அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
தமிழ்க் கட்சிகள் பாடும் ‘பழைய பல்லவி’ புருஜோத்தமன் தங்கமயில் / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 07:26 ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புகள் அடங்குவதற்குள், பொதுத் தேர்தலுக்கான களம் விரிந்திருக்கின்றது. ஏப்ரல் மாத இறுதியில், பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. இவ்வாறான சூழலில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பும், தேர்தல்களை இலக்கு வைத்து, வழக்கமாகப் பாடும் பழைய பல்லவிகளைப் பாட ஆரம்பித்திருக்கின்றது. ஒரு பல்லவி, ‘ஒற்றுமை, ஒரே தெரிவு, சர்வதேசத்துக்கான செய்தி’ என்று ஆரம்பிக்கும். இன்னொரு பல்லவி, ‘மாற்றுத்தலைமை, பூகோள அரசியல்’ என்றவாறு ஆரம்பிக்கும். இந்தப் பல்லவிகள், தமிழ் மக்களுக்குக் கடந்த பத்து ஆண்டுகளாகப் பழக்கமானவை; கிட்டத்தட்ட சலித்துப்போன பல்லவ…
-
- 1 reply
- 723 views
-
-
அதிகாரப் பரவலாக்கலா, அபிவிருத்தியா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 07:19 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நவம்பர் 18ஆம் திகதி, இலங்கையின் ஜனாதிபதியாகச் சத்தியப் பிரமாணம் செய்து, 24 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதி ஒருவர், அழைப்பின்றியும் ஒரு நாளுக்கு முன்னராவது அறிவிக்காமலும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அதேபோல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தமது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக, நவம்பர் 29 ஆம் திகதி, இந்தியாவுக்கு விஜயம் செய்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, நாடு திரும்பினார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம…
-
- 0 replies
- 816 views
-
-
ஜனாதிபதியும் மணல் மாபியாக்களும், - வ.ஐ.ச.ஜெயபாலன் . இ.லங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு, தயவுசெய்து நாட்டை தங்கத்தட்டில் வைத்து மணல் மாபியாக்களிடம் கையளிக்கும் தவறான முயற்ச்சியை உடனடியாகக் கைவிடுங்கள். அதற்க்குள் தமிழ் மணல் மாபியாக்கள் சுண்டிக்குழம் இறவை வெட்டி யாழ்ப்பாணத்தை இலங்கை பெருநிலத்தீல் இருந்து துண்டிக்கும் முயற்ச்சியில் ஈடுபடுகின்றனர். தயவுசெய்து மண் மணல் ஏற்ற்றிச் செல்வது தொடர்பான உங்கள் ஆபத்தான சட்டத்தை ரத்துச் செய்யுங்கள். - வ.ஐ.ச.ஜெயபாலன் . உங்கள் அரசின் புதிய மண் மணல் எற்றிசெல்லும் சட்டம் இலங்கையின் கரையோர கடல் ஏரிகளையும் ஆற்றுப்படுகைகளையும் நிலத்தடி நீராதாரங்களையும் அழித்துவிடும். மண்ணை உவரக்கிவிடும். இது இலங்கை அடங்கி…
-
- 2 replies
- 641 views
-
-
வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 12ம் திகதி) நடைபெறவிருக்கும் பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதன்மைக் கட்சிகளில் ஒன்றான கொன்சவேர்ட்டிவ் (பழமைவாதக்) கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கைத் தீவில் இரண்டு நாடுகள் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக சில தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இன்னமும் தெளிவாகச் சொல்வதானால் தமிழீழக் கோரிக்கையை பொறிஸ் ஜோன்சன் தலைமையிலான இக்கட்சி ஆதரிக்கிறது என்பதே இத்தகவல். இது பற்றி குழப்பமான தகவல்கள் வெளியாகிவருவதனால் அதனைத் தெளிவுபடுத்துவது அவசியமாகிறது. கடந்த மாத இறுதியில் கொன்சவேர்ட்டிவ் கட்சியினால் வெளியிடப்பட்ட அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் (https://assets-global.website-files.com/5da42e2cae7ebd3f8bde353c/5dda9249…
