Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    13683
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87998
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46808
    Posts
  4. Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    10720
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/14/21 in Posts

  1. மனைவி: நான் 2 மணி நேரம் வெளில போறேன்..உங்களுக்கு எதுவும் வாங்கணுமா? கணவன்: வேணாம்! இதுபோதும்!
  2. Enthavinai Aanalum 1974 T. M. Sounderarajan எந்த வினை ஆனாலும் வந்த வழியே இடர் நிந்தை கணிந்தருள்வாய் ஸ்ரீ வெங்கடேசா இந்த பக்த்தி பாடலும் ஊரில் கோவில்களில் திருவிழாக்காலங்களில் அதிகாலையிலேயே அல்லது ஒரு வேளையாவது ஒலிக்காமல் இருக்காது மனசுக்கு இதமான பாடல்..............
  3. “நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு மாறாத ஈமானோடு யாரசூலுல்லாஹ்”
  4. இந்தக் Green House Effect எண்டு சத்தம் போடுறாங்களே, ஜேர்மனி பக்கம் சத்தமில்லையோ?🙃 நிலக்கரி பாவனை, காடுகளை அழித்தல் எல்லாம் ஆகாயத்தை ( காற்றை) அழிக்கும் காரியங்கள் தானே?
  5. குசைன் போல்டின் முதாலவது ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் தெரிவு போட்டியில் கூட அவர் தெரிவு செய்யப்படவில்லை.
  6. ஆகாயத்தில் தான் அமெரிக்கன் சீனன் இந்தியன் எல்லோரும் ரொக்கட் விட்டு இடம் பிடிக்கினமே
  7. இணையத்தில் தன்னை ராணுவ விடயங்களின் வல்லுனர் என்று மார்தட்டி எழுதிவரும் மேத்தா ஈழத்தில் புலிகளால் பந்தாடப்பட்ட தனது ராணுவத்தின் தோல்விகரமான வரலாற்றினை திருத்தியெழுதும் கைங்கரியத்தில் ஈடுபட்டுவருகிறார். புலிகளுடனான போரில் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காக அரசியல்வாதிகளையு, அதிகாரிகளையும், உளவுத்துறையினரையும் குற்றஞ்சொல்லும் மேத்தா, தான் போன்ற ராணுவ அதிகாரிகளின் கையாலாகாத்தனத்தை வேண்டுமென்றே மறைத்து வருகிறார். அவர் பங்குனி 24 இல் எழுதிய ஒரு பந்தியில் கிழக்கில் தனது ராணுவ நடவடிக்கை ஒன்றுபற்றி பின்வருமாறு எழுதுகிறார், "கருணாவைக் கொல்வதற்கு உங்களுக்கு என்ன வேண்டும் என்று எனது தளபதி என்னிடம் கேட்டார். மட்டக்களப்பு - அம்பாறை தளபதியாகவிருந்த நான் என்னிடம் இன்னும் இரு பிரிகேட்டுக்களைத் தாருங்கள், கருணாவை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று கூறினேன். அன்று வெறும் 20 வயது இளைஞனாக இருந்த கருணா இன்று புலிகளின் கிழக்குப் பிராந்திய தளபதியாக இருக்கிறார். இந்திய அமைதிப்படையின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இருந்து லாவகமாகத் தப்பித்துவரும் அவரைப் பிடிப்பது இயலாத காரியமாக இருந்தது. என்னிடம் ஐந்து கோடி பணமிருந்தால் அவரைப் பிடித்திருக்கலாம்" என்று கூறும் மேத்தா பணப்பற்றாகுறையினாலேயே கருணாவை அன்று பிடிக்கமுடியாமற்போனதாகக் கூறுகிறார். புலிகளின் பெரும் தலைவரான பிரபாகரன் கூட இதே கேள்வியை தனது புலநாய்வுத்துறைப் பொறுப்பாளரான பொட்டு அம்மாணிடம் கருணா பிரிந்துசென்றதிலிருந்து கேட்டிருக்கலாம். அவருக்கு பணத்தட்டுபாடோ, ஆளணிப்பற்றாக்குறையோ, வளங்களின் தட்டுப்பாடோ நிச்சயம் இருக்காது. ஆனால், இன்னொரு மாத்தையா உருவாவதை அவர் நிச்சயம் விரும்பமாட்டார். அஷோக் மேத்தாவின் இந்த 