Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    23926
    Posts
  2. புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    13683
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46808
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8910
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/16/21 in all areas

  1. அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே......! 😁
  2. படம் : சிவகங்கை சீமை(1959) இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி வரிகள் : கண்ணதாசன் பாடியோர் : TMS & TS பகவதி ஆண் : கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் பெண் : மேளம் முழங்கி வரக் கனவு கண்டேன் அங்கே விருந்து மணங்கமழக் கனவு கண்டேன் பெண் : மேளம் முழங்கி வரக் கனவு கண்டேன் அங்கே விருந்து மணங்கமழக் கனவு கண்டேன் ஆண் : வாழை மரங்கள் வைக்கக் கனவு கண்டேன்….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ… ஆஆ…..ஆஅ….ஆஅ…… வாழை மரங்கள் வைக்கக் கனவு கண்டேன் பெண்கள் வாழ்த்துக்கள் பாடி வரக் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் இருவர் : நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் பெண் : பளிங்கு மணவறைக்கு நடந்து வந்தேன் இரு பாவையர் துணையோடு தவழ்ந்து வந்தேன் ஆண் : மனதில் மகிழ்ச்சி பொங்க நான் இருந்தேன் கையில் மாலையும் குங்குமமும் வைத்திருந்தேன் இருவர் : நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் பெண் : காலம் மலர்ந்ததென்று களித்திருந்தேன் மாலை கழுத்தில் விழுந்தவுடன் சிரித்திருந்தேன் ஆண் : ஞாலம் நமக்குள் என்று தலை நிமிர்ந்தேன் ஞாலம் நமக்குள் என்று தலை நிமிர்ந்தேன் பின்பு நடந்தது கனவாகக் கண் விழித்தேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் இருவர் : நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் ..
  3. ஒரு பதிவில் மாற்றங்கள் 12 மணித்தியாலத்திற்குள் செய்து கொள்ள முடியும். அதன் பின்னர் மாற்றங்கள் செய்யவேண்டியிருப்பின் நிர்வாகம் மூலமே செய்ய முடியும்.
  4. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, ஆனி, 2012 கிழக்கு பல்கலைக் கழகத்தின் நிர்வாக சபைக்கு கருணாவால் வலிந்து நியமிக்கப்பட்ட வைத்திய காலாநிதி ஜாபர் - மாணவர் போராட்டம் கிழக்கு மாகாண பல்கலைக் கழகத்தின் நிர்வாக சபைக்கு அரசாங்கத்தினாலும் துணைராணுவக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் அரசியல் மயப்படுத்தப்பட்ட நியமனங்களைத் தடுக்கும் சக்தி பல்கலைக்கழகத்திற்கு இல்லையென்று அதன் துணைவேந்தர் பேராசிரியர் கே. கோபிந்தராஜா தெரிவித்திருக்கிறார். அண்மையில் துணைராணுவக் குழுத் தலைவரும், அரசின் மீள்குடியேற்ற துணையமைச்சருமான கருணாவினால் பல்கலைக்கழக நிர்வாக சபையினுள் மேற்கொள்ளப்பட்ட நியமனம் ஒன்றினையடுத்து மாணவர்கள் கடந்த மூன்றுநாட்களாக கல்விநடவடிக்கைகளைப் பகிஷ்கரித்துவருவது தொடர்பாகப் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். கல்முனை வைத்தியசாலையின் நிர்வாக இயக்குநரான வைத்திய கலாநிதி ஜாபர் என்பவரை பல்கலைக்கழக நிர்வாக சபையினுள் கருணா பலவந்தமாக நியமித்ததன் விளைவாகவே