Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87997
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    33600
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46808
    Posts
  4. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    1836
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/11/22 in all areas

  1. கொரோனா வந்து உயிரை வாங்குது.. ஒருக்கால் ஊர் போய் உறவுகளைப் பார்த்திட்டு வருவம்.. என்று வெளிக்கிட்டால்.. ரிக்கெட் போட.. ஒரு மாதம்.. ஒவ்வொரு நாளும்.. kayak க்கோடு கட்டிக்கிடந்தாலும்.. விலை ஏறுவதும் இறங்குவதும்.. கோவிட் கேஸுக்கு ஏற்றமாதிரி இருக்க.. வந்த கடுப்பில்.. இண்டைக்கு புக் பண்ணியே தீருவது என்று முடிவுகட்டி.. 575 பவுனுக்கு ரிக்கெட் போட்டாலும்.. காசு கட்டும் போது விசா கிரடிட் காட்டால பணம் செலுத்தினால் பாதுகாப்புன்னு சொல்லக் கேட்டு அதை பயன்படுத்தினால்.. அவனோ.. விசா டெபிட் காட்டுக்குரிய 25 பவுன் கழிவை கட் பண்ணிட்டு..25 பவுனைக் கூட்டி எடுத்திட்டான். முதற்கோணல் முற்றிலும் கோணல்.. என்ற எங்கட ஆக்களின் பழமொழி ஞாபகத்திற்கு வந்து தொலைச்சாலும்.. அதெல்லாம்.. தாழ்புச் சிக்கலின் வெளிப்பாடுன்னு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு... அடுத்து என்ன.. இலங்கை விசாவுக்கு அப்பிளை பண்ணப் போனால்.. அங்கு ஒரு ஆறுதல்.. இப்பவும் அப்ப போலவே 32 பவுன் தான் (ஆனால் டொலரிலதான் செலுத்தனும்..) ஒரு மாத கால விசாவுக்கு வாங்கிறாங்கள் என்று. சரி விசாவுக்கு அப்பிளை பண்ணி அது ஒரு இரண்டு மணித்தியாலத்துக்குள்ள வந்து சேர.. கோவிட் கோதாரி என்னென்ன கென்டிசன் போட்டிருக்கு என்று பாப்பமுன்னு.. கூகிளாரைக் கேட்க.. அவர் இங்க கூட்டிணைத்துவிட்டார்.. https://www.gov.uk/foreign-travel-advice/sri-lanka/entry-requirements இங்க போய் வாசிச்சு தலைசுத்தி ஏதோ ஒருமாதிரி ஒரு லிங் கிடைக்க http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=151&Itemid=196&lang=en அதைத் தட்டி அங்க போனால்.. அவன் கோதாரிப்படுவான்.. கொவிட் இன்ஸ்சூரனும் எடுக்கனும் என்று போட்டிட்டான். சரின்னு அதுக்கும் ஒரு 1500 ரூபாவுக்கு ஏற்ற அளவில பவுன்ஸை கொட்டி அதையும் ஆன்லைனில எடுத்திட்டு.. கொவிட் வக்சீன் சேர்டிபிக்கட்டும் இருக்குத்தானே எனிக் கிளம்புறது தான் பாக்கின்னு நினைக்க.. அங்கால தட்டினால்.. அங்கால எயார்லைன்ஸ் காரன் ஒரு ஈமெயில் போட்டிருக்கான். அதில இன்னொரு லிஸ்ட். அதில இருந்த லிங்கை தட்டினால்.. கொவிட் சேர்டிபிக்கட் மட்டும் போதாது.. பயணத்துக்கு முன்.. 