5 கோடி பணம் என்பது என்னை சிந்திக்க வைக்கிறது. போர்க்களத்தில் தனது எதிரியை போரில் சிறைப்பிடிப்பதை விடுத்து, பணத்தாசை காட்டி அன்று பிடித்திருக்காலாம் என்று அவர் கூற வருகிறாரா? அதாவது கருணா விலைபோகக் கூடியவர் என்பதை இந்திய அதிகாரிகள் அறிந்திருந்தார்களா? அப்படியானால் வெறும் ஐந்து கோடிகளைக் கொடுத்து அவர்களால் அன்று அதனை ஏன் செய்யமுடியாமல்ப் போனது? இன்று கருணா அன்றிருந்ததைக் காட்டிலும் பல மடங்கு பலமானவராக மாறியிருக்கலாம். ஆகவே அன்று தேவைப்பட்ட ஐந்து கோடிகளின் பல மடங்குகளை இன்று கொடுத்திருக்கலாம் என்று அவர் கூறுவதன் நோக்கம் கடந்த இரண்டு வருடங்களில் கருணாவை இந்திய உளவுத்துறை பெருந்தொகைப் பணத்தினைக் கொடுத்தே புலிகளிடமிருந்து பிரித்து துரோகத்தினைச் செய்யத் தூண்டியதாக இவர் சொல்லாமல் சொல்கிறாரா? றோவும், அதன் நீண்ட கரங்களும் : எனது தனிப்பட்ட கருத்து றோவின் பணவளங்கள் குறித்துச் சிந்திப்பது அவசியமானது என்று நினைக்கிறேன். அமெரிக்க நிறுவனமொன்றின் இணையத்தளமொன்று பின்வருமாறு கூறுகிறது, "இந்தியாவின் மிகப்பலம் வாய்ந்த உளவுத்துறையானது இந்தியாவின் தேசியப் பலத்தினை பாதுகாப்பதிலும், இந்தியாவின் உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளை வகுப்பதிலும் பாரிய தாக்கத்தினைச் செலுத்தி வருகிறது. பாக்கிஸ்த்தான் உட்பட பல அயல்நாடுகளில் தவறான செய்திகளையும், கொள்கைகளையும் பரப்புதல், நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகிய கைங்கரியங்களில் அது வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறது. தொடர்ச்சியாக ஆட்சியில் ஏறும் அரசுகள் றோவின் இந்த நடவடிக்கைகளுக்கு முற்றான ஆதரவினை வழங்கிவருகின்றன. இந்தியப் பிரதமரின் கீழ் செயற்படும் றோ அதிகாரிகளின் விபரங்கள், அவர்களின் சம்பளம், தரம் ஆகியன பாராளுமன்றத்தில் கூட பேசப்படாமல் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது" "றோ அமைப்பும் , இந்திய வெளியுறவுத்துறையும் வருடந்தோறும் 25 கோடி ரூபாய்களை அயல்நாடுகளில் தமது செயற்பாடுகளுக்காக ஒதுக்கி வருகின்றன". ஆகவே, இதன்மூலம் அறியமுடிவது யாதெனில் வருடம் தோறும் 25 கோடிகளை வெளிநாடுகளில் தமது நாசகார நடவடிக்கைகளுக்கு ஒதுக்கிவரும் இந்திய உளவுத்துறை அதில் ஒரு பகுதியினை புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதியாகவிருந்த கருணா, இயக்கத்திற்குத் துரோகமிழைத்து வெளியேறிச் செல்ல இந்தியா சன்மானமாகக் கொடுத்திருக்கலாம் என்பதுதான். இவற்றிற்கிடையில், தமிழரில் ஒரு சில செய்திகாவும் பிரிவினர் இந்திய புலநாய்வுத்துறையின் நாசகாரச் செயற்பாடுகள் பற்றிப்பேசுவதையோ, கேட்பதையோ, எழுதுவதையோ பாரிய குற்றம் என்று கருதி வாளாவிருக்கின்றனர். ஆனால் இந்திய புலநாய்வுத்துறையின் நாசகார சதித்திட்டங்கள் தற்போது பரவலாக வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன. "ஒரு நூற்றாண்டின் உளவாளிகள் : 20 ஆம் நூற்றாண்டி உளவுத்துறைகள்" எனும் புகழ்பெற்ற புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதியினை இங்கே தருகிறேன், "இந்தியா விஞ்ஞான ரீதியிலும், தொழிநுட்ப ரீதியிலும் மிகத் தீவிரமான புலநாய்வு ஆராய்ச்சிகளை அமெரிக்கா உட்பட பல நாடுகளில் மேற்கொண்டு வருகிறது. கணிணி