Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. விஸ்வரூபமெடுத்த ரிஷப் பன்ட்.. இதுவரை கடந்து வந்த பாதை! #RishabhPant குஜராத் லயன்ஸ் Vs டெல்லி டேர் டெவில்ஸ். நேற்றைக்கு நடந்த அந்தப் போட்டி, ஐ.பி.எல் சீசனின் 42வது போட்டி. முன்னதாக ஆடிய குஜராத் லயன்ஸ் அணி 208 ரன்கள் எடுத்திருந்தது. ஓவருக்கு 10 ரன் வேண்டும் என்ற நிலையில் சேஸ் செய்ய களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு, மூன்றாவது ஒவரில் இடியாக கருண் நாயர் விக்கெட். ஸ்கோர் 24/1. 3வது ஓவரின் கடைசி பந்துக்கு இறங்குகிறார் ரிஷப் பன்ட். லெக் பையில் ஒரு ரன் எடுத்து அடுத்த ஓவரை எதிர்கொள்கிறார். நான்காவது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்குத் தெறிக்க விடுகிறார். ஐந்தாவது ஓவரின் முதல் மூன்று பந்துகள் 6,6,4. அதன்பிறகு ஒவ்வொரு அடியும் அதிரடியாகப் ப…

  2. இந்தியா – மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று October 21, 2018 1 Min Read இந்தியா மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் பொட்டி இன்று ; கவுகாத்தியில் இன்று நடைபெறவுள்ளது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியதீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்ற நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டி கவுகாத்தியில் இன்று ஆரம்பமாகின்றது. http://globaltamilnews.net/2018/100071/

  3. பேர்த்தில் கிரிக்கட்டில் கலக்கும் நம்மவர்கள்! (படங்கள்) புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் ஏதோ ஒரு விதத்தில் தமது திறமையை வெளிக்காட்டிகொண்டுதான் இருக்கிறார்கள். மேற்கு அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் இளைஞர்கள் ASSeTTS என்னும் அரச சார்பற்ற நிறுவனத்துக்காக கிரிகட் விளையாடி வருகின்றனர். பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த நிறுவனத்தில் தமிழ் இளைஞர்களின் முயற்சியால் முதல் முறையாக கிரிகட் அணி- ASSeTTS CRICKET CLUB- – உருவாக்கப்பட்டுள்ளது. இக்கிரிக்கட் அணியின் நிருவுனராக கபில் தேவ் இருந்ததோடு , அவரே தற்போதைய அணியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர்கள் தற்போது LAST MAN STAND என்னும் சர்வதேச ரீதியிலான சுற்று போட்டி ஒன்றில் விளையாடி வருகிறார்கள். தற்போது மேற்கு…

  4. வம்புக்கு இழுத்த கிப்ஸ்; சூதாட்டத்தில் நான் சம்பாதிக்கவில்லை: அஸ்வின் காட்டம் அஸ்வின், கிப்ஸ் (கோப்புப் படம்) இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை கிண்டல் செய்து ட்வீட் செய்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஹெர்சல் கிப்ஸ் பதிவிட்டதற்கு, கோபமடைந்த அஸ்வின் சரியான பதிலடி கொடுத்து அதிர்ச்சி அடைய வைத்தார். இந்திய ஆல்ரவுண்டர் அஸ்வின் நைக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஷூ குறித்த வீடியோவை ட்விட்டரில் இன்று பதிவிட்டார். அதில், ''நண்பர்களே என்னிடம் புதிய நைக் ஷூ இருக்கிறது. இந்த ஷூவின் வடிவமைப்பு, நிறம், ஃபோம் தொழில்நுட்பத்தின் ம…

  5. இன்று ஆரம்பிக்கிறது ஐ.அமெரிக்க பகிரங்க டென்னிஸ் உலகில் இடம்பெறும் டென்னிஸ் கிரான்ட் ஸ்லாம் தொடர்களில், ஆண்டின் இறுதி கிரான்ட் ஸ்லாம் தொடரான ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், இன்று ஆரம்பிக்கவுள்ளது. அதிகளவில் காயங்களாலும் வேறு காரணங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள டென்னிஸ் உலகம், இந்தத் தொடரில் யார் வெல்வார்க் என்பதை எதிர்வுகூற முடியாத நிலையில் காணப்படுகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முன்னணி வீரர்களான அன்டி மரே, நொவக் ஜோக்கோவிச், ஸ்டான் வவ்றிங்கா, கீ நஷிகோரி, மிலோஸ் றாவோனிஸ் ஆகியோர், காயம் காரணமாக விலகியுள்ளனர். ஏற்கெனவே பலர் விலகியிருந்த நிலையில், அன்டி மரேயும், போட்டி ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் இருக…

