வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
391 topics in this forum
-
ஓவியர், சிற்பக் கலைஞர் கலாபூஷணம் ரமணி (முன்னாள் வருகைதரு விரிவுரையாளர் - யாழ் பல்கலைக்கழகம்) கலைகளும், கலைப்படைப்புகளும், கலைஞர்களும் இல்லாமல் உலகைக் கற்பனை பண்ணிப் பாருங்கள்... வேண்டாம் அந்த விபரீதக் கற்பனை. மரணமில்லா வாழ்வு கலைஞனுக்கு மட்டும்தான். அதனால்தான் கவியரசு கண்ணதாசன் என்ற பன்முகக் கலைஞன் கம்பீரமாக நிமிர்ந்து நின்று தன்னை "மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர் மாண்டுவிட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என உறுதிபடப் பாடியதோடு மட்டுமின்றி விடாது "பாமர ஜாதியில் தனிமனிதன் - நான் படைப்பதனால் என்பேர் இறைவன்" எனப் பிரகடனமும் செய்துவிட்டுப் போயுள்ளான். இது உண்மையான ஆற்றல்மிகு கலைஞரின் புவிசார் தகைமையை அர்த்தபூர்வமாக…
-
-
- 3 replies
- 311 views
-
-
சிலுவை இறக்கம்: துயரொழி காவியம் சு. தவச்செல்வன் கதை வழிப் பயணம் கருணாகரன் பிரமாண்டமாகவே விரிந்திருக்கும் இயற்கையின் வினோதங்கள் எல்லையற்றவை. சொல்லி மாளாத அழகுடையவை. பார்த்துத் தீராத அழகொளிர் காட்சி அது. அப்படியான அழகிய – வசீகர இயற்கையின் பின்னணியில் அல்லது அவ்வாறான பேரெழில் இயற்கைக்குள், நாம் பார்த்துக் கொண்டிருக்கப் பகிரங்கமாகவே நிகழ்கின்றது இலங்கையில், மலையக மக்களின் நூற்றாண்டுகளாக நீளும் அவல வாழ்க்கை. இது நாம் பார்த்து வியக்கின்ற அழகுக்கு நேர் மாறான ஒன்று. இந்த மக்களுக்கான அபிவிருத்தி, மக்களின் நலனுக்கும் முன்னேற்றத்துக்கும் எனச் சொல்லப்படும் திட்டங்கள், பெருந்தோட்டத்துறைக்கும் மக்களுக்குமான தனியான அமைச்சு, அந்த அமைச்சின் நடவடிக்கைகள், அதற்கான கட்டமைப்புகள் எனப் பல இருந…
-
- 0 replies
- 156 views
-
-
தமிழுக்காக அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொண்டாற்றிய ‘தங்கத் தாத்தா’ என்றழைக்கப்படும் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ( 25.05.1878 - 10.07.1953 ) யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி என்ற ஊரில் 1878 இல் பிறந்தார். சிறுவயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ச்சி பெற்றதோடு ஆங்கிலத்தையும் கற்றார். சிறு வயதிலேயே பேச்சாற்றலும், விவாதத் திறமையும் ஒருங்கே பெற்றிருந்தார். ஏராளமான பாடல்கள் இயற்றினார். 'அட்டகிரி முருகன் பதிகம்', 'அட்டகிரி முருகன் திருஊஞ்சல்', 'சாவித்திரி கதை', 'பசுவின் கதை' உள்ளிட்ட நூல்கள் இவர் இளம் வயதில் இயற்றியவை. வட்டுக்கோட்டையில் இருந்த சின்னத்தம்பி ஆசிரியருடன் இணைந்து ஆங்கிலப் பாடசாலை தொடங்கி அங்கு நாற்பது ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றி தமிழ், ஆங்கிலம் மற்ற…
-
- 1 reply
- 315 views
-
-
