கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
அலை மகள். அன்றைய பூரணை நிலவு அள்ளியெறிந்து கெண்டிருந்த வெள்ளொளியில் மெல்லலைகள் வீசிக்கொண்டிருந்த முல்லைக்கடலின் ஓருபகுதி கைகளையும் கால்களையும் அகலப்பரப்பி அண்ணாந்து படுத்திருந்தபடி ஆயிரமாயிரமாய் மின்னிக்கொண்டிருந்த நட்சத்திரங்களையும் பூரணையின் பூரணநிலை பூரித்துப் போயிருந்தாள் அலைமகள். ஆகாயத்தை பார்த்தபடியே கடலில் கைகால்களை விரித்து மிதப்பதென்றால் அவளிற்கு அளவற்ற ஆசை. கரையில் நின்றிருந்த பயிற்சியாளர் இரண்டாவது தடைவையும் விசிலடித்து கையில் சிறிய சிவப்பு வெளிச்சத்தையும் அசைத்துப் பார்த்துவிட்டார் அவள் அசைவதாய் தெரியவில்லை. கையிலிருந்த நடைபேசியில்(வோக்கி)தூரத்தே காவலிற்கு நின்ற கடற்புலிகளின் படகோடு தொடர்பு கொண்டதையடுத்து படகு அவளை நோக்கி வந்துகொண்…
-
- 37 replies
- 3.5k views
-
-
அவன் ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவன்.கிரிக்கட் விளையாட்டு என்றால் அவனுக்கு நிகர் அவனேதான். பாடசாலை முடிந்து வீடு வந்து உணவு உட்கொண்டபின்பு மீண்டும் அதே பாடசலைக்கு விளையாடுவதற்காக சென்றுவிடுவான்.பாடசாலை அவனது வீட்டிற்க்கு அருகாமையில் இருந்தமையால் மிகவும் வசதியாக இருந்தது .விளையாட்டு ஆசிரியரும் அவனோடு மிகவும் நெருக்கமாக இருந்தார்.தேனீர் ,சிற்றூண்டிகள் போன்றவைகளை கொடுப்பான்.ஆசிரியரும் சில விளையாட்டு நுட்பங்களை கற்றுகொடுத்தார். படிப்பில் அவ்வளவு சுட்டி என்று சொல்ல முடியாது.ஆனால் ஆங்கிலத்தில் அவனுக்குத்தான் அதிக புள்ளிகள் கிடைக்கும் அவனது பெற்றோர்களும் ஆங்கிலத்தில்தான் இவனுடன் உரையாடுவார்கள் இவனும் நன்றாகவே ஆங்கிலத்தில் அந்த வயசில் பேசுவான். பாடசாலை கிரிக்கட் அணியில் தெறிவு…
-
- 12 replies
- 1k views
-
-
அபிதேமி ஆபிரிக்காவிலிருந்து எனக்குப் பின்னதாகவே வந்திருக்க வேண்டும். அப்படியில்லையாயினும் இரண்டொரு மாதங்களே முன்னராயிருக்கும். கரித்தாஸ் நிறுவனம் அகதிகளுக்கென ஒழுங்குபடுத்தியிருந்த ஜெர்மன் மொழி வகுப்பின் முதல் நாள் மழையில் நனைந்து சுவரோரம் ஒதுங்கிய ஒரு கோழிக்குஞ்சினைப் போல சுவரின் அருகே அவள் ஒடுங்கியிருந்ததைக் கண்டேன். நான் நுழைந்தபோது பதினைந்து பதினாறு பேரளவில் அங்கிருந்தார்கள். ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தலையைக் குனிந்து கொண்டார்கள். சூடானியர்கள், எரித்திரியர்கள், ஈராக்கியர்கள், சேர்பியர்கள் என அவர்களிருந்தாலும் என்னால் அடையாளப்படுத்த முடிந்தவர்கள் இரண்டேயிரண்டு பேர்தான். கறுப்பர்கள் மற்றும் வெள்ளையர்கள். உண்மையைச் சொல்வதெனில் அப்படியும் அல்ல, காப்பிலிகள…
-
- 5 replies
- 2.3k views
-
-
