Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. ஓணான் கோட்டை தான் இருப்பது எந்த இடம்? என்று சசிக்குப் புரியவில்லை. உள்ளே ஒரே இருட்டு. கொஞ்ச நேரத்தில் அவனைச் சுற்றி ஜோடி ஜோடியாய் விளக்குகள் முளைத்தன. சுற்றிலும் பார்த்த அவன் பயத்தில் கத்தியே விட்டான். அவனைச் சுற்றி ஓணான்களின் கூட்டம்! எல்லாம் கண்களை உருட்டிச் சுழற்றி அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. பார்த்துவிட்டுத் தலையை ஆட்டிக் கொண்டு மெல்லச் சிரித்தன. சசி எழுந்து ஓடிவிடலாம் என்று நினைத்தான். ஆனால் அவன் ஓணான்களை விடச் சின்னதாக, குட்டியூண்டாக மாறிவிட்டானே! அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. எப்படி இங்கே வந்தான்? பள்ளிக்கூட விடுமுறை நாள்களில் ரமேசும், அவனும் சேர்ந்து ஓணான் வேட்டைக்குப் போவார்கள். ஊருக்கு வெளியே உள்ள கருவேலஞ்செடிகளில் உட்கார்ந்து …

  2. என்னடி நிஷா நட்டு நடுராத்திரில எழும்பி இருந்து அழுகிறா... என்று.. தனது 6 வயதேயான.. மகளை வெறித்துக் கொண்டிருந்தார்.. அம்மா தனம். தனமும் குடும்பமும்.. ஜேர்மனிக்கு அகதி என்று போய்..15 வருசம் கழித்து இப்ப தான் சொந்த ஊரான யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு குக்கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள். அந்த நிலையில்.. வந்த அன்றே நடுநிசியில்.. நிஷாவின் அழுகைக்கு காரணம் தெரியாமல் அம்மா தனம்.. காட்டுக் கத்து கத்திக் கொண்டிருந்தாள். சொல்லண்டி.. என்ன வேணும். உடம்புக்கு ஏதேனும் செய்யுதே. வாயத் திறந்து சொல்லண்டி.. சொன்னா தானே தெரியும். என்ன.. வெக்கையாக் கிடக்கே. அம்மா னேய்.. அங்கை இருந்து அனுப்பின காசுகளை என்னன செய்தனீ. உந்த வீட்டுக்கு கரண்டும் போட்டு.. ஒரு பானும் வாங்கி வைக்க முடியாமலோன இருந்த…

  3. பிரான்சிலிருந்து டென்மார்க் பயணம். அத்தானின் ஒரு வருட துவசம் என்பதால் பொருட்களையும் வாங்கி அவசரமாக புறப்படுகின்றோம். இரவு ஓட்டம் பலகாரச்சூடு சமையல் என ஆட்கள் தேவை என்பதால் யேர்மனி சென்று அங்கிருக்கம் அக்காவையும் எற்றிக்கொண்டு பயணம் தொடங்குகிறது..... நான் தான் வாகனத்தை ஓட்டுகின்றேன். ஒரு 20 கிலோமீற்றர் (அக்காவீட்டிலிருந்து) போயிருப்பேன்.. வாகனம் மணிக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது.. நான் இறுதி வரிசையில் (வேகப்பாதை) ஓடிக்கொண்டிருக்கின்றேன். திடீரென எனது பாதை முடிவடைவதற்கான பதாதை ஒன்று கண்ணில் தெரிகிறது. பாதை முடிவடைகிறது என்று தெரிகின்றதே தவிர அது எத்தனை மீற்றரில்முடிவடைகிறது என்பதை வாசிக்கமுடியவில்லை. முன்னால் பார்க்கின…

