நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
முஸ்லிம் சமூகம்; கற்பிக்க தவறிய பாடம் மொஹமட் பாதுஷா / 2019 செப்டெம்பர் 01 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 12:57Comments - 0 அரசியல் தொடர்பான விமர்சனம் என்று வரும்போது, நாம் பொதுவாக அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கின்றோம். அரசியல்வாதிகளுக்கு அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பதில், வாக்காளர் பெருமக்களின் வகிபாகம் மிகப் பெரியது என்பதையும் பிழையான அரசியல்வாதிகளை மீண்டும் மீண்டும் தெரிவுசெய்திலும், அவர்களுக்குப் பாடம் புகட்டுவதிலும், மக்கள் விடுகின்ற தவறுகளை நாம் பெரிதாகப் பேசுவதில்லை. அவ்வாறாக, முஸ்லிம்களுக்கான அரசியலை சரிபடுத்தும் விடயத்தில், அச்சமூகம் விட்ட தவறுகள் பற்றியும் பேச வேண்டியிருக்கின்றது. ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப…
-
- 1 reply
- 786 views
-
-
முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னர் நாம் தொடர்ந்து வலியுறுத்தியும் எல்லோரையும் கேட்டுக்கொண்டுமிருப்பது ஒன்றே ஒன்றை தான். இனியாவது ஒரே அணியில் எல்லாரும் ஒரு பொது உடன்பாட்டின் அடிப்படையின் இணைந்து கொண்டு அடுத்த கட்டம் பற்றிய கருத்து பரிமாற்றங்களுக்கு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என்பதே! இன்றைய இறுக்கமான கால கட்டத்தில் குறிப்பிட்ட சிலரின் அதிகாரப்போட்டி, அதை வெளிப்படுத்தும் விதம், என்பன எம் தமிழ் ஊடகங்கள் ஊடகாவே திரிக்கப்பட்டு வியாபார ரீதியில் அவை விற்பனைத்திரியாக்கப்பட்டுள்ளது என்பதை சகல தமிழ் மக்களுக்கு தெரிவிக்கும் கடமையும் பொறுப்பும் பொறுப்பு வாய்ந்த ஊடகங்களின் பணியாகும். சின்ன குடில் எனினும் நெறி தவறாது வாழ வேண்டும் என்பது தமிழ் மக்களின் விருப்பு. அது புலம்பெயர…
-
- 0 replies
- 784 views
-
-
பார்ப்பனீயத்தால் பார்க்க முடியுமா? மின்னம்பலம்2021-11-08 ராஜன் குறை சென்ற வாரம் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தன. ஒன்று ஜெய் பீம் என்ற திரைப்படம் ஓடிடி எனப்படும் வலைதளத் திரைப்பட சேவையில் நவம்பர் 2ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களைப் பார்வையாளர்களின் உணர்வு பொங்கும் எதிர்வினைகளால் மூழ்கடித்தது. நவம்பர் ஒன்றாம் தேதி ஓடிடியில் வெளியாகும் முன்பே இந்த படத்தின் பிரிவியூ காட்சிகள் அக்டோபர் இறுதியில் சென்னையில் திரையிடப்பட்டன. இருளர் பழங்குடி சமூகத்தினர் காவல் துறை அத்துமீறல்களால் பாதிக்கப்படுவதையும், பொய் குற்றச்சாட்டில் லாக் அப்பில் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு ஒருவர் கொலையுண்டதை காவல் துறை மறைத்ததையும், இடதுசாரி இயக்கங்களும்…
-
- 8 replies
- 784 views
- 1 follower
-
-
கேள்விக்குறியான எமது இனம்: புலம்பெயர் தேசத்திலிருந்து பிறைநிலவு சீனா, ரஷ்யாவின் ஆயுத பலத்துடனும் இந்தியாவின் இராணுவ தொழில் நுட்ப உதவிகளுடனும் தமிழீழத்தில் உள்ள தமிழினத்தை இனச்சுத்திகரிப்பு செய்த இலங்கை அரசாங்கம் இன்று தாம் யுத்தத்தில் வெற்றி பெற்றதாகவும் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டதாகவும் இலங்கையின் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது. இந்த அறிவிப்பால் தென்னிலங்கையில் பட்டாசு சந்தோசத்துக்காகவும் வட இலங்கையில் பட்டாசு தமிழினழிப்புக்கும் சிங்கள வெறியர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழர்களாகிய எமது வாழ்க்கை, உரிமை, உறவுகள், சொத்துக்கள் எல்லாமே இன்று கேள்விக்குறியாகியுள்ளது. ஏனெனில், எமது தேசியத்தலைவருக்கு என்ன நடந்தது என்பது இன்னும் நமக்கு தெளிவாகத்தெரியாது. “எமது…
