Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றிருந்தால் இப்போ அவர் முதல்வராக இருந்திருப்பாராம் -கார்த்தி சிதம்பரம்

Featured Replies

புதன்கிழமை, செப்டம்பர் 15, 2010

இலங்கைத் தமிழர்களுக்காக அதிக தியாகம் செய்தது காங்கிரஸ் கட்சியே என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"இலங்கைப் பிரச்னைக்குக்கூட காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்பது போல தொடர்ந்து பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், இலங்கைத் தமிழர்களுக்காக அதிக தியாகம் செய்த கட்சி காங்கிரஸ்தான். காங்கிரஸ் கட்சியின் திட்டப்படி 1987ல் உருவான ராஜீவ் காந்தி ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை மட்டும் விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டிருந்தால், இந்நேரம் இலங்கையில் தமிழர்களுக்கென ஒரு தனி மாநிலம் உருவாகியிருக்கும்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அதன் முதல்வராக இருந்திருப்பார். ஆனால், அதை கெடுத்தது விடுதலைப் புலிகள்தான். இதையெல்லாம் மக்களிடம் காங்கிரஸ் கட்சியினர்தான் கூற வேண்டும்" என்றார்.

eelanatham.net

  • கருத்துக்கள உறவுகள்

அவர் முதல்வர் பதவிக்காக போராடியிருந்தால் ...

ஆனால்

அவர் தமிழ்மக்களது விடுதலைக்காக போராடியதால் அடகுவைக்க மறுத்துவிட்டார் என்றும் சொல்லியிருக்கலாம்

சொல்லாவிடினும் தமிழக மக்களுக்கு அது நன்கு தெரியும்

அதனால்தான் போற இடமெல்லாம் இப்படி பிதற்றுகின்றன இவை.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றிருந்தால் இப்போ அவர் முதல்வராக இருந்திருப்பாராம் -கார்த்தி சிதம்பரம்

இப்படியே எத்தனை கூட்டங்களில் சொல்லிக்கொண்டு இருக்கப்போறார்

இந்தக் கழிசடைகள் சொன்னதையெல்லாம் மினக்கெட்டு பிரசுரிக்கவேண்டுமா?

Edited by கறுவல்

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை புலிகள் ஏற்றுக்கொண்டே தீரவேண்டும் என்று ராஜீவ் காந்தியின் ஆலோசகர்கள் பிரபாகரனை வற்புறுத்தினர். இந்த ஒப்பந்தப்படி,

(அ) வட கிழக்கு மாகாணங்கள் தமிழர் சிங்களர் முஸ்லிம் பகுதிகளாக வாக்கெடுப்பின் படி பிரிக்கப்படும்

(ஆ) மாகாண அரசுகளைக் கலைக்கும் உரிமை இலங்கை அதிபருக்கு உண்டு

(இ) புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்பந்தம் கையெழுத்தான 72 மணி நேரங்களில் இந்திய அமைதிப்படையினரிடம் ஒப்படைத்து விட வேண்டும்

(ஈ) புலிகள் வடகிழக்குப் பிராந்தியங்களில் வரியின் மூலம் பணம் சேர்ப்பதையும் விட்டுவிட வேண்டும்.

இவற்றை பிரபாகரன் எதிர்த்தார். ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டிய காரணத்தால் ராஜீவும் மேற்படி ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளன என்றும் அவற்றைக் களைய தான் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் வாய்வார்த்தையால் சொன்னாராம்:

(அ) வட கிழக்கு மாகாணப் பிரிவுக்கான கருத்து வாக்கெடுப்பை நடக்கவிடாமல் ஒத்திப்போட வைப்பது

(ஆ) இடைக்கால அரசில் புலிகள் பெரும்பான்மையிலும் இதரப் போராளிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஈரோஸ் போராளிகள் மட்டுமே சிறுபான்மையாக இருக்குமாறும் ஓர் இரகசிய ஒப்பந்தம்

(இ) நல்லெண்ணச் சமிக்ஞையாக சில துருப்பிடித்த ஆயுதங்களை மட்டும் அமைதிப்படையிடம் ஒப்படைத்தால் போதும் ("இந்தியா [எங்களுக்குக்] கொடுத்த ஆயுதங்களெல்லாமே துருப்பிடித்தவைதான்" என்றாராம் பிரபாகரன்)

(ஈ) புலிகளின் செலவுக்கென இந்திய அரசு அவர்களுக்கு மாதத்திற்கு இந்திய ரூ. 50 லட்சம் தருவது.

