Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.குடாநாட்டில் நிம்மதியாக- பயமின்றி மக்கள் வாழ முடியாதென்ற நிலை இப்போது முற்றிவிட்டது

Featured Replies

நெடுந்தீவில் நடந்த கொடுஞ்செயல் பாரீரோ

பன்னிரண்டு வயதுச் சிறுமி ஒருவர் மிக மோசமான முறையில் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட கொடுஞ்செயல் மனித சமூகத்தையே வெட்கித் தலை குனிய வைத்துள்ளது.

அதே சமயம் யாழ்.குடாநாட்டில் நிம்மதியாக- பயமின்றி மக்கள் வாழ முடியாதென்ற நிலை இப்போது முற்றிவிட்டது என்பதை இச் சம்பவம் நிரூபிக்கும் அதேவேளை, எங்கள் தமிழினத்தின் சமகால சூழமைவு எவ்வாறு உள்ளதென்பதை சுட்டிக்காட்டுவதற்கு இதைவிட உதாரணம் எதுவும் இருக்க முடியாது.

இத்தகைய கொடுஞ்செயல்கள் எங்கள் மண்ணில் தாண்டவமாடத் தலைப்பட்டுள்ளதை நினைக்கும் போது தாங்க முடியாத வேதனையே ஏற்படுகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் உரிமைகள் பற்றி எத்தனையோ மேடைகளில் முழங்கியாகிற்று. ஆனால் நெடுந்தீவில் பன்னிரண்டு வயது சிறுமிக்கு மக்கள் சமூகமும் அரச நிர்வாகமும் வழங்கிய பாதுகாப்பு என்ன? என்பதை ஒரு கணம் நினைத்தால் எங்கோ மகா தவறு நடந்து கொண்டிருப்பதையும் உணரமுடியும். சட்டங்கள் உரியவாறு நடைமுறைப்படுத்தாமையும் குற்றவாளிகளுக்கு நெருக்கமானவர்களாக பொலிஸார் இருப்பதும், எதற்கும் வாதிடலாம் என்ற வழக்கறிஞர்களின் நினைப்பும் எங்கள் மண்ணில் மகாகயவர்களையும்.

இதற்கு மேலாக நெடுந்தீவில் பன்னிரண்டு வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டால் அதற்கு வழங்கப்படும் முக்கியத்துவமும் அதே சம்பவம் யாழ்ப்பாணத்தில் நடந்தால் அதற்கு வழங்கப்படும் முக்கியத்துவமும் வேறுபட்டவையாக இருக்கின்ற கொடூரமும் மிகவும் மோசமானவை. இதுவிடயத்தில் பொதுமற்றும் சிறுவர் அமைப் புகள் கூடிய கவனம் செலுத்த வேண்டிய கட்டா யம் உள்ளதென்பதற்கு அப்பால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நூறு வீதமான பாதுகாப்பையும் வழங்க வேண்டுமென நினைப்பதும் அதனை செயற்படுத்துவதும் கட்டாயமானதாகும்.

ஒரு காலத்தில் சிறுவர்கள் வீதியால் நடந்து சென்றால் அவர்களுக்கான பாதுகாப்பை மக்கள் சமூகமே கவனித்துக் கொண்டது. ஒரு சிறுவன் வீதியைக் கடக்க முற்படுகிறான் என்றால் பாதையால் பயணிப்பவர் அதற்கு உதவிய காலம் இருந்தது. ஆனால் இன்று அப்படியல்ல. எங்கள் சமூகம் மிகவும் கீழ்நிலைக்கு இறங்கி விட்டது. ஒரு வீட்டில் கூக்குரல் இட்டால் அந்த அயலே ஒன்றுதிரண்ட காலங்கள் கடந்து இப்போது கூக்குரல் கேட்டதும் எரிந்த மின்குமிழ்களை நிறுத்தி விட்டு கடும் உறக்கம்போல காட்டிக்கொள்ளும் எங்கள் சமகால மன நிலையில், சமூகப்பாது காப்பு என்பது பூச்சியமாகிவிட்டது.

எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு நூறுவீதம் பொறுப்பானவர்கள் என்பதை தவிர வேறு எந்தவகையிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது. மனித வடிவங்களில் புலால் தின்னும் காட்டு மிருகங்கள் நடமாடும் இடமாக எங்கள் தமிழ்ப் பிரதே சங்கள் மாறிவிட்டன. ஆபத்து என்று பொலிஸாருக்கு அறிவித்தால் அவர்கள் வந்து சேர்வதற்குள் எல் லாம் முடிந்து விடுகின்றன.எங்கும் அரசியல் எங்கும் நேர்மையீனம். இதுவே நிலைமை என்றாகிவிட்ட நிலையில், போதைவஸ்து பாவனைகளும் சேர்ந்து எங்கள் இனத்தை-எங்கள் பிஞ்சுகளை நாசம் செய்கின்றன. தட்டிக்கேட்க ஆளில்லை என்பதால் நாங்களே எங்களை பாதுகாத்துக்கொள்வதே ஒரேவழியாகும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=27490

  • தொடங்கியவர்

வட இலங்கையில் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு

இலங்கையின் வடக்கே யுத்தத்தின் பின்னர் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துச் செல்வதாகவும், குறிப்பாக சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் மற்றும் கொலைச் சம்பவங்களும் கூடியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இந்த வருடத்தில் இதுநாள் வரையிலும் சிறுமிகள் மீதான 24 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சின்னையா சிவரூபன் தெரிவித்திருக்கின்றார்.

