விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், இன்டர் மிலனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் வென்றது. இப்போட்டியின் நான்காவது நிமிடத்திலேயே தமது முன்களவீரர் போலோ டிபாலா பெற்ற கோலின் மூலம் ஆரம்பத்திலேயே ஜுவென்டஸ் முன்னிலை பெற்றது. எவ்வாறெனினும், இன்டர் மிலனின் மத்தியகளவீரர் நிக்கொலோ பரெல்லாவின் உதையானது ஜுவென்டஸின் பின்களவீரர் மத்தியாஸ் டி லிஜிட்டின் கையில் பட்டு பெனால்டி வழங்கப்பட்ட நிலையில் அதை இன்டர் மிலனின் முன்களவீரரான லொட்டரோ மார்ட்டின்ஸ் கோலாக்க கோலெண்ணிக்கையை இன்டர் மிலன் சமநிலைப்படுத்தியது. இவ்வாறாக 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முதற்பாதி முடிவடைந்திருந்த நிலையில், இரண்டா…
-
- 1 reply
- 703 views
-
-
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ஷீதல் ஒரு பாரா மகளிர் வில்வித்தை வீராங்கனை. இவருக்கு இரண்டு கைகளும் இல்லை, ஆனால் கால்களைக் கொண்டு அம்பு எய்து சாதிக்கிறார். சிறுவயதிலிருந்தே அவருக்கு இரண்டு கைகளும் இல்லை. அவருடைய தந்தை ஒரு விவசாயி, தாய் இல்லத்தரசி. ஷீதல் 16 வயதிற்குள்ளாகவே பல பட்டங்களை வென்றுள்ளார். ஷீதலின் வெற்றிக்கு அவருடைய விடாமுயற்சியும், கடின உழைப்பும்தான் காரணம் என்று அவருடைய பயிற்சியாளர் கூறுகிறார். பாரா ஒலிம்பிக்கிலும் ஷீதல் பதக்கம் வெல்வார் என்று அவர் நம்புகிறார். https://www.bbc.com/ws/av-embeds/articles/cn015erel0vo/p0fqz9sj/ta https://www.bbc.com/tamil/articles/cn015erel0vo
-
- 1 reply
- 309 views
- 1 follower
-
-
பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்பு: உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் கலந்து கொண்டது பற்றி உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. சீனிவாசன் இதனைச் செய்திருக்கக் கூடாது. அவரது நடவடிக்கைகளில் முரண்பட்ட லாப நோக்குடைய இரட்டை நலன் இருக்கிறது என்பதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இப்படியிருக்கையில் அவர் பிசிசிஐ கூட்டத்தில் கலந்து கொள்வது எங்ஙணம்? சீனிவாசனின் இந்த நடவடிக்கை பற்றிய நிலைப்பாட்டை வழக்கறிஞர் கபில் சிபல் வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜனவரி 22ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சீனிவாசனுக்கு இரட்டை லாப நோக்க முர…
-
- 1 reply
- 391 views
-
-
எம்.சி.சி.யின் தலைமைப் பதவியை பொறுப்பேற்ற சங்கா லண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவர் பதவியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார இன்றைய தினம் பொறுப்பேற்றுள்ளார். குமார் சங்கக்கார, மேரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக மாறும் முதல் பிரித்தானியர் அல்லாத நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 ஆம் ஆண்டில் சங்கக்காரவிற்கு மேரில்போன் கிரிக்கெட் கழகம் ஆயுட்கால உறுப்பினர் பதவியினை வழங்கியிருந்தது. அத்தோடு, சங்கக்கார இந்த கழகத்தினுடைய உலக கிரிக்கெட் ஆலோசனைக்குழுவின் அங்கத்துவராகவும் இருந்தும் உள்ளார். இன்று தனது பதவியை பொறு…
-
- 1 reply
- 512 views
-
-
இளைஞர்கள் ஐ.பி.எல்.லை விட டெஸ்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்-சந்தீப் பட்டீல் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் தலைமை தேர்வாளராக இருப்பவர் சந்தீப் பட்டீல். இவர் மும்பையில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவின் இளம் வயது கிரிக்கெட் வீரர்கள் பணம் கொழிக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை யோசிக்க வேண்டும். தயது செய்து இளைஞர்கள் உண்மையான கிரிக்கெட் விளையாட வேண்டுமென்றால், அது டெஸ்ட் போட்டிதான். ஐ.பி.எல். போட்டியல்ல. ஐ.பி.எல். போட்டி வந்து பணம் கொடுத்தும் வாங்கிய துரித உணவு வீட்டிற்கு போகும் முன் சாப்பிடுவதற்குச் சமம். உங்களுக்கு, உங்கள் அணிக்கு, நாட்டுக்கு, பெற்றோர்களுக்கு பெயர் வாங்கி கொடுக்க நீங…
