Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேரும் விழுதும்

கலைகள் | கலைஞர்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.

  1. Started by யாழ்அன்பு,

    http://m.youtube.com/watch?v=ZLjtnJLM9KY

  2. கொழும்பிலிருந்து கோடம்பாக்கம்: ஒரு பாடகரின் பயணம் குண்டுவெடிப்பு சப்தங்களால் கோமா நிலைக்கும்போகும் செவிகளை தனது இன்னிசை மழையில் உயிர்ப்பிக்க செய்யும் உன்னத காரியத்தை செய்து வருபவர் பாடகர் சிவக்குமார். இவரது பூர்வீகம் கொழும்பு. அக்னி சிவக்குமார் என்றால் இலங்கையில் தெரியாத ஆட்களே இல்லையாம். இவர் நடிக்கும் இசைக்குழுவின் பெயர்தான் அக்னி. பள்ளிப்பருவத்தில் ஆரம்பித்த பாட்டு ஆர்வம் இன்று சினிமா பாடகர்வரை வளர்த்துவிட்டுள்ளது. இலங்கை வானொலிகள், தொலைக்காட்சி தொடர்கள் என இவரது பாட்டு பயணம் நெடுந்தொலைவு. 90களில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய பாடகர் மனோதான் சிவாகுமாரின் இன்ஸ்பிரேஷனாம். இவர் நடத்தி வரும் இசைகுழுவில் தமிழ் பின்னணி பாடகர்-பாடகிகள் பலர் பாடியுள்ளனராம். '…

  3. பறை பழகுவோம்… மண்முனை, தென்மேற்கு பிரதேச நாடக ஆற்றுகை குழுவுக்கான பறை இசை பயிற்சிநெறி, முனைக்காடு உக்டா சமூகவள நிலையத்தில் நேற்று (18) நடைபெற்றது. இயற்கை, பறை, குருவுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு, பறையின் இசைகள் இசைப்பது தொடர்பிலான பயிற்சி, பறையுடன் கூடிய ஆட்டக்கோலங்கள் உள்ளிட்ட ஆற்றுகை, தென்னிந்தியாவைச் சேர்ந்த மணிமாறனின் புத்தர் கலைக்குழுவால் வழங்கப்பட்டது. இளைஞர், யுவதிகள் பலர் இதில் கலந்துகொண்டனர். குறித்த கலைக்குழு, தென்னிந்திய திரைப்படங்களுக்கும் பறை இசைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (படப்படிப்பு: வ.துசாந்தன்) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/பறை-பழகுவோ…

  4. தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது! -நாஞ்சில்நாடன்- ஒரு புதுப் படம் வெளியானால், முதல் ஏழு நாட்கள் இருக்கையை நிரப்புபவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தானாம். உணர்ச்சிவசப்படுவதும் போராடுவதும்தான் இளைய தலைமுறையின் இயல்பே. ஆனால், இன்றோ எது நடந்தாலும் ஈரத்தில் ஊறிக்கிடக்கும் எருமையைப்போல இருக்கிறான் இளைஞன். எல்லோருக்குமே படிக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, எந்தக் குறிக்கோளும் இருப்பதாகத் தெரியவில்லை!'' சக மனிதர்கள் மீதான அக்கறையும் சமூகம் மீதான கோபமுமே நாஞ்சில் நாடனின் எழுத்து. 'தலைகீழ்விகிதங்கள்’, 'எட்டுத்திக்கும் மத யானை’, 'என்பிலதனை வெயில் காயும்’ எனத் தமிழின் முக்கிய நாவல்கள் படைத்தவர். 'சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்காகச் ச…

