அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
மண்ணெண்ணெய் விலை உயர்வு ‘நெருப்புடன் விளையாட்டு ‘ தேவக குணவர்த்தன அகிலன் கதிர்காமர் அரசாங்கம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறத் தில் உழைக்கும் மக்கள் மீது பெருந் துன்பதை தரும் தாக்குதலைத் தொடுத்துள்ளது. மண்ணெண்ணெய் விலை லிற்றர் 87 ரூபாவிலிருந்து 340 ரூபாவாக – அல்லது தற்போதுள்ள விலையை கிட்டத்தட்ட நான்கு மடங்காக உயர்த்துவது – மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். படகுகளுக்கு மண்ணெண்ணெய்யை நம்பியிருக்கும் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். அத்துடன் மண்ணெண்ணெய்யை தங்கள் விளைநிலங்களுக்குப் நீர்ப் பாசனம் செய்யும் சிறு விவசாயிகளும், சமையலுக்கு மண்ணெண்ணெய்யை…
-
- 0 replies
- 380 views
-
-
ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பை ஒரு பகுதியினர் ஆதரிக்கிறார்கள். அவர்கள் அது பதினேழு ஆண்டுகளின் பின் சற்றுத் தாமதமாக கிடைத்த நீதி என்று கூறுகிறார்கள். அத்தீர்ப்பை எதிர்ப்பவர்கள் பொதுவாக மூன்று வௌ;வேறு நோக்கு நிலைகளிலிருந்து அதை எதிர்க்கிறார்கள். அ.தி.மு.கா வினர் அதை முழுக்க முழுக்க தமது கட்சியின் நோக்கு நிலையிலிருந்து எதிர்க்கிறார்கள். ஆனால் மற்றொரு தரப்பினர் அத்தீர்ப்பை அனைத்திந்திய மற்றும் அனைத்துலக பின்னணிக்குள் வைத்து கேள்வி எழுப்புகிறார்கள். மூன்றாவது தரப்பினர் அத்தீர்ப்பை ஈழத் தமிழ் நோக்கு நிலையிலிருந்து எதிர்க்கிறார்கள். இதைச் சிறிது விரிவாக பார்க்கலாம். தீர்ப்பை ஆதரிப்பவர்கள் பெரும்பாலும் நீதிபதி குன்ஹாவின் தனிப்பட்ட ஆழுமையை ஒரு முன்னுதாரணமாக காட்டுகிறார்கள். இந்…
-
- 0 replies
- 443 views
-
-
நிறைவேற்று அதிகாரம் முஸ்லிம்களுக்கு அவசியமா? ஜனாதிபதி, தனக்கிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற தோரணையில் முன்வைக்கப்படும் கருத்துகள், நிகழ்காலத்தில் வலுப்பெற்றிருக்கின்றன. அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை மேற்கொண்டு, அந்த அதிகாரக் குறைப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தரப்பினர் கோரி வருகின்றனர். இது தொடர்பான பிரேரணை ஒன்றையும் நாடாளுமன்றத்தில் ம.வி.முன்னணி முன்வைத்திருக்கின்றது. ‘20ஆவது திருத்தம்’ என்ற பெயரில் கொண்டு வரப்படும் அரசமைப்புத் திருத்த முயற்சிகளுக்கு, இராசி இல்லை என்று கூறலாம். ஏனென்றால், இதற்கு முன்னர் இரு தடவைகள், 20ஆவ…
-
- 0 replies
- 366 views
-
-
கூட்டமைப்பை இல்லாமல் ஆக்குதல் -கபில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகளின் இன்னொரு வடிவமாக, அழிக்கப்பட்டு விட்ட ஒரு இராணுவ அமைப்பின் அரசியல் எச்சமாகவே பார்க்கின்ற போக்கு, இப்போது வரை தென்னிலங்கையில் இருக்கிறது. விடுதலைப் புலிகளின் கொள்கையை- அவர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துச் சென்று விடுமோ என்பது தான், சிங்களத் தேசியவாத சக்திகள் முன்பாக இருக்கின்ற பிரச்சினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இல்லாமல் ஆக்குதல் என்பது, ஒரு பரந்துபட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலாக முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் பரவலாக ஏற்பட்டிருக்கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரான்சும் வன்முறையும்-பா.