  6. ரஷ்யாவில் 2018 ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் பிரேசில் நிச்சயம் கிண்ணத்தை வெல்லும் என நெய்மர் கூறியுள்ளார். பிரேசிலில் சமீபத்தில் நடந்த உலகக்கிண்ணத் தொடரில் கொலம்பியா அணிக்கெதிரான ஆட்டத்தில் காயமடைந்த நெய்மர் தொடரில் இருந்து வெளியேறினார். இதனால் பிரேசில் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனால் உலகக்கிண்ண போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணி அரையிறுதியில் 1-7 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது. இந்நிலையில் அடுத்த உலகக்கிண்ணத்தை பற்றி பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் கூறுகையில் பிரேசில் கால்பந்து பின்னடைவை சந்தித்து இருப்பதாக நான் கருதுகிறேன். ஜேர்மனி ஸ்பெயின் ஆகிய நாடுகளை விட பின…

  7. பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் டயமன்ஸ் சம்பியன் கரவெட்டி பிரதேச இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கிடையில் நடைபெற்று வரும் விளையாட்டு நிகழ்வில், பெண்களுக்கான மென்பந்தாட்ட கிரிக்கெட் போட்டியில் வதிரி டயமன்ஸ் அணி சம்பியனாகியது. கரவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்குபற்றிய இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி அணிக்கு 6 பேர் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக இமையாணன் விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை (08) நடைபெற்றது. இறுதிப்போட்டியில் அல்வாய் மனோகரா அணியும் வதிரி டயமன்ஸ் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மனோகரா அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 5 ஓவர்களில் 43 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டயமன்ஸ் அணி, 4.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து…

  8. இனவெறிக் கோஷங்களால் சிட்னி மைதானத்தில் குழப்பம் இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின்போதும் இனவெறி கோஷம் எழுந்த நிலையில் போட்டி இடைநிறுத்தப்பட்டது. இந்திய-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் மூன்றாவது நாளான நேற்றைய ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, மொஹமட் சிராஜ் ஆகிய இருவரையும் சிட்னி மைதானத்தில் அவுஸ்திரேலிய ரசிகர்கள் இனரீதியாக இழிவுப்படுத்தியுள்ளனர். எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்த போது, அவர்களை சீண்டியுள்ளனர். மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்ததும் இந்திய அணித் தலைவர் ரஹானே கள நடுவர்கள் பால் ரீபெல், பால் வில…

    • 3 replies
    • 1.2k views
  9. 44 வருடகால பிரிட்டனின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் லெய்லா பெர்னாண்டஸை வீழ்த்தி எம்மா ரடுகானு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர்க்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் சனிக்கிழமை நியோர்க்கில் ஆர்தர் ஆஷே அரங்கில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு மற்றும் கனேடிய வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் ஆகியோருக்கு இடையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 18 வயதான எம்மா ரடுகானு 6-4 6-3 என்ற கணக்கில் 19 வயது கனேடிய வீராங்கனையை தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் எம்மா ரடுகானு பிரிட்டனின் மகளிரிக்கான ஒரு பெரிய கிண்ணத்தின் 44 வருட காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். …

  10. நாக்பூர்: 14 வயதுக்குட்டவர்களுக்கான அகில இந்திய டென்னிஸ் சங்க சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் வருண் வைகோ. மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அரசியலில் கலக்கினால் பேரன் 'வருண் வைகோ' டென்னிஸில் கலக்குகிறார். தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த பல்வேறு டென்னிஸ் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி வருகிறார் வருண் வைகோ. கடந்த ஞாயிறு அன்று நாக்பூரிலுள்ள சி.பி.டென்னிஸ் சென்டரில் நடந்த போட்டியில் அவர் தனது போட்டியாளரான மல்ஹர் பேகேவை 6-2, 6-1 என்ற செட் கணக்கில் மண்ணைக் கவ்வச் செய்து 14 வயதுக்குட்பட்டோர் போட்டியின் ஆண்கள் பிரிவில் கோப்பையை கைப்பற்றினார். வைகோ அவர்களின் பேரனான வருண் வைகோ தற்போது டென்னிஸ் தர வரிசையில் 6ஆவது இடத்தில…