பாகம்-1 அதிகாலை 4.30 ற்கு அலாரம் அடிக்கிறது, பெரும் பிரயாசைப்பட்டுக் கண்களைத்திறக்க முயல்கிறான் தினேஸ். பிரிய மறுக்கும் காதலர்கள் போல் இமைகள் இன்னமும் அவனுடன் சண்டையிடுகின்றன. பிரித்தே ஆகவேண்டும் என்ற அவசியத்தை அலாரத்தின் அலறல் நினைவுபடுத்துகிறது. இனி அவனது நாள்ச்சக்கரம் சுற்றத்தொடங்கும்.மணித்தியாலங்கள் அவன் வியர்வையில் கரையத்தொடங்கும். சிறைப்பட்டிருக்கும் பற்பசையில் சிறு துளிக்கு விடுதலை கொடுத்து குளியலறைக்கு விரைகையில் மனம் அவனை முந்திக்கொண்டு வேலையிடத்திற்க்கு விரைகிறது. புலம்பெயர்ந்ததால் கண்டங்கள் மட்டுமா மாறிவிட்டன..? எங்கள் வாழ்க்கை முறையுமல்லவா மாறிவிட்டது. தொலைத்த எங்கள் தனித்துவங்களின் நினைவுகளை மட்டும் பத்திரமாக ஞாபகக்குழிகளில் சேமித்து வைத்திர…
-
- 43 replies
- 6.2k views
-
-
[size=5]1967 ஆண்டு அளவில் சண்முகதாசன் மாவோ சேதுங்கை சந்தித்த பொழுது எடுத்த புகைப் படம்[/size] [size=3]தோழர் சண்முகதாசன் அவர்களின்[/size] [size=3]“ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்”[/size] [size=3]நூல் அறிமுக மற்றும் விமர்சன அரங்கு[/size] [size=3]காலம் - 20th October 2012 , 3.00 P.M[/size] [size=3]இடம் - Walthamstow Quaker Meeting House 1a Jewel Road London E17 4QU தலைமை – தோழர் வேலு அவர்கள் மேலதிக விபரங்கட்கு : தோழர் பாலன் - 00447753465573 tholar2003@hotmail.com [/size]
-
- 1 reply
- 797 views
-
-
[size=6]யாரோ ஒருவன்[/size] யோ.கர்ணன் நேற்று முழுவதும் அக்காவின் ஞாபகம் ஒரு காரிய நிழலாக மனதில் படர்ந்திருந்தது. அந்த அடர் திரையை விலக்கி ஒரு ஒளிக்கற்றைகூட மனத்திரையில் பதியவேயில்லை. மனதின் இருளில் வழிதெரியாத நினைவுகள் அல்லாடிக் கொண்டிருந்தன. அம்மாவின் முகமே இருண்டிருந்தது. யாருடனும் அவர் சரியாகக் கதைக்ககூடயில்லை. கடந்த சில மாதமாகத்தான் அவர் வாழ்வில் ஒளி கொண்டிருப்பதாக ஓயாத சிரிப்புடன் சொல்லிக் கொண்டிருந்தவர், இன்று அனைத்தையும் இழந்துவிட்டார். அம்மா இவ்வளவு சீரியசாக இருக்கத் தேவையில்லையென்றுதான் எனக்குப்பட்டது. ஆனாலும் எதனையும் நான் சொல்லவில்லை. நீண்ட பிரிவின் பின் கடந்த சிலமாதமாகத்தான் அம்மாவுடன் சேர்ந்திருக்கிறேன். எதனையும் தனது விருப்பத்தின்படியே செய்து முட…
-
- 2 replies
- 1.2k views
-
-
உயர்ந்து பரந்து விரிந்து காட்சியளித்த அந்த பிரமாண்டமான கட்டிடத்தை எனது கார் நெருங்கியது. நெருங்க நெருங்க என் மனமும் நொறுங்க ஆரம்பித்தது.வாகனத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் காரை நிறுத்திவிட்டு 200 மீற்றர் தூரத்தில் காட்சியளித்த அந்த வெள்ளைக்கட்டிடத்தின் நுழை வாயிலை அண்மித்தேன்...