நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
தமிழ்தேசியம் மீதும் தேசிய தலைவர் மீதும் பற்று கொண்டு இனவிடுதலைக்காக ஒலித்த குரல்ஒன்று ஓய்ந்து போனது..#சாகுல் அமீது.ஐயாஆழ்ந்த இரங்கல்
-
- 5 replies
- 456 views
-
-
பதிலளிக்க தவறினால்....... ஸ்ரீலங்கா அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தமிழ் மக்களின் உாிமைக்கான 30 வருட போராட்டத்தில் உயிாிழந்த தமிழ் மக்களையும், போராளிகளையும் நினைவு கூற தடை விதிப்பது தமிழா்களின் உாிமைகளை மறுதலிக்கும் ஒரு செயற்பாடு என தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் கூட்டாக தெரிவித்துள்ளன. எனவே ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்த தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் என அக் கட்சிகள் கூட்டாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஜனநாயாக போராளிகள், தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகிய தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் இன்று மாலை நல்லூர் இளங்கலைஞா் மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தன. இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு …
-
- 2 replies
- 1k views
-
-
இந்திய அமைதிப்படையில் இலங்கையில் பணிபுரிந்த இந்திய ராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் அவர்கள் “Talk to TBC” எனும் எமது சமூக வலைத் தளம் இலங்கை அரசியல் நிலவரம் தொடபாக வழங்கிய நேர்காணல். வினா: இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், அதனூடாக இந்திய – இலங்கை நலன் சார்ந்த விடயங்கள், பிராந்திய அளவில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் போன்றனவற்றை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர் கொள்வது? இவை குறித்த சில விடயங்களை எதிர்பார்க்கிறோம். விடை: ஒரு வகையில் பார்த்தால் இவை பழைய நிலைக்கே திரும்பியுள்ளன. அதாவது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போரிற்கு முன்னர் இருந்த மட்டத்திற்குச் சென்றுள்ளது. ஆனால் உலக சூழலும், இலங்கையின் உள்நாட்டுச் சூழல்களும் மற்றும் இந்திய – பசுபிக் பெருங்கடல் சூழலும் …
-
- 2 replies
- 563 views
-
-
மர்யம் அஸ்வர் பிபிசி மானிட்டரிங் குழு புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இலங்கையில் ஆளும் ராஜபக்ஷ சகோதரர்களின் தேர்தல் வாக்குறுதியை உண்மையாக்கும் வகையில், புதிதாக அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு, அந்நாட்டின் அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்கான முதலாவது வரைவுக்கு கடந்த 2ஆம் தேதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதையடுத்து அரசு அறிவிக்கையில் வெளியிட்பபட்ட அந்த வரைவு திருத்தம், அடுத்த இரு வாரங்களில் நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்ப…
-
- 0 replies
- 554 views
-
-
தமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் ? பகுதி 1 நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலானது, அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் ஒரு தெளிவான செய்தியை சொல்லியிருக்கின்றது. அதாவது நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால் மக்கள் மாறிவிடுவார்கள் அத்துடன் உங்களை தூக்கி வீசிவிடுவார்கள் என்பதே அந்தச் செய்தி. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் பல்வேறு கணிப்புக்களும், பலவாறான எதிர்பார்ப்புக்களும் உலவியது. சிலர் என்ன இருந்தாலும் இறுதியில் எங்களுடைய மக்கள் – வீட்டுச் சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார்கள் என்றவாறான ஆருடங்களை கூறினர். இன்னும் சிலரோ இம்முறை தமிழ்த் தேசிய மாற்றுத்தரப்பினர் கணிசமான வெற்றியை காண்பிப்பர் என்றனர். குறிப்பாக நீதியரசர் விக்னேஸ்வரன்…
