய தேர்தல் .இதனால் ஊர் சனம் மட்டுமின்றி ஏதோ திருடனை பிடிக்க போகின்றது போல் அவசரத்தில் போலிஸ் ஜீப்பில் அங்கும் இங்கும் திரிகின்ற பொலிஸ்காரமும் கூட உணர்ச்சி பிளம்பில் மிதந்து கொண்டிருந்தனர்.குறிப்பிட்ட அனுமதிக்க பட்ட நேரத்தில் மேடை அமைத்து வீராவசத்துடன் அவர்கள் பேச சனமும் உணர்ச்சி பிளம்பாக தகிப்பார்கள்.உணர்ச்சி பிளம்பாக இரவு வீடு சென்று படுத்து நாடு கிடைத்த கனவில் மூழ்கி விடிய எழும்பி வேதனை தரும் தலைப்பு செய்தியை பத்திரிகைகளில் படிப்பார்கள். இவன் ஒருவன் எந்த வ…
-
- 5 replies
- 1.5k views
-
-
எங்கே குட்டியண்ணா வன்னி மண்ணில் எந்தக் கவலைகளும் இன்றி எதிர்காலம் பற்றிஎந்தவொரு சிந்தனைகளுமற்று துள்ளித்திரிந்த சிறுமிதான் சியாமளா ... சியாமளாவிற்கு இன்று வயது ஒன்பது இன்று அவளது குடும்பத்தில் யுத்தம் தாயாரை பலியெடுத்துவிட தந்தையோ வேறு திருமணம்செய்து கொண்டு பிள்ளைகளை கைவிட்டு சென்றது மட்டுமல்ல அவளது மூத்தசகோதரனோ மண்ணிற்காக போராடிய குற்றத்திற்காக இன்று தடுப்பு முகாமில் வாடுகின்றான். இவளது அடுத்த அண்ணன்தான் குட்டியண்ணா. சியாமளாவிற்கு குடும்பத்தில் மிகவும் பிடித்தஒரு உறவு இரண்டாவது குட்டியண்ணாதான்.அப்பா அம்மா இல்லாத குறையை குட்டியண்ணாவே போக்கினான். குட்டியண்ணா பாடசாலைக்கு சென்றாலென்ன கோவிலுக்கு சென்றாலென்ன. விழையாடச்சென்றாலென்ன குட்டியண்ணாவின் கைகளைப்பிடித்…
-
- 8 replies
- 2.4k views
-
-
வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? மலையாள சமூக நல அமைப்பிடமிருந்து ஒரு செய்தி வருகிறது, அதாவது தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் துபாயிலுள்ள பிரபல அரசு மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாத நிலையில் நீண்ட நாட்களாக உள்ளார், அவரை தாயகத்திற்கு அனுப்ப வேண்டும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நோயாளியினுடைய நிலையைத் தெரிந்துக் கொள்ள மருத்துவமனையில் அவரது வார்டில் சென்று விசாரிக்கும்போது அவர் பெயர் ராஜகோபால் எனவும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறார் எனவும், தெரிய வந்தது. யாரும் வந்து பார்க்கவுமில்லை: மாரடைப்பு என யாரோ இங்கே சேர்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள் எனவும், இப்போது மாரடைப்பு சரியாகிவிட்டது…
-
- 2 replies
- 1.2k views
-
-
வழமையை விட இந்தமுறை கூட நாட்கள் எடுத்துவிட்டது. எல்லாம் அந்த தர்மகத்தாவால வந்தது நானும் கொஞ்சம் உணர்சிவசப்படாமல் மற்றவர்களைபோல காலை கீலை பிடிச்சிருக்கலாமொ? இவ்வளவு காசையும்,சொத்துப்பத்தையும் வைத்துக்கொண்டு ஒரு புறம்போக்கு நிலத்தில அதுவும் தற்காலிகமாக ஒரு 20 குடிசைகளை போடுவமென்றால் குடிசை போட நட்டுவைத்த அத்தனை மரங்களையும் வெட்டி வைத்திருக்கின்றாங்கள் பாவிகள்.வந்த கோபத்தில தர்மகத்தாவின்ர தலையை போட்டிருக்க வேண்டும்.ஏதோ அவன் செய்த புண்ணியம் வாய்ப்பேச்சோட நிப்பாட்டியது.பாவம் எங்கட அகதிகள் தான் சரியாக பயந்து போச்சுதுகள்.இவன் வந்து உள்ளதையும் குழப்பிவிட்டு போகப்போறான் என்று.நாளைக்கு வேலைக்கும் அந்த தர்மகத்தாவை தேடித்தானே அவர்கள் போகவேண்டும்.எதோ கடைசியில் ஒரு பிரச்சனையுமில்லாம…
-
- 5 replies
- 1.2k views
-