எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
08.10.1987 அன்று தமிழீழ மக்களுக்குத் துரோகமிழைத்த இந்திய அரசு. தமிழீழ விடுதலைப் புலிகள் - இந்தியா போர் தொடங்கியது 1987 அக்டோபர் 8 அன்று இந்திய- சிறிலங்கா ஒப்பந்தத்தின்படி அமைதி காக்கவென வந்த இந்தியப் படை தமிழ் மக்களுக்குத் துரோகமிழைத்தது. தமிழ் மக்களிடத்தில் பாரபட்சமாக நடந்து கொண்டது. நாளை மறுதினம் இந்தியா - புலிகள் போரின் முதல் நாள் ஆகும். 1987 ஒக்டோபர் 10ம் நாள் இந்திய தமிழீழப் போர் எவ்வாறு ஆரம்பித்தது என்பதை அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜீ இராமச்சந்திரனுக்கு 1987 ஒக்டோபர் 1ம் திகதி தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதத்தில் பின் வருமாறு குறிப்பிடுகிறார் எமது தளபதிகளும் போராளிகளும் அநியாயமாகக்கொலையுண்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழீழம் எங்கும் வன்முறைச் சம்பவங்கள…
-
- 0 replies
- 616 views
-
-
தரிசாகும் தமிழர் சமூக வெளி August 29, 2021 — கருணாகரன் — கண்ணுக்கெட்டிய தூரம் வரை தரிசாகக் கிடக்கும் வெளியைப் போலவே தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்துக்குரிய இளைய தலைமுறையின் ஆளுமைப் பரப்பும் தரிசாகி – வரண்டு போய்க்கிடக்கிறது. இது ஒன்றும் எதிர்மறைக் கூற்றல்ல. மிகத்துல்லியமான அவதானிப்பினால் உருவான கணிப்பாகும். அரசியலில், பொருளாதாரத்துறையில், ஆன்மீகத்தில், சமூகச் செயற்பாட்டில், இலக்கியத்தில், பிற கலை வெளிப்பாடுகளில், அறிவுத்துறையில், ஊடகத்தில் என எங்குமே இந்தத் தரிசு நிலையை – வரட்சியைக் காண முடியும். இதை யாரும் மறுப்பதாக இருந்தால் அதற்குரிய ஆதாரங்களை முன்வைத்து வாதிடலாம். இதற்கு அதிகமாக யோசிக்க வேண்டாம். ஒரு சிறிய ஒப்பீடு. 1970, 80, 90, 20…
-
- 1 reply
- 751 views
-
-
🤣🤣 அண்மைக் காலங்கள் இந்திய ஓநாய்க் கூட்டம் எங்களை வாஞ்சையோடு அரவணைக்க முற்படுவதை எம்மால் காணக்கூடியவாறு உள்ளது. அவர்கள் தன்னலத்தினால் ஈழத்தீவினில் அவர்களால் நேரடியாக எதிர்கொள்ள முடியாத அளவு வலம் மிக்க சீனா வந்து குந்திவிட்டதால் அவர்களை எதிர்கொள்ளவும் இகலவும்(counter) எம்மை பகடையாக்க முற்படுகின்றனர். இதற்காக அவர்களின் கையாள் ஊடகங்கள் மூலம் எம்மை, தங்கள் பக்கம் மண்டைகழுவி சாய்ப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக எடுத்து வருகின்றனர். எம்மவர்களே... இந்த ஓநாய்க்கூட்டம் இற்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் (நான் அப்போது பிரம்மாவோடு தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன். புவிக்கு வரவில்லை) எமது மண்ணில் அத்துமீறி நுழைந்து சிங்களத்திற்கு போட்டியாக செய்த கழிசடை நாறல் வேலைகளை அறியாத…
-
- 8 replies
- 712 views
- 1 follower
-
-
மீண்டு வரும்... "பட்டியடைத்தல்" இன்று பின்னேரம் விளான் வீதியால் செல்லும் போது பட்டியடைக்கும் காட்சி கண்டு வயலுக்குள் இறங்கினேன். அங்கு நிண்ட அளவெட்டியை சேர்ந்த சேனாதிராஜா ஐயாவிடம் கதையளக்கத் தொடங்கினேன். ஐயா உதுக்க என்ன கட்டப்போறியள் ? செம்மறியாடு என்னத்துக்கு ? இந்த முறை உரம் வராதாம் அதான் பசளைக்காக கட்டுறம். உங்கட வயலோ ? இல்லை. நாங்கள் தான் "பட்டி" கட்டுறம். எத்தனை ஆடு கட்டப்போறியள்? 700 ஆடு இதுல எத்தனை பரப்பிற்கு "பட்டி" அடைச்சிருக்கிறியள்? 7 பரப்பில. பட்டி கட்ட எவ்வளவு காசு? ஒரு இரவு இந்த 700 செம்மறி ஆட்டையும் "பட்டி அடைக்க" 5000 ரூபா எட…
-
- 1 reply
- 766 views
-
-