உதயன் ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிஸ் அடுத்துள்ள புறநகரான நான்தெரே பகுதியில் கடந்த 27 ம் திகதி போக்குவரத்து விதியை மீறியதாக சில இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பொலிசாரின் கட்டளைக்கு பணியாமல் வண்டியை நிறுத்தாமல் போனதால் இதில் 17 வயதான அல்ஜீரியாவை பூர்வீகமாகக் கொண்ட நாஹெல் என்ற முஸ்லிம் சிறுவன் கொல்லப்பட்டான் இந்தச் சிறுவனை கொல்லப் பட்டது பெரும் துயராக இருந்தாலும் இதை தொடந்து வெடித்த வன்முறையால் பிரான்ஸ் தேசமே பற்றி எரிவது போல் இருந்தது. எவராக இருந்தாலும் வன்முறை மூலம் எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. ஜனநாயக வழியில் போராட வேண்டும். பாடுபட்டு வியர்வை சிந்தி எல்லோரும் சேர்ந்து கட்டியதை அவர்களே நாசம் செய்வது நாகரீ…
-
- 1 reply
- 538 views
-
-
விக்கினேஸ்வரனின் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ தமிழ் தேசிய அரசியலில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்துமா? யதீந்திரா பலரும் நீண்டகாலமாக எதிர்பார்த்த ஒரு விடயம் கடந்த 24ம் திகதி நிகழ்ந்திருக்கிறது. விக்கினேஸ்வரன் தனது அடுத்தகட்ட அரசியல் பயணம் தொடர்பில் தெளிவான அறிவிப்பை செய்திருக்கிறார். இதுவரை அவர் பக்கத்தில் nளிவானதொரு பதிலில்லாமல் இருந்தது. இது தொடர்பில் பலரும் குறைபட்டுக் கொண்டிருந்தனர். இந்தப் பத்தியாளரும் பல்வேறு சந்தர்பங்களில் இது தொடர்பில் வலியுறுத்தி வந்திருக்கிறார். ஆனால் அந்த பிரச்சினை இப்போது தீர்ந்துவிட்டது. விக்கினேஸ்வரன் தனது கட்சியின் பெயர் – தமிழ் மக்கள் கூட்டணி என்று அறிவித்திருக்கிறார். தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில் காலத்துக்கு காலம் பல அரசியல்…
-
- 0 replies
- 323 views
-
-
அமெரிக்காவின் கனவை தகர்த்தெறிகின்றார்களா ராஜபக்சாக்கள்? உலகில் எந்த நாட்டில் என்ன நிகழ வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா திகழ்கின்றது. இந்த நாட்டில் இன்னார் தான் ஆட்சியில் இருக்க வேண்டும், எம்மை பகைப்பவர்கள், எவராக இருந்தாலும் அவர் எந்த பலத்தைப் பெற்றிருந்தாலும் அவரின் செல்வாக்கை சரித்து தன் கொள்ளைக்கு அல்லது தனக்கு ஏற்றவனாய் ஒருத்தனை பதவியில் அமர்த்தும் சிந்தினையில் உள்ளவன் அமெரிக்க ஜனாதிபதி. இதன் தாக்கத்தினை எகிப்திலும், லிபியாவிலும் காண முடிந்தது. இதன் அடுத்த அங்கமே இலங்கையில் ராஜபக்சாக்களை ஓரம் கட்டுதல். வீழ்த்துதல் என்னும் இராஜதந்திரம். தன் உலக வல்லரசை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், தன்னுடைய ஆதிக்கத்தை பரப்புவதற்காகவும் படாத பாடுபடுகின்றது அம…
-
- 0 replies
- 368 views
-
-
இந்திய உளவுத்துறையின் பலமா பலவீனமா ??
