எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3775 topics in this forum
-
லண்டனில் வெளிவரும் சிங்களத்தூதுவராலயத்தால் சிங்கள அமைப்புக்களால் தனிப்பட்ட சிங்கள பத்திரிகை ஆசிரியரால் வெளியிடப்படும் ஆங்கில வார மாத பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுக்கும் தமிழ் வர்த்தக நிறுவனங்களை தமிழ் உறவுகளே தயவு செய்து புறக்கணியுங்கள். தமிழரைப்பற்றியும், போராட்டம் பற்றியும் அவதூறாகவே பொய்களை எழுதிவரும் இப்பத்திரிகைகளுக்கு தமிழ் வர்த்தக நிறுவனங்கள் விளம்பர ஆதரவு கொடுத்து பத்திரிகைக்கு உதவி செய்வது மிகபெரிய தவறு. எங்கள் வர்த்தகர்களின் காசில் எங்களுக்கெதிராக இலவசமாக ஆங்கில மொழியில் பிரச்சாரம் செய்கிறார்கள். இதை வர்த்தகர்களுக்கு சொன்னால் அவர்கள் ஏற்கப்போவதில்லை.நாங்கள் தான் விழிப்புடன் செயற்பட்டு அவர்களை ஒதுக்க வேண்டும். அந்த வர்த்தகர் நட்டப்பட்டு …
-
- 6 replies
- 3.8k views
-
-
சரி இதோ குறுக்ஸ் அண்ணாச்சி போப்கானோட வந்துட்டார் :P 'மாவிலாறு- சம்பூர்- மூதூர்- வாகரை....." -சபேசன் (அவுஸ்திரேலியா)- வாகரையைச் சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து, இதற்கான யுத்த நடவடிக்கைகளைச் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டதிலிருந்து தென் தமிழீழ மக்கள் மிகக் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச சர்வகட்சி மகாநாடு என்றும், சமாதானத்தீர்வு என்றும் பொய்ப்பரப்புரைகளை ஒருபுறம் மேற்கொண்டு வருகின்ற அதேவேளையில் மறுபுறம் யுத்தம் ஒன்றை தமிழ் மக்கள் மீதுபிரயோகித்து வருவதானது சமாதானத்தீர்வு ஒன்றில் அவருக்கு இருக்கும் அக்கறையின்மையைத் தெளிவாகப் புலப்படுத்தி…
-
- 0 replies
- 651 views
-
-
""பாய பதுங்கும் புலிகள்...."" இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் பாரிய திட்டமிடலுடன் திரளாக பல பட்டாலியன் படையணிகளோடு களமுனையை திறந்து சமராடி அந்த பகுதியை ஆக்கிரமிக்கின்ற பொழுது அதை அதற்கமைவாக தக்க வைத்து கொள்ள வேண்டும். அதற்காண விநியோகங்கள் தடையின்றி நிகழ்த்த படவேண்டும் அப்பொழுதுதான் அந்த படைகளின் இருப்பை நிலை நிறுத்தி கொள்ளலாம் ஆனால் அது சாத்தியமா என்பதுதான் கேள்வி...? விடுதலைப் புலிகள் விட்டு வெளியேறிய பிரதேசங்களை பல உயர் படையணி கட்டளை தளபதிகள் விசேடமாக அங்கு பணியாற்றி அந்த பிரதேச வேறுபாடுகள் சாதக பாதக வழிமுறைகளை முன்கூட்டியே தெரிந்து பார்த்தறிந்து வடக்கு நோக்கி திரும்பியிருந்தார்கள். இவை முன்கூட்டியே தேசிய தலைமையினால் ஒருங்கிணக்கப்பட…
-
- 7 replies
- 2.5k views
-
-
அது ஒரு நடுத்தர அளவு விமானப்படைத் தளம்.... இன்னமும் இருள் விலகாத நேரம்... ...முக்கிய செய்தி ஒன்றைக் கொடுக்கிறார் படைத்தள தகவல் தொடர்பு அதிகரி ஒருவர். ... தகவலின் படி ஒரு முக்கிய ஒப்பிரேசனுக்காக ... மிகுதியைப் படிக்க http://www.tamilnaatham.com/advert/2007/jan/20070120/PARA99/ http://www.tamilnaatham.com/advert/2007/jan/20070120/PARA/
-
- 4 replies
- 1.3k views
-
-
ஈழத் தமிழர்களின் தேசிய இயக்கம் சமூக சக்திகள் பற்றிய விவாதத்திற்கான முன்னோடிக் குறிப்புக்கள் உயிர்ப்பு சஞ்சிகையில் வந்த நீண்டதொரு கட்டுரையில் இருந்து......... http://www.noolaham.net/library/books/02/133/133.pdf
-
- 2 replies
- 1.1k views
-
-