-
- 0 replies
- 323 views
-
-
தமிழ் தேசியத்திலிருந்து வழிமாறிச் செல்லாத முறைமையில் மக்களை வழிநடத்துவோம்; துரைராஜசிங்கம் நேர்காணல் August 24, 2020 தமிழ் தேசியம் பேசப்பட வேண்டிய விடயம். மக்களுக்கு சில மாயைகள் ஊட்டப்பட்டிருக்கின்றன, தமிழ் தேசியம் மிகவும் முக்கியமானது. அந்த வகையிலே தமிழ் தேசியத்திலிருந்து மக்கள் வழிமாறிச் செல்லாத முறைமையில் மக்களை வழிநடத்துவோம் என, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கி.துரைராஜசிங்கம்; தினக்குரலுக்கு அளித்த நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது நேர்காணல் வருமாறு; கேள்வி :- நடந்து முடிந்த 2020, பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட நிலைமையினை எவ்வாறு பா…
-
- 5 replies
- 816 views
-
-
பி.கே.பாலச்சந்திரன் அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த வரைவுக்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள்ளும் அதன் நேச அணிக் கட்சிகள் மத்தியிலும் கிளம்பிய பல்வேறு எதிர்ப்புகளை தொடர்ந்து அந்த வரைவை மீள்பரிசீலனை செய்வதற்கு பொதுஜன பெரமுன தீர்மானித்தது. அந்த வரைவுக்கு ஆட்சேபங்களின்றி அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியதுடன் வர்த்தமானியிலும் கூட பிரசுரிக்கப்பட்டிருந்தபோதிலும், அது பொதுவெளிக்கு வந்ததும் பொதுஜன பெரமுன உள்ளும் அதன் தலைமையிலான கூட்டணிக்குள்ளும் எதிரணி மற்றும் ஊடகங்கள் மத்தியிலும் மிகவும் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்கவேண்டி வந்தது. இதன் மூலமாக அந்த வரைவில் இருக்கக்கூடிய சர்ச்சைக்குரிய அம்சங்களை ஆராய்ந்து தனக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச குழுவொன…
-
- 0 replies
- 403 views
-
-
இங்கிலாந்து வாழ் பெற்றோர், மாணவருக்கு கடந்த கோடைகாலத்தில் நடந்திருக்க வேண்டிய ஜிசிஎஸ்சி பரீட்சை ரத்தாகி, ஆசிரியர் ஊகத்தின் அடிப்படையில் பெறுபேறுகள் வழங்கப்பட்டன. சில மாணவருக்கு சில பாடங்களில் எதிர்பார்த்த பெறுபேறுகள் வந்திருக்காது. உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம். இவ்வாண்டு நவம்பர் மாதம், இந்த பரீட்சை நடக்கின்றது. விரும்புபவர்கள் அமரந்து, விரும்பிய பாடங்களின் பெறுபேறுகளை அதிகரிக்க முடியும். உங்கள் பாடசாலையுடன், பாடசாலையை விட்டு வெளியேறி இருந்தால், சம்பந்தப்பட்ட பரீட்சை நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும். உங்கள் பெறுபேறுகள், பல்கலைகழக அனுமதிகளுக்கு முக்கியமானது என்பதால், நீஙகள் ஏ/எலில் படிக்கும் பாடங்களில் ஜிசிஎஸ்சி பெறுபேறுகளை அதிகரிக்க முடியும்.…
-
- 14 replies
- 1.8k views
-
-
டி.பி.எஸ்.ஜெயராஜ் (This is the Tamil Version of the English Article “Life and Times of Dynamic Tamil Leader Appapillai Amirthalingam” by D.B.S.Jeyaraj in the “Political Pulse” Column of the “Daily FT” on August 26th 2020) அமிர் அல்லது அமுதர் என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட நன்கு பிரபல்யம் வாய்ந்த இலங்கை தமிழ் அரசியல் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 93ஆவது பிறந்த தினம் அண்மையில் (ஆகஸ்ட் 26) வந்துபோனது. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்(26 ஆகஸ்ட் 1927 – 13 ஜூலை 1989) நான்கு தசாப்த காலம் நீடித்த சிறப்பு மிகு அரசியல் வாழ்வில் அமிர்தலிங்கம் 20வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். சமஷ்டி கட்சி என்று அறியப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியினதும் …
-
- 119 replies
- 9.7k views
- 1 follower
-
-
