நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
பிரித்தானியாவில் வெள்ளி 12வது நாளாகத் தொடரும் ஆர்ப்பாட்டமும், 11வது நாள் உண்ணாநிலைப் போராட்டமும்.... அமெரிக்கா சென்ற சிவா தலமையில் இரு மாணவர் குழுக்கள் எப்போது ஒபாமாவுடனும், ஜெனீவா சென்ற மாணவர் குழுவும் எப்போது ஐ.நாவுடனும் பேசுவார்கள்? ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தவர்களைக்கேட்டேன், பலவிதமான பதில்கள் வெளிவந்தன. யாரேனும் உண்மையை அறியத்தர இயலுமா? நன்றி
-
- 0 replies
- 726 views
-
-
-
ஆயுத எழுத்து 30.12.2014இன்றைய தலைப்பு குறித்து விவாதிக்க சிறப்பு விருந்தினராக சுமந்திரன்-தமிழ் எம்.பி // அய்யாநாதன்-தமிழ் ஆர்வலர் // அருணன்-சி.பி.எம் // ராதாகிருஷ்ணன்-பத்திரிக்கையாளர்.. http://www.thanthitv...id=9&vidid=8020 ஆயுத எழுத்து 29.12.2014இன்றைய தலைப்பு குறித்து விவாதிக்க சிறப்பு விருந்தினராக ராமசாமி முத்தையா-இலங்கை அமைச்சர் // பகவான் சிங்-பத்திரிக்கையாளர் // சீமான்-நாம் தமிழர் கட்சி // கே.டி. ராகவன்-பா.ஜ.க. http://www.thanthitv...id=9&vidid=7999
-
- 0 replies
- 724 views
-
-
தமிழர், முஸ்லிம்கள்: சில குறிப்புகள் -சிறு எதிர்வினை- இளங்கோ-டிசே 1. இலங்கையில் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் நடைபெறுகின்ற இவ்வேளையில் தமிழ் X முஸ்லிம் விவாதங்கள் நடைபெறுவதையும் அதனால் மனம் நொந்து சில முஸ்லிம் நண்பர்கள் எழுதியிருக்கின்ற சில பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. இந்த விவாதம்(கள்) தொடங்கிய அடி நுனி எதுவும் தெரியாதபோதும் (அவற்றைத் தேடிப் போக விருப்பமுமில்லை) சிலவற்றை எழுதிவிட விரும்புகிறேன். நம் தமிழ்ச்சூழலில் கருத்துக்களை உதிர்ப்பதென்பது -அதுவும் முக்கியமாய் அரசியல் சார்ந்து- மிகவும் எளிதானது. அவ்வாறு அரைகுறையுமாய் எழுதுபவர்களே பின்னாட்களில் அரசியல் ஆய்வாளர்களாகவோ அல்லது ஊடகங்களில் எளிதில் நுழைந்துவிடக்கூடியவர்களாகவோ அல்லது ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படுபவ…
-
- 2 replies
- 724 views
-
-
புலிகளின் முன்னாள் பேச்சாளர் – இந்நாள் ஜனாதிபதி சட்டத்தரணி இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளராக கலந்துகொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி அருணாசலம் முத்துக்கிருஷ்ணன், ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த அருணாசலம் முத்துக்கிருஷ்ணன் 18.01.2019 (வெள்ளிக்கிழமை) அன்று பிரதம நீதியரசர் நளின் பெரேரா முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இருந்து 1956 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கலைபீட பட்டதாரியான இவர் லண்டன் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் 1964 இல் சட்டமானிப் பட்டத்தினை பெற்றுக்கொண்டார். …
-
- 1 reply
- 724 views
-
-