ஹபரணையில் வெடித்துச் சிதறிய சம்பூர் ஆக்கிரமிப்பு நோக்கம் [புதன்கிழமை, 18 ஒக்ரொபர் 2006, 18:24 ஈழம்] [தெ.சந்திரநாதன்] "பேசுங்கள்- போராடுங்கள்- போராடுங்கள்- பேசுங்கள்" என்ற வார்த்தைகளின் வழியாக பேச்சுவார்த்தைக்கான போராடுதலில் ஹபரண நிரந்த இடத்தைப் பிடித்துவிட்ட இடமாக நேற்று முன்தினம் பதியப்பட்டு விட்டது. ஏற்கப்பட்ட இழப்பு 102, கடுங்காயம் 150-ற்கும் மேல். இதற்கு மேலாக எந்தத் தகவலுமே வெளிவருவதில் சிறிலங்காவுக்கு உடன்பாடில்லை. இழப்புக்கள் குறித்த தகவல்களுக்கு சம்பவம் நடந்த சில மணிநேரத்திலேயே இரும்புத் திரையிடப்பட்டது. ஆம், இழப்பு அத்தகையது. கடுங்காயங்களுக்கு உள்ளானோர் என வர்ணிக்கப்பட்டோர் கொழும்பு மற்றும் குருநாகல் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட, "சுமார…
-
- 0 replies
- 953 views
-
-
ஐ நாவின் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கை, இந்த வருடம் இலங்கைக்குள் பாயவுள்ள பெரும் தொகையான பிரித்தானிய முதலீடுகள், பழம்பெரும் இந்திய நிறுவனமான டாடா இலங்கையில் உள்ள தகவல் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவமொன்றை வாங்க உள்ளதாக வந்துள்ள செய்திகள் எமது போராட்டத்தில் அடுத்து வரவிருக்கும் செங்குத்தான வளைவுகளை முன்னறிவிக்கின்றன. வாகரை மோதல்களின் முடிவு கிழக்கில் ஒரு புதிய அரசியல் மாற்றத்துக்கு வழிகோலலாம் என்பதால் கருணா குழுவுடன் முழு அளவிலான ஒரு யுத்த நிறுத்ததை மேற்கொள்வதன் மூலம் கிழக்கில் தமிழர் தரப்பு இன்னொரு வடிவத்தில் பலத்தை இழந்து விடாது தக்கவைப்பதே வன்னி பெருநிலபரப்புக்கு கூடுதல் பலத்தை தரும். இல்லையெனில் கிழக்கில் தமிழர் மூன்றாம் சிறுபான்மையாகி எந்த காலத்திலும் எம்ம…
-
- 3 replies
- 1.3k views
-
-
புலிகள் பலவீனமடைந்து விட்டனரா ? சம்பூருக்குப் பிறகு புலிகள் மற்றொரு கிழக்கிலங்கைப் பகுதியான வாகரையையும் இழக்கப் போகிறார்கள். புலிகள் தங்களது ஆர்ட்டிலரிகளையும் பிற முக்கிய தளவாடங்களையும் வாகரையில் இருந்து விலக்கி கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறீலங்கா இராணுவம் வாகரையை நோக்கி முன்னேறும் பொழுது புலிகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அந்தப் பகுதியில் இருந்து தங்கள் படைகளை விலக்கி கொள்வார்கள். வாகரையை இராணுவம் ஆக்கிரமித்தால் அரசியல் ரீதியாக புலிகள் சில முக்கிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அதில் முக்கியமானது கிழக்கிலங்கை - கருணாவின் வசம் செல்வது. கருணா பிரச்சனையின் ஆரம்பகாலங்களில் கருணா பிரச்சனையே புலிகளின் ஒரு ராஜதந்திரமோ என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது. இதற்…
-
- 11 replies
- 2.2k views
-
-
Monday, 15 January 2007 கிழக்கை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளது. அம்பாறையில் கஞ்சிகுடிச்சாறு பகுதி நோக்கி விஷேட அதிரடிப் படையினர் முன்னேறிச் சென்றுள்ளனர். இது போன்று கிழக்கின் ஏனைய பகுதிகளையும் புலிகள் வசமிருந்து மீட்கும் படை நடவடிக்கைகள் படிப்படியாக நடைபெறுகின்றன. வடக்கு - கிழக்கை உயர் நீதிமன்ற தீர்ப்பு மூலம் பிரித்துவிட்ட அரசு கிழக்கை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. திருகோணமலையின் எல்லைப் புறத்தேயுள்ள வாகரை மற்றும் அதனோடிணைந்த பகுதிகளையும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலுமிருந்து புலிகளை வெளியேற்றும் படை நடவடிக்கை குறித்து அரசும் படைத் தரப்பும் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தன. …
-
- 42 replies
- 6.7k views
-
-
"'''புலிகளின் குறியும் அரசின் குழப்பமும்"" அமைதி கிழித்தொரு அதிரடி தாக்குதல் மிக விரைவில் நடந்தேறும் அதில் எந்த ஜயபாட்டுக்குட் இடமில்லை. புலிகள் தமது பலத்தை மீண்டும் மீண்டும் நிருபித்து காட்ட வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறார்கள் அத்தோடு மக்;களின் கொந்தளிப்பு அவர்களின் தாங்கென்ன துயரங்களை துடைக்கவேண்டும் அதற்கமைவாகவே அவர்கள் தமது படையணிகளை மறுசீரமைத்து பல புதிய படையணிகளை உருவாக்கி பரிச்சார்த்த நகர்வுகளையும் ஒத்திகைகளையும் நடாத்தி இருந்தார்கள் . அன்மைகாலமாக பல படையணிகள் பயிற்சி பெற்று வெளியேறுவதென்பது எதை குறிக்கிறது என்பதை எம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதன் உள்ளாந்த அர்த்தம் எதுவென அறிந்து கொள்ளுதல் அவசியம். இந்த இடத்தில் சில உதரணங்களை…
