Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    12
    Points
    46808
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    8910
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19162
    Posts
  4. தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    9976
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/26/20 in all areas

  1. 1970 ம் ஆண்டுப் பகுதியில் துருக்கிநாட்டில் இருந்து ஜேர்மனியில் குடியேறிய குடும்பம். மஞ்சள் நிறத்திலான ரீ சேட்டுடன் காணப்படும் சிறுவன் இன்று கொரோனா தடுப்பு மருந்தை உலகத்திற்கு அளித்த விஞ்ஞானி!
  2. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 04, புரட்டாதி 2005 புலிகளின் களுவாஞ்சிக்குடி அரசியல் அலுவலகம் மீது கருணா குழு தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியான களுவாஞ்சிக்குடியில் அமைந்திருந்த புலிகளின் அரசியல்த்துறை அலுவலகம் மீது கருணா துணைராணுவக்குழுவினர் நடத்திய தாக்குதலில் அருள்நேசன் எனும் அரசியக்த்துறைப் போராளி கொல்லப்பட்டார். கிர்னேட்டுக்கள் கொண்டும், இயந்திரத் துப்பாக்கிகள் கொண்டும் நடத்தப்பட்ட இத்தாக்குதலில், உடலில் ஒன்பது சன்னங்கள் பட்டு அருள்நேசன் உயிரிழந்தார், கூடவிருந்த மூன்று போராளிகள் தெய்வாதீனமாக உயிர்தப்பினர். அருள்நேசனின் உடல் பிரேதப் பரிசோதனையின் பின்னர் புலிகளிடம் கையளிக்கப்பட்டது. இதே அலுவலகம் சுமார் ஒரு மாதகாலத்திற்கு முன்னர் தாக்குதலுக்கு உள்ளாகியதென்பதும், இப்பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருக்கிறதென்பதும் குறிப்பிடத் தக்கது. இரண்டு உந்துருளிகளில் வந்திறங்கிய நான்கு கருணா துணைராணுவக் குழுவினர் கைய்யெறிகுண்டுகளை வீசியும், டி 56 இயந்திரத் துப்பாகிகள்மூலம் சரமாரியாகச் சுட்டுக்கொண்டும் அலுவலகத்தினுள் நுழைந்ததுடன் அங்கிருந்த ஆவணங்களை எரித்தும், தளபாடங்களை அடித்து நொறுக்கியுமிருக்கிறார்கள். இத்தாக்குதலில் கொல்லப்பட்ட அருள்நேசன் ஒருமாத காலத்திற்கு முன்னர் இதே அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர்தப்பியிருந்தார். புலிகளின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர்கள் தொலைவில் மட்டுமே விசேட அதிரடிப்படை முகாமும், பொலீஸ் அலுவலகமும் அமைந்திருக்கும் நிலையில் கருணா குழுவினரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
  3. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30, ஆவணி, 2005 புலிகள் மற்றும் பொதுமக்கள் மீது கருணா துணை ராணுவக்குழுவும் ராணுவமும் இணைந்து தாக்குதல் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் இராசையா இளந்திரையனின் கூற்றுப்படி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வாகரை கிரிமிச்சைப் பகுதிக்குள் ஊடுருவிய கருணா துணை ராணுவக் குழுவும், ராணுவமும் இணைந்து புலிகள் மீதும் பொதுமக்கள் மீதும் நடத்திய தாக்குதலில் புலிகளின் ரீகன் எனும் போராளி கொல்லப்பட்டதோடு, மேலும் இரு பொதுமக்களும் ஒரு போராளியும் காயப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. செவ்வாய் காலை 10 மணிக்கு நடத்தப்பட்ட இத்தாக்குதல் குறித்து கருத்துவெளியிட கண்காணிப்புக்குழு மறுத்துவிட்டது. அதேவேளை வாகரைப்பகுதி மக்களின் கருத்துப்படி, அருகில் அமைந்திருக்கும் பன்னிச்சங்கேணி ராணுவ முகாமிலிருந்து ராணுவ உடையணிந்த ஆயுததாரிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும், தாக்குதலின் பின்னர் முகாமினுள் நுழைந்ததை தாம் பார்த்ததாகவும் கூறியிருக்கிறார்கள். சம்பூர் அரசியல்துறையினரின் செய்திப்படி, கிளேமோர்க் குண்டுகளைப் பாவித்து தாக்குதலை ஆரம்பித்த இக்குழுவினர், பின்னர் புலிகளை நோக்கித் துப்பாக்கித் தாக்குதலினையும் மேற்கொண்டதாகத் தெரிய வருகிறது. புலிகளின் சமாதானப் பணியகத்தின் கூற்றுப்படி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கிரிமிச்சையினுள் சுமார் 500 மீட்டர்கள் உள்நுழைந்து ராணுவமும், துணை ராணுவக்குழுவும் நிலைகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ராணுவத்தினதும், துணை ராணுவக் குழுவினதும் இந்த அத்துமீறல் குறித்து கண்காணிப்புக் குழுவினரிடம் மட்டக்களப்பில் புலிகள் முறையிட்டிருக்கிறார்கள். இதேவேளை, இத்தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட மட்டக்களப்பு ராணுவ அதிகாரியொருவர் இத்தாக்குதல் பற்றி எமக்குத் தெரியும், ஆனால் நாங்கள் பங்கேற்கவில்லை. கருணா குழு 6 புலிகளைக் கொன்றிருப்பதுடன், இன்னும் 7 பேரைக் காயப்படுத்தியிருக்கிறது " என்று கூறினார்.
