Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    9
    Points
    15791
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87993
    Posts
  4. நன்னிச் சோழன்

    கருத்துக்கள உறவுகள்+
    6
    Points
    35644
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/28/22 in all areas

  1. இது மூட்டைப் பூச்சிகள் பற்றியது இல்லை. ஆகவே இறுதிவரை வாசியுங்கள். 2019 ஒக்டோபர் மாதம் நானும் மகளும் கம்போடியா போயிருந்தோம். அங்கே விலை மலிவு என்பதால் பத்து நாட்களும் ஐந்து நட்சத்திர தங்குவிடுதியை முற்பதிவு செய்திருந்தாள் மகள். இரண்டு கட்டில்கள் கொண்ட பெரிய அறை அனைத்து வசதிகளுடனும் இருந்தது. முதல் நாள் மாலை வரை சுற்றிப் பார்த்துவிட்டுக் களைப்புடன் வந்து கட்டிலில் படுத்தால் ஒரு அரை மணிநேரம்தான் நின்மதியாகப் படுக்க முடிந்தது. முதுகு கால் கை எங்கும் ஒரே கடி. எனக்குத்தான் நினைப்போ என்று திரும்பிப் படுத்தால் கன்னத்திலும் கடிக்க மின்விளக்கைப் போட்டுவிட்டு எழும்ப, “என்ன அம்மா நித்திரை வரேல்லையா” என்று மகளும் தூக்கம் கலைந்து கேட்கிறாள். “சரியான மூட்டைக் கடி” என்கிறேன். மகள் நம்பாமல் “எனக்கு ஒன்றும் கடிக்கவில்லையே. உங்களுக்குச் சும்மா நினைப்பு” என்றுவிட்டு படுக்க, நானும் வேறு வழியின்றித் தூங்கிவிட்டேன். அடுத்தநாள் பார்த்தால் கால்களில் முதுகில் எல்லாம் தடித்தபடி இருக்க, மூட்டைப் பூச்சிகள்தான் கடித்திருக்கு என்று முடிவெடுத்து மகளுக்குக் காட்ட, “எனது கட்டிலில் ஒன்றும் கடிக்கவில்லை. இன்று நீங்கள் நான் படுத்த கட்டிலில் படுங்கள். நான் உங்கள் கட்டிலில் படுக்கிறேன்” என்று கூற, கடி வாங்கினால்தான் தெரியும் என்று மனதில் நினைத்தாலும் சிலநேரம் மகளுக்கு இளரத்தம். கடிக்காவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையும் ஓடியது. அந்தன்றும் சுற்றிப் பார்த்த களைப்புடன் வந்து கட்டில் மாறிப் படுக்கிறோம். காலையில் அலாம் அடிக்கும் மட்டும் நான் எழும்பவே இல்லை. “என்ன நல்ல நித்திரை போல” என்று மகள் கேட்க, நக்கலாகக் கேட்கிறாளோ என நினைத்து “ஓம் நல்ல நின்மதியான நித்திரை” என்றேன். இரவு முழுதும் “ஒரே மூட்டைக் கடி” என்று அவள் சொல்ல எனக்குள் மகிழ்ச்சியில் விளக்குகள் எரிகின்றன. காலையில் வரவேற்புப் பெண்ணிடம் சென்று முறையிட்டு வேறு அறை வேண்டும் என்று கேட்க, அடுத்த பத்தாவது நிமிடமே அதேபோன்ற வேறு அறை ஒன்றும் தந்துவிட்டார்கள். அதன்பின் மூட்டை கடிக்காவிட்டாலும் எங்கள் உடைகள், பயணப் பொதிகளுடன் மூட்டையும் வந்துவிடுமோ என்னும் பயம் எனக்கு இருந்துகொண்டே வந்ததில் லண்டன் திரும்பிய பிறகு எல்லா ஆடைகளையும் துவைத்துக் காயவைத்து சூட்கேசை வெயிலில் காயவைத்துப் பின்னர் உள்ளே எடுத்து வைத்தபின் தான் நின்மதி வந்தது. ஒரு மூன்று மாதம் போயிருக்கும். தூங்கிக்கொண்டு இருக்கும் போது முதுகில் மூட்டை கடிப்பது போல ஒரு உணர்வு. சிலநேரம் எனக்குத்தான் நினைப்போ என்று திரும்பிப் படுத்தபின் கடியே இல்லை. அடுத்த நாளும் அப்பிடித்தான். என்னடா கோதாரி காசு குடுத்து கம்போடியா போய் இதையும் கொண்டவந்து சேர்த்தாச்சோ என்னும் நினைப்பு எழ, சீச்சீ இருக்காது என்று மனம் சமாதானம் கொள்ள, உடன ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம். பொறுத்திருந்து பார்ப்பம் என்று விட்டால்……. ஒரு வாரம் எந்தவித அசுமாத்தமும் இல்லை. அடுத்த வாரம் மீண்டும் இன்னொரு இடத்தில் கடி. கடித்த இடம் கடுப்பது போல் இருந்து மீண்டும் காலையில் மறந்துபோக, எனக்கு அந்த மூட்டைப் பூச்சி தினமும் கடித்துக் கரைச்சல் தரவில்லைத் தானே. இருந்திட்டுப் போகட்டும் என்ற எண்ணம் வந்ததும் எனக்குள் ஒருவித நின்மதி பரவ ஆரம்பிக்க, எப்ப அது கடிக்கும் என்று நான் எதிர்பார்க்கும் அளவுக்கு எனக்கு அதைப் பிடித்துப்போய் விட்டது என்றால் நீங்களே நம்ப மாட்டீர்கள். இந்தப் பெரிய உடலில் வாரம் ஒருதடவை அது இரத்தம் குடிப்பதால் என்ன கெட்டுவிட்டது என்னும் அளவுக்கு என மனம் வந்துவிட்டது. ஒரு இரண்டு மூன்று மாதானக்கள் செல்ல “உங்களுக்கு ஏதும் கடிக்கிதோ” என்று மனிசனிட்டைக் கேட்க, “உன்னை மீறி என்னட்டை எது வரப்போகுது, அதோடை ஏன்ர ரத்தம் நல்ல சுத்தம்” என்ற நக்கல் வேறு. ஒரே ஒரு மூட்டை தான் ஒட்டிக்கொண்டு வந்திட்டிது. நல்லகாலம் என்ற ஒரு ஆறுதல். இரண்டு வந்திருந்தாலே பெருகியிருக்கும். ஒண்டே ஒண்டு எண்டதாலதான் தப்பிச்சன் என மனதைத் தேற்றிய படி இருக்க, அடுத்த வாரம் கால் பகுதியில் கடி. முதுகில் கடிக்காததால் இவர்தான் இரே இடம் அலுத்துப்போய் இடம்பெயர்ந்திருக்கிறார் என்று நம்பியபடி நானும் என்பாட்டில் இருக்க, ஒரு ஆண்டு கோவிட் குழப்பங்களும் பயமும், பயமுறுத்தும் செய்திகளுமாய் இருக்க, அதுவும் மனிசனின் கட்டிலுக்கு இடம்மாறிச்சிதோ என்னவோ நானும் மூட்டை இருக்கிறதையே மறந்துபோனன். இன்னும் வரும்
