Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னிக்கான உழவு இயந்திரங்களில் பாதியை சிங்களவர்களுக்கு பிடுங்கிக் கொடுத்தது சிறிலங்கா அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னிக்கான உழவு இயந்திரங்களில் பாதியை சிங்களவர்களுக்கு பிடுங்கிக் கொடுத்தது சிறிலங்கா அரசு

[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஒக்ரோபர் 2010, 04:25 GMT ] [ புதினப்பலகை - வவுனியா செய்தியாளர் ]

அனைத்துலக செஞ்சிலுவைக் குழு வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவிருந்த உழவு இயந்திரங்களில் ஒரு பகுதியை சிறிலங்கா அரசாங்கம் சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு வழங்கியுள்ளது.

இதையடுத்து உழவு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற அனைத்துலக செஞ்சிலுகைக் குழுவின் வவுனியா பணியகத்தின் பொறுப்பதிகாரியான மேரிஸ் லிமோனார் என்ற பெண்மணி தனது வாகனத்தின் பின்புறமாகச் சென்று குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார்.

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 400 இருசக்கர உழவு இயந்திரங்களை வழங்க அனைத்துலக செஞ்சிலுவைக் குழு ஏற்பாடு செய்திருந்தது.

இதில் வவுனியா மாவட்டத்துக்கு 102 இரு சக்கர உழவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டன.

இதற்கான பயனாளிகளையும் செஞ்சிலுவைக் குழுவே தெரிவு செய்தது.

ஆனால் தாம் தெரிவு செய்தவர்களுக்கே உழவு இயந்திரங்களை வழங்க வேண்டும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீனும், வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியும் அனைத்துலக செஞ்சிலுவைக் குழு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தனர்.

இல்லையேல் உழவு இயந்திரங்களை எவருக்கும் வழங்க அனுமதி வழங்க முடியாது என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

இதன்காரணமாக செஞ்சிலுவைக் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்குப் பதிலாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவு செய்தவர்களுக்கே இருசக்கர உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

சிறிலங்கா அரசின் தலையீட்டினால் வவுனியா வடக்கு விவசாயிகளுக்கு வழங்கத் திட்டமிடப்பட்ட உழவு இயந்திரங்களில் அரைப்பகுதி வெலிஓயா, மற்றும் வவுனியா தெற்கில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

வவுனியா தெற்கு, வெலிஓயா பகுதிகளுக்கு தலா 25 உழவு இயந்திரங்கள் வீதம் 50 உழவு இயந்திரங்கள் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கெலபகஸ்வெவ, ரங்கெத்கம, ஒசடப்பிட்டிய, அவரந்தலாவ பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கே இவை பகிந்தளிக்கப்கபட்டுள்ளன.

இதன் காரணமாக வவுனியா வடக்கைச் சேர்ந்த தமிழ் விவசாயிகளுக்கு 52 உழவு இயந்திரங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா அரசின் அமைச்சர் மற்றும் ஆளுனரின் இந்த அடாவடித்தனத்தினால் - போரினால் பாதிப்புற்றவர்களென தம்மால் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் ஏமாற்றப்பட்டதால் மனம் வெதும்பிய அனைத்துலக செஞ்சிலுகைக் குழுவின் வவுனியா கிளை அதிகாரி மேரிஸ் லிமோனார் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்.

இந்தச் சம்பவம் வன்னியில் பணியாற்றும் அனைத்துலக உதவி நிறுவனங்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://www.puthinappalakai.org/view.php?20101024102344

  • கருத்துக்கள உறவுகள்

D :):D

அன்று கிளிநொச்சியில் மக்கள் வருந்திக் கேட்டுக்கொண்டும் ஒன்றும் செய்யாமல் (செய்யமுடியாமல்) வெளியேறினார்கள். :rolleyes: இன்று நடுத்தெருவில் நின்று அழுதுகொண்டிருக்கிறார்கள்..! :)

பி.கு.: இது ஒரு அதிசிறப்பான கருத்தா இருக்கிறதனால மீண்டும் பதிவு செய்யிறன்..! ^_^

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிக்கான உழவு இயந்திரங்களில் பாதியை சிங்களவர்களுக்கு பிடுங்கிக் கொடுத்தது சிறிலங்கா அரசு

இது குறித்து நான் முன்பே கூறினேன் ...இதெல்லாம் ஜகஜம்...