    • 3 replies
    • 714 views
  11. குறை பார்வை உடை­யோ­ருக்­கான இரு­பது 20 உலகக் கிண்ணம்: இலங்­கைக்கு இரண்­டா­வது தொடர்ச்­சி­யான வெற்றி; இரண்டு போட்­டி­களில் நான்கு சதங்கள் குவிப்பு 2017-02-02 11:13:08 இந்­தி­யாவில் நடை­பெற்­று­வரும் பத்து நாடு­க­ளுக்கு இடை­யி­லான குறை பார்வை உடை­யோ­ருக்­கான இரு­பது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் இலங்கை தனது இரண்­டா­வது வெற்­றியை நேற்று பதிவு செய்­தது. இந்த இரண்டு வெற்­றி­களும் டெல்லி சிறி குறை பார்வை உடை­யோ­ருக்­கான இரு­பது 20 கிரிக்கெட் வர­லாற்றில் நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ரான போட்­டியில் ஆரம்ப விக்கெட் இணைப்­பாட்டம் மற்றும் மொத்த எண்­ணிக்­கைக்­கான உலக சாத­னை­க­ளுடன் வெற்­றி­யீட்­டிய இலங்கை அணி­யினர்,…

  12. உலகத்தில் அதிகளவு செலவீனங்களை கொண்ட விளையாட்டுக்களில் ஒன்றாக ஃபோர்மியுலா வன் திகழ்கிறது. மோட்டார் கார் பந்தையமான இந்த விளையாட்டு, வருடாந்தம் உலகின் பல முன்னணி கார் தயாரிப்பாளர்களின் பங்களிப்புடன் இடம்பெறுகிறது. இந்த விளையாட்டுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட கார், ஓடு பாதை, டயர்கள், விதிமுறைகள் என பல விசேட அம்சங்கள் இந்த போட்டித்தொடரில் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் இந்த போட்டி விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதோடு, இந்த விதிமுறைகளை பொறுத்து ஒவ்வொரு கார் தயாரிப்பாளர் நிறுவனத்தினதும் மொத்த செலவீனம் தீர்மானிக்கப்படுகிறது. இலங்கையில் கிரிக்கெட், கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகள் அதிகளவில் புகழ்பெற்றுக் காணப்படுகின்றன. இந்த விளையாட்டுக்கள் குறித்து அதிகளவில் ப…

  13. புதுடில்லி: "" தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த ஆண்டு உலககோப்பை தொடரை வெல்லும்,'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார், தோனியின் இளமை கால பயிற்சியாளர் கேசவ் ரஞ்சன் பானர்ஜி. இந்திய அணியின் வெற்றிக் கேப்டன் தோனி. இவர் ராஞ்சியில் உள்ள டி.ஏ.வி., பள்ளியில் படித்தவர். இந்தப் பள்ளியின் விளையாட்டு பயிற்சியாளராக இருந்தவர், கேசவ் ரஞ்சன் பானர்ஜி. தோனி குறித்து இவர் கூறியது: எங்கள் பள்ளியில் படித்த போது, தோனி பாட்மின்டன் மற்றும் கால்பந்து விளையாட்டில் விருப்பம் உள்ளவராக திகழ்ந்தார். பள்ளி கால்பந்து அணியின் கோல்கீப்பராக செயல்பட்டார். இவரது கோல்கீப்பிங் திறமையை பார்த்த நான், கிரிக்கெட் அணியில் சேர்த்துக் கொண்டேன். அதற்குப் பின் கிரிக்கெட் மீது அவரது ஆர்வம் திரும்பியது. கிடைத்த…