  2. பார்வை ஒன்றே போதுமே..........( 6 ). சாப்பிட்டுவிட்டு எழுந்த சாமிநாதன் கை கழுவிவிட்டு தான் படுக்கும் கட்டிலின் கீழேயிருந்த பெட்டியை எடுத்து அதனுள் இருந்து ஒரு கைபேசியை எடுத்து சித்ராவிடம் கொடுக்கிறார். இதைப் பார் சித்ரா இது உனக்கு உபயோகப்படுமா என்று. இது விலை கூடிய ஆப்பிள் போன் ஐயா. இப்போதைக்கு என்னால் நினைத்தும் பார்க்க முடியாது. என்கூட படிப்பவர்களில் ஓரிருவர் வசதியானவர்கள் மட்டும் வைத்திருக்கினம். இதில் எல்லா வேலைகளையும் செய்யலாம் என்கிறாள். அப்படியா சரி அதை நீயே வைத்துக்கொள். அப்போ உங்களுக்கு ....எனக்கு முத்து வைத்திருக்கும் அந்த போனே போதும். அது ஒருமுறை சார்ஜ் போட்டால் ஒருவாரத்துக்கு மேல் சார்ஜ் இருக்குமாம்.யாரோ சொன்னார்கள். அவனும் புதிதாக நல்லதாக ஒன்று வாங்கிக் கொள்ளட்டும் என்கிறார். சித்ராவும் முத்துவும் ஓடிப்போய் அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்ள மகேஸ்வரியின் கண்களில் நட்பையும் மீறிய ஒரு சுடர் தெரிகின்றது. பிள்ளைகள் சும்மா பகிடியை விட்டுட்டு ஐயா சொல்லுறதை கவனமாக கேளுங்கோ. எனக்கும் முன்னம் இப்படி ஒரு யோசனை வரவில்லை. முத்து வீட்டு செலவுகள் பற்றி நீ யோசிக்காத. என்னிடமும் கொஞ்சப் பணம் இருக்கு. எங்கட வயலும் நல்லா விளைஞ்சிருக்கு, அறுவடை செய்து வித்தால் அதிலும் காசு வரும் சமாளிக்கலாம் என்று மகேஸ்வரி சொல்லிவிட்டு என்கூடப் படித்த பார்வதிதான் இப்ப கல்லூரி உப அதிபராக இருக்கிறா அவவிடம் சொன்னால் ஏதாவது செய்வா என்கிறாள். "கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமன்றோ" முத்துவும் அரை மனதுடன் படிப்பதற்கு சம்மதம் தெரிவிக்கிறான். இந்த விடுமுறை முடிந்து கல்லூரி தொடங்கியதும் அவன் சேர்ந்து விடுவான். காலம் எதற்காகவும் காத்திருப்பதில்லை. சித்ரா வக்கீல் படிப்பை எடுத்துக் கொண்டு படிக்க, முத்து பிஸினஸ் மேனேஜ்மண்ட் பற்றி படித்துக் கொண்டு வருகிறான். ஒருவர் பின் ஒருவராக இருவரும் தங்களது படிப்புகளை முடித்து பட்டங்கள், சான்றிதழ்களுடன் வெளியே வருகின்றார்கள். சித்ராவுக்கு சாமிநாதன் சங்கிலியையும், முத்துவுக்கு தனது கைக்கடிகாரத்தையும் பரிசாகக் கொடுக்கிறார்.அவர்கள் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்தும் அவர் வற்புறுத்தி அவர்களிடம் கொடுத்துவிடுகிறார். அன்று நடந்தது, கோபத்தில் சாமிநாதன் அந்த கிளப்பை விட்டு சென்றபின் ரேகா தள்ளாடியபடி ஒரு இளைஞனின் அணைப்பில் கவுண்டருக்கு வருகிறாள். அவளிடம் விடுதி மானேஜர் வந்து ரேகாம்மா சற்று முன்புதான் உங்கள் கணவர் இங்கு வந்து உங்களை விசாரித்து விட்டு சென்றார் என்று சொல்ல,அதைக் கேட்டதும் ரேகாவுக்கு போதை சட்டென்று குறைந்து விட்டது. இப்போ அவர் எங்கே எனக் கேட்டாள். அவர் உள்ளேதான் எங்காவது இருப்பார் என நினைக்கிறேன் என்று அந்த மானேஜர் சொன்னார்.ரேகாவும் ஒவ்வொரு மேசையாக அவரைப் போய்த் தேடியும் அவரைக் காணவில்லை. அப்போது அவளுடன் பொழுதைக் கழித்த அந்த வாலிபன் இன்னொரு நடுத்தரவயசுப் பெண்ணை அணைத்தபடி வந்து என்ன ரேகாம்மா பதட்டமாய் இருக்கிறீங்கள் ஏதாவது பிரச்சினையா என்று கேட்க ....ம் .....பிரச்சினை போலத்தான் இருக்கு. சற்று முன் எனது கணவர் இங்கு வந்திருக்கிறார் போல, என்னை உன்னுடன் சேர்த்து பார்த்திருப்பாரோ என்று சந்தேகமாய் இருக்கு. எதுக்கும் நீயும் கவனமாய் இருந்துகொள். அவனோ சந்தேகமே வேண்டாம் மேடம். நாங்கள் மாடியில் இருந்து இறங்கி வரும்போதே அவரை நான் பார்த்தேன். அவரும் எங்களைப் பார்த்தார். அதன்பின் அவர் கோபமாக எழுந்து சென்றதையும் நான் பார்த்தேன். ஓ...ஷிட் .....என்று புறுபுறுத்தவள், ஏன் நீ இதை எனக்கு முதலே சொல்லவில்லை என்று கடிந்து விட்டு வெளியே ஓடிவந்து ட்ரைவர் சுந்தரத்தை அழைக்க அவனும் பிடித்துக் கொண்டிருந்த சிகரட்டை கீழே போட்டு மிதித்து விட்டு ஓடிவந்து என்னம்மா என்றான். முட்டாள் உனக்கு எத்தனைதரம் சொல்வது சிகரெட் பிடித்து விட்டு என்முன்னே வராதே என்று, கொஞ்ச நேரத்துக்கு முன் ஐயாவைப் பார்த்தாயா, அவர் இங்கு வந்திருந்தாரா என்று கேட்டாள். அவர் வந்திருக்க வேண்டும். அவரது கார் அங்கு நின்றதைப் பார்த்தேன் ஆனால் அவரைக் காணவில்லை. சரி ....கெதியா வண்டியை எடு வீட்டுக்கு போகலாம் என்றாள். வீட்டுக்குள் ஓடிச்சென்றவள் அவசரமாக தங்களது அறைக்கு சென்று பார்த்தாள்.அங்கே சாமிநாதன் இல்லை.கட்டிலில் அவர் கந்தோருக்கு கொண்டுசெல்லும் கணனிக் கைப்பை கிடந்தது...........! பார்ப்போம் இனி........! ✍️ ( அன்புள்ளங்கள் நீங்கள் தரும் ஊக்கத்துக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்).