72 தொடக்கம் 48 மணித்தியாலத்துக்குள் எடுத்த கொவிட் பி சி ஆர் நெகட்டிவ் சேட்டிபிக்கட் தேவைன்னு போட்டுருந்தான். இதென்னடா கோதாரின்னிட்டு.. சரி.. வேலை செய்யுற ஆஸ்பத்திரில ஒரு ரெஸ்டை செய்து அதோட போவம் என்றால்.. நோ நோ.. பி சி ஆர் ரெஸ்ட்.. குறிப்பிட்ட தனியார் கம்பனில தான் செய்யனுன்னும் அதுக்கும் ஒரு லிஸ்ட்.. அதுக்கும் லிங்குகள். எப்படி எல்லாம் பணம் பண்ணுறாங்கள்.. ரிக்கெட்டை வேற போட்டுத் தொலைச்சாச்சு.. அதுவும் சீப்பான ரிக்கெட் என்று றிபன்ட் எடுக்க முடியாத சீப்புக்கு போட்டதால.. வேற வழியின்றி.. சீப்பான பி சி ஆருக்கு தேடினால்.. கோம் கோவிட் கிட் மட்டும் தான் சீப்பென்னு வந்திச்சு. சரின்னு அதை புக் பண்ணினால்.. கோவிட் கிட் வீட்டுக்கு வராது போய் எடுக்கனுன்னு வந்திச்சு. அட கோதாரிப் படுவாரே இதை முதலிலேயே சொல்லி தொலைக்க வேண்டியது தானேன்னு திட்டிட்டு.. சொன்ன இடத்த எடுக்கப் போனால்.. அவன் கடையைச் சாத்திட்டான். பிறகு அடுத்த நாள் வேலைக்குப் போற நேரமா அவசர அவசரமாக் கிளம்பி அங்க போனால்.. கடைக்காரன் ஈயோட்டிக்கிட்டு நிக்கிறான். சரி அது அவன் பிழைப்புன்னு நினைச்சுக் கிட்டு.. நம்ம கொவிட் கிட் பெட்டியை.. பொறுக்கிக்கிட்டு.. போயிட்டன். அடுத்த நாள் அந்த ரெஸ்டை வீட்டில வைச்சு எடுத்திட்டு.. இதை இப்ப எங்க கொண்டு போய் எப்ப போடுறதுன்னா.. தேடினா.. அதுக்கு இன்னொரு இடத்தைச் சொன்னாங்கள். இதென்னடா வடிவேல் காமடி மாதிரி.. இந்தச் சந்தில் இருந்து அந்தச் சந்துக்கு வரச் சொல்லுறான்டான்னு.. நினைச்சுக்கிட்டு அங்க போய் அதை தொபட்டீர் என்று பெட்டியில் போட்டதில்.. சரி சாம்பில் விழுந்த விழுகைக்கு சுக்கு நூறாகி இருக்கும்.. கொடுத்த பவுன்சும் தூள் துளாயிட்டென்னு.. நினைச்சிட்டு நேரம் போக.. கடைசியில ஒரு மெயில் வந்திச்சு.. சாம்பிள் கிடைச்சிட்டுது.. லாப்புக்கு அனுப்பியாச்சுன்னு. அப்ப தான் சுக்குநூறான சிக்கலில் இருந்து வெளிப்பட்டு மனசு.. இன்னொரு சிக்கலுக்க மாட்டிவிட்டுது. எல்லாம் சரி.. தம்பி.. இப்ப உனக்கு றிசல்ட் பொசிட்டுவ் வுன்ன.. வந்துன்னு வைச்சுக்க.. இவ்வளவு காசும் அம்போ. அது தெரியுமோன்னு சொல்லிச்சு. அப்ப தான் மறுபுத்திக்கு உறைக்க வெளிக்கிட்டிச்சு. சரி.. எதுவா கிடந்தாலும் போறது போகத்தானே