-
- 1 reply
- 660 views
-
-
தமிழர் மத்தியில் உணரப்பட்டுவரும் பலமான சிவில் அமைப்பின் தேவை -க. அகரன் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைப்பாடுகளை நாடி பிடித்து உணர முடியாத வகையில் இருப்பதான தோற்றப்பாட்டில், பல தமிழ் அரசியல் தலைமைகள் இருப்பதை உணர முடிகின்றது. தாம் எதிர்பார்த்த அரசியல் தலைமைத்துவத்தின் தோல்வி, அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கப்போகும் கட்சி என்பவற்றை ஆராய்கின்ற மன நிலையையும் கடந்து, தமது இருப்பு தொடர்பான தேடலுக்கே, தமிழ் அரசியல் தலைமைகள் தற்போது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. எப்போதுமில்லாத அளவுக்கான மாறுபட்ட அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளதாக உணரத் தொடங்கியுள்ள தமிழ் அரசியல் தலைமைகள், புதிய கூட்டுகளை உருவாக்கவும் அவற்றினூடாக வரப்போகும் தேர்தல்களைச் ச…
-
- 0 replies
- 381 views
-
-
இது விளையாட்டு அல்ல; விபரீதமானது காரை துர்க்கா / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:49 அன்றைய காலங்களில், அரசியல் என்பது முற்றிலும் பொதுச் சேவையாகக் காணப்பட்டது. மக்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரித்துடையோர், முழுமையா(ன)க மக்கள் பணியாக, அரசியலை ஆரோக்கியமாக முன்னெடுத்து வந்தார்கள். கல்வி அறிவு, சமூகம் பற்றிய பார்வை, எதிர்காலம் பற்றிய தூரநோக்கு, எனது மக்கள் என்ற பற்று எனப் பல்வேறு விடயங்களைத் தன்னகத்தே கொண்டவர்களாகவும் பல பரிமானங்களை உடையவர்களாகவும், மக்கள் தொண்டுகளை அரசியல்வாதிகள் ஆற்றி வந்தார்கள். தமது மக்களுக்கு விசுவாசமாகவும் நம்பிக்கையாகவும், வாழ்ந்தும் காட்டினார்கள். ஆனால் இன்று, அரசியல் என்பது, தொழில் அல்லது வணிகமென மாறிவிட்டது. அல்லது மாற்றி வி…
-
- 0 replies
- 658 views
-
-
இந்தியாவும் கோட்டாவும் தமிழர்களும் என்.கே. அஷோக்பரன் / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:23 இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற மறுதினமே, இந்திய வௌியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்ஷங்கர் இலங்கை விரைந்து, ஜனாதிபதி கோட்டாபயவை நேரில் சந்தித்து வாழ்த்தியதுடன், இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு, அழைப்பையும் விடுத்திருந்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்று, சரியாக 11 நாள்களில், ஜனாதிபதி கோட்டாபய, தன்னுடைய முதலாவது உத்தியோகபூர்வ சர்வதேச விஜயமாக, புதுடெல்லி சென்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். இந்திய விஜயத்தின் விளைவாக, இந்தியா, இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க…
-
- 0 replies
- 406 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகமானது, கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தினை விடவும் சீனாவின் பிராந்திய பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது. அத்துடன் இத்துறைமுகமானது இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனாவின் கனவுத்திட்டத்தின் 'கரு' ஆகும். ஆகவே அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா தனது ஆதிக்கத்தை விட்டுக் கொடுக்கும் என எதிர்பார்ப்பது ஏமாற்றத்திலேயே முடியும் என்று இந்திய இராணுவத்தின் ஓய்வு நிலை மூத்த அதிகாரியான கேர்ணல் ஆர்.ஹரிகரன் வீரகேசரிக்கு தொலைபேசி மூலம் வழங்கிய விசேட செவ்வியின்போது இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, கேள்வி:- இலங்கை ஜனாதிபதி கோத்தாபயவுக்கும், …
