Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரிக்கு சேவை நீடிப்பு – உயர் அதிகாரிகள் மத்தியில் குழப்பம் OCT 06, 2018 | 14:03by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று மாத கால சேவை நீடிப்பை வழங்கியிருப்பது, இராணுவ உயர்மட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இராணுவத் தலைமை அதிகாரி மற்றும் பிரதி தலைமை அதிகாரி பதவியில் நியமிக்கப்படும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்த்திருந்த மேஜர் ஜெனரல்கள் மத்தியிலேயே இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ, ஓய்வுபெறாததால், பதவி உயர்வு பெறும் வாய்ப்பை இழக்கும் அல்லது பதவி உயர்வு தாமதமடையக் கூடிய மேஜர் ஜென…

  2. பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. தாமதமாக வந்த பருவமழையாலும் தொடர்ந்து ஏற்படும் காலநிலை மாறுபாடுகளாலும் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 12 மாதங்களில் அரிசியின் சந்தை விலை 11.5% அதிகரித்துள்ளதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் அரிசியின் விலை 3% அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அல்லாடும் அமெரிக்கா முன்பு கம்யூனிஸ்ட்டுகளை கிண்டல் செய்ய ஒரு வாசகம் சொல்வார்கள், ‘மாஸ்கோவில் மழை பெய்தால், மதுரையில் அவர்கள் குடைபிடிப்பார்கள்,’ என்று. உலகமயமாக்கலுக்கு பின்பு இதுவே நிதர்சனம் ஆகிவிட்டது. உலகமயமாக்கல் புத…

    • 3 replies
    • 376 views
  3. இந்திய-இலங்கை அமைதிப்படை மூலம் தமிழர்களை கொலை செய்த ராஜீவ்காந்திய விடுதலைப் புலிகள் கொலை செய்தது புனிதப் போர் என சீமான் தெரிவித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் நாம்தமிழர் கட்சியின் சார்பில் அரண்மனை முன்பு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் டோம்னிக் ரவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாருகையில், இந்திய நாடு மொழி வாரியாக மாநிலமாக பிரிக்கப்பட்ட பின்பு அந்தந்த மாநிலத்தை அந்த மொழித்தவரே ஆழ்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டை மட்டும் ஒரு தமிழன் ஆளவில்லை இதனால் தான் காவேரி, முல்லை பெரியாறு, கூடங்குளம், மீனவர் உட்பட பல்வேறு பிரச்சனைகள் வருகின்றது. மேலும் அமெரிக…

  4. சனல்போர் காணொளி தற்போது வெளிவர காரணம் என்ன? – வேல்ஸ் இல் இருந்து அருஸ் September 11, 2023 இலங்கையில் இடம்பெறும் பூகோள அரசியல் நகர்வுகளில் மேற்குலகம் தனது மற்றுமொரு காயை நகர்த்தியுள்ளது. பிரித்தானியாவை கொண்ட சனல் போர் நிறுவனம் வெளியிட்ட காணொளி என்பது ராஜபக்சா குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலத்தை இல்லாது செய்யும் ஒரு நகர்வு. தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் போரில் இலங்கை அரசுக்கு நிபந்தனைகளின்றி ஆதரவளித்த இந்தியாவும், அமெரிக்காவும் போரின் பின்னர் தமது நிலைகளை உறுதி செய்வதில் காண்பித்த போட்டிகள் தான் இன்றும் இலங்கையை மீளமுடியாத பொறிக்குள் தள்ளிவருகின்றது. போரின் பின்னர் ராஜபக்சாக்களுக்கு இந்திய தரப்பு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததும், சீனா உள்நுளைந்ததும் மேற…

  5. Published By: RAJEEBAN 23 SEP, 2023 | 09:35 AM சனல் 4 ஆவணப்படத்திற்கு உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னணி குறித்த தகவல்களை வழங்கிய ஹன்சீர்ஆசாத் மௌலானா மேலும் பல தகவல்களை அடங்கிய புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் புத்தளத்தின் தென்னந்தோப்பில் இடம்பெற்ற சந்திப்பு – உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முன்னரும் பின்னரும் பிள்ளையானிற்கும் தனக்குமான உரையாடல்கள் உட்பட பல விபரங்களை வெளியிட்டுள்ளார் அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் குறிப்பிடத்தக்க ஆர்வத்தை தூண்டியுள்ளது . ஆவணப்படம் குறித்து சர்வதேச விசாரணை இடம்பெறவேண்டும் எ…