-
- 4 replies
- 949 views
-
-
அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் இலங்கை விஜயமே இந்த வாரம் பெரிய செய்தியாகிற்று. அவர் அரச தலைவர்களை மட்டுமன்றி தமிழ் அரசியல் தலைவர்கள் சிவில் சமூக பிரமுகர்கள் எனப் பலதரப்பட்டவர்களைச் சந்தித்து சென்றிருக்கின்றார். கடந்த சில வருடங்களாக ஸ்ரீலங்கா அரசின் மீது அழுத்தம் கொடுக்கக்கூடிய சக்தியாகவும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அதற்கு எதிரான பிரேரணையைக்கொண்டு வருவதற்கு உதவிய சக்தியாகவும் அமெரிக்கா இயங்கியதனால் இவருடைய வருகை தமிழ் மக்கள் விசேடமாகக் கவனம் செலுத்தும் வருகையாகி விட்டது. புதிய அரசாங்கத்துடன் தனது நல்லுறவுகளைப் புதுப்பித்துக்கொண்டிருக்கும் பின்னணியில், தமிழ் மக்களின் நலன்களையொட்டி அமெரிக்கா எடுக்கப் போகும் நிலைப்பாடுகள் யாவை என்பதே கேள்வியாகும். இக்கேள்வ…
-
- 1 reply
- 347 views
-
-
இந்தத் தொடரின் நோக்கம் மலரவிருக்கும் சுதந்திர தமிழீத்தின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்ற போதனை நோக்கோடு எழுதப்படவில்லை. மாறாக பொதுவில் நாடுகளின் தேசிய நலன்கள் அதன் அதிகார கட்டமைப்புகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் என்பன பற்றிய சில அடிப்படைப் புரிதல்களை தர முற்படுவதும் அதன் அடிப்படையில் "சர்வதேசம்" அல்லது "சர்வதேசச் சமூகம்" மற்றும் "உலக ஒழுங்கு" போன்ற பெயரளவில் பரந்து விரிந்த அர்த்தத்தை தரும் பதங்களிற்கான தற்போதைய யதார்த்தபூர்வமான அர்த்தத்தை விளங்க முற்படுவதும் ஆகும். இந்தப் பின்னணியில் இறுதியாக எம்மைப் போன்று அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் தேசியங்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் அவற்றிற்கான பின்னணிகள் பற்றி சுருக்கமாக பார்ப்போம். தமிழ்த் தேசியதின் மீள…
-
- 8 replies
- 5.7k views
-
-
2015 பொதுத் தேர்தல்களின் பின்னர் உருவாகும் அரசு எதிர்நோக்கும் சவால்கள் by Lionel Guruge - on July 8, 2015 படம் | BUDDHIKA WEERASINGHE Photo, Getty Images மீண்டும் பொதுத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல்களுக்கான திகதி நிச்சயிக்கப்பட்டுவிட்டது. தற்போது அனைத்து அரசியல் தலைவர்களும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு போட்டி போடுகின்றனர். அரசியல் அதிகாரத்திற்காக தேர்தல் இயக்கத்தை எவ்வாறு வழிநடத்துவது என்பதே அவர்களுக்கிடையிலான போட்டியாகும். யார் எவ்வாறு அதிகாரத்திற்கு வந்தாலும் புதிய அரசும் ஜனாதிபதியும் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் கீழ் செயற்பட வேண்டும். தற்போதைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு எவ்வாறு புத…
-
- 0 replies
- 282 views
-
-
புலனாய்வுக் கட்டமைப்பும் ஐ.எஸ் தாக்குதலும் Editorial / 2019 ஏப்ரல் 30 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:20 Comments - 0 -க. அகரன் உலக பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கித்தவித்து கொண்டிருக்கும் ஓர் அழகிய தீவு என்றால் அது இலங்கையாகத்தான் இருக்கமுடியும். நீண்ட யுத்தத்தைக் கண்டு, அதன் ஓய்வுக்குப் பின்னர், மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும் சந்தர்ப்பத்தில், ஏற்றுக்கொள்ள முடியாததும் நம்பமுடியாததுமான தாக்கத்துக்கு மீண்டும் சென்றுள்ளது நாடு. விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்புக்கு பின்னர், வவுணதீவு பொலிஸ் சோதனைச்சாவடி மீதான தாக்குதல்கள் உட்பட, பல்வேறான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி, வெறுமனே சந்தேகப்பார்வையில் பார்க்கப்பட்டு வந்த முன்னாள் போராளிகள் ம…