  5. ஜெர்மன் வாழ் ஈழத்தமிழ் பெண்ணின் சாதனைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த அந்தஸ்து! ஜெர்மனில் வசித்து வரும் ஈழத்தமிழ் கலைஞரான ஒலிவியா தனபாலசிங்கத்தின் வீணை இசையினை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (A.R.Rahman) தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஊடாக பகிர்ந்துள்ளார். A.R.Rahman தனது சமூக வலைத்தளங்களில் இப்படியான இசைக்கருவி மீளாக்கத்தினை (instrumental cover) பகிர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும். A.R.Rahman சமூக வலைத்தளங்களின் ஊடாக தனது 40 மில்லியனிற்கும் மேற்பட்ட அபிமானிகளுக்கு ஈழத்தமிழ் கலைஞர் ஒலிவியாவின் வீணை இசையினை தெரியப்படுத்தியுள்ளார். சமீபத்தில் A.R.Rahman இசையில் வெளிவந்த திரைப்படம் ஒன்றில் அனைவராலும் ரசிக்கப்பட்ட “சரட்டு வண்டில” என்ற பாட…

  6. குட்டி ரேவதி சந்திப்பு – பிரிவினை கோஷங்களும் முற்போக்கு அரசியலும் ரா.கிரிதரன் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி, லண்டன் தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் அமைப்பின் அழைப்பின் பெயரில், கவிஞர் குட்டி ரேவதி `பெண் கவிதையும் சமூக மாற்றமும்` என்ற தலைப்பில் உரையாடினார். கவிஞர் மாதுமை வழிப்படுத்திய இக்கூட்டத்தில், எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் மற்றும் பல இலங்கைத் தமிழ் வாசகர்கள் கலந்துகொண்டனர். வரலாற்றுப் பிரக்ஞை என்றால் வீசை என்ன விலை, நம்மைச் சுற்றியிருக்கும் அதிகார மதங்களின் உலகளாவிய அழித்தொழித்தல் பற்றிய அறியாமை, இந்தியப் பண்பாடு மற்றும் மதச் சிந்தனைகள் பற்றிய அவதூறு, `முற்போக்கு அறிவுஜீவி` எனும் பட்டத்துடன் பன்முக இந்திய மரபு பற்றிய அற்பத்தனமான இழிச்சொற்கள், `மூத்தகுடிக்…

  7. விடி­காலை என்று கூட சொல்ல முடி­யாது ஒன்று அல்­லது இரண்டு மணிக்கு என் கைப்­பேசி சிணுங்­கு­கின்­றது. அடுத்த பக்­கத்­தி­லி­ருந்து அழைப்­பது ஸ்ரீதர் என்று தெரிந்­து­விடும் ஏனென்றால் இந்த இரண்டும் கெட்ட நேரத்தில் தொலை­பேசி எடுப்­பது அவ­ரா­கத்தான் இருக்கும் என்­பது என்­அ­சைக்க முடி­யாத நம்­பிக்கை.கைப்­பே­சியை எடுத்தால் ''டேய் கவிஞா தூங்­கு­றியா? தூங்­கப்­போறியா? அல்­லது என் போனுக்கு காத்­தி­ருக்­கியா?" என அடுத்­த­டுத்து கேள்­வியை கேட்டு விட்டு சிரித்­துக்­கொண்­டி­ருப்பார்.நானும் இல்லை உடுப்பு துவைக்­கப்­போறேன்''என சொல்ல ''உனக்கு உடுப்பு துவைக்க நேரங்­கா­லமே கிடை­யாதா? என என்னை கலாய்ப்பார். அந்த கல­க­லப்­புக்கு பின் இலக்­கியம் பேச ஆரம்­பிப்போம்.அன்று தான் வாசித்த ஏதேனும் ஒரு நூ…

