Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87997
    Posts
  2. valavan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1570
    Posts
  3. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    15755
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    4
    Points
    46808
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/13/22 in Posts

  1. ஆனால், அங்கிருந்த தளபதிகளில் ஒருவர் மட்டுமே கருணாவின் துரோகத்தை வேளிப்படையாக எதிர்த்தார். கிழக்கு மாகாணத்தின் தன்னிகரில்லாத் தளபதியெனும் மமதை தலைக்கேறிய கருணாவை தனியாளாக எதிர்த்து நின்றது கெளசல்யனே அன்றி வேறில்லை. மொத்தத் தமிழினத்தினதும் எதிர்கால இருப்பென்பது வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதிலேயே தங்கியிருக்கிறது என்று நிதானத்துடன் அவர் கருணாவை நோக்கிக் கூறினார். மேலும், நாம் பிரதேச ரீதியாகப் பிரிந்துபோவது எமது போராட்டத்தை முழுமையான தோல்விக்கு இட்டுச் செல்லும் என்றும் அவர் கருணாவிடம் கூறினார். எமக்கிருக்கும் பிரச்சினைகளை நாம் பேசியே தீர்த்துக்கொள்ள வேண்டும், ஆகவே உங்களின் இந்த நாசகார முடிவினைக் கைவிட்டு விட்டு வன்னிக்குச் சென்று தலைவரிடம் நேரடியாகப் பேசுங்கள் என்று அவர் கருணாவைக் கேட்டுக்கொண்டார். கெளசல்யனை பேசவிடாது தடுத்து, அவரின் பேச்சை நிராகரித்து, அவரையும் தனது சூழ்ச்சிக்குப் பணியவைக்க கருணா முயன்றுகொண்டிருந்தான். அத்துடன், கிழக்கிலிருந்து புலிகளுக்கென்று சேர்க்கப்பட்ட பணம் எவ்வளவென்பதை நீ வன்னிக்கு சொல்லு என்று அவன் கெளசல்யனைப் பார்த்துக் கேட்டான். "எமது மண்ணில் சேர்க்கும் அனைத்துப் பணமும் பொன்னான கிழக்கு ஈழத்திற்காக மட்டுமே இனிமேல் பயன்படுத்தப்படும்" என்று கூறினான் கருணா. ஆனால், கெளசல்யனோ தனது முடிவிலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை. தன்னை கருணா எதுவும் செய்யலாம் என்கிற நிலையிருந்தும், அவர் கருணாவின் துரோகத்திற்கெதிராக குரல்கொடுத்துக்கொண்டேயிருந்தார். இதனால் பொறுமையிழந்த கருணா, "இப்போதே வன்னிக்கு ஓடிப்போ, உன்ர மனுசியையும் கூட்டிக்கொண்டு ஓடு. இனிமேல் நான் உன்னை இங்கே பர்க்கக் கூடாது. அப்படிப்பார்த்தால் அந்த இடத்திலேயே உன்னைப் போடுவேன்" என்று கர்ஜித்தான். அங்கு கூடியிருந்தவர் எல்லாம் ஸ்தம்பித்து நிற்க, கெளசல்யன் அந்த மணடபத்தை விட்டு அமைதியாக வெளியேறிச் சென்றார். உடனடியாக தனது வருங்கால மனைவியும், கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்றுவந்த மாணவியுமான புஷ்பாவை அழைக்க அம்பிலாந்துரைக்குச் சென்றார். அங்கிருந்து, உடனடியாக அவர் வன்னிக்குக்கிளம்பிச் சென்றார். வன்னியை வந்தடைந்த கெளசல்யனை வரவேற்ற தலைவர் கிழக்கில் நடந்துவரும் கருணாவின் பிரதேசவாத நாடகத்தின் விபரங்கள் தொடர்பாக அவருடன் நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருந்தார். கருணாவின் துரோகத்தினை துணிவுடன் எதிர்த்து நின்றவர் கெளசல்யன் மட்டுமே ஆரம்பத்தில் கருணாவின் கீழ் செயற்பட்ட தளபதிகளான ரமேஷ், ரமணன், ராம், பிரபா, கரிகாலன் ஆகியோர் பின்னர் அவனை விட்டு மீண்டும் வன்னிக்கே திரும்பிச் சென்றிருந்தாலும், ஆரம்பத்திலிருந்து கருணாவின் துரோகத்தினை துணிவாக எதிர்த்து நின்றவர் கெளசல்யன் மட்டும் தான். கெளசல்யனின் விசுவாசத்தை மெச்சிய தலைவர், பின்னர் வந்த சில வாரங்களில் அவரது திருமண நிகழ்விலும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. முற்றும் இணையம் : கொழும்பு டெயிலி மிரர் ஆக்கம் : டி பி எஸ் ஜெயராஜ்