உள்ளே கடமையில் இருந்தவர்கள் கதவினைத்திறப்பதற்காக பொத்தானை அழுத்தியதும் அந்தக்கண்ணாடி கதவு மெதுவாக திறந்து கொண்டது.மெதுவாக எனது கால்களை உள்ளே வைத்து பதட்டத்துடன் உள்ளே சென்றேன்.கடமையில் உள்ளவர்கள் விபரத்தை கேட்டார்கள்.கூறினேன். அவர்கள் கையில் வைத்திருந்த பத்திரத்தில் பெயரைத்தேடி குறிப்பிட்டபின் எனது கடவுச்சீட்டை வாங்கினர். அதன் பின் என்னிடம் உள்ள பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஒரு சிறிய அலுமாரி…
-
- 38 replies
- 3.1k views
-
-
கதையல்லாத கதைகள் 02-யோ.கர்ணன் “ரைகர்ஸ்” யாழ்ப்பாணத்திலிருக்கும் நாற்பதினாயிரம் சிங்களப்படைகளையும் உயிருடன் பிடித்து வைத்துக் கொண்டு பேரம் பேசி தமிழீழத்தையடையப் போகிறார்களா அல்லது நாற்பதினாயிரம் சிங்களச் சிப்பாய்களின் சடலங்களை வைத்துக் கொண்டு பேரம் பேசி தமிழீழத்தையடையப் போகிறார்களா என உலகின் திசையனைத்திலுமிருந்த தமிழ் ஆய்வாளர்கள் அனைவரும் தலையைப்பிய்த்துக் கொண்டிருந்த பொழுதது. உச்சபட்சமாக, வன்னியிலிருந்த ஆய்வாளரொருவர் ஈழநாதம் பத்திரிகையில் பின்வருமாறு எழுதியிருந்தார்- ‘நமது குறைநிர்வாக இராச்சியத்தை சில வல்லரசுகள் பயங்கரவாத இயக்கமாக தடை செய்துள்ளன. நல்ல கூடைப்பந்து விளையாட்டு வீரன்தான் பந்தை எப்பொழுதும் தனது கையில் வைத்திருக்க வேண்டும். சாணக்கியம் மிக்க இரா…
-
- 4 replies
- 920 views
-
-
இது ஒரு கதை அல்ல...நடந்த சம்பவங்களின் தொகுப்பே..... அந்த காலத்தில்- 80 களில், 5 வகுப்பு கொலர்ஷிப் இப்பமாதிரி, பேப்பர்ல படம் எல்லாம் போட்டு, "எங்கட பாடசாலையில் இருந்து 302 பேர் தோற்றி அதில் 4 யாழ்பாணத்தின் முதல் பத்து இடத்தில வந்திருக்கினம், 87.3 பேர் சித்தியடைந்திருக்கினம், இன்னும் 33.21 பேர் தசம் 33 மார்க்கால பெயல் விட்டிருக்கினம்", அவைகளை நாங்கள் வாழ்த்துகிறோம், அவர்கள் பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ்த்துகிறோம் என்று வராதகாலம், நானும் எனது "சக்சவிவ்" பிள்ளை பிராக்காட்டல், பிராக்கு பார்த்தல் கோர்ஸ் எல்லாம் முடித்து, அந்த காலத்தில் கொலஷிபிக்கு பெயர் போன டீச்சரிடம், ஒருமாதமோ, இரண்டு மாதமோ இருக்கையில் சேர்ந்தேன், ஐந்தாவது ஆளாய்.... யார் யார் எனக்கு முன்னம்...அவ…
-
- 8 replies
- 1.4k views
-
-
எல்லாருக்கும் வணக்கம்! நீங்கள் எல்லாம் எப்படி இருக்கிறியள்? என்னடா இவனைக் கன காலமா இந்தப் பக்கம் காணேல்லையே! ஊரப் பக்கம் சோக்காட்டப் போய் கோத்தபாயா கூட்டத்திட்டை மாட்டுப் பாட்டுக் கீட்டுப் பட்டுப் போனானோ எண்டு நினைச்சிருப்பியள்.... அப்படி எல்லாம் இல்லைப் பாருங்கோ! நாப்பது வயதைத் தாண்டினால் நாய்ப்பிழைப்பெண்டு சொல்லுறவை. அது உண்மை தான் போலை கிடக்கு... அங்கையும் இங்கையும் ஓடுப்பட்டுத் திரியிறதிலை இதிலை குந்தியிருந்து உங்களோடை புலம்பிறதுக்கு நேரமில்லாமல் கிடக்குது... சரி சரி உந்தப் பழைய பஞ்சாங்கங்களை விட்டுப் போட்டு நேரை விசயத்துக்கு வாறன்... இப்ப இந்த சமர் ஹொலிடேயோடை எங்கடை ஆக்கள் சில பேர் வெளிக்கிட்டு ஊர்ப்பக்கம் போகினம்...அப்படிப் போயபாட்டு வாற ஆக்களோட…