  4. இரு அரசியல்த்துறைப் போராளிகளைக் கொன்று எல்லையில் எறிந்த கருணா துணை ராணுவக்குழு மட்டக்களப்பு பொலொன்னறுவை மாவட்ட எல்லைகளில் அரசியல்த்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரு போராளிகளைச் சுட்டுக்கொன்ற கருணா துணை ராணுவக்குழு அவர்களின் உடல்களை எல்லைப்பகுதியில் எறிந்துவிட்டுச் சென்றிருக்கிறது. கப்டன் சுபன் ( அரசரட்ணம் விக்னேஸ்வரன் - வளத்தைப்பிட்டி) மற்றும் லெப்டினன்ட் நிலவரசன் ( ராசலிங்கம் ஷங்கர் - களுவங்கேணி) ஆகிய அரசியல்த்துறைப்போராளிகளே இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் ஆவர். வாழைச்சேனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினூடாகப் புலிகளிடம் கையளிக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
  5. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, சித்திரை 2005 வெலிக்கந்தை - சொறிவில் துணைராணுவக்குழு மறைவிடங்கள் மீது தாக்குதல் - 9 துணை இராணுவக்குழுவினர் பலி ! மட்டக்களப்பு நகரிலிருந்து 80 கிலோமீட்டர்கள் வடக்கே அமைந்திருக்கும் சொறிவில் - வெலிக்கந்தைப் பகுதியில் இயங்கிவந்த கருணா குழு மற்றும் ஈ என் டி எல் எப் துணை ராணுவக்குழுக்களின் மறைவிடங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 9 துணை ராணுவக் குழுவினர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் பற்றிக் கருத்துக்கூறிய மட்டக்களப்பு ராணுவ அதிகாரியொருவர், "இதனை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ என்னால் இப்போது முடியாது" என்று கூறினார். கொல்லப்பட்ட ஒன்பது துணை ராணுவக்குழுவினரின் உடல்களும் சொறிவில் ஆற்றுப்பகுதியில் காணப்படுவதாக அக்கிராமவாசிகள் தெரிவித்தனர். கருணா துணைராணுவக் குழுவினரும், இந்தியாவில் இயங்கிவரும் ஈ என் டி எல் எப் துணைராணுவக்குழுவினரும் இணைந்து இப்பகுதியில் 5 சிறிய முகாம்களை அண்மையில் நிறுவியிருந்தனர். இவற்றுள் வண்ணத்துரையடியில் அமைந்திருந்த மூன்று முகாம்களே புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தன. மற்றைய இரு முகாம்களும் துணைராணுவக்குழுவினருக்கான உணவுப்பொருட்களைச் சேமித்துவைக்கப் பயன்பட்டுவந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பிலிருந்து வரும் தகவல்களின்படி இந்தியாவை தளமாகக் கொண்டு இயங்கும் துணைராணுவக்குழுவான ஈ என் டி எல் எப் இன் முக்கியஸ்த்தர் விஜயன் உட்பட இக்குழுவின் மேலும் இரு துணைராணுவக்குழுவினரும் கொல்லப்பட்டவர்களுள் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சொறிவில் ஆற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஐந்து உடல்களை பொலிஸார் அரலகன்வில வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுளானர். மேலும் காயமடைந்த யோகராஜா மற்றும் சின்னத்தம்பி மகேந்திரன் ஆகியோர் பொலொன்னறுவை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இப்பகுதியில் இயங்கிவரும் துணைராணுவக்குழுவினரே புலிகள் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல்களை நடத்திவருவதாக குற்றஞ்சாட்டியிருந்த யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினர், இலங்கை ராணுவமே இவர்களை இயக்குவதாக வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியிருந்தநிலையில் இத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இதேவேளை தம்மால் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டமொன்றிற்கு வரமறுத்தார்கள் என்கிற காரணத்தால் சொறுவில், மலியதேவபுர, நாமல் பொக்குன ஆகிய சிங்களக் குடியேற்றக் கிராமங்களிருந்த சிங்களவர்கள் மற்றும் தமிழர்களிடமிருந்து தண்டப்பணமாக பெருந்தொகையினை இந்த துணை ராணுவக்குழுவினர் அறவிட்டதாக சிங்கள நாளிதழான லங்காதீப செய்தி வெளியிட்டிருக்கிறது. அப்பத்திரிக்கை மேலும் கூறுகையில், அண்மைக்காலமாக கருணா குழுவும் ஈ என் டி எல் எப் குழுவும் இப்பகுதியில் இணைந்தே இயங்கிவருவதாகவும், எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் தமது செயற்பாடுகள் பற்றி விளக்கமளிப்பதற்கே இக்கூட்டத்தினை இவர்கள் கூட்டியதாகவும் கூறியிருக்கிறது. https://yarl.com/forum2/thread-4478.html