  2. இந்தக் காணொளியில் பேசுபவர்களின்படி, ஈழ தமிழர்களின் உண்மை மனநிலை இதுதானா..? என தெளியவில்லை. மலையக தமிழர்களின் நிலை போலவே தோன்றுகிறது. வசதியுள்ள பலரும் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா என புலம்பெயர்ந்துவிட, பாவம் எளிய மக்கள் இங்கே வந்து எந்த உரிமையும் இல்லாமல் வாழ்வது வேதனை.
  3. இந்த காணொளி பார்க்கும் போது கண் கலங்கியது. நாம் தமிழ்நாட்டினர் என்ற உணர்வு அடி மனதை வருடிச்சென்றது.
  4. பெப்ரவரி 14 அன்று.... "பிரான்ஸ் கிஸ்" அடித்த வாய். அடுத்த நாள்... இப்பிடியாய் போச்சு. 🤣
  5. பெண்கள்... வாகனம் ஓட்டக் கூடாதாம். 🤣
  6. தாத்தாவும் பேத்தியும் நல்ல கொண்டாடடம் போல . மூளைக்கு வேலை தரும் விளையாட்டு. ஆங்கிலப் புலமையுடன் .
  7. சந்தை சில சமயம் செய்திகளுக்கு தொடர்பில்லாமல் செயற்படும், அதனை நியாப்படுத்தும் வகையில் சொல்வார்கள் " Good analysis bad trader " https://www.goodreads.com/book/show/100779.Reminiscences_of_a_Stock_Operator இந்த புத்தகத்தில் ஜெசி லிவர்மொரின் பங்கு சந்தை அனுபவங்கள் கூறப்படுகிறது. அதில் ஜெசி லிவர்மோர் அடிசன் கமாக் என்பவர் எவ்வாறு, சந்தை நடவடிக்கையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் ஜோசப் எனும் பங்கு சந்தை, பொருளாதார பற்றி எழுதும் பத்திரிகையாளர், அடிசன் கமாக்கிடம் ஒரு சந்தையின் முக்கியமான தகவலை கூறுவார், வில்லியம் ரொக்கர்பெலோ தனது எரிசக்க்தி பங்கினை ஒவ்வொரு 3/8 அதிகரிப்பிற்கும் 1500 பங்குகள் வீதம் விற்கிறார் என்பதாகும். பத்திரிகையாளரான ஜோசப்பிற்கு அடிசன் பங்கு சந்தை சரிவில் முதலிட்டிருப்பது தெரியும் அதனால் அந்த செய்தியினை கூறியவுடன் அடிசன் தனது பங்கு சந்தை சரிவு முதலீட்டினை அதிகரிப்பார் என எதிர்பாத்திருந்தார் (சாதாரணமாக அனைவரும் அதனையே செய்வார்கள்), ஆனால் அடிசன் அந்த பங்குகளை அதே விலை மாற்றத்தில் அதேயளவில் வாங்கினார். பின்னர் அந்த பங்குகளை கொண்டே பங்கு சந்தை சரிவை ஆரம்பித்து வைத்தார் என குறிப்பிடுகிறார். இங்கு பெரிய வர்த்தகர்கள் சில்லறை வர்த்தகர்களிடமிருந்து இவ்வாறுதான் வேறுபடுகிறார்கள். இந்த பெரிய வர்த்தகர்கள்தான் சந்தையை கட்டுப்படுத்துகிறார்கள், ஆனாலும் சில சமயம் இந்த பெரிய வர்த்தகர்கள் கூட சில பங்குகளில் மாட்டி விடுவார்கள், அந்த பங்கிற்குரிய நிறுவனம் திவாலாகி கொண்டிருக்கும் அதிலிருந்து வெளியேறுவதற்காக தேர்ந்தெடுப்பது சில்லறை வர்த்தகர்களை. செயற்கையாக தற்காலிகமாக பங்கின் விலையை வலிந்து உயர்த்தி கழிவு விலையில் பங்கு வாங்கும் சில்லறை வர்த்தகர்களின் தலையில் கட்டிவிடுவார்கள் இந்த பெரிய வர்த்தகர்கள். இதனை பங்கு சந்தையில் "Dead cat bounce" என்பார்கள்.