-
- 1 reply
- 497 views
-
-
பாகிஸ்தான் சென்று விளையாட மறுக்கும் இலங்கை வீரர்களுக்கு டி20 தொடரில் இடமில்லை பாகிஸ்தான் சென்று டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட மறுக்கும் இலங்கை வீரர்களுக்கு டி20 தொடரில் இடமில்லை என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 26-ந்தேதி (வியாழக்கிழமை) அபுதாபியில் தொடங்குகிறது. 2-வது போட்டி 27-ந்தேதி அதே மைதானத்தில் நடக்கிறது. 3-வது போட்டி லாகூரில் நடக்க இ…
-
- 1 reply
- 384 views
-
-
உலகக்கோப்பை கிரிக்கெட்டுல இந்தியாதான் வின்னு..! இப்போட்டியில் இலங்கை அணி கவ்வப் போவுது மண்ணு..! மும்பை நகரம் கிரிக்கெட்டால பிதுங்குது கண்ணு..! தங்கத்தால உலக கோப்பை மின்னுது பொண்ணு..! (சரணம் - 1) சச்சின் அடிக்கும் பந்து எல்லாம் ராக்கெட் ஆகும் நொடியில..! ஷேவாக் அடிக்கும் பந்து எல்லாம் மைதானத்து வெளியில..! அடி அடி சச்சின் அடி... ஷேவாக் அடி வாணவெடி..! காம்பீர் அடிக்கும் பந்தை எல்லாம் பிடிக்கத்தான முடியல..! கோஹ்லி விரட்டும் பந்தை எல்லாம் தடுக்க கூட வழியில்ல..! அடி அடி பந்தை அடி... பவுண்டரியை பார்த்து அடி..! யுவராஜ் சிங்கு அடிப்பதெல்லாம் சிக்ஸராகும் கைப்புள்ள..! ரெய்னா வந்தால் சுத்தியடிப்பார் யாரும் பிடிக்க வழியில்ல..! அடி அடி யுவராஜ் அடி... அ…
-
- 1 reply
- 1.3k views
-
-
46 பந்தில் ஜாஸ் பட்லர் சதம் விளாசல் 46 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்த ஜாஸ் பட்லர். பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் குவித்தது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகித்த நிலையில் நேற்று கடைசி போட்டி துபையில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க வீரர்களில் ஒருவரான ராய் 117 பந்தில், 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 102 ரன்னும், அடுத்து வந்த ஜோ ரூட் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஜாஸ் பட்லர் 46 பந்தில் சதம் அடித்து மிரட்டினார். அவர் 52 பந்தில், 8 சிக்ஸர், 10 பவுண்ட…
-
- 1 reply
- 300 views
-
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட்: ஓவல் டெஸ்டில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வெற்றி 6 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி நான்காவது டெஸ்ட் போட்டியை வென்றிருக்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. பெருமை மிக்க ஓவல் மைதானத்தில் 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா பெற்றிருக்கும் முதல் டெஸ்ட்வெற்றி இது. 50 ஆண்டுக் காத்திருப்பு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. 1971-ஆம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணிதான் கடைசியாக ஓவல் ம…
-
- 1 reply
- 467 views
- 1 follower
-
-
சச்சின் மகனின் முதல் சர்வதேச விக்கெட்: ஆனந்தக் கண்ணீருடன் பாராட்டிய வினோத் காம்ப்ளி முதல் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் - படம் உதவி: ட்விட்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வீழ்த்திய முதல் சர்வதேச விக்கெட்டைக் கண்டு சச்சினின் பள்ளிப்பருவ நண்பரான வினோத் காம்ப்ளி ஆனந்தக் கண்ணீருடன் பாராட்டு தெரிவித்துள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 19 வயதுக்கு உட்பட்டவருக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். தற்போது 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி, இலங்கையில் பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. கொழும்பில் உள்ள நான்ட் ஸ்…
