நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை Manavai Mustafa Scientific Tamil Foundation அறிவியல் தமிழ் வாரம் விழிய வரிசை 8th August ; Friday ; Morning show—10 am உயிரணுவில் உள்ள DNA அமைப்பை தமிழில் விளக்க முடியுமா ? ஒரே ஒரு திருக்குறளை மைய்யப்படுத்தி 120 பக்கங்களில் எழுதப்பட்ட அதி நவீன அறிவியல் நூலில் இருந்து இந்த கருத்தாக்கம் பெறப்பட்டது. This video series is produced for Manavai Mustafa Scientific Tamil Foundation by Dr.Semmal டாக்டர்.மு.செம்மல் MBBS,D.L.O.,M.Phil.,M.D நிர்வாக இயக்குனர் , அறிவியல் தமிழ் அறக்கட்டளை நிறுவனர், மணவை முஸ்தபா மெய்நிகர் அறிவியல் தமிழ் ஆவண காப்பகம் www.tamilarchives.org – Worlds First and Exclusive Scientific…
-
- 0 replies
- 521 views
-
-
https://www.youtube.com/watch?v=SM-DbV2Sil0
-
- 0 replies
- 610 views
-
-
அடிப்படைவாத பிக்குமார்களின் காவியை கழற்ற தயார் நிலையில் ‘நாம் பிரஜைகள்’ என். சரவணன் படம் | Dushiyanthini “நாம் பிரஜைகள்” (அபி புறவெசியோ) எனும் சிங்கள அமைப்பு பௌத்த பயங்கரவாதத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 04ஆம் திகதி மருதானையில் அமைந்துள்ள CSRஇல் (சமய சமூக நடுநிலையம்) பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து காணாமல்போனவர்களின் பெற்றோர்களுக்காக நடத்தப்பட்ட கூட்டம் கோட்டபாயவின் காவி சீருடை பயங்கரவாதிகளால் குழப்பியடிக்கப்பட்ட செய்தி அறிந்ததே. தொடர்ச்சியாக சமீப காலமாக சிறுபான்மை மதங்களுக்கும், சிறுபான்மை இனங்களுக்கும் எதிராக பேரினவாத அரச தலைமையால் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சீருடை பயங்கரவாதிகள் பல்வேறு…
-
- 1 reply
- 525 views
-
-
பழ.நெடுமாறன் ''ராஜீவ் காந்தி கள்ளம், கபடம் இன்றி பிரபாகரனை நம்பினார். ஆனால், பிரபாகரன், ராஜீவ் காந்தி உள்பட அனைவரையுமே ஏமாற்றிவிட்டார்'' என முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தனது சுயசரிதையான, ‘One life is not enough’(ஒரு வாழ்வு போது) என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். பிரபாகரனை ராஜீவ் காந்தி ஏமாற்றினாரா? அல்லது, ராஜீவ் காந்தியை பிரபாகரன் ஏமாற்றினாரா? எது உண்மை? 1987-ம் ஆண்டு ஜூலை 23-ம் நாள் யாழ்ப்பாணத்துக்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த உலங்கு வானூர்தியை அனுப்பி பிரபாகரனையும் அவரது தோழர்களையும் தில்லிக்கு வரவழைத்தார் பிரதமர் ராஜீவ் காந்தி. ஆனால், இலங்கைத் தூதுவராக இருந்த தீட்சித், புலனாய்வுத் துறையின் தலைவர் எம்.கே.நாராயணன் மற்றும் பல உயர் அதிகாரிகள் பிரபாகரனை…
-
- 2 replies
- 627 views
-
-
இந்தியா: ஒதுங்குகிறதா - பதுங்குகிறதா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதுடெல்லிக்கான பயணம் எப்போது சாத்தியமாகும் என்ற கேள்வி பல வாரங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீண்டகாலமாகவே முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறது. குறிப்பாக, வடக்கு மாகாணசபை நிறுவப்பட்ட பின்னர், ஏற்பட்டுள்ள சூழல் குறித்தும், நிலையான அரசியல் தீர்வு காண்பது குறித்தும், வடக்கிலுள்ள நிலைமைகள் குறித்தும் இந்தியாவுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆர்வம் கொண்டிருக்கிறது. என்கின்றார் இன்போ தமிழ் குழுமத்தின் பிராந்திய அரசியல் இரானுவ ஆய்வாளர் ஹரிகரன் அவர்கள். …