  3. படம் : குறவஞ்சி (1960) இசை : ரி. ஆர். பாப்பா வரிகள் : குடந்தை கிருஷ்ணமூர்த்தி பாடியவர்: C.S செயராமன்
  4. வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது. கள்ளச்சாவி போட்டாவது......! வீதியைப் பெரிதாக்க வேலியை வெட்டுகிறார்கள் வேலிக்கு மேலால் வாசமில்லா வண்ணம் கொண்ட போகன்வில்லா மனமில்லை ஆனால் மயக்கும் அழகு தரையில் விழுந்த கொடியில் சிலிர்த்து நிற்கும் பெரிய முட்கள் பாக்கியமும் பர்வதமும் வேடிக்கை பார்க்க, வருகின்றாள் செல்லாத்தை கொடிய முட்கள் விலத்தி என்ன செல்லாத்தை எங்க இங்கால ஒண்ணுமில்லை சும்மா வந்தேன் உன்னிடம் ஒன்று கேட்பேன் கோவிக்காமல் உத்தரம் கூறு வாசமில்லா மலர் கொய்த வனிதாவும் வியப்புடன் திரும்பிப் பார்க்கிறாள் சொல்லனை என்ன விசயம் நான் கோவிக்கேல்லை, நீ சொல்லு என்ர மகன் வசந்தனுக்கு - உன்ர பிள்ளை வனிதாவைக் கேட்கிறன் நீ சம்மதித்தால் நன்றியோடிருப்பேன் பாக்கியம் திடுக்கிட்டு யோசிக்க பர்வதம் குறுக்கிட்டு சொல்கிறாள் ஊரெல்லாம் திருடுகிறான் உன் மகன் உதவாக்கரையென்று உலகுக்கே தெரியும் கள்ளச்சாவி போடும் நல்ல குடிகாரன் அவனுக்காகப் பெண்கேட்டு இங்கு என்ன துணிவில் வந்தாயம்மா பர்வதத்தைத் தடுத்த பாக்கியமும் பெண் இருந்தால் கேட்பது வழமை அவளையும் ஒருக்கால் கேட்பமென்று என்ன பிள்ளை வனிதா, மாமி சொன்னதெல்லாம் கேட்டனியெல்லோ உனக்கிது சம்மதமோ தயங்காமல் சொல்லு செல்லாத்தை மாமியும் காத்திருக்கிறா எனக்கும் முப்பத்தைஞ்சாச்சு அவவுக்கும் தெரியும் இதுதான் சமயமென்று அம்மாவும் தவிக்குது இனியொரு வரனும் வராமலும் போகலாம் நிலத்தை காலால் சுரண்டி "ம்" என்று சொல்லத்தான் ஆசை, ஆனாலும் வெட்கம் கெட்ட வெட்கமும் என்னை விட்டுப் போட்டுது உனக்கு விருப்பம் எண்டால் எனக்கும் சம்மதம் திருடன் என்றாலும் இருக்கட்டுமே நான் திருத்தப் பார்ப்பேன் குடிகாரன் ஆனாலும் என்ன அவரைக் குறைக்கச் சொல்லுவேன் பெண்பித்தன் ஆனாலும் பார்க்கலாம் என் முந்தானையில் முடிஞ்சுடுவேன் வருவது வரட்டும் வாழ்ந்து பாப்போம் அம்மா தாயே கருமாரி திரிசூலி ஆட்டுக்கும் மாட்டுக்கும் அமாவாசை பறுவமுண்டு அதிஸ்டக் கட்டை எனக்கு அது வந்து போவதுண்டு கருத்தக்கிடா வெட்டி கருத்தாய் பொங்கலிடுவேன் கன்னி கழியவேண்டும் கவலையெல்லாம் தீரவேண்டும் கன்னியாய் இருந்து வீணே என் காலம் கழியாமல் கள்ளத் திறப்பு போட்டாவது கருவறை திறக்கட்டும்.....! யாழ் 24 அகவைக்காக ஆக்கம் சுவி .....!
  5. இத்தனை வேகமாக எழுதுவதற்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் அண்ணா.