  8. “நீங்கள் என்மீது காட்டுகின்ற அன்புக்கு எனக்கு கிடைக்கும் இந்த விருதை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்”. என்றார் டொமினிக் ஜீவா. -மல்லியப்புசந்தி திலகர்- ஈழத்து தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் 401 இதழ்களை தொடர்ச்சியாக வெளியிட்டு சாதனை படைத்த மல்லிகை டொமினிக் ஜீவா அவர்களுக்கு கனேடிய தமிழ் இலக்கிய தோட்டம் வழங்கிய சிறப்பு இயல்விருது வழங்கும் விழா கடந்த வியாழன் 17-07-2014 அன்று கொழும்புத் தமிழச்சங்கத்தில் இடம்பெற்றது. பேராசிரியர் எஸ்தில்லைநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பெருந்திரளான இலக்கிய ஆர்வலர்களும் ஜீவாவின் அபிமானிகளும் கலந்து சிறப்பித்தனர். விளிம்பு நிலை சமூகத்தில் இருந்து எழுந்த ஜீவாவின் இலக்கிய பிரவேசம் அதுவரை இருந்து வந்த ஈழத்து தமிழ் இலக்கிய பாரம்பரியத்து…

  9. இச்சிறுவர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்

    • 0 replies
    • 557 views
  10. அரங்கக் கலையின் மைல்கல், ‘மாத்தளையின் ஜீவநதி’ பதாகை த. நரேஸ் நியூட்டன் இலங்கையின் அரங்கக் கலையின் முன்னோடிகள் பலரைப் பற்றி நாம் பல ஊடகங்கள் ஊடாகவும் நேரடியாகவும் அறிந்திருக்கிறோம். இவர்களுள் மலையகத்திலிருந்து நாடகக்கலையின் வளர்ச்சிக்கும் தமிழ் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி, நாடகத்துறை, போன்றவற்றிற்கும் உரமிட்டவர்களில் மிகவும் பிரபல்யமான ஒருவர் மாத்தளை கார்த்திகேசு என்று அழைக்கப்படுகின்ற கா. கார்த்திகேசு. இவர் படைத்த நாடகங்கள் பல மலையகத்திலும் கொழும்பு போன்ற பகுதிகளிலும் பல தடவைகள் மேடையேற்றப்பட்டு கலை ஆர்வலர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவையாகும். இவர் அரங்கக் கலைகளுள் நாடகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அதே வேளை எழுத்துத் துறையிலும் தனது தடங்களைப் ப…

  11. பகுதி 01 பகுதி 02 பலரும் அறிந்த ஓர் சிறந்த கலைஞன் மதிப்புக்குரிய திரு.அஜீவன் (Jeevan4U Swiss Radio ) அவர்களுடனான உரையாடலின் ஒலிவடிவத்தை கேட்க இங்கே சொடுக்கவும்!! வணக்கம் யாழ் வாசகர்களே, கள உறவுகளே! சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்.. இன்று நாங்கள் பலரும் அறிந்த ஓர் சிறந்த கலைஞன் மதிப்புக்குரிய திரு.அஜீவன் அவர்களுடன் யாழ் இணையம் சார்பாக உரையாடுகின்றோம். வணக்கம் திரு.அஜீவன் அவர்களே! வணக்கம் கலைஞன் உங்களைப்பற்றி எமது வாசகர்களிற்கு சிறிது அறிமுகம் செய்துகொள்ளுங்கள்.. யாழ் களத்தில் பொதுவாகவே அனைவரும் என் நண்பர்கள் என்பதால் பெரிதாக அறிமுகம் தேவையில்ல…

  12. சிலோன் விஜயேந்திரன் | ஜெயமோகன் July 12, 2020 கம்பதாசன் திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய இந்த சிறிய நினைவுக்குறிப்பு என் கவனத்திற்கு வந்தது.சிலோன் விஜயேந்திரனின் சாவு எப்படி நிகழ்ந்தது என்பதையே இக்குறிப்பு வழியாகத்தான் அறிந்துகொண்டேன். கம்பதாசன் அவர்களைப் பற்றி வேறொரு கட்டுரைக்காகத் தேடிக்கொண்டிருந்தேன். கம்பதாசன் மீது பெரும்பக்தி கொண்டு அவர் ஆக்கங்களை மீண்டும் நிலைநாட்டவேண்டும் என்று வாழ்க்கையின் ஒரு பகுதியை அர்ப்பணித்துக்கொண்டவர் சிலோன் விஜயேந்திரன். நான் சிலோன் விஜயேந்திரனை இரண்டுமுறை சந்தித்ததுண்டு.1992 வாக்கில் அவர் என்னை சென்னையில் ஒரு விழாவில் சந்தித்து கம்பதாசனைப்பற்றி ஆவேசத்துடன் பேசினார். ஒரு கவிதையை அவரே ஆவேசமாகச் சொல…

