நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
கைதிகளைச் சிறையிலடக்கத் துணை போன டக்ளஸ் இன்று விடுதலை செய்யக் கோருகிறார் பத்துவருடங்களாக இனக்கொலையாளிகளான ராஜபக்ச குடும்பத்தின் அடியாளாகவிருந்து செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தாவிற்கு திடீரென சிறைக் கைதிகள் மீது அக்கறை பிறந்துள்ளது. மகிந்த அரசில் செல்வாக்கு மிக்க அரசியல் வாதியாகத் திகழ்ந்த டக்ளஸ் கைதிகள் தொடர்பாக மூச்சுக்கூட விட்டதில்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொள்ள நேரிட்டதும் சிறைகளில் வாடும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பfடவேண்டும் எனக் பாராளுமன்றத்தில் கோரியுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பதாக மகிந்த ராஜபக்சவே தமிழ் மக்களின் தேவைகளை உணர்ந்து செயற்படுகிறார் என்று கூறிய டக்ளஸ் நேற்றுப் பாராளுமன்றத்தில் மகி…
-
- 0 replies
- 430 views
-
-
வடக்கில் படைக்குறைப்பு செய்யப்படும் என்று இந்தியாவிடம் உறுதியளித்திருக்கின்றார் இலங்கை வெளிவிவகார அமைச்சர்..... இது சற்று மகிழ்ச்சியை அளித்தாலும் வெறும் வாய் வழி உறுதியாக இருக்காமல் இதை நடைமுறைப்படுத்துகின்ற அதே நேரம்..... இந்தியாவும் அதற்கான அழுத்தங்களை கொடுத்து கண்காணிக்க வேண்டும்...... இப்பொழுது இலங்கையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தில் கண்டிப்பாக தற்பொழுதைய இந்திய அரசின் பங்கும் பெருமளவில் இருக்கு என்பதனை யாரும் மறுக்க முடியாது ஆகவே இந்த சந்தர்பத்தில் தமிழர்கள் எதிர்ப்பார்க்க கூடிய தீர்வை படிப்படியாக ஏற்படுத்தி கொடுக்கின்ற கடமை இந்தியாவிற்கு உண்டு......... Sundhal 21/01/15
-
- 7 replies
- 757 views
-
-
ஜனவரி 8 திகதி தேர்தலில் ஆச்சரியமளிக்ககூடிய வெற்றியை பெற்ற பின்னர் இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் மைத்திரிபால சிறிசேன அவருக்கு முன்னர் பதவிவகித்தவரை விட வித்தியாசமானவர். உள்நாட்டின் ஆட்சி முறையில் கவனம் செலுத்துவதே அவரது முன்னுரிமைக்குரிய விடயமாக காணப்படப் போகின்றது, அது நடைமுறைப்படுத்துவதற்கு கடினமான விடயம். மகிந்த ராஜபக்சவின் மீதான வெறுப்பு என்ற விடயத்தை தவிர வேறு எதிலும் ஓற்றுமை இல்லாத கூட்டணிக்கு அவர் தலைமை தாங்குகின்றார். அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளை சரிசெய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. இதனை சாத்தியமாக்குவதற்கு அவருக்கும் அவரது வெளிநாட்டு நண்பர்களுக்கும் திறமையும், கற்பனாசக்தியும் அவசியமாகின்றத…
-
- 1 reply
- 742 views
-
-
உள்ளதும் போச்சடா, நொள்ளைக் கண்ணா எவருக்கும் ஒரு பலவீனம் இருக்கும். எதிரியின் பலவீனம் அறிந்தவனே வெல்ல முடியும். ஹிட்லர், கடாபி, பின் லாடன் பலவீனம் பெண்களில் இருந்தது. மகிந்தவின் பலவீனம் சாத்திர விடயங்களில் இருந்தது. சுமனதாச அபயகுணவர்த்தன என்னும் ஒரு சாத்திரியார், இப்போது குறும்புக் கார இலங்கையர்களின் பாராட்டு மழையில் நனைந்த வாறு உள்ளார். அவரது சாத்திரம் என்னவோ பிழைத்தாலும், அவரோ எதிர்பாராத ஹீரோ ஆகி இருக்கிறார். தனி ஒரு ஆளாக, 'இத்த கயிறினைக்' கொடுத்து, மகிந்தவை பதவி இறக்கி, நாட்டினை அவரதும், அவர் தம் குடும்பத்திடம் இருந்து காத்த 'மாவீரன்' என்ற பாராட்டு மலையில் நனைந்து, வாய்க்குள் அல்வா இறுக்கின மாதிரி, மனிசன், அழவும் முடியாமல், சிரிக்கவும் முடியாமல் நிக்கிற…
-
- 8 replies
- 2.1k views