-
- 1 reply
- 855 views
-
-
வெற்றியை அறுவடை செய்வாரா கோட்டா? கே. சஞ்சயன் / 2019 மே 05 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:19 Comments - 0 உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்புகள், அதன் தொடர்ச்சியாகக் கல்முனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை, அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கு, உச்சக்கட்ட முயற்சிகள் இப்போது நடந்தேறி வருகின்றன. இந்த இக்கட்டான நிலைமையை, தாங்கள் அரசியல் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறிக் கொண்டே, இதை அரசியலாக்கும் முயற்சிகளில் பெரும்பாலான தரப்புகள் ஈடுபட்டிருக்கின்றன. இந்த அரசியல் நலன் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தரப்புகள் ஒன்று இரண்டல்ல; அந்தப் பட்டியல் நீளமானது. இதை வைத்து அரசியல் நலன் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தரப்புகளில், ச…
-
- 0 replies
- 953 views
-
-
சிங்கள பௌத்த மேனியாவும், சமஷ்டி போபியாவும் Sarawanan Nadarasa படம் | மாற்றம் Flickr தளம் ஏறத்தாழ சகல பிரதான தேர்தல் பிரசார மேடைகளிலும் தவறாத பேசுபொருளாக சமஷ்டி குறித்த சர்ச்சை பெரிதாக எழுந்திருந்தத்தை கண்டிருப்பீர்கள். சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு சமஷ்டி குறித்த பேரச்ச வெருண்ட உணர்வு (phobia) இனவாதிகளால் வளர்க்கப்பட்டு இன்று தாமும் அதற்குள் அகப்பட்டு அந்த நோய்க்கு இலக்காகி உள்ளனர் என்றே கூறவேண்டும். வெறித்தனமான சிங்கள பௌத்த மேலாதிக்க உணர்வென்பது (mania) ஏனைய இனங்களின் மீதான வெறுப்புணர்ச்சியையும், காழ்ப்புணர்ச்சியையும் மிகையாக வளர்த்தெடுத்து அதுவும் ஒரு தீரா நோயாகவும், பரப்பும் நோயாகவும் ஆக்கப்பட்டுள்ளது. சமஷ்டி பற்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது தேர்தல்…
-
- 0 replies
- 379 views
-
-
பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தல் களத்தில் முதல் தடவையாக 1999ம் ஆண்டு போட்டியிட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கையிலிருந்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். பொருளாதார ரீதியில் இலங்கை வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில், நாட்டை இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க, பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை ஓரளவு மீட்டு இயல்பு நிலைக்கு திருப்பியுள்ளார். இவ்வாறான பின்னண…
-
- 0 replies
- 508 views
- 1 follower
-
-
கோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஓகஸ்ட் 21 புதன்கிழமை, மு.ப. 11:19 Comments - 0 சட்டப்படி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி, இன்னமும் எழுப்பப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது. ஏனெனில், அவர் தமது அமெரிக்கப் பிரஜா உரிமையை இரத்துச் செய்து கொண்டாரா என்பது, இன்னமும் தெளிவாகவில்லை. 19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின்படி, வெளிநாட்டுக் குடியுரிமையுள்ள ஒருவர், இலங்கையில் தேர்தல்களில் போட்டியிட முடியாது. ஆனால், அவ்வாறான ஒருவர் வேட்பு மனுத் தாக்கல் செய்து, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் நாளில், மற்றொரு வேட்பாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், மிகக…
-
- 1 reply
- 463 views
-
-