  6. ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்.......! 💞
  7. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only. இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழரின் கடற்படையால் அணியப்பட்ட சீருடைகள் பற்றியே. ஈழத்தமிழரின் கடற்படையான கடற்புலிகள் தரைப்பணிச் சீருடை(Land work uniform) மற்றும் கடற்கலவர் சீருடை(Sailor uniform) ஆகிய இரண்டையும் அணிந்திருந்தனர் என்பது எல்லோரும் மனதில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். சரி இனி நாம் விதயத்திற்குள் போவோம். முதலில் ஒன்றினை உங்களிற்குச் சொல்ல விரும்புகிறேன். இங்கே நான் கூறியிருக்கும் தொப்பிகள் பற்றிய தகவல்களை எல்லாம் மிக விரிவாக முதல் மடலத்தில் ஏற்கனவே கூறிவிட்டேன். அதைக் காண இங்கே சொடுக்கவும்: விடுதலைப் புலிகளின் சீருடைகள் பற்றி:- விடுதலைப் புலிகளின் முதன்மைச் சீருடையினை வரிப்புலி என்றும் வரியுடை(சேர்த்தே எழுதுதல் வேண்டும்) என்றும் அழைப்பர். நிறங்களை முன்னொட்டாக சேர்த்து வழங்கும் போது... நீல வரி பச்சை வரி கறுப்பு வரி அதில் இருக்கும் அந்தக் கோடுகளை வரி என்று விளிப்பர். வரியின் உட்புறத்தில் இந்நிறங்கள் ஏதும் தெரியாது. அதில் வரியில் உள்ள மூன்று நிறங்களில் எது மெல்லிய நிறமாக உள்ளதோ அதுவே உள்நிறமாக இருக்கும். அந்த சீருடையினை அணியும் போது படங்கு விரிப்பினை அணிவது போன்ற கனத்தை உணர்வீர்கள். இடது கையின் தோள்மூட்டிற்கு கீழே புயந் தொடங்கும் இடத்தில் 3 தூவல்(pen) வைப்பதற்கு ஏற்ப குழல் போன்று 3 குதைகள்(loop) இருக்கும். அவற்றின் கீழ்ப்பகுதி அடைக்கப்பட்டிருக்கும். தோளில் தோள் மணைக்கான(shoulder board) துண்டங்கள் இருக்கும். தோள் தொடங்கும் இடத்திற்கு அருகில் தோள் மணை துணிக்கு குறுக்காக ஒரு துண்டமானது (small piece of cloth) தோள் மணையோடு பொம்மிக்கொண்டு நிற்பதாக தைக்கப்பட்டிருக்கும்.(தெளிவிற்கு கீழே உள்ள பிரசாந்தன் அண்ணாவின் படத்தை காண்க) இது பெரும்பாலானோரின் வரிப்புலியில் இருந்தது. ஆனால் வரிச்சீருடை அல்லாத ஏனைய சீருடைகளில் எப்பொழுதும் இருந்தது. அதுவும் 2002 ஆம் ஆண்டிற்குப் பின் எவருடைய சீருடையிலும் இல்லை. குப்பி & தகடு வெளியில் தெரியாது. மேற்சட்டையால் ஏற்படும் மறைப்பால் உள்ளிருக்கும். மேற்சட்டையின் முன்புறத்தில் படைத்துறைச் சீருடைக்கு இருக்கும் நான்கு பக்குகள்(pocket) இருக்கும். அதாவது மேலே வலம்-இடமாக இரண்டும் கீழே வலம்-இடமாக இரண்டும் இருக்கும். கையின் முடித்தலானது சாதாரண நீளக்கைச் சட்டைக்கு இருக்கும் முடிதல் போன்று இருக்கும். நீளக் காற்சட்டைக்கு, மேற்பக்கத்தின் இரு கால்களிற்கும் சாதாரண நீளக் காற்சட்டைக்கு இருப்பது போன்ற பக்குகளும் முழங்காலிற்கு சற்று மேலே படைத்துறை சீருடைக்கு இருப்பது போன்ற இரு பக்குகளும் இருக்கும். நீளக் காற்சட்டையின் பின்புறத்தின் இருகுண்டியிலும் இரு பக்குகள் இருந்தன. காலின் முடித்தலானது உலகளாவிய படைத்துறைக்கு இருப்பது போன்ற தெறி கொண்ட கொச்சுத்துண்டு வைத்து தைக்கப்பட்டிருக்கும். பெண்கள் சீருடையினை அணிந்து இடைவாரினை அணியும் போது மேற்சட்டையினை வெளியில் விட்டு அதன் மேற்றான் இடைவாரினை அணிவர். அந்த இடைவாரானாது பச்சை நிறத்திலோ அல்லது கறுப்பு நிறத்திலோ இருக்கும். ஆண்கள் சீருடையினை உள்ளுடுத்திய பின்னர் சாதாரணமாக இடைவார் அணிவது போன்று இடைவாரினை அணிவர். 'கடற்புலி வீரர் 2002 இற்கு முந்தைய சீருடையில் | படிமப்புரவு: fb & tharaakam' 'இடமிருந்து வலமாக : தரைத் தாக்குதலாளிகள்; கடற்கரும்புலிகள்; கடற்கலவர்கள் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு ' பயிற்சி சீருடை: ஆண்களும் பெண்களும் 'Navy நீல' நிறத்திலான ஒரு உடையினை [அரைக்கைச்சட்டை & காற்சட்டை(ஆண்களின் காற்சட்டை பெண்களை விட கட்டையானது)] அணிந்து பயிற்சி எடுத்தனர். 'பெண் கடற்புலிகள் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு ' 'பெண் கடற்புலிகள் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு' 1990–1992/3 வரையிலான கடற்கலவர் சீருடை: இதுதான் கடற்புலிகளின் முதலாவது சீருடை. இது ஒரு ஊத்தை நிறம் அல்லது ஒரு விதமான வெள்ளை நிறம் ஆகும். 'இதில் உள்ள வீரர்கள் அணிந்துள்ளதே முதலாவது சீருடை ஆகும்.' 1990-2001 காலப்பகுதியில் இவர்கள் வெள்ளை நிறச் சீருடை அணிந்தனரா என்பது பற்றிய தகவல் இல்லை! 1992/1993 - 1995 வரையிலான கடற்கலவர் சீருடை: இச்சீருடையானது சிறீலங்கா கடற்படையின் சீருடை ஆகும். ஆனால் அதை புலிகளும் அணிந்திருந்தனர். அவரகள் அதை வீரவணக்க ஊர்வல அணிவகுப்பிலும் அணிந்திருந்தனர். ஆகையால் இதனது சரியான பயன்பாடு அறியில்லாததாக உள்ளது. ஆண்களும் பெண்களும் ஒரே நிறத்திலும் தோரணியிலுமான சீருடை அணிந்திருந்தனர். இவர்களின் தொப்பியும் சீருடையின் அதே உருமறைப்பைக் கொண்டதாக இருந்தது. 