Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தோல்வி நெருக்கடி தற்காலிக ஒற்றுமை-நிலாந்தன் மகாதேவா

    • 0 replies
    • 692 views
  2. அபிவிருத்தி அரசியல் பி.மாணிக்கவாசகம் அதி­காரப் பகிர்வு, அர­சியல் தீர்வு என்ற வட்­டத்தில் இருந்து தமிழ்த்­த­ரப்பு வெளியில் வர­வேண்­டிய நிர்ப்­பந்தம் எழுந்­துள்­ளது. அர­சியல் தீர்வு காண்­பது அவ­சியம்; மிக மிக அவ­சியம். அந்த வகையில் அர­சியல் தீர்வின் மூலம் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காண முடியும். அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் அர­சியல் தீர்வே முடிவானது என்ற வட்­டத்தில் தமிழ்த் ­த­லை­மைகள் மூழ்கி இருந்­தன. இந்த அர­சியல் நம்­பிக்­கையை தமிழ்த்­ த­ரப்பு யுத்­தத்­திற்கு முன்­னரும் கொண்­டி­ருந்­தது. பின்­னரும் பற்­றி­யி­ருந்­தது. இறுக்­க­மாகப் பற்­றி­யி­ருந்­தது. இந்த நம்­பிக்கை மீதான பற்­று­தலே, இணக்க அர­சி­யலில் இருந்து விலகி, அதனை எதிர்ப்­ப­ர…

  3. தமிழர்களும் கொரோனோ வைரசும். சீன மரபு ஓவியங்களில் வரும் நிலக்காட்சிகளில் ஒரு முக்கியமான அம்சம் உண்டு. அங்கே இயற்கை பிரம்மாண்டமாகக் காட்டப்படும். அப்பேரியற்கைக்கு முன் மனிதன் மிகச் சிறியவனாக வரையப்பட்டிருப்பான். அவன் கட்டிய வீடுகள் அவனுடைய தயாரிப்புக்கள் யாவும் பேரியற்கைக்கு முன் மிகச் சிறியவைகளாகக் காணப்படும். சீன மரபு ஓவியங்கள் சீனாவின் மகத்தான தத்துவ ஞானமாகிய தாவோயிஸத்தின் வழி வந்தவை என்று நம்பப்படுகிறது. அங்கே வெளியை பிரம்மாண்டமாக காட்டுவதற்காக மனிதன் மிகச் சிறியவனாக காட்டப்படுகிறான். இயற்கைக்கு முன் மனிதன் அற்பமானவன் என்ற உணர்வை அந்த ஓவியங்கள் தரும். சீனாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனோ வைரஸ{ம் அப்படி ஒரு உணர்வையே தருகிறது. இப்பொழுது சீனா உலகப் பேர…

  4. 16/11/1978 இல் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் ஒரு நேர்காணல். தேம்ஸ் டெலிவிஷன்ஸ் ஜொனாதன் டிம்பிள்பி, இந்திய அரசியல் மற்றும் அவர் பிரதமராக இருந்தபோது பத்திரிகைகள் மீதான ஒடுக்குமுறை குறித்து திருமதி காந்தியிடம் சில சங்கடமான கேள்விகளைக் கேட்டார். திருமதி காந்தி எவ்வளவு லாவகமாக அவரின் பேட்டி காண்பவரின் குறுக்கு விசாரணை போன்ற கேள்விகளை கையாள்கிறார் பாருங்கள். 👌 Indira Gandhi Interview | TV Eye | 1978 https://youtu.be/q8aETK5pQR4