தொழிநுட்பத்தின் மூலம் மூன்றாம் உலக சந்தையினைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரமுடியும் என்று அது எதிர்பார்க்கிறது. அமெரிக்காவில் தொடர்ச்சியாக 5 மாதங்கள் தங்கியிருந்து தனது உளவாளிகளை வழிநடத்திவிட்டு, மீண்டும் இந்தியாவுக்குச் செல்ல எத்தனித்த றோவின் உதவி இயக்குநரை இறுதிநேரத்தில் தடுத்துவைத்த அமெரிக்காவின் எப் பி ஐ பிரிவு, அமெரிக்காவில் றோவின் செயற்பாடுகள் குறித்துத் தனது கடுமையான கண்டனங்களை 1993 இல் தெரிவித்திருந்தது". "அமெரிக்கா உளவுத்துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தனது உளவாளிகளை 5 மாதங்களாக அமெரிக்காவில் சந்தித்து சதிவேலைகளை முடிக்கிவிட றோவின் உதவி இயக்குநர் முயன்றார் என்றால், இலங்கையில், குறிப்பாக ஈழத்தில் எந்தவகையான நாசகாரச் செயற்பாடுகளை றோ முன்னெடுத்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்வது கடிணமானதாக இருக்கப்போவதில்லை". இது, ஜனவரி மாதம் 13 ஆம் திகதி சிலோன் டெயிலி மிரர் பத்திரிக்கையில் வந்த புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவியிருக்கும் றோ உளவாளிகள் எனும் செய்தியை மீளவும் எனக்கு ஞாபகப் படுத்துகிறது. புலிகளை கீழ்த்தரமாக விமர்சிப்பதையே தொழிலாகச் செய்துவரும் ஜெயராஜ் போன்றவர்கள் , புலிகளின் உளவுத்துறையினை எவ்வளவுதான் மோசமாக விமர்சித்தாலும் பொட்டு அம்மாணும் அவரது உளவாளிகளும் இந்தியாவின் றோ உளவாளிகள் தொடர்பாகச் செய்துவரும் விசாரணைகளும் கண்டுபிடிப்புகளும் உண்மையிலேயே அபாரமானவை. புலிகளின் ஒப்பற்ற தியாகத்தால் ஈட்டப்பெற்ற வெற்றிகளைத் தக்கவைக்க அவரும், அவரது உளவாளிகளும் செய்துவரும் சேவை போற்றுதற்குரியது. ஒரு மாதத்திற்கு முன்னால், கொழும்பிலிருந்து செயற்பட்டு வரும் இந்திய பத்திரிக்கையாளர் ஒருவருக்கு நான் எழுதிய மின்னஞ்சலில் மிகவும் காட்டமான கருத்தொன்றினை முன்வைத்திருந்தேன். "நீங்கள் உங்கள் தூதுவராலயங்களில் செயற்பட்டு வரும் அதிகாரிகள் பற்றி மிகைப்படுத்தப்பட்ட விம்பங்களை உருவாக்குகிறீர்கள். கொழும்பில் இருக்கும் இந்திய பாக்கிஸ்த்தானிய தூதரகங்கள் எப்படி இயங்குகின்றன என்பதுபற்றி எமக்குத் தெரியாது என்று நீங்கள் இன்னமும் நினைக்கிறீர்களா? இந்திய றோவினதும், பாக்கிஸ்த்தானிய ஐ எஸ் ஐ உளவுப்பிரிவினதும் உளவாளிகள் கொழும்பிலிருக்கும் தூதரகங்களில் "அதிகாரிகள்" எனும் போர்வையில் மறைந்திருப்பது ஏன்? உண்மைகள்" என்று கூறப்படும் திரிபுகளை சமைத்துக் கொடுப்பவர்கள் கூட இவர்கள் தானே?" எனது கருத்தினை எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ அந்த "உளவாளிச் செய்தியாளர்" எனக்குப் பதில் எழுதவில்லை என்பது நான் சொல்லத் தேவையில்லை. ஆனாலும், எனது முந்தைய இரு மின்னஞ்சல்களுக்கு அவர் பதில் அனுப்பியிருந்தார். நான் இதை இங்கு எதற்காக முன்வைக்கிறேன் என்றால், கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதரகத்தில் செய்தியாளர்களாகத் தொழிற்படும் பலர் ஒரே சமயத்தில் செய்தியாளர்களாகவும், றோ உளவுப்பிரிவினரின் செய்திகளைக் காவிவந்து உள்ளூரில் தமது செயற்பாட்டாளர்களுக்கு கொடுக்கும் தூதர்களாகவும் செயற்படுகிறார்கள் என்பதைக் கூறவும், இவர்கள் தொடர்பாக நாம் அவதானமாக இருக்கவேண்டும் என்பதை நினைபடுத்தவும்தான்.