யாழ்ப்பாணத்தில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வுSEP 02, 2015 | 4:56by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், பிரபல எழுத்தாளரும், ‘புதினப்பலகை’ நிறுவக ஆசிரியருமான- மறைந்த கி.பி. அரவிந்தன் ( பிரான்சிஸ், சுந்தர்) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு, யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 6ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்த நினைவுப் பகிர்வு அமர்வில் பிரான்சிஸ் பற்றி (இளைஞர் பேரவைக் காலம்) அ.வரதராஜப்பெருமாள், தவராஜா ஆகியோர் உரையாற்றவுள்ளனர். சுந்தர் பற்றி (ஈரோஸ் காலகட்டம்) கருணாகரன், சுகு சிறீதரன் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர். கி.பி.அர…
-
- 0 replies
- 724 views
-
-
-
- 0 replies
- 722 views
-
-
தற்கொலைத் தாக்குதல்கள் ! மக்கள் கூறவிளைவதென்ன ? - வீ.பிரியதர்சன் இந்து சமுத்திரத்தின் நடுவே இந்திய உபகண்டத்திற்கு கீழே உள்நாட்டுப்போர் ஓய்ந்து வெடிச்சத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அமைதியாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்த இலங்கைக்கா இந்த நிலையென்று ஏனைய உலகநாடுகள் கன்னத்தில் கைவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது இன்று இலங்கை ! இலங்கையில் கடந்த 30 வருடகால உள் நாட்டுப்போர் ஓய்ந்து பௌத்தம், இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களைப் பின்பற்றும் மூவினத்தவர்களும் இணைந்து கடந்த வருடங்களாக ஒரே தேசியக் கொடியின் கீழ் கட்டிக்காத்து வந்த நல்லிணக்க செயற்பாட்டுக்கு கரும்புள்ளியாக அமைந்தது கடந்த ஏப்ரல் மாத…
-
- 0 replies
- 722 views
-
-
ஆக்கம்: சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா புலம் பெயர் தமிழ் மக்களால் மிகவும் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும், ஊடகவியலாளருமான, நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களை, சிறிலங்கா இராணுவம் தனது எறிகணைத் தாக்குதல் மூலம் கொன்றுள்ளது. வெளிச்சம் சஞ்சிகை, புலிகளின் குரல் வானொலி, ஈழநாதம் பத்திரிகை, மற்றும் தொலைக்காட்சிகள், இணைய ஊடகங்கள் வழியாக அரசியல், படைத்துறை ஆய்வுகளை வெளியிட்டு, தாயக விடுதலைப் போராட்டத்தின் கருத்துக்களைக் கட்டியெழுப்பி வந்த சத்தியமூர்த்தி அவர்களின் உடலம், சவப்பெட்டி கூட இல்லாத நிலையில், வெறும் துணி மட்டும் போர்த்தப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றமையானது ஒரு வரலாற்றுச் சோகத்தைப் பதிவு செய்துள்ளது. இது ஒரு போர்க்கால நிகழ்வு என்பதற…
-
- 2 replies
- 722 views
-
-
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக்கடுமையான வீழ்ச்சியை இந்த வாரம் இலங்கையின் பங்குச் சந்தை எதிர்கொண்டுள்ளது. 2011 நவம்பரிலிருந்து இற்றைவரை 17.5 சதவீதம் தனது ரூபாய் நாணயத்தின் பெறுமதியை இலங்கை இழந்துள்ளது. இறக்குமதியாகும் அத்தியாவசிய எரிபொருளான மசகு எண்ணெய்க்கு செலுத்த வேண்டிய டொலர் நாணயப் பற்றாக்குறையால் அனைத்துலக நாணய நிதியத்திடமிருந்து 500 மில்லியன் டொலர்களை கடன் வாங்க வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது பி.பீ.ஜெயசுந்தராவின் திறைசேரி. மகிந்தர் பெருமைப்டும் 7.2 சதவீத பொருளாதார வளர்ச்சி வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கொண்டு வர இயலாத நிலையில் ஊடகங்களில் சொல்லப்படும் சுயதம்பட்டங்கள் போலியானவை என்பதை தெரிந்து கொள்வது சுலபம். அத்தியாவசியப் பொருட்களின் செயற…