  14. எம்.சி.எல்.காக சங்கக்கார மற்றும் மஹேல ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர் எம்.சி.எல். எனப்படும் மாஸ்டர்ஸ் செம்பியன்ஸ் லீக் தொடருக்காக, ஓய்வுபெற்ற இலங்கை கிரிக்கட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் 5 லட்சத்து 50 ஆயிரம் டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இந்த தொடர் அடுத்த வருடம் டுபாயில் நடைபெறவுள்ளது. இதற்கு பிரையன் லாரா, சௌரவ் கங்குலி, ஜெக்ஸ் கலிஸ், போன்றோரும் ஆறு அணிகளுக்காக ஏலத்தில் பெறப்பட்டுள்ளனர். இன்டர்நஷனல் பிஸினஸ் ரைம்ஸின் தகவல் படி முத்தையா முரளிதரன் ஒரு லட்சம் டொலர்களுக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும். அவர் ஜெமினி அரேபியன்ஸ் என்ற அணிக்காக விளை…

  15. சத்தமில்லாமல் மற்றுமொரு சாதனையை செய்து காட்டியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரபல ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை ஆரத்தி. 9 சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள், 15 தேசிய அளவிலான போட்டிகள், ஏராளமான மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்ற பெருமைக்குரியவர், இந்தியாவின் நம்பர் ஒன் ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை ஆரத்தி. 17 வயதில் 97 பதக்கங்களைப் பெற்றவர். இதில் 81 பதக்கங்கள் தங்கம் என்றால் ஆரத்தியின் சாதனையை எண்ணிப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவிலுள்ள ரோலர் ஸ்கேட்டிங் ஆர்வலர்கள், ஆரத்தியின் சாதனையைக் கொண்டாடுகிறார்கள். சமீபத்தில் கொரியாவின் யசோவு நகரில் நடைபெற்ற உலக ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 10-வதாக வந்து சாதனை படைத்துள்ளார் ஆரத்தி. இந்தப் போட்டியில் இந்தியாவின் ச…

  16. இரண்டு கேப்டன் இந்தியாவிற்கு ஒத்து வராது: டோனி இரண்டு கேப்டன் முறை இந்திய கிரிக்கெட்டிற்கு ஒத்து வராது என்று கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் முதன்முதலாக மகேந்திரசிங் டோனி அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனி கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்தார். ஓய்வு அறிவிற்குப்பின் இன்று முதன்முதலாக டோனி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘இரண்டு கேப்டன் (டெஸ்ட் அணி, ஒருநாள் அணி) இந்த…

  17. மிலன் – ஜுவென்டஸ் போட்டி சமநிலை இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், சீரி ஏ புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்திலுள்ள இன்டர் மிலன், நடப்பு சீரி ஏ சம்பின்களான ஜுவென்டஸுக்கிடையே நேற்று இடம்பெற்ற போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெற்றிருக்கவில்லை. இப்போட்டியில் ஜுவென்டஸின் மரியோ மண்டுஸிக்கின் உதையொன்று கோல் கம்பத்தில் பட்டிருந்ததுடன், இவரின் பல உதைகளை இன்டர் மிலனின் கோல் காப்பாளர் சமிர் ஹன்டனோவிக் தடுத்திருந்தார். இந்நிலையில், நடப்பு பருவகாலத்தில் அதிக கோல்களைப் பெற்றவரான இன்டர் மிலனின் அணித்தலைவர் மெளரோ இகார்டியின் உதையொன்றை ஜுவென்டஸின் கோல்…

  18. சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுக்கும் சங்கா? இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னால் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரராக வலம் வரும் சங்கக்காரா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பிறகு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை ஆங்கில ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது. எனினும் இலங்கை கிரிக்கெட் சபையினால் இந்த தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் சங்கக்காரா ஓய்வு பெறும் பட்சத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்…

  19. அனுபவித்து விளையாட விரும்புகிறேன் ஓய்வுபெறுவது பற்றி சிந்திக்கவில்லை [25 - January - 2008] [Font Size - A - A - A] * டெண்டுல்கர் தெரிவிப்பு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் சிந்திக்கவில்லை என்று டெண்டுல்கர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான டெண்டுல்கர் 1989 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடந்த 18 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சி வரும் அவர் எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கி வருகிறார். 34 வயதான டெண்டுல்கருக்கு அடிலெய்டில் நேற்று தொடங்கிய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 146 ஆவது போட்டியாகும். டெண்டுல்கர் இன்னும் சில ஆண்டுகளில…