மாணவரின் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. நிர்வாக சபையின் உறுப்பினராகவிருந்து மரணித்த வணக்கத்திற்குரிய சில்வெஸ்ட்டர் சிறிதரன் எனும் பாதிரியாரின் வெற்றிடத்திற்கே கருணாவினால் ஜாபர் நியமிக்கப்பட்டிருக்கிறார். கருணாவின் இந்த தாந்தோன்றித்தனமான நியமனம், பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்தினையும், அதன் உணர்வுகளையும் அடக்கியாண்டு கைய்யகப்படுத்தும் கருணவினதும் அவரை வழிநடத்தும் கொழும்பின் நடவடிக்கையே என்று குறிப்பிட்டுள்ள மாணவர்கள் இந்த நியமனத்தை எதிர்த்து பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மைக்காலங்களில் வடக்குக் கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களில் அரசாலும், துணைராணுவக் குழுக்களாலும் ஏற்படுத்தப்பட்டுவரும் அரசியல் மயப்படுத்தப்பட்ட நியமனங்கள் இப்பல்கலைக் கழகங்களின் சுயாதீனத்தை பெருமளவில் பாதிக்கும் நோக்குடனேயே நடைபெற்றுவருகின்றன என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர், இந்த நிர்வாக சபைக்கு முழு அதிகாரங்களையும் கொண்ட சிங்களவர் ஒருவரை அரசு நியமித்திருந்தபோதும், மாணவர்களின் கடுமையான எதிர்ப்பினால் அந்த நியமனத்தை அரசு செய்யமுடியாமற் போனது என்பது குறிப்பிடத் தக்கது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினைப் போலவே மட்டக்களப்புப் பல்கலைக்கழகமும் தமிழ்த் தேசியத்தின், விடுதலை எழுச்சியின் மைய்யங்களாக இருந்துவருவதால், அவற்றினை தமது அரசியல்மயப்படுத்தப்பட்ட நியமனங்கள் மூலம் கட்டுப்படுத்தி, தமிழர்களின் எழுச்சியை, தேசிய உணர்வினைக் கட்டுப்படுத்திவிடலாம் என்று அரசாங்கமும், அதன் கூலியான கருணாவும் செயற்பட்டு வருகிறார்கள். புலிகளிடமிருந்து பிரிந்து சென்று அரச ராணுவத்தின் புலநாய்வுத்துறையால் இன்று வழிநடத்தப்படும் துணை ராணுவக் குழுக்களின் தலைவர்களான கருணா , பிள்ளையான் ஆகிய இருவருமே கிழக்குப் பல்கலைக்கழகத்தைத் தத்தமது கட்டுப்பாடினுள் கொண்டுவரப் பகீரதப் பிரயத்தனம் செய்வதாக மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இன்று உப வேந்தராக இருக்கும் பேராசிரியர் கூட கருணாவின் ஆதரவுடன் வந்தவர் தான் என்று கூறும் மாணவர்கள், "அரசியலே பிரதானம் கல்வியெல்லாம் அதன் பிறகுதான்" என்னும் கோட்பாட்டிலேயே கருணா செயற்படுவதாக மேலும் தெரிவித்தனர். மட்டக்களப்பு கத்தோலிக்க ஆயர், மரணமடைந்த பாதிரியாரின் இடத்திற்கு இன்னொரு தமிழ்ப் பாதிரியாரை நியமிப்பதன் மூலம் 6 தமிழர்கள், 3 முஸ்லீம்கள், 3 சிங்களவர்கள் என்று நிர்வாக சபையில் தமிழரின் பிரதிநித்துத்துவம் குறையாமல் பாதுகாக்கப்பட முடியும் என்று சிபாரிசு செய்தபோதும், அதனை நிராகரித்தே கருணா முஸ்லீம் இனத்திலிருந்து ஜாபரை நியமித்திருக்கிறார். ஆயரின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழ்ப் பாதிரியாரே நியமிக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். தமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்வரைக்கும் தமது போராட்டம் தொடரும் என்று மாணவர் அமைப்புத் தலைவர் டி. கிரிஷ்ணனாத் தெரிவித்தார். ஆனால், கருணாவினால் மேற்கொள்ளப்பட்ட இந்நியமனத்தில் எந்த மாற்றத்திற்கும் இடமில்லையென்று அமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்பொள்ளா கூறியிருக்கிறார்.