  8. கருணாவின் துரோகத்தின் இந்திய உளவுத்துறை றோவின் பங்கு மூலம் தமிழ்நேசன், ஆக்கம் சச்சி சிறீகாந்தா காலம் சித்திரை 2004 இந்தியாவின் அமைச்சரவை அதிகாரம்பெற்ற புலநாய்வு அமைப்பான றோ மிகப்பலம்வாய்ந்த ஒரு அரச வெளியுறவுத்துறை நிறுவனமாகும். இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு, பலம் மற்றும் அதன் அண்டை நாடுகளுடனான வெளியுறவுக்கொள்கைகள் என்பவற்றின் மீதான அதனது தாக்கம் மிகப் பெரியது. பாகிஸ்த்தானுட்பட பல அயல்நாடுகளில் பல நாசகார, ராஜதந்திரத்திற்கு முரணான செயற்பாடுகளை அது தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. தனது செயற்பாடுகளுக்கான தங்குதடையற்ற ஆதரவினை தொடர்ந்துவரும் இந்திய அரசுகளிடமிருந்து அது பெற்றுவருகிறது. இந்தியப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் றோ அமைப்பின் அனைத்து நடவடிக்கைகளும் இந்தியப் பாராளுமன்றத் திற்கு தெரிவிக்கப்படாமேலேயே செயற்படுத்தப்பட்டு வருகின்றன. புலிகளிடமிருந்து தான் பிரிந்து இயங்கப்போவதாக கருணா கூறிச்சென்று ஏறக்குறைய ஒரு மாதகாலமாகிறது. இந்தியாவின் நாசகார உளவுத்துறை கருணாவின் பின்னால் உண்மையாகவே இருந்திருக்கிறதா? இனிவரும் காலங்களில் எமக்குக் கிடைக்கவிருக்கும் சாட்சிகள் இதனை உண்மையென்றோ அல்லது தவறென்றூ நிரூபிக்கப் போகின்றன என்கிறபோதும், இதுதொடர்பாக உள்ளூர் , சர்வதேச செய்திச் சேவைகளில் வெளிவந்த செய்திகளினூடு எனது பார்வையினை இங்கே பதிகிறேன். முதலாவதாக ஜனவரி மாதம் சிலோன் டெயிலி மிரர் பத்திரிக்கையில் வெளியான "புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் றோ உளவாளிகள்" எனும் தலைப்பில் சிறிநாத் பிரசன்ன ஜயசூரிய எழுதிய ஆக்கத்தினைப் பார்க்கலாம். தை 13 ஆம் திகதி அவர் அக்கட்டுரையினை எழுதிய சில மாதங்களின் பிறகு, பங்குனி 3 ஆம் நாள் கருணா தனது துரோகத்தை வெளிப்படுத்தினார். "வடக்குக் கிழக்கில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிகளுக்குள் இந்திய உளவுத்துறையான றோ உளவாளிகள் நுழைந்திருப்பதாக புலிகளின் புலநாய்வுத்துறை தெரிந்துகொண்டது". "வடக்கிலிருக்கு ராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி எழுதும் அவர், இந்திய உளவாளிகளைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளைப் புலிகள் ஆரம்பித்திருப்பதாக அவர் எழுதுகிறார். அண்மையில் தமிழ்நாட்டு வர்த்தகர் ஒருவரையும், புலிகளின் மேஜர் தரப் போராளி ஒருவரையும் மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் கைதுசெய்திருக்கும் புலிகள் இந்திய உளவுத்துறையினருடனான இவர்களின் தொடர்புபற்றி விசாரித்துவருவதாகத் தெரியவருகிறது. புலிகளின் மேஜர் தரத்தில் இருந்த போராளியொருவர் இந்தியாவின் உளவுப்பிரிவின் உளவாளியாகச் செயற்பட்டு