-
- 0 replies
- 784 views
-
-
பதிக்கப்டட்ட முஸ்லீம் சகோதரனே, சகோதரியே, உங்களுக்காய் நான் இறைவனை வேண்டிகொள்கிறேன். வலி எல்லோருக்கும் பொது, இதில் இருந்து நீ மீண்டு வருவாய் அது நிச்சயம் ...தெளிந்து வருவா ..அது ஒன்றே என் ஆதங்கம். என் சிறு வயதில் மூன்றுக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு எதிரான சிங்கள காடையர்களின் வன்செயல்களை நேரில் கண்டவன் நான். ஒன்று 1977 மற்றையது 1983 .. 1977 - கண்டி இரயில் நிலையத்தில் (3 ஆம் பிளாட்போரம்) என் கண் எதிரே பிளாட்போரத்தில் அமர்ந்து வெற்றிலை சாப்பிட்டுக்கொண்டு இருந்த ஒரு ஆண், அவரோடு இருந்த ஒரு பெண், மற்றும் 3 தமிழர்கள் எங்கோ இருந்து கூட்டமாய் வந்த காடையர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார்கள்... வெள்ளை வெட்டி போன்ற சாரம் அணிந்த பெரியவர் நொடியில் அம்மனமாகப்பட்டார், அவரின் பின்புறத்த…
-
- 4 replies
- 784 views
-
-
இன அழித்தலை பயங்கரவாத போர்வையால் மறைக்க முடியாது -ஆக்கம்: கா. அய்யநாதன் இலங்கை அரசுக்கு எதிராக குற்ற விரல் நீட்டும் நாடுகள், ஒரு நீண்ட யுத்தத்திற்குப் பிறகு பயங்கரவாதத்தை முறியடித்தது தொடர்பான உண்மையையும், தாங்கள் தோற்கடித்த பயங்கரவாதிகளின் இயற்கையை அறியாதவர்கள் என்றும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மிகுந்த மன வருத்தத்துடன் பேசியுள்ளார். கொழும்புவில் ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்த தெற்காசிய மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பு மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசியபோது இவ்வாறு கூறியுள்ள ராஜபக்ச, “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது நாம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையையும், பயங்கரவாதத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட துயரத்தையும் அறிந்தவர்களா? இந்த உண்மைகளைப் பற்றி எந்த வகையிலாவது இந்…
-
- 1 reply
- 784 views
-
-
http://www.youtube.com/watch?v=_daN5_pUlnE
-
- 5 replies
- 784 views
-
-
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட சீர்திருத்தத்தை ACJU தடுப்பது ஏன்? Shreen Abdul Saroor on August 2, 2019 பட மூலம், Selvaraja Rajasegar கடந்த சில வாரங்களாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தம் பற்றிய பல கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. இத்தொன்மை வாய்ந்த சட்டச் சீர்திருத்தம் பற்றிய போராட்டத்தில் மூன்று தசாப்த காலமாக முஸ்லிம் பெண்கள் ஈடுபட்டிருந்த போதிலும் கடந்த வருட முற்பகுதியில் நீதியரசர் சலீம் மர்சூப் குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்ட இருதொகுதிப் பிரேரணைகளிடையே காணப்படுகின்ற வேறுபாட்டைக் களைவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு தற்போதுதான் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்…
-
- 0 replies
- 784 views
-
-