தேசிய மக்கள் சக்திக்கு முன்னால் இருக்கும் உண்மையான சவால் கலாநிதி ஏ.எம். நவரட்ண பண்டார கடந்த 40 ஆண்டுகளில், உலகம் தேசியவாதம் மற்றும் உலகமயமாக்கலுடன் தொடர்புடைய பெறுமான முறைமை களுக்கு இடையே ஒரு பிளவுபட்ட உறவை அனுபவித்துள்ளது, அதனை சமூக விஞ்ஞானிகள் நவீன சகாப்தத்தின் இரண்டு வரையறுக்கும் அம்சங்களாக அடையாளம் கண்டுள்ளனர், இது கடந்த காலத்தில் முழுமையாக்கும் செயல்முறைகளை உருவாக்குகிறது. இலங்கையின் அண்மைக்கால அரசியல் வரலாற்றில் இரண்டு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் – 2022 ஆம் ஆண்டு அரகலய (மக்கள் எழுச்சி) மற்றும் அரச அதிகாரத்தை வைத்திருப்பவராக தேசிய மக்கள் சக்தியின் (என் பி பின் ) எழுச்சி – இந்த உலகளாவிய வளர்ச்சிக்கு இணையாக நிகழ்ந்தது. மேலே குறிப்பிடப்பட்ட மாறிவரும் உலகளாவி…
-
- 1 reply
- 281 views
-
-
வன்னி வாக்குகளை பிரிக்கும் பலகட்சி அரசியல் -க. அகரன் ‘அடம்பன்கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்பது வெறும் வார்த்தை ஜாலங்களாகவே, தமிழ் அரசியல் தரப்பில் காணப்படுகின்றது என்பது, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்படையாகி உள்ளது. தமிழர் தரப்பு அரசியல் நிலைப்பாடுகள், பலதரப்பட்ட விடயங்களை உள்ளடக்கி உள்ளன. தீர்வுகள் கிடைக்கப் பெற வேண்டிய, அவர்களது பிரச்சினைகள், நிறைந்ததே உள்ளன. இந்தச் சூழலில், தமிழர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் உள்ளதா என்ற ஐயப்பாடு காணப்படுகின்றது. பல தசாப்தங்களாகத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான நகர்வுகள், கைகூடாத நிலையிலேயே, நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆட்சேர்ப்பில், கட்ச…
-
- 0 replies
- 536 views
-
-
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் எழுதிய “சட்டத்தின் ஆட்சி” என்ற நூல் சொல்லும் செய்தி! *** *** *** *மேற்கு - ஐரோப்பிய அரசியல் கோட்பாடுகளை விட, சீன அரசியல் கோட்பாடுகள் மேலெழும் சூழல்... *ஜனநாயகம் - யதார்த்த அரசியல் - என்ற ஏமாற்றை விடவும் சீன ஜனநாயகம் மேல் என்ற உணர்வு... ** *** ****** மேற்கு நாடுகள் எழுதி வைத்த ”ஜனநாயக கோட்பாடு”, ”சட்டத்தின் ஆட்சி” ”அரச இறைமைக் கோட்பாடு என்பற்கு மாறாக கம்யூனிஸ்ட் கொள்கையை பின்பற்றி வரும் சீனா, இன்று உலகத்துக்குப் பெரும் சவலாக மாறியுள்ளது. ”நான் சொல்வதை நீ செய்” என்ற அதிகாரத் தேரணையில் இயங்கும் அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளுக்கும், ”ஜனநாயகம்” - ”சட்ட ஆட்சி” என்றால் என்ன என்பதை, சீனா காண்பித்துள்ளது. இப்போது அதனை நூலாக வெளியிடுவதன் ஊடாக, எதி…
-
-
- 3 replies
- 242 views
- 1 follower
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதா - இல்லையா என்று கருத்தறிய, பிரித்தானிய மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பு, உலகளாவிய ரீதியில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கருத்து வாக்கெடுப்பின் முடிவு, உலகத்துக்கே ஏமாற்றத்தை அளித்திருப்பதுடன், உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. பிரித்தானிய மக்களின் முடிவு, பொருளாதார ரீதியாக இலங்கையையும் பெரியளவிலான பாதிப்புக்குள் தள்ளியிருக்கிறது, அதேவேளை, இந்தக் கருத்து வாக்கெடுப்பு, இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும், சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. பொருளாதார ரீதியாக எத்தகைய தாக்கத்தை இலங்கை எதிர்கொள்ளப் போகிறது, அத்தகைய பாதிப்பில்…
-
- 0 replies