-
- 0 replies
- 511 views
-
-
புலிகளின் "குழந்தைப் போராளிகளும்", புலம்பெயர்ந்த "குழந்தை அறிவுஜீவிகளும்" கலையரசன் "குழந்தைப் போராளிகள்" என்ற கலைச் சொல்லை, யார் தமிழில் உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அந்த சொற்பதம் உண்டாக்கும் தாக்கம் பெரிது என்பதை மறுப்பதற்கில்லை. புலி எதிர்ப்பாளர்கள் அந்த சொல்லை மிகவும் விருப்பத்துடன் உபயோகித்து வருகின்றனர். புலி ஆதரவாளர்களும் அதையே திருப்பிச் சொல்ல வைப்பதன் மூலம், அகராதியில் இடம்பெற வைக்க முயற்சிக்கின்றனர். உண்மையில், புலிகள் இருந்த காலத்தில், "Baby Brigade" என்ற சொல்லை, சில மேற்கத்திய ஊடகவியலாளர்கள் புலிகளை கிண்டலடிக்க பயன்படுத்தி வந்தனர். சிங்கள ஊடகவியலாளர்களும் அதை விரும்பி ஏற்றுக் கொள்ளவே, தமிழில் சிலர் குழந்தைப் போராளிகள் என்று மொழிபெயர்த்…
-
- 0 replies
- 843 views
-
-
யார் இந்த விடுதலைப்புலிகள்! அவர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள்?? விடுதலைப்புலிகள்,செத்தவர்களுக்காக அழுதவர்கள் மத்தியில்,அழுதவர்களுக்காக செத்தவர்கள்.மது,புகையிலை என எந்த தீய பழக்கத்தையும், மேற்கொள்ளாத தியாக மறவர்கள்.மானத்திற்காக மரணத்தை தழுவுகிற மாவீரர்கள்.பெண்களை தாயாக போற்றும் கண்ணியம் கொண்டவர்கள்.தன் எதிரிகளையும் மதிக்கிற மாண்பு தெரிந்தவர்கள்.புறநானூறு கண்ட தமிழனின் வீரம்,மனம்,கொடை,ஒழுக்கம் கொண்டவர்கள். ஆனால்,விடுதலைப்புலிகள் ஆயுதமேந்துகிறார்களே! அவர்கள்,ஏன் ஆயுதமேந்தினார்கள்? பூகோளப்பரப்பில் ஒன்றாக இருந்த ஈழத்தையும், இந்தியாவையும் கடல்நீர் பிரித்தது.கடல்நீர் பிரித்தாலும் , தமிழகத்திலிருந்த தமிழர்களுக்கும், ஈழத்திலிருந்த தமிழர்களுக்கும் இடையிலான உறவுமுறை மா…
-
- 0 replies
- 443 views
-
-
கப்பலேறுவோர் கதைகள்… ஜெரா படம் | THE CANADIAN PRESS/Jonathan Hayward, Ctvnews “எங்களோடு வந்த நேசன் என்ற ஒருத்தர் கப்பலுக்குள்ளயே கடும் வருத்தத்தில செத்துப் போயிட்டார். அங்கயே சடங்குகள செய்திட்டு, கிடந்த இரும்பில பொடிய சேர்த்துக் கட்டி கடலுக்க எறிஞ்சிட்டம்…” என்று சொன்னவர், அடுத்த வார்த்தையைத் தொடங்கும் முன், ஒரு முடக்குத் தண்ணீர் குடிக்குமளவிலான இடைவெளி எடுத்துக் கொள்கிறார். அந்த நினைவு அவரை அசையாதிருக்கச் செய்திருக்க வேண்டும். அவர் சுரேன் கார்த்திகேசு. இறுதிப் போர் முடியும் வரைக்கும் முள்ளிவாய்க்காலில் இருந்து ஊடகப் பணியாற்றிய பத்திரிகையாளர். “முள்ளிவாய்க்காலில இருந்த ஹொஸ்பிடலுக்குத் தரையாலயும், கடலாலயும் வந்து ஆமிக்காரர் அடிக்கேக்க நானும் அங்க காயப்பட்டு படு…
-
- 0 replies
- 452 views
-
-