    • 1 reply
    • 1.7k views
  13. IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com தியா - காண்டீபன்

    • 0 replies
    • 251 views
  14. ஆத்தாதவன் செயல் July 10, 2019 ஷோபாசக்தி ‘கூத்தாடுவதும் குண்டி நெளிப்பதுவும் ஆத்தாதவன் செயல்’ என்பது யாழ்ப்பாணத்தில் பிரபலமான பழமொழி. கூத்தாடுபவர்களைக் கீழிறக்கி ஏளனமாக மதிப்பிடும் யாழ் சாதியச் சமூகத்தின் குறைப் பார்வையை இப்பழமொழி அறிவிக்கிறது. யாழில் கூத்துகளும் இசை நாடகங்களும் தழைத்தோங்கியிருந்த காலத்தில் மீனவச் சாதியினரும் தலித்துகளுமே இந்தக் கலைகளைப் பரம்பரை பரம்பரையாகப் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்தார்கள் . நான் பால பருவத்திலேயே கூத்துக்காரனாகி விட்டேன். முதற் கூத்து ‘பண்டாரவன்னியன்’. அண்ணாவியார் நாரந்தனை சின்னப்புவின் இயக்கத்தில் தென்மோடிப் பாணியிலமைந்த அந்தக் கூத்தில் எனக்கு ‘காக்கை வன்னியன்’ வேடம். அறிமுகக் காட்சியில் ‘ஈழமாமணி நாடு ஆளும் மன்னவ…

  15. ஈழத்து எழுத்தாளர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு இந்தியத் தேசிய விருது! Published on September 9, 2011-11:28 am No Comments ஈழத்து எழுத்தாளர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு ஆடுகளம் திரைப்படத்துக்காக சிறப்பு தேசிய விருது கிடைக்கவுள்ளது. இந்த விருதினை இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் விருது வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, இந்திய சினிமா வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக, இயக்குனர் கே.பாலசந்தருக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டேல் இன்று தாதா சாகிப் பால்கே விருதை வழங்குகிறார். சிறந்த சினிமா கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள விஞ்ஞானபவனில் இன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் கலந்துகொண்டு விருதுகள…

  16. மகாகவி உருத்திரமூர்த்தி (அளவெட்டி, யாழ்ப்பாணம்) (ஜனவரி 9 1927 - ஜூன் 20 1971). கவிஞருக்கு அஞ்சலிகள். இன்று மகாகவியின் நினைவு தினம் என்று அவரது பேத்தி சிறுகதை எழுத்தாளர் அரசி அவர்களது முகநூலில் வாசித்தேன். கனடா ரொறன்ரோ பல்கலைக்களக மாணவியான அரசி கவிஞர் அவ்வை அரசியல் விமர்ச்சகர் விக்னேஸ்வரன் (சரிநிகர்) தம்பதிகளின் மகளாவார். 1970பதுகளில் மகாஜனாவில் ஏற்பாடாகியிருந்த மாதாந்த கவிதை வாசிப்பு நிகழ்வுக்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். கவிஞர் மகாவியை கவிஞர் அம்பி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். மிகுந்த நட்ப்போடு பழகினார். வீட்டுக்கு அழைத்தார். நான் அவரது வீட்டுக்குச் சென்ற நாள் இப்பவும் பசுமையாக நினைவிருக்கு. …