-
- 10 replies
- 3.2k views
-
-
"கனதூரம் போகோணுமெல்லே, என்னத்துக்கு நடை பயிலுறாய்? வேகாமப் போவன்" என்று தன் மாட்டோடு பேசிக் கையில் இருந்த தன் நீண்ட பூவரசம் தடியால் மாட்டின் முதுகைத் தட்டிக் கொடுத்து, இஞ்சை, இஞ்சை என்று மாட்டைப் போகும் திசை நோக்கித் திருப்புவார் மாட்டு வண்டிற்காரர். வாயில் நுரை தள்ளி என் கடன் பாணி செய்து கிடப்பதே என்று மாடு வேகமெடுக்கும். முழுப்பதிவிற்கும்: http://kanapraba.blogspot.com/2007/01/blog-post.html
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் பொருளாதாரத்தை சீரழிக்கும் பாதுகாப்புச் செலவு: மைத்திரிபால சிறிசேன. அதிகரித்த பாதுகாப்புச் செலவும் இடம்பெற்று வரும் போரும் சிறிலங்காவின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளதாகவும் ஓவ்வொரு தடவையும் ஏவப்படும் பல்குழல் எறிகணைகள் நூறு தொழிலாளர்களின் வேலை வாய்ப்புக்களை நாட்டில் இழக்கச் செய்வதாகவும் மூத்த அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: அரசு இராணுவ நடவடிக்கையில் ஆர்வம் கொண்டு உள்ளது. எனினும் இறுதித்தீர்வு அரசியல் வழிகளிலேயே எட்டப்பட முடியும். பல்குழல் எறிகணை செலுத்திகளின் தாக்குதலை பார்க்கும் போது எமக்கு திரிலாக இருக்கலாம். ஆனால் அதற்கு நாம…
-
- 0 replies
- 1.7k views
-
-
திசைமாறிய திருமலையின் தலைவிதி -சி.இதயச்சந்திரன்- தினச் செய்திகளை முழுமையாக ஆக்கிரமிக்கும் ஒரு கொதிநிலைப் பிரதேசமாக மாற்றமடைந்து வெடிப்பு நிலையிலுள்ளது திருகோணமலை. தமிழ் மன்னர்களும் பூனைக்கண் அந்நியரும் ஆண்ட வளமிக்க பூமி, ஆக்கிரமிப்புக் கரங்களுள் சிக்கி சின்னாபின்னமாகிறது. கிழக்கில் அம்பாறை அபகரிக்கப்பட்டு, சேருவில பிரிக்கப்பட்டு மகாவலி ஆற்றுப் படுக்கையின் தமிழ் எல்லைக் கிராமங்கள் அகற்றப்பட்டு, தமிழின நிலச் சிதைவு சிறிலங்காவின் இறையாண்மைக்குள் நிகழ்த்தப்பட்டுவிட்டது. இதனை இப்படியே ஏற்றுக் கொண்டு அரசு தரும் சில்லறைகளை கையேந்தி வரவேற்கும் இழிநிலையை நியாயபூர்வமாக்க இன்னுமொரு கிழக்குத் தலைமை எமக்குத் தேவையா? அரசோடு இணைந்துள்ள தமிழ் அமைப்புக்களின் செயற்பாடுகள…
-
- 0 replies
- 966 views
-
-
அல்லற்படும் தமிழினத்தின் அவலங்களைப் போக்க ஆணித்தரமாகக் குரல் கொடுத்த மாமனிதர் குமார் 05/01/2007 * இன்று 7 ஆவது நினைவுதினம் -அப்பாத்துரை விநாயகமூர்த்தி- மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது 07 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும்(05/01/2007). இலங்கைச் சரித்திரத்திலேயே ஒரு தமிழ்த் தலைவர் தமிழர்களுக்காக குரல் கொடுத்த காரணத்துக்காக சிங்களத் தீவிரங்களால் கொலை செய்யப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். அவர் கொலை செய்யப்படும் பொழுது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். மாபெரும் தலைவர் சட்ட வல்லுநர் மறைந்த ஜி.ஜி.பொன்னம்பலம் கி.இ அவர்களின் மறைவின் பின் அவரது மைந்தரான இவர் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று எல்லோரும் மெச்சத்தக்க வகையில் நடத்தி வந்தார். …
-
- 1 reply
- 943 views
-
-
-