-
- 1 reply
- 568 views
-
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடர்! இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடர், கிரிக்கெட் இரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. உள்ளூர் அணிகளுக்கு இடையிலான “சுப்பர் ப்ரொவின்சியல் கிரிக்கெட் தொடர்” என அழைக்கப்படும் இத்தொடர், எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இத்தொடருக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது இத்தொடரில் பங்கேற்கும் நான்கு அணிகளின் தலைவர்கள், அணிகளின் உரிமையாளர்கள், இத்தொடரின் இயக்குனர், உள்ளூர் கிரிக்கெட் தொடருக்கான உப தலைவர், மற்றும் இத்தொடரில் விளையாடும் …
-
- 1 reply
- 699 views
-
-
தெற்காசிய விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை..! தெற்காசிய விளையாட்டு விழா போட்டி வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்கேற்கவுள்ள முதல் தமிழ் வீராங்கனையாக விஜயபாஸ்கர் ஆர்ஷிக இடம்பெறவுள்ளளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் தெற்காசிய விளையாட்டு விழா ஆரமமாகவுள்ளதாகவும், இதில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிக, தனது 13 ஆவது வயதில் பளு தூக்கல் விளையாட்டை ஆரம்பித்தார். இவருக்கு தந்தையே பயிற்றுவிற்பாளராக செயற்பட்டு வருகின்றார். 2014 ஆம் ஆண்டில் தனது 13 ஆவது வயதில் பாடசாலை மட்ட பளு தூக்கல் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஆர்ஷிகா, அன்று முதல் பாடசாலை மட்ட சகல போட்டிகளிலும் தங்கப்பதக்கத்தை சுவீகரித்த…
-
- 1 reply
- 413 views
-
-
308வது வெற்றியுடன் பெடரரை முந்தினார் செரீனா யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் கஜகஸ்தானின் ஷ்வெடோவாவை வீழ்த்திய செரீனா, கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் தனது 308வது வெற்றியை வசப்படுத்தி சாதனை படைத்தார். ஏற்கனவே முன்னாள் நட்சத்திரம் மார்டினா நவ்ரத்திலோவாவின் சாதனையை (306 வெற்றி) முறியடித்த செரீனா, ஆண்கள் பிரிவில் ரோஜர் பெடரர் 307 வெற்றிகள் பெற்று படைத்த சாதனையை சமன் செய்திருந்தார். தற்போது, 308வது வெற்றியுடன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிக வெற்றிகளை பதிவு செய்தவராக மகத்தான சாதனை படைத்துள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=243929
-
- 1 reply
- 455 views
-
-
இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற மோசடி குறித்து ஐசிசி விசாரணை October 4, 2018 இலங்கையில் கிரிக்கெட்டில் பாரதூர மோசடி இடம்பெற்றதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவு இலங்கையில் நடத்தி வருகின்றது. இதன்போது ஜனாதிபதி, பிரதமர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரின் வேண்டுகோளின் அடிப்படையில் அவர்களுக்கு விரிவான விளக்கம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார். குறித்த விசாரணைகள் சில காலமாக நடைபெறுவதாகத் தெரிவித்துள்ள அவர் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை, இங்கிலாந்து தொடருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்ற போதிலும் எதிர்வரும் …
-
- 1 reply
- 438 views
-
-