வந்திருக்கிறார் என்பது அறியப்படுகிறது". "இது நடைபெற்று மிகக் குறுகிய காலத்தில் இலங்கை இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றில் அவசர அவசரமாகக் கையெழுத்திடும்பொழுது, வன்னியின் காடுகளுக்குள் இந்திய உளவாளிகளைத் தேடும் புலிகளின் நடவடிக்கை தொடர்கிறது. றோ உளவாளி என்று சந்தேகிக்கப்பட்டு மன்னாரில் புலிகளால் கைதுசெய்யப்பட்டிருக்கும் இந்திய வர்த்தகர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் செல்வந்தர் என்பதும், அவரிடம் பல மீன்பிடி ட்ரோலர்கள் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இலங்கைக்கு வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக வந்திருப்பதாக இவரும் இன்னும் பலரும் உல்லாசப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் எனும் போர்வையில் தமிழர் தாயகப் பகுதிகளில் இறக்கிவிடப்பட்டிருப்பதாக புலிகளின் உளவுத்துறை தலைமைக்கு அறிவித்திருக்கிறது". கருணாவின் துரோகம் எவருமே எதிர்பார்க்காத அதிர்ச்சியாக இருக்குமாக இருந்திருந்தால், ஜயசூரியவினால் இதுதொடர்பான கட்டுரையொன்றினௌஇ 50 நாட்களுக்கு முன்னர் எப்படி அனுமானித்து எழுதமுடிந்தது? 1. ஹிந்து - புரொன்ட்லைன் பத்திரிக்கைகள் பங்குனி 27 ஆம் திகதி வெளிவந்த புரொன்ட்லைன் பத்திரிக்கையில் எட்டுப் பக்க தலைப்புச் செய்தியை அக்குழுமத்தின் வழமையான விற்பன்னர்களான வி எஸ் சம்பந்தனும், டி பி எஸ் ஜெயராஜும் எழுதியிருந்தார்கள். இவ்விருவரும் தமக்குள் போட்டி போட்டு எழுதுதிக் குவித்த ஆயிரக்கணக்கான வார்த்தை ஜாலங்களின் சாரம்சம் இதுதான், அ) பிரச்சினைக்குள் அகப்பட்டுப்போயுள்ள புலிகள் - சம்பந்தன் ஆ) விரும்பப்பட்டவரும், வெறுக்கப்பட்டவரும் - சம்பந்தன் இ) ஒரு தேர்தல் முற்றுகை - சம்பந்தன் ஈ) கிழக்கின் ஆயுததாரி - ஜெயராஜ் உ) கேர்ணல் கருணாவுடன் ஒரு நேர்காணல் - சம்பந்தன் ஊ) புலிகளின் உள்வீட்டுப் பிரச்சினை - ஜெயராஜ் எ) தமிழ்ச்செலவ்னுடன் ஒரு நேர்காணல் - சம்பந்தன் ஏ) புலிகள் எதிர் புலிகள் - ஜெயராஜ் ஆனால், இவை எவற்றிலுமே இந்திய உளவுத்துறை றோ பற்றி இவர்கள் இருவரும் மூச்சுக் கூட விடவில்லை. ஆகவே றோவின் கைங்கரியம் பற்றி நாம் அறிவதற்கு இந்துப் பத்திரிக்கை குழுமத்தின் முழுப்பூசணிக்காயினை சோற்றில் மறைக்கும் இச்செயலை நாம் தண்டிச் செல்வது அவசியமாகிறது. 2. டெக்கான் ஹெரல்ட் பங்குனி 16 இல் டெக்கால் ஹெரல்ட் பத்திரிக்கையில் சுதா ராமச்சந்திரன் சில விடயங்களை மறைவின்றிப் பேசுகிறார். இலங்கையில் தற்போது நடைபெறும் விடயங்கள் தொடர்பான சாதாரண மக்களின் கருத்தினை அது பிரதிபலிக்கிறது. "கருணாவின் துரோகத்தின் பின்னால் வெளிச்சக்திகளான இந்தியாவின் உளவுத்துறை றோவோ அல்லது அமெரிக்கர்களோ இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். சிலவேளை