-
- 29 replies
- 2.6k views
-
-
சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள் பல வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. தவறான எண்ணத்துடனான தொடுகை நேரடியான பாலியல் அத்துமீறல் மற்றும் பாலியல் ரீதியிலான கி;ண்டல் கதைகள் என்பனவாகவும் இன்னும் விரிவாகவும் சொல்லிச் செல்லலாம். மேலும் அவர்களின் வறுமையைப் பயன்படுத்திச் சமூகத்தால் பாலியற் தொழிலாளர்களாக்கப்படுவதும் கூட ஒரு வகையில் வன்முறைதான். பாலியல் ரீதியான பேச்சுக்கள் அச்சிறார்களின் மனதில் என்றும் நிலைக்கும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. அவை மனதைத் துன்புறுத்தி வெறுப்புணர்வுடன் தங்கிவிடுகின்றன. அவர்களைச் சுற்றியுள்ள உறவு நட்பு அயல் பாடசாலை மற்றும் வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றிலிருந்து இவை நிகழ்த்தப்படுகின்றன. பாதுகாக்க வேண்டியவர்களும் அரவணைப்புக்கும் ஆறுதலுக்குமானவர்களே அவற்றைச்…
-
- 3 replies
- 1.1k views
-
-
மகிந்த சிந்தனை இதுதான் சரியான சந்தர்ப்பம் இவன் டக்லஸ்ஷால நமக்கு எந்த பிரயோசனமும் இல்லை இந்தியாவால் வேறு தேடப்படுகின்ற குற்றவாளி இதால நம்ம நாட்டுக்கு வேறு கெட்ட பெயர். நான் இந்தியா போகும் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி இவன எப்படியாவது போட்டு தள்ளனுமே என்ன..... பண்ணலாம் ஆ.... ஒரு ஐடியா மகிந்த உடனே தனது அமைச்சரை அழைத்து அமைச்சரே நான் சொல்லப்போகும் விஷயம் உனக்கும் எனக்கும் தவிர வேற யாருக்கும் தெரியக்கூடாது அமைச்சர் பதிலுக்கு என்ன.. சனாதிபதி நீங்க போடுற எழும்பை தின்னுட்டு உங்களுக்கே துரோகம் பண்ணுவனா நான். சரி சரி இந்திய போய்ட்டு வந்த பிறகு வீட்டு பக்கம் ஒருக்கா வா ஓகே சோ்.சரி சனாதிபதி அது என்ன இரகசியம்.நாங்க டக்லஷ கொலை செய்யப்போறம் டக்லஸ்ஷால நமக்கு எந்த பிரயோசனமும் இல்லை இந்தி…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
[size=4]கிளிநொச்சியின் நினைவுகள் என்னை அறியாமல் மீள மீள கண்முன் [/size] [size=4]வந்து போகிறது.சிங்கள அரசின் சத்ஜெய இராணுவ நடவடிக்கையால் [/size] [size=4]இழந்த கிளிநொச்சியை தமிழர் மீண்டும் கைப்பற்றினர்.2001 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் [/size] [size=4]தமிழரின் மீள்குடியேற்றம் ஆரம்பம் ஆகிற்று.வளமான கிளிநொச்சி [/size] [size=4]உடைந்த கட்டிடங்களாலும்,பற்றைகளாலும் உருமாறிக்கிடந்தது.ஒருநாள் [/size] [size=4]கனகபுரத்திலிருந்து டிப்போ சந்திக்கு போகும் பாதையில் சென்று [/size] [size=4]இடப்பக்கமாய் கண்ணன் கோயில் ஒழுங்கையால் திரும்பி மோட்டார்சைக்கிளில் [/size] [size=4]போய்க்கொண்டிருந்தோம்.வேலிக்கரையோரமாய் நீளக்கோடுகள் [/size] [size=4]உள்ள சாரம் ஒன்று விரித்ததுபோல் கிடந்தது.மோட…