'கடற்புலி போராளி ஒருவர் இச்சீருடையில் உள்ளதை நோக்குக' 'கடற்கரும்புலி மாவீரர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் இச்சீருடையினை அணிந்து பங்கேற்றுள்ள பெண் கடற்புலிப் போராளிகளை நோக்குக.' இதே காலகட்டத்தில் தமிழீழத் தேசியத் தலைவரின் கடற்பயணங்களின் போது அவருடைய மெய்க்காவலர்கள் ஒரு வேறுபாடான கடற்சீருடை ஒன்றினை அணிந்திருந்திருந்தனர். இனி அச்சீருடை பற்றிப் பார்ப்போம். இச்சீருடை ஆனது உருமறைப்புடைய காற்சட்டை மற்றும் வேலைப்பாடில்லா ரி-சட்டை ஆகியவற்றால் ஆனது ஆகும். இச்சீருடையின் ரி-சட்டை ஆனது அரைக்கையுடையதான சாதராண நீல நிறத்தில் உள்ளது. இதன் கைகளில் புயத்திற்கு ஏற்ப கைமடிப்பு இருக்கும் திறவல் உள்ள இடத்தில் சுருக்கம் உள்ளது. காற்சட்டையானது மிகவும் கட்டையானதாகவும் இதன் உருமறைப்பானது இக்காலகட்டத்தில் புலிவீரர்களின் செந்தரமான கடற்படைச் சீருடையின் உருமறைப்பைக் கொண்டதானதாகவும் உள்ளது. 'இதில் நிற்கும் புலி வீரர்கள் அணிந்துள்ள சீருடையே நான் மேற்குறிப்பிட்டுள்ள சீருடை ஆகும். | இது 1993 தவளைப் பாச்சல் நடவடிக்கையின் போது புலிகளால் கைப்பற்றப்பட்டு பின்னாளில் 'பாமா' எனக் கலப்பெயர் சூட்டப்பட்ட வோட்டர் ஜெட் ஆகும். இதில் கவசக் கஞ்சுகம் அணிந்து கொண்டு நிற்கும் 'ஜக்கெற் மெய்க்காவலர்' இன் இயற்பெயர் மோகன் என்பதாகும். இவர் 10.06.2021 அன்று தமிழ்நாட்டில் சுகயீனம் காரணமாகச் சாவடைந்தார்.' 'இதில் அம்புக்குறியிட்டுள்ள அனைத்து புலி வீரர்களும் அணிந்துள்ள சீருடையே நான் மேற்குறிப்பிட்டுள்ள சீருடை ஆகும். | இது 1993 தவளைப் பாச்சல் நடவடிக்கையின் போது புலிகளால் கைப்பற்றப்பட்டு பின்னாளில் 'பாமா' எனக் கலப்பெயர் சூட்டப்பட்ட வோட்டர் ஜெட் ஆகும்.' 1995 - 2002 வரையிலான நீல வரிப்புலி பற்றி:- (நிறங் கண்டுபிடிக்கும் செயலியை வைத்தே இவற்றை கண்டுபிடித்தேன். மேலும் செம்மைப் படுத்தல் வேண்டும்) வரியில் இருந்த நிறங்களாவன: RGB - (182,185,216) - வெளுறிய பின்புல நிறம் RGB - (67,89,136) - Yale blue ஆகத் தெரிவது RGB - (77,78,124) - Navy blue ஆகத் தெரிவது இதில் இருந்த வரிக்கோடுகள் எல்லாம் தடித்த கோடுகளாகும்! 1992/93 - 2002 வரையிலான கடற்கலவர் சீருடை:- மேலே நான் குறிப்பிட்டுள்ள கடற்சீருடையினைக் காட்டிலும் தமக்கே உரித்தான உருமறைப்பான வரிப்புலியில் நீல நிறம் கொண்டதான 'நீல வரிப்புலியையும்' இதே 1992/1993 - 1995 காலத்திலும் அதன் பின்னரும் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீல நிற வரிப்புலியில் கழுத்தைச் சுற்றி தோள் மேல் இருக்கும் படையாக கடற்படையின் கடற்கலவர் அணியும் ஒரு நீல நிற வட்ட வடிவ துணியினை அணிந்திருந்தனர். இது சாம கடற்படை(Midnight navy) நீல நிறத்தில் உள்ளது. அது தலையினை உள்ளுடுத்துவதன் மூலம் தோள் மேல் அணியப்படும். இதை அணிந்த பின் நோக்கும் போது பின்பக்கமும் முன்பக்கமுமாக அரைநிலவு வடிவில் இருக்கும். அதில் முன்பக்கம் கொஞ்சமாகவும் பின்பக்கம் அதிகமாகவும்(முதுகு வரை நீள்கிறது) அந்த அரைநிலவு வடிவம் இருக்கும்.இதன் ஓரங்களில் இரு வெள்ளை நிறக் கோடுகள் உள்ளன. அவை குறிக்கும் பொருளினை அறியமுடியவில்லை. இவர்கள் இடுப்பில் அணிந்திருந்த இடைவாரானது அதே நீல வரிப்புலி உருமறைப்போடு இருந்தது. ' படிமப்புரவு: திரைப்பிடிப்பு' 1992/1993- 2002 வரையிலான கடற் கட்டளையாளர் சீருடை :- இவர்களின் சீருடையும் நீலநிற வரிதான். ஆனால் இவர்கள் கடற்கலவர் அணிவது போன்ற அந்த வட்ட வடிவ துணியினை அணியார். அத்தோடு வரைகவிக்குப் பகரமாக தொப்பியே அணிவர். 'கடற்புலிகளின் கேணல் சூசை | | படிமப்புரவு: Tharakam' 2002 இல் கடற்கலவர் சீருடை இச்சீருடையில் இள நீல நிறம் அதிகமாக இருந்ததால்(வானினை குறிப்பதால்), இதில் இருந்த கடுநீல நிறம் போன்ற நீல நிறமானது நீக்கப்பட்டு மேலும் சில மாற்றல்களோடு பின்னாளில் எழுந்த வான்புலிகளின் சீருடையாக்கப்பட்டது. 