கருணாவை அவமானப்படுத்த இவ்வகையான செய்திகள் பரப்பப்படலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதேவேளை, மிகப் பலம்பொறுந்திய பிரபாகரனை பகிரங்கமாக எதிர்ப்பதற்குக் கருணாவுக்கு நிச்சயமாக இப்படியான வெளிச் சக்திகளின் ஆதரவு இருந்திருக்க வேண்டும். புலிகளைடமிருந்து பிரிந்துசென்று எதிராகச் செயற்பட்ட பலரை பிரபாகரன் அழித்திருக்கிறார். கருணாவுக்கு என்ன நடக்கும் என்பதனை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்" என்று எழுதுகிறார். 3. பயணியர் இந்திய அமைதிப்படையின் மேஜர் ஜெனரலாக 1988 முதல் 1990 வரை பணியாற்றிய அஷோக் மேத்தா என்பவர் பயணியர் பத்திரிக்கையில் எழுதிய 1280 வார்த்தைகள் அடங்கிய குறிப்பில், இந்திய உளவுத்துறையினை மறைமுகமாகச் சாடுவதுடன், இலங்கை உள்வுத்துறையின் கைங்கரியமே இதுவென்று சொல்ல விழைகிறார். "இந்திய உளவுத்துறையும் இலங்கை புலநாய்வுத்துறையும் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ கருணாவை ஊக்குவித்து புலிகளிடமிருந்து பிரித்து வெளியே எடுத்திருக்கலாம் என்கிற பொதுவான நம்பிக்கை நிலவுகிறது. எனக்குத் தெரிந்த மட்டில் புலிகளுடனான தொடர்பினை இந்திய உளவுத்துறையான றோ இந்திய அமைதிப்படை 1990 இல் வெளியேறியதன் பின்னர் முற்றாகத் துண்டித்துக்கொண்டுவிட்டது. ஆனால், புலிகளைப் பலவீனப்படுத்தி, பிளந்திருக்கும் இந்தச் செயற்பாட்டினை எமது புலநாய்வு அமைப்பே செய்திருந்தால் நிச்சயாம் அதனை நாம் பாராட்டியே தீரவேண்டும், ஆனால் அவ்வாறானதொரு தீரச்செயலினை எமது உளவுத்துறை அண்மைக்காலத்தில் செய்திருக்கிறதா என்பதைப் பார்த்தால் அதற்கான சாத்தியங்கள் குறைவென்றே எண்ணுகிறேன். சிலவேளைகளில் இலங்கை அரசாங்கமே இந்தப் பிளவினை திட்டமிட்டு உருவாக்கியிருக்கலாம்" என்று கூறுகிறார். 1990 ஆம் ஆண்டு இந்திய ராணுவம் வெளியேறியதன் பின்னர் புலிகளுடனான தொடர்புகளை றோ முற்றாக அறுத்துவிட்டதெனும் மேத்தாவின் கருத்து ஓரளவிற்கு உண்மையாக இருக்கலாம். ஆனால், இங்கே திட்டமிட்டு மறைக்கப்பட்ட மற்றொரு விடயம் தான் புலிகளுக்கெதிரான அமைப்புக்களோடடு றோ மிக நெருக்கமான தொடர்புகளை இன்றுவரை பேணிவருவதென்பது. இந்த அமைப்புக்களும், சக்திகளும் தமிழரகாவோ, சிங்களவராகவோ அல்லது முஸ்லீம்களாகவோ இருந்தால்க் கூட, புலிகளை அழிக்கும் தனது இலட்சியத்திற்கான கருவிகளாக அவர்களைப் பாவித்து மிக நெருக்கமான தொடர்புகளை அது உருவாக்கிப் பேணியே வருகிறது. இதற்கான காரணம் என்ன? 1987 இல் இருந்து ராணுவ ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பிரபாகரனைப் பிந்தொடர்ந்து, தனது நாசகார நடவடிக்கைகள் மூலம் புலிகளைப் பலவீனமாக்கிப், பிரித்து இறுதியில் முற்றாக அழிப்பதை இன்றுவரை தனது தலையாய இலக்காகக் கொண்டிருப்பதே அதன் காரணம்!