விம்பிள்டன்: யாக்கோவிச் புதிய சாம்பியன் செர்பியாவின் நோவாக் யாக்கோவிச் விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றுள்ளார். இந்தப் பட்டத்தை இரண்டு முறை வென்றுள்ள ரஃபேல் நடாலை இறுதிப் போட்டியில் அவர் வென்றார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஞாயிறன்று மாலை இடம்பெற்ற ஆட்டத்தில் யாக்கோவிச், நடாலை 6-4, 6-1, 1-6, 6-3 என்கிற நேர் செட்டுகளில் வென்றார். மேலும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை வெல்லும் முதல் செர்பியர் என்கிற பெருமையையும் யாக்கோவிச் பெற்றுள்ளார். இந்த ஆண்டு இதுவரை தான் விளையாடியுள்ள 51 போட்டிகளில், 50 போட்டிகளில் யாக்கோவிச் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் நான்கு போட்டிகளில் இறுதி ஆட்டத்தில் அவர் ரஃபேல் நடாலை தோல்வியு…
-
- 1 reply
- 871 views
-
-
இலங்கைக்கான கிரிக்கட் சுற்றுலா பயணத்தினை மேற்கொள்ளவுள்ள பங்களாதேஸ் அணியின் குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை ஒருநாள் சர்வதேச போட்டிகள் 03 இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் பகல் இரவு போட்டிகளாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய பங்களாதேஸ் அணியின் குழாம் விபரங்கள்.. Mashrafe Mortaza Mahmudullah Mohammad Mithun Mosaddek Hossain Mustafizur Rahman Sabbir Rahman Anamul Haque Mehidy Hasan Mohammad Saifuddin Mushfiqur Rahim Rubel Hossain Soumya Sarkar Tamim Iqbal http://www.hirunews.lk/tamil/sports/220438/பங்…
-
- 1 reply
- 523 views
-
-
Ravi Shastri: இந்தியா அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்ந்தால் மகிழ்ச்சி என விராத் கோலி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரே பயிற்சியளராக தொடர்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி (Ravi Shastri) மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 2021 உலகக்கோப்பை டி20 தொடர் வரை பொறுப்பில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் (Ravi Shastri) ஒப்பந்த காலம் உலகக்கோப்பை தொடருடன் முடிந்தது. அதன் பின் அவருக்கு 45 நாட்கள் நீடிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வது தொடர்பாக கபில்தேவ், அன்சுமான் கெக்வாத், சாந்தா ரங்…
-
- 1 reply
- 763 views
-
-
இந்தியாவை பின் தள்ளியது இலங்கை புனேயில் நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபது 20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்றதை தொடர்ந்து இருபது20 போட்டித் தொடர்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி 117 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது. தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் 118 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. http://www.virakesari.lk/article/2992
-
- 1 reply
- 507 views
-
-
43 ஆண்டுகளின் பின் வடக்கிற்கு பூப்பந்தாட்ட தொடரில் சம்பியன் May 1, 2022 தேசிய ரீதியில் நடத்தப்பட்ட பூப்பந்தாட்ட தொடரில் 43 வருடங்களின் பின்னர் வடக்கு மாகாணத்திற்கான சம்பியன் பட்டத்தை யாழ்.மாவட்டத்தை சேர்ந்த சற்குணம் காண்டீபன் பெற்றுக் கொடுத்துள்ளார். இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய இவ்வாண்டுக்கான தேசிய ரீதியான 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பூப்பந்தாட்ட தொடரின் இறுதி போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இப் போட்டியில் வடமாகாணம் சார்பில் சற்குணம் காண்டீபன் மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவரை எதிர்த்து விளையாடி சம்பியன் பட்டத்தை தனதாக்கினார். அது வடமாகாணத்திற்கு 43 வருடங்களின் பின் கிடைத்த சம்பியன் பட்டம் என்பது கு…
-
- 1 reply
- 497 views
-
-