  4. --------------------------------------------------------------------- தண்ணீர் தேசம் கவிஞர் வைரமுத்து --------------------------------------------------------------------- 1 கடல்... உலகின் முதல் அதிசயம். சத்தமிடும் ரகசியம். காலவெள்ளம் தேங்கிநிற்கும் நீலப் பள்ளம். வாசிக்கக் கிடைக்காத வரலாறுகளைத் தின்றுசெரித்து நின்றுசிரிக்கும் நிஜம். கடல்... ஒருவகையில் நம்பிக்கை. ஒருவகையில் எச்சரிக்கை. கடல்குடித்துக் கொண்டிருந்த கலைவண்ணன் மடியில்கிடந்த தமிழ்ரோஜாவை மறந்துபோனான். அவள் அழகின் நவீனம். சிறகுகளைந்து சுடிதார்கொண்ட சொப்பனதேவதை. ரத்தஓட்டம் பாயும் தங்கம் அவள் தேகம். பொறுக்கி எடுத்த உலக அழகுகளை நெருக்கித் தொடுத்த நேர்த்தியான சித்திரம். குமரி வயதுகொண்ட கு…

  5. பனங்கொட்டை பொறுக்கி பனங்கொட்டை பொறுக்கி குரு அரவிந்தன் (குரு அரவிந்தன்) உள்நாட்டுப் போரின் பாதிப்பு ஆங்காங்கே வெளிப்படையாகத் தெரிந்தது. கவனிப்பு அற்ற பிரதேசம் என்பதால் ஏ9 பாதை குண்டும் குழியுமாயிருந்தது. சில இடங்களில் பாதைகள் செப்பனிடப் பட்டிருந்தன. முன்பெல்லாம் இப்பாதையில் பயணிக்கும்போது பயந்து நடுங்கிக் கொண்டே பயணிக்கவேண்டும். இராணுவத்தின் கெடுபிடி ஒருபக்கம், தெருவோரக் கண்ணிவெடிகளின் பயம் மறுபக்கம். தப்பித்தவறி வண்டி பாதையைவிட்டு விலகினால் காவு கொள்ள எங்கேயென்று கண்ணிவெடிகள் காத்திருக்கும். பாதை ஓரத்தில் அக்குள் தண்டு பிடித்து மெல்ல மெல்ல நொண்டிக் கொண்டு சென்ற அந்த சிறுவனுக்காக என் மனம் பரிதாபப்பட்டாலும், சற்றுத்தள்ளி மூன்று காலில் நொண்டிக் கொண்டு புல…

  6. அவர்கள் அப்படிதான் / கோமகன் ( பிரான்ஸ் ) 1985 ஆம் வருடம் அதிகாலை இருபாலை சோம்பலுடன் விழித்துக்கொண்டிருந்தது. கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அருகே இருந்த அந்த முகாமும் சோம்பலுடன் இயங்கிக் கொண்டிருக்க உறுமலுடன் நுழைந்து கிரீச் என்ற ஒலியுடன் நின்றது இளம்பிறையன் வந்த டட்சன் பிக்கப். பிராந்தியப் பொறுப்பாளரின் தீடீர் வருகையால் முகாம் பொறுப்பாளன் சிவா உட்பட எல்லோருமே பரபரப்பானார்கள். அவர்களின் பரபரப்பை இளம்பிறையன் உள்ளர ரசித்தாலும் அதை வெளிக்காட்டாது விறைப்பாக முகாமின் உள்ளே நுழைந்தான். இளம்பிறையன் அந்த முகாமின் ஹோலில் இருந்த மேசையில் இருந்து முகாமின் தினக்குறிப்பேட்டை படித்துக்கொண்டிருந்தான். அவனுக்காக தயாரித்த தேநீரை நடுக்கத்துடன் கொண்டு வைத்தான் ஒரு போராளி…