... இதுதான் சிங்களத்தின் உண்மை முகம்!!! அந்த மக்களின் வாழ்வாதாரங்களை அழித்தது மட்டுமல்லாது, அவர்களை ஒருபோதும் நிமிர விட மாட்டார்கள்!! ... ஆனால் கேட்டால் பிரட்சனைக்கு தீர்வு, பொருளாதார அபிவிருத்தியாம்!!!!!!

கேவலம் என்னவெனில் சிறுபான்மை இன சிறிலங்கா அமைச்சரான றிசாத் பதியுதீன், என்ற நாய் இதில் மட்டுமல்ல, கடந்தகாலங்களில் இருந்து வன்னி மக்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களினால் கொடுக்கப்பட்ட உதவிகளையும் பசில் ராஜபக்ஸவுடன் இணைந்து சுருட்டி வருகிறது!! அங்கு வவுனியா முகாங்களில் நடந்தேறும் பல அவலங்களின் பின்னணியிலும் இந்த நாயே உள்ளதாம்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைதான் சொல்லுறவையள் "பிச்சை எடுக்குதாம் பெருமாளு பிடுங்கித் தின்னுதாம் அனுமாரு" என்று, செஞ்சுலுவை சங்கம் குரங்கிட்ட பறிகொடுத்துட்டு அழுறதுதான் வேடிக்கை. :D:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனைக் காட்டி உலக நாடுகளிடம் பிச்சையெடுத்துச் சிங்களவனை மகிழ்ச்சிப் படுத்துவதுடன் சிங்கள அரசியல்வாதிகளும் தங்கள் பைகளை நிரப்புகின்றார்கள்.

மானங்கெட்டவர்கள்.

வாத்தியார்

**********

புலிகள் வெல்லுவார்களொ.. சிரி லன்கா அரசங்கம் வெல்லுவார்களொ... எண்று எமக்கு அக்கறையில்லை.. எமக்கு சமாதானம் மட்டுமே வேண்டும்.

இப்படிக்கு

திருவாளர்(98%) இலங்கை/வெளிநாட்டு தமிழ் சனம்.

( AKA மோட்டுக்கூட்டம்.. )

  • கருத்துக்கள உறவுகள்

:D அழிக்கப்பட்ட தமிழர்களுக்கென சர்வதேசம் கொடுத்துதவும் பொருட்களையே சுருட்டி ஏப்பம் விடும் சிங்களத்திற்கு, "உங்கள் மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்பப் பணம் தாருங்கள் என்று" கே.பீ என்கிற குருவும் அவனது சிஷ்ய கோடிகளும் புலம்பெயர் தமிழர்களிடம் அழுது வடிகிறார்கள்.

என்ன செய்வதாக உத்தேசம்?? கொடுப்போமா??!!!

:lol: மகிந்த நாயின் குட்டி என்ன செய்யுது ?? உவந்தான் எல்லாத்தையும் புடுங்கிச் சிங்களத்திகளிடம் குடுத்தவனோ??

:D அழிக்கப்பட்ட தமிழர்களுக்கென சர்வதேசம் கொடுத்துதவும் பொருட்களையே சுருட்டி ஏப்பம் விடும் சிங்களத்திற்கு, "உங்கள் மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்பப் பணம் தாருங்கள் என்று" கே.பீ என்கிற குருவும் அவனது சிஷ்ய கோடிகளும் புலம்பெயர் தமிழர்களிடம் அழுது வடிகிறார்கள்.

என்ன செய்வதாக உத்தேசம்?? கொடுப்போமா??!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.