    • 3 replies
    • 692 views
  5. முடிவுற்ற ஆயுதப் போரும் முடிவுறாத உளவியல் போரும் காரை துர்க்கா / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 12:46 Comments - 0 கடந்த சனிக்கிழமை (மே 18), வலிகள் சுமந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு, தமிழர் தாயகத்தில் இதயம் கனத்த கவலையுடனும் எழுச்சி பொங்கிய உணர்வுடனும் நடைபெற்றது. ‘தமிழர்கள் மத்தியில் பயத்தைத் தக்க வைத்து, உளவியல் போர் செய்கின்றது ஸ்ரீ லங்கா அரசாங்கம்’ என, அங்கு வெளியிடப்பட்ட நினைவேந்தல் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், ஆயுதப் போர் அற்றுப் போன நிலையில், உளவியல் போர் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதை, அனைத்துத் தமிழ் மக்களும், அன்றாடம் அனுபவித்தும் உணர்ந்தும் வருகின்றனர். அதன் நீட்சி…

  6. புலம்பெயர்ந்த தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ்கிறார்கள் - அரசறிவியல் பேராசிரியர் [ வெள்ளிக்கிழமை, 09 மே 2014, 07:55 GMT ] [ நித்தியபாரதி ] இந்தியாவைப் போலல்லாது, அபிவிருத்தியடைந்த நாடுகளில் புகலிடக் கோரிக்கை என்பது குடியுரிமை பெறுவதற்கான முதலாவது படிமுறையாகக் காணப்படுகிறது. அபிவிருத்தியடைந்த நாடுகளின் குடிப்பரம்பலில் சிறிலங்காத் தமிழர்கள் நிரந்தரமானவர்களாகக் காணப்படுகின்றனர். இவ்வாறு The New Indian Express ஆங்கில ஊடகத்தில் முன்னாள் அரசறிவியல் பேராசிரியர் V Suryanarayanan* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வ…

  7. மன்னார் மாவட்ட காற்றாலைகளும் கரிசனைகளும் By DIGITAL DESK 5 03 SEP, 2022 | 08:30 PM -ஆர்.ராம்- மன்னார் மாவட்டத்தில் மன்னார்த்தீவு, மன்னார் பெருநிலப்பரப்பு ஆகிய இரு பகுதிகளில் மூன்று கட்டங்களாக காற்றாலைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முதலாம் கட்டத்தில், மன்னார்த் தீவின் தென்பகுதியான தாழ்வுப்பாடிலிருந்து துள்ளுகுடியிருப்பு வரையில் இலங்கை மின்சார சபையினால் 30காற்றாலைகள் ஏலவே அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்ட முதலாம் கட்டத்தில் 50மெகாவோல்ட் மின்சாரத்தைப் பெறுவதை இலக்காகக் கொண்டு 21காற்றாலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாகியுள்ளன. அதில், 7காற்றாலைகள் தாழ்வுப்பா…

  8. கடன்பொறிகள் நிறைந்த சீனாவின் பட்டுப்பாதை சீனாவின் பட்டுப்பாதைகள் மற்றும் கரையோரப் பட்டுப் பாதைகள் போன்றன இதன் வர்த்தகப் பாதைகள் அமைந்துள்ள மத்திய ஆசியா மற்றும் இந்திய மாக்கடலிற்குக் குறுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. பட்டு என்பது சீனாவின் வர்த்தகச் செயற்பாட்டில் மிகச் சிறிய பங்கையே கொண்டுள்ள போதிலும் இது சீனாவின் அடிப்படை வர்த்தகச் செயற்பாடாகக் காணப்படுவதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மிங் சக்கரவர்த்தி ஜொங்கில் நியமித்த மொங்கோலிய முஸ்லீம் பிரதானியான அட்மிரல் செங்க் ஹீயால் தலைமை தாங்கப்பட்ட சீனக் கடற்படைக் கப்பலே 1404 மற்றும் 1433 காலப்பகுதியில் முதன் முதலாக இந்திய மாக்கடலின் ஊடாக பட்டுப் பாதையை உருவாக்கியது. குறிப்பாக இந்தோனேசியா, மலேசி…