'கடற்புலிகளிர் கேணல் சூசை | படிமப்புரவு: Aruchuna.com' 2003 இல் தரைப்பணிச் சீருடை வரியில் இருந்த நிறங்களாவன: (நிறங் கண்டுபிடிக்கும் செயலியை வைத்தே இவற்றை கண்டுபிடித்தேன். யாராவது மேலும் செம்மைப் படுத்தல் வேண்டும்) RGB - (105,146,174) - பின்புல இளநீலம் RGB- (68,82,108) - சாதாரண நீலமாகத் தெரிவது RGB - (48,97,155) - கடுநீலமாகத் தெரிவது இதில் இருந்த வரிக்கோடுகள் எல்லாம் மெல்லிய கோடுகளாகும். அதே நேரம் பின்புல நிறமான இளநீலம் போன்ற நிறமே வெகு அதிகமாக இருந்தது. இது மிகக் குறுகிய காலம் பயன்படுத்தபட்டு அதன் பிறகு மாற்றப்பட்டு விட்டது '25–11–2003 அன்று பாரச்சவம்(heavy weapons) கொண்டு அணிநடையில் ஈடுபடும் கடற்புலிகள் | படிமப்புரவு: Aruchuna.com' 2004 - 2009(18–05–2009) வரையிலான தரைப்பணிச் சீருடை வரியில் இருந்த நிறங்களாவன: (நிறங் கண்டுபிடிக்கும் செயலியை வைத்தே இவற்றை கண்டுபிடித்தேன். யாராவது மேலும் செம்மைப் படுத்தல் வேண்டும்) RGB - (105,146,174) - பின்புல இளநீலம் RGB- (68,82,108) - சாதாரண நீலமாகத் தெரிவது RGB - (48,97,155) - கடுநீலமாகத் தெரிவது இதில் இருந்த வரிக்கோடுகள் எல்லாம் தடித்த கோடுகளாகும்! 'கடற்புலிகளின் கேணல் சூசையும் அவருடைய மெய்க்காவலர் ஒருவரும் தரைத் தாக்குதலாளி சீருடை அணிந்துள்ளதை நோக்குக | படிமப்புரவு: Aruchuna' 2001–2009(18–05–2009) வரையிலான கடற்கலவர் சீருடை:- இவர்கள் வெள்ளை நிற நீளக்காற்சட்டையும் வெள்ளை நிற மேற்சட்டையும் அணிந்திருந்தனர். மேற்சட்டையின் அடிப்பக்க விளிம்பு RGB (48;97;155) என்னும் கடுநீல நிற ஓரத்தைக் கொண்டிருந்தது. இடுப்பில் எல்லோரும் வெள்ளை நிற இடைவாரினை அணிந்திருந்தனர். ஆண்கள் மேற்சட்டையினை உள்விடாமல் வெளியில் விட்டிருந்தனர், பெண்களைப் போல. கடற்கலவரின் மேற்சட்டைக்கு கழுத்துப்பட்டை(collar) உள்ளது கடற்கலவரின் அதிகாரிகள் வீரர்களிடம் இருந்து வேறுபட்டு சுண்டு(bill) கொண்ட கடற்கலவர் சதுரக்கவி(sailor square rig) அணிந்திருந்தனர். கடற்கலவர்கள் தோள் மேல் சுற்றி நிற்குமாறு Scarf போன்ற RGB (48;97;155) என்னும் நிறத்திலான பளபளக்கக்கூடிய ஒரு துணியினை அணிந்திருந்தனர். அதன் ஓரத்தில் வெள்ளை நிறத்திலான மூன்று கோடுகள் இருந்தன. இந்த துணியானது முன்பக்கம் முக்கோண வடிவிலும் பின்பக்கம் சதுர வடிவிலுமாக உடல் மேல் நின்றது, அணிந்த பின். இதன் முன்பக்க முக்கோணம் சமச்சீராக வெட்டப்பட்டு அதில் திறத்தல் இருக்கிறது. மேலும கழுத்தைச் சுற்றிவர இருந்த திறத்தல்(opening) வட்ட வடிவுடையதாக இருந்தது. ''படைத்தகையில்(parade) ஈடுபடும் கடற்கலவர் | படிமப்புரவு: Aruchuna.com'' 'படை மரியாதையை ஏற்கும் தலைவர் 2002 | படிமப்புரவு: Aruchuna.com' ஆனால் கடற்புலிகள் கடற்சமரின் போது கடற்கலவர் சீருடையினையோ இல்லை கடற்படை அலுவலர் சீருடையினையோ அணியார். மாறாக குடிமை(civil) உடையினை அணிந்து கடற்சமராடுவர். வேலைச் சீருடை: வழங்கலின் போது அழுக்குகளோ இல்லை பிசுக்குகளோ சீருடையில் பிரண்டிடாமல் இருக்க கடற்புலிகள் இச்சீருடையினை அணிவர் '18|8|2002 தெந்தமிழீழத்திற்கான வழங்கல் ஒன்றின் போது ஆண்கலவர் இச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக. | படிமப்புரவு: Tamilnet.com' தேவை ஏற்படும் போது நல்ல சண்டையாளர்களாகவும் மாறினர்! 'கடற்புலி போராளி' இதில் இருவேறு நிறங்கள் இருந்தன. சமாதான ஒப்பந்த காலத்தின் தொடக்கத்தில் அணியபட்டது நல்ல நீல நிறத்திலும் (2002) அதன் பின்னரான காலத்தில்(2003<) அணியப்பட்டது கடுநீல நிறதிலும் இருந்துள்ளது. இதில் இந்த கடுநீல நிறம் போன்ற சீருடை அணிந்துள்ள பெண்களை நோக்குக. இவர்கள் வழங்கல் அணியினர். இவர்களின் காற்சட்டையும் மேற்சட்டையும் தொடுக்கப்பட்டுள்ளது. மேற்சட்டை Hoodie ஆக உள்ளது. '2003| இந்துமதி என்னும் கலப்பெயர் படகை கடலினுள் தள்ளும் கடற்புலிகள் | படிமப்புரவு: Aruchuna.com' படகு கட்டுமானம்: மங்கை & டேவிட் இப்பிரிவைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் கீழ்க்கண்ட நிறத்திலான சீருடை அணிந்திருந்தனர். இச்சீருஅடை பழுப்பு நிறத்தில் இருந்தது; தலையில் அதே நிறத்திலான சுற்றுக்காவல் கவியும் அணிந்திருந்தனர். இவர்களின் சீருடையின் மேலாடையும் கீழாடையும் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இவர்களில் பெண்புலிகளின் தலைமயிர்ப் பாணி கொஞ்சம் வேறுபாடானது, ஏனைய படையணி/படை/பிரிவு-களிலிருந்து. ஏனெனில், இவர்கள் பிறரைப் போலல்லாமல் தங்கள் தலைமயிரினை பின்னால் எடுத்து கொண்டை போட்டிருந்தனர். ----------------------------------------- ----------------------------------------- கூடுதல் செய்திகள்: வான்புலிகளின் சீருடை & வானுர்திகள் - ஆவணம்: ----------------------------------------- ----------------------------------------- உசாத்துணை: செ.சொ.பே.மு. கிடைத்த படங்களை வைத்து அவற்றின் காலத்தைக் கணித்து எழுதினேன் ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  8. பார்வை ஒன்றே போதுமே........ (5 ). அவரது மனம் அவரை இடித்துரைத்தது. "நீயோ வேலை வேலை என்று அலைகிறாய் என்றாவது ஒருநாள் என்றாவது ஒருநாள் அவளைப்பற்றி யோசித்திருக்கிறாயா. பணமும் வசதிகளும்தான் வாழ்க்கையா. அவளும் உணர்ச்சிகளோடு ஊசலாடும் பெண்தானே. எவ்வளவு காலத்துக்குத்தான் வெறும் சுவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது". ஏன் நான் இவர்களுக்காகத்தானே ஓடி ஓடி உழைக்கிறேன். சிறுவயதில் இருந்து நான் பட்ட துன்பங்கள் இவர்களுக்கு வேண்டாம் என்றுதானே நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறேன். எவ்வளவு கஷ்டப்பட்டு இப்படி ஒரு வணிக வளாகத்தை உருவாக்கி இருக்கிறன். இதன் கிளைகள் பிறநாடுகளிலும் விரிய விரிய எனக்கும் பொறுப்புகள் அதிகரித்துக்கொண்டே போகின்றது தெரியுமா. கொஞ்சம் அசந்தாலும் அத்தனை உழைப்பும் வீணாகி விடுமே. நான் கொஞ்சம் மது அருந்துவதுண்டுதான் ஆனால் இதுவரை உன்னைத் தவிர இன்னொரு பெண்ணை நினைத்தும் பார்த்ததில்லையே. என் தாயின் இடத்தில் அல்லவா உன்னை வைத்திருந்தேன். அதுக்காக இன்றைய பசிக்கு இன்று சாப்பிடாமல், இன்று வாழாமல் இருக்கலாமா. மனசாட்சி கேட்டது. எல்லாம் ஒரு சில நிமிடங்கள்தான். எடுத்த துப்பாக்கியை கீழே வீசி எறிந்துவிட்டு சற்று நேரம் பால்கனியில் நின்று வானத்தைப் பார்த்தார். நல்ல நிலவு எறித்துக் கொண்டிருந்தது. அப்படியே கிளம்பி கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். வழியில் ஒரு லொறியில் ஏறி எங்கேயோ காடாய் தெரிந்த இடத்தில் இறங்கி மீண்டும் நடந்தார் நாள் வாரம் பார்க்காமல். அப்போது உள்ளிருந்து மகேஸ்வரி குரல் குடுக்கிறாள் சித்ரா ஐயாவை சாப்பிட வரச்சொல்லு என்று. அந்த அழைப்பில் தன்னுணர்வு பெற்றவர் பழைய நினைவுகளை உதறிவிட்டு எழுந்துவந்து சாப்பிட அமர்ந்தார்.எல்லோரும் அன்றைய சம்பவங்களை கதைத்துக் கொண்டே சாப்பிடுவது வழக்கம். அப்போது சாமிநாதன் முத்துவிடம் முத்து நான் ஒரு யோசனை சொல்கிறேன் கேட்பியா என்று சொல்ல உடனே மகேஸ்வரி குறுக்கிட்டு இதென்ன கேள்வி ஐயா ஏதோ கடவுள் அனுப்பியதுபோல நீங்கள் வந்த பின்தான் என்ர குடும்பம் தலையெடுத்திருக்கு. நாங்கள் பட்ட அவமானங்களில் இருந்து உங்களின் வழிகாட்டுதலும், உழைப்பும்தான் எங்களை மீட்டிருக்கு. நீங்கள் சொல்லுங்கோ அவன் செய்வான் என்கிறாள். முத்ததுவும் சொல்லுங்கய்யா செய்கிறேன். நீங்கள் நல்லதுதானே சொல்லுவீர்கள் என்றான். சாமிநாதனும் அவர்களிடம் உங்கள் நம்பிக்கைக்கு நன்றி. ஏன் மூத்து நீ மீண்டும் கல்லூரிக்கு சென்று படிக்கலாம்தானே.இன்னும் காலம் போய் விடவில்லையல்லவா என்று கேட்கிறார். கொம்மாவும் நீ வீட்டுக் கஷ்டத்தால கல்வியை தொடரவில்லையே என்று மிகவும் கவலைப் படுகிறா. அதுவும் சரிதானே. முத்துவும் என்னய்யா சொல்லுறீங்கள். அக்காவின் படிப்பு இன்னும் முடியவில்லை, இனிமேல்தான் நிறைய செலவுகள் இருக்கு. அது உங்களுக்கு தெரியும்தானே. அது எனக்குத் தெரியும் முத்து அதை சமாளிக்கலாம். உனக்குரிய கல்லூரி பக்கத்து நகரத்தில் இருப்பதால் நீ கல்லூரி விட்டதும் மாலையில் கொஞ்சம் வேலையும் செய்ய முடியும் இல்லையா. முத்துவும் அது முடியாது ஐயா சரியான கஷ்டம் என்கிறான். சித்ரா குறுக்கிட்டு ஏன் முடியாது தம்பி.நான் பல்கலைக்கழகம் சென்றாலும் சும்மா இருக்கப் போவதில்லை. கீழ்வகுப்பு பிள்ளைகளுக்கு டியூசன் எடுக்கப் போகிறேன். அது எனக்கும் படிச்சதை விடாமல் தொடர்வதற்கு உதவியாயும் இருக்கும். என்ன ஒரு சிறிய கணனி அல்லது கைபேசி இருந்தால் கூட நல்லதுதான். அறையில் இருந்தபடி ஆன்லைனில் வகுப்புகள் செய்ய முடியும். இப்ப அவ்வளவு வசதிகள் வந்து விட்டதுதானே. என்னுடைய சிலபல செலவுகளுக்கு அந்தப்பணம் உதவியாய் இருக்கும். ஐயா சொல்வதுபோல் நீ தயங்காமல் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம். ஏன் அக்கா உனக்கு வேணுமெண்டால் நீ என்னுடைய போனை பாவிக்கலாம். நான் இப்பொழுது சமாளிக்கிறன் பிறகு ஒன்டு வாங்கலாம். வேண்டாமடா தம்பி. அங்க இங்க ஓடியாடி வேலை செய்யும் உனக்கு அவசியம் போன் வேணும். அதுவும் நீ யாரோ வெளிவாட்டில் இருந்து வந்தவர்களிடம் செகன்ட் ஹான்டாக வாங்கிய பழைய நோக்கியா போன் அது. அதை வைத்து பாடம் சொல்லிகுடுக்க முடியாது, ஒன்டு செய்யலாம் சண்டைக்கு வாறவங்களின் மண்டையை உடைக்கலாம். இவர்கள் கிண்டலும் கேலியுமாக கதைக்க சாமிநாதன் மனம் விட்டு சிரிக்கிறார்.இப்படி சிரித்து எவ்வளவு காலமாகி விட்டது. தானும் ரேகாவும் தங்களது பிள்ளைகள் ரவிதாசோடும் நிமலாவோடும் எப்போதாவது சேர்ந்திருக்க நேரும் சமயங்களில் இப்படி மகிழ்ச்சியாய் இருப்பதுண்டு. அதெல்லாம் கனவாகிப் போச்சு.........! பார்ப்போம் இனி ........! ✍️
  9. குச்சியின் நுனியில் சுவிங்கத்தை தடவி காசு எடுக்கும் முறை உங்களுக்கு தெரியுமா .. ரெல் மீ..