*அரசியலமைப்பில் குறிப்பிட்டிருக்கும் நடைமுறையை மீறும் செயல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருமே புரிந்துக் கொண்டிருக்கவில்லை. -கலாநிதி நிஹால் ஜெயவிக்ரம- சர்ச்சைக்குரிய, அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்ட மூலம் கடந்த வாரம் பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெற்று முதலாவது வாசிப்புக்காக நீதியமைச்சரினால் முன்மொழியப்பட்டபோது பாராளுமன்றத்தினூடான பயணத்தை அது தொடங்கியது. அரசியலமைப்பில் குறிப்பிட்டிருக்கும் நடைமுறையை மீறும் செயல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருமே புரிந்துக் கொண்டதாக தெரியவில்லை. இந்த சட்டமூலத்தின் 41ஆவது பிரிவு தற்போதைய அரசியலமைப்பின் 17Aயில் உள்ள 154R உறுப்புரையை திருத்தும் ந…
-
- 4 replies
- 784 views
-
-
தமிழர்களை அழியவிட்டு தமிழை வளர்த்து என்ன பயன்?… அகரன்June 26, 2018 in: முகநூல் இன்று முகநூலில் ஒரு செய்தி பார்த்தேன் கனடா நாட்டின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஆரம்பித்து தமிழை வளர்ப்பதற்காக நிதி சேகரிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றதாக இருந்தது அச்செய்தி பெருமைக்குறிய அந் நிகழ்வின் நோக்கம் 30 லட்சம் டொலர்களை சேகரிப்பது ( அண்ணளவாக 400 கோடி இலங்கை ரூபா ) அதற்கான முதல்நாள் நிகழ்விலேயே தமிழை நேசிக்கும் கனடா வாழ் பரோபகாரிகள் 700,000 டொலர்களை தமிழை காப்பாற்றவென வாரி வளங்கிவிட்டனர் இதில் கனடியத் தமிழர் பேரவை மாத்திரம் 50,000 கனடிய டொலரை வழங்கியதாம் கடந்த ஆண்டு கனடாவுக்கு பக்கத்து நாடான அமெரிக்காவில் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்க…
-
- 2 replies
- 783 views
-
-
இவ்வாண்டு, ஜனவரி 29ம் திகதி மாரடைப்பினால் காலமானார், 70 வயதான அஷ்டோஷ் மகாராஜ் என்னும் இந்திய சுவாமியார். 1983 ல் ஆரம்பிக்கப் பட்டு உலெகெங்கும் 3 கோடி பக்த கோடிகள் இருப்பதாக சொல்லும் அவரது 'திவ்விய ஒளி' சமாஜ சிஷ்ய கோடிகளோ, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதை நிராகரித்து, சுவாமிகள், ஆழ்ந்த தியானத்தில் இருப்பதாகவும், அவர் விரைவாக மீண்டு வந்து வழக்கம் போல அருள் பாலிப்பார் என்று அவரது உடலை 'Freezer' ஒன்றில் வைத்து காத்து இருக்கின்றனர். மடத்தின் பேச்சாளரான சுவாமி விசாலாந்தா, சுவாமிகள் ஆழ்ந்த தியானத்தின் உயர் நிலையான சமாதி நிலையில் இருக்கும் நிலையினை நவீன மருத்துவம் புரிய மாட்டாது. அவர் விரைந்து வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் என்று சொல்கிறார…
-
- 1 reply
- 782 views
-
-
அழியும் நிலையில் 13 தலைமுறைக்கு முந்தய சிவன் கோவில் ..! செய்தியை பகிர்ந்து கொண்டு தடுக்க முயற்சிப்போம் வாருங்கள் நண்பர்களே ...! ENLIGHTENED MASTER WROTE :- தே சிய நெடுஞ்சாலை துறையில் நான்கு வழி பாதை திட்டத்தினால், 1300 வருட சிவன் கோவில் அபாயத்தில் உள்ளதாக முகப்புத்தக நண்பர் எனக்கு எழுதியுள்ளார். அவர் கொடுத்த சுட்டியை படித்த போது, இது நடந்து விடுமோ என்ற கவலை என்னையும் தொற்றிக் கொண்டுள்ளது. திருப்புரவர் பணங்காட்டீஸ்வரர் கோவில், பனையபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட இத்திருக்கோவில், விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைய பெற்றுள்ளது. இ…
-
- 0 replies
- 781 views
-
-