    • 0 replies
    • 2.1k views
  17. சந்திவெளிக் கலைஞர்களின் கொரோனா கூத்து–சில குறிப்புக்கள்.. ஒரு இனமானது காலம் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்றால் அவ் இனத்தின் பண்பாட்டுப் பாரம்பரியங்கள்; தொடர்ந்து சந்ததி ஈர்ப்பின் ஊடாக கடத்தப்பட்டு அது பேணப்பட்டு வருகின்றமையே காரணமாகும். தமிழர்கள் மிக நீண்ட காலங்களாக வாழ்ந்து வருபவர்கள். தனித்துவம் வாய்ந்த பண்பாட்டை கொண்டவர்கள்.மொழி, இலக்கியம்,கலை போன்ற துறைகளில் கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே உயர்நிலை எட்டி இருந்தவர்கள். இயல், இசை,நாடகம் எனும் முத்தமிழில் ஒன்றான நாடகத்தை முன்னிறுத்தி தொன்று தொட்டு தமிழர் நாடககலையில் ஈடுபட்டுவருகின்றனர். தொல்காப்பியம்,சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் நாடகம் பற்றிய குறிப்புக்கள் காணப்படுவதினை நாம் வரலாற்று ஆத…

  18. குவர்னிகா ஓவியம் பாப்லோ பிக்காஸோ 1937ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, ஒரு திங்கள் கிழமையின் பிற்பகல் பொழுது, ஸ்பெயினின் வட எல்லைக்கருகில் உள்ள குவர்னிகா என்னும் சிறிய நகரம் உழைத்துக் களைத்துப் போயிருந்தது. ஏனெனில் அன்று அந்த நகரத்தின் சந்தை கூடும் தினம். கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு ஒரே இடத்தில் கூடுவார்கள். அதனால் காலையிலிருந்து ஜனநெரிசலும், வியாபாரக் கூச்சலுமாக இருந்த நகரம் சற்றே ஆசுவாசம் கண்டிருந்தது. சற்றும் எதிர்பார்த்திராத அந்த வேளையில், சரியாக 4:30 மணிக்கு, மேகங்களுக்கு இடையில் மேகமாக இருந்து திடீரென உருவம் பெற்றதைப் போல ஜெர்மனியப் போர் விமானங்கள் வெளிப்பட்டன. அவற்றின் இரைச்சலை என்னெவென்று பிரித்தறிவதற்குள் அவை சரமாரியாகக் குண்டுகளை…

    • 0 replies
    • 840 views
  19. எம்.எஸ்.எஸ். பாண்டியன் யார் வரலாறு? இந்தியாவின் பண்டைய இலக்கியங்கள் மட்டுமல்ல, தேசியவாதிகளால் முன்னிறுத்தப்படும் இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறும்கூட மேட்டுக்குடியினரின் ஆதிக்க வரலாறே என்றார் பெரியார். மேல்சாதியினர், தங்கள் தலைமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் சவால்களைக் கொடுமையாக அடக்குவதும், முடியாத கட்டத்தில் எதிரிகளோடு இணங்கிப் போவதுமே இவ்வரலாறு என்றுரைத்தார். இந்த வரலாற்றை இந்தியாவின் பழம்பெருமையெனத் தொடர்ந்து சொல்லி வருவதன் மூலம் நிகழ்காலத்திலும் அடித்தட்டு மக்களை அடக்கிவைக்க முடிகிறது என்பது பெரியாரின் கருத்து. பழமை மறையவில்லை; இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது; எல்லோருக்கும் சுதந்திரம், சமதர்மம் என்பதை மறுக்கிறது; எனவே தற்சார்புடைய குடியுரிமை வழங்கும்…