-
- 2 replies
- 721 views
-
-
தோல்வியில் முடிந்த மீட்பு நடவடிக்கையும், முற்றுகைக்குள் சிக்கிய சிறப்புப் படையணியும் | வேல்ஸ் இல் இருந்து அருஸ் April 4, 2022 முற்றுகைக்குள் சிக்கிய சிறப்பு படையணி எதிரியின் எல்லைக்குள் தாக்குதல் நடத்துவது என்பது எதிரியை அச்சமடைய வைப்பது ஒருபுறம் இருக்க, தாக்குதல் நடத்தும் தரப்பின் பிரச்சாரத்திற்கு மிகவும் சிறந்த வாய்ப்பாகும். பிடல் கஸ்ரோ அவர்கள் கூறியது போல ஆயிரம் மேடைப் பேச்சுக்களை விட ஒரு கெரில்லாத் தாக்குதல் மிகச் சிறந்த பிரச்சாரமாகும். ஆனால் உக்ரைன் விவகாரத்தில் அதனையும்விட மேல், அதாவது தாக்குதல் நடத்துவது மட்டும் தான் உக்ரைன் படையினரின் பணி; பிரச்சார வேலைகளை மேற்குலக அரசியல் தலைவர்களும், ஆய்வாளர்களும், ஊடகங்களும் பலமடங்கு பெரிதாக செய்து முடிப்பார்க…
-
- 11 replies
- 721 views
-
-
தீவிரவாதத்திற்கு அடிபணியமாட்டோம் என்று சொல்லிக்கொண்டு நீங்களே தீவிரவாதத்தைவிட கேவலமாக நடந்து கொண்டால் என்ன தீவிரவாதம் ஒழியுமா? இல்ல இன்னும் துளிர்விடுமா? தீவிரவாதம் ஏன் தொடங்கினார்கள் அவர்கள் பிரச்சனை என்ன? என்று ஆராய்ந்து அதற்கு வழிகண்டு சுமுகமாக தீர்வு காண முடியாத ஆரசியல்வாதிகள் தான் ஆட்சியில் இருக்கிறாங்க. தீவிரவாதத்திற்கு வித்திட்டதே இவங்கதான். அது மக்களுக்குத் தெரியாது. அமெரிக்கா ரஷ்சியாவை ஆப்கானிஸ்தானிலிருந்து கலைக்கவும், அந்தப்பிராந்தியத்தில் பிரச்சனைகளை முடுக்கிவிடவும் வளர்த்ததுதான் அல்-கொய்டா. காரியம் ஆனதும் கழுவி விட்டபோது அமெரிக்காவிற்கு எதிராக துவக்கைத் திருப்பியபோது தான் அதைத்தீவிரவாதம் என்றார்கள். இலங்கை அரசிற்கு எதிராக ஈழத்தமிழ் இளைஞர்களை ஒன்றுதிரட்டி ஆயுதம…
-
- 0 replies
- 721 views
-
-
சிவபூமி சிங்கள பூமியாகுமா? தீபச்செல்வன்… October 8, 2018 ஈழத்தில் உள்ள பஞ்ச ஈச்சரங்களையும் புனித பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது. மிகவும் காலம் தாழ்த்தி நிறைவேற்றப்பட்டபோதும், இந்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பஞ்ச ஈச்சரங்கள் மாத்திரமின்றி ஈழத்தின் வடக்கு கிழக்கில் உள்ள பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் பலவற்றையும் புனித பிரதேசங்களாக பாதுகாக்க வேண்டிய ஒரு நெருக்கடியான காலம் ஏற்பட்டுள்ளது. ஈழத் தமிழ் மக்களைப்போலவே, அவர்களின் கடவுகள்களும் இன அழிப்புக்கும் இடப்பெயர்வுக்கும் நில இழப்புக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். ஈழத்தின் சைவ ஆலயங்கள் சுதந்திரத்திற்கு பிந்…
-
- 1 reply
- 721 views
-
-