•“தேவடியா” என்ற சொல் மருவி “மீடியா” என்று வந்ததா? சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்து நண்பர் ஒருவர் தேவடியா என்ற சொல்லே மருவி மீடியா என்று வந்துள்ளது என முகநூலில் எழுதியிருந்தார். இதைப் படித்தபோது சீச்சீ அப்படி இருக்காது என நினைத்தேன். ஆனால் இப்போது வித்தியாதரனின் மணிவிழாவைப் பார்க்கும்போது அந்த தமிழக நண்பர் எழுதியது உண்மையாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. புலிகளின் விமானம் கொழும்பில் குண்டு வீசும்போது கொழும்பில் இருந்து வித்தியாதரன் அன்டன் பாலசிங்கத்துடன் தொலைபேசியில் பேசுவார். இந்த செய்தியை கோத்தபாயாவே கூறியிருக்கிறார். இது தெரிந்திருந்தும் இலங்கை ராணுவம் ஏன் வித்தியாதரன் மீது நடவடிக்கை எடுக்…
-
- 3 replies
- 780 views
-
-
உண்மையும், உறுதியும் இருந்தால் ஒரே மேடையில் இருவரும் பேச முடியும்! நமது பாதங்கள் நாளைய தலைமுறைக்கு சரியான திசையைக் காட்ட வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் அதன் பலாபலன்களை அனுபவிப்பவர்கள் நமது மக்க ளாகவே இருக்க வேண்டும். அடுத்தவரை இழிவுபடுத்து வதும், அவர்கள் மீது சேறுபூசுவதும், அவதூறு சுமத்து வதும் அரசியலின் பெயரால் எவருக்கும் இலகுவாக செய்து விட முடிகின்றது. இந்த நாகரீகமற்ற போக்கை நாம் மாற்றியமைக்க முடியும். இவ்வாறு ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் எஸ். தவராசா கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கு பகிரங்க அழைப் பொன்றை விடுத்துள்ளார். அவ்வழைப்பில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, சகவேட்பாளர் என்பதற்கு அப்பால் நீதிபதி என்ற மரியாதைக்குரியவரா…
-
- 6 replies
- 779 views
-
-
ஈழமக்களை நம்பவைத்து புலித்தலைவர் ஏமாற்றினாரா!! நிரூபன் பதிவுக்கு பதில் ஈழமக்களை நம்பவைத்து ஏமாற்றிய புலித்தலைவர் என்கிற ஓர் பதிவு அண்மையில் தமிழ்மணத்தில் கண்ணில் பட்டது. இலங்கைப்பதிவர் நிருபனால் எழுதப்பட்டது. சரி, இப்படி ஈழம் தொடர்பாக எத்தனையோ எழுத்துகளை, மாற்றுக்கருத்துக்களைத் தான் அடிக்கடி படிக்கிறோமே என்று விட்டுத்தள்ளிவிட்டுப் போகலாம் என்று தான் நினைத்தேன். ஏனோ மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஈழம் பற்றி பதிவுலகம் முதல் அல்ஜசீரா, அமெரிக்க சி.என்.என்., பி.பி.சி. வரை தொடங்கி உலகின் முன்னணிப் பத்திரிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் படிப்பதென்பது தமிழனின் தலையெழுத்து என்று ஆகிவிட்டது. படிப்பதோடு நிற்பதில்லை. எந்தவொரு ஊடகமானாலும் ஈழம் என்று வந்தால் ஜனநாயக கருத்து …
-
- 0 replies
- 779 views
-
-
[size=4]முன்னாள் போராளி இன்று ஒரு பாலியல் தொழிலாளி[/size] [size=4]என்ற தலைப்பில் பேட்டி ஒன்று விகடன் இதழில் வந்துள்ளது. ஒரு முன்னாள் போராளியின் பேட்டி என்று கூறி விட்டு பெண் புலிகளின் உருவாக்கம் புலிகளின் தலைவர் திரு பிரபாகரனை துதி பாடும் வரிகள் இலங்கை இராணுவம் கூட்டாக பாலியல் கொடுமை செய்தது என்பதுடன் மட்டுமல்லாது புதிதாக அமைச்சர் ஒருவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் மிக தெளிவாக பேட்டியளித்தள்ளார்.[/size] [size=4]இந்த பேட்டி வந்துள்ள இந்த நவம்பர் மாதம் கூட விடுதலைப் புலிகளால் மிகவும் உணர்வு பூர்வமாக கொண்டாடப்படும் ஒரு மாதம் என்பதையும் நாம் கவனத்தில் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்[/size][size=4]. இந்த பேட்டியை யாழ்ப்பாணத்தில் வைத்து எடுத்தவர் அருள்இனி…
-
- 0 replies
- 779 views
-
-