அதேவேளை பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பாக இந்தக் காலப்பகுதியில் 32 சம்பவங்கள் பற்றி முறையிடப்பட்டிருக்கின்றது.

கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 102 ஆக இருந்து, கடந்த வருடம் 182 ஆக அதிகரித்திருக்கின்றது.

பாலியல் வன்புணர்வின் பின்னர் சிறுமிகள் கொடூரமாகக் கொலை செய்யப்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருவதாக டாக்டர் சிவரூபன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

"இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் வன்முறைச் சம்பவங்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோன்று கடந்த 3 ஆம் திகதி நெடுந்தீவில் 12 வயதுடைய பூப்பெய்தாத சிறுமி ஒருவர் மிக மோசமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படு கொலை செய்யப்பட்டிருந்தார்".

இந்தச் சம்பவங்கள் சிறுமிகள் மீதான வன்முறைச் சம்பவங்களின் கொடூரத்தன்மை அதிகரித்துச் செல்வதைச் சுட்டிக்காடடுவதாக அமைந்திருக்கின்றன என்றும் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சிவரூபன் தெரிவித்திருக்கின்றார்.

இத்தகைய வன்முறைப் போக்கிற்கு மக்களிடையே அருகியுள்ள விழிப்புணர்வு, சிவில் நிர்வாகத்தில் காணப்படுகின்ற மென்மைப் போக்கு, ஆளணி மற்றும் வளப் பற்றாக்குறைகள் என்பன முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றது.

அத்துடன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் குற்றவாளிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் ஒரு காரணமாகும் என டாக்டர் சிவரூபன் குறிப்பிடுகின்றார்.

"சிறுமிகள் மீது மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள் தொடர்பாக பரபரப்பாகத் தகவல்கள் வெளியிடப்படுகின்ற அளவு வேகத்திற்கு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை கிடைப்பதாகத் தெரியவில்லை".

இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதில் நீண்டகாலம் எடுப்பதுவும் இத்தகைய குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்வதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது.

அத்துடன் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் பல குறைபாடுகள் நிறைந்திருப்பதாக டாக்டர் சிவரூபன் கருதுகின்றார்.

நீண்டகால யுத்தம் ஒன்றில் பாதிக்கப்படுகின்ற சமூகத்தில் யுத்தம் முடிவடைந்ததும் பல்வேறு பிரச்சினைகள் எழுவது இயல்பு. எனவே எதிர்கொள்வதற்கு அந்தச் சமூகம் ஒருங்கிணைந்த முறையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகின்றார்.

http://www.bbc.co.uk...orthlanka.shtml

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முப்பது வருசமா இது தானே ஸ்ரீ லங்கா, இந்திய கொங்கிரசின் ஆட்சியில் நடக்கிறது.

ஸ்ரீ லங்கா தமிழ் பெண்மணியே இந்த காடேரிகளுக்காக வாதாடுகிறது. 

சம்பவம் மிகவும் கவலைக்குரிய விடயம். சரி இனி இதைச் சொன்னியே இங்கு விம்மி விம்மி அழப்போறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவம் மிகவும் கவலைக்குரிய விடயம். சரி இனி இதைச் சொன்னியே இங்கு விம்மி விம்மி அழப்போறாங்கள்.

ஏன், நீங்கள் கவலைப்படுறீங்கள். உங்கட தாந்தோன்றித்தலைவரும் உதைத்தானே செய்யச் சொல்லி இருக்கிறார். சிங்களவன் செய்தாலென்ன, நீங்கள் செய்தாலென்ன?? எங்களுக்கு எல்லாமே ஒன்றுதான். உங்கட வீட்டுப் பிள்ளையெண்டாலும் உங்களுக்குக் கவலை வாராதெண்டது எங்களுக்கு நல்லாத் தெரியும். கூட்டிக்குடுக்கிறதெண்டு முடிவெடுத்திட்டியள், இனி உங்கவீட்டுப் பிள்ளை எங்க வீட்டுப் பிள்ளையெண்டெல்லாம் பாக்க ஏலாது கண்டியளோ???

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விடிவெள்ளி மிகவும் கவலைக்குரிய விடையம் என்பதன் அர்த்தம், சம்பந்தப்பட்ட இடத்தில் நீங்களும் இல்லாமப்போயிட்டியளோ என்கின்ற கவலையோ! விட்டுத்தள்ளுங்கோ அடுத்து இன்னுமொரு தருணம் வராமலாபோகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.