- 496 views
-
-
மன உளைச்சல். சில வருடங்களாகவே இது இருக்கிறது. வெளியே சொல்லவும் முடியாமல், உள்ளே வைத்திருக்கவும் முடியாமல், வேதனையும், இயலாமையும், வெறுப்பும், கையாலாகத்தனமும், கோபமும்....இப்படியே நேரத்திற்கொன்றாக மாறும் உணர்வுகளுடன் கழிகிறது பொழுது. விடை தெரியாத கேள்விகளில் ஆரம்பித்து, இப்படியிருக்கலாம் என்று சமாதானம் செய்து, இனி என்ன செய்யலாம் என்று யோசித்து, எதுவும் முடியாதுடா உன்னால் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, அப்போதைக்கு மட்டும், என்னால என்னதான் செய்ய ஏலும் என்று கையாலாகத்தனத்துடன் கேட்டுவிட்டு நகர்ந்துவிடுவதோடு அப்போதைக்கு அந்தப் பிரச்சினை முடிந்துவிடும். ஆனால், சில நாட்களில் மீண்டும் அதே பிஒரச்சினை, அப்படியிருக்கேலாது, ஏதாவது செய்யவேணும். பார்த்துக்கொண்டிருந்தால் எ…
-
- 30 replies
- 3.4k views
-
-
நேர்பட பேசு : 20 பங்குனி 2013 http://www.youtube.com/watch?v=4q7h0lPFNZU
-
- 2 replies
- 641 views
-
-
தமிழ்த் தலைமைகளின் பேசாப்பொருள் ‘பொருளாதாரம்’ -என்.கே. அஷோக்பரன் சர்வதேச அங்கிகாரம்மிக்க கடன் மதீப்பீடுகளான ‘பிட்ச் ரேடிங்ஸ்’, ‘ஸ்டான்டர்ட்ஸ் அன்ட் புவர்ஸ்’, ‘மூடீஸ்’ ஆகியன, மீண்டும் இலங்கையின் கடன் மதிப்பீட்டைக் குறைத்துள்ளன. இதன் அர்த்தம், சுதந்திர இலங்கை அரசு, தனது கடனை மீளச் செலுத்த முடியாத, வங்குரோத்து சூழலை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்பதாகும். முன்னாள் மத்திய வங்கி ஆளுநரும், இந்நாள், பணம் மற்றும் மூலதனச் சந்தை, மற்றும் அரச முயற்சியாண்மை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சருமான அஜித் நிவாட் கப்ரால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இயக்குநருமான பசில் ராஜபக்ஷ ஆகிய இருவரும், இலங்கை வங்குரோத்தாகும் என்ற கருத்தை முற்றாக மறுத்து வருகிறார்கள். மேற்குறித்த நிறுவனங்களி…
-
- 0 replies
- 418 views
-
-
இலங்கையின் தற்கால அரசியல்: ஓர் பார்வை – யே.மேரி வினு 33 Views கடந்த 2019 இற்குப் பின்னரான காலப்பகுதியில் இருந்து புதிய நிர்வாக அமைப்பினரால் இலங்கையில் நடைபெற்று வருகின்ற அரசியல் சார்ந்த நகர்வுகள், செயற்பாடுகளை தற்கால அரசியலாக நோக்கலாம். இலங்கை வளர்ந்து வருகின்ற தென்னாசிய, புவியியல் எல்லைக்குள் உள்ள ஒரு நாடாகக் காணப்படுகின்ற அதேவேளை, உலக அரசியலில் அதிகம் பேசப்பட்டு வருகின்ற ஒரு அரசியல் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நாடாகவும் கடந்த காலங்களிலிருந்து பார்க்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் தற்கால அரசியல் நகர்வை பின்வரும் ஐந்து அம்சங்களின் ஊடாக முன்வைக்கலாம். இந்த அடிப்படையில் விரிவாக நோக்குகின்ற பொழுது, இராணுவ ஆதிக்கவாதம் …
-
- 0 replies
- 2.3k views
-
-
கட்டார்: பாலைவனத்தில் ஒரு பனிப்போர் பாலைவனங்கள் போருக்குரியனவல்ல. போரும் பாலைவனத்துக்குரியதல்ல. ஆனால், பாலைவனத்துக்கும் போருக்குமுரியதாய் மத்திய கிழக்கு என உலக வரைபடத்தில் குறிக்கப்பட்ட பகுதி தொடர்ந்தும் திகழ்ந்து வருகிறது. இப்பாலைவனங்கள் தங்களுக்குள் உட்பொதிந்திந்து வைத்திருந்த இயற்கை வளங்கள், சோலைவனங்களாக மாற்றும் வல்லமையுடையவை. இன்று இவ்வளங்களே பாலைவனத்தை சோகவனமாகவும் இரத்தக் களரியாகவும் மாற்றியுள்ளன. உலகளாவிய ஆதிக்கத்துக்கான போட்டியின் மூலோபாய கேந்திரமாக இதன் அமைவிடம் போர் எனும் அவல நாடகத்தை முடிவற்ற தொடர்கதையாக்கியுள்ளது. கடந்த வாரம், மத்திய கிழக்கில் உள்ள சவூதி அரேபியா, ஐக்கி…
-
- 2 replies
- 844 views
-