-
-
கூட்டமைப்பின் உடனடிக் கடமை இன்றைய நிலையில் ஐதேக, சுக ஆகிய முக்கிய கட்சிகள் ஒன்று இனைந்துள்ள நிலை காணப் படுகின்றது. இந்த தேசிய அரசு அடுத்த 100 நாட்களுக்கு இருக்கப் போகிறது. அதன் பின்னர் பாழும் இனவாத அரசியல் புதிய தேர்தலுடன் ஆரம்பித்து விடும். ஆகவே இந்த 100 நாட்களுக்கு இடையே, தமிழர் பிரச்னை தீர்வு குறித்த, ஒரு அடிப்படை இணக்கம் காணப் பட வேண்டும். இல்லாவிடில் பழைய குருடி கதவைக் திறடி கதை தான். ஆகவே, மேற்குலகு, இந்தியா பார்த்துக் கொள்ளும் என்று இருக்காது, இப்போதே தேங்காயை அடித்து உடைக்க வேண்டும். தேனிலவு முடிவதற்க்கு முன்னர் தமிழர் பிரச்னை குறித்த விவாதம், நடாத்தப்பட வேண்டும். இல்லாவிடில் ஆறிய கஞ்சி பழைய கஞ்சி தான் என்றாகிவிடும்.
-
- 0 replies
- 464 views
-
-
இலங்கை அரசின் மற்றுமொரு இன அழிப்பு.... சுன்னாக மின் நிலையத்தில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் இப்பொழுது தெல்லிப்பழை வரை கிணறுகளில் கலந்து விட்டது குறிப்பாக கிணற்று நீரையே நம்பி இருக்கும் மக்களின் சுகாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கு அதுவும் குறிப்பா தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் கிணற்றையும் இது பாதித்திருப்பதாக கூறப்படுகின்றது..... சும்மார் 1700 மாணவர்கள் படிக்கும் மகஜானவில் மட்டுமல்ல அதன் அருகில் இருக்கும் யூனியன் கல்லூரி மற்றும் பாடசாலைகளிலும் இதே அவலம் இலங்கை அரசோ இதை கண்டுகொள்வதாக தெரியவில்லை.... யுத்தத்தால் கடுமையாக பாதிக்க பட்ட பிரதேசம் இவை ...... இப்பொழுது சுற்று சூழலாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கு...... இலங்கை அரசு …
-
- 10 replies
- 1.4k views
-
-
சார்லி ஹெப்டோ படுகொலைப் பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பது போலத் தோன்றுவது வெறுமனே வெளித்தோற்றம் மட்டும்தான். மூன்று இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுததாரிகளால் மொத்தமாக 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். சார்லி ஹெப்டோவின் 4 கார்ட்டுனிஸ்ட்டுகளும் சார்ப்போ சேபர்னியர் எனும் அதனது ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுவன்றி இரு இஸ்லாமியர்களான ஒரு காவல்துறை அதிகாரியும், சார்லி ஹெப்டோ ஊழியர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். சார்லி ஹெப்டோ அலுவலகத் தளத்தில் மட்டும் மொத்தமாகப் 12 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனோடு ஒரு பெண் காவல்துறை அதிகாரியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். யூத பலசரக்குக்கடையில் நடந்த பிணைக்கைதிகள் பிரச்சினையில் இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுதத…
-
- 0 replies
- 514 views
-
-
இவரது பெயர் Maurice Sinet. ஐந்து வருடங்களுக்கு முன்னர், சார்லி எப்டோ பத்திரிகையில் கேலிச்சித்திரங்கள் வரைந்தவர். 2009 ம் ஆண்டு, பத்திரிகை நிர்வாகம் இவரை வேலையே விட்டு நீக்கி விட்டது. இவர் செய்த குற்றம் என்ன? பத்திரிகையில் Sine என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரை, "யூதர்களுக்கு எதிரானது" என்ற குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப் பட்டார். அன்றைய பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசியின் மகனின் திருமணம் பற்றிய அரசியல் விமர்சனக் கட்டுரை அது. சார்கோசியின் மகன் அப்போது தான் ஒரு யூத தொழிலதிபரின் மகளை திருமணம் முடித்திருந்தார். அவர் பணத்திற்காக யூதராகவும் மாறிவிடுவார் என்று அந்தக் கட்டுரையில் விமர்சிக்கப் பட்டிருந்தது. French cartoonist Sine on trial on charges of anti-Semitism over Sarkozy j…