ஜூலை 30: ஹென்றி ஃபோர்ட் பிறந்த தின சிறப்பு பகிர்வு ஹென்றி ஃபோர்டு... அமெரிக்காவில் இன்று எல்லாரும் கார் வைத்து இருப்பதற்கான அச்சுப்புள்ளி இந்த மனிதரால்தான் போடப்பட்டது. ஒற்றை டைம் பீஸ் பரிசை அக்குவேறு ஆணிவேராக பிரித்துப் போட்டு சேர்த்ததில் தொடங்கிய இயந்திரக் காதல் வாழ்நாள் முழுக்க இந்த ஃபோர்ட் எனும் மேதைக்கு தொடர்ந்தது. அப்பாவின் பண்ணையில் வேலை பார்ப்பதை விட்டு மோட்டார் கம்பெனியில் வேலைக்கு போன அவர் முதல் நிறுவனத்தை விட்டு தூக்கி வெளியே எறியப்பட்டார். அதற்கு பின்னர் அவர் அடுத்தும் தோல்வியே கண்டார். ஒரு நகரும் ட்ராக்டரை முதன்முதலில் பார்த்து வாகனங்கள் மீது ஆர்வம் கொண்டார் அவர். நீராவி இயந்திரங்களை கழட்டி சேர்ப்பது அவற்றை பழுது பார்ப்பது என்று இயங்கிக்கொண்டு இருந்த அவர் ஒ…
-
- 0 replies
- 560 views
-
-
மோடியின் அதிரடி முடிவுகளால் திணறும் தமிழகம்? மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனைத்து வகையிலும் ஆதரவு கொடுக்கும் எண்ணத்தில்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.பி.க்கள், டெல்லியில் நாடாளுமன்றத்திலும் ராஜ்ய சபையிலும் பேசி வருகிறார்கள். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமர் மோடியுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படவில்லை. மாறாக மத்திய அரசின் ரயில்வே வரவு- செலவுத்திட்டத்தை வரவேற்று அறிக்கை விடுத்தார். அடுத்து வந்த பொது வரவு- செலவுத்திட்டத்தையும் வரவேற்று அறிக்கை கொடுத்திருக்கிறார். முன்பிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீதும் அந்த ஆட்சியை வழிநடத்திய பிரதமர் மன்மோகன்சிங் மீதும் தொடுத்த ஏவுகணைகளை பா.ஜ.க. தலைமைய…
-
- 0 replies
- 593 views
-
-
ராஜேந்திர சோழன் 1000 தமிழ்மகன் வங்கக் கடல், கலிங்கம், சுமத்ரா, சீனம்... இங்கெல்லாம் தம் ரதகஜதுரக பதாதிகளுடன் சீறிப் பயணித்தவன் ராஜேந்திர சோழன். அவன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு இது. 'கங்கை கொண்ட சோழன்’ புதினம் மூலம் ராஜேந்திர சோழனின் அசகாய சாதனைகளை விவரித்திருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன். அவரிடம் ராஜேந்திர சோழனின் பராக்கிரமங்களைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லிக் கேட்டோம்... ''ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு மிகப் பெரிய படை திரட்டி, கங்கை வரை போய் வெற்றிக்கொடி நாட்டி வந்த தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் மட்டுமே. அதன்பிறகு மற்ற மன்னர்கள் பகைவரைத் தடுப்பதோடு சரி. தாக்கியதற்கான சரித்திரம் இல்லை. கங்கை கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த ராஜராம் கோமகன் என்பவர், ராஜேந்திர சோழனின் 1000-வது ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்த வேட்டி விவகாரம் – அ.மார்க்ஸ் சென்னை கிரிக்கெட் கிளப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி அரி பரந்தாமனும் இரு மூத்த வழக்குரைஞர்களும் வேட்டி அணிந்து சென்றதற்காக அனுமதி மறுக்கப்பட்ட செய்தி நேற்று சட்டமன்றம் வரைக்கும் வந்துள்ளது. இந்தப் பிரச்சினையை சரியாக விளங்கிக் கொள்ள நாம் இரண்டு உண்மைகளைக் கணக்கில் கொள்ளவேண்டும். 1. இத்தகைய கிளப்புகள் மேல்தட்டு வர்க்கங்களுக்கானவை. ஒய்வு பெற்ற மற்றும் பதவியில் உள்ள அதிகார வர்க்கம், இராணுவ உயர் அதிகாரிகள், கார்ப்பொரேட் வர்க்கம், பெரும் பணக்காரர்கள் தான் இவற்றில் உறுப்பினர்கள். இந்த கிளப்புகளில் வேட்டிக்கு மட்டுமல்ல பைஜாமா, குர்தா, காலர் இல்லாத டீ சர்ட்டுகள், செருப்பு ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை. 2. இது சென்னை கிளப்பில் மட்ட…