  9. வெலிவேரியா! சிங்களவர்கள் மேற்கொண்ட தமிழின அழிப்பை வெளிப்படுத்தியதில் முன்னணிக் கிராமமாக மாறியிருக்கின்றது. சிறீலங்காவின் மிக முக்கியமான பேசு பொருளாகவும் இந்தக் கிராமம் மாறியிருக்கின்றது. இந்தக் கிராமத்தை உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கு சிங்களக் கட்சிகள் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றன. ஆட்சிக் கட்டிலில் அமரத் துடித்து நீண்ட நாட்களாக எந்தவொரு இரையும் கிடைக்காத எதிராக்கட்சிகளுக்கு வெலிவேரியா ஒரு முக்கியமான இரையாகக் கிடைத்திருக்கின்றது. இனிச் சிறிது காலத்திற்கு இதனையே வைத்து அரசியல் நடத்த முடியும். எதிக்கட்சிகள் என்பவை திறமையாக இருக்கின்ற ஒரு நாட்டில்தான் நேர்சீரான ஆட்சி நடைபெறும். அதுவும் ஜனநாயக நாடொன்றில் எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியை நகர்த்திச் செல்கின்…

    • 2 replies
    • 692 views
  10. ஆறுமாதத்தில் நடந்த அதிரடி மாற்றம்! இடையில் நடந்தது என்ன? தமிழ் தேசிய கூட்டமைப்பின் வினோத அணுகுமுறைகள் ஏற்படுத்தும் பாரதூரமான அரசியல் விளைவுகளை மக்களே முகம் கொடுக்க நேர்கிறது.

  11. புலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா? மனோ கேள்வி 78 Views தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்டு வந்த நில ஆக்கிரமிப்புப் போர், 2009 ஆண்டு பெரும் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம், தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம் என அறிவித்த இலங்கை அரசாங்கம், அதன் பின் இன்று வரையிலும் அதே பயங்கரவாத பூச்சாண்டி காட்டி தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதுடன் இன சுத்திகரிப்பு வேலைகளிலும் சத்தங்களின்றி செயற்பட்டு வருகின்றது. அதே நேரம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக குறுகிய கால சலுகைகளை வழங்கி, தான் ஒரு நல்லரசா…

  12. விடுதலைப் புலிகளை அழிக்க சர்வதேசத்தால் உருவாக்கப்பட்ட விசேட படை! என்ன நடந்தது? ஸ்ரீ லங்காவின் விசேட அதிரடிப் படை (STF) பிரிவானது தற்பொழுது பிரமுகர்களின் பாதுகாப்புக்கென ஒதுக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் நாட்டில் தோன்றுகின்ற எந்தவொரு கலவரங்கள் கிளர்ச்சிகள் என்பனவற்றை முறியடிக்கவேண்டிய நிலையில் இருந்து செயற்படுகின்றது. பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்குவதால் விசேட அதிரடிப்படை (STF) ஒன்றும் பொலிஸார் கிடையாது. இராணுவத் தளபாடங்களோடு இயங்குவதால் விசேட அதிரடிப்படை ஒன்றும் இராணுவமும் கிடையாது. ஆனால் இராணுவத்தின் சில முக்கியமான அதிகாரங்களும் பொலிஸாரின் முக்கியமான அதிகாரங்களும் ஒருங்கே பெற்ற ஒரு துணை இராணுவக் குழு என்றே சொல்லமுடியும். அவற்றை வைத்து சந்தர்ப்பத…

  13. எழுக தமிழின் பின்னரான சூழலில், விக்கினேஸ்வரன் செய்ய வேண்டியது என்ன? யதீந்திரா பல்வேறு எதிர் பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் எழுக தமிழ் – 2019 நடந்தேறிவிட்டது. எழுக தமிழ் 2016இன் போது ஒன்றுதிரண்ட மக்கள் இம்முறை ஒன்றுதிரளவில்லை என்னும் அவதானம் பலராலும் முன்வைக்கப்படுகிறது. அது உண்மைதான். ஆனால் இதற்கு பலவாறான காரணங்கள் உண்டு. ஒன்று, தமிழ் மக்கள் பேரவை ஒப்பீட்டடிப்படையில் முன்னரை விடவும் மிகவும் பலவீனமாக இருந்த ஒரு சூழலில்தான் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக கடந்த எழுக தமிழின் போது, மக்களை அணிதிரட்டுவதில் பங்களித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகியவை இம்முறை எழுக தமிழில் பங்குகொண்டிருக்கவில…