-
- 1 reply
- 462 views
-
-
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மென்மையான போக்குடையவர் என்பதை அவரின் செயற்பாடுகளில் இருந்து உணர முடிகின்றது. இரண்டாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரி அறிவித்தமை ஒரு தலைவனுக்கு இருக்கக் கூடிய சிறப்பைக் காட்டுவதாகும். இரண்டாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மைத்திரி அறிவித்த நேரம், காலம் என்பன மிகவும் பொருத்தமானவை. இந்த அறிவிப்பு அவர் மீது நம்பிக்கை கொள்ள வைக்கிறது. அதேநேரம் கண்டி தலதா மாளிகையின் எண்கோண மண்டபத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில் சாந்தமும், நிதானமும் தெரிகிறது. எனினும் அதீத நல்ல குணம் பலவீனமாகக் கருதப்படும் என்பதன் அடிப்படையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதானமாகவும் தீர…
-
- 0 replies
- 506 views
-
-
https://soundcloud.com/user3011607/distributor-singaravelan-abuses-superstar-rajni-proof-revealed-listen-to-this
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரான்சில் மறக்கமுடியாத நாட்களாக 07-08-09/01/2015 அமைந்துவிட்டன... ஏழாந்திகதி காலை 11 மணியளவில் CHARLIE HEBDO என்னும் பத்திரிகை அலுவலகத்திற்குள் ஆபத்தான நவீன ஆயுதங்களுடன் புகுந்த இரு இளைஞர்கள் (சகோதரர்கள்) Chérif Kouachi (32 வயசு), Said Kouachi,( 34வயசு ( மத்தியகிழக்கைச்சேர்ந்தவர்கள்) அல்லாவின் பெயரைச்சொல்லியபடி குறி தவறாதும் துப்பாக்கி சூட்டில் அனுபவப்பட்டவர்கள் போல் சுடுகின்றனர். காவலுக்கு இருந்த காவல்துறையினர் இருவர் மற்றும் பத்திரிகையின் முக்கிய பிரமுகர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட 11 பேர் காயமடைகின்றனர். அதில் நால்வரின்நிலை கவலைக்கிடமானதாக இருக்க கொலையாளிகள் வந்த வாகனத்திலேயே தப்பிவிடுகின்றனர்...... மக்கள் கொதித்து எழுந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுப…
-
- 23 replies
- 1.3k views
-
-
பாதுகாபப்பு செயலரானார், பசனாயக்கா. இவர் இராணுவ தொடர்பு இல்லா, முன்னால் சூழல் சுற்றாடல் செயலர் ஆவார்.
-
- 0 replies
- 578 views
- 1 follower
-
-
இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மைத்திரி ஆட்சியுடன் இணைந்து செயலாற்றுவதற்கு நாம் தயார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி இன்றைய தினம் மைத்திரிபால சிறிசோன தனது பதவியை பொறுப்பேற்கவுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் குறித்த அறிவிப்பினை விடுத்திருக்கின்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி நல்லாட்சியாக நடைபெறும் பட்சத்தில் அவர்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு நாம் தயார். நாம் இணக்க அரசியல் நிலைப்பாட்டினை தொடர்ந்தும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றோம். இதனடிப்படையிலேயே முன்னைய ஆட்சியாளர்களுடனும் பேசி கொள்கை ரீதியான உடன் பாட்டுடன் நாம் செயற்பட்டோம். அந்தவ…
-
- 0 replies
- 651 views
-
-
தேர்தல் பற்றிய கருத்துக்களை இங்கே பதிவோமா உறவுகளே.. கிருபனின் பதிவு இது தேர்தல் திரியில்...