    • 3 replies
    • 1.5k views
  20. ஐபிஎல் கிரிக்கெட்டை அகற்ற வேண்டும்: இயன் போத்தம் ஐபிஎல் கிரிக்கெட்டை அகற்ற வேண்டும், கிரிக்கெட்டின் நீண்ட கால ஆயுளுக்கு ஐபிஎல் கிரிக்கெட் பாதகம் விளைவித்து வருகிறது என்று இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் சாடியுள்ளார். லார்ட்ஸில் எம்.சி.சி. ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் கவுட்ரி சொற்பொழிவில் இயன் போத்தம் இவ்வாறு கூறியுள்ளார். "நான் ஐபிஎல் கிரிக்கெட் பற்றி மிகுந்த கவலையடைகிறேன், உண்மையில், அந்த கிரிக்கெட் வடிவம் இருக்கக் கூடாது என்றே நினைக்கிறேன், உலக கிரிக்கெட்டின் முன்னுரிமைகளை அது மாற்றிவிடுகிறது. வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு அடிமைகளாக இருக்கின்றனர். நிர்வாகிகள் அதற்குத் தலைவணங்குகின்றனர். 2 மாத காலங்களுக்கு உலகின் சிறந்த வீரர்களை தன்னகத்தே பிடித்துப…

  21. ஜடேஜா அதிரடி...! முதல் இன்னிங்சில் 574 ஓட்டங்களை குவித்த இந்தியா! இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 574 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி போட்டியின் இரண்டாவது நாளான இன்று 8 விக்கெட்டுக்களை இழந்து 574 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது. இந்திய அணி சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா 175 ஒட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் …

    • 2 replies
    • 426 views
  22. தடுமாறிய ஆஸி.யை மீட்ட பேர்ன்ஸ் - ஹெட் இலங்கைக்கு எதிரான இரண்டாவது முரளி - வோர்ன் கிண்ண டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 384 ஓட்டங்களை குவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட முரளி - வோர்ன் கிண்ண தொடரில் விளையாடி வருகிறது, இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ள நிலையில், தொடரின் இறுதியும் இரண்டாவதுமான போட்டி இன்று கேன்பிராவில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. அதன்படி அவுஸ்த…

  23. தோனியால் மீண்டும் ‘பினிஷிங்’ செய்ய முடியவில்லை: கர்நாடகாவிடம் தோற்றது ஜார்கண்ட் கோப்புப் படம்.| ராய்ட்டர்ஸ். விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டியில் கர்நாடக அணி தோனி தலைமை ஜார்கண்ட் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் பிரிவு டி ஆட்டமொன்றில் வீழ்த்தியது. ஈடன் கார்டன்ஸில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் கர்நாடக அணி 266 ரன்களை எடுத்தது, கேப்டன் மணிஷ் பாண்டே அதிகபட்சமகா 77 ரன்களையும், ரவிகுமார் சமர்த் என்ற வீரர் அதிரடி 71 ரன்களையும் எடுத்தனர், ஜார்கண்ட் தரப்பில் ராகுல் ஷுக்லா 4 விக்கெட்டுகளையும் வருண் ஆரோன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ரினர். தொடர்ந்து ஆடிய ஜார்கண்ட் அணி 49.5 ஓவர்களில் 261 ரன்களை எடுத்து 5 ரன்கள் …

  24. கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த விஷபாம்பு ; அதிர்ச்சியில் ரஞ்சி வீரர்கள் கொல்கத்தாவில் மேற்கு வங்க மற்றும் விதர்பா அணிகளுக்கிடையேயான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜே.யு சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் 2வது நாளான இன்று, விதர்பா அணி வீரர்கள் பீல்டிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பந்துவீச்சாளர் ஸ்வான்பில் பண்டிவார் பந்து வீசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிரே பாம்பு ஒன்று ஊர்ந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டது. வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். தொடர்ந்து மைதான பராமரிப்பாளர்கள் கம்பு கட்டையுடன் ஓடி வந்து பாம்பை அடிக்க முற்பட்டனர். ஆனால் அந்த பாம்பு அவர்களுக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.