வெள்ளத்தனையது மலர் நீட்டம் பட மூலம், @garikalan வடக்கிற்கு வந்த வெள்ளம் புதியதல்ல, இடர் புதியதல்ல. யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னரான காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான வடக்கில், யுத்தம் உண்மையில் நேரிடையாக இடம்பெற்ற நிலத்தில் ஒரே நேரத்தில் இவ்வளவு இளம் தலைமுறையினரை சேர வேண்டிய இடத்தில் சேர்த்திருக்கிறது வெள்ளம். அவர்கள் பார்க்க வேண்டிய மக்களைப் பார்க்க வைத்திருக்கிறது. அண்மையில் வந்த வெள்ளத்தில் அதிகம் கவனிக்கப்பட்ட ஒன்று, குச்சொழுங்கைக்குள்ளும், மதவடிகளிலும், பெரிய மரங்கள் நிற்கும் சனசமூக நிலையங்களுக்குப் பக்கத்திலும் நின்று தமது அன்றாடங்களைக் கழித்துக் கொண்டிருந்த பெருந்தொகுதி இளம் தலைமுறையினரை வெள்ளம் மக்களை நோக்கித் திருப்பியிருக்கிறது. சமூக வலை…
-
- 0 replies
- 778 views
-
-
இலங்கையில் அடுத்து என்ன நடக்கும்? [ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 01:14.57 மு.ப | ஊடகப் பணிமனை ] இலங்கையில் அடுத்து என்ன நடக்கும் என தமிழர்கள் காத்திருக்கிறார்கள் என்கிறது அமெரிக்க ஏடு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி, குடியரசு அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி எனத் தொடர்ந்து வெற்றிப் பாதையிலேயே சவாரி செய்து கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ச - தற்போது, தலைமுறை தலைமுறையாகப் பற்றி எரியும் இனப் பிரச்சினையைக் கையாள்வதில் கொஞ்சம் அழுத்தங்களுக்கு உள்ளாகிறார் போல் தோன்றுகிறது. அரசியல் வாழ்வின் ஓரத்திற்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களைப் பலப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் சிங்களத் தேசியவாதிகளைக் கோபப்படுத்தக்கூடும். இத்தகைய நிலையில் நாட்டில் உண்…
-
- 1 reply
- 778 views
-
-
சாவகச்சேரி சந்தைப் படுகொலையின் 26ம் ஆண்டு நினைவு - 27.10.1987 யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குத் திசையில் யாழ் நகரையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் இணைப்பது தென்மராட்சிப் பிரதேசமாகும். யாழ்-கண்டி பிரதான நெடுஞ்சாலையில் யாழ். நகரத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சாவகச்சேரி நகரமானது, தென்மராட்சிப் பிரதேசத்தின் பிரதான நகரமாகும். தென்மராட்சி மக்களின் பிரதான சந்தை இங்கேயே அமைந்துள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டம் கூடுதலாக உள்ள நகரமாகும். 1987 ஒக்டோபர் 27 ம் திகதி கந்தசட்டி கடைசி நாளாகும். மதியம் 12 மணியளவில் நகரத்தின் வழியாக சூரன் போருக்குரிய சூரன்; அவ்வீதியால் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தது. ஏராளமான பக்தர்களுடன் வீதியுலா வந்த சூரன் நகரத்தின்…
-
- 8 replies
- 778 views
-
-
Is IIFA brand ambassador Amitabh Bachchan right in skipping the awards over Tamil protests?- Vote Yes Vote Yes Vote Yes http://headlinestoday.intoday.in/site/headlines_today/home ==== Please comment here Big B should have attended IIFA Awards: Salman http://indiatoday.intoday.in/site/Story/99996/Top%20Stories/Big+B+should+have+attended+IIFA+Awards:+Salman.html ==== Muthamizh Chennai
-
- 2 replies
- 778 views
-
-