-
- 44 replies
- 4k views
-
-
சனாதிபதித் தேர்தல்: சிங்கள பௌத்த பேரினவாதத்தை அழிக்கவா பலப்படுத்தவா? ச.பா.நிர்மானுசன் சிறீலங்காவின் தற்போதைய சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கடந்தகால மற்றும் நிகழ்கால ஆட்சியில், தமிழ் மக்களுக்கு எதிரான அவரது செயற்பாடுகள் எவ்வளவு கொடூரமானவை என்பதை மீளப்பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை. எதிர்காலத்திலும் தமிழின அழிப்பில் முதன்மையான இடத்தை தக்க வைப்பதற்காக இன்றும் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டிருப்பவர் மகிந்த ராஜபக்ச. இவரது ஆட்சி தொடர்ந்தும் நீடித்தால், சிங்கள குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற கட்டமைப்புசார் இன அழிப்பும் நீடிக்கும். ஆதலால் தமிழ் மக்களால் மகிந்த ராஜபச்ச நிராகரிக்கப்பட வேண்டியவர் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை. அதேவேளை, மைத்திரிபால சிறீசேனவும் பெரும்பான…
-
- 0 replies
- 1.2k views
-
-
தான் பதவியில் தோற்றாலும் கூட இன்னும் இரு வருடங்களவது தொடர்ந்தும் பதவியில் இருக்கப்போவதாக மகிந்த கூறிவருகிறார். தனது இரண்டாவடது பதவிக்காலம் முடிவடைய இரு வருடங்கள் இருக்கும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஆயத்தம் செய்துவரும் மகிந்த, தர்செயலாக தான் தேர்தலில் தோற்க நேரிடினும் கூட, தனது இரண்டாவ்து பதவிக்காலத்தில் இன்னும் மீதமிருக்கும் இரு வருட்ங்களை பூர்த்தி செய்ததன் பின்னரே பதவியிலிருந்து விலகுவது பற்றி சிந்திக்க முடியும் என்றும், அதுவரை எதிரணியிலிருந்து தெரிவாகும் யாராக இருந்தாலும் காத்திருக்க வேண்டியதுதான் என்றும் கூறியிருக்கிறார். இதுநாள்வரையிலும் தான் வெல்வது உறுதி என்று கர்வத்துடன் கூறிவந்த மகிந்த இப்போது தோற்றாலும் கூடப் பதவியில் இருப்பேன் என்று கூறியி…
-
- 3 replies
- 691 views
-
-
பகடைக்காய்கள் ஜனாதிபதித் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்புக்களினாலும் சுவாரஷ்யங் களினாலும் நிறைந்து கொண்டிருக்கிறது. தங்களைத் தக்க வைக்கப்பதற்கான போராட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் தனது அரசின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். தனியே பரப்புரைக் கூட்டத்தை நடத்தாமல், அரச நிகழ்வுகளையே தனது பரப்புரைக் கூட்டமாக மாற்றி வருகின்றார் மஹிந்த. தனியே அவர் மட்டுமல்லாது அவரின் எடுபிடிகளும், அமைச்சர்களும், அமைப்பாளர்களும் தங்கள் பங்குக்கு மஹிந்தவுக்கு வாக்குச் சேகரிப்பும் பரப்புரைகளில் தீவிரமாக இறங்கிவிட்டனர். கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பல்கலைக்கழக மாண வர்களுக்கு மஹாபொல புலமைப்பரி…
-
- 0 replies
- 576 views
-
-
ஆயுத எழுத்து 30.12.2014இன்றைய தலைப்பு குறித்து விவாதிக்க சிறப்பு விருந்தினராக சுமந்திரன்-தமிழ் எம்.பி // அய்யாநாதன்-தமிழ் ஆர்வலர் // அருணன்-சி.பி.எம் // ராதாகிருஷ்ணன்-பத்திரிக்கையாளர்.. http://www.thanthitv...id=9&vidid=8020 ஆயுத எழுத்து 29.12.2014இன்றைய தலைப்பு குறித்து விவாதிக்க சிறப்பு விருந்தினராக ராமசாமி முத்தையா-இலங்கை அமைச்சர் // பகவான் சிங்-பத்திரிக்கையாளர் // சீமான்-நாம் தமிழர் கட்சி // கே.டி. ராகவன்-பா.ஜ.க. http://www.thanthitv...id=9&vidid=7999
-
- 0 replies
- 721 views
-
-
-
‘அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை, நலன்கள் மட்டுமே நிரந்தரமானவை’ என்பது பண்டைக் காலம் தொட்டு இன்று வரை அரசியலில் பின்பற்றப்படும் எழுதப்படாத விதியாகும். ஆனால் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் துரோக வரலாற்றை முதிசமாகச் சுமந்து நிற்கும் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த ஐந்தரை ஆண்டுகால அரசியல் நகர்வுகள் இவ்விதியின் அடிப்படையில் அமையவில்லை என்றே கூறவேண்டும். நாடாளுமன்ற அரசியல் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுமுகமாக செயற்படுவதற்காக 2001ஆம் ஆண்டின் இறுதியில் தமிழீழ தேசியத் தலைவரின் அங்கீகாரத்துடன் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். அதாவது தமிழீழ தேசத்தின் …