-
- 9 replies
- 1k views
-
-
அவனது மாசறாட்டி நிறுத்தப்படுவதற்கு முன்னரே ஓடிவந்து காத்து நின்ற வலே சாவிகளைப் பற்றிக்கொள்ள, மகசீன் ஒன்றின் அட்டைப் படத்தில் இருந்து விழுந்தவர்களாக அவனும் அவளும் அந்த ஆடம்பர உணவகத்துள் நுழைகிறார்கள். மேற்றடீ ஓடிவந்து அவனது பெயரைக்கூறி அதியுச்ச மரியாதையினை உடல்மொழியில் காட்டி வரவேற்று, அவளையும் குழைந்து, அவர்களது இருப்பிடம் அழைத்துச் செல்கின்றான். உணவகத்தில் அமர்ந்திருந்த அவனை ஒத்த தரத்தினர் உடல்மொழியில் அவன் தங்கள் தரத்தவன் என்பதை காட்டிக்கொள்கின்றனர். பலர் அவனின் தம்மை நோக்கிய பார்வையினைத் தமக்கான அங்கீகாரமாகக் கருதுவது வெளிப்படையாய்த் தெரிகிறது. அவனும் அவளும் அமர்ந்து கொள்கின்றனர். ஆர்மானி சூட்டின் பொத்தானைக் கழட்டியபின் ஒரு கையின் கவ்ளிங்ஸ்சை மறுகரத்தால் உறுட்டியபடி அவ…
-
- 24 replies
- 1.9k views
-
-
[size=4]அவன் ஒரு அகதி.அவன் தற்போது வசிக்கும் நாட்டில் அவனுக்கு [/size] [size=4]எந்த உறவினரும் இல்லை.அவன் சமாதான காலத்தில் இந்த நாட்டுக்கு [/size] [size=4]பலத்த சிரமப்பட்டு வந்திருந்தான். அவனின் சொந்த ஊர் யாழ்ப்பாணத்தில் [/size] [size=4]உள்ள கிராமம்.அவனுக்கு ஒரு அண்ணன் இருந்தான்.அவன் ஜெயசுக்குறு [/size] [size=4]எதிர்ச் சமரில் வீரச்சாவு அடைந்தான்.தந்தை சிறுவயதில் இறந்துவிட தாய்தான் [/size] [size=4]இவனையும் அண்ணனனையும் சிரமப்பட்டு வளர்த்தாள். [/size] [size=4]தொண்ணூற்றி ஐந்தாம் ஆண்டு வன்னிக்கு இடப்பெயர்ந்து [/size] [size=4]மல்லாவியில் உள்ள உயிலங்குளத்தில் சிறு கொட்டில் போட்டு [/size] [size=4]வசித்தார்கள்.அவனது அண்ணனின் வித்துடல் ஆலங்குள துயுலுமில்லத்தில்[/size…
-
- 16 replies
- 1.9k views
-
-
[size=4]இன்று காலை தொலைபேசி அடித்தது. என் அம்மம்மா [/size] [size=4]இறந்துவிட்டாவாம்.அம்மம்மாவிற்கு தொண்ணூறு வயது.[/size] [size=4]சில நாட்களாய் கடும் சுகயீனம் உற்றிருந்தா. நேற்றும் அம்மம்மாவுடன் தொலைபேசியில் [/size] [size=4]கதைத்தேன்.என்னால தொடர்ந்து கதைக்கேலாமல் [/size] [size=4]கிடக்கு ராசா என்று தொலைபேசியை அம்மாவிட்ட [/size] [size=4]குடுத்திட்டா.இறப்புகளைக்கண்டு பழகிப்பழகி வெறும் மரமாய்ப்போன [/size] [size=4]வாழ்க்கையில் எங்கிருந்தோ கண்ணீர்த்துளிகள் வருகின்றன.[/size] [size=4]நான் பிறந்ததிலிருந்து இன்றுவரை எனக்கு அம்மம்மாவைத்தெரியும்.[/size] [size=4]நாங்கள் பிஞ்சுகளாய் இருக்கைக்க அம்மம்மா [/size] [size=4]நிலாக்காட்டி சோறு ஊட்டுவா.நிறைய கதைகள் சொல்லுவா.[/s…