செய்யுமென்னு.. அப்படிப் போனாலும்.. ஓவர் டைம் செய்து விட்டதைப் பிடிக்கலாமென்னு.. இன்னொரு மனசு.. அந்த சலன மனசை வலிஞ்சு சமாதானப்படுத்த.. நள்ளிரவுக்கு முன்.. மீண்டும்... போன் மணி.. டிங் கன்னு ஒலிக்க.. ஈமெயிலை சொடிக்கினால்.. பி சி ஆர் றிசல்ட் பிடிஎவ்வில வந்திருந்திச்சு. அது நெகட்டிவ் தான். அது எனக்கு எப்பவோ தெரியுமுன்னு.. இப்ப அந்த சலன மனசு.. தனக்கு தானே மார்தட்டிக் கொண்டிச்சு. சரி எனிக் கிளம்புறது தானே பாக்கின்னுட்டு.. ஊருக்கு சும்மா போகேலுமோ.. அங்க பருப்புத் தொடங்கி மஞ்சள்.. வரைக்கும்.. தட்டுப்பாடு. கரண்ட் வேற கட் பண்ணுறாங்கள் என்று யாழில ஒட்டிற செய்திகளை விடாமல் வாசிச்ச அறிவு எச்சரிக்க... எனி ஊரில போய் சொந்தங்களை அதுவேணும்... இதுவேணுன்னா.. கேட்டா.. அதுங்க இருக்கிற கடுப்புக்கு.. செருப்பால அடிக்குங்கள்.. என்றிட்டு.. பல சரக்குகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டு.. வெயிட்டைப் பார்த்தால்.. 5 கிலோ எல்லை தாண்டிட்டு. சரி இதில எதை எடுத்து வெளில போடுறது.. ஒன்னையும் போடேலாது.. கொண்டு போ.. எயார் போட்டில பார்க்கலாம் என்று ஏதோ ஒரு மனசு தைரியம் கொடுக்க பெட்டியைக் கட்டி ரெடி பண்ணிட்டு இருக்க.. இன்னொரு டிங் மணி கேட்டிச்சு. ஈமெயிலை துறந்து பார்த்தால்.. செக் லிஸ்ட் எல்லாம் சரியோன்னு பாருன்னு எயார்லைன்ஸ் காரன் லிஸ்ட் அனுப்பி இருந்தான். எல்லாம் இருக்கு.. ஆனால் லொக்கேட்டர் போம் இல்லை.. சரின்னு அதை நிரப்புவம் என்று இலங்கை குடிவரவு குடியகழ்வு இணையத்துக்கு போனால்.. அவங்கள் இன்னொரு சந்துக்கு போன்னு இணைப்பைக் கொடுத்தாங்கள். அங்க போனால்... அது பாஸ்போட்டை படம் எடு.. உன் மூஞ்சியை படமெடுன்னு ஆயிரத்தெட்டு ஆலாபரணம். சரின்னு அதெல்லாம் செய்திட்டு.. சில்லெடுப்பில இருந்து வெளில வருவமென்றால்.. கியு ஆர் கேட் வரமாட்டேன்னு நின்னுட்டுது. ஏதோ பிழைச்சுப் போச்சு... அல்லது நம்மட பெயரும் தடை லிஸ்டில இருக்கோன்னு.. கோதாரி உந்த யாழில எழுதப் போய்.. நம்மளையும் தடை பண்ணிட்டாய்களோன்னு.. திட்டித் தீர்த்துக் கொண்டிருக்க.. கியுஆர் கோட்டுக்கு இந்த இந்த புரவுசரில் போனால் தான் அது சரிவருன்னு சொல்லி இருக்க.. அதைக் கண்ட பின் தான்.. யாழை திட்டினதை வாபஸ் வாங்கினது. சரின்னு லாப்டாப்பை விட்டிட்டு.. போனுக்கால போய் மீண்டும் முயற்சி செய்ய கியூஆர் கோட் வந்திச்சு. இப்ப பார்த்தால்.. நமக்கு தலை சுத்திச்சுது. எத்தினை டாக்கிமென்ட் மொத்தமா வேணும். ஒன்றை