  10. மனத்தோட்டம் போதுமென்று......! 😍
  11. பார்வை ஒன்றே போதுமே........(2). ஆங்காங்கே வயல் வெள்ளத்துக்குள் வந்திருந்த சின்ன மீன்களை கொக்கு, நாரை போன்ற சில பறவைகள் கொத்திக்கொண்டு பறப்பதும் ஒன்றோடொன்று சண்டை பிடிப்பதும் பார்க்க ரம்மியமாக இருக்கின்றது. இவ்வளவு பிரச்சினைக்குள்ளும் எவ்வளவு காலமாச்சுது இப்படியெல்லாம் ரசிச்சு என மனம் எண்ணிக் கொண்டது. தூரத்தில் ஒரு மேட்டில் ஒராள் நிற்பதைக் கண்டு அங்கு செல்கிறார். அது ஒரு நடுத்தர வயதுடைய பெண் என்று தெரிகின்றது. அந்தப் பெண்ணும் இவரைக் கண்டு விடுகிறாள். இவரது கோலத்தைப் பார்த்ததும் அங்கிருந்து செல்வதற்கு எத்தனிக்கிறாள். உடனே சாமிநாதனும் ஆம் அதுதான் அவரது பெயர் தன்னை சுதாகரித்துக் கொண்டு அவளைப் பார்த்து அம்மா போகாதேங்கோ , கொஞ்சம் நில்லுங்கோ என்றதும் அவள் சற்று நின்று, ம்....என்ன என்பதுபோல் பார்க்கிறாள். அப்பொழுது ஒரு குமர்ப் பிள்ளையொன்று வயலுக்குள் இருந்து ஆளளவு உயர்ந்திருந்த நெற்கதிர்களை விலத்திக் கொண்டு யாரம்மா இவர் என்னவாம் என்று கேட்டவாறே வரப்பில் ஏறி வருகின்றாள். அவள், கையில் ஈர்க்கில் கோர்த்தபடி அஞ்சாறு மீன்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன. தெரியவில்லையம்மா, அதுதான் விசாரித்து கொண்டிருக்கிறேன் என்கிறாள். சாமிநாதனும் பயப்பிடாதையுங்கோ, கணக்க யோசிக்க வேண்டாம். நான் பக்கத்து ஊர்தான், அதோ அந்தக் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது யாரோ என்னுடைய உடுப்புகளை எடுத்துக் கொண்டு போட்டினம். சுருக்கமாக தன் கதையை சொல்லிவிட்டு எனக்கு ஒரு உதவி செய்வீங்களோ, நான் கட்டுறதுக்கு ஏதாவது ஒரு துண்டு தரமுடியுமோ என்று கேட்கிறார். ஆனாலும் அவர்களுக்கும் கொஞ்சம் யோசனையாய்த் தானிருக்கு. அவரின் நிலையைப் பார்க்க பாவமாயும் இருக்கு. அப்போது அந்தப் பிள்ளை சித்ராவும் சிறிதும் யோசிக்காமல் இந்தாங்கோ ஐயா இப்ப இந்தத் துண்டைக் கட்டுங்கோ என்று தனது தாவணியை எடுத்துக் குடுத்துவிட்டு, அதோ அங்குதான் எங்கள் வீடு இருக்கிறது அங்கே அப்பாவின் சாரம் இருக்கு வாங்கோ எடுத்துத் தாறன் என்கிறாள். அவரும் அதை வாங்கிக் கொண்டு தனது கழுத்தில் கிடந்த சங்கிலியை எடுத்து அவளிடம் குடுக்க அந்தச் சுட்டிப்பெண்ணும் என்ன ஐயா ஒரு தாவணிக்கு சங்கிலி தாறீங்கள் இது ரோல்ட்கோல்டோ என்று பகிடி விட உடனே தாய் மகேஸ்வரி சும்மா இருடி உனக்கு வாய் ரெம்ப நீளம் என்று அவளை அதட்டி விட்டு பரவாயில்லை, அது உங்களிடமே இருக்கட்டும் என்கிறாள். இப்பொழுது அவரைப்பற்றிய எண்ணம் மாறி நல்ல எண்ணமாக வருகிறது. பின் அவரைப் பார்த்து உங்களை பார்த்தால் பசியோடு இருப்பதுபோல் தெரிகிறது, வீட்டுக்கு வாங்கோ சாப்பிட்டுட்டு போகலாம் என்று சொல்ல மூவரும் கதைத்து கொண்டே வீட்டுக்கு செல்கின்றனர். அவர்களின் பேச்சில் இருந்து மகேஸ்வரியின் கணவன் மாணிக்கம் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. அங்குள்ள சிறிய நகரத்தின் கடை வீதியில் பாதையோரத்தில் சின்ன இடத்தில் இருந்து தொழில் செய்து வந்திருக்கிறார். அவர்களுக்கு முத்து, சித்ரா என்று இரண்டு பிள்ளைகள். உழைப்பதில் தான் குடிப்பதுபோக கொஞ்சம் வீட்டுக்கும் கொடுப்பார்.ஊரில் நிறையக் கடன் வாங்கி வைத்திருந்தார். கடன் குடுத்தவர்கள் மாணிக்கத்தைக் கண்டால் வேறு பக்கமாக ஓடிவிடுவார்கள்....இவர் ஒன்றும் சண்டியனில்லை எங்கே மீண்டும் கடன் கேட்டு விடுவார் என்று.... கொசுவுக்கு பயந்து நாங்கள் வலைக்குள் படுப்பதுபோல்தான் இதுவும். கடந்த வருடம் இவரது நண்பரும் இன்னொருவரும் தவறணையில் சண்டை பிடித்த பொழுது மாணிக்கம் இடையிலே புகுந்து விலக்குப் பிடிக்கப் போய் எதிர்பாராமல் வயித்தில கத்தியால் குத்து வாங்கி இறந்து விட்டார். மாணிக்கத்துக்குப் பயந்து ஓடி ஒழிச்ச கடங்காரர் எல்லாம் இப்ப குளிர் விட்டுப்போய் வீட்டுக்கு வந்து கண்டபடி பேசி சண்டை பிடித்து விட்டு போவார்கள்.......! பார்ப்போம் இனி......! ✍️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.