-
- 20 replies
- 1.6k views
-
-
வணக்கம் கள உறவுகளே!!! இந்தப்பகுதியுடன் நெருடியநெருஞ்சியை நிறைவுக்குக் கொண்டுவருகின்றேன் . இவ்வளவுகாலமும் எனது இம்சைகளை தாங்கி ஆக்கமும் ஊக்கமும் தந்த கள உறவுகளுக்கு நான் என்றுமே கடமைப்பட்டுள்ளேன் . இந்தப் பயணக்கட்டுரையை எழுதத் தயங்கி நின்ற பொழுது விசுகண்ணைதான் என்னைத் தட்டிகொடுத்தார் ,ஊக்கமும் தந்தார் . அவருக்கு நான் நன்றி என்று சொல்லி எமது நெருக்கத்தைத் தள்ளி வைக்க விரும்பவில்லை . என்றுமே எனது வளர்ச்சி உங்கள் கைகளிலேயே உள்ளது . வழமை போலவே உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றேன் . நேசமுடன் கோமகன் ******************************************************************************************************************************* …
-
- 38 replies
- 5.5k views
-
-
[size=5]அந்த வீடு பூட்டி இருந்தது . .மூன்று தரம் வாசற் கதவு பெல் அடித்தும் நாலுதரம் தட்டி பார்த்தும் ஆறு தரமோ அதுக்கு மேலேயும் சத்தம் போட்டும் எந்த விதமான மறுமொழியும் காணமால் ..இப்ப கொஞ்சம் முந்தி தானே இறங்குகிறேன் அரை மணித்தியலாத்தில் வந்து விடுவேன் என்று சொன்ன பொழுது ..வரவா ஸ்டேசனுக்கு என்று கேட்டானே என்ற கேள்வி குறியோடு மொபைலில் தொடர்பு கொள்ள முயற்சித்தான். எத்தனை தரம் முயன்றாலும் திரும்ப திரும்ப ஒரே பதிலை சொல்லி கொண்டு இருந்தது.இப்ப என்ன செய்வம் என்று திரும்பி பார்த்த பொழுது தூரத்தில் மலை பாங்காக தெரியும் பகுதியில் இவனை இறக்கி விட்டு சென்ற டாக்சி போய் கொண்டிருந்தது சுற்ற வர மலை பாங்கான இடத்தின் அடியில் இருக்கும் அந்த ஆங்கில தேசத்தின் ஒரு கிராமம் அவன் ந…
-
- 15 replies
- 1.1k views
-
-
[size=4]ஆகஸ்ட் 6, 1945. இரண்டாம் உலகப்போர் உச்சத்தை அடைந்திருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ’பியர்ல் ஹார்பர்’ (Pearl Harbor) தாக்குதல் மூலம் தன் நாட்டை சிதைத்த ஜப்பானை பழிக்குப்பழி வாங்க அமெரிக்கா தொடை தட்டிக் கொண்டிருந்தது. அமெரிக்க விமானப்படை முதன்முதலாக அணுகுண்டுகளை ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது வீசியது. நொடிப்பொழுதில் பேரழிவு. புழுதி அடங்கியதும் பார்த்தபோது ஒரு லட்சத்து நாற்பதாயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்திருந்தார்கள்.[/size] [size=4]சடாகோ சஸாகிக்கு அப்போது வயது இரண்டு. குண்டு வீசப்பட்ட இடத்துக்கு ஒரு மைல் தூரத்தில்தான் அவளது வீடு இருந்தது. அணுகுண்டின் வீரியத்தால் பூகம்பம் வந்ததுபோல அவளது வீடு அதிர்ந்தது. சஸாகி ஜன்னல் வழியாக தூக்கியெறியப் பட்டாள். அவளது அம்மா…