  14. மியன்மாரின் மனித உரிமை விவகாரங்களில் ஜப்பானின் பங்கு Editorial / 2019 மார்ச் 27 புதன்கிழமை, பி.ப. 01:01 Comments - 0 ஜனகன் முத்துக்குமார் மியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான காலப்பகுதியில், நாட்டில் வர்த்தம், முதலீடு ஆகியவற்றின் மீது சுமத்தப்பட்டிருந்த மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட்டன. இது முரண்பாடுகள் நிறைந்த நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தின் முற்போக்கான நிலை ஏற்படக் காரணமாகியது. குறிப்பாக, முக்கிய உட்கட்டமைப்பு துறைகளில் ஆற்றல் துறைகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் பெரும் செல்வாக்குக்கு இந்நிலை வழிவகுத்தது. சீனா, ஜப்பான், ஆசியான் போன்ற பொருளாதார நிறுவனங்கள் சர்வதேச சமூகத்தால் எழுப்பப்பட்ட மனிதாபிமான அக்கறைகளைத…

  15. தமிழ்மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிரான யுத்தமும், கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையாரும் – நிலாந்தன்… June 29, 2019 கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் மண்டபத்தில் ஒரு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தை திருகோணமலையைச் சேர்ந்த தென் கயிலை ஆதீனமும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சைவ மகா சபையும் யாழ்ப்பாணத்தில் உள்ள சமூக விஞ்ஞான ஆய்வு மையம் என்ற அமைப்பும் ஒழுங்குபடுத்தியிருந்தன. திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் முன்பு காணப்பட்ட ஒரு பிள்ளையார் கோவில் இருந்த இடத்தை தொல்லியற் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. அந்நிலத்துண்டில் முன்பு இருந்தது பிள்ளையார் கோவில் அல்ல அது ஒரு தாதுகோபமே என்று தொல்லியல் திணைக்களம் கூறுகிறது. மேற்…

  16. மண்ணெண்ணெயும் தண்ணீரும் எப்படி ஒன்று சேரமுடியாதோ அதேபோல ஈழத்தமிழர்களின் நல்வாழ்வும் கருணாநிதியின் அரசியலும் ஒருபோதும் ஒன்று சேரமுடியாதவை.‏ PostDateIcon புதன்கிழமை, 20 மார்ச் 2013 05:52 ஈழத்தமிழர்களை இனப்படுகொலைக்கு இட்டுச்சென்ற ராஜபக்‌ஷவின் அதி உயர் நட்பு சக்தியான காங்கிரஸ் கட்சியுடன், ஒரு தசாப்தகாலமாக கூட்டமைப்பிலிருந்த கருணாநிதியின்,திமுக, ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக அந்தக் கூட்டணியிலிருந்து விலகியிருப்பதாக, ஈழ தமிழினத்துக்கு ஆற்றுண்ணா துரோகம் செய்த அக்கட்சியின் மானங்கெட்ட தலைவர் கருணாநிதி, வெட்கம் கெட்டு இன்று அவசரமாக புது அறிவித்தல் ஒன்றை விடுத்திருக்கிறார். இந்த அறிவிப்பு தமிழ் இனத்திற்கு மகிழ்ச்சியையோ, மறந்தேனும் நற்பலனையோ ஒருபோதும் ஈட்டிவிடப்போவதில்லை. மாறாக…