அ.முத்துலிங்கத்துக்கு விருது jeyamohanFebruary 6, 2025 அ.முத்துலிங்கம் அவர்களுக்கு கனடாவின் டொரெண்டோ பல்கலைக் கழகம் வழங்கும் மதிப்புமிக்க விருந்தான ARBOR AWARD வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் பண்பாட்டுக்கும் பல்கலையின் கல்விப்பணிக்கும் அளித்த பங்களிப்புக்காக அளிக்கப்படும் விருது இது. அ.முத்துலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் https://www.jeyamohan.in/211914/
-
-
- 1 reply
- 290 views
-
-
மாற்குவியம் – சி.ஜெயசங்கர். adminJanuary 8, 2025 நவீன காலத்து ஈழத்து ஓவிய உலகின் ஆச்சரியந்தரும் ஓவியப் படைப்பாளி அ.மாற்கு அவர்கள். ஓவிய உலகின் உருவாக்கமான ஓவியர் அ.மாற்கு அவர்கள் நவீன ஓவிய உலகின் தராதரங்களாலும்;; வரன்முறைகளாலும் கட்டுப்படுத்தமுடியாத ஓவிய ஆளுமையாகத் திகழ்ந்திருப்பதை அவரது வாழ்க்கைக் காலப் படைப்புகள், செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அ.மாற்கு அவர்கள் தான் வாழ்ந்த சூழலையும், சூழ்நிலைமைகளையும் தனது கைக்கெட்டும் சாதனங்களை வைத்து சாதித்திருப்பதை அவரது படைப்புகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அவர் தனது படைப்பாக்கங்களுக்கான சாதனங்களுக்காகக் காத்திருந்ததில்லை, அங்கலாய்ந்திருந்ததில்லை. இந்தத் திறந்த, பரந்த, துணிந்த தன்மை கடந்த ஐம்பது ஆண்டுக…
-
-
- 4 replies
- 555 views
-
-
குச்சுப்புடி நாட்டியத்தாரகை ரங்கா விவேகானந்தன் ஆடற்கலையென்றவுடன எங்களில் பலர் பரதநாட்டியத்தை மட்டும் நினைவுக்கு கொண்டு வருகிறோம். அதனோடு எங்களுக்கு பரிச்சியம் அதிகம் அதனால்தான். குச்சுப்புடி, கதகளி, மோகினியாட்டம் என்றெல்லாம் நிகழ்த்தப்படும் ஆடல்வகைகளை பயிலவும், அரங்கேற்றவும், ரசிக்கவும் எங்களுக்கு பொதுவாக சந்தர்ப்பம் கிடைப்பதி;லை. ஆனால் யாழ்மாவட்டத்தில் வல்வை மண்ணில் பிறந்த ஒரு நாட்டியக்கலைஞர், பரதத்தோடு இம்மூன்று ஆடல்வகைகளையும் இந்தியாவில் சிறந்தகுருமாரிடம் கற்றுத்தேர்ந்து, இலங்கை திரும்பியபின் நிகழ்த்திய நிகழ்ச்சிகள் சிலவற்றைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முக்கியமாக தெய்வீக அழகும் பக்திபாவமும் பொருந்திய அவரது குச்சுப்புடி நடனநிகழ்வு என்னை மிகவ…
-
- 0 replies
- 315 views
-
-
‘சாகித்ய அகாடமி விருது… வ.உ.சி தான் காரணம்’ : ஆ.இரா.வேங்கடாசலபதி மகிழ்ச்சி! christopherDec 19, 2024 09:12AM வ.உ.சி குறித்து எழுதிய நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி தெரிவித்துள்ளார். இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருதுடன் ரூபாய் 1 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. தற்பொழுது 21 மொழிகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எட்டு கவிதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைகள், மூன்று இலக்கிய விமர்சன நூல்கள் மற்றும் ஒரு நாடகம் ஆகி…
-
- 0 replies
- 343 views
-
-