அம்பாறை வீரமுனை சித்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் வைத்து நடத்தப்பட்ட தமிழின படுகொலையின் 22ஆவது நினைவு தினம் இன்று அனுட்டிக்கப்பட்டது. சித்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் இன்று விசேட ஆத்மசாந்தி பூசை நடத்தப்பட்டதுடன் வீரமுனை சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபிக்கும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் திகதி இந்த படுகொலை இடம்பெற்றது. வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைத்தீவு, வீரச்சோலை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் அகதிகளாக இந்த ஆலயத்தில் தஞ்சம் அடைந்திருந்த போது சம்மாந்துறை பள்ளிவாசலில் யும்மா தொழுகையை நடத்திய முஸ்லீம்கள் அங்கிருந்து இந்த ஆலயத்திற்கு வந்து 55பொதுமக்களை வெட்டிப்படுகொலை செய்தனர். இவர்களுக்கு சிறிலங்கா படையினரும் துணையாக இருந்…
-
- 7 replies
- 720 views
-
-
ஈழத் தமிழர்களும் தமிழக அரசியல் சூழலும். - வ.ஐ.ச.ஜெயபாலன் . ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கட்ச்சிகளுக்கும் நன்றிகூறி அவர்களது ஆதரவு நமக்கு தொடர்ந்தும் அவசியம் என்பதை வலியுறுத்த வேண்டிய தருணமிது. அதே சமயம் ஈழத் தமிழர்களை உங்கள் தேர்தல் அரசியல் பிழவுகளுக்குள் இழுத்து விடவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. சரி பிழைகளுக்கு வெளியில் ஈழ விடுதலைத் தலைவர்களையும் ஈழத் தமிழர்களையும் தமிழக தேர்தல் அரசியலிலும் மோதல்களிலும் ‘ பிராண்ட்’ போல கீழ்ப்படுத்திப் பயன்படுத்துவதை தமிழக அரசியல் கட்ச்சிகள் நிறுத்த வேண்டும் என்று கேட்க்க வேண்டிய கடைசித் தருணங்கள் இவை. . ஈழதமிழர்களையும் போராளிகளையும் 1970 பதுகளில் இருந்து ஆதரித்தவர்களுள் நிதியும் இடமும் தந்து பாத…
-
- 1 reply
- 720 views
-
-
சரோஜ் பத்திரன பிபிசி சிங்கள மொழி சேவை தான் அதிகாரத்தை கைப்பற்றும் பட்சத்தில், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதான உறுதி மொழியை வழங்கியிருந்தார். அதிகாரத்தை கைப்பற்றி ஒரு வருடமும் 2 மாதங்களும் கடந்த நிலையில், கடந்த 4ம் தேதி இலங்கை சுதந்திர தின நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி, ஈஸ்டர் தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் மற்றும் அதன் ஒத்துழைப்பு வழங்கியவர்களை சட்டத்திலிருந்து தப்பிச் செல்ல இடமளிக்கப் போவதில்லை என கூறியிருந்தார். அத்துடன், மத்திய வங்கி முறிகள் மோசடி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதா…
-
- 0 replies
- 720 views
-
-
ஆழி செந்தில்நாதன் மொழியுரிமை செயற்பாட்டாளர் ஸ்டாலின்கிராடாக மாறிய சென்னையிலும் வாட்டர்லூவாக மாறிய கொல்கத்தாவிலும் நேற்று விடப்பட்ட பெருமூச்சு, மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் பல எதிர்க்கட்சிகளுக்கு ஆக்சிஜனாக உருமாறியிருக்கிறது. அநேகமாக இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் பிழைத்துக்கொள்ளும்போலிருக்கிறது! 2024 இல் நடைபெறவுள்ள அடுத்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் என்பது ஒரு இறுதிப் போட்டி என்றால், இப்போது நடந்து முடிந்திருப்பது கால் இறுதிப் போட்டி. இடையில் 2022 இலும் 2023லும் வேறுசில போட்டிகளும் பிறகு இந்தி மாநிலங்களில் அரை இறுதிப் போட்டியும் வரவுள்ளன. இந்த கால் இறுதிப் போட்டியில் பா.ஜ.கவின் எதிர்ப்பு அணி தீர்க்கமான முறையில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்…