  9. இந்தியாவும் தமிழீழ விடுதலைக்கான போராட்டமும் துணைப்படைகளுக்கான ஆட்சேர்ப்பினை இந்தியாவில் மேற்கொண்டுவரும் இந்திய புலநாய்வுத்துறை றோ காலம் : ஆனி 2006 மூலம் : தமிழ்நேசன் மற்றும் தமிழ்நெட் "நாடுகளுக்கிடையேயான உறவுகள் தார்மீக அடிப்படையில் உருவாவதில்லை, மாறாக, தார்மீகத்தினை எதிர்த்தே உருவாக்கப்பட்டு தொடரப்பட்டு வருகின்றன" - ஜோதிந்திரா நாத் டிக்ஸீத், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் 1985 - 1989, வெளியுறவுச் செயலாளர் 1991 - 1994, இந்தியப் பிரதமருக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 2004 - 2005. இந்தியாவின் முன்னணிச் செய்திச் சேவைகளில் ஒன்று இன்று வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பொன்றில் இலங்கை ராணுவத்தின் துணைப்படையாக இயங்கும் கருணா குழு தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் தமிழர்களிடையே தமக்கான புதிய உறுப்பினர்களைத் தேடிவருவதாகத் தெரிவித்திருக்கிறது. பெருந்தொகைப் பணத்தினை மாதாந்தக் கொடுப்பனவாக வழங்குவதாகக் கூறியே இந்த ஆட்சேர்ப்பில் கருணா குழு ஈடுபட்டு வருகிறது. இலங்கையில் ராணுவத் துணைப்படையான கருணா குழுவின் கீழ் இயங்கிவரும் ஈழ ஜனநாயகத் தேசிய விடுதலை முன்னணி எனப்படும் அமைப்பே கருணா குழு சார்பாக தமிழகத்தில் ஈழத்தமிழர் அகதிமுகாம்களில் இருந்தும் அநாதை விடுதிகளில் இருந்தும் கருணா குழுவுக்கான உறுப்பினர்களைச் சேர்க்க முயன்றுவருவதாக உள்ளூர் செய்தியாளர்களை மேற்கோள் காட்டி இந்த செய்திச்சேவை செய்திவெளியிட்டிருக்கிறது. இலங்கை ராணுவத் துணைக்குழுவினருக்கான இந்த ஆட்சேர்ப்பு இந்திய வெளியக புலநாய்வுத்துறையான றோவின் அனுசரணையுடனும், ஆசீர்வாதத்துடனுமே நடைபெற்றுவருவதாக இந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது. ஈ என் டி எல் எப் அமைப்பின் தலைவரான பரந்த ராஜனை பயன்படுத்தி தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்திருக்கும் தமிழர்களிலிருந்து கருணா குழுவுக்கான ஆட்சேர்ப்பினை றோ மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. கருணா குழுவில் இணைபவர்களுக்கு உடனடிக் கொடுப்பனவாக 10,000 ரூபாய்களும், அவர்கள் இலங்கையை வந்தடைந்த பின்னர் மேலதிகக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் செல்லப்பிள்ளையாக இருக்கும் பரந்தன் ராஜன் எனும் துணை ராணுவக் குழுவின் தலைவர் தனது கண்காணிப்பின் கீழ் பெங்களூர் பகுதியில் அநாதை விடுதிகளை நடத்திவருவருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தனது அநாதை விடுதியிலிருந்து சிறுவர்களை இலங்கையில் போர் நடவடிக்கைகளில் பாவித்தார் என்கிற பலமான குற்றச்சாட்டு அவருக்கெதிராகச் சுமத்தப்பட்டிருக்கிறதென்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. புலிகளுக்கெதிரான பல துணைராணுவக் குழுக்களுடன் நெருங்கிச் செயற்படும் பரந்தன் ராஜன், புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டே வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆரம்பத்தில் உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பில் செயற்பட்டு வந்த பரந்தன் ராஜன், இந்திய அமைதிப்படை தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நின்றகாலப்பகுதியில்,புளொட்டிலிருந்து வெளியேறி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய துணைராணுவக் குழுக்களின் உதிரிகளை இணைத்துக்கொண்டு "த்ரீ ஸ்டார்" எனும் துணைராணுவப் படையினை உருவாக்கிச் செயற்பட்டு வந்தார். 1987 ஆம் ஆண்டு, இந்தியப்படை தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நின்ற காலப்பகுதியில் இந்திய உளவுத்துறையுடன் நெருங்கிச் செயற்பட்ட பரந்தன் ராஜன், அவர்களின் உதவியுடனேயே தனது துணைராணுவப்படையான ஈ என் டி எல் எப் அமைப்பினை உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. 