தன்னறம் இலக்கிய விருது – 2024 jeyamohanNovember 10, 2024 ஷோபா சக்திக்கு வாழ்த்துக்கள் ஜெ எண்பதுகளின் காலகட்டத்திலேயே எழுதத் தொடங்கிய எழுத்தாளர் ஷோபா சக்தி, அப்போதிருந்து இன்று வரையிலான நாற்பதாண்டு காலகட்டத்தில் சுய வாழ்வு அலைக்கழிக்கபட்ட காலங்களின் இருள் பாதை நெடுகிலும் வாழவனுபவங்களைக் கதைகளாக்கி விதைத்து வருபவர். எழுத்தைக் கடவுளாகவும் சாத்தானாகவும் நம்புகிறவார். சென்று சேர்ந்த எல்லா நிலங்களிலும் அவர் சுமந்தலையும் நிலத்தின் ரத்தம் செறித்தக் கதைகளை சொல்லி வருகிறார். தொண்ணூறுகளின் காலகட்டத்தில் இருந்து குறிப்பிடத் தகுந்த பங்களிப்பையும், தீவிரமான செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு புனைவுப் பரப்பில் தனக்குரிய தனி பயணத்தை கொண்டிருப்பவர். அ…
-
-
- 6 replies
- 1k views
-
-
அன்பு நண்பர்களுக்கு: இவை நான் இதுவரை எழுதிய நீண்ட கட்டுரைகள். பல கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும், ஆனால் வெவ்வேறாக உள்ளன. உங்களின் விருப்பம் தெரிவித்தால், அவையை நான் இங்கு பதிய முயலுவேன் அல்லது லிங்க் தருவேன். நீங்கள் வாசித்து உங்கள் கருத்துக்கள் பதியும் பொழுது நானும் அதனுடன் சேர்ந்து வளர்ச்சியடைவதுடன் கட்டுரைகளும் மேலும் திருத்தப்பட்டு அழகு பெறுகிறது! நன்றி தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] / 82 parts [இந்த தமிழ் கட்டுரையை உடனடியாக அல்லது எல்லோருக்கும் தேவையற்ற ஆழமான விபரங்களைத் தவிர்த்து 36 பகுதிகளாக சுருக்கி பதிவிடவுள்ளேன்] Origins of Tamils? [Where are Tamil people from?] / 82 parts …
-
-
- 2 replies
- 1.5k views
-
-
IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com தியா - காண்டீபன்
-
- 0 replies
- 273 views
-
-
சுவிற்சர்லாந்தில் நடிகமணிக்கு ஒரு பெருவிழா! … அருந்தவராஜா .க காலம் அழைத்துச் சென்ற கலைஞர்களில் நடிகமணி வி.வி வைரமுத்து ஒருவரானாலும் காலகாலமாக மக்கள் மனங்களில் வாழ்ந்து நிறைந்திருக்கிறார். இலங்கையின் இசை நாடக வரலாற்றில் தனி ஆளுமை மிக்கவராகவும் பல்துறை கலை ஆற்றல் உள்ளவராகவும் விளங்கிய நடிகமணியவர்கள் அரிச்சந்திர மயானகாண்டம் நாடகத்தை 3000 தடவைகளுக்கு மேலாகவும் பக்த நந்தனார் நாடகத்தை1000 தடவைகளுக்கு மேற்படவும் நடித்துப் பெருமை சேர்த்தார். இவற்றை விட மேலும் பல நாடகங்கள் பற்பல முறை மேடையேற்றங்கள் கண்டுள்ளன. இலங்கையில் ஒரு அரங்க நடிகனுக்கு இரசிகப்பட்டாளம் அதிகம் உருவாகியிருப்பதும் நாடக அரங்குக்கு பின்னரான கதைக் களங்கள் உருவாகியும் பின்னர் அவை …
-
- 2 replies
- 834 views
-
-