-
- 0 replies
- 400 views
-
-
-
- 5 replies
- 768 views
-
-
2015-ஜனாதிபதி தேர்தலையொட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாடு குறித்து உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்காத நிலையில் தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவாக எழுதுவதுபோல் பல திடுக்கிடும் அரசியல் ஆய்வுகள் தமிழ் இணையங்களில் சில வெளியிட்டுள்ளன. அதனை சிலர் யாழ் கருத்துக்களம் பகுதியில் இணைத்துள்ளனர். தமிழ் வாக்குகளுக்குப் பதிலீடாக பணமும் அமைச்சுப் பதவியுமா..? – இரவி என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையை மேற்போக்காக வாசித்தால் தமிழ்த்தேசியத்தின் பால் காதல் கொண்டு கசிந்து கண்ணீர் மல்கியது போல் தெரியும். ஆனால் அந்த கட்டுரையின் வரிகளுக்கிடையில் கூர்ந்து அவதானித்தால் தெரியும் அவை அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டு எழுதப்பட்ட அரசியல் அவதூறுகள் ஆகும். இன்னும் பசையாகச் சொன்னால் மகிந்தவுக்க…
-
- 10 replies
- 1.1k views
-
-
மகிந்த சிந்தனை 2, 2010 தேர்தலில் வந்திருக்க வேண்டும். வெற்றியில் பெரு நம்பிக்கை கொண்டதால், அது குறித்து அவர் அலட்டிக் கொள்ள வில்லை. இம்முறையும் அது குறித்த கவலை இல்லாமல் தான் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். மைத்திரியின் பிரவேசம் மகிந்த சிந்தனை இரண்டினை அவசரம் அவசரமாக கொண்டு வர வைத்து விட்டது. டிசம்பர் 26 ம் திகதி வெளியிட இருந்த அதனை, தீடீரென, அடடா, தபால் மூல வாக்களிப்பு 23ம் திகதி அல்லவா என்று நினைவுபடுத்த, முதல் நாளே அவசர அவசரமாக பல குளறு படிகளுடன் வெளியிடப் பட்டது. ஆங்கிலத்தில் இல்லாத சிங்களத்தில் மட்டும், சிங்கள வாக்காளரை பயமுறுத்தும் வகையில், 'அங்கே உலகம் முழுவதும், உறுமியபடி, தகுந்த தருணம் வரும் வரை, தமது இரையினை கவ்வ புலிப் பயங்கரவாதிகள் இன்னமும் இருகின்றார்கள…
-
- 0 replies
- 822 views
-
-
மைத்திரியின், முதலாவது வடபகுதி தேர்தல் பிரச்சார கூட்டம் யாழ் முத்திரைச் சந்தியில் வரும் 30ம் திகதி நடைபெறுகின்றது, சந்திரிகா, ரணில், ரஜித்த என பல முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். அதேவேளை அன்று காலை கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனேகமாக எல்லோருக்கும் புரியும் முடிவான, மைத்திரியை ஆதரிக்கும் முடிவு எடுக்கப்படுவதுடன், அன்று நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் கூட்டமைப்பு பிரமுகர்களும் மேடையில் தோன்றக் கூடும் எனவும் கருதப் படுகின்றது. அதேவேளை மகிந்தர் ஜனவரி 2ம் திகதி வடக்கு வருகின்றார். யாழ் - KKS ரயில் பாதை திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருந்த போதும், தேர்தல் விதி முறை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப் …
-
- 1 reply
- 561 views
-
-
சுழன்றடித்த சுனாமி பேரலை – 10 ஆவது நினைவு தினத்தில் ஒரு நினைவு கூறல்! சென்னை: "சுனாமி" - பெயரைக் கேட்டால் அழகாய் இருந்தாலும் 2004 ஆம் ஆண்டில் கிட்டதட்ட பல்லாயிரக்கணக்கான பேரை பலிவாங்கிக் கொண்டது இந்த ஆழிப்பேரலை. இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் 2004 ஆம் ஆண்டில் சிறியதாய் தோன்றிய அலை ஒன்று பூதாகரமாய் பெருக்கெடுத்து, தெற்காசிய நாடுகளையே புரட்டிப் போட்டது. உறவினர்கள், நண்பர்கள், உடைமகளை இழந்துவிட்டு பல்லாயிரம் மக்கள் தவியாய் தவித்தனர். என்னவென்றே தெரியாத அந்த பேரலை இன்று எல்லோர் மனதிலும் பாதிப்பாய் பதிந்து போய் கிடக்கின்றது. துறைமுகப் பேரலை: ஜப்பானிய மொழியில் துறைமுக பேரலை என்பதே சுனாமி என அழைக்கப்படுகிறது. இது தமிழில் ஆழிப்பேரலை என அழைக்கப்படுகிறது. பூ…
-
- 5 replies
- 2.4k views
-