Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    19167
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46808
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88026
    Posts
  4. நியானி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    3071
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/29/20 in Posts

  1. அதெல்லாம் உங்கள் கூடவே இருக்கு நீங்கள்தான் இன்னும் சரியா கவனிக்கவில்லை.......! 😎
  2. கலர் பென்சிலால்... வரைந்த ஓவியங்கள். சசிகாந் டோற்றிக்கு வாழ்த்துக்கள்!!!!
  3. அதுதான் இப்ப மட்டுறுத்தினர்மார் பெரிசாய் தண்டனை குடுக்கிறேல்லை.....ஏதோ குத்துப்படுங்கோ....எங்கையாவது முட்டி மோத உங்களுக்கை தெளிவு வரும் எண்டு விட்டுட்டினம் போல..😁
  4. அரைக்காற்சட்டையும் , காதில் பூவும், நெற்றியில் வீபூதியும் சந்தனமும், செட்பொக்கற்றில் சிவப்பு நீல நிறபேனாவுடனும், சயிக்கிள் கரியரில் கொப்பியும் கொண்டு , இடுப்பில் பிஸ்டலுடனும், செட் கொலருக்குள் மறைத்து வைத்த குப்பியுடனும் இந்தியப்படைகளின் முன்திரிந்து , அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திரிந்த நெருப்பு ஒன்று தன் இனிய உயிரினை தாய் மண்ணிற்கு ஈந்து,அணைந்த தினம் இந்திய ஆக்கிரமிப்பு படைகளை உறக்கமற்று, அச்சத்தின் உச்சத்தில் தொடர்ந்து வைத்திருந்த வீரன் கப்டன் லோலோ. இந்தியப்நேரடி மோதலில் வித்தான கப்டன் லோலோவிற்கு வீரவணக்கங்கள்..
  5. அவருக்கு தெரியும். ஆனால் மெசினைக் கையாளப் பயம்.அடிவாங்க வேண்டி வரலாம் 😁😁😁
  6. சரி.....சரி. போ....போ.... இன்னும் மூணே மூணு நாள்தானே. சமாளிச்சிடுவோம்.
  7. இந்து மதத்தை நான் வெறுத்து வாழ்வதுக்கு இவைதான் காரணம் இவற்றை எல்லாம் ஒரு அர்த்தமும் இல்லாதாக்கி மக்களை மூடராக்கியது இந்துமதம் என்ற சாக்கடைதான் சாதி பேதம் உருவாக்கி கொலைவெறி ஏற்றியதும் இந்த கேடு கெட்ட மதம்தான். ஒரு அருமையான வீடியோ இணைப்புக்கு நன்றி எமது சைவமதத்தில் டாக்சரா ஒரு கறுப்பு சக்தி பெண்கள் அதை தெளிவாக புரிந்துகொண்டால் அச்சம் இன்றி வாழமுடியும் ஆண்களும்தான் 8 சக்திகளை சிவனின் மகள்களாக கொண்டது சைவம் உங்களுக்கு நம்புவதுக்கு கடினமாக இருக்கும் காமசூத்திரத்தை படைத்தது சரஸ்வதி அது ஒரு இன்றி அமையாத கல்வி அந்த அறிவு இருந்தால் எந்த கணவன் மனைவிக்கு இடையிலும் பிரச்சனை வர நேரம் இருக்காது. இவற்றை படித்து பல வெள்ளைக்காரர்கள் மகிழ்ச்சியாகவும் நோய் நொடி இன்றியும் வாழ்கிறார்கள். நாங்கள் அயல் வீட்டு காரனை வெறுப்பதில் தொடங்கி அயல் ஊர்காரனை வெட்டுவது என்று வாழ்கிறோம். சக்தியில் நல்ல சக்தி கெட்ட சக்தி என்று ஒன்று இல்லை என்பது சைவம் இந்துமதம் + மூட சோதிடம் உங்களுக்கு கெட்ட சகுனம் என்று சொல்லி ஏமாற்றியது விஞ்ஞானமாக பார்த்தால் ஒரு வைபிரசென் இருக்க முடியுமே தவிர அதில் எப்படி நெகடிவ் வைபிரசென் பொசிட்டிவ் வைபிரசென் என்று இருக்க முடியும்? ஆனால் ஒவ்வாமைக்கு 100 வீதம் சாத்தியம் உண்டு அதுதான் எந்த சக்தி? எப்போது? எங்கே? ஏன்? என்பதில் தெளிவு வேண்டும். எங்களுக்கு இவை பற்றி யாரும் சொல்லித்தரவில்லை இப்போ இந்த வீடியோவை ஆ என்று பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
  8. உலகம் பல விதம். அதில் இது ஒரு ரகம்.