  6. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 20, பங்குனி 2005 ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான தீவுச்சேனையில் இயங்கும் கருணா துணை ராணுவக்குழு முகாம் - சண்டே லீடர் பொலொன்னறுவை மாவட்டத்திலிருக்கும் ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமான தீவுச்சேனைப் பகுதியில் கருணா குழுவின் முகாம் இயங்கிவருவதை கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் வாரப் பத்திரிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. வாழைச்சேனை - ஹபரணை நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செவனப்பிட்டிய எனும் சிங்களக் குடியேற்றக் கிராமத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள இப்பகுதிக்கு இப்பத்திரிக்கையின் நிருபர்கள் அண்மையில் விஜயம் செய்திருந்தனர். இப்பகுதியில் இரு சிறுவர்களை அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் சிலநாட்களுக்கு முன்னதாக சுட்டுக் கொன்றிருந்தனர். தமது பிள்ளைகள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த இக்கிராம மக்கள் தமது இறந்த பிள்ளைகளின் உடல்களை பிரதான வீதிக்கு முன்பாக வைத்து சாலை மறியலில் ஈடுபட்டதுடன், இந்த துணை ராணுவக் குழு முகாம் இப்பகுதியிலிருந்து உடனடியாக அகற்றப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர். அக்கிராமவாசிகளின் கருத்துப்படி இந்த துணைராணுவக் குழுவின் முகாமிலிருந்து வந்த கருணா குழு ஆயுததாரி லக்ஷ்மண் என்பவரே இப்படுகொலைகளைப் புரிந்ததாகக் கூறினர். இதேவேளை, இச்சிறார்கள் கொல்லப்பட்டபொழுது, புலிகளே இவர்களைக் கொன்றதாகக் கூறியிருந்த பாதுகாப்பு அமைச்சு, உண்மையான குற்றவாளிகள் ராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா துணைராணுவக் குழுவினர்தான் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையிலும், இதுபற்றிக் கருத்துக் கூறவில்லை. தீவிச்சேனைப் பகுதி கடுமையான ராணுவ பிரசன்னத்தை எப்போதும் கொண்டிருப்பதுடன் ராணுவத்தின் பாரிய படைமுகாம்களும் சிறு முகாம்களும் இப்பகுதியெங்கும் நிறைந்திருக்கின்றன என்பதோடு, முத்துகலையில் அமைந்திருக்கும் ராணுவ முகாமிலிருந்து இக்கிராமம் வெறும் 2 அல்லது 3 கிலோமீட்டர்கள் தொலைவிலேயே அமைதிருக்கிறது. இப்பத்திரிக்கை இம்முகாம் பற்றி மேலு கூறுகையில், கருணா குழுவின் "மங்களன்" என்பவர் தலைமையிலேயே இம்முகாம் இயங்கிவருவதாகக் கூறியிருப்பதுடன், இம்முகாமின் முன்னரங்கில், வீதியினை மறித்து காவலில் ஈடுபடும் இரு துணை ராணுவக்குழு உறுப்பினர்களின் படங்களையும் இணைத்திருக்கின்றது. தம்முடன் துணை ராணுவக்குழுவினர் என்று எவருமேயில்லை என்று சந்திரிக்கா தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், இப்பத்திரிக்கை இம்முகாம்பற்றிய செய்திகளை வெளியிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
  7. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 6, பங்குனி 2005 ஆறு கிராமவாசிகளைச் சுட்டுக்கொன்ற கருணா துணை ராணுவக்குழு கடந்த சனிக்கிழமை, மட்டக்களப்பு நகரிலிருந்து 65 கிலோமீட்டர்கள் வடக்கேயிருக்கும் கோலகுணவெளி, வெலிக்கந்தைப் பகுதியில் நான்கு முஸ்லீம்கள், ஒரு சிங்களவர் ஒரு தமிழர் அடங்கலாக ஆறு கிராமவாசிகளை கருணா துணை ராணுவக் குழுவினர் சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும், இரு முஸ்லீம்களும் ஒரு சிங்களவரும் இத்தாக்குதலில் படுகாயமடைந்திருக்கின்றனர். பொலிஸார் மேலும் கூறுகையில் புலிகளுடன் தொடர்பை வைத்திருந்தார்கள் என்கிற