அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9267 topics in this forum
-
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில், அரசாங்கத்தின் நகர்வுகள், ஏமாற்றமளிக்கின்ற சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திரிசங்கு நிலைக்கு உள்ளாகியிருக்கிறது. சிறைச்சாலைகளில், பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், தம்மைப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் எனக் கோரி, கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஆறு நாட்களின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த உறுதிமொழியை அடுத்து, இந்த உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது. நவம்பர் 7ஆம் திகதிக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்…
-
- 0 replies
- 672 views
-
-
‘கிளிநொச்சியை’ சம்பந்தர் மீட்பாரா? - தெய்வீகன் புதிய ஆண்டுக்குள் நுழைந்திருக்கும் தமிழரது அரசியல் இயல்பான சோர்வுடனும் ஒருவித அயர்ச்சியுடனும் காணப்படுகிறது. 2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வொன்றை பெற்றுத்தரப்போவதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் கூறிய வார்த்தைகளைக் கடந்த 31 ஆம் திகதிவரை எண்ணிக்கொண்டிருந்த பல புத்திஜீவிகளுக்குப் பலத்த ஏமாற்றம். எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் இழந்துவிட்டுச் சரணாகதி அரசியல் நடத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை நம்பி, இனி ஏதாவது நடைபெறுவதற்கு சாத்தியம் உள்ளதா என்று இன்னும் பலருக்கு விரக்தி. அரசாங்கத்தைக் கூட்…
-
- 0 replies
- 589 views
-
-
75 ஆண்டுகளுக்கும் மேலாக கற்றுக்கொண்ட பாடம் என்ன ? Digital News Team லூசியன் அருள்பிரகாசம் 0000000000000000000000000000000000000 எங்கள் மரபணுவின் பொதுவான தன்மைகள் பேராசிரியர் காமனி தென்னக்கோன் மற்றும் ஏனையோரால் மேற்கொள்ளப்பட்ட மரபணு [டி .என். ஏ ]ஆய்வுகள் (த ஐலண்ட் இல் பெப்ரவரி 2019 யில் அவரது கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) : “சிங்கள மற்றும் இலங்கைத் தமிழர்களின் பெரும்பாலான டி.என்.ஏ ஆய்வுகள் பாரியளவில் மரபணு ரீதியான வேறுபாட்டைக் காண்பிக்கவில்லை.மக்கள் இலங்கைத் தீவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பொதுவான வம்சாவளியைக் கொண்டுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.மேலும், “மரபணுக் கலவை பற்றிய ஆய்வில், இலங்கையின் சிங்கள…
-
- 0 replies
- 596 views
-
-
ஃபிடல் காஸ்ட்ரோ: நாயகனா, வில்லனா? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா அரச ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடினார்; நிர்வாகக் கட்டமைப்புக்கு எதிராகப் போராடினார்; விழுமியம் நிறைந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப முயன்றார்; அவரது மக்களில் பெரும்பான்மையானோரால் போற்றிக் கொண்டாடப்படுகிறார்; மேற்கத்தேய உலகில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் ஒருவராக இருக்கிறார்; மனித உரிமைகளை மீறியதாகக் குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன; நவம்பர் 26ஆம் திகதி, வாழ்வில் முக்கியமான நாளாக அமைந்துள்ளது. இவையெல்லாம், நவம்பர் 26ஆம் திகதி பிறந்தநாளைக் கொண்டுள்ள, தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட முயன்ற, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின…
-
- 3 replies
- 779 views
-
-
ஆசியாவின்... அதிசயத்தின், புதிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சராக பதவியேற்ற பின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை போட்டு குறிப்பையும் எழுதிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவிற்கு மதுரங்க குணதிலக என்பவர் பின்வருமாறு பதில் எழுதியுள்ளார்…..” ஸ்ரீலங்கர்கள் மிகவும் வேடிக்கையானவர்கள். தேர்தல் காலத்தில் அமெரிக்கா மிகவும் ஆபத்தான ஒரு நாடு. ஆனால் இப்பொழுதோ அமெரிக்க பிரஜைகள்தான் நாட்டில் உயர்பதவிகளில் இருக்கிறார்கள்.ஆனால் சீனாவால் காதலிக்கப்பட்டு கவசமிட்டுப் பாதுகாக்கப்படுகிறார்கள். இதுதான் ஆசியாவின் அதிசயம்” என்று. பதவிக்கு வந்த புதிதில் அமெரிக்காவுடனான மில்லினியம் சலேன்ச் உடன்படிக்கை, சோபா உடன்படி…