-
- 0 replies
- 357 views
-
-
கொழும்பில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம், அரசியல் மற்றும் இராஜதந்திர மட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உயர்மட்டத்துக்குக் கொண்டு சென்றிருந்தது சுவிட்ஸர்லாந்து. அதேபோலவே, இந்த விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாமல் – குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய் என்று நிரூபிப்பதில் இலங்கை அரசாங்கமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின், 2005–-2014 ஆட்சிக்காலகட்டத்தில் இடம்பெற்ற மிக முக்கியமான பல குற்றச்செயல்கள் தொடர்பான புலன் விசாரணைகளை மேற்கொண்டு வந்த…
-
- 0 replies
- 680 views
-
-
ரொஹிங்கிய முஸ்லீம்கள் மீது தனது ராணுவத்துடன் சேர்ந்து திட்டமிட்ட முறையில் இனக்கொலை ஒன்றினை நடத்தியதற்காக பர்மாவின் தலைவரும் முன்னாள் மனிதவுரிமைக்கான நொபெல் பரிசினை வென்றவருமான ஆங் சான் சூசி மீது ஐக்கியநாடுகள் சபையினூடாக விசாரணைதொன்று நடந்துவருகிறது. முஸ்லீம் நாடுகளின் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஒன்றினையடுத்து சின்னஞ்சிறிய ஆப்பிரிக்க நாடான கம்பியா இந்த குற்றச்சாட்டினை எழுப்பியுள்ளதுடன், அமெரிக்க வழக்கறிஞர்களைக்கொண்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் ரொஹிங்கிய அகதிகள் தங்கியிருக்கும் பகுதியொன்றிற்குச் சென்றிருந்த கம்பியாவின் வெளிவிவகார அமைச்சர் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் மூலமும், கண்ணால்க் கண்ட சாட்ச…
-
- 8 replies
- 1.9k views
-
-
முஸ்லிம் சமூகத்தின் அடுத்த நகர்வு? மொஹமட் பாதுஷா / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 04:48 - 0 - 42 அதன்பின்னர், புதிய அரசாங்கம், மாகாண சபைத் தேர்தலுக்குச் செல்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் தென்படுகின்றன. கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்று, நாட்டின் ஜனாதிபதியாகியுள்ள நிலையில், உடனடியாக நாட்டின் எல்லா விதமான ஆளுகைக் கட்டமைப்பிலும் ‘மொட்டு’வின் ஆட்சியை உருவாக்குவதே, நீண்டகாலம் ஆட்சியில் கோலோச்சுவதற்கு வழிவகுக்கும். இதன் அடிப்படையில், முன்னைய அரசாங்கத்தைப் போலன்றி, துணிந்து தேர்தல்களை நடத்த, புதிய அரசாங்கம் முனைப்புக் காட்டுகின்றது. அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ர…
-
- 0 replies
- 1k views
-
-
இராணுவ ஆட்சியை நோக்கி நகருகிறதா நாடு? கே. சஞ்சயன் / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 04:55 - 0 - 45 நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கம், அரசாங்கத்துக்குக் கிடையாது என்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூற வேண்டிய நிலை, ஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற இரண்டு வாரங்களுக்குள்ளாகவே ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர், இரண்டு விதமான தலையீடுகள் அதிகரித்திருக்கின்றன. முதலாவது, அரசியலில் ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஆதிக்கம்; ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகிய பதவிகளில் ராஜபக்ஷவினரே இருக்கிறார்கள். இரண்டாவது, நாட்டின் நி…