திலீபன் நினைவு தினம் : அவர் சாவு சொல்லும் செய்தி என்ன? மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கியவர் தியாக தீபம் திலீபன். அவர் தன் உடலை வருத்தி உண்ணா நோன்பிருந்த இரண்டாவது தினம் இன்றாகும். இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரில் நவம்பர் 27, 1963 அன்று திலீபன், இராசையா தம்பதிகளுக்குப் பிறந்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பக்கால உறுப்பினராகவும் முக்கிய பொறுப்பாளராகவும் இருந்தவர். 1987ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை தமிழர் தாயகத்தில் அமைதிப்படையாக காலடி வைத்தது இந்திய ராணுவம். ஈழ தமிழரின் பிரச்னையை தீர்க்க எ…
-
- 55 replies
- 9.4k views
-
-
வடக்கிருத்தலின் உன்னத வடிவம் திலீபனின் தியாகம் பிறேமலதா பஞ்சாட்சரம் ஈழப்போராட்ட வரலாற்றில் திலீபனின் அமைதிவழியிலான ஈகப் போராட்டம் உலகப் போராட்ட வரலாற்றில் ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்திச் சென்றுள்ளது. ஓர் மனிதன் தான் நேசித்த மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காக தனது இன்னுயிரை ஈகம் செய்தமை உயிர்க்கொடையின் உயர்ந்த நிலையாகவே பார்க்கப்படுத்தல் வேண்டும். அவ்வகையில் திலீபனின் கொள்கைப்பற்றுதிமிக்க வன்முறையற்ற உயர்க்கொடைப் போராட்டத்திற்கு நிகரான போராட்டம் உலக வரலாறில் இதுவரை இல்லை எனலாம் . பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபன் ஈழத்தில் யாழ்ப்பாண மாவ ட்டத்திலுள்ள ஊரெழு …
-
- 0 replies
- 555 views
-
-
நான் முழுக்கவும் பாக்கேல. ஆனால் கொஞ்சம் பாத்ததில இருந்து அவர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் எனப்தை பல்வேறு இடங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தரவுகள் மூலம் விளங்கப்படுத்தியிருக்கிறார். மொத்தம் 3 மணித்தியாலம். கொஞ்ச நஞ்சமில்லை.
-
- 0 replies
- 711 views
- 1 follower
-
-
(சன் தொலைக்காட்சிக் குரலில் வாசிக்கவும்) பழைய நிதர்சன நடிகர்களான தமிழ்க்கவி அன்ரி, (அந்த நரைமுடி ஐயாவின்ர பெயர் தெரியும். மறந்து போனன்) எனப் பலர் நடித்து போருக்குப் பின்னான எமது மக்களின் அல்லல் நிறைந்த வாழ்வினை எடுத்துக்கூறும் திரைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய ஈழத் திரைப்படம்.... "ஆறாம் நிலம்"
-
- 1 reply
- 865 views
- 1 follower
-
-
22.09.1995 அன்று சிங்கள பேரினவாத அரசால் நடத்தப்பட்ட நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை. யாழ் மாவட்டத்தில்; வடமராட்சியில் நாகர்கோயிற் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்து மக்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல் ஆகும். கிராமத்தில் 15.02.1956 இல் திரு.வி.நாகநாதன் அவர்களின் முயற்சியினால் நாகர்கோயில் வடக்கில் :யாழ் நாகர்கோயில் நாகேஸ்வரா வித்தியாலயம்: அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது. பின்னர் 1967 இல் யாழ்.நாகர்கோயில் மகாவித்தியாலமாகத் தரம் உயர்த்தப்பட்டது. 1990ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக மயிலிட்டிக் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களில்; அறுநூறு குடும்பங்கள் நாகர்கோயிலிற்கு இடம்பெயர்ந்தன. நாநூறு மாணவர்களைக் கொண்டிருந்த பாடசாலையின் மாணவர் தொகை எழுநூறாக உயர்ந்தது…
-
- 4 replies
- 866 views
-
-
எங்கே இந்தக் கிராமங்கள்? க. அகரன் ஓர் இனம் வாழ்ததற்கான அடையாளங்களாக, பல்வேறு சான்று பொருட்கள் அந்தப் பிரதேசங்களில் காணப்படும். அவற்றை வைத்தே வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையின் வடபால், வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில், ஒரு கிராமம், மக்கள் இன்றி அழிவடைந்து செல்கின்றது என்றால், நம்பித்தான் ஆக வேண்டும். பழம்பெரும் கிராமமமான ‘வெடிவைத்தகல்’ என்ற செழிப்புமிகு, எல்லையோர கிராமமே இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையை சந்தித்துள்ளது. 1985 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர், சுமார் 45 குடும்பங்கள் வாழ்ந்த இக் கிராமம், செல்வச்செழிப்புடன் காணப்பட்ட நிலையில், அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளால், மக்கள் சிற…