    • 4 replies
    • 1.4k views
  7. நினைவழியாத்தடங்கள் - தளபதி பால்ராஐ் அவர்களைப் பற்றி.....! இத்தலைப்பை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும வாணன் என்ற எழுத்தாளனை நிச்சயம் நினைவு வரும் ஏனெனில் யாழ்களத்தில் தனது போராட்டகால அனுபவங்களை எழுதிக்கொண்டு வந்தவர். திடீரென வாணனின் எழுத்துக்கள் பற்றியும் புலம்பெயர்ந்து வாழும் போராளிகள் பற்றி பலர் போராளிகளை நோகடிக்கும் கருத்துக்களை எழுதியதோடு களத்தைவிட்டு பல போராளிகள் நீங்கிப்போனார்கள். மீண்டும் எழுதும் எண்ணத்தையும் கைவிட்டார்கள். அவர்களில் ஒருவரான வாணன் பால்ராஜ் அண்ணா பற்றி எழுதிய நினைவு இது. வாணணின் எழுத்தை நேசிக்கும் கள உறவுகளுக்காக இங்கு பகிர்கிறேன். தளபதி பால்ராஐ் அவர்களைப் பற்றி.....! ஈழப் பக்கம் Tuesday, August 05, 2014 Slider , நினைவழியாத்தடங்கள் …

    • 6 replies
    • 2.3k views
  8. அன்புள்ள அப்பாவிற்கு, தேவா எழுதிக்கொள்வது... செல்வ சிரஞ்சீவி ராஜ ராஜஸ்ஸ்ரீ அருமை மகன் சுப்பையாவிற்கு என்றுதான் தாத்தா உங்களுக்கு எழுதும் கடிதங்களைத் தொடங்கி இருப்பார்கள். நீங்கள் தாத்தாவிற்கு எழுதும் கடிதங்களில் எல்லாம் மரியாதைக்குரிய மகாகனம் பொருந்திய ராஜராஜஸ்ஸ்ரீ தகப்பனார் அவர்களுக்கு சுப்பையா எழுதிக் கொள்வது யாதெனில் என்று தொடங்குவீர்கள். என் வார்த்தைகள் அன்புள்ள அப்பா என்ற எட்டு எழுத்துகளுக்குள்ளும் நாம் தலைமுறைக் காதலை, அன்பை நேசத்தை தாங்கி வருவதாக நான் உங்களிடம் பல முறை கூறி இருக்கிறேன்...இப்போதும் அப்படித்தான்... நிற்க....!!!! நலமா அப்பா? நாங்கள் நலமாயிருக்க முடியாது என்பதை தாங்கள் அறிவீர்கள். நீங்கள் இல்லாமல் எப்படி அப்பா நாங்கள் நலமாயிருக்க முடியும்? எ…

    • 0 replies
    • 1.9k views
  9. நான்தான் அடுத்த கணவன் அ. முத்துலிங்கம் பத்மப்ரியாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. என் உடம்பு முழுக்க இருதயமாகித் துடித்தது. உருண்டை உருண்டையான எழுத்து. நான் டெல்லி சிறையிலிருந்து மீண்டு கனடா திரும்பி ஒரு வருடம் ஆகியிருக்கும். எப்படியோ என்னுடைய முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து எழுதியிருக்கிறாள். இது எப்படிச் சாத்தியமானது? ஐயா, என்னால் நம்பவே முடியவில்லை. என்னை அப்படிப் பார்க்க வேண்டாம்... அப்படிப் பார்க்க வேண்டாம். நான் ஆரம்பத்திலிருந்தே சொல்கிறேன். நான் பிறந்தது யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு சின்ன ஊர். 1990ஆம் வருடம் எனக்கு 18 வயது தொடங்கியபோது அப்பா என்னை வெளிநாட்டுக்கு அனுப்பத் தீர்மானித்தார். எங்கள் ஊர் ஏஜன்டைப் பிடித்துப் பணம் கொடுத்து என்னை எப்படியும் கனடாவுக்கு …

  10. ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு… என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு… கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.. அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது… பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது… கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை… அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெ…