-
- 0 replies
- 720 views
-
-
ஈழம்.. இனிச் செய்ய வேண்டியது என்ன? புலம்பெயர் ஈழத் தமிழர்கள் செயல்பாடு குறித்தும் குற்றத் திறனாய்வு உண்டு. போரின் உச்ச கட்டத்தில் போரை நிறுத்தக் கோரி உலகெங்கும் அவர்கள் கிளர்ந்தெழுந்து இரவும் பகலும் உண்ணாமலும் உறங்காமலும் போராடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. உலகத்தை ஈழத்தின் பக்கம் திரும்பச் செய்தது. போராட்டக் குறிக்கோளில் அவர்கள் வெற்றிபெற முடியாவிட்டாலும், உலகத்தின் மனச்சான்றை (மனசாட்சியை) அசைக்கவே செய்தனர். ஆனால் இத்தகைய 'அரசியல் போராட்டங்களை' அவர்கள் தொடக்கத்திலிருந்தே மேற்கொண்டு இருந்திருந்தால் நிலைமை வேறாக மாறியிருக்கலாம். ஈழப்போராட்டத்தின் வரலாறும் அப்போராட்டத்தின் அரசியல் அறமும், ஈழ மக்களின் அரசியல் விருப்பமும் உலக மக்களிடையே உயிர்ப்போடு எடுத்து விளக்கப்…
-
- 0 replies
- 719 views
-
-
நடைபெறப் போகும் தேர்தல் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் தமிழ்த்தேசியத்தின் ஒருமித்த செயற்பாட்டின் அடித்தளத்தையே தகர்த்துவிடும் என்ற ஆபத்து நிலை தற்போது இலங்கை அரசியல் களத்தில் உணரப்பட்டுள்ளது. தேர்தல் குறித்த முனைப்பு, கலந்துரையாடல்கள், உடன்பாடுகள், கருத்துவெளிப்பாடுகள், கருத்து மோதல்கள் என அரசியல் வட்டாரங்கள் மிகுந்த சுறுசுறுப்படைந்துள்ளன. இதன்போது உள்ளேயிருப்பவர்களை வெளியனுப்புதல் வெளியில் இருப்பவர்களை உள்ளே கொண்டுவருதல் என்ற அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் முயற்சி செய்கிறார்கள். இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது இறுதி நிலைபாட்டினை வெளியிடும் என்றும் அது பத்திற்கும் மேற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள…
-
- 2 replies
- 719 views
-
-
தம்பி சீமான், .வைகோ அண்ணா . நெடுமாறன் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் . சாதி அற்ற ஒரு தமிழகத்தை கட்டி எழுப்புங்கள் எந்த சாதி கட்சியுடனும் கூட்டணி வைக்காதீர்கள். கொள்கை வேறு அரசியல் தேர்தல் கூட்டு வேறு என்று இதுவரை செய்த தவறுகளை இனி தமிழன் செய்யது இருக்கவேண்டும் தூய தமிழகத்தை உருவாக்குங்கள் மதுக்கடைகளை இழுத்து மூடுங்கள் . நல்ல ஒழுக்கம் கொண்ட வள்ளுவன் சமுதாய நெறிகளை பலபடுத்துங்கள் . தமிழகம் தமிழனுக்கான பாரம்பரியங்களை கட்டிக்காத்து உலகத்தின் ஒட்டுமொத்த தமிழனின் சரணாளையமாக அவன் நிம்மதியான வாழ்விடம் என்பதை உறுதி படுத்துங்கள். தமிழகம் ஈழம் இவ்விரண்டு தாய் நிலமும் அதன் விரிந்த ஆகாயமும் கடலும் உலக தமிழன் தமிழிச்சி ஒவ்வொருவரின் பூர்விக உரிமை என்பதை யாரும் மறுபதற்கு இல்லை . இ…
-
- 1 reply
- 719 views
-
-