-
- 1 reply
- 787 views
-
-
முறிகண்டி கச்சான் சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மிகவும் பழைமை வாய்ந்ததும் மத வேறுபாடுகளின்றி எல்லோராலும் வழிபடும் முறிகண்டி பிள்ளையார் கோவில் வளாகத்தில் உள்ள வர்த்தகர்கள், இன்றைய சூழலில் தொழிலிழந்து நிர்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலதரப்பட்ட வர்த்தகம், வாழ்வாதாரத் தொழில்களை முன்னெடுத்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தினால் தொடர்சியாகப் பாதிக்கப்பட்டு, எதுமற்ற நிலையில் வங்கிக்கடன், நுண்நிதிக்கடன் எனப் பல்வேறு பட்ட கடன்களைப் பெற்று, தமது வாழ்வாதாரத் தொழில்களை ஆரம்பித்த போது, 2020ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடரும் கொவிட் -19 அச்சுறுத்தல், இ…
-
- 1 reply
- 832 views
-
-
தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத துயர்நாள் செம்மணி புதைகுழிகள்…! 1996ம் புரட்டாதி 7ம். நாள் யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தியை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி பிறகு கழுத்தை நெறித்து கொன்றனர். கிருஷாந்தியைத் தேடிச்சென்று இராணுவத்தினரிடம் கேட்டபோது தாய் இராசம்மாள், சகோதரர் பிரணவின் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்த வழக்கில் ஐந்து இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கியது நீதிமன்றம். அதில் ‘சோமரத்ன இராசபக்சே’ என்ற இராணுவ வீரன் அளித்த வாக்கு மூலம்: “யாழ் குடாவில் பரவலாக கைது செய்து காணமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் சித்திரவதி செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் மேலதிகாரிகளின் உத்தரவின் பேர…
-
- 2 replies
- 1.2k views
-
-
மறைந்திருக்கும் வெடிபொருட்கள்: இன்னும் அதிரும் மண் சுப்பிரமணியம் பாஸ்கரன் இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டு போரிலும், போருக்கு பின்னரான காலத்திலும் கண்ணிவெடிகளின் ஆபத்து சவால் மிக்கதாகவே உள்ளது. குறிப்பாக, இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளுக்கு, இவ்வாறான கண்ணிவெடிகளும் வெடிபொருட்களும் பாரிய சவாலாக விளங்குகின்றன. இலங்கையில் மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட நாடுகளிலும் இது ஒரு சவாலாகவே உள்ளது. வெடிபொருட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியாக, முகமாலைப் பகுதி காணப்படுகின்றது. யுத்தம் நடைபெற்று, 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமது சொந்த நிலத்துக்குத் திரும்ப…
-
- 0 replies
- 783 views
-
-
“நான் அறியாத எனது ஊர்” – பௌர்ஐா அன்ராசா! September 5, 2021 இந்த வருடம் August 30ம் திகதி நாங்கள் எங்களது சொந்த வீட்டிற்கு சென்று சரியாக ஒருவருட பூர்த்தியை எட்டியுள்ளோம். எமது நாட்டில் ஏற்பட்ட போரினால் 30 வருடங்கள் இடப்பெயர்வையும் இன்னல்களையும் கண்டு வந்தோம். வாடகை வீடு, தொடர்ச்சியான இடமாற்றம் என்ற நிலைகளை கடந்து வந்து சொந்த ஊரில் சொந்த வீட்டில் குடியேறிய நினைவுகள் அழகானவை. இந்த நேரத்தில் எமது ஊருக்கு மீள குடியேற அனுமதி வழங்கி நாங்கள் எங்களுடைய காணிகளை பார்வையிடச் சென்ற அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானதாகவே இருந்தது. மேலும் ஒரு ஆச்சரியமான ஒரு உணர்வையும் எமக்குள்ளே ஏற்படுத்தியதாகவும் இருந்தது. இந்த அனுபவத்தினை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன…
-
- 1 reply
- 981 views
-
-
-