Tourism & Tea in Sri Lanka by Daily Mirror, Colombo, January 5, 2007 Tourism in Sri Lanka recorded a negative growth with arrivals dropping by 3.0 per cent to 549,308 in 2005...The Loss of Tourism earnings was much more severe than the loss in arrivals, with a drop of 54.5 per cent, to Rs. 36,377.3 Million (USD 362.3 mn) during 2005 Western Europe continued to be the single largest source of tourism to Sri Lanka, accounting for 41.3 percent of the total arrivals... South Asia 27.9 per cent; North America – 8.4 per cent; North East Asia – 6.7 per cent; South East Asia – 6.1 percent and Australasia – 5.4 per cent. Value of Sri Lankan tea exports during…
-
- 2 replies
- 2.8k views
-
-
சிறிலங்காவில் பெற்றோலின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு [வெள்ளிக்கிழமை, 5 சனவரி 2007, 06:04 ஈழம்] [பா.பார்த்தீபன்] சிறிலங்காவில் பெற்றோலின் விலை 5 ரூபாயினால் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவிலிருந்து அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. ஒரு லீற்றர் ஓக்ரேன் 90 பெற்றோலின் விலை 97 ரூபாயாகவும் ஒரு லீற்றர் ஓக்ரேன் 95 பெற்றோலின் விலை 100 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. உலக சந்தையில் ஏற்பட்ட எண்ணை விலை அதிகரிப்பே இந்த விலை உயர்வுக்கான காரணம் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெற்றோலின் விலையில் அதிகரிப்பு ஏற்படாவிட்டால் 175 மில்லியன் ரூபாயை இழக்க வேண்டி ஏற்படும் என்று கடந்த வாரம் கூட்டுத்தாபனம் அறிவ…
-
- 1 reply
- 1.9k views
-
-
தேசத்தின் குரலின் மேடைப்பேச்சுக் கலை. - கி.செ.துரை (நன்றி : அலைகள்) அறிஞர் அண்ணா போல எளிமைப்படுத்தி பாமர மக்களுக்குள் கச்சிதமாக எடுத்துச் சென்றது அவருடைய மேடைப்பேச்சுக் கலைதான். தமிழீழ தேசத்தில் பொருள் நிறைந்த தேச விடிவு தேடும் குரலுக்கான உயர் விருதைப் பெற்றிருக்கிறார் தத்துவாசிரியர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள். ஆகவேதான் அவருடைய மேடைப் பேச்சுக்களின் சிறப்பைச் சீர்தூக்குகிறது இக்கட்டுரை. ஒரு மனிதன் வாழ்வில் செய்த சாதனைகள் எப்படிப்பட்டவை என்பது அவர் இறக்கும்போது வரும் மக்கள் தொகையால் தீர்மானிக்கப்படும் என்று கூறுவார்கள். அந்த வகையில் மக்கள் மனம் கவர்ந்த சிந்தனைவாதி என்ற சிறப்பை அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு புலம் பெயர்ந்த மக்கள் இங்கிலாந்தின…
-
- 0 replies
- 1.1k views
-
-
முகாமைப் படுத்தப்படும் சிறிலங்கா பணமாற்று விகிதம் முடிவுக்கு வரும். சர்வதேச நாணய நிதியத்தின் நெருக்குதலுக்கு அமைய முகாமைத்துவப் படுத்தபட்டிருக்கும் சிறிலங்காவின் பண மாற்று விகிதம் சந்தை நிலவரப் படி மாற்றப்பட உள்ளது.இது நிகழ்ந்தால் சிறிலங்கா ரூபாயின் பெறுமதி இன்னும் கீழே செல்லும். Sri Lanka to withdraw 'exchange control' measure in March January 03, 2007 (LBO) – Sri Lanka will withdraw from March 31, a controversial cash deposit requirement aimed at limiting imports, which drew censure from the International Monetary Fund as an exchange control measure, a top official said. A 50 percent margin requirement was imposed on a set of goods define…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஒரு போராளியின் குருதிச்சுவடுகள் புரட்சிமாறன் - விடுதலைப்புலிகள், கார்த்திகை 2006. வட போர்முனையின் கட்டளைப்பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப்பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்ப்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச் சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் சந்தேகம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடும் என்ற தருணத்தில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில்லாமல் நிற்கமாட்டான். நேரம் செல்லச் செல்ல தளபதியிடமும் ஏனைய போராளிகளிடமும் ஏக்கம் தொற்றிக்கொள்கிறது…