  17. சிறீலங்காவில் தமிழர்களை கொலை செய்த சிங்களப் படைகள் இதுவரை தண்டனை பெற்றதாக சரித்திரம் இல்லை. கடந்த 30 வருடகால போரில் மூன்று இலட்சத்தில் இருந்து ஐந்து இலட்சம் வரையான தமிழ் மக்கள் அந்த நாட்டில் கொல்லப்பட்டுள்ளார்கள். இதுவரை யாரும் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை. குறைந்த பட்சம் யூலைக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொலை செய்த சிங்களக் காடையர்களில் ஒருவர் கூட தண்டிக்க வழி செய்யாத ஏமாற்று அறிக்கைதான் அன்றைய சன்சோனிக் கமிஷன் அறிக்கை. அதுபோல இன்னொரு சன்சோனி கமிஷன் அறிக்கையாக வெளியாகியிருக்கிறது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை. இதுபற்றி தமிழ் மக்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சிங்கள அரசு சர்வதேசத்தை ஏமாற்ற எழுதிய அறிக்கைக்கும் தமிழ் மக்களின் சுதந்திர வாழ்விற்…

  18. சாத்வீகப் போராட்டம் பயங்கரவாதம் ஆகுமா? ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும். பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும் என்று சொல்வார்கள். தன்மைகளுக்கும், நிலைமைகளுக்கும் ஏற்ற வகையில் பிரச்சினைகளைக் கையாள்வதிலும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் இந்த அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டியது அவசியம். அரசியலைப் பொறுத்தமட்டில் இந்த உத்தி மிகமிக முக்கியமானதாகும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் பல தசாப்தங்களாகத் தொடர்கின்றது. போராட்டங்களில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டிருக்கின்றன. பேச்சுவார்த்தைகள் மூலமாக அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகள் தோற்றுப் போயிருக்கின்றன. முதலில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. பலன் கிடைக்கவில்லை. சாத்வீகப் போராட…

  19. இந்தியா தனக்குத்தானே வெட்டிய குழி! மத்­தல விமான நிலை­யத்தின் மீது சில உரி­மைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இலங்கை விமா­னப்­ப­டையின் தரப்பில் இருந்து விடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அவ­சர தேவை­களின் போதும், தேசிய பாது­காப்பு பயன்­பா­டு­க­ளுக்­கா­கவும், மத்­தல விமான நிலை­யத்தின் ஓடு­பா­தையைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தமக்கு அனு­மதி அளிக்­கப்­பட வேண்டும் என்­பது விமா­னப்­படை விடுத்­துள்ள முத­லா­வது கோரிக்கை. தேவைப்­பட்டால் இரா­ணுவத் தேவை­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கென, விமான நிலை­யத்தில், ஒரு பகுதி நிலத்தை தமக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்­பது விமா­னப்­படை முன்­வைத்­துள்ள இரண்­டா­வது கோரிக்கை. தேசிய பாது­காப்பு நலன்­களைக்…

  20. சர்வாதிகாரிகளைத் தெரிவுசெய்யும் ஜனநாயகம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 நவம்பர் 01 வியாழக்கிழமை, மு.ப. 01:10Comments - 0 ஜனநாயகம் பற்றி, இப்போது அதிகம் பேசப்படுகிறது. ஜனநாயகத்தின் அவசியம் பற்றியும் அதன் நடைமுறைகள் ஒழுங்காகச் செயற்படுத்தப்படுவதன் முக்கியத்துவம் பற்றியும் நிறையவே பேசப்படுகிறது. இலங்கையின் அண்மைய நிகழ்வுகள், ஜனநாயகம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. ஜனநாயக வழிமுறைகளின் மூலம், ஜனநாயக மறுப்பாளர்களை, மக்கள் தெரிவுசெய்வது உலகெங்கும் நடைபெறுகிறது. இதை இன்னொரு வகையில், சர்வாதிகாரிகளை ஜனநாயகம் தெரிவு செய்கிறது; ஆதரிக்கிறது; ஊட்டி வளர்க்கிறது. எல்லாம், ஜனநாயகத்தின் பெயரிலேயே நடந்தேறுகின்றன. நீண்டகாலமாக சர்வாதிகாரத்தின் கொடுமைகளை …