  6. பிரதமருடைய புதிய ஆலோசகரின் பின்னணி பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலராக 7 ஆண்டுக்காலம் இருந்த டி.கே.ஏ.நாயர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு பிரதமரின் ஆலோசகராக செயலாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது. டி.கே.ஏ.நாயர் வகித்துவந்த முதன்மைச் செயலர் பொறுப்பை புலோக் சாட்டர்ஜி என்கிற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1974ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இணைந்த அதிகாரி ஏற்கிறார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புலோக் சாட்டர்ஜி, சோனியாஜிக்கு நெருக்கமானவர் என்றும், அவரை முதன்மைச் செயலராக அமர்த்துவதன் மூலம் பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவருக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் என்று செய்திகள் கூறுகின்றன. டி.கே…

    • 0 replies
    • 635 views
  7. ஆப்கான் படைகளுக்கு இந்தியா பயிற்சி: ஒரு ஆய்வு ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியிருக்கிறது. 2014ல் ஏற்கனவே அறிவித்தபடி, அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் ஆப்கானிஸ்தானில் செல்வாக்கை நிலைநாட்ட அண்டை நாடுகள் பல போட்டி போடும் நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. ஆப்கானிஸ்தானை தனது கேந்திர விவகாரக் கொல்லைப்புறமாகக் கருதும் பாகிஸ்தானுக்கு இந்த ஒப்பந்தம் எரிச்சலைத் தரும் ,எனவே இது இந்திய பாகிஸ்தான் உறவுகளைப் பாதிக்கும் என்றும் சில நோக்கர்கள் கருதுகிறார்கள். ஆனால் இப்படியான பயிற்சிகளை இந்தியா ஏற்கனவே அளித்து வருகிறது என்றும் அது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றும் தமிழோசையிடம் …

    • 0 replies
    • 635 views
  8. எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும் - தேசியத் தலைவர் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கை. பதிவேற்றுனர்: திரு வேந்தனார் திகதி: 28 Dec, 2024 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கையை காலத்தின் தேவை கருதி இன்று மீள் வெளியீடு செய்கின்றோம் .! இன்று இரத்தம் வழிந்தோடும் எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும்.! வரலாற்று ரீதியாக ஈழத்தமிழினம் ஒரு அப்பட்டமானஇன அழிப்பை எதிர்நோக்கி நிற்கின்றது. தமிழரின் தேசிய அடையாளத்தைச் சிதைத்துவிடும் நோக்கில் மிகவும் நுட்பமாகத் திட்டமிடப்பட்டு இந்த இன அ…

      • Sad
      • Thanks
    • 2 replies
    • 295 views
  9. இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனையில் யார் பக்கம் நிற்கப் போகிறது இலங்கை? விமலநாதன் விமலாதித்தன் ஊடகவியலாளர் - சர்வதேச விவகாரங்கள் Getty Images (இதில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் கருத்துகள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்) ஆசியாவின் பிராந்திய வல்லாதிக்க சக்திகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில், இருந்த எல்லைப்பூசலானது உயிர்ச்சேதம் மிக்க மோதலாக உருமாற்றம் கண்டுள்ள வேளையில், ஆசியாவின் பிற நாடுகள் இந்தப் பிரச்சனையை எந்தக் கோணத்தில் அணுகப் போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. தெற்காசியப் புவியியலில் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாய் அமைந்துள்ள இலங்கை, இன்று வரை அந்த இரு நாடுகளுடனும் மிகச்சிறந்த உறவைப் பேணி வருகின்றது. இந்தியாவின…

  10. நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Alamy (இந்தக் கட்டுரை The Conversation-ல் முதலில் வெளியானது. பிறகு Creative Commons உரிமத்தின் கீழ் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.) ஜூன் 1348ல் இங்கிலாந்தில் மக்களுக்கு புதிரான நோய் அறிகுறிகள் தென்படுவதாகத் தகவல்கள் பதிவாயின. அவை லேசான அறிகுறியாக மற்றும் தெளிவில்லாமல் இருந்தன. தலைவலி, வேறு வலிகள் மற்றும் குமட்டல் என இருந்தது. அதைத் தொடர்ந்து வலி மிகுந்த கருப்பான மேடுகள் அல்லது நிண நீர்க் கட்டிகள் போன்றவை அக்குள் அல்லது தொடை இடுக்கில் தோன்றின. அதனால் அதற்கு பூபோனிக் பிளேக் என பெயர் வைக்கப்பட்டது. இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு முற்றிய நிலையில் அதிக காய்ச்சல் ஏற்பட்ட…