அமெரிக்காவுடன் 2007 இல் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்படிக்கையே விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழிக்க உதவியது- வெளிவிவகார செயலாளர் Rajeevan ArasaratnamSeptember 14, 2020 அமெரிக்காவுடனான முன்னைய பாதுகாப்பு உடன்படிக்கையான ஏசிஎஸ்ஏ 2007 இல் கைச்சாத்திடப்பட்டு 2017 இல் புதுப்பிக்கப்பட்டது. அந்த உடன்படிக்கை விடுதலைப்புலிகளின் மிதக்கும் ஆயுதங்களஞ்சியங்களை கண்டுபிடித்து அழிக்க உதவியது. ஆனால் சோபா பிரச்சினைக்குரியது ஏனென்றால் அது அமெரிக்க பாதுகாப்பு தரப்பினர் இலங்கையில் ஆயுதங்கள் தொலைதொடர்பு சாதனங்களை கொண்டு செல்வதற்கும்,இலங்கையின் சட்டகட்டமைப்புக்கு அப்பால் தங்கள் வாகனங்களை பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கும் என இலங்கையின் வெளிவிவகார செயலாளர் ஜயநத் கொலம்பகே தெரி…
-
- 0 replies
- 393 views
-
-
சிங்கள வரலாற்றினுள் புகுந்து குடையும் விக்கியர் இன்று பாராளுமன்றில், பேசிய யாழ் மாவட்ட எம்பி விக்கினேஸ்வரன், திருகோணமலை திரியாய பகுதியில், மக்களின் விவசாய நிலத்தினுள் செல்ல விடாமல் ஒரு பிக்கு ஒருவர் தடுத்துள்ளமை, மிகவும் கவலைக்குரியது. 40% மக்கள் விவசாயத்தினை வாழ்வாதாரமாக கொண்டுள்ள ஒரு நாட்டில், தீடீரென எந்த வித அரச முன்னெடுப்புகளும் இல்லாமல், ஒருவர் விவசாயிகளை தடுப்பதை அனுமதிக்க முடியாது, இதனை பிரதமர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று தெரிவித்தார். மேலும், இந்த வரலாற்று சம்பந்தமான இடங்களை தெரிவு செய்யும் வேலைகளை தனிமனிதர்களிடம் கையளிக்காமல், தமிழ், இஸ்லாமிய, சிங்கள மற்றும் தென்னாசிய வரலாறு தெரிந்த வெளிநாடு ஆய்வலர்களை உள்ளடக்கிய ஒரு குழு ஒன்றினை அமைக்க வேண்டும்…
-
- 18 replies
- 2.7k views
-
-
இன்றைய பார்வையில் 1987 இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கை -கேணல்.ஆர்.ஹரிகரன்- இலங்கையில் புதிய அரசொன்றை வரைவதற்கான செயன்முறைகளில் ராஜபக்ச அரசாங்கம் இறங்கியிருக்கிறது. முழுமையான புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவதற்கு முன்னதாக முன்னைய நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டில் கொண்டுவந்த 19ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரங்களை மீண்டும் வழங்குவதற்கு வகைசெய்யக்கூடிய 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் முன்வைத்திருக்கிறது. அது பற்றிய அரசியல் வாதப்பிரதிவாதங்கள் இலங்கையில் தீவிரமாக மூண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்நிலையில், இலங்கையில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்த அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தில் பெ…
-
- 0 replies
- 593 views
-
-
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகிகளான கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் விலகியிருப்பது, அந்தக் கட்சியின் தம்பிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது, நாம் தமிழர் கட்சியின் போக்கில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ``என் சாவை எதிர்நோக்கிக் காத்திருந்தவர்கள் கல்யாணசுந்தரமும் ராஜிவ் காந்தியும்...’’' என்ற சீமானின் காத்திரமான குற்றச்சாட்டு நாம் தமிழர் கட்சியினரையும் தாண்டி தமிழக அரசியல் வட்டாரத்தை அதிரவைத்திருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர் கல்யாணசுந்தரம், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் தொடர்ந்து கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வந்ததாகக் கூற…
-
- 0 replies
- 853 views
-
-