-
- 0 replies
- 598 views
-
-
இலங்கையை பிரதிபண்ணும் தமிழகம் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பதவிப் போட்டியின் போது இடம்பெற்றுள்ள ஒரு விடயத்தைப் பார்க்கும் போது, 1987ஆம் ஆண்டில் இலங்கையில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்படும் போது இடம்பெற்ற ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட போது, நாட்டில் தென் பகுதிகளில், அதற்கு எதிராகக் கடும் எதிர்ப்பு ஆரப்பாட்டங்கள் இடம்பெற்றன. சுமார் 140 பேர், அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆளும் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் பி…
-
- 0 replies
- 641 views
-
-
என்ன சொல்கின்றன வேலைகோரும் போராட்டங்கள்? - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா வேலையற்ற பட்டதாரிகளால், வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள், அண்மைக்கால ஊடகப் பரப்பை ஆக்கிரமித்துள்ளன. பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தைத் தொடர்ச்சியாக மக்கள் பின்தொடர்ந்த நிலையில், அதே போராட்ட மனநிலையுடன் காணப்படும் நிலையில், இந்தப் போராட்டங்களும், முக்கியத்துவம் பெற்றுள்ளன. வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையென்பது, நாடு முழுவதும் காணப்படுகின்ற போதிலும், தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கிலும் கிழக்கிலும், இந்நிலைமை மோசமாகக் காணப்படுகிறது. ஏராளமானோர், இவ்வாறு வேலைவாய்ப்புகளின்றிக் …
-
- 0 replies
- 659 views
-
-
கிழக்கின் கணக்கு - முகம்மது தம்பி மரைக்கார் கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருடத்துக்குள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஏனைய இரண்டும் வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளாகும். எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் இந்த மாகாண சபைகளின் ஆட்சிக் காலங்கள் நிறைவடைகின்றன. இந்த நிலையில், அடுத்த வரவு - செலவுத் திட்டத்துக்குள் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கூறியுள்ளார். மேற்படி மாகாண சபைகளில் தமிழ் பேசும் மக்களின் ஆளுகைக்குட்பட்டது கிழக்கு மாகாண சபையாகு…
-
- 0 replies
- 711 views
-
-
வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பிரேரணையை முதலமைச்சரே கொண்டுவரவேண்டியதாகிவிட்டது. இது விசித்திரமான ஒன்று. ஆளும் தரப்பினரே ஆளும் தரப்பின் அமைச்சுகளின் மீதும் அமைச்சர்களின் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது வேடிக்கையன்றி வேறென்ன? மட்டுமல்ல, வட மாகாண சபை ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மூன்று ஆண்டுகள் நிறைவுக்குள்ளேயே, ஊழல் குற்றச்சாட்டுக் கொண்டாட்டங்கள் அமர்க்களப்படுத்துகின்றன. உண்மையில் இது முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கைகளை மீறி நிகழ்ந்த செயலாகும். தான் நியமித்த அமைச்சர்களின் மீது யாரும் குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடியாது என்று விக்ன…
-
- 1 reply
- 1.1k views
-
-
ட்ரம்ப்பின் கீழ் வெளிநாட்டுக் கொள்கைகள் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக, இராஜதந்திர அனுபவங்கள் எவையுமற்ற டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்ட போது, ஐ.அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில், பாரியளவு மாற்றங்கள் ஏற்படுமென்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டது. முன்னைய ஜனாதிபதிகளைப் போல், இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடவோ அல்லது ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவோ அவர் முயல மாட்டார் என்பது, பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. இலங்கையிலும் கூட, அந்த எண்ணம் காணப்பட்டது. ட்ரம்ப்பின் வெற்றியை வாழ்த்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “ஏனைய நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிடாத போ…