  20. வைரமுத்துவும் மாயச்சூழலும் வா. மணிகண்டன் புகழ் ஒரு மாயச் சூழல். இழுத்துக் கொண்டேயிருக்கும். யாராவது நம்மைக் கவனிக்கத் தொடங்கும் போதே ஒரு பரபரப்புத் தொற்றிக் கொள்ளும். அதன் பிறகு அந்தப் புகழ் இன்னமும் பரவ வேண்டும் என மனம் விரும்புகிறது. அதற்கான காரியங்களைச் செய்யத் தொடங்குகிறோம். அந்த வெளிச்சம் ஒரு போதை. போதை குறையும் போதெல்லாம் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. எதையெல்லாம் செய்ய வேண்டும் என கணக்குப் போட்டு அதன்படி காய்களை நகர்த்துகிறோம். மீண்டும் தாங்கிப்பிடித்துவிட்டால் பிரச்சினையில்லை. இல்லையென்றால் ஒரு படி கீழே இறங்கவும் தயங்குவதில்லை. ஒரு படி இரண்டு படிகளாகி இரண்டு படிகள் என்பது மூன்று படிகளாகி எவ்வளவு வேண்டுமானாலும் கீழே இறங்கும் போதுதான் சந்தி சிரிக்கிறது. நமது பு…

  21. அ.முத்துலிங்கத்துக்கு விருது jeyamohanFebruary 6, 2025 அ.முத்துலிங்கம் அவர்களுக்கு கனடாவின் டொரெண்டோ பல்கலைக் கழகம் வழங்கும் மதிப்புமிக்க விருந்தான ARBOR AWARD வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் பண்பாட்டுக்கும் பல்கலையின் கல்விப்பணிக்கும் அளித்த பங்களிப்புக்காக அளிக்கப்படும் விருது இது. அ.முத்துலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் https://www.jeyamohan.in/211914/

      • Like
    • 1 reply
    • 265 views
  22. இராவணனுக்கும் வரலாறு இருக்கு.. வாசுதேவன் நாயர் விகடனில் மலையாள எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர் எழுதியுள்ள மிக அற்புதமான கட்டுரை: பாலக்காடு மாவட்டத்தில் கூடலூரில் ஒரு எளிய விவசாயக் குடும்பம் என்னுடையது. வீடு எனக்குத் தடையில்லாத சுதந்திரம் தந்தது. மலையாள இலக்கியத்தில் வள்ளத்தோளும், செங்கம் புழாவும், எஸ்கே.பொற்றே காட்டின் எழுத்துக்களையும் நான் அப்பவே படிச்சுட்டேன். எட்டாவது படிக்கும் போது கதை, கவிதை, கட்டுரை என மூணு எழுதி வெவ்வேறு பெயர்களில் பத்திரிகைக்கு அனுப்பிச்சேன். மூணுமே பிரச்சுரம் ஆச்சு. எல்லோரும் ஆச்சர்யமாக பாத்தாங்க. விக்டோரியா கல்லூரியில் பிஎஸ்ஸி முடிச்சுட்டு, ஒரு டுடோரியலில் டீச்சரா இரண்டு வருடம் வேலை பார்த்தேன். அப்புறம் மாத்ரூ பூமி…

    • 3 replies
    • 2.6k views
  23. மாலதி மைத்ரி வல்லினம்.காமில் வெளிவந்த என்னுடைய கேள்வி-பதில் தொடரில் நான் தெரிவித்திருந்த ஒரு கருத்துக்கு லீனா மணிமேலையின் எதிர்வினை அடுத்து வந்த இதழில் வெளியிடப்பட்டது. அதற்கான மறுப்பை நான் எழுத இருந்த நேரத்தில் வல்லினம்.காம் வெளிவராத நிலை ஏற்பட்டது. அதனால் எனது எதிர்வினை இங்கு பதிவு செய்யப்படுகிறது. வல்லினம் இதழில் வெளிவந்த கேள்வியும் பதிலும். கேள்வி சக படைப்பாளியான லீனா மணிமேகலை கவிதைகள் தனித்து இருக்கின்றன என்பது என் வாசிப்பின் முடிவு. நீங்கள் ஒரு பெண் கவிஞராக என்ன நினைக்கிறீர்கள் ? பதில் லீனா மணிமேகலையின் பெருபான்மையான கவிதைகள் பெண்ணுடலைக் கொண்டாடும் கவிதைகளாக இயங்குகின்றன. புனித பிம்பங்களைக் கட்டவிழ்ப்பு செய்கிறேன் என முற்போக்கு மார்க்ஸிய புனிதர்களை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.