துப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இலங்கையில் பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானம் எட்ட இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இந்து அமைப்புக்கள் பாராட்டுக்களை தெரிவித்தாலும், முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. மாடறுப்பு செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தின் போது இந்த யோசனை நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, ஆளும் கட்சி உறுப்பினர்…
-
- 0 replies
- 916 views
-
-
ரஜினி ஏன் கட்சி ஆரம்பிக்க மாட்டார்? ஆர். அபிலாஷ் நவம்பரில் ரஜினி கட்சி ஆரம்பிப்பது உறுதி எனச் சொல்லிசேனல்கள் விவாதங்கள் நடத்தி வருகின்றன. ரஜினி கட்சிஆரம்பிப்பார் எனச் சொல்லி கால் நூற்றாண்டு கடந்து விட்டது; அப்படிச் சொன்னவர்களுக்கே தாடி, மீசை நரைத்து, தலையெல்லாம் சொட்டையாகி விட்டது. இனியும் ஏன்யாமற்றொரு தலைமுறையை குழப்பறீங்க என காறித்துப்பலாம் தான். ஆனால் அதைவிட முக்கியமாய், இப்போது கட்சி ஆரம்பத்தால்ரஜினிக்கு என்ன பிரச்சனைகளெல்லாம் வரும் எனக் கேட்பதுபயன் தரும். 1) ரஜினிக்கு சமூக அரசியல் ஆர்வமோ பிரக்ஞையோ இல்லை. ஒருங்கிணைப்புத் திறனும் இல்லை. அவர் அரசியலுக்கு ஏற்றவரேஅல்ல. இதை நம்மை விட நன்றாக ரஜினியும் லதாவும் அறிவார்கள…
-
- 0 replies
- 837 views
-
-
-
- 0 replies
- 325 views
-
-
அசரமாகக் கொண்டுவரப்படும் 20 ஆவது திருத்தம்; அரசாங்கத்தின் உடனடி இலக்கு என்ன? September 5, 2020 பொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றாக அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முழு வீச்சில் ஆரம்பித்துள்ளது. சட்டமா அதிபரின் அங்கீகாரம் அதற்குக் கிடைத்துள்ள நிலையில், அமைச்சரவையும் அதனை ஏற்றுக்கொண்டு வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று வாரங்களுக்குள் இது பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கக்கூடிய ஒரு திருத்தம் என 20 ஆவது திருத்தத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சிகள், அதற்கு எதிராக நீதிம…
-
- 0 replies
- 347 views
-
-
-என்.கண்ணன இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முற்பட்ட காலங்களில், மாபியா என்றால், அது பிரதானமாக போதைப்பொருள் கடத்தும் நிழல் உலக குழுக்களைத் தான், குறிப்பதாக இருக்கும். ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் கும்பல்கள் தான் மாபியா என்று அழைக்கப்பட்டன. குறிப்பாக, இத்தாலியின் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தான் மாபியா என்ற பெயரில் அறியப்பட்டன. இப்போது இலங்கையில் பல மாபியாக்கள் இருக்கின்றன. போதைப்பொருள் மற்றும் அதனை சார்ந்த குற்றங்களில் ஈடுபடும் மாபியாக்கள் இருக்கின்றனர். அரிசி பதுக்கல் மாபியா, மணல் கடத்தல் மாபியா, போன்ற பல வகை மாபியாக்கள் அரசியல்வாதிகளால் அடையாளப்படுத்தப்படுகின்றன. இப்போது புதிதாக மின்சார மாபியா பற்றியும் பேசப்படுகிறது. அரிசி உள்ளிட…
-
- 0 replies
- 327 views
-
-
திசைதிருப்பப்படும் இளமையின் ஆற்றல்கள்.! - நா.யோகேந்திரநாதன்.! இளமைக் காலத்தை மனிதனின் வாழ்வுக்காலப்பகுதியின் வசந்தம் எனக் கூறப்படுவதுண்டு. அந்த வசந்தத்துக்குள் துணிவு, நேர்மையின் நின்றுபிடிக்கும் பற்றுறுதி, அநீதிகளைக் கண்டு கொதித்தெழும் இயல்பு, கூட்டு செயற்பாட்டின் மீது நம்பிக்கை எனத் தமக்கும், தாம் வாழும் சமூகத்துக்கும் பயனுள்ள வகையிலான சிறப்பம்சங்கள் மேலோங்கியிருப்பதைக் காணமுடியும். காலங்காலமாக எமது சமூகத்தில் இளைஞர்களிடையே நிலவி வரும் ஆரோக்கியமான அம்சங்கள் திசைதிருப்பப்பட்டு இளைஞர்களை மட்டுமின்றி எதிர்கால சமூகத்தையே ஒரு சீரழிவுக் கலாச்சாரத்துக்குள் தள்ளிவிடுமோ என அச்சமடையும் சூழ்நிலை மெல்ல மெல்ல தோற்றம் பெற ஆரம்பித்துள்ளது. இவை ஒரு கலாச்சாரம், பண்பாடு உள…
-
- 0 replies
- 341 views
-
-
திராவிட ஆதரவாளரின் மேடை பேச்சுக்கு #பதில் அளிக்கும் இளைஞர்...