கூட்டினால்.. மற்றது விடுபடுகுது. சரின்னு எல்லாத்தையும் போனில ஒரு போல்டருக்குள்ள போட்டு அமுக்கிட்டு.. கிளம்ப.. மனசு சொல்லிச்சு.. போன் சார்ச் இறங்கினால்.. மவனே என்ன செய்வாய்..??! வாய் தான் பார்க்க முடியுமுன்னு நினைச்சிட்டு.. உடன எல்லாத்தையும் பிரின்ட் பண்ணி வைச்சும் கொண்டன். இப்படியா... சில்லெடுப்புக்கள் பலதோடு நாள் கழிய.. போற நாளும் வந்திச்சு. வழமையா எயார் போட்டில ராப் பண்ணி தெரிஞ்ச ஒருத்தரை எயார் போட்டில ராப் பண்ணி விடக் கேட்டால்.. அந்தாள் சொல்லிச்சு.. தம்பி உந்த பழைய விலைக்கு எல்லாம் எனி வர முடியாது. இப்ப கொவிட்டோட.. தரிப்பிடக் காசு மட்டுமல்ல.. ஒரு ரோட்டுக்க நுழையவும் காசு வாங்கிறாங்கள்.. புது விலைக்கு ஓமுன்னா வாறனுன்னு. ஏதோ வந்து தொலையப்பான்னு சொல்லி புக் பண்ண.. அந்தாளும் வர.. கட்டின பெட்டிகளையும் ஏத்திக் கிட்டு எயார்போட்டில போய் இறங்கினால்.. அங்க சனம் குறைவில்லாமல் திரியுது. அதில சிலது மாஸ்கை மூக்குக்கு கீழ விட்டிட்டு திரியுது. சிலது மாஸ்கே இல்லாமலும் திரியுது. பார்த்தால் எயார்போட் செக்குரிட்டியே அப்படித்தான் திரியுறான். சரி நாம மனசுக்க வெந்து.. ஊர் திருந்தவா போகுது.. நாம நம்மளைப் பாதுகாத்துக்கிட்டு போவம்.. என்றிட்டு.. எயார்லைன் செக்கப்புக்கு போனால்.. அவன் சொன்னான்.. எல்லாம் சரி.. உம்மட பெட்டியள் நிறை கூடிப் போய் கிடக்குன்னு. ஒரு பெட்டையை திறந்து மறு பெட்டிக்குள் திணிச்சிட்டு வாருமுன்னு. என்னடா கறுமம்.. எப்படி திணிச்சாலும்.. மொத்தம் அவ்வளவும் போகத்தானேடா வேணும்.. என்றிட்டு.. அவனின்ர மனத் திருப்திக்கு பெட்டியை திறந்து.. திணிக்க இப்ப இரண்டு பெட்டியும் மூட முடியாமல்... முக்க வைச்சிட்டுது. வெளிக்கிட்டு வந்த கோலமெல்லாம் அலங்கோலமாகி.. வியர்வை வழிஞ்சு கலைஞ்சோட.. மீண்டும் போய் அவனிட்ட நின்றால்.. இப்பவும்.. 5 கிலோ கூட. எப்படி வசதி.. காசு கட்டுறியா.. இல்லை குப்பையில போடுறியான்னு கேட்டான் பாவி. குப்பையில போடவா.. இவ்வளவு கஸ்டப்பட்டு தூக்கிட்டு வாறன்.. எவ்வளவோ போட்டு எடுத்துக் கோ.. ஓவர் டைம் செய்து சேத்துக்கிறன் என்று நானே எனக்கு தெம்பூட்டிக் கொண்டு.. காட்டை நீட்டினால்.. அவன் பாவி.. 200 பவுனுக்கு கிட்ட உருவிட்டான். ஊருக்கு சும்மா போய் வாறது இப்ப ஒரு சரித்திரமாப் போச்சு.. மிச்சம்.. தொடரும்..
  2. இடங்கள் மாறலாம் ஆனால் காட்சிகள் மாறவில்லை அன்றும் (ஏப்ரில் 2009) vs இன்றும் (ஏப்ரில் 2022)......!