அண்ணை, அண்ணா, அண்ணாச்சி August 14, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — ”அண்ணை, அண்ணா, அண்ணாச்சி” இந்தச் சொற்கள் எமது தமிழ் மக்களின் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்த சொற்கள். முஸ்லீம் மக்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் அண்ணா போன்ற உறவு முறைச் சொற்களைப் பாவிப்பதில்லை. பாரசீக அரபுவழி வந்த ”நானா” மற்றும் சில இடங்களில் “காக்கா” என்ற சொற்களையே உரையாடலின் போது பாவிக்கின்றனர். வயதில் மூத்த ஒரு ஆணை அண்ணா போன்ற சொற்களைக் கொண்டு அழைப்பது தான் தமிழ் பாரம்பரியம். ஒரு குடும்பத்தில் 5 ஆண் பிள்ளைகள் இருந்தால் வயதில் மூத்தவர்களை அண்ணா என்ற சொல் கொண்டு அழைப்பார்கள். மூத்தவரைப் பெரியண்ணா எனவும் அடுத்தவரை …
-
- 11 replies
- 2.1k views
- 2 followers
-
-
போதையால் சீரழியும் போருக்கு பிந்திய சமூகம்: மனம் நொந்து நாடுவிட்டகன்ற மருத்துவர் August 27, 2021 — கருணாகரன் — “போர் முடிந்தாலும் அதனுடைய தாக்கம் தீருவதற்கு குறைந்தது முப்பது ஆண்டுகளுக்கு மேலாகும். அதுவரையிலும் இளைய தலைமுறையிடம் உளச் சிக்கல்களும் வன்முறையும் இருக்கும்” என்கிறார் உளநலத்துறைப் பேராசிரியர் தயா சோமசுந்தரம். “இதை மாற்ற வேண்டும் என்றால் சமூக மட்டத்தில் நிறைய வேலை செய்ய வேண்டும். இதற்கு பல தரப்பினருடைய பங்களிப்புகளும் அவசியம்” என்று கூறுகிறார் உளநல மருத்துவர் ஜெயராஜா. இதை நாம் கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம். கஞ்சா, கசிப்பு, ஐஸ், தூள், பியர் என்று போதைக்கும் மதுவுக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையை என்ன செய்வ…
-
- 0 replies
- 736 views
-
-
கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பேரரையர்(Col./கேணல்) சூசை அவர்களின் இந்த நேர்காணலிலிருந்து தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகள் பற்றிய அறியாத, அறிந்து மறந்துபோன விடையங்களை அறியலாம். இதை தமிழீழ வரலாறு அறிய விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். ------------------------------------------------------------------------------------- 1. உலக விடுதலை போராட்டங்களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப்பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. இந்த சிந்தனை மற்றும் பலம் எங்கிருந்து பிறந்தன? உலக வரலாற்று நூல்களையும்…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
புத்தம் புதிய ஆவணக்காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது. பகிருவீர்... வரலாரறிவீர்... அன்பார்ந்த தமிழ் மக்களே... எமது இனத்தின் வரலாற்றில் நாம் என்றுமே எமது படைத்துறையின் வரலாற்றினை எழுதி வைத்ததில்லை. அது சேரராகட்டும்; சோழராகட்டும்; பாண்டியராகட்டும்... எவராயினும் தமது படைகள் எந்நிறத்தில் சீருடை அணிந்தன; எவ்வகையான படைக்கலங்களைப் பயன்படுத்தின என எதையும் வரலாற்றில் எழுதி வைக்காமல் சென்றுவிட்டனர். இவ்விழிநிலை எமது தமிழீழ நடைமுறையரசின் வரலாற்றிற்கும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக அவர்களது அணிகலங்கள், சீருடைகள் மற்றும் இன்னும் பல ஆகியவற்றை ஒரு ஆவணமாக பதிந்து இங்கே இட்டுள்ளேன். மேலும், ஒரு படம் பல வரலாறுகள் சொல்லும் என்பதால் பல ஆயிரம் படங்களையும் இதனுள…
-
- 2 replies
- 771 views
- 1 follower
-
-
இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 35 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஒகஸ்ட் 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் பலாலிப்பகுதி காப்பரண் தொகுதிகளில் பெண் போராளிகளுக்கென தனித்த பகுதிகளை ஒதுக்கியிருந்தார். கோழியின் சிறகுகளுள் குஞ்சுகள் இருந்த காலம் முடிந்துபோனது. குஞ்சுகளின் காலம். வீடுகளும், தோட்டங்களும், தோப்புக்களுமாகவுள்ள பலாலிப் பகுதியில் எந்த மதிலுக்குப் பின்னால் எந்த வாழை மரங்களிடையே எந்த வடலியின் மறைவில் எப்போது சிறிலங்கா இராணுவம் வந்துநிற்…