-
- 0 replies
- 689 views
-
-
அபிவிருத்தி அரசியல் பி.மாணிக்கவாசகம் அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வு என்ற வட்டத்தில் இருந்து தமிழ்த்தரப்பு வெளியில் வரவேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது. அரசியல் தீர்வு காண்பது அவசியம்; மிக மிக அவசியம். அந்த வகையில் அரசியல் தீர்வின் மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அரசியல் தீர்வே முடிவானது என்ற வட்டத்தில் தமிழ்த் தலைமைகள் மூழ்கி இருந்தன. இந்த அரசியல் நம்பிக்கையை தமிழ்த் தரப்பு யுத்தத்திற்கு முன்னரும் கொண்டிருந்தது. பின்னரும் பற்றியிருந்தது. இறுக்கமாகப் பற்றியிருந்தது. இந்த நம்பிக்கை மீதான பற்றுதலே, இணக்க அரசியலில் இருந்து விலகி, அதனை எதிர்ப்பர…
-
- 0 replies
- 693 views
-
-
தமிழ் அரசியல் கட்சிகளை பொதுவான தீர்வு நிலைப்பாடு ஒன்றுக்காக ஒன்றிணைக்கவேண்டிய காலம் இது லோ. விஜயநாதன் கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த முடிவை பிழையான முடிவாக காட்டுவதற்கு சிலர் முனைகின்றனர். இந்த தேர்தல் முடிவை சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பது போலவும் சிலர் காட்ட முற்பட்டுள்ளனர். ஆனால் இவை தவறான அர்த்தப்படுத்தல்கள். சிங்கள பெளத்த தேசியவாதத்தின் எழுச்சி நிலையை மையப்படுத்தி தேர்தல் முடிவுகளை ஆராயாமல் தமிழ் தேசிய நிலையிலிருந்து தேர்தல் முடிவுகளை நோக்கும்போது தமிழ் மக்கள் மிகவும் சரியான முடிவையே எடுத்திருந்தனர் என்பதை உணர முடியும். நடந்து முடிந்த தேர்தல் சிங்கள தேசத்தின் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஒரு …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு பரந்த ஜக்கிய முன்னணிக்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா? - யதீந்திரா ஒரு பரந்த ஜக்கிய முன்னணி தேவையான ஒன்றா என்று கேட்டால் – அதற்கான பதில் நிச்சயம் தேவை என்பதுதான். ஆனால் அதற்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா என்று கேட்டால், அதற்கான பதில் தெளிவற்றதாகவே இருக்கும். பெரும்பாலும் நம்பிக்கையீனமே வெளிப்படும். இதுதான் இன்றைய தமிழ் அரசியல் நிலைமை. ஏன் இவ்வாறானதொரு நிலைமை என்று கேட்டால் அதற்கு பதில் பலரிடடும் உண்டு ஆனால் அதனை எப்படி மாற்றியமைக்கலாம் என்று கேட்டால் எவரிடமும் பதிலில்லை. 2009இற்கு பின்னரான கடந்த ஒரு தசாப்தகால தமிழ் அரசியல் அணுகுமுறை முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டது. 2009இற்கு பின்னரான தமிழ் அரசியல் அணுகுமுறையை இரண்டு காலகட்டங்களாக நோக்கலாம். ஓன்று, 2010 ஜனாதி…
-
- 0 replies
- 519 views
-
-
நவம்பர் 16 ஆம் திகதிக்குப் பின்னரான சூழலில் சர்வதேச மத்தியஸ்த்தத்துடனான பேச்சுக்குச் சுமந்திரனின் ஜெனீவா அணுகுமுறை வழி வகுக்குமா? மாற்றுச் செயல்த் திட்டங்களைக் கையில் எடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளுக்குரியது கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனைச் சந்தித்து உரையாடியுள்ளார். கோட்டாபய ராஜபக்ச இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது அமெரிக்கா ஆதரவு வழங்கியிருந்தது என்ற கருத்துக்கள் சகல மட்டங்களிலும் நிலவியிருந்தது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் உள்ளிட்ட தூதர…