  11. மனக்கோலம் தமிழ்நதி விலங்கொன்று ஊளையிடுவது போலவேயிருந்தது அந்த ஓசை. கனவு காண்கிறோம் என்று உள்ளுணர்வுக்குத் தெரிந்து கண்டுகொண்டிருக்கும் கனவொன்றிலிருந்து அவ்வோசை மிதந்து வருவதாக முதலில் சாந்தன் எண்ணினான். மது அவனை மெதுவாகத் தொட்டு ‘என்னாலை நித்திரை கொள்ள முடியேல்லை’என்றதும்தான், அந்த ஓசை அக்காவின் அறையிலிருந்து வருகிறது என்பதை உணர்ந்தான். மது எழுந்து அமர்ந்து, “என்னாலை முடியேல்லை”என்று முனகியபடி மேடிட்டிருந்த வயிற்றைத் தடவிக்கொண்டிருந்தாள். வயிற்றினுள்ளிருந்து பதட்டப்படும் குழந்தையை ஆசுவாசப்படுத்துமாப் போலிருந்தது அந்தத் தடவல். உயிரின் மூலத்தைத் தேடி உருக்கும் விசித்திரமான ஓசையை சற்றைக்கு நிறுத்திய ராசாத்தி இப்போது அனுங்கத் தொடங்கியிருந்தாள். தாங்கொணாத வேத…

  12. என்னடி மாலா.. திரும்பவும் வீடு மாறப் போறியே. சமான் சக்கட்டை எல்லாம் கூட்டிக் கட்டி வைச்சிருக்கிறா என்ன சங்கதி. அதுவும் இப்ப கவுன்சில் வீடு எடுக்கிறதும் கஸ்டமான நேரத்தில..... வாங்கோ.. ரேவதி அக்கா. இப்பதான் வந்தனியளோ. ஓமடி. பிள்ளையளை சுவிமிங்கில விட்டிட்டு.. இஞ்சால வந்திட்டு போவம் என்று வந்தால்.. உன்ர வீடு இப்படியாக் கிடக்கு. என்ன வீட்டுக்காரனோட பிரச்சனையே..?! வீட்டுக்காரன்.. பறுவால்லை அக்கா. 1200 பவுன் வாடகை வாங்கிக் கொண்டு.. 200 பவுன் கையில வாங்கிறார். மற்றவை இதே வீட்டுக்கு 1300 பவுன் வாடகையும் கையில 300.. 400 பவுனும் கேக்கினம். அந்த வகையில இந்தாள் பறுவாயில்லை.... அப்ப என்ன தான் பிரச்சனை உனக்கு. அடிக்கடி வீடு மாறிறதே வேலையாப் போச்சு. என்ன மகளுக்கு கச்மெண்…

  13. தேவதைகளின் உலகம் விநாயக முருகன் என் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம். பெண்களுக்கு இதயத்தை கடன் கொடுத்தாலும் கொடுக்கலாம். பணத்தை மட்டும் கடன் கொடுக்கவே கூடாது. அதுவும் அழகான இளம்பெண்களுக்கு கடன் கொடுக்கவே கூடாது. அவர்களிடம் வசூல் செய்ய முடியாது என்று அர்த்தமில்லை. திருப்பி கேட்க நமக்கு மனசு வராது. நான் பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்தின் கிளையலுவலகம் ராமாபுரம் எதிரே இருக்கும் டிஎல்எப் வளாகத்தில் உள்ளது. டிஎல்எப் வளாகத்தை சுற்றி அழகான மரங்களுக்கும்,குளுமைக்கும் பஞ்சமே இருக்காது. சென்னையிலேயே போயஸ் கார்டனுக்கு பிறகு நான் மிகவும் விரும்பி ரசிக்கும் இடம் இது. இங்கு பரங்கிமலையும், கூவம் ஆறும், நிறைய மரங்களும் இருப்பதால் கோடைக்காலத்தில் கூட அவ்வளவாக சுகமாக இருக்கும். தவி…