  9. விண்ணக வேந்தன் உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்
  10. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  11. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, ஆனி 2006 மட்டக்களப்பில் 125 சிறார்களைக் கடத்திச் சென்ற கருணா குழு துணைப்படை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் முதல் கருணா துணைப்படையும் ராணுவமும் சேர்ந்து நடத்திவரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் குறைந்தது 125 சிறார்கள் கருணா குழுவினரால் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். ராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட பல சிறார்கள் கருணா குழுவினரிடம் கையளிக்கப்பட்டும், கருணா குழு வீடுகளுக்குள் நுழைந்தும் சிறுவர்களை அடித்து இழுத்துச் சென்றிருக்கிறது. வாழைச்சேனைப் பகுதியில் இருந்து 75 சிறார்களும், கிரான் பகுதியிலிருந்து 27 சிறார்களும், சந்திவெளியில் இருந்து 23 சிறார்களும் இவ்வாறு கருணா துணைப்படையினரால் பலவந்தமாகப் பயிற்சிக்கு இழுத்துச் செல்லப்பட்டவர்களில் அடங்குகின்றனர். இவ்வாறு பலவந்தமாக கருணா குழ்வினரால் இழுத்துச் செல்லப்பட்ட சிறார்கள் துணைப்படையில் இணைக்கப்படுவதற்காக மட்டக்களப்பு - பொலொன்னறுவை மாவட்ட எல்லையில் அமைந்திருக்கு அரச புலநாய்வுத்துறையினரின் வழிகாட்டலில் இயங்கும் கருணா துணைப்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 75 பேர் பேத்தாளை, விநாயகபுரம், கண்ணகிபுரம், பட்டியடிச்சேனை மற்றும் கல்குடா பகுதிகளிலிருந்தும் கடத்தப்பட்டிருக்கிறார்கள். இப்பகுதிகளில் வாழ்ந்துவந்த பெருமளவு இளைஞர்கள் இச்சுற்றிவளைப்பு நடைபெறும் வேளையில் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் தப்பியோடி ஒளிந்துகொண்டதாகவும் ஊர்மக்களால் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதிகளில் இலக்கத்தகடற்ற வெள்ளை நிற வான்களில் வலம் வந்த கருணா குழு உறுப்பினர்களால் 9 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்புவரை கல்விகற்கும் மாணவர்களே இலக்குவைத்துக் கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. 14 வயதிற்கும் 19 வயதிற்கு இடைப்பட்ட 18 சிறார்கள் செவ்வாய்க்கிழமை காலையில் பாம் கொலணி, மாங்கேணி ஆகிய பகுதிகளில் கடத்தப்பட்டிருக்கிறார்கள். தமது பிள்ளைகள் கருணா குழுவினராலும் ராணுவத்தாலும் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டது குறித்து பெற்றோர்கள் வாழைச்சேனை பொலீஸில் முறைப்பாடுகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள். மாங்கேணி ராணுவ முகாமிலிருந்து செயற்பட்டுவரும் கருணா துணைப்படையினர், கிரிமிச்சை மற்றும் காயங்கேணிப் பகுதிகளுக்குள்ளால் பயணிக்கும் மக்களை அச்சுருத்தி விசாரிப்பதாகவும், ராணுவத்தினரின் உதவியுடன் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளை வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுத்து தமது முகாம்களுக்கு பயிற்சிக்கு இழுத்துச் செல்வதாகவும் மக்கள் விசனப்படுகின்றனர். கனர ஆயுதம் தரித்த கருணா துணைப்படையினரும் ராணுவமும் இப்பகுதியில் தொடர்ச்சியான அத்துமீறல்களில் ஈடுபட்டுவருவதாகவும், பிரதேசத்தில் அச்சநிலையொன்று உருவாகியிருப்பதாகவும், மக்கள் பாதுகாப்புத் தேடி அயலில் உள்ள காடுகளுக்குள் தஞ்சம் அடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  12. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 6, ஆனி 2006 மட்டக்களப்பு வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியரைச் சுட்டுக்கொன்ற கருணா துணைப்படைக் குழு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு ஊழியராகக் கடமை செய்துவந்த தமிழரை கடந்த செவ்வாய் மாலை 4 மணியளவில் வைத்தியசாலையில் வாயிலில் வைத்து உந்துருளியில் வந்த கருணா துணைப்படை சுட்டுக் கொன்றது. ஆரையம்பதியைச் சேர்ந்த 25 வயதுடைய சிவலிங்கம் ரஜனிகாந்த் எனும் பாதுகாப்பு ஊழியரே கருணா குழுவால் கொல்லப்பட்டவர் ஆவார். உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள வைத்தியசாலையின் முன்னாலிருக்கும் தேநீர் கடைக்குச் சென்றுவிட்டு வைத்தியசாலை வாயிலுக்கு மீண்டும் அவர் வந்தபோதே உந்துருளியில் வந்த கருணா துணைப்படை உறுப்பினர் அருகில் வந்து சுட்டுக் கொன்றார். திபுலானை வெலிக்கந்தைப் பகுதியில், அமைந்திருந்த கருணா துணைப்படை முகாம்கள் மீதான புலிகளின் தாக்குதல்களில் காயப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமது சகாக்களைப் பாதுகாக்குமாறும், இல்லையென்றால் கொல்லப்படுவீர்கள் என்று இத்துணைப்படைக் குழு அச்சுருத்தியிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர்களால் இத்துணைப்படை உறுப்பினர்கள் மேல் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அதற்குப் பழிவாங்கலாகவே இந்த அப்பாவிப் பாதுகாப்பு ஊழியரை அரச புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படும் கருணா துணைப்படைக் கொன்று வஞ்சம் தீர்த்திருக்கின்றது.