  5. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 5, ஆனி, 2012 அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளைச் சிங்களமயமாக்கும் கடமையில் அமர்த்தப்பட்டிருக்கும் கருணா மற்றும் பிள்ளையான் துணைராணுவக் குழுக்கள் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் அமைந்திருக்கும் தமிழருக்குச் சொந்தமான காணிகளை அபகரிக்கும் அரசின் திட்டத்திற்கு துணைராணுவக் குழுக்களான கருணா குழு மற்றும் பிள்ளையான் குழு ஆகியவற்றை ராணுவம் பாவித்து வருவதாக மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. இவ்வாறு கையகப்படுத்தப்படும் தமிழர்களின் காணிகள் சிங்கள முதலீட்டாளர்களுக்கு ராணுவத்தால் விற்கப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. இந்தக் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் பிற அரசியல்வாதிகளுக்காகவும் இதனைச் செய்துவருவதாக மக்கள் கூறுகின்றனர். அம்பாறை மாவட்டத்தின் காரைதீவுப் பிரதேசச் செயலகத்திற்குட்பட்ட பகுதியில், காரைதீவு கிராமத்தருகில் கடலோடு இணைந்த காணியொன்று சிறுவர் பூங்கா ஒன்றிற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், துணைராணுவக் குழுவொன்றின் பின்புலத்துடன் அப்பகுதி அரசியல்வாதியொருவர் கைய்யகப்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. பிரதேசச் செயலகத்தில் பணியாற்றிவரும் அதிகாரி ஒருவர் இதுபற்றி மேலும் கூறுகையில், உள்ளூர் அதிகாரசபை ஒன்றின் தலைவர் துணைராணுவக் குழுவொன்றின் தலையீட்டூடன் இக்காணியைக் கையகப்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார். 2004 ஆம் ஆண்டு சுனாமியின் பின்னர் காரைதீவுக் கடலோரத்தில் வாழ்ந்துவந்த மக்கள் வேறிடங்களுக்கு குடிபெயரவேண்டும் என்ற அரசின் கட்டளையினையடுத்து இம்மக்கள் தமது வாழிடங்களைவிட்டு இடம்பெயர்ந்துள்ள நிலையில், இக்காணிகளை துணைராணுவக்குழுக்களான கருணா மற்றும் பிள்ளையான் போன்றோர் கைய்யகப்படுத்தி ஆக்கிரமிப்பு ராணுவத்துடன் சேர்ந்து சிங்கள முதலீட்டாளர்களுக்கு விற்றுவருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர். கருணாவினாலும் பிள்ளையானினாலும் இந்த ஆக்கிரமிப்பிற்குத் துணைபோகும் பிரதேச சபை அதிகாரிகளுக்கு லஞ்சமாகப் பணம் கொடுக்கப்படுவதால், சிலர் இதன் தார்ப்பரியம் தெரியாமல் அவர்களின் ஆக்கிரமிப்பிற்கு உடந்தையாவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். காரைதீவு கடற்கரையினை அண்டிய காணியில் அமைக்கப்படவிருந்த உத்தேச சிறுவர் பூங்காவினை அமைக்க சுமார் ஒன்பது லட்சம் ரூபாய்கள் செலவாகும் என்று கணிப்பிடப்பட்டு, மூன்று மாதங்களுக்கு முன்னர் இதன் ஆரம்பகட்ட வேலைகள் பூர்த்தியாகிய நிலையில் , உள்ளூர் அரசியல்வாதியொருவரினால் துணை ராணுவக்குழுக்களைக் கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
  6. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  7. நண்டுகள் என்று சொல்வதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தம் இருக்குமோ?!
  8. உம் பாதம் பணிந்தேன்
  9. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  10. கொரோனா முடிஞ்சு ஒழுங்காய் வேலை தொடங்க இப்பிடியொரு வித்தைய நானும் வேலையிடத்திலை காட்டத்தான் இருக்கு... 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.