  14. யாரொடு நோவோம்? சுதாராஜ் “வெளிக்கிடுங்கோ போவம்!” என அப்பா அவசரப்படித்தினார். சிறுகதை: அகதியும், சில நாய்களும்! - சுதாராஜ் -இதை அவர் நூறாவது தடவையாகச் சொல்கிறார் என்று சொல்லலாம். அம்மா அதற்குக் காது கொடுத்தமாதிரித் தெரியவில்லை. சுவரோடு சாய்ந்திருந்த என்னிடம் “எழும்படி…போ!… அடுப்பை மூட்டு!” என்றாள். தம்பி அழுதுகொண்டிருந்தான். அவனுக்குப் பால்மா கரைப்பதற்குச் சுடுத்தண்ணீர் தேவை. அதற்காகத்தான் அடுப்பை மூட்டச் சொன்னாள். நான் எவ்வளவு முயன்றும் அடுப்பு மூளாது புகைந்து கொண்டிருந்தது. அம்மா என் காதை பிடித்துத் திருகி இழுத்தாள். “இஞ்சாலை விட்டிட்டுப் போ!.. ஏழு வயசாகுது இன்னும் அடுப்படி வேலை செய்யத் தெரியாது!” எனத் திட்டினாள். பிறகு தானே அடுப்பை மூட்டப் போனாள். ஷெல் அடிச்ச…

  15. மீனுக்குள் ஒளிந்திருக்கும் பாடல்கள் உமா வரதராஜன் அவள் ஆற்றங்கரையோரம் வந்து அவனுக்காகக் காத்திருந்தாள். மாலை ஆறு மணிக்கு வருவதாக அவன் சொல்லி இருந்தான். ஆற்றின் கரும்பச்சை நிறம் மெல்ல மெல்லக் கறுப்பாகிக் கொண்டிருந்தது. கரையோரம் வரிசையாக நின்ற தென்னை, சவுக்கு, கற்றா, போகன்விலா மரங்களின் மறைவில் ஒளித்துக் கொண்டிருப்பது போலவும் மஞ்சள் வெயிலின் வெளிச்சத்துக்குக் கண்கூசும் ஒரு பாதாளச் சிறைக்கைதி போலவும் அவள் தங்கியிருந்த அந்த விடுதி தோன்றியது. அவளுக்கு அந்த நகரம் புதியது. முதல் தடவையாக அங்கே வந்திறங்கியபோது நீரின் நடுவே நிற்பது போல் உணர்ந்தாள். கடலாலும் ஆறாலும் வளைக்கப்பட்ட நீராலான நகரம்போல் அது இருந்தது. கடல் நீரேரிக்குக் குறுக்காக ஆங்காங்கே சில, சிறு நிலத் திட்டு…

  16. கப்பல் எப்பவரும் கருணை ரவி முள்ளிவாய்க்கால் அ.த.க.பாடசாலையில்தான் நிலானியை கண்டேன். பாடசாலையில்தான் வைத்தியசாலை இயங்குகிறது. சின்னக்கட்டடம். அதுக்குள் உயிருக்காகப் போரடிக் கொண்டிருப்பவர்கள் சிலர் தனித்துமாய்… சிலர் உறவினர்களோடும்… சிலர் உயிர் பிரியும் தறுவாயிலும் கிடந்தார்கள். வெளியில், மர நிழல்களில் கால் கைகளை இழந்தவர்களும் இறந்தவர்களும் குற்றுயிராய்த் துடிப்பவர்களுமாய்… வெறும் நிலத்திலும் தறப்பாள்களிலுமாய்க் கிடந்தார்கள். நான் சஜீத்தை இறந்தவர்களிலும் காயப்பட்டவர்களிலும் தேடிக்கொண்டிருக்கையில்தான் நிலானியைக் கண்டேன். கறுத்திருந்தாள். முன்னைய வடிவெதுவுமில்லை. இரண்டு பின்னல்கள். முன் மயிர் மங்கிக்கட். சிரித்த முகம். இப்போ எதையோ தொலைத்தவளாய் அரைச்சுவரில் முகத…