  3. லைக் பண்ணிட்டேன் தோழர்..☺️
  4. ஆம்.. அந்தச் சந்தில் தான் கோவிட்-19 தாண்டி நாட்டுக்குள் செல்லவும் நடமாடவும் அனுமதிக்கும் பத்திரம் வழங்கப்படும். அதை வழங்க மூடிய கூட்டுக்குள் ஒருவர் எல்லா சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றிக் கொண்டு.. குந்தி இருந்தார். அவரிடம்.. நான் ஏற்கனவே பெற்றிருந்த லொக்கேட்டர் கியு ஆர் கோட் டை காட்டி.. அதன் பின் தரவுகள் சரிபார்க்கப்பட்டு.. ஒரு அனுமதித் துண்டு சுகாதார அமைச்சின் இலச்சனை பொறித்து தரப்பட்டிச்சு. அதுதான் கோவிட்டுக்குள் நாட்டுக்குள் சென்று வர அனுமதிக்கும் பத்திரம். அது இன்றேல்.. நாட்டுக்குள் நுழைய அனுமதியில்லை. ஒருவாறு உந்தச் செக்கிங் எல்லாம் முடிச்சு வெளில வந்தால்.. வழமையான நெருக்குவாரமோ.. தொந்தரவோ டியுடிபிறில இல்லை. வாங்க வந்து வாங்குங்க.. என்று ஆக்களுக்கு பின்னால் துரத்துவது முற்றாக இல்லாமல் போயிருப்பது கண்டு வியந்தேன். எல்லாரும் ஒழுங்காக மாஸ்க் அணிந்து அவரவர் வணிக நிலையங்களுக்கு முன் நிற்கிறார்கள் அவ்வளவும் தான். லண்டனில் கூட இந்த ஒழுங்கை காண முடியாது. சிலது மாஸ்க் போடும்.. ஆனால் மூக்கு கீழ். அப்படி எல்லாம்.. அங்கு இருக்கவில்லை. அப்படியே நடந்து.. லக்கேஷ் பொறுக்க வேண்டிய இடத்துக்கு வந்தால்.. போட்டர்கள் தொந்தரவு வெகுவாக குறைச்சிருந்திச்சு. ஆனாலும்..... போட்டர் ஒருத்தன் வந்து.. உதவி தேவையா என்று கேட்டதோடு.. பதிலை எதிர்பார்க்காமலேயே.... ரொலியை தள்ளிக்கிட்டு வந்து நின்றான். கெல்ப் பண்ணுவதாக சொல்லிக்கிட்டே நின்றான். வேண்டாம் வேண்டாம் என்று சொல்லவும் செய்தான். பிறகு திடீர் என்று உங்கள் லக்கேஷின் நிறமென்ன.. அதில என்ன அடையாளம் போட்டிருக்கு.. என்ன அட்ரஸ் எழுதி இருக்கென்று விபரம் கேட்டான். நமக்கு இவங்கட தில்லாலங்கடி ஏலவே தெரிந்திருந்தால்.. சொல்லவேயில்லை. பிறகு எல்லாத்தையும் விட்டிட்டு லக்கேஷ் தள்ளி வரும் பெலிட்டின் உள்பக்கம் போனான்... வந்தான். ஆனால்.. நான் எதுவுமே அவனுக்கு சொல்லாததால்.. அவனின் தில்லாலங்கடி வேலை செய்யவில்லை. நைசாக கழன்று நகர்ந்து சென்று விட்டான். போக முன் பவுன்ஸ் பவுன்ஸ் என்று கெஞ்சிவிட்டுத்தான் சென்றான். எப்படியோ.. விமானங்கள் வரும் நேரம்.. வகை.. நாடுகளை வைச்சு.. இவர் இங்கிருந்து தான் வருகிறார் என்று மோப்பம் பிடிப்பதில்.. போட்டர்கள் செமக் கில்லாடிகளாகவே இருக்கிறாய்ங்க. ஒருவாறு விமான நிலையத்துக்குள் இருந்து வெளிய வந்து பிக் அப் பொயின்றில் நின்றால்.. அங்கு விமானப்படை ஆட்கள் ஒரு சிலர் நின்றாங்கள். அவங்கள்.. இப்ப எல்லாம்.. ரி56 வைத்திருப்பதில்லை. காமாண்டோ.. வகை சிறிய துப்பாக்கிகள் தான் வைச்சிருக்காங்கள். உடைகளும் அமெரிக்க துருப்புக்களின் தரத்துக்கு உயர்ந்திருக்குது. உதுக்கெல்லாம் காசிருக்குது.. என்று நினைச்சுக் கொண்டே அவங்களை கடந்து சென்று காத்திருந்தால்.. காத்திருப்பின் போது நிகழ்ந்தது என்ன..... தொடரும்..