-
- 0 replies
- 580 views
-
-
தமிழர் துன்பத்தில் இன்பம் கண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் அநியாயங்களையும் அட்டூழியங்களையும் இஸ்லாம் வெறுக்கின்றது. அதை வெறுக்கின்ற மக்களாகவும் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அநியாயங்கள் என்கின்ற போது அது மனித உரிமை மீறல்கள் அடங்குகின்றது. ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அரசின் சொகுசு வாழ்க்கையும் ஆடம்பர வாழ்க்கையும் கண்ணை மூடிவிட்டது. ஈவிரக்கத்தையும் மறைத்து விட்டது. மனித நேயத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது. இதை நாம் இப்படியும் எடுக்கலாம். அதாவது அடுத்தவன் துன்பத்தில் இன்பம் காணும் கூட்டமாக இன்றைய முஸ்லிம் சமுதாயம். தமிழர் துன்பத்தில் இன்பம் கண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள். எந்த மனித உரிமையை ஏறடெடுத்தும் பார்க்காமல் இருந்தோமோ அந்த மனித…
-
- 0 replies
- 576 views
-
-
பத்து நாட்களுக்கு முன் புத்தம்புது பிரதமர் மோடி தலைமையிலான பிஜேபி அரசின் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ‘இப்படியே போனால், மன்மோகன் சிங் கடந்த இருபது ஆண்டுகளில் சாதிக்க முடியாததை... இரண்டே ஆண்டில் நரேந்திர மோடி சாதித்து விடுவார் என்றே தோன்றுகிறது. அட, இந்தியாவை வெளிநாட்டுக்காரர்களிடம் மொத்தமாக விலை பேசுவதைத்தான் சொல்கிறேன்' என்று எழுதியிருந்தேன். அந்நிய முதலீட்டு மோகத்தில் திளைத்துக் கொண்டிருந்த மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் அரசுகூட இத்தனை வேகமெடுக்கவில்லை. பாதுகாப்புத்துறை, காப்பீட்டுத் துறை, ரயில்வே துறை என்று அனைத்திலும் அதிரடியாக அந்நிய முதலீட்டை நோக்கி மோடி அரசு, அசுர வேகமெடுத்திருப்பதைத்தான் அதில் சுட்டிக்காட்டியிருந்தேன். ‘தொழில்வளர்ச்சி' என்கி…
-
- 0 replies
- 637 views
-
-
யாழ். குடிநீர்ப்பிரச்சினையை தீர்க்க வட மாகாண சபையால் திட்டமொன்றை உருவாக்க முடியுமா? கிளிநொச்சி யாழ்ப்பாணம் நீர் விநியோகத் திட்டம் தொடர்பாக 2014 ஏப்ரல் 29ஆம் திகதி அன்று வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளதாக அறிந்துள்ளோம். இந்தத் தீர்மானம் தீர்க்கதரிசனமற்ற முறையில் அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனிப்பட்டோரினது அகங்கார வெற்றிக்காக எடுக்கப்பட்ட தீர்மானமாகவே இதைக் கருத வேண்டியுள்ளது. மேலும், இத்திட்டம் தொடர்பாகப் பொது மக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் ஒன்று ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்தினையும் இது கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது உண்மையில் எதிர்மாறான விளைவினையே ஏற்படுத்தும் என்கின்ற சாதாரண உண்மை கூட புலப்படத் தேவையான கால அவகாசம், சபை அங்கத்தவர்களுக்கு வழங்க…