  17. மாரியம்மன் கஞ்சியும் அந்தோணிசாமியும் நாகரத்தினம் கிருஷ்ணா ஜூன் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. வீட்டின் பின்புறமிருக்கிற தோட்டம். கோடைவெயிலை சுமந்தபடி அலையும் காற்று. காற்றின் அலைச்சலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் செரீஸ்மரத்தின் கிளைகளும், கைவிரல்கள் போல பிரிந்த அவற்றின் கொப்புகளும் அசைந்துகொண்டிருந்தன. மண்தரையெங்கும் பரவலாக நாவல்போல உலர்ந்த செரீஸ் பழங்கள், உதிர்ந்த இலைகள், மிலாறுகள். இரு செரீஸ் மரங்களுக்கிடையில் நான்குக்கு இரண்டு ச.மீட்டரில் அமைந்த மரக்குடில். பிளாஸ்டிக் நாற்காலியொன்றில் கால்களைப் பின்புறமாக மடித்து அந்தோணிசாமி உட்கார்ந்திருந்தார். பார்வை அவருக்கு நேர் எதிரே, இனி தேறாது என்றிருந்த வாழைமரத்தின் மீது நிலைத்திருக்கிறது. அரையில் முழங்கால் மூட்டுவரை இறங்கி…

    • 1 reply
    • 1.4k views
  18. கலைஞன் பொ.கருணாகரமூர்த்தி ( ஜெர்மனி ) அந்தக்கோடையின் ஆரம்பத்தில் ஒரு நாள் காலையில் ஜன்னல்களை முழுவதுமாகத் திறந்துவைத்துப்புதிய காற்றை உள்ளே வரவிட்டு எதேச்சையாக வெளியே பார்த்தேன். முதலாம் மேடையில் சற்றுஅருகருகே இருக்கும் இரண்டு தூண்களை இணைத்து கணைப்படுக்கை ( Hammock – கன்வேஸ் தூளி) ஒன்றைக்கட்டிவிட்டு அதனுள் ஒருவன் தூங்கிக்கொண்டிருந்தான். பத்துமணிச்சூரியன் புகார்களினூடுவெளிப்பட்டு நேராகவே அவன்மீது காலியபோதும் அதைப்பொருட்படுத்தாது ஒரு காலைத்தூளிக்குவெளியே தொங்கவிட்டபடி தூங்கினான். பின் எப்போதுதான் எழுந்து போனானோ தெரியாது. பகல்முழுவதும் அவன் தூளி காலியாக இருந்தது. மாலையில் அந்திக்கருக்கலில் ஒன்பது மணிக்குமேல் நிலையத்தின் Gold-regen மரங்களோடு தொடரும்வடக்குப்…

  19. Started by கிருபன்,

    கள்ளி இளங்கோ-டிசே ஏதோ ஒரு வாசனை என்னைப் பின் தொடர்ந்து வந்தபடியே இருந்தது. அந்த வாசனையை முதலில் எங்கே நுகர்ந்தேன் என்பது சரியாக நினைவினில் இல்லை. அநேகமாய் நிரம்பி வழியும் மாலைநேரத்து சப்வேயில்தான் அந்த நறுமணம் எனக்குள் நுழைந்திருக்க வேண்டும். பிதுங்கித் ததும்பும் மனிதக் கூட்டத்திடையே, காலையோ கையையோ கூட சற்றும் நகர்த்த முடியாத பொழுதொன்றில் இப்படியான வாசத்தை நினைவில் கொண்டிருத்தல் என்பதே சற்று அதிகப்படியானதுதான். ஆனால் நான் விடும் மூச்சே மற்றவரின் காதுக்குள் நுழைந்துவிடும் அபாயமுள்ள நெரிசலில் எனக்கு இந்த வாசத்தை பின் தொடர்வது சற்று ஆசுவாசமாயிருந்தது. மேலும் இந்த நறுமணம் யாரோ ஒரு பெண்ணிலிருந்துதான் வருகின்றது என எண்ணிக்கொள்வது இன்னும் குதூகலத்தைத் தருவதாயிருந்தது. மனித உ…