-
- 1 reply
- 959 views
-
-
மன்னார் எண்ணெய் வளத்தை ஆராய உலக அளவில் ஏலம். மன்னாரில் எண்ணெய் வளம் பற்றி ஆராய உலக அளவில் ஏலம் விடப்படவுள்ளது. மன்னார் கரையோரப் பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக முன்னோட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பகுதியில் ஆழ்கிணறு தோண்ட எதிர்வரும் மே மாதம் உலக அளவில் ஏலம் விடப்படவுள்ளது என்று சிறிலங்காவின் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மன்னார் வளைகுடாவிலிருந்து உனவத்துன வரையுள்ள 35,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பாரிய அளவு பெற்றோலியமும் இயற்கை வாயுவும் இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. www.puthinam.com
-
- 5 replies
- 3.2k views
-
-
எதிர்வரும் ஏப்ரலில் இந்த நாடு பாரிய பொருளாதார சிக்கலில் தள்ளப்படவுள்ளது - ஐ.தே.க.எச்சரிப்பு அடுத்த ஏப்ரலில் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கப் போவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் பிரதி நிதிஅமைச்சரும் ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். அவர் இங்கு மேலும் பேசுகையில், மக்களின் வாழ்க்கைச் செலவு அசாதாரணமான முறையில் உயர்ந்துள்ளது. 2006 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம் முழுமையாக வீழ்ச்சியடைந்தாகி விட்டது. இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவின் பணவீக்கம் 19.3 வீதமாக அதிகரிப்பு. சிறிலங்காவில் இந்த வருடம் டிசம்பரில் வாழ்க்கைச் சுட்டெண் 2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 19.3 வீதம் அதிகரித்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி அறிவித்துள்ளது. www.sankathi.com
-
- 0 replies
- 1.6k views
-
-
Sri Lanka Economic Growth Seen Slowing in 3rd Quarter (Update1) By Anusha Ondaatjie Dec. 28 (Bloomberg) -- Sri Lanka's economic growth probably slowed for a second quarter as interest rates at a four-year high and renewed violence in the island's civil war hit spending. The South Asian economy expanded 7 percent in the third quarter from a year earlier, after a 7.6 percent gain in the three months to June 30, according to the median forecast of five economists in a Bloomberg News survey. The central bank will release the figures in Colombo tomorrow at 8:00 a.m., Chitrani Nanayakkara, head of the bank's communications department, said in a telephone interv…
-
- 0 replies
- 2.2k views
-
-
HIKKADUWA, Sri Lanka (Reuters) - Glass bottom boats tethered to the shore, candlelit shacks serving seafood empty of patrons, a solitary bar open: Not the signs of a vibrant beach resort at the height of the holiday season. Thousands of travellers normally flock to this sun-kissed, palm-fringed spot on Sri Lanka's southwest coast, renowned for its coral reefs and ochre beaches. But most tourists have stayed away this year, deterred by renewed civil war between the state and Tamil Tiger rebels that has killed 3,000 people this year alone amid a rash of land battles, air raids and suicide bombings. A backpacker haven since the 1970s, Hikkaduwa has sprouted lu…
-
- 0 replies
- 1.9k views
-