-
- 0 replies
- 577 views
-
-
ட்ரம்ப்புக்கு வீழ்ந்துள்ள பாரிய அடி - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது பதவியேற்புத் தொடக்கம், பல்வேறான சவால்களை எதிர்கொண்டுவருகிறார். அந்தச் சவால்கள், எப்போதும் குறைந்தபாடாக இல்லை. இந்த நிலையில், பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுச் செயற்குழுவின் விசாரணைகள், அவருக்கான பாரிய அடியை வழங்கியுள்ளன எனக் கருதப்படுகிறது. புலனாய்வுக்கான கூட்டாட்சிப் பணியகத்தின் (FBI) தலைவர் ஜேம்ஸ் கோமி, தேசிய பாதுகாப்பு முகவராண்மையின் தலைவர் மைக் றொஜர்ஸ் ஆகியோர், பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுச் செயற்குழுவின் முன்னால் சாட்சியமளித்தனர். ஜனாதிபதி ட்ரம்…
-
- 0 replies
- 742 views
-
-
தமன்னாவும் எங்கள் தம்பிமாரும் பொருளாதார அபிவிருத்தியும் -பா.உதயன் ஒரு சமூகத்தில் எல்லா விதமான மக்களும் இருப்பார்கள். எது பிழை எது சரி என்று அறிந்து கொள்வதில் தான் சமூகங்களிடையே குழப்பங்களும் பிரச்சினைகளும் உருவாகுகின்றன. கலாச்சாரம் எல்லாம் இப்போ மெல்ல மெல்ல காணாமல் யாழ்ப்பாணத்தில் இருக்க கல்வி தாறன் என்று சொல்லி தமன்னாவை கூட்டி வந்து காட்டினா தம்பிமார் சும்மாவா இருப்பாங்கள் மானாட மயிலாட இவங்கள் சேர்ந்தாடி கூத்தாடாமலா விடுவார்களா. பொருளாதார அபிவிருத்தி என்று வந்தால் தனியவே உங்கள் பொக்கற்றை மட்டும் நிரப்புவது இல்லை. இந்த மக்களுக்கும் இதன் பலன் போய் சேர வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாமல் மக்களை குழப்பக் கூடாது. ஒரு தொழில் அதிபருக்கு சரியான திட்டமிடல் Leadership…
-
- 0 replies
- 632 views
-
-
தமிழ்மொழியை புறக்கணிக்கிறதா பா.ஜ.க? தி.மு.க கிளப்பும் திடீர் பிரசாரம் மொழிப்போருக்கான களம் மீண்டும் தமிழகத்தில் அமைந்து விடுமோ என்ற அச்ச உணர்வு அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது. ஹிந்தி திணிப்பு என்ற காரணத்தையும் ‘நீட்’ தேர்வு எழுதுவதிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவில்லை என்ற அடிப்படையிலும் ‘தமிழ் மொழி காப்போம்’ என்று மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம், விழிப்புணர்வு பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது. ஹிந்தி எதிர்ப்புப் போர் தமிழகத்தில் 1967 இல் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டது என்பது வரலாற்று உண்மை. ஆனால், அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் இருந்தது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி. இந்த முறை ம…
-
- 0 replies
- 648 views
-
-
நலத்திட்டம் இலவசமா ? - சுப. சோமசுந்தரம் 'இலவசங்கள்' பற்றிப் பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டு (உபயம் : இந்திய ஒன்றிய அரசும் தமிழக நிதி அமைச்சர் திரு பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களும்) சற்றே ஓய்ந்திருக்கிறது. சற்று தாமதமானாலும் கூட நாமும் பேசாவிட்டால் எப்படி என்ற எண்ணத்தின் விளைவே இக்கட்டுரை. சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டவற்றை தொகுத்தளிப்பதாக அமையலாம். புதிதாக நம் சிந்தனையும் சேரலாம். எவ்வாறாயினும் ஒரே கருத்தைச் சொல்வதில் ஒவ்வொருவருக்கும் தனியானதொரு பாணி என்று உண்டே ! இதோ : வளர்ச்சித் திட்டம் எதுவும் பற்றி எட்டு ஆண்டுகளாக சிந்தித்தே பார…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே - See more at: http://www.tamilmirror.lk/181480/ப-ரப-கரன-க-க-ந-கர-ப-ரப-கரன-#sthash.WZaKYxX8.dpuf