  21. தொடங்கும் தேர்தல் நாடகங்கள் புதிய ஆண்டு, புதிய நம்பிக்கைகள் என்று நாம் பேசத் தொடங்கினாலும், யதார்த்தம் நம் முகங்களில் ஆழ அறையும் போது, அச்சமும் கோபமுமே மிஞ்சுகின்றன. இப்போது, எம் சமூகத்தின் பிரதான பேசுபொருள்களாக இருப்பவை, எவை என்பதை நோக்கின், மூன்று விடயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவியலும். முதலாவது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்கள்; இரண்டாவது ஜெனீவாவின் பேராலும் அமெரிக்காவின் பேராலும் கட்டமைக்கப்படுகின்ற நம்பிக்கைகள்; மூன்றாவது, தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டும் பாடுவது தொடர்பானது. இவை மூன்றும், ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. இன்று இலங்கையில், சிங்கள பௌத்த தேசியவாதம் மேலோங்கியுள்ளது. ஆட்சி அதிகாரத்தின் அனைத்துத…

  22. யானைச் சவாரி உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றிய செய்திகளும் நாளாந்தம் வந்து கொண்டேயிருக்கின்றன. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்வதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாகத் தமது பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காகச் சிலரும், தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வேறு சிலரும், கூட்டணியமைத்துத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். களத்தில் எதிராளி பலமாக இருக்கும் போதும், மற்றைய தரப்புகளுக்குக் கூட்டணியமைக்க வேண்டிய தேவை எழுகிறது. சிலருக்குக் கூட்டணி என்பது இராஜதந்திரமாகும். கூட்டாளிக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து, மிக இலகுவாக வெற்றிக் கனிகள…

  23. இழுபறிகளை முடிவுக்கு கொண்டுவருமா தீர்ப்பு? மொஹமட் பாதுஷா / 2018 டிசெம்பர் 13 வியாழக்கிழமை, மு.ப. 05:17 Comments - 0 என்ன வைத்தியம் பார்த்தும், நாட்டைப் பீடித்துள்ள அதிகாரப் பைத்தியம் தீர்ந்தபாடில்லை. பிரதான கட்சிகள் ‘பிளான் ஏ,’ ‘பீ’, ‘சி’ என, ஒவ்வொரு திட்டமாக அடுத்தடுத்து நகர்த்திக் கொண்டிருப்பதால் சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதையே காண முடிகின்றது. ‘இதோ, இன்று முடிந்து விடும்’, ‘இதோ, நாளை வருகின்ற நீதிமன்றத் தீர்ப்புடன், எல்லாம் சரியாகி விடும்’, ‘இந்த வெள்ளிக்கிழமை ஒரு முடிவு கிடைத்துவிடும்’ என்று நினைத்துக் கொண்டே, ஒன்றரை மாதங்கள் சென்றுவிட்டன. இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக நவம்பர் எட்டாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட …

  24. 'அரசியல் இல்லாமல் எதுவுமில்லை. அதிகாரம் இல்லாமல் எதுவும் இல்லை' என்ற நிலைமை எம் அனைவரையும் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கும் இன்றைய சூழ்நிலையில், அந்த அதிகாரமும் அரசியலும் அதனோடு இணைந்து தொழிற்படும் அறிவு அல்லது மார்க்கமும் யாருக்காக? எந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறது என்பதை வைத்துத்தான் நாம் அதிகாரத்தில் அல்லது உயர் பதவிகளில் இருப்பவர்களைப் பற்றி புரிந்துகொள்ள முடிகிறது. ரிசானா என்ற சிறுமி, கொல்லப்படுவதற்காக விமானம் ஏறி சவூதி அரேபியாவுக்குச் செல்லவில்லை. தன்னுடைய வறுமையைப் போக்கத்தான் அவள் சென்றாள். சென்ற இடத்தில் அவளை அறியாமல் ஏற்பட்ட ஒரு சம்பவம்... அதற்கு கிடைத்த தண்டனை மரணம். 'சட்டமியற்றும் அதிகாரம் என்பது இஸ்லாமிய இறையில் நம்பிக்கையின் படி அல்லா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.