-
- 1 reply
- 343 views
-
-
எம் கே நாராயணனின் பதவி பறிக்கப்படுமா? முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்த, அதன் முழுச்சூத்திரவாதியான எம்.கே.நாராயணனை நம்மவர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.அப்போது அவர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார்.பின்பு சோனியா அரசு அவருக்கு மேற்கு வங்க ஆளுநர் பதவியளித்து சிறப்புச்செய்தது.அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, பிரதமர் மோடி அரசு இந்த ஆளுநர்கள் பலரை பதவி விலகுமாறு கேட்டுள்ளது.இந்த ஆளுநர்கள் காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லது அக்கட்சிக்கு மிகவேண்டிய நாராயணன் போன்ற அதிகாரிகள்.எனவே இவர்கள் தாமாகவே பதவி விலகிச்செல்வதுதான் கௌரவமானது.ஆனால் நாராயணன் போன்ற சிலர் அப்படிச்செய்ய மறுப்பதாகத் தெரிகிறது. இதனால் புதிய அரசு வேறொர…
-
- 7 replies
- 1.9k views
-
-
5 வருட கால பதவி முடிந்த நிலையில் இன்று ஜனாதிபதி முன்னிலையில் மீண்டும் வட மாகாண ஆளுநர் ஆக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் சந்திரசிறி இதன் மூலம், தமிழ் மக்களுக்கும், கூட்டமைப்பினருக்கும் மிகத் தெளிவான செய்தி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, முழுமையான இனத்துவேசம் மூலம், வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலில், சிங்கள வாக்குகளை அள்ளி மீண்டும் வெல்ல திட்டமிடப்பட்டுள்ளது தெளிவாகிறது. இதை புரிந்து கொண்ட இந்தியா மற்றும் அமெரிக்கா முள்ளை, முள்ளால் எடுக்கும் முயற்சியில் இம் முறை ஜனாதிபதி தேர்தல் களத்தினை மும்முனைப் போட்டிக்களமாக்க முயல்கின்றன. மகிந்தருக்கு எதிராக ரனிலுடன், சரத் அல்லது சந்திரிகா போட்டியிடலாம் சிங்கள வாக்குகள் மூன்றாகப் பிரிய, முழுமையான …
-
- 3 replies
- 503 views
-
-
இலங்கை – கறுப்பு ஜூன் 2014 முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், அவற்றுக்கான பின்னணியும் !:எம்.ரிஷான் ஷெரீப் இலங்கையில் வாழும் தமிழின மக்களின் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறையானது, 2009 ஆம் ஆண்டு பாரிய யுத்தத்திற்குப் பின்னர் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர் பேரினவாதிகளின் பார்வையானது, இலங்கையில் வாழ்ந்துவரும் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம் மக்கள் மீது திரும்பியிருக்கிறது. இது குறித்து நான் ஏற்கெனவே காலச்சுவடு ( இதழ் – 159, பக்கம் – 26) இதழில் ‘எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள்’ எனும் தலைப்பிலும், உயிரோசை (இதழ் – 156, ஆகஸ்ட் 2011) இதழில் ‘ ‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது?’ எனும் தலைப்பிலும…
-
- 4 replies
- 632 views
-
-
