Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    88025
    Posts
  2. ஜெகதா துரை

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    5
    Points
    802
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46808
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    19167
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/11/19 in all areas

  1. இவோவும் நல்ல ரெசிப்பியல் போடுறா. பிரின்சிட விசேசம் என்னெண்டா, இவோட ஆத்துக்காரர், சிங்களம், அசங்க கனடாவில் இருந்து, இரண்டு பக்கத்து சமையலையும் கலந்து கட்டி தருவா. சிங்கள ஆக்களுக்கு யாழ் சமையலும், எங்களுக்கு, அவையடையும் எண்டு, இரண்டு மொழியிலேயும் போட்டு தாக்குறா.. யாழ்ப்பாணத்து பயித்தங்காய் கறி, சிங்களத்தில இங்கிலீசில நண்டு கறி
  2. சமோசாவும் பற்றீசும் வேறுவேறுதான், அதற்கேன் நீங்கள் சில்க் சுமிதாவிற்கு கண்ணடிக்கிறியள்?
  3. தோழர் பற்றிஸ்சும் சமோசாவும் ஒரேமாதிரி போல் தோன்றினாலும் இரண்டும் வெவ்வேறானவை.......அவர் பற்றிஸ் செய்வது பற்றித்தான் வகுப்பெடுக்கின்றா, நீங்கள் சமோசா மடிக்கிறதில மினக்கடுரியள்....தப்பு.....! 😁 கண்கள் ஒன்றுபோல் இருந்தாலும் தாக்கங்கள் வெவ்வேறு........! 😄
  4. இது போன்ற உயிரினங்களை... பாதுகாக்க வேண்டும்.!
  5. கடை சாத்திய நேரத்திலும் கறி ஆக்க காயும், இலையும் தரும் முருங்கை .....! 👍
  6. உலகத் தலைமை பண்பாளர் விருதுக்கு.... தமிழன் சுந்தர் பிச்சை தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  7. இசையின் ஒரு வடிவம் செல்வி செயலலிதா அம்மையார் மறைந்தபொழுது, செயா தொலைக்காட்சி, அவரின் காணொளிகளை நேரலையாக ஒளிபரப்பியபோது, அதன் பின்னணியில் ஒரு வயலின் இசை மட்டும் மெல்லிதாக ஒலித்துக்கொண்டே இருந்தது மனதை மிகவும் பாதித்தது. இசையின் மூலம் மனதை வருடி, சோகத்தையும் உணர்த்தலாம் என்பதை இவ்விசையை உணர்ந்தால் புரியும்.. யுடுயூபில் தேடியதில், அந்த இசையொலி கிடைத்தது.. உணர்ந்து ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுள்ளது..! முழு வடிவம்..
  8. இந்த காணொளியை மட்டும் 2.5 கோடி பேர் பார்த்துள்ளர்கள்..
  9. அண்ணை, என்ன இருந்தாலும் ஒரு புழுக்கொடியலுக்கு 2000 டாலர் கூடத்தான். கொஞ்சம் ஓவராக ஆடிவிட்டீர்கள்😁 ஓரிரு பல்லுகள் அப்பிடி இப்பிடி இருந்தாலும், புளுக்கோடியல் இன்னும் சாப்பிடும் கண்டிஷனில்தான் இருக்கிறேன்
  10. தொல்லியல் அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் மோதலா?- கீழடி 5-ம் கட்ட அகழாய்வுப் பணி ரத்து: தொல்லியல் ஆர்வலர்கள் கடும் அதிருப்தி ..! தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜனுக்கும், தொல்லியல் துறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதலால் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நேற்று தொடங்கப்படவிருந்த 5-ம் கட்ட அகழாய்வுப் பணி திடீரென ரத்து செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மத்திய தொல்லியல் துறை (பெங்களூரு) பிரிவு சார்பில், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015-ல் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. 3 கட்டங்களாக அகழாய்வு நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை விரும்பவில்லை. இதையடுத்து 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறையே மேற்கொண்டது. இப்பணியை தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையிலான குழு மேற்கொண்டது. இந்த அகழாய்வு கடந்த ஆண்டு ஏப்.18 முதல் செப்.30 வரை நடைபெற்றது. இதில் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன. 4-ம் கட்ட அகழாய்வு முடிந்த நிலையில், 5-ம் கட்ட அகழாய்வு நடத்த, தமிழக அரசு ரூ.47 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதற்காக கொந்தகையைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் தேர்வு செய்து சுத்தப்படுத்தி வைத்திருந்தனர். கடந்த ஜனவரி மாதமே அகழாய்வு தொடங்க இருந்த நிலையில், மக்களவைத் தேர்தலால் அப்பணியில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிந்த நிலையில் ஜூன் முதல் வாரத்தில் அகழாய்வு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அமைச்சர் -அதிகாரிகள் மோதலா? இதற்கிடையே, திடீரென அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடங்கி வைப்பதற்காக ஜூன் 10-ம் தேதிக்கு அகழாய்வுப் பணி தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், நேற்றும் அமைச்சர் வராததால் அகழாய்வுப் பணி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அமைச்சருக்கும், தொல்லியல் துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட மோதலால்தான் அகழாய்வுப் பணி ரத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது. கீழடியில் 2.10 ஏக்கரில் ரூ.1 கோடி செலவில் தொல்லியல் பொருட்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் தள்ளிப் போவதால் அருங்காட்சியக கட்டுமானப் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இப்பணி எப்போது தொடங்கப்படும் என தெரியாததால் தொல்லியல் ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: 5-ம் கட்ட அகழாய்வுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் நிதி ஒதுக்கீடு இல்லாதது, மக்களவைத் தேர்தல் ஆகிய காரணங்களால் அகழாய்வைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது நிதி ஒதுக்கியுள்ள நிலையில் அகழாய்வை தாமதப்படுத்தி வருகின்றனர். அகழாய்வை அதிகாரிகளே தொடங்கிவிடலாம். இதற்குமுன் அதிகாரிகளே அகழாய்வை தொடங்கினர். ஆனால், தற்போது அமைச்சரை காரணம் காட்டி தாமதப்படுத்தி வருகின்றனர். ஏற்கெனவே தொல்லியல் ஆர்வலர்கள், நீதிமன்றம் வற்புறுத்தலால்தான் கீழடி அகழாய்வுப் பணியை தமிழக அரசு மேற்கொள்கிறது. இந்த அகழாய்வில் ஆரம்பத்தில் இருந்தே தமிழக தொல்லியல் அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக உள்ளனர். ஆர்வமுள்ள அதிகாரிகளை நியமித்து தொல்லியல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றனர். இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “உயரதிகாரிகளிடம் இருந்து உத்தரவு ஏதும் வராததால் அகழாய்வுப் பணியைத் தொடங்கவில்லை” என்ற ர் https://tamil.thehindu.com/tamilnadu/article27768215.ece

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.