  13. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, வைகாசி 2006 திருகோணமலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவித் தாக்க முயன்ற கருணா துணைப்படைமீது தாக்குதல், மூவர் பலி, இருவர் கைது திருகோணமலை மாவட்டத்தில் பட்டியடி ராணுவ முகாமிலிருந்து செயற்பட்டுவரும் கருணா துணைப்படைக்குழுவின் ஐந்து உறுப்பினர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற வேளை புலிகளின் எதிர்த்தாகுதலில் சிக்கி மூன்று துணைப்படையினர் உயிரிழக்க இன்னும் இருவர் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருகின்றனர். புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட இரு துணைப்படையினரை மீட்கவந்த ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே பல நிமிடங்கள் துப்பாக்கிச் சமர் நீடித்ததாகவும், முடிவில் கொல்லப்பட்ட கருணா துணைப்படையினரின் உடல்களை இழுத்துக்கொண்டு அப்பகுதியினை விட்டு ராணுவம் பின்வாங்கிச் சென்றதாகவும் புலிகளின் சம்பூர் பகுதி அரசியல் பணிமனை தெரிவித்திருக்கிறது. புலிகளால் உயிருடன் பிடிக்கப்பட்ட இரு கருணா துணைப்படையினரின் தகவல்களின்படி பட்டியடி முகாமில் பெருமளவு கருணா துணைப்படியினரை ராணுவம் பாதுகாத்து வருவதாகவும் தெரியவருகிறது.
  14. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 23, வைகாசி 2006 கருணா துணைப்படைக் குழுவினருடன் ராணுவத்தின் கீழ்மட்ட அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் தொடர்பிருக்கிறது - அரச சமாதானப் பணியகத்தின் அதிகாரி பாலித்த கோஹோண தெரிவிப்பு துணைப்படை குழுவினருடன் சேர்ந்து இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத் தீவுப்பகுதிகள், குடாநாடு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் புரிந்துவரும் படுகொலைகள், கடத்தல்கள் தொடர்பாக அரசுமீது கடுமையான விமர்சனங்கள் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் வைக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை அரசின் சமாதானப் பணியகத்தின் அதிகாரி பாலித்த கோஹோண அவர்கள் ராணுவத்தின் கீழ்மட்ட அதிகாரிகளும், வீரர்களும் கருணா துணைப்படை மற்றும் ஈ பி டி பி குழுவினருடன் தொடர்புகளைக் கொண்டிருப்பது சாத்தியம் என்று ஒத்துக்கொண்டிருக்கிறார். அதிகரித்துவரும் பொதுமக்கள் மீதான படுகொலைகள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் என்பவற்றை ராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளே திட்டமிட்டு, நடத்திவருவதுடன், தமிழர்களை உளவியல் ரீதியான போர் ஒன்றிற்குள் தள்ளி நிரந்தர அச்சநிலையினை தோற்றுவித்திருக்கிறார்கள். இலங்கை அரசுக்கும் துணைப்படைக் குழுக்களுக்கும் எதுவித தொடர்புகளும் இல்லையென்று இதுவரை மறுத்துவந்த சமாதானப் பணியகத்தின் அதிகாரி பாலித்த, முதன்முறையாக ரொயிட்டர்ஸ் செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இக்குழுகளுக்கும் ராணுவத்தின் கீழ்மட்ட அதிகாரிகளுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்று ஒத்துக்கொண்டிருக்கிறார். "கடந்த 3 வருடகால சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் ராணுவத்தினருக்கும் புலிகளின் கருணா உட்பட ஏனைய சிலருக்கும் இடையில் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம், அவையே இன்றும் தொடர்கின்றன என்று நான் நினைக்கிறேன். கருணா மற்றும் அவரின் ஆட்களுடனான தொடர்பினை விட்டுவிடுங்கள் என்று எமது ராணுவ வீரர்களை அரசினால் கோருவது இயலாத விடயம். மனிதர்கள் நண்பர்களாக இருப்பதும், அவர்களின் நட்பு தொடர்வதும் இயற்கையானதே. சமாதான