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருதுகள் – 2022 …. வழக்கமாக வருடாவருடம் வழங்கப்படும் இயல்விருது கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2020 ஆம் வருடம் வழங்கப்படவில்லை. ஆகவே 2022 இல் இரண்டு இயல் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை 2023 யூன் மாதம் கனடா ரொறொன்ரோவில் வழங்கப்படும். லெட்சுமணன் முருகபூபதி தமிழ் இலக்கியத் தோட்டம், 2022 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் இயல் விருதை, கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் இலங்கையில் பிறந்த படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி அவர்களுக்கு வழங்குகிறது. 1972 இல் எழுத்தாளராக அறிமுகமான இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது. வீரகேசரி பத்தி…
-
- 0 replies
- 2.8k views
-
-
மணிவிழாக் காணும் சிவராசா கருணாகரன்!… முதல் சந்திப்பு …. முருகபூபதி. யாழ். தீம்புனல் வார இதழில் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக நான் எழுதிவருகின்றேனென்றால், அதற்கு வித்திட்டவர் யார்..? என்பது பற்றி சொல்லியவாறே இந்த முதல் சந்திப்பு தொடருக்குள் இம்முறை வருகின்றேன். அவரை நான் முதல் முதலில் அவரது எழுத்தின் ஊடாகவே தெரிந்துகொண்டேன். நான் வாசிக்கும் எவரதும் இலக்கியப் படைப்பு என்னை கவர்ந்துவிட்டால், அதனை எழுதியவரைப்பற்றி மேலதிக தகவல் அறிவதும், தேடிச்செல்வதும் எனது இயல்பு. அவ்வாறுதான் கிளிநொச்சியில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான சிவராசா கருணாகரன் எனக்கு முதலில் அறிமுகமானார். இவர் இலங்கையில் மட்டுமன்றி தமிழகம் மற்றும் தமிழர் புகலிட நாட…
-
- 1 reply
- 783 views
-
-
தமிழ் இசை விழா இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தந்த அட்டகாசமான தமிழ் இசை விழா. நிகழ்ச்சிக்கு அனுசரணையினை நாம் தமிழர் கட்சியினர் வழங்கி இருந்தனர். தமிழக அரசும், கலைவாணர் அரங்கை கொடுத்து உதவியது. மெய்சிலிர்க்க வைக்கும் தமிழ் இசைவிழா: கேட்டுப்பாருங்கள்.
-
- 5 replies
- 1.5k views
-
-
கல்கி கிருஷ்ணமூர்த்தி: பொன்னியின் செல்வன் எழுத்தாளரின் பன்முகத் தன்மை முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,KALKI FILE படக்குறிப்பு, ராஜாஜி, கல்கி சதாசிவத்துடன் கல்கி கிருஷ்ணமூர்த்தி (இடமிருப்பவர்) தமிழ் வெகுஜன இலக்கிய உலகில் நீங்காத இடத்தைப் பெற்ற 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி - சிறுகதை, நாவல், கட்டுரைகள், இதழாளர், சுதந்திர போராட்ட வீரர், அரசியல் செயற்பாட்டாளர், சினிமா எழுத்தாளர் என பன்முகத் தன்மை வாய்ந்தவர். கடந்த சில ஆண்டுகளில் 'கல்கி' என்ற பெயர் பெரிதும் 'பொன்னியின் செல்வன்' என்ற மகத்தான நாவலுடன் இணைத்தே அறியப…
-
- 0 replies
- 1.6k views
- 1 follower
-
-
எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புலகம் by அரவின் குமார் நூற்றாண்டு வரலாறு கொண்ட நவீனத்தமிழிலக்கிய வரலாற்றில் எண்ணிக்கையாலும் தரத்தாலும் மேம்பட்ட பல படைப்புகளின் வாயிலாக மறுக்கமுடியாத இடத்தைப் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன். எழுத்தாளர் ஜெயமோகனின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாக அவரின் புனைவுலகம், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், இந்திய ஞான மரபு கட்டுரைகள், சமூகக்கட்டுரைகள் ஆகியவற்றுடன் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பின் வாயிலாக முன்னெடுத்து வரும் இலக்கிய, அறிவுலகச் செயற்பாடுகளைக் குறிப்பிடலாம். 1991 ஆம் ஆண்டு ஜெயமோகனின் முதலாவது நாவலான ‘ரப்பர்’ நாவல் வெளிவந்தது. ஜெயமோகனின் நாவல்கள் ஆழமான தத்துவ விசாரங்களையும் அறம் சார்ந்த விவாதங்களையும் முன்வைக்கக்கூடியவை. …
-
- 1 reply
- 687 views
-
-
யாழ் உடுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட கனடிய தமிழன் லெனின் சிவம் ஹாலிவுட்டில் The Protector’. என்ற ஆங்கில திரில்லர் திரைபடத்தை இயக்கியிருக்கிறார் அவர் ஏற்கனவே மூன்று தமிழ் திரைபடங்களை இயக்கியுள்ளார் அவருடைய தந்தையார் கம்னியூஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்தமையால் அவருக்கு லெனின் என்ற பெயரை அவருக்கு சூட்டியதாக கூறுகிறார் அத்துடன் அவரது தந்தையார் இலங்கை சினிமா ஒன்றில் கதாநாயகனாக நடித்தவர் என்று கூறப்படுகிறது ஆனால் எந்த திரைபட கதாநாயகன் என்று தெரியவில்லை இவரது சொந்த உடுப்பிட்டி கிராமத்…
-
- 0 replies
- 833 views
-
-
துணிச்சல் தன்னம்பிக்கை ரவி மாஸ்ரர் சொல்லும் கதைகள்?????? ஊடகப்பயணத்தில் போர் செய்யும் மனிதன்.
-
- 0 replies
- 727 views
-
-
ஜெயமோகன்: ஜெகந்நாதரின் தேர் ஏப்ரல் 22, ஜெயமோகன் பிறந்த நாள். ஜெயமோகனின் 60வது வயது தருணத்தை ஒட்டி வெளிக்கொண்டுவரப்படும் சிறப்பிதழுக்காக அ.முத்துலிங்கத்தால் எழுதப்பட்ட கட்டுரை இது. ஜெயமோகன் பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னர் ஜெயமோகன் கனடா வந்திருந்தபோது நான் அவரை 'ஜகர்னட்' (Juggernaut) எனக் குறிப்பிட்டேன். பிரம்மாண்டமான, நிறுத்த முடியாத விசை என்று பொருள். ஜெகந்நாதர் என்ற வார்த்தையிலிருந்து ஆங்கிலத்துக்குப் போன சொல் இது. பூரி ஜெகந்நாதருடைய ரத யாத்திரை 12ஆம் நூற்றாண்டிலிருந்து பிரபலமானது. தேர் புறப்பட்டால் பெரும் விசையுடன் நிற்காமல் செல்லும். அதைக் குறித்துத்தான் அந்தச் சொல் உருவானது என ஆங்கில அகராதி சொல்கிறது. ஆரம்பத்த…
-
- 1 reply
- 699 views
-
-
A.R. ரஹ்மான், எஸ்.பி.பி போன்ற பல இசை பிரபலங்களிடம் பாராட்டு பெற்ற ஈழத்து Octapad கலைஞன் பானு
-
- 0 replies
- 603 views
-
-
`குறும்படங்கள் தயாரிப்பதற்குப் பொருட் செலவும், தயாரிப்பு நிறுவனங்கள் தரும் நெருக்கடிகளும் அதிகமிருக்கும் சூழலில், ஒரு கைப்பேசியும், தேர்ந்த படத்தொகுப்பாளரும் இருந்தால் போதும் நாம் நினைத்ததை திரையில் கொணர முடியும், அதை உலகம் காணவும் செய்ய முடியும்” என்கிறார் திரு.மதிசுதா. ``ஒரே நாளில் எல்லாம் மாறிவிடாது. ஆனால் ஒரு நாள் நிச்சயம் எல்லாம் மாறும்" என்று ஒரு நேர்காணலில் திரு.மதிசுதா புன்னகைத்தபடி கூறுகிறார். தமிழ் ஈழத் திரையுலகின் முக்கியமான முகங்களுள் ஒன்றாகத் திகழும் இவர், தனது குறும்படங்கள், ஆவணப்படங்கள் மூலமாக ஈழத்தின் வாழ்வியலை, போராட்டக் களத்தை, போர் வன்முறைகளை, ஈழம் இழந்த அடையாளங்களைத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். கலையெனும் ஆயுதத்தால் மட்டுமே மனிதனின் உடலை, …