  8. மேலே குறிப்பிட்ட தை மாதத்திற்கான நுகர் விலை சுட்டெண் மாதாந்த அதிகரிப்பு, வருடாந்த அதிகரிப்பு நீங்கள் சொன்னது போல 7.5%. https://www.bls.gov/cpi/ அமெரிக்க தேசிய பாதுகாப்பு அலோசகரான சலிவனின் கருத்து வெளியானதை அடுத்து பங்கு சந்தை மற்றும் சில நாணயங்கள் யுரோ உள்ளடங்கலாக மற்றும் பிட் கொயின் என்பவை சரிவை சந்தித்தது ஆனால் மறுவளமாக தங்கமும் அமெரிக்க நாண்யமும் விலை அதிகரித்தது.
  9. படம் : எதிரொலி (1970) இசை : KV மகாதேவன் பாடியோர் : TMS & LR ஈஸ்வரி
  10. ஒரு காலத்திலை என்ரை நித்திரையை கெடுத்த கெட்ட பாட்டு...😍 ஒரு காவியம் அரங்கேறும் நேரம் ஒரு காவியம் அரங்கேறும் நேரம் மழை தூவுதே இதமாகுதே மழை தூவுதே இதமாகுதே ஒரு காவியம்… காமன் கலை நூறு காணும் இரு தேகம் காற்று சுதி மீட்டி போடும் ஒரு தூபம் காதல் எனும் யாகம் காணுகின்ற யோகம் காட்டு நதி வேகம் காதல் மனம் போகும் மோகம் ஒரு தாகம் மூடுதே மேகம் போகம் சம பாகம் பாடுதே ராகம் வாடுதே தேகம் ராதை அவள் மீது கண்ணன் ஒரு பாதி போதை வரும் போது காணும் நிலை மீதி பவள மணித் தேரில் பருவம் அரங்கேற மெழுகுதிரி போல கரைந்து விளையாட ஊறும் நதி யாவும் சேரும் இடம் ஒன்று நாளும் விலகாமல் கூடும் சுகம் இன்று சேர்ந்ததே நன்று…..
  11. அவர் பெயர் தவகரன், யாழ்பாணத்திலிருந்து யூரியூப் காணொலிகள் பதிவேற்றும் யாழ் சுதன் ஷங்கர் ஜெசி போன்ற பிரபல்யமான பலரில் இவரும் ஒருவர். எந்த உலகத்தில் வாழ்ந்தாலும் இந்திய விசா பெற்றுத்தான் அங்கு வரவேண்டுமென்றாலும், சென்னை என்பது உலக தமிழர்களின் தலை நகரம், அழுக்கான சினிமாவும் அரசியலும் அங்கிருந்தாலும், யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு போகும் தூரம்கூட இல்லாத தமிழகமும் எங்கள் தாய் மண்ணே.
  12. எமக்கும் அப்படித்தான். ஆனாலும் சிலர் "எலேய், இந்தியனா இருக்கப் பாரு, இல்லைனா சிலோனுக்கு போயிடு.." என பிரிப்பதும் இங்கே உண்டு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.