-
- 0 replies
- 554 views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
விக்கினேஸ்வரன் தலைமையில் ஒருமாற்றுத் தலைமையை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறான கலந்துரையாடல்கள் கடந்த ஒரு வருடமாகவே இடம்பெற்றுவருகின்றது ஆனாலும், இன்னும் ஒரு உறுதியான முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையில் விக்கினேஸ்வரனை மீளவும் கூட்டமைப்புடன் இணைப்பதற்கான முயற்சிகளிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கோட்டபாய ராஜபக்ச வெற்றிபெற்றிருக்கின்ற சூழலிலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேக்களின் கட்சியான சிறிலங்காபொதுஜனபெரமுரன அதி கூடிய ஆசனங்களைபெற்று, ஆட்சியமைக்கக்கூடியநிலைமை காணப்படுவதாலும், யாழ்ப்பாணத்திலுள்ள சில சிவில் சமூக பிரமுகர்கள், இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதில் ஈடுபடும் சிலர் ஏற்கனவே தமிழ் மக்கள்…
-
- 1 reply
- 418 views
-
-
தமிழ் மக்களின் விடுதலையும் ஏமாற்று தலைமைகளும் ஒருவாறு ஜனாதிபதித் தேர்தல் முடிந்துவிட்டது. அதன் சலசலப்பு அடங்கும் முன், அடுத்த தேர்தல் எம்முன் வந்து நிற்கிறது. வழமைபோல, இம்முறையும் தமிழர் உரிமை, தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணயம் என்று ‘பட்டங்கட்டி’ ஆட, வழமைபோலவே எமது அரசியல் தலைமைகள் தயாராகின்றன. சொன்ன பொய்க் கதைகளைத் திருப்பிச் சொல்ல இயலாது. எனவே, புதிய பொய்களைச் சொல்ல வேண்டும்; அல்லது, பழைய பொய்களுக்குத் தூசி தட்டி, வண்ணம் பூசி, புதுவடிவில் கொடுக்க வேண்டும். நம்முன் உள்ள கேள்வி யாதெனில், இன்னும் ஒரு முறை ஏமாறுவதற்கு, நாங்கள் தயாரா என்பதுதான். இன்னுமொருமுறை மட்டுமன்றி, என்றென்றைக்கும் ஏமாற்றுவதற்கு ‘அவர்கள்’ தயாராகவே இருக்…
-
- 0 replies
- 500 views
-
-
நேட்டோவின் 70 ஆண்டுகள்: குருதி தோய்ந்த வரலாறு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 டிசெம்பர் 05 உலக வரலாற்றின் பாதையில், சில அமைப்புகள், குறித்த காலத்தின் தேவைகருதி உருவாக்கப்படுபவை. அவை, காலம் கடந்து நிலைக்கும் போது, அதன் தேவையும் காலப் பொருத்தமும் தொடர்ச்சியாகக் கேள்விக்குட்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில், தமது தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு, சில தவறுகளை அவ்வமைப்புகள் செய்யத் தூண்டப்படுகின்றன. அத்தவறுகள் சிறுதவறுகள் அல்ல; பெருந்தவறுகள் என்ற உண்மையை, அவை உணரத் தொடங்கும் போது, காலம் கடந்திருக்கும். உலகில் இயங்குகின்ற இராணுவக் கூட்டமைப்புகளில் மிகவும் பலமானதும் பழைமையானதுமான இராணுவக் கூட்டு, ‘நேட்டோ’ ஆகும். ‘வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பு’ எனப்படும…
-
- 0 replies
- 710 views
-
-
‘பாவம் தமிழ் மக்கள்’ - இலட்சுமணன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன், கடந்த வாரம் “தமிழ்க் கட்சிகள் அனைத்தும், ஓரணியில் திரளவேண்டும்; இங்கிருந்து வெளியேறிச் சென்றவர்கள், மீண்டும் ஒன்றிணைய வேண்டும். கூட்டமைப்பு எவரையும் வெளியேற்றவில்லை” எனப் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். இந்த அறிவிப்பானது, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், உண்மையில் மகிழ்ச்சி தரக்கூடியது தான். ஆயினும், இவ்வறிவிப்பின் உண்மைத் தன்மை குறித்து, சந்தேகம் எழுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன. இந்த அழைப்பு, இதயசுத்தியுடனானதா என்பது தொடர்பாகத் தமிழ் மக்கள், தமக்குள் தாமே கேள்வி எழுப்பி வருகின்றார்கள். ஏனெனில், இந்த அறிவிப்பைக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோ, செயலா…