  11. காணாமல் போனாரா பிரபாகரன்? தமிழ் அரசியல்வாதிகள் தம்மைப் பற்றிய செய்திகள் பரபரப்பாக உலாவ வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் முன்னாள் போராளிகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாக வலுப்பெற்று வருகிறது. போரின் முடிவில் படையினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு தடுப்புக்காவலில் இருந்த போது, விசஊசி ஏற்றப்பட்டதான ஒரு பரபரப்புக் குற்றச்சாட்டை முன்னிறுத்தி, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அண்மையில் அறிக்கைப் போர்களை நடத்தியிருந்தனர். இந்த விவகாரத்தை அணுக வேண்டிய முறையில் அணுகாமல், சரியான முறையில் கை…

  12. டாக்டர் நெவில் பெர்னான்டோ கொரோனவால் பாதிப்பு. வைத்தியசாலையில் அனுமதிப்பு. இலங்கைத்தமிழர் அவலத்தில், முஸ்லிம்கள் மட்டுமல்ல, சிங்கள கிறித்தவர்கள் கூட கைவரிசை காட்டி உள்ளனர். இன்று, பௌத்தம் இரு சாராரையுமே தனது சுஜரூபத்தினை காட்டி அடங்க வைத்துள்ளது. ஜேஆர் ஜயவர்தன காலத்தில், இந்த நெவில் பெர்னான்டோவுடன், சேர்ந்து பே-ராட்டம் நடத்திய இன்னொரு கிறிஸ்தவர் சிறில் மத்தியூ. இவர்கள் பௌத்தர்களும் பார்க்க, பெரும் இனவாதிகளாக, தம்மை காட்டிக் கொண்டது மட்டுமல்ல, நடந்தும் கொண்டனர். 1983 ஆண்டு தமிழர் மீதான வன்முறையில், (கலவரம் என்பது தவறு, அது ஒரு இனப்படுகொலை) இந்த சிறில் மத்தியூ பண்ணிய கொடுமைகள் சொல்லி மாளாது. சிறில் மத்தியூ, அரசியல் அனாதையாக இறக்க, அவர் மகன் நந்தா மத…

  13. கொரோனா தடுப்பூசி: வாழ்வது நானாகவும், நீங்களாகவும், எல்லோருமாகவும் இருக்கட்டும்! AdminApril 23, 2021 இதில் எவற்றை நாம் முடிவு செய்வது ? இயற்கையின் சாபமா? அன்றி செயற்கை விஞ்ஞான வளர்ச்சியா? சிந்திக்க நேரமில்லை ! காரணம் நாம் தினம் தினம் இழப்பது எம் நேசமான தமிழ் உறவுகளை உலகின் அற்புதமான உயிர்களை. ஆனாலும் எம்மை நாம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும். உலகெங்கிலும் வாழும் எம் ஈழத்தமிழ் மக்கள் அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய சுகாதார அறிவுரைகளுக்கு மதிப்பளித்து அதனைக் கடைப்பிடித்து நடந்து கொள்ள வேண்டும். அண்மையில் திடீர் மாரடைப்பால் இறந்தவர் ஒருவரின் இறுதிச்சடங்கில் சாவடைந்தவரின் பிள்ளைகள் சாவுவீட்டுக்கு வருகின்றவர்களுக்கு cimetiére இல் அறிவுறுத்தல்…