36 ஆண்டுகால 1500ஆ ஓட்ட சாதனை இன்று முறியடிக்கப்பட்டது. 2011-06-19 11:50:24 யாழ் மாவட்ட செயலகத்தினால் 2011 ஆம் ஆண்டின் யாழ் மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது. யாழ் உறவுகளுக்கு.... உங்கள் கிராமங்களின் நடைபெறும் செய்திகள்ஃஃகாலாச்சார நிகழ்வுகள் ஃதேவாலய இகோவில் திருவிழாக்கள் ஃபாடசாலை நிகழ்வுகள் ஃ மற்றும் அனைத்து நிகழ்வு ஆகியவற்றை எமக்கு காணொளிகளாகவோ புகைப்படங்களாகவோ தந்துதவினால் அவற்றை நாம் தவறாது பிரசுரிப்போம் என தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் றுறுறு.NநுறுதுயுகுகுNயு.ஊழுஆ நெறதயககயெ@பஅயடை.உழஅ ளமலிநஸ்ரீ நெறதயககயெ இன்றையதினம் இடம்பெற்ற ஆண்களுக்க…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
முதல் முறையாக சங்காவுக்கு கிடைத்த வாய்ப்பு லண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் குடியுரிமை இல்லாத ஒருவரை அந்தக் கழகத்தின் தலைவராக நியமிப்பது இதுவே முதன்முறையாகுமென சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. குமார் சங்கக்காரவின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி ஒரு வருடத்துக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் இன்று (01) லோட்ஸில் இடம்பெற்றது. இதன்போது தற்போதைய தலைவர் அந்தோனி ரைபோர்ட், கழகத்தின் அடுத்த தலைவராக குமார் சங்கக்காரவை அற…
-
- 1 reply
- 854 views
-
-
இலங்கை வலைப்பந்து அணிக்கு பயிற்சியளிப்பதற்கான சவாலை ஏற்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வீராங்கனை தர்ஜினி தெரிவித்துள்ளார். இதற்காக தம்மிடம் ஏற்கனவே உள்ள நிலை 01 சான்றிதழுக்கு அப்பால், விரைவில் நிலை 02 மற்றும் நிலை 03 பயிற்சி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நான்கு வலைப்பந்தாட்ட உலகக் கிண்ண மற்றும் ஐந்து ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய தர்ஜினி, 2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த கேப் டவுன் உலகக் கிண்ணத்துக்கு பிறகு தேசிய அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தற்போது வசிக்கும் தர்ஜினி தனது இந்திய கணவர் ஆர்.பிரசாத்துடன் பெங்களூரில் நடந்த 13ஆவது ஆசிய நில…
-
- 1 reply
- 619 views
- 1 follower
-
-
சென். ஜோன்ஸ் கல்லூரியின் இன்னிங்ஸ் வெற்றிக்கு உதவிய அபினாஷ், தனுஜன் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி மற்றும் யாழ்ப்பாணத்தின்மற்றுமொரு பாடசாலையான யாழ் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான பாரம்பரிய கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 59 ஓட்டங்களால் சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. சென்.ஜோன்ஸ் கல்லூரியின் சொந்த மைதானத்தில் திங்கட்கிழமை (19) ஆரம்பமாகிய இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த சென்.ஜோன்ஸ் வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து கொண்டனர். அதற்கமைய முதலில் ஆடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரர்களுக்கு ஆரம்ப வீரரான C.P. தனுஜன் அப…
-
- 1 reply
- 437 views
-
-
தோல்விக்கு ஆடுகளம் மீது பழிபோடுவதா? - கவாஸ்கர் கேள்வி மும்பை ஒருநாள் போட்டியில் படுதோல்வியடைந்ததற்கு ஆடுகளம் மீது பழி போடுதல் கூடாது என்று ரவிசாஸ்திரி மீது கவாஸ்கர் சூசக விமர்சனம் வைத்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இதையடுத்து இந்திய அணியின் இயக்குநர் ரவிசாஸ்திரி மும்பை வான்கடே மைதான பராமரிப்பாளர் சுதிர் நாயக்கிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சுதிர் நாயக், மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நாளை நடைபெறும் மும்பை கிரிக்கெட் சங்க…
-
- 1 reply
- 238 views
-
-
விளையாட்டுலகம் எங்கே செல்கிறது? http://www.youtube.com/watch?v=RDbdCbo-LNE&feature=related
-
- 1 reply
- 1.2k views
-