வடக்கிற்கு என மாகாண சபை ஒன்று இருக்கின்ற போதும் அதனை உதாசீனம் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையானது கண்டிக்கத்தக்கது என விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையில் கொள்வனவு திட்டம் விவசாய அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு சிறுப்பிட்டியில் உள்ள ஜனசக்தி பொதுநோக்கு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. – செய்தி பார்த்தீனியம் ஒரு சாதாரண செடி அல்ல. ஆக்கிரமிப்புக்களை. ஒரு பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்ட ஓர் இனம் இன்னொரு பிரதேசத்திற்கு வலுக்கட்டாயமாக இடம்மாறும் போது சில வேளைகளில் அங்கு ஆக்கிரமிப்பு இனமாக மாறிவிடுகிறது. தொடக்கத்தில் யாழ் மாவட்டத்தில் கோப்பாயி…
-
- 2 replies
- 695 views
-
-
விடுப்பு மூலை: படம் பார்க்கப் போன தேசியர்கள் நந்தி முனி தேர் முட்டியடியில் ஓய்வூதியர்கள் வழமைபோலக் கூடினார்கள். அன்றைக்கு வன்னியப்புவோடு கிளாக்கரும், சிங்கள மாஸ்டரும் இருந்தார்கள். கிளாக்கர் 83 யூலை மட்டும் தென்னிலங்கையிலேயே இருந்தவர். நிறையச் சிங்களத் தொடர்புகள் உண்டு. பின்னாளில் தமிழர்களுடைய போராட்டத்தின் தீவிர விசுவாசியாக மாறியவர். சிங்கள மாஸ்டர் சிங்கள ஊர்களில் அரச ஊழியராக இருந்தவர். மூன்று மொழிகளிலும் புலமை கொண்டவர். ஒரு கலாரசிகர். சிங்களத் திரைப்படங்களோடு அதிகம் பரிச்சயமுடையவர். 83 யூலையோடு ஊருக்குத் திரும்பி இயக்கங்களில் மொழிபெயர்ப்பாளராயும் சிங்கள ஆசிரியராயும் இருந்தவர். அதனாலயே சிங்கள மாஸ்டர் என்று அறியப்பட்டவர். முதலில் கிளாக்கர் தான் கதையைத் தொடக்கினார். …
-
- 1 reply
- 1k views
-
-
தமிழர், முஸ்லிம்கள்: சில குறிப்புகள் -சிறு எதிர்வினை- இளங்கோ-டிசே 1. இலங்கையில் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் நடைபெறுகின்ற இவ்வேளையில் தமிழ் X முஸ்லிம் விவாதங்கள் நடைபெறுவதையும் அதனால் மனம் நொந்து சில முஸ்லிம் நண்பர்கள் எழுதியிருக்கின்ற சில பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. இந்த விவாதம்(கள்) தொடங்கிய அடி நுனி எதுவும் தெரியாதபோதும் (அவற்றைத் தேடிப் போக விருப்பமுமில்லை) சிலவற்றை எழுதிவிட விரும்புகிறேன். நம் தமிழ்ச்சூழலில் கருத்துக்களை உதிர்ப்பதென்பது -அதுவும் முக்கியமாய் அரசியல் சார்ந்து- மிகவும் எளிதானது. அவ்வாறு அரைகுறையுமாய் எழுதுபவர்களே பின்னாட்களில் அரசியல் ஆய்வாளர்களாகவோ அல்லது ஊடகங்களில் எளிதில் நுழைந்துவிடக்கூடியவர்களாகவோ அல்லது ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படுபவ…
-
- 2 replies
- 719 views
-
-
ஜெர்மனி பல்கலைக் கழகங்களின் அழைப்புகளையேற்று திராவிட இயக்கமும் - தந்தை பெரியாரின் கொள்கைகளையும் விளக்கி கருத்துரை ஜோய்ஸ்ட் அருங்காட்சியகத்தில் தமிழர் தலைவர் உரையாற்றினார் ஜோய்ஸ்ட் அருங்காட்சியகத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் உரையாற்றுகிறார் கொலோன் (ஜெர்மனி) ஜூன் 7- ஜெர்மனியின் கொலோன் பல்கலைக் கழகம் மற்றும் கல்வி நிறு வனங்களின் அழைப்பையேற்று ஜெர்மன் நாட்டிற்கு சென்றுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தரும், திராவிடர் கழகத் தலைவருமான ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், ஜெர்மனி கொலோன் மய்யப் பகுதியில் உள்ள நியூமார்க்கெட் ஜோய்ஸ்ட் அருங் காட்சியகத்தில் பொது மக்களிடையே, பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், பெண்கள் முன்னேற்றம், மூடநம்பிக்கைகள் ஒழிப்பு குறி…