  20. அ.முத்துலிங்கம் விருது சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவுக்குப் போயிருந்தேன். பலவிதமான பரிசுகளும், விருதுகளும் வழங்கினார்கள். எல்லாமே மகிழ்ச்சியான விசயம்தான்.ஒருவரைப் பாராட்டுவது எப்போதுமே வரவேற்கப் படவேண்டிய நிகழ்ச்சிதான். ஒருவருக்கு அவருடைய அதீத வணிக வளர்ச்சியைப் பாராட்டி விருது வழங்கினார்கள். சென்ற வருடம் அவருடைய லாபம் 3 மில்லியன் டொலர் மட்டுமே. நடப்புவருடம் அவருடைய லாபம் 10 மில்லியன் டொலர். ஒரு வருடத்திலே லாபத்தை மூன்று மடங் காகப் பெருக்கியிருக்கிறார். அசுர சாதனை. நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்தான். இப்படியான வணிக மேதைகளைப் பார்க்கும்போது மெலிண்டாவையும், பில் கேட்சையும் நினைத்துக் கொள்வேன். உலகத்திலேயே அதிகசெல்வம் சே…

    • 1 reply
    • 1k views
  21. இன்ஜினீயரம்மா!' ஒரு வைராக்கிய தாயின் வெற்றிக் கதை 'இந்தக் குடும்பத்தோட பாரத்தை முழுக்க நான் என் தலையில சுமக்கிறேன்’ - இது காலங்காலமாக நம்மூர் ஆண்கள் வாடிக்கையாக உச்சரிக்கும் வார்த்தை. இந்த வார்த்தைக்கு வலுசேர்க்கும் விதத்தில் 28 வருடங்களாக சித்தாளாக 'கல்லையும் மண்ணையும்’ தன் தலையில் சுமந்து, பிள்ளைகளை இன்ஜினீயராகவும், பார்மசிஸ்டாகவும் ஆக்கும் முயற்சியில் வெற்றிக்கோட்டைத் தொட்டிருக்கிறார் வைராக்கிய தாய் ஒருவர். சென்னை பூந்தமல்லியில் வசித்துவரும் 38 வயதான 'சித்தாள்’ ஜெயந்தி, தான் கடந்துவந்த முள்பாதையை தானே விவரித்தார். ''அஞ்சாவது படிக்கும்போதே படிப்பை ஏறக்கட்டிட்டு பாண்டு (சிமென்ட் சட்டி) தூக்க ஆரம்பிச்சுட்டேன். அப்பா, அம்மா, அண்ணன், தம்பின்னு அப்பவே என் குடும்பம் கூ…

  22. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாளை எவ்வளவு காலம் வைக்கலாம், என்று சிந்தித்தார் கடவுள். எல்லாவற்றிற்கும் சமமாக முப்பது ஆண்டுகள் என்று முடிவு செய்தார் அவர். தன் இருப்பிடத்திற்கு எல்லா உயிரினங்களும் வரச் செய்தார். அவற்றைப் பார்த்து, உங்கள் ஒவ்வொருவருக்கும் முப்பது ஆண்டு ஆயுள் தருகிறேன். இந்த வாழ்நாள் போதும் என்பவர்கள் இங்கிருந்து சென்று விடலாம். குறை உடையவர்கள் இங்கேயே இருங்கள். தீர விசாரித்து அவர்கள் குறையைத் தீர்த்து வைக்கிறேன், என்றார் அவர். கழுதை, குரங்கு, நாய், மனிதன் ஆகிய நால்வர் மட்டுமே அங்கே இருந்தனர். மற்ற எல்லோரும் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். முதலாவதாக நின்றிருந்த கழுதையை அழைத்தார் கடவுள். உன் குறை எ…