காரணத்தினாலேயே இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், தமது நடவடிக்கைகள் பற்றி புலிகளுக்குத் தகவல் வழங்கியவர்கள் என்று கருணா குழுவினரால் இம்மக்கள் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு பொலொன்னறுவை நெடுஞ்சாலையில், கோலகுணவெளியெனும் பகுதியில், பொலீஸ் காவலரணில் இருந்து வெறும் 300 மீட்டர்கள் இருக்கும் இடத்திலேயே இந்தப் படுகொலைகள் அரங்கேறியுள்ளன. கொல்லப்பட்ட தமிழர் கோலகுணவெளியில் வியாபாரம் பார்த்து வந்தவர் என்றும், புலிகளுக்குத் தகவல் வழங்கினார் என்கிற அடிப்படையிலேயே இவர் கடையினுள் இருந்து இழுத்துவரப்பட்டுச் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்த பொலீஸார், தாம் இப்பகுதியை அடையுமுன்னரே கருணா குழு அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறினர்.
  8. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 10, மாசி 2005 துரோகிகளால் கொல்லப்பட்ட புலிகளின் வித்துடல்கள் மட்டக்களப்பு கிரானில் மக்களின் அஞ்சலிக்கக வைப்பு துரோகிகளான கருணா துணை ராணுவக்குழுவினரால் கொல்லப்பட்ட புலிகளின் கிழக்கு மாவட்டங்களின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யன் மற்றும் ஏனைய போராளிகளினதும் வித்துடல்கள் கிரானுக்குக் கொண்டுசெல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன. தமிழீழத் தேசியக்கொடியினால் போர்த்தப்பட்ட போராளிகளின் வித்துடல்களுக்கு பலநூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்த இறுதிநிகழ்வுகளில் கலந்துகொண்ட கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் இங்கு பேசுகையில், "மக்களின் அவலங்களைத் தீர்ப்பதற்காகத் தொடர்ந்து செயலாற்றிவந்த ஒரு சேவையாளனை அரச ஆதரவுடனேயே துணைராணுவக்குழு கொன்றிருக்கிறது, ஆகவே அரசே இக்கொலைகளுக்கு முழுப்பொறுப்பினையும் ஏற்கவேண்டும்" என்று கோரினார். கொல்லப்பட்ட போராளிகளின் வித்துடல்கள் அம்பாறை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டு, ராணுவத்தின் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல், சமூக, மத பிரமுகர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன், படுகொலைகளையும் கண்டித்தனர். மட்டக்களப்பு தெய்வநாயகம் மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வுகள் முடிவடைந்தபின்னர், அவை கிரானுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. கிரான் அஞ்சலி நிகழ்வின் பிற்பாடு, தாண்டியடி மாவீரர் துயிலுமிடத்திற்கு போராளிகளின் வித்துடல்கள் கொண்டுசெல்லப்பட்டன. செல்லும் வழியெங்கும் மக்கள் தமது போராளிகளுக்குத் தமது அஞ்சலியைச் செலுத்தியதைக் காண முடிந்தது.
  9. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 08, மாசி 2005 கருணா துணை ராணுவக்குழுவின் தாக்குதலில் படுகாயமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மரணம் கடந்த திங்களன்று கருணா துணை ராணுவக் குழுவால் கெளசல்யன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு இன்று கொழும்பில் மரணித்தார். அன்னார், கிழக்குமாகாண தமிழ்த்தேசிய ஆர்வலர்களான அறபோர் அரியநாயகம் அவர்களின் சிரேஷ்ட்ட புத்திரனும், 2001 இல் அம்பாறை மாவட்டத்திலிருந்து கூட்டமைப்பு சார்பாக பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டவருமாவார். இதேவேளை புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்த்துறையினர் துரோகிகளால் கொல்லப்பட்ட கெளசல்யன் மற்றும் ஏனைய போராளிகளின் வித்துடல்களை பொலொன்னறுவை வைத்தியசாலையிலிருந்து பொறுப்பேற்று மட்டக்களப்பிற்குக் கொண்டுவர ஏற்பாடு செய்துவருகின்றனர்.
  10. பிறந்தநாள் வாழ்த்து சகாறா
  11. பிந்திய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சசி ...வாழ்க வளமுடன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.