-
- 1 reply
- 501 views
-
-
30 ஆண்டு கொடுஞ்சிறை : விடுதலை எப்போது? - நிர்வாகத்திற்கு இந்த திரியை நாம் தமிழர் அரசியலுக்குள் நகர்த்த வேண்டிய தேவையோஇல்லை - நி......👍
-
- 6 replies
- 1.1k views
-
-
கூட்டமைப்பு சுய பரிசோதனை செய்து பாதையை மாற்றியமைக்க வேண்டும்; ஜனா நேர்காணல் August 25, 2020 “கடந்த போராட்ட காலங்களில் எமது மாவட்ட மக்களும் மாவட்டமும் அபிவிருத்தியில் பின்தங்கி அந்நியப்பட்டிருப்பதனால் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டிய காலத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் சிரேஷ்ட அரசியலாளர் என்ற ரீதியில் ஏனையவர்களை அரவணைத்து பயணிக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது அந்த கடமையினை செவ்வனே நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றது. கூட்டமைப்பு தன்னை சுய பரிசோதனை செய்து தமிழ் மக்களின் மனநிலைக்கேற்றவாறு தங்களது பாதையை மாற்றியமைக்க வேண்டும்” என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொருளாளரும் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் க…
-
- 1 reply
- 512 views
-
-
வெல்லவாய, ஹண்டபனகல பகுதியில் நேற்று (28) பிற்பகல் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்ததாக வெல்லவாய பொலிசார் தெரிவித்தனர். நவகமுவாவிலிருந்து கட்டராகம பகுதிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் குழு ஹண்டபனகல பகுதியில் தரித்து, மதுபான விருந்து வைத்துள்ளனர். இதன்போது இரண்டு கிராமவாசிகளைத் தாக்கி அவர்களின் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த ஹடபனகல பகுதி கிராம மக்கள் சுற்றுலாப் பயணிகளை சுற்றிவளைத்து தாக்கி, முழங்காலில் உட்கார வைத்துள்ளனர். இரண்டு கிராமவாசிகளையும் தாக்கிய சில இளைஞர்களை மட்டுமே, கிராமவாசிகள் தாக்கியுள்ளனர். ஏனையவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. காயமடைந்த 6 பேரும் மொனராகல பொது வைத்தியசாலை மற…
-
- 4 replies
- 575 views
-
-
சங்கிகளின் கொடூரமான திட்டங்கள் | RSSன் ரகசிய சுற்றறிக்கை | இந்துத்துவ அரசியல் |
-
- 0 replies
- 309 views
-
-
காணாமலாக்கப்பட்டோரைத் தேடுதல்: தொடரும் துயரின் ஒரு சாட்சி பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்குவதற்கு உபயோகிக்கப்பட்டு வந்ததும், அண்மைக் காலம் வரை கொழும்புப் பகுதியில் ஒரு பெரும் அழகான காலனித்துவக் காலத்துக் கட்டடத்தில் இயங்கி வந்த காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் (Office Of Missing Persons) அதன் முக்கியத்துவத்தை இழந்து, தற்போது கொள்ளுப்பிட்டி, காலி வீதியில் ஒரு சிறிய அலுவலகத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. முன்னர் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஒரு பகுதியாக இந்த அலுவலகம் இருந்தது. அந்த அமைச்சு இப்போது இல்லை. இந்த மாதத்தின் பொதுத் தேர்தலின் பின்னர், காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் அமைசர் அலி சப்ரியின் கீழான ந…
-
- 0 replies
- 291 views
-