ஈழத்தில், யுத்த, இயற்கை அனர்த்தங்களாலும், பொருளாதாரத் தடைகளினாலும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது தமிழ் உறவுகளின் வளமான வாழ்வுக்கு வழிசமைக்கும் நோக்கோடு 16வது ஆண்டாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் மேற்கொள்ளப்படும் “அவசர கால உதவி நிதித்திட்டத்திற்கு” ஆதரவாக 3CR தமிழ்க்குரல் வானொலியிலும், 24 மணிநேர இன்பத்தமிழ்ஒலி வானொலியிலும் நடைபெறும் கிறிஸ்மஸ் ரேடியோதொனில், மெல்பேர்னின் சகோதர தமிழ் சமூகவானொலிச் சேவைகளின் அனுபவமிக்க பிரபல அறிவிப்பாளர்களும் மற்றும் இளைய மாணவர்களும் இவ் உன்னதப் பணியில் இணைந்து கொள்கின்றனர் அத்துடன் இந் நிதிசேகரிப்பிற்கு அவுஸ்திரேலியா மாநில மற்றைய தமிழ் சமூக வானொலிகளும் இணைந்து ஆதரவு வழங்குகின்றன என்பதையும் அறியத்தருகின்றோம். 25ம் த…
-
- 1 reply
- 778 views
-
-
தமிழாக்களுக்கு உரிமை குடுங்கோ எண்டு சொல்லிக் கொண்டிருந்த உலகமெல்லாம் இப்ப வட மாகாணத்துக்கு எலக்சன் வையுங்கோ எண்டு சொல்லுற அளவுக்கு வந்திருக்கினம் எண்டது எல்லாருக்கும் தெரியும். ஆனால் உடனை எலக்சன் வைச்சால் என்ன நடக்கும் எண்டு தெரிஞ்ச ‘றாஜ‘ குடும்பம் அங்கை கண்ணி வெடி கிடக்குது சனத்தைக் குடியேற்ற வேணும் எண்டு அதை இதைச் சொல்லிக் காலத்தைக் கழிச்சதும் தெரியும். இனியும் இழுத்தடிக்கிறது கஸ்ரம் எண்டு தெரிஞ்சதும் 2013 செப்டம்பரிலை எலக்சன் எண்டு திகதி வைச்சிருக்கிறதும் எல்லாருக்கும் தெரியும். ஆனால் போற போக்கைப் பாத்தால் வடக்கையும் றாஜ குடும்பத்திட்டையும் அவையின்ரை பரிவாரங்களிட்டையும் பறி குடுத்துப் போட்டு அணிலேற விட்ட நாயைப் போல ஆவெண்டு கொண்டு நிக்கப் போறமோ எண்டொரு சந்தே…
-
- 3 replies
- 778 views
-
-
தனது நாட்டை மீண்டும் பேண்தகு வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா தயாராகியுள்ளது. அடுத்துவரும் பத்தாண்டில் வளர்ந்து வரும் சந்தைகளில் தமக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காகத் தம்மை நன்றாகத் தயார்ப்படுத்தும் சில நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் உள்ளடங்குவதாக அண்மையில் மக்கின்சி பூகோள நிறுவகத்தால் – McKinsey Global Institute – மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிறிலங்காவின் இந்த வளர்ச்சிக்கு சீனா தடையாக இருக்கும். சிறிலங்காவின் மனித மூலதனமே அதன் பலமாக உள்ளது. 2015ல் சிறிலங்காவின் மனித மேம்பாட்டுச் சுட்டியானது 0.766 ஆகக் காணப்பட்டது. இதனால் சிறிலங்காவானது உயர் மனித மேம்பாட்டு வகைக்குள் உள்ளடக்கப்பட்டது. உலக வங்கியால் மேற்கொள்ளப்பட்…
-
- 0 replies
- 778 views
-
-
-
இலங்கையிலும், மற்றையை இடங்களிலும் ? பெரிதும் பேசப்படும் ஒரு விடயம் யுத்த குற்றமும் , நல்லிணக்கமும். இங்கே பலரும் வாறபடியால், யாரவது விளக்குவீர்களா, இலங்கையரசு மீது யுத்த குற்றம் சாட்டினால் ஏன் நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்று? அரசாங்கம் இன்னமும் யுத்த குற்றம் செய்கிற நிலையில் அல்லது அதற்குரிய தண்டனைகளை கொடுக்கிற நிலையில்- அது கைது செய்யப்பட்ட புலிகளில் உயர் நிலை தலைவர்களாய் இருந்தால் என்ன, கடைசி மாதத்தில் அல்லது வாரத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட சிறுவர் சிறுமியாய் இருந்தால் என்ன, அவர்களுக்கு ? தண்டனை கொடுத்து , ? புனர்வாழ்வளித்து வெசாக்குக்கும், பொசன் பண்டிகைக்கும் எதோ "தமிழ் படங்களில் வாரமாதிரி அண்ணையை, பங்காளியை கொலை செய்திட்டு - படம் தொடங்கேக்கை அல்லது முடியேக்க…
-
- 0 replies
- 777 views
-