Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

Featured Replies

வழமையாக மே 18 இற்கு முன்பு மாவீரர் வாரத்தின்போது தாயகத்தில் பாடசாலைகளிலும் மாவீரர் நிகழ்வுகள் நடைபெறுவது வழமை. நேற்று வடமராட்சியில் உள்ள ஒரு பாடசாலையில் இறைவணக்கம் முடிந்த பின்பு 5ம்வகும்பு தர மாணவன் ஒருவன் தான் ஒரு கவிதை படிக்க போகிறேன் என்று திடீரென்று கேட்டிருக்கிறான். ஆசிரியர்கள் அனுமதிக்கவும் அவன் படிக்க தொடங்க முதலில் ஆசிரியர்களுக்கும் சக மாணவர்களுக்கும் அதிர்ச்சி.. பின்பு ஆனந்த கண்ணீர்.. கூடவே அச்சமும்.

ஒரு பெண் போராளியின் மகன் அந்த மாணவன்.. அவன் படித்த கவிதை இதுதான்.. ஈழத்துகவி சண்முனம் சிவலிங்கம் அவர்களுடைய கவி அது.

//எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன.

எங்கள் இமைகள் கவிந்துள்ளன.

எங்கள் உதடுகள் அண்டியுள்ளன.

எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன.

நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்.

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக.

எங்களை நீங்கள் வண்டியிற் பூட்டுக.

எங்கள் முதுகில் கசையால் அடிக்குக,

எங்கள் முதுகுத்தோல் பிய்ந்து போகட்டும்.

தாழ்ந்த புருவங்கள் ஓர்நாள் நிமிரும்.

கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்.

இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்.

கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்.

அதுவரை நீங்கள் எங்களை ஆள்க.

அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக.//

# புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

Parani Krishnarajani via FB

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சிறுவன் தான்.....உண்மையான தமிழன்......வாழ்த்துக்கள்..உனக்கு........

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மண்ணின் மைந்தனே!

சிறுவனுக்கு வாழ்த்துகள். இதை இணைத்த வண்டு அண்ணாவுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனுக்கு வாழ்த்துக்களும், வண்டுக்கு நன்றிகளும்!

  • கருத்துக்கள உறவுகள்

பரணி கிருஸ்ணறஜனி சும்மாவே கதை விடுகின்றவர் ஆச்சே.

பரவாயில்லையே, வரவர நகைச்சுவைகள்; எல்லாம் இங்கே கொண்டு வந்து போடுகின்றனர்.

என்னைப் பொறுத்தவரை கற்பனையில் வெளிவந்த விடயம் இதுவாகும். தேவையற்ற பிரச்சினையினை அங்கே உள்ளவர்களுக்கு ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை.

Edited by nirmalan

Parani Krishnarajani

Thurairatnam Thayalan

33 வருட தமிழீழ விடுதலைப் பயணத்தில் நீண்ட காலங்களாக தலைவருடன் அருகிருந்து அவரது பல பல நடவடிக்கைகள் நகர்வுகளை கூட இருந்தே திட்டமிட்டு அந்த நகர்வுகளை நெறிப்படுத்த உதவிய போராளி பொட்டு அம்மான் அவர்களுக்கே அனுராதபுர தாக்குதல் தொடர்பாக இறுதி நொடிவரை எந்தவித தகவல்களுக்கும் தெரிந்திருக்க வில்லை. இது தான்

‘‘ விடுதலை போராட்டத்தின் நகர்வுகளின் ரகசியம் ” என்பது.

( பொட்டு உனக்கும் தெரியாமல் என்னால் போராட்ட நகர்வுகளை செய்யமுடியும் என்பதை தலைவர் வெளிப்படுத்திய ஒரு நிகழ்வு இது ).

பர்ணீகிஷ்னராஜா ஒரு டம்மி பீஸு, இவருக்கும் போராட்டத்துக்குமான உறவு வல்வெட்டுத்துறையில்பிறந்தது என்ற ஒரே ஒரு உறவு தான்.

மற்றும் படி ஆள்நல்ல உசுப்ப்பேத்துகுத்து பாக்கிற விருவிரையாளர் :D

பர்ணீகிஷ்னராஜா ஒரு டம்மி பீஸு, இவருக்கும் போராட்டத்துக்குமான உறவு வல்வெட்டுத்துறையில்பிறந்தது என்ற ஒரே ஒரு உறவு தான்.

மற்றும் படி ஆள்நல்ல உசுப்ப்பேத்துகுத்து பாக்கிற விருவிரையாளர் :D

இந்த திரிக்கும் சி.புஸ்பராஜா. கி. பி. அரவிந்தன். மற்றும் ஜயர் ஆகியோரின் பதிவுகளுக்கும் சம்பந்தமில்லையே. பின்னர் ஏன் பரணி கிருஷ்ணரஜனி என்பவருக்கும் போராட்டத்துக்குமான உறவு பற்றி இங்கு விவாதிக்கிறீர்கள்? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.