இப்படி ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டும் அதை தாளில் எழுதி கையெழுத்திட புலிகள் கேட்டதற்கு ராஜீவ் காந்தியின் ஆலோசகர்கள் ஒப்புக்கொள்ளவில்லையாம். Gentlemen agreement ஆக வாய் வார்த்தையோடு இருந்துவிட்டுப் போகட்டுமே என்று சொல்லிவிட்டனர். பிரபாகரன் பாலசிங்கத்திடம் "அண்ணா இருந்து பாருங்கோ இந்த இரகசிய ஒப்பந்தமும் வாக்குறுதிகளும் ஒன்றுமே நிறைவேறப் போவதில்லை. இதெல்லாம் ஒரு (sic) ஏமாற்று வித்தை." என்று விரக்தியோடு சொன்னாராம். அப்படியே நடந்தது என்று முடிக்கிறார் பாலசிங்கம்.

http://thoughtsintamil.blogspot.com

  • கருத்துக்கள உறவுகள்

தமது உரிமைகளுக்காக நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் கிழமைகளாக இருந்த போது காந்தி பிறந்த மன்ணில் உள்ள புண்ணாக்குகளுக்கு பிரச்சனையை சுமுகமாக தீர்க்க கூடிய சூழ்நிலை இருந்தது. ஆனால் அதனை எள்ளி நகையாடியதோடு அனியாயமாக திலீபன அண்ணாவின் உயிரையும் எடுத்து விட்டு இன்று பிரபாகரன் தாங்கள் சொல்வதை கேட்டிருந்தால் என்று யாருக்கு "மாய்மாலம்" காட்டுகிறார் இந்த கார்த்திக் புண்ணாக்கு சிதம்பரம்.

எது எப்படியோ..

பிரபாகரனுக்கு இந்தியா மீது இருந்த மரியாதையே, கடைசியில் தமிழீழத்துக்கு எமனாக வந்து..... முடிந்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது எப்படியோ..

பிரபாகரனுக்கு இந்தியா மீது இருந்த மரியாதையே, கடைசியில் தமிழீழத்துக்கு எமனாக வந்து..... முடிந்துள்ளது.

உண்மைதான் பிரபாகரன் நல்லவராக இருந்ததே இந்த முடிவு ஏற்பட காரணம், சுதந்திரம் பெற்ற ஒரு நாட்டுக்கு அவர் நல்ல தலைவராக இருக்க முடியும், போராட்டம் நடத்துவதற்க்கு பின்லாடன் போன்ற ஒரு தலைவர்தான் எமக்கு தேள்வை, இனி ஒரு ஆயுத போராட்டம் நடைபெற கூடாது, அதையும் மீறி நடைபெறுவதாக இருந்தால், பின்லாடன் போன்ற தலைவர்தான் எமக்கு தேள்வை, பிரபாகரனின் இடத்தில் பின்லாடனை வைத்து பாருங்கள், என்ன நடந்து இருக்கும், முக்கால் வாசி போராளிகள் சிங்களவர்களாக மாறி தென் இலங்கையில்தான் இருந்திருப்பார்கள், பின்லாடன் கடைசிவரை சாறம் சேட்டோடதான் திரிந்து இருப்பார்.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் எங்கட சனத்தை நம்பி மோசம் போட்டார்.சரி எங்கள் தமிழ் பகுதியை முன்நேற்றுவம் என்டால் அதுக்கும் ஒரு சாட்டு :D இதுக்கு கே.பி யும் வேன்டாம் கருனாவும் வேன்டாம் சம்பந்தனும் வேன்டாம்.சுயமாக செய்யுங்கோ தயவு செய்து.

இந்திய ஓநாய்களின் ஊளையிடளுக்கு அளவில்லாமல் போய்விட்டது.

இந்திய பயங்கரவாதி ராஜிவின் ஒப்பந்தத்தால் ஏற்பட்ட அரைவேக்காட்டு தீர்வு மூலம் பிள்ளையான் முதமைச்சராக இருந்து என்னத்தை கிழிக்கிறார் என்ற பட்டியல் போட்டால் நல்லது.

தமிழ் நாடுத் தமிழர் தம் மீது மற்றவர் நாமம் போட்டுக்கொண்டிருப்பதை, காதில் பூச்சுற்றுவதை அனுமதிக்கும் வரை இந்த ஓநாய்களின் அட்டகாசத்தை பார்க்க வேண்டி வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.