1990 இல் இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறிய போது, ராஜனும் அவரது பல துணைராணுவக் குழு உறுப்பினர்களும் இந்தியாவுக்குத் தமது தளத்தினை மாற்றிக்கொண்டார்கள். பின்னாட்களில் பரந்தன் ராஜன் சென்னையிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் இந்திய. இலங்கை அரச புலநாய்வுத்துறைகளின் சார்பாகச் செயற்பட்டு வந்தார். பரந்தன் ராஜன் கருணாவுடன் சேர்ந்து தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி எனும் துணைராணுவக் குழுவினை அமைத்துக்கொண்டபோது, இந்திய உளவுத்துறையின் பெரிதும் விரும்பப்பட்ட ஈழத்தமிழராக மாறினார். கருணா குழுவின் ஆதரவாளர்களின் கருத்துப்படி, கருணாவையும் பரந்த ராஜனையும் ஒன்றாக இயங்கும்படி பணித்தது இந்திய உளவுப்பிரிவான றோ அமைப்பே என்று கூறியிருக்கிறார்கள். பரந்தன் ராஜன் துணை ராணுவக் குழுவொன்றை வழிநடத்தியவாறே இந்தியாவில் நெடுநாள் தங்கியிருப்பதும், தங்குதடையின்றி இந்தியாவின் எப்பகுதிக்கும் சென்றுவருவதும், புலிகளுக்கெதிராகத் தொடர்ந்து செயற்பட்டு வருவதும் கூறும் ஒருவிடயம் அவர் இந்திய உளவுத்துறையினரால் இயக்கப்படும் ஒரு ஆயுததாரி என்பதுதான் என்று அச்செய்தி மேலும் கூறுகிறது. 2004 இல் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை ஜெயலலிதா தேடித் தேடி வேட்டையாடியபோது பரந்தன் ராஜனும் தவறுதலாக கைதுசெய்யப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், கைதுசெய்யப்பட்ட சில மணிநேரத்திற்குள்ளேயே றோ வின் தலையீட்டினால் பரந்தன் ராஜன் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்று அச்செய்தி மேலும் குறிப்பிடுகிறது. 2005 இல் இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட பரந்தன் ராஜன் மீளவும் இந்தியாவில் செயற்படுவதற்கும், அலுவலகங்களை அமைத்து இயங்குவதற்கும், ஆட்களைச் சேர்ப்பதற்கும் அவருக்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்வரை பெங்களூரிலிருந்து செயற்பட்ட ராஜன், 2006 இல் தி மு க அவின் ஆட்சியின் பின்னர் தமிழக அரசின் ஆதரவுடனும்,இந்திய புலநாய்வுத்துறையின் ஆசீருடனும் மீண்டும் சென்னையிலிருந்து செயற்பட ஆரம்பித்திருக்கிறார். தமிழகத்தில் பரந்தன் ராஜனின் இருப்பிடம் பற்றித் தமக்கு எதுவுமே தெரியாது என்று கையை விரிக்கும் தமிழகக் காவல்த்துறை "அவர் ஒரிஸாவில் எங்காவது இருக்கலாம்" என்று மழுப்பலாகப் பதிலளிப்பதாக இச்செய்தி கூறுகிறது. ஆனால், தன்னை அடையாளம் காட்டவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட தமிழக காவல்த்துறை அதிகாரியொருவர், "ராஜன் தற்போது கருணாவுடன் மட்டக்களப்பில் தங்கியிருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று கூறியிருக்கிறார். மட்டக்களப்பு தீவுச்சேனைப்பகுதியில் அமைந்திருந்த கருணா - ஈ என் டி எல் எப் அமைப்பின் முகாம் மீதான புலிகளின் தாக்குதலின்போது ஈ என் டி எல் எப் அமைப்பினை புலிகளுக்கெதிரான சக்திகளை ஒன்றிணைக்கும் ஒரு கருவியாக றோ பாவிப்பதாக இச்செய்தி கூறுகிறது. ராஜனின் செயற்பாடுகளை வழிநடத்திவரும் றோ, அவரையும் கருணாவையும் இணைப்பதன் மூலம் புலிகளைப் பலவீனப்படுத்தி, தமிழகத்தில் புலிகளுக்கும் பிரபாகரனுக்கு இருக்கும் ஆதரவினைக் குறைத்துவிட முயல்வதாக இச்செய்தி மேலும் கூறுகிறது. சித்திரை 2004 இல், கருணாவின் ராணுவப் பலம் புலிகளால் முற்றாகச் சிதைக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலிருந்து பெருமளவு தமிழ் துணை ராணுவக் குழு உறுப்பினர்களை இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கை ராணுவம் வரவழைத்திருக்கிறது. புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தில் ஈடுபடுத்தவென தமிழகத்தில் தங்கியிருக்கும் ஈ என் டி எல் எப் கூலிகளை ஒருவருட நுழைவு அனுமதியுடன் சுழற்சி முறையில் அழைத்துவரும் இலங்கை அரசு, புலிகளுக்கும் தமிழருக்கும் எதிரான நாசகார நடவடிக்கைகளில் வடக்குக் கிழக்கில் ஈடுபடுத்தி வருகிறது. இலங்கை ராணுவத்திற்கும் புலிகளுக்குமிடையே ஆரம்பித்திருக்கும் சிறியளவிலான இப்போர் நடவடிக்கைகளால் குறைந்தது 3000 தமிழர்கள் தமிழகத்தில் தற்போது தஞ்சமடைந்திருப்பதாகவும் இச்செய்து கூறுகிறது.
  10. ஏ.ஈ மனோகரன் அவர்களுக்கு அஞ்சலிகள் .....!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.