-
- 2 replies
- 2.3k views
-
-
"துரத்தப்பட்டவர்களின் மீள் பயணம்" ஒரு பேப்பரிற்காக அல்விற் வின்சன் எழுதியது [size=4]எத்தனையோ காலச் சிக்கல்களுக்குப் பிறகு நிம்மதியாக(?) நாட்டுக்குச் சொந்த பந்தங்களைப் பார்க்கவென்று போன நிறையப் பேரில் செல்வாவும் அடக்கம். முன்பு நிலைமை லேசான இறுக்கத்தில் இருந்த போது மாமா மோசம் போன செய்தி கிடைத்ததும் மனதுக்குள் குறுகுறுக்க கடினமான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தாள் கணவனுடன்.பிள்ளைகள் கேள்விப்பட்ட விடையங்களை வைத்துக் கொண்டு வரவே முடியாது என்று சொல்லி விட்டதால் கணவனும் மனைவியும் தனியே சென்றிருந்தார்கள். போன இடமெல்லாம் பயத்தில் கண் முழி பிதுங்கப் பிதுங்க பார்த்துப் பார்த்து மூச்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இங்கே வந்து சேர்ந்ததும் தான் ஒழுங்காக விட முடிந்திருந்தது…
-
- 9 replies
- 966 views
-
-
[size=4]எனக்கு தெரிஞ்ச நாட்களிலேயே எங்கட அப்பா படு சுழியன்.[/size] [size=4]அப்பாவுக்கு முந்தி ஒழுங்கான வேலை கிடையாது.பிறகு [/size] [size=4]புலிகளின்ர காலத்தில அவங்கட அலுவலகம் ஒன்றில [/size] [size=4]வேலை செய்தார்.அப்ப புலி என்ற நினைப்பிலேயே இருப்பார்.[/size] [size=4]இப்ப தாடிக்காரரோட வேலை செய்யுறார்.இப்ப இந்த நினைப்பில [/size] [size=4]இருக்கிறார்.[/size] [size=4]நான் வெளிநாட்டுக்குப்போனதுக்கு இப்பதான் ஊருக்கு வந்திருக்கிறன். [/size] [size=4]நான் இன்றைக்கு கனக மாமாவிட்ட போகக்கேட்டன்.அப்பா வேணாம் [/size] [size=4]என்றிட்டார்.முந்தி அப்பாவும் கனக மாமாவும் நல்ல ஒட்டு.எங்களுக்கு [/size] [size=4]அவை நிறைய உதவி செய்திருக்கினம் .நாங்களும் வீட்டுல இரண்டு [/size] …
-
- 10 replies
- 915 views
-
-
இங்கு நான் எழுதப் போவது என்னுடைய சொந்த அனுபவங்கள் மட்டுமே அதுவும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் அனுபவங்கள். தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை பெரும்பாலும் சாதாரணமாக எவரும் எழுதவோ அல்லது மற்றையவர்களிடம் பகிர்ந்து கொள்ளவோ விரும்ப மாட்டார்கள். அதுவும் குறிப்பாக எமது தமிழ் சமூகத்தில் அது நாம் சிறந்தவர்கள். உயர்வானவர்கள் மேன்மையானவர்கள் என எம்மை சுற்றி நாமே கட்டியமைத்திருக்கும் ஒரு கட்டமைப்பினை தகர்ந்துவிடுமோ என்கிற ஒரு பயத்தினாலேயே வெளிப்படையாக எழுதுவதோ பேசுவதோ கிடையாது அப்படி யாராவது எழுதினாலும் எழுதும் ஒருவரை சமுதாயத்தை அல்லது கலாச்சாரத்தினை கெடுப்பவன் என்கிற முத்திரையை குத்தி ஒதுக்கி விடுவதே எமது சமூகத்தின் சிந்தனைப்போக்கு. 70 களில் ஆயுதத்தினை சில இளைஞர்கள் கையில் தூக்கியபொழ…