-
- 2 replies
- 685 views
-
-
பாதுகாப்பு வழங்கத் தவறிய ஜனாதிபதி செல்வராஜா ராஜசேகர் படம் | @ShammasGhouse “குரோதமும் இலஞ்சமும் எமது துக்கத்திற்கு காரணமாகின்றன. அதேபோன்று கருணையும் அன்பும் நிம்மதியின் பாதை என புத்த பெருமானின் போதனைகள் உணர்த்துகின்றன.” “இனம், மதம், குலம், கோத்திரம் என சகலவற்றையும் பிரிப்பது அர்த்தமற்றது. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதை அளவிடுவது ஒரு நபர் இருப்பவர் அல்லது இல்லாதவர் என அளவிடுவதே.” “புத்த பெருமானின் இந்த போதனைகளுக்கிணங்க எம்மை உயர்த்திக் கொண்ட நாம் இன்றும் ஒழுக்க விழுமியங்களையுடைய ஒரு இனமாக உலக மக்களின் முன் தலைநிமிர்ந்து நிற்கிறோம்.” பௌத்தரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வெசாக் செய்தியில் மேலுள்ளவாறு கூறியிருந்தார். மேல்கூறப்பட்டுள்ள புத்தரின் போத…
-
- 1 reply
- 538 views
-
-
கொல்கத்தா: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சி.பி.ஐ விசாரணை நடத்திய நிலையில் மேற்கு வங்க ஆளுநர் பதவியை எம்.கே. நாராயணன் ராஜினாமா செய்துள்ளார். மத்தியில் மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து முந்தைய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டனர். ஹெலிகாப்டர் ஊழல் வழக்கால் நெருக்கடி.. மே. வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் ராஜினாமா!! இதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச ஆளுநர் ஜோஷி, சத்தீஸ்கர் ஆளுநர் சேகர்தத், நாகாலாந்தின் அஸ்வனிகுமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர். கர்நாடகா ஆளுநராக இருந்த பரத்வாஜ்-ன் பதவிக் காலம் முடிவடைந்தது. ஆனால் கேரள ஆளுநர் ஷீலா தீட்சித் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். மேலும் மேற்கு வங்க ஆளுநரான எம்.கே. நாராயணன் தாம் பதவி விலக கால அ…
-
- 3 replies
- 818 views
-
-
தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை சிங்களர்கள் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறார்கள். அதோடு, முஸ்லிம்கள் மீதும் தொடர் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். சர்வதேச நாடுகளும் இந்தத் தாக்குதலை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. 'திடீர் என முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் ஏன்? இவ்வளவு பெரிய பிரச்னை எதனால் நடந்தது?’ என இலங்கையில் இருக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா-அத் துணைச் செயலாளர் ரஸ்மினிடம் கேட்டோம். ''கடந்த சில ஆண்டுகளாகவே தமிழர்கள் என்றாலோ, முஸ்லிம்கள் என்றாலோ இங்கு இருக்கும் சிங்களர்களுக்கும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பிடிப்பது இல்லை. எங்கள் நிம்மதியை மெள்ள மெள்ள பறித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது பிரச்னை வெடித்ததற்குக் காரணமே ஒரு புத்த பிக்குவால்தான். ஒன்ற…
-
- 6 replies
- 941 views
-