-
- 0 replies
- 914 views
-
-
மல்லாடல் சிலப்பதிகாரத்தின் ஒரு அத்தியாயமான கடலாடுக்காதையில் குறிப்பிடப்பட்டுள்ள பதினொரு நடனங்களில் நான்காவது நடனம் மல்லாடல் என்று குறிப்பிடப்படுகிறது. மல்லாடல் என்பது மல்யுத்த வீரர்களுக்கு இடையே நடக்கும் முஷ்டி சண்டையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நடனம். இங்கே வானாசுரன் மற்றும் மாயோன் கதை சார்ந்த மல்யுத்தம் நிகழ்த்தப்படுகிறது. மதங்களின் நெறிமுறைகள், தத்துவங்கள் மற்றும் உளவியலில் "நல்லோர்- தீயோர். மேலோர் - கீழோர்" என்ற கறுப்பு வெள்ளை கருத்தாக்கங்களைக் கொண்டவை. இக்கருத்தாக்கங்கள் இன்று புதிய பார்வைகளால் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுகிறது. தத்தமது அதிகாரத்த்தினை நிலைநிறுத்திக் கொள்வதே பெரும்பாலானா யுத்தங்களின் அடிப்படை அம்சம். இந்நடனம், நல்லோர் தீயோர், வெற்றி தோல்வி என்பத…
-
- 0 replies
- 1.4k views
-
-
எஸ்.பொன்னுத்துரை: மனிதாபிமானப் பாலியலை எழுத்துக்குள் கொண்டு வந்தவர் November 26, 2021 — ஏ.பீர் முகம்மது — உலகளாவிய தமிழ் இலக்கியப் படைப்பியல் வரலாற்றில் எஸ்.பொ. எனப் பலராலும் அறியப்பட்ட எஸ்.பொன்னுத்துரை பெரும் ஆளுமையாக இருந்தவர். சிறுகதை, நாவல், நாடகம், நனவிடை தோய்தல், அரசியல் திறன்நோக்கு, வரலாறு, மொழிபெயர்ப்பு என்று பல துறைகளிலும் தனது எழுத்தூழியத்தினால் சிகரம் தொட்டவர். அவரளவில் இலக்கியத்தில் சாதனைகளையும் சோதனைகளையும் சந்தித்த பிறிதொரு எழுத்தாளர் நம்மிடையே இல்லை. யாழ். நல்லூரிலே பிறந்து மட்டக்களப்பு வாசியாகவே வாழ்ந்து சாதனைகள் தொட்ட இந்த எழுத்துலகச் செம்மலின் இறுதி மூச்சு அவுஸ்திரேலியாவிலே 2014 நவம்பர் 26இல் அடங்கி இன்றுடன் ஏழு வருடங்கள் முழ…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
கவிஞர் மேமன்கவிக்கு இலங்கையில் தேசிய கலாபூஷண விருது! நவம்பர் 10, 2021 –முருகபூபதி இலங்கை அரசின் புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கிறிஸ்துவ மத அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனைத்தும் ஒன்றிணைந்து வழங்கும் தேசிய கலாபூஷணம் விருது இம்முறை எமது இலக்கிய நண்பர் மேமன்கவிக்கும் கிடைத்திருக்கிறது. எம்முடன் நீண்ட நெடுங்காலமாக இணைந்து பயணித்துவரும் இலக்கிய நண்பர் மேமன்கவியை வாழ்த்தியவாறு இந்தப்பதிவைத் தொடருகின்றேன். தாம்பேசும் தாய்மொழிக்கு எழுத்தில் வரிவடிவம் இல்லாத இலட்சசோப இலட்சம் மக்கள் போன்று, இவர் பேசும் மேமன் மொழிக்கும் வரிவடி…
-
- 0 replies
- 653 views
-
-
-
- 1 reply
- 603 views
-