-
- 303 replies
- 61k views
-
-
நேற்று ஒரு அழகான தோழியை.. கன நாளைக்குப் பின்.. சந்திச்சு மனம் நெகிழ பேசிப் பழகினதில் இருந்து மனசில் ஒரே மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியோடு நித்திரைக்குப் போனனா.. நடுநிசியில்.. பேச்சுவார்த்தைக்குப் போகச் சொல்லி மக்கள் சார்பில் ஒரு அழைப்பு... யாரோட பேச்சு வார்த்தை.. வேற யாரு.. பிரபாகரன் அரசியலை விட்டு விலகினால் நான் அரசியல் செய்யாமல் விலகிக் கொள்வேன் என்று மார்தட்டித் தட்டியே யாழ்ப்பாணத்தை வன்னியை சிங்களவனோட சேர்ந்து சுடுகாடாக்கிய டக்கிளசு கும்பலோட தானாம். ஏன் அவையோட பேச்சு வார்த்தை.. பிரபாகரனை தானே உலகத்தை விட்டே விலக்கி வைச்சிட்டீங்க.. இருந்தும்.. நீங்க என்ன இன்னும் அரசியலில் இருந்தும் விலகல்ல.. கொலை.. கப்பம்... பஞ்சமா பாதகங்கள்... காட்டிக்கொடுப்புக்கள…
-
- 13 replies
- 1.1k views
-
-
அக்கா யோ.கர்ணன் அக்காவிற்கு துப்பரவாக அசோக்கை பிடிக்கவில்லை. ஏதோ பெரிய அரியண்டமொன்றை பார்க்கிற மாதிரித்தான் பார்த்தாள். அவள் ஏற்கனவே நுட்பம் பார்க்கிறவள். அசோக் வேற கொஞ்சம் ஊத்தையாக இருந்தது. அசோக்கை முதல்முதல் காணேக்க, அவள் முகம் கோணலாததை பார்க்க மாட்டியள். அவளின்ர இந்த சிடுசிடுத்த முகத்தை பார்த்திட்டுதான், சிறுவன் குரங்கென்று ஆளை கூப்பிடுறனான். அவளுக்கு அசோக்கை பிடிக்காமல் போனதற்கு படிக்கிற காலத்தில நடந்த சம்பவமொன்றும் காரணமாயிருக்கலாமென்று நினைக்கிறன். அக்காவோட படிச்ச பொடியள்ளயே வலு காவாலிப் பொடியன் ஒருத்தன் இருந்திருக்கிறான். அவனின்ர பெயரும் அசோக்தான். அவனுக்கு என்ன காத்துக் கறுப்படிச்சதோ தெரியாது, அக்காவில காதல் வந்திட்டுது. அவன் எங்கட றோட்டா…
-
- 13 replies
- 1.4k views
-
-
நாங்கள் படிக்கிறம் எண்டு அம்மா அப்பாவப் பேக்காட்டிகொண்டு திரிஞ்ச காலத்தில விடியக்காலையில நாலரை மணிக்கு டியுசனுக்குப் போவது வழக்கம். தனியப் போவதற்குப் பயம் ஆனபடியால் இரண்டு மூன்று பேராகப் போவோம். எங்கள் ஊரிநூடாக மூன்று நான்கு இளஞர்கள் சீமெந்துத்தொழிற்சாலைக்கு வேலைக்குப் போவார்கள். கொஞ்ச நாள் பேசாமல்ப்போனவர்கள் பின்னர் தங்கள் குரங்குச் சேட்டையை ஆரம்பித்தார்கள். நக்கலடிக்கிறது, சயிகிளை இடிப்பதுபோல் எமக்குக் கிட்டக் கொண்டு வருவது இப்பிடிப் பல.நான் உதுக்கெல்லாம் பயப்பிடும் ஆள் இல்லை எனினும் எனது நண்பி சரியான பயந்தாங்கொள்ளி. எடி நீ அவங்களத்திட்டாத பிறகு அவங்கள் வேற ஏதும் செய்தாலும் ஏன் வீண் பிரச்சனை என்றாள். அப்ப அம்மாட்டச் சொல்லட்டோ என்றேன். உன்ரை அம்மா பிரச்சனை இல்லை உன்ரை…
-
- 6 replies
- 1.9k views
-