-
- 1 reply
- 1.2k views
-
-
13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது- மோடி முன்னிலையில் நேரடியாகவே மறுத்தாரா கோட்டாபய தெரியாதது போன்று அமைதிகாக்கும் இந்திய ஊடகங்கள்பதிப்பு: 2019 டிச. 02 23:15 புலம்: யாழ்ப்பாணம், ஈழம் புதுப்பிப்பு: டிச. 03 15:03 1 2 3 நிருபர் திருத்தியது ஆசிரியர் திருத்தியது உறுதிப்படுத்தப்படக்கூடியது …
-
- 0 replies
- 406 views
-
-
ஈழத் தமிழரின் அரசியல் தீர்வும் அபிவிருத்தியும்-பா.உதயன் அபிவிருத்தி அபிவிருத்தி என்று ஒரு சொல்லைக் காட்டி அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாது ஒழிப்பது இந்த அரசின் தந்திரமாகும். அன்று ஒரு நாள் அண்ணன் 13க்கு மேல் தமிழருக்கு தருவோம் என்றார் இன்று ஒரு நாள் தம்பி சொல்கிறார் தமிழருக்கு தர ஒன்றும் இல்லையாம் ஏற்றுக்கொள்ளப்படாத தீர்வு ஒன்றை இனியும் கதைப்பது பிரயோசனம் இல்லையாம்.சிங்கள மக்களின் பெரும்பான்மை அரசியல் தீர்வுக்கு எதிர் எனின் அதுவே ஜனநாயகம் எனின் தமிழ் மக்களின் பெரும் பான்மை சொல்லும் தீர்வுக்கு என்ன பதில்.அரசியல் வேறு பொருளாதாரம் வேறு என்று பிரித்து பார்க்க முடியாது.இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சனை தீர்க்கப்படும…
-
- 0 replies
- 842 views
-
-
இந்தியாவில் கோட்டா பேசிய வெற்றிவாதம்! ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள், இறுதிக் கட்டத்தை அடைந்து கொண்டிருந்த தருணத்தில், “...தென் இலங்கையின் ஒவ்வொரு பௌத்த விகாரைகளுக்குள்ளும் இருந்து, ராஜபக்ஷக்களின் வெற்றி கட்டமைக்கப்படுகின்றது. இந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷவே வெற்றிபெறுவார். ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மாத்திரமே, சஜித் பிரேமதாஸ வெற்றிபெறுவார். ஆனாலும், நாங்கள் மிகுந்த அர்ப்பணிப்போடு, ராஜபக்ஷக்களைத் தடுத்து நிறுத்துவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம்...” என்று அப்போதைய அமைச்சரான மனோ கணேசன், இந்தப் பத்தியாளரிடம் கூறினார். தேர்தலுக்குப் பின்னர் இதை, அவர் தன்னுடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில் எழுதியுமிருந்தார். இலங்கையில் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை நிலைநிற…
-
- 0 replies
- 572 views
-
-
'ஓபரேசன் கோத்தா' நெருங்கிவரும் கிளைமாக்சும் அதன் திரைக்கதையும் ! காட்சி 1 : ஏப்ரல் 21ம் திகதி, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் 'ஓபரேசன் கோத்தாவின் ' முதற்காட்சி விரிகின்றது. காட்சி 2 : தாக்குதல் நடந்த மறுவினாடியே, இந்திய மைய ஊடகங்கள் ஐ.எசு.ஐ.எசு தாக்குதல்தான் இதற்குகாரணம் என முதற் செய்தியை வெளியிடுகின்றது. காட்சி 3 : உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூறும் ஐ.எசு.ஐ.எசு தாக்குதாலிகளின் முதற் காணொளி காட்சி, இசுறேலிய ஊடகம் ஒன்றின் மூலமே வெளிவருகின்றது. காட்சி 4 : மகிந்த அல்லது கோத்தபாய போன்ற வலிமையான தலைவர் ஆட்சிக்கு வந்தால்தான் சிறிலங்காவை பாதுகாக்க முடியும் என சுப்ரமணிய சுவாமி தனது ருவிற்றர் பக்கத்தி…
-
- 0 replies
- 605 views
-