இனியொரு இணையத்தளத்தில் சபாநாவலன் எழுதி வெளிவந்த, முக்கிய செய்திக் கட்டுரை இது இவ் ஆக்கத்தின் உள்ளடக்க முக்கியத்துவம் கருதி, இந்தப் பகுதியில் மீள் பதிவு செய்யப்படுகின்றது. நன்றி: இனியொரு - இன்போ தமிழ் குழுமம் - இலங்கையில் இந்தியா மேற்குலக ஒழுங்கமைவானது ஒரு குறித்த தெளிவான வடிவத்திற்குள் உருவமைக்கப்பட்ட காலமான, 1949 இற்குப் பின்னர் இப்போது முதற் தடவையாக அதன் சர்வதேச வரிசைப்படுத்தலானது புதிய நிலைகளை நோக்கி நகரவாரம்பித்திருக்கிறது. இன்று மறுபடி உலகம் ஒழுங்கமைக்கப் படுகிறது.பெரும் மூலதனத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் ஆதிக்க வர்க்கத்தின் தனிப்பட்ட நலன்களை மட்டுமே அடிப்டையாக முன்வைத்து இந்த ஒழுங்கமைப்பு அரசியல் உலகப் படத்தை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறத…
-
- 1 reply
- 718 views
-
-
http://thamilkural.net/?p=17695
-
- 0 replies
- 718 views
-
-
பொறுப்புக்கூறலும் புலம்பெயர் அலப்பறைகளும் Editorial / 2019 மே 02 வியாழக்கிழமை, பி.ப. 06:38 Comments - 0 அரசியல் என்பது வெறும் வாய்ச்சவடால்களுடன் முடிந்து போவதல்ல; அரசியலின் அடிப்படைகள், மக்கள் பற்றிய அக்கறையும் அடிப்படை அறமும் ஆகும். ஆனால், இலங்கை அரசியலில் இவை இரண்டையும் காண்பதரிது. இவை இரண்டையும் தன்னகத்தே கொண்ட அரசியல்வாதிகள், நாடாளுமன்ற அரசியலில் நீண்டகாலம் தாக்குப்பிடிப்பதில்லை. ஒன்றில் அகற்றப்படுவார்கள். அல்லது, அதே சாக்கடையில் விழுந்து புரள்வார்கள். இவை இரண்டுக்கும் ஏராளமான உதாரணங்கள் உண்டு. நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு, அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். பொறுப்புக்கூறல், வெறுமனே சிலரைப் பதவியில் இருந்து அகற்றுவதுடன் மு…
-
- 0 replies
- 717 views
-
-
மூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு ! - மு. மனோகர் (பசீர் காக்கா) ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்கமுடியாத சம்பவங்கள் இடம்பெறுவதுண்டு. அது போல் விரும்பத்தகாத சம்பவமும் நடைபெறுவதுண்டு. துக்கம் விசாரிப்பது போன்ற பாணியில் விபத்தாக நடந்த சந்திப்பொன்று என்னைப் புரட்டிப்போட்டுவிட்டது. சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் அந்த முகத்தைச் சந்தித்தேன். நான் தொண்டு செய்யும் கனகபுரம் சிவன் ஆலயத்தை நாடி ஒரு ஊடகவியலாளருடன் அவர் வந்தார். 1981ல் மதுரை திருப்பரங்குன்றத்தில் ஒரு கல்யாணமண்டபத்தில் எனக்கு உடற்பயிற்சியை வழங்கிய ராகவன் என்பவரே அவராவார். அவருக்கும், மு. நித்தியானந்தன், அவரது துணைவியராக இருந்த நிர்மலாவுக்கும் இயக்கத்தோடு உடன்பாடில்லாமற் போனதுக்குப் …
-
- 1 reply
- 717 views
-
-
உலகின் மிகப் பெரிய சரக்குக் கப்பல் தனது கன்னிப் பயணத்தில் சீனாவில் இருந்து இங்கிலாந்து சௌதெம்ப்டன் துறைமுகம் வந்து அடைந்தது. 17,000 தொன் சரக்கு கொள்ளளவு கொண்ட இக்கப்பல், இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளிய கப்பலின் கொள்ளளவு 11,000 தொன். வீடியோ பார்க்க: http://bcove.me/3jf8a3cx
-
- 0 replies
- 716 views
-