காலத்தில் இரு தரப்பு வீரர்களும் ஒருவரது வீட்டிற்கு மற்றையவர் சென்றுவருவதுகூட நடந்தன. ஆகவே, இது இயல்பானதுதான்" என்று கூறினார்". துணைப்படைக் குழுவிற்கும் அரச ராணுவத்திற்குமிடையிலான தொடர்புகளை ஒரு அரச அதிகாரி வெளிப்படையாகக் கூறுவது இதுவே முதன்முறையாகும். சமாதான ஒப்பந்தத்தின் சரத்து 1.8 இன் படி, அரச ராணுவம் தன்னுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுக்களின் ஆயுதங்களைக் களையவேண்டும் என்கிற கடப்பாடு இருக்கும்பொழுது அரச ராணுவமே அவர்களுக்கு ஆயுதங்களையும், பயிற்சியையும், முகாம்களையும், கூடவே பாதுகாப்பினையும் வழங்கிவருவதாக புலிகள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். துணைப்படைக் குழுக்களின் ஆயுதங்களைக் களைவதாக அரசு ஒப்புக்கொண்டிருந்தபோதும்கூட, மூன்று மாதத்திற்கும் குறைவான காலத்திலேயே துணைப்படைக் குழுக்களின் மூலம் அரச ராணுவமும் புலநாய்வுத்துறையும் செய்துவரும் படுகொலைகள் தமிழர் தாயகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட அரச புலநாய்வுத்துறையினரின் துணைப்படையான கருணா குழுவின் நாசகார நடவடிக்கைகளைத் தொடர்ந்து வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கும் துணைப்படையினரின் வன்முறைகள் பரவியிருக்கின்றன. வெலிக்கந்தைப் பகுதியில் துணைப்பட முகாம்கள் மீதான தாக்குதல்களில் ஒரு அதிகாரி உட்பட ஐந்து இலங்கை ராணுவத்தினர் கொல்லப்பட்டது துணைப்படையினருக்கும் ராணுவத்திற்கும் இடையிலான தொடர்பினை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. அரசுடன் இணைந்து புலிகளுக்கு எதிராகச் செயற்படுவதென்று கருணா எடுத்த முடிவினையடுத்து புலிகளின் விசேட அணிகள் நடத்திய ராணுவ நடவடிக்கையில் கருணாவின் கிளர்ச்சி முழுமையாக அடக்கப்பட்டு விட்டாலும் கூட, அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் புலிகளின் போராளிகள் மீதான தாக்குதல்களும், புலிகளின் ஆதரவாளர்கள், சாதாரண பொதுமக்கள் மீதான படுகொலைகளையும் கருணா துணைப்படையினரைக் கொண்டு அரச புலநாய்வுத்துறை நடத்தி வருகிறது. கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இவ்வாறான திட்டமிட்ட படுகொலைகள் தற்பொழுது சாதாரண பொதுமக்கள் மீதும் திரும்பியிருக்கின்றன. தோல்வியடைந்த தனது கிளர்ச்சியினையடுத்து தனது சகபாடிகளுடன் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குத் தப்பியோடிய கருணாவை பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துச் சென்ற ராணுவம் பாதுகாப்பான வீடொன்றில் தங்கவைத்திருந்தது. இவ்வாறான கருணா குழுவின் பாதுகாப்பான வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் எட்டு துணைப்படையினரும், அவர்களை வழிநடத்திய ராணுவப் புலநாய்வுத்துறை அதிகாரியும் கொல்லப்பட்டதும் குறிப்பிடத் தக்கது. கருணா சமாதான காலத்திலேயே ராணுவத்தின் புலநாய்வுத்துறைக்குப் பொறுப்பாகவிருந்த மேஜர் ஜெனரல் சாந்த கொட்டேகொடையுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தியிருந்ததாகவும் , அவர் லெப்டினட் ஜெனரலாகப் பதவியேற்றதன் பின்னரே கருணா துணைப்படையினரைக் கொண்டு தமிழர்கள் மீதான படுகொலைகளை அரசு தீவிரமாக நடத்தத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  15. சஞ்சலம் தீர்க்கும் சந்நிதியே: சந்நிதி முருகன் பாடல்
  16. சின்னச் சின்ன கண்மணியே சக்கரை முத்தே சந்தன பொட்டே
  17. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  18. பகுடி செய்வதாக நினைத்து நம்மை அழ வைக்கும் புரோட்டா சூரி -1 😢..😢 நெஞ்சிலே துணிவிருந்தால்(2017)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.