-
- 2 replies
- 1.1k views
-
-
வீரமுனைப் படுகொலை – தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம் – வீரமுனையூரான் வீரமுனைப் படுகொலை, இன அழிப்பு அரசின் துணையுடன் முஸ்லிம்கள் தென் தமிழீழத்தில் நடத்திய பல அப்பட்டமான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை களில் முக்கியமான தாகும். இந்த படுகொலைகளைச் சின்ன முள்ளிவாய்க்கால் படுகொலையாகவே நோக்கப் பட வேண்டியுள்ளது. தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம் தமிழ்த் தேசியப் போராட்டத்தில் கிழக்குத் தமிழர்கள் கொடுத்த விலைகள் ஏராளம். அவற்றில் ஒரு சிறுதுளியே இவ்வாறான படுகொலைகளாகும். இவ்வாறான படுகொலைகளைத் தமிழ் தேசியப் பரப்பில் பயணிப்போர் இன்று பேசுவது மிகவும் குறைவாகவே இருக்கின்றது. இன்று காணாமல் போனவர்களைத் தேடியலையும் பெற்றோரின் தொகை கிழக…
-
- 1 reply
- 761 views
-
-
தமிழர் போராட்டம் குறித்து இன்றைய மகாவம்சம்! - என்.சரவணன் (மகாவம்சத்தின் 6வது தொகுதி - 1978-2010 ) மகாவம்சம் என்றதும் நம்மில் பலர் இன்றும் மகாநாம தேரர் எழுதிய மகாவம்சத்தை மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றோம். கி.மு 5ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 4ஆம் நூற்றாண்டு வரையிலான கிட்டத்தட்ட 900ஆம் ஆண்டுகளுக்கிடையில் நிகழ்ந்த நிகழ்வின் தொகுப்பாக கி.பி 5ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரர் மகாவம்சத்தை எழுதியிருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட மகாநாம தேரர் அவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முந்தியகால வரலாற்றை எழுதியிருக்கிறார் என்கிற முடிவுக்கு வரலாம். அதுவரை வழிவழியாக எழுதப்பட்டு வந்த பல்வேறு ஓலைச்சுவடிகளையும், வாய்மொழிக் கதைகளையும் கொண்டே அவர் மகாவம்சத்தைப் புனைந்தார் எனலாம். மகாவம்சம…
-
- 0 replies
- 1.3k views
-
-
செஞ்சோலை வளாகப் படுகொலை செஞ்சோலை வளாகப் படுகொலையின் நினைவு வணக்க நாள் இன்றாகும். 14.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் சிறிலங்கா வான்படையின் விமானங்கள் திட்டமிட்டு மேற்கொண்ட குண்டு வீச்ச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவச் செல்வங்களின் 14ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள்… தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கி…
-
- 16 replies
- 3.5k views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை – மட்டு.நகரான் குறிப்பாக தமிழர்களின் இருப்புத் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் ரீதியான அடையாளங்கள், சுமார் 4000 வருடங்களுக்கு முன்னரே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளன. மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை வேடுவத் தெய்வ வழிபடு தமிழர்களின் ஆதிக்குடிகளாக நாகர்கள், இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்திருக்கின்ற போதிலும், அதன் வரலாறுகள் அழிக்கப் பட்டு, நாகர்கள் சிங்களவர் களாக மாற்றப்பட்டு, இலங்கையில் வரலாறுகள் எழுதப் பட்டுள்ளன. ஆனால் அண்மைக் காலமாக தமிழர்கள் மத்தியில் தொல்லியல் ஆய்…
-
- 2 replies
- 1.1k views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ துணைப்படைகளின் சீருடைகள் பற்றியதாகும்... இதை நான் பிரித்து எழுத அறவே மறந்து போனேன்! முதலில் துணைப்படைகள் என்றால் என்னவென்று பார்ப்போம். இவர்கள் விடுதலைப்புலிகளை களத்தில் ஆற்றுவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு 'சண்டை உருவாக்கம்' ஆகும். இவர்கள் கடல் மற்றும் தரைக்கென தனித்தனிப் பிரிவுகளாக இருந்தனர். இரு பிரிவினரும் வேறுவிதமான சீருடையோட…
-
- 1 reply
- 709 views
- 1 follower
-