    • 0 replies
    • 4.1k views
  23. ஸ்ரீவத்ஸன் மெடிக்கல் ரிப்போர்ட்டில் இருந்த, உச்சரிக்கக் கஷ்டமான அந்த வார்த்தையை வெறித்துப் பார்த்தான். "Lymphangioleiomyomatosis". சிவப்பு எழுத்துக்களில் இருந்த அந்த வார்த்தையில் எமன் தெரிந்தான். அவன் மனைவி வைஷ்ணவியை அந்த வார்த்தை மூலமாக எமன் நெருங்கிக் கொண்டிருந்தான். டாக்டர் அவனுக்கு அந்த வியாதியைப் பற்றி விளக்க முயன்றது அரையும் குறையுமாகத் தான் அவன் மூளைக்கு எட்டியது. "...இதை LAMன்னு சுருக்கமா சொல்வாங்க. இதுக்கு இது வரைக்கும் சரியான மருந்து கண்டுபிடிக்கலை. இது ஒரு அபூர்வமான வியாதி. இது வரைக்கும் சுமார் 500 கேஸ்களை அமெரிக்காலயும், ஐரோப்பாலயும் பதிவு செஞ்சுருக்காங்க. இப்ப சின்சினாட்டி யூனிவர்சிட்டியில் இதைப் பத்தி ஆராய்ச்சி செஞ்சுகிட்டிருக்காங்க. இந்தியால இது முதல் க…

  24. சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள் by RV மேல் நவம்பர் 4, 2010 இது ஒரு மீள்பதிவு, சில அப்டேட்களுடன். என் வழக்கமான சிறு ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள். படித்தவை: புதுமைப்பித்தன் – மனித இயந்திரம் :கணக்குப்பிள்ளை பணம் திருடிக்கொண்டு ஓட முயலும் கதை. Brilliant! புதுமைப்பித்தன் உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதற்கு இந்த ஒரு கதை போதும். கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம். கு.ப.ராஜகோபலன் – விடியுமா?: ஒரு காலத்தில் புரிந்த மாதிரி இருந்தது. சமீபத்தில் யாரோ சிபாரிசு செய்யவே மீண்டும் படித்துப் பார்த்தேன். அத்திம்பேர் இருக்காரா போய்ட்டாரா என்று குழப்பம். அப்புறம் திருப்பி படித்தேன். போய்ட்டார் என்று புரிந்தது. நன்றாகத்தான் எழுதி இருக்கிற…

    • 2 replies
    • 3.8k views
  25. Started by nedukkalapoovan,

    ஏ எல் பரீட்சை முடிந்த சந்தோசத்தில்.. இடுப்பில் சுத்திய பட்டு வேட்டியும்.. தோளைச் சுற்றிய பட்டுச் சால்வையுமாக.. நல்லூர் முருக தரிசனம் காண.. ச்சா.. அதுக்கெல்லாமா அங்க போவாங்க.. வண்ண வண்ண காவ் சாறி உடுத்து வரும் இளம் தேவிகள் தரிசனம் காணும் பக்திப் பரவசத்தோடு.. நித்தியன் மயூரனின் வீட்டு வாசலில்.. சைக்கிளில் வந்து பெல்லை அடுத்துக் கொண்டு நின்றான். ஆனால்.. மயூரனோ வருவதாக இல்லை. டேய் மயூரன்.. கெதியா வாடா. ரைம் போகுது. நித்தியா போகப் போறாடா.. என்று கத்தினான். நித்தியாவின் பெயரைக் கேட்டதுமே மயூரன்.. எப்படி வாசலுக்கு வந்தான் என்று தெரியவில்லை ராக்கெட் வேகத்தில் வந்து நின்றான். ஏ எல் பரீட்சைக் காலத்தில் தான்.. நல்லூர் முருகன் திருவிழாவும் வருவதால்.. எப்படா பரீட்சை முடியும்..…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.