-
- 0 replies
- 850 views
-
-
மக்கள் இறைமையை பிரதிநிதித்துவ ஜனநாயகம் பிரதிபலிக்கவில்லை கோட்பாட்டிலும் நடைமுறையிலும் ஜனநாயகம்-மக்கள்; இறைமை-நாடாளுமன்றம் - 2 - சட்டத்தரணி எஸ்.மோகனராஜன் இன்றைய அரசியலில் ஜனநாயகம், மக்கள் இறைமை, நாடாளுமன்றம் என்பன எவ்வாறு அர்த்தமுள்ளதாக, பிரயோக தன்மையுள்ளதாக, அங்கிகாரமுள்ளதாக உள்ளது? என்பது பலரிடம் தோன்றியுள்ள கேள்வியாக உள்ளது. இந்நிலையில், இலங்கை கடந்த காலங்களிலும் தற்போதும் ஜனநாயகத்துக்கும் மக்கள் இறைமைக்கும் மதிப்பளித்துள்ளதா? மதிப்பளிக்கின்றதா? என்ற மிகப்பெரிய சந்தேகத்துக்கு விடைதேடும் முகமாக நாடாளுமன்றம் நீதியியல் ரீதியாக எவ்வாறான கடப்பாட்டைச் செலு…
-
- 0 replies
- 422 views
-
-
மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’ - ப. தெய்வீகன் புதிய வருடத்தில் தமிழர் அரசியல் ஒருவித ஏமாற்றத்துடன்தான் புலர்ந்திருக்கிறது. அன்றாட சிக்கல்கள் முதல் அரசியல் பிரச்சினைகள் வரை எதுவுமே எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறாதிருக்கிறது என்ற ஏமாற்றம் ஒருபுறமிருக்க, புதிய வருடத்தில்கூட அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன என்பது குறித்து, தமிழர் தரப்பில் குழப்பத்துடன் கூடிய மௌனம்தான் காணப்படுகிறது. அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கி வருகின்ற நிபந்தனையற்ற ஆதரவுக்குப் பதிலாக அரச தரப்பிலிருந்து எந்தப் பயனையும் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் கடந்த வருடம் முழுவதும் கண்டுகொண…
-
- 0 replies
- 608 views
-
-
மாவீரர் நாளும் பொது நினைவு நாளும் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான குறு வெளியொன்று தாயகத்தில் இம்முறை திறந்தது. அதன் பின்னரான கடந்த ஒரு வார காலத்தில் தமிழ்ச் சமூக, அரசியல், ஊடகப் பரப்பு குறிப்பிட்டளவான உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றது. அதில், தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூருவதற்கான பொது நாளொன்றின் அவசியம் பற்றிய உரையாடல் கவனம் பெற்றது. தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை பொதுவான நாளொன்றின் கீழ் நினைவுகூர வேண்டும் என்கிற கோரிக்கை இன்று எழுந்தது அல்ல. அது, 2000களின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டளவில் எழுப்பப்பட்டது. விவாதிக்கப…
-
- 0 replies
- 488 views
-
-
வடகொரியா: ஒரு கொலையின் கதை - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கதைகள் பலவிதம். சொன்ன கதைகள், சொல்லாத கதைகள், சொல்ல விரும்பாத கதைகள், பழைய கதைகள், புதிய கதைகள், மறைக்கப்பட்ட கதைகள், கட்டுக்கதைகள் எனக் கதைகளின் தன்மை, அதன் விடயம் சார்ந்தும் சொல்லப்படும் அல்லது சொல்லாது மறைக்கப்படும் காரணங்களுக்காக வேறுபடுகிறது. சமூகத்தில் கதைகள் ஒரு வலுவான செய்தி காவும் ஊடகமாக நீண்டகாலமாக நிலைத்துள்ளது. குறிப்பாக ஊடகங்கள் பல செய்திகளைக் கதைகளின் வடிவில் தருவதன் ஊடு, அச்செய்தி சார்ந்து ஓர் உணர்வு நிலையை உருவாக்குகின்றன. அது ஏற்படுத்தும் தாக்கம் பெரியது. இதனால் கதைகளால் …
-
- 3 replies
- 913 views
-
-
`பாலா' சொல்ல முற்பட்டது என்ன? -கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்- * இந்தியத் தொலைக்காட்சிப் பேட்டி ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்.... நாட்டில் சொல்லிக் கொள்ளத்தக்க நம்பிக்கையூட்டும் அபிவிருத்திகள் எதுவும் ஏற்பட்டிராதபோதும் அரசியலும் அதைச் சுற்றியுள்ள ஏனைய மூலக்கூறுகளும் விரைவாகவே நகரத் தொடங்கியுள்ளன. அதன் காரணமாக இந்த நாடகத்தின் காட்சிகள் வேகமாக மாறத் தொடங்கியுள்ளன. ஒரு காட்சியின் முக்கியத்துவம் மனதில் பதியுமுன் மறுகாட்சி வந்து போவதால் எல்லாம் மறைக்கப்பட்டு விடலாம். உடனடி நிலையில் மாபெரும் காட்சிபோல் தோற்றமளித்த பாரமி குலதுங்கவின் மரணம் கூட ஒரு வாரத்திற்கு மேல் நினைவிலிருக்குமா என்பது சந்தேகமே. இந்த வேகம் எங்கு போய் நிற்குமோ என்பது சுவாரஸியமானது மட்டுமல்ல இச்சமூகத…