  14. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் பெரும்பான்மை இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், இலங்கை தமிழர்கள் இந்த வெற்றியை எவ்வாறு பார்க்கின்றார்கள் என்பது குறித்து ஆராய்ந்தோம். திமுக ஆட்சிக்கு வந்தமை குறித்து மலையகத்தின் கண்டியைச் சேர்ந்த பச்சமுத்து விஜயகாந்தனிடம் பிபிசி தமிழ் வினவியது. கருணாநிதியை போன்றே, ஸ்டாலின் ஆட்சியை தொடர்வார் என்று தான் எண்ணுவதாக அவர் கூறுகின்றார். பெரும்பாலும் ஸ்டாலின் மூலமாக, தமிழர்களுக்கு விடிவு வரும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார். எனினும், எந்தவொரு கருத்தையும், எவரையும் நம்பி கூற முடியாது எனவும் அவர் கூறுகிறார். அதேவேளை, இலங்கை வாழ் தமிழ் மக்களுக்க…

  15. பேர்ள் கப்பல் தோற்றுவித்த அச்சத்தால் பெரும் நெருக்கடிக்குள் மீனவ சமூகம் நா.தனுஜா எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தோற்றுவித்துள்ள அச்சத்தினால் நீர்கொழும்பு களப்பிற்குள் கப்பல்கள் நுழைவதும் பாணந்துறையில் இருந்து நீர்கொழும்பு வரையான கடற்பிராந்தியத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மீன்பிடித்திணைக்களத்தினால் உடனடியாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஏற்கனவே பல்வேறு பாதிப்புக்களை எதிர்க்கொண்டுள்ள மீனவ சமூகம் மீண்டும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது. பேர்ள் கப்பல் கடலுக்குள் மூழ்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து, அதனை ஆழ்கடலுக்கு இழுத்துச்செல்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த கப்பல…

  16. அமெரிக்காவின் உதவியை திரும்ப செலுத்த வேண்டியதில்லை அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் துறைமுக நகர விதிமுறைகளின் பிரகாரம் கறுப்பு பணமோசடி, ஊழல் நடைமுறைகளுக்கு இடமளிக்கின்றமைதொடர்பாக கவனமாக இருக்குமாறு அரசாங்கத்தைகேட்கவேண்டியுள்ளது *இலங்கை மிகப்பாரிய வர்த்தக மற்றும் பொருளாதார ஆற்றலைக் கொண்ட நாடு *ஆப்கானிஸ்தானில் மாற்றமடைந்து வரும் சூழ்நிலைக்கு ஒரு கூட்டான அணுகுமுறையை அமெரிக்கா விரும்புகிறது ,இலங்கையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வர்த்தகரீதியான சூழலின் முன்னேற்றம் குறித்து அமெரிக்க தூதர் அலைனா பி.டெப்ளிட்ஸ், டெய்லி மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்கருத்து தெரிவித்திருப்பதுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் குவாட்[குவாட் என்பது அமெரிக்கா, ஜப்பான், …

  17. பயனற்றுப்போகும் பொது முடக்கம் September 10, 2021 — கருணாகரன் — கொரோனா மரணத்தைத் தடுப்பதற்கும் தொற்றைக் கட்டுப்படுத்துவற்கும் அரசாங்கம் அறிவித்திருக்கும் பொது முடக்கத்தை மக்கள் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு உள்ளிட்ட தமிழ்ப்பகுதிகளில். இங்குதான் மக்கள் அதிகமாக தெருவில் நிறைந்திருக்கிறார்கள். வழமையைப் போலச் செயற்படுகிறார்கள். இங்கே பொது முடக்கத்தைப் பலரும் பொருட்படுத்தவில்லை. இது மிகப் பெரிய தீங்கை விளைக்கக் கூடியது மட்டுமல்ல, பொறுப்பற்ற செயலுமாகும். தாமும் பாதிக்கப்பட்டு, மற்றவர்களையும் அபாயத்துக்குள் தள்ளி விடுவது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை, மக்களின் இயல்பு வாழ்க்கை, எதிர்காலத் தலைம…

  18. இலங்கை விவகாரத்தினை வைத்து... காய்களை நகர்த்தும், இந்தியா மற்றும் சீனா? இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் டொலர்கள் நிதி உதவியை வழங்க இந்தியா தயாராக உள்ளது. அத்துடன் இலங்கை விடயத்தில் இந்தியா அண்மைய ஆண்டுகளில் சீனாவிடம் இழந்த இடத்தை புதுடில்லி மீண்டும் பெற முயற்சிக்கிறது என ரொய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. 1948 சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, அதன் முதல் கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலையில் இருக்கும் இலங்கை, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் உணவு, எரிசக்தி உட்பட நிதிக்கடனையும் கோரி வருகிறது. ஆசிய ஜாம்பவான்களாக இருக்கும் சீனாவும், இந்தியாவும் ஏற்கனவே பில்லியன் கணக்கான டொலர்களை நிதி உதவியாக…

  19. வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதில் இலங்கை எதிர்நோக்கும் இடர்பாடுகள் Veeragathy Thanabalasingham on June 21, 2022 Photo, AP Photo/Eranga Jayawardena, Indianexpress பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் சரியாக ஒரு மாதமும் ஒரு கிழமையும் கடந்துவிட்டது. தன்னை ஒரு நெருக்கடிகால பிரதமர் என்று வர்ணிக்கும் அவர் இலங்கை மக்கள் மூன்று வேளை உணவு உண்பதை உறுதிசெய்வதே தனது முதல் பொறுப்பு என்று பதவியேற்ற அன்றே சொன்னார். பிறகு நாட்டின் பொருளாதாரம் எதிர்வரும் மாதங்களில் மேலும் மோசமடையும் ஆபத்து இருக்கிறது என்றும் மக்கள் இரு வேளை உணவுடன் சமாளிக்கவேண்டிய நிலை வரக்கூடும் என்றும் அபாயச்சங்கு ஊதினார்.…

    • 1 reply
    • 332 views
  20. ஏன் இந்த அவலம் ? என்.கண்ணன் “ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிலைநிறுத்தி பாதுகாப்பேன் என்று பாராளுமன்றத்தில் உறுதியளித்து விட்டு, நல்லூரில் வந்து, ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டவர்கள் திலீபனை நினைவேந்த தகுதியற்றவர்கள் என்று நாடகமாடுகிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி” இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம், தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்களுக்கு நீதிமன்றங்களின் மூலமாக தடை உத்தரவுகளை பெற்றிருந்த நிலையில், சாவகச்சேரி சிவன் கோவில் பகுதியில் 10 கட்சிகள் திடீரென ஒன்று கூடிய நினைவேந்தலை முன்னெடுத்திருந்தன. செல்வச்சந்நிதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட அந்த அடையாள உண்ணாவிரத நிகழ்வுக்கு பருத்தித்த…

  21. அண்மையில் உங்களின் twitter பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் “இஸ்லாமிய பெயர்கொண்ட அடிப்படைவாதிகள், “அராபிய தோற்றப்பாட்டை” நகல் செய்யும் சமீபகால கலாச்சாரத்தை கைவிட்டு, இலங்கை சமூகத்துடன் அடையாளப்படும் வழியை தேடவேண்டும்” எனும் செய்தியை பார்த்ததும் மிகவும் வேதனை அடைந்தோம். முஸ்லிங்கள் வலிகளாலும் வேதனைகளாலும் இழப்புகளாலும் உணர்வு இழந்து இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் கூறிய கூற்று எரிகிற வீட்டில் என்னை ஊற்றுவது போலவே காணப்படுகிறது. தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் எனும் உயர்ந்த பொறுப்புள்ள அமைச்சராக இருந்து கொண்டு இவ்வாறு ஒரு சமூகத்தை பற்றி பேச முடியுமா அமைச்சர் அவர்களே! தற்பொழுது நாட்டில் ஏற்பட்டு இருக்கும் கலவரம் பற்றி நீங்கள் அறிந்து இருப்பீ…

  22. இந்துத்துவ சாதனைகள்: இமாலய ஊழலும், இரக்கமற்ற படுகொலைகளும்! Feb 06, 2023 07:00AM IST ராஜன் குறை கடந்த வாரம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றும் , பிபிசி (BBC – British Broadcasting Corporation) எனப்படும் பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் ஒன்றும் இந்தியாவில் பரவலான அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன. வெறுப்பரசியலுக்கு எதிராக ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை மேற்கொண்ட பாரத் ஜாடோ யாத்திரை முடிவடைந்த தருணத்தில் அந்த பிரமாண்டமான முயற்சியின் அவசியத்தை இந்தியக் குடியரசை நேசிக்கும் எல்லா தேசபக்தர்களுக்கும் உணர்த்தும் விதத்தில் இந்த இரண்டு வெளிப்பாடுகள் அமைந்துள்ளன. ஹிண்டன்பர்க் அறிக்கை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.