-
- 1 reply
- 1.5k views
-
-
-பண்டோரா பேப்பேர்ஸ்- -திறக்கப்பட்ட பெட்டகமும் அவிழ்க்கப்பட்ட முடிச்சுகளும்-பா.உதயன் ————————————————————————————————————— ஆசை இல்லாத மனிதன் எவரும் இல்லை.ஆனால் அளவு கடந்த பணத்தின் மேல் இவ்வளவு ஆசை ஒரு மனிதனுக்கு ஏற்படுமா ஆசை கொண்ட மனிதர்கள் இத்தனை பில்லியன் டாலர் பணத்தை எப்படிச் சேர்த்தார்கள். வரி ஏற்பு, ஊழல், கருப்பு பணம் என்று மக்களின் பணத்தை ஏமாத்த எப்படி அந்த நாட்டின் தலைவர்களால் கூட முடிகிறது.சட்டத்தின் கண்களை எல்லாம் குருடாக்கிவிட்டு மக்களின் பணங்களை கொள்ளை அடித்து வெளி நாடுகளில் சொகுசு மாளிகைகள், சொகுசு வாகனங்கள், நட்ச்சத்திர விடுதிகள், பெரும் மாடி வீடுகள் இப்படிப் பல சொத்துக்களை சேர்த்த மோசடிக்காரர்களின் அதிசய பண்டோரா பெட்டகத்தின் கதவை (the International …
-
- 0 replies
- 456 views
-
-
.ஈழத் தமிழன் வெட்கப்பட வேண்டிய ஒரு காணொளி
-
- 1 reply
- 878 views
-
-
பி.கே.பாலச்சந்திரன் சீனாவின் ஹொங்கொங் விசேட நிருவாகப் பிராந்தியத்தில் வன்முறை ஆர்ப்பாட்டங்களை மூளவைத்த சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் சட்டமூலம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றது.ஆனால், மார்ச் மாதத்தில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் இன்னமும் தொடர்கின்றன ;அவற்றின் தீவிரம் அதிகரித்து பரவலாக வன்முறைகளும் இடம்பெறகின்றன.அதனால் கிழக்காசியாவின் பொருளாதார இயக்கமையம் என்று வர்ணிக்கப்படும் அந்த பிராந்தியம் முடங்கிப்போய்க்கிடக்கிறது. சீனாவில் இருந்து தப்பியோடிவரும் குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதற்கு வசதியான ஒரு ' புகலிடமாக ' ஹொங்கொங் மாறுவதற்கு காரணமாக இருக்கும் சட்ட ஓட்டைகளை மூடுவதை நோக்கமாகக் கொண்டதே சீன நாடுகடத்தல் சட்டமூலம்.ஆனால், அதேவேளை சீனாவின் கொள்கைகளை எதிர்க்கும் ஹொங…
-
- 2 replies
- 840 views
-
-
' நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ' - வீ.தனபாலசிங்கம் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றைய தினத்துடன் சரியாக மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அந்த கொடூரமான தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் காரணமென்றால், அதற்கு பிறகு இலங்கை அரசியலில் காணக்கூடியதாக இருக்கின்ற வெறுப்பூட்டும் போக்குகளுக்கு சிங்கள - பௌத்த அடிப்படைவாதம் காரணமாக இருக்கிறது. கடந்த மூன்று மாதகாலத்தில் அரசியல் விவாதங்களின் திசைமார்க்கத்தை தீர்மானிக்கின்ற முக்கியமான காரணிகளில் சிங்கள - பௌத்த மேலாண்மைவாதம் முதல்நிலை வகித்துவருகிறது. அதன் முன்னரங்க சேனைகளாக பிக்குமார் விளங்குகிறார்கள். அரசியலில் பிக்குமாரின் ஆதிக்கம் என்பது இலங்கையைப் பொறுத்தவரை அண்மைக்காலத்தில் வளர்…
-
- 0 replies
- 728 views
-
-
பழ.நெடுமாறன் ''பல்வேறு மாநிலக் கட்சிகள் சந்தர்ப்பவாத நோக்கத்துடன் இந்து தேசியத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. இது நமது தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதாகும். இந்தநிலையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்!'' என்கிறார் பழ.நெடுமாறன். மொழி உணர்ச்சி உச்சம் தொட்டுவரும் இந்த வேளையில், ''தமிழ் மொழி பேசுகிற மக்கள் வசிக்கிற நிலப்பகுதியைத்தான் 'தமிழகம்' என்கிறோம். ஆக, தமிழ் மக்கள் வசிக்கிற நிலப்பகுதியை ‘தமிழ்நாடு’ என்று சொல்வதில் தவறு என்ன? அடுத்து, இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளிலேயே ‘இந்தியா எனும் பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’ என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, ‘இந்திய ஒன்றியம்’ அல்லது ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதுதான் அரசிய…
-
- 3 replies
- 507 views
-