  5. பவுன்சை உருவின கோவம் மனசுக்க முட்டிக்கிட்டு கிடந்தாலும் வெளில..கொட்ட முடியாத சூழலில்.... வந்த கோவத்தை அமுக்கிக்கிட்டு (வேற வழி) கிளம்பி.. எயார்போட் டியூட்டிபிறில.. என்ன இலாபமாக் கிடக்குன்னு பார்க்கப் போனால்.. அங்க எங்க.. எல்லாப் பொருட்களுக்கும்.. கோவிட் கால வருமான இழப்பையும் விலையா வைச்சு.. விக்கிறாங்கள். ஏற்கனவே பஜெட் எகிறிட்டுது.. நமக்கு உது சரிப்பட்டு வராதுன்னுட்டு.. பிளைட்டைப் பிடிக்கப் போனால்.. அங்க.. றீம் லைனர் தான் இருக்கும் என்று பார்த்தால்.. போயிங் 777 விட்டிருந்தாங்கள். அது பார்க்கப் பழசாவே இருந்திச்சு. அதிலையே பாதி மனசு.. சோர்ந்திட்டுது. சரி இதாவது கிடைச்சுதேன்னு மனசை அரையும் குறையுமா தேற்றிக்கிட்டு. பிளைட்டுக்க ஏறினால்.. பிளைட்டுக்க.. எல்லாரும் மாஸ்கோட இருக்காங்க. அதிலும் சிலது டபிள் மாஸ்க் வேற போட்டிருக்குது. ஆனாலும் சிலது மாஸ்கை கழட்டிட்டு செல்பி எடுக்குது.. சிலது மாஸ்கை எடுத்திட்டு மூக்கைச் சிந்துது.. இப்படி பல வித மனிசர்களையும் தாண்டி ஒருமாதிரி நம்ம இருக்கையில் போய் இருந்தாச்சு. யன்னல் சீட் தான். அது புக் பண்ணும் போதே தெரிவு செய்ததால.. அதில பிரச்சனை இருக்கல்ல. எனி என்ன..செய்யலாமுன்னிட்டு.. போனை சார்சரில அடிச்சிட்டு.. பாட்டைப் போட்டு கேப்பம் என்றிட்டு.. எயார்பொட் டை எடுத்து காதுக்க செருக்கிட்டு.. நிம்மதியா இருப்பமுன்னா.. கிளம்பின பிளேனுக்க இருந்து தண்ணி ஒழுகி.. தலையை முழுக்காட்டிவிட்டிச்சு. இதென்னடா கோதாரி.. பிளேனுக்கையும் தண்ணி ஒழுகுமான்னு நினைச்சிட்டு.. பழைய டப்பாவை.. கோவிட் காலத்தில பூசி மொழுகிட்டு விட்டிருக்கிறான் அரபிக்காரனுன்னு திட்டிக்கிட்டே.. அலேட் பட்டினை அமுக்கி.. விமானப் பணியாளை (மனையாள் அல்ல) அழைச்சால்.. நல்ல.. அரபிக்காரியா வருவாள் என்று பார்த்தால்... ஒரு சைனாக்காரி தான் வந்தாள். அரபிக் காரனெல்லாம்.. யூரோப் பக்கம்.. பிளேன் விட்டு நல்லா சம்பாதிச்சாலும்.. அரபிக்காரிகளை விமானப் பணிப்பெண்களாக வைச்சிருக்கிறது குறைவு.! மற்ற நாட்டுக்காரிகளை தான் வைச்சிருக்காங்கள். வந்தது சைனோவோ என்னவோ வந்த விசருக்கு.. இதென்ன.. பிளைட்டுக்க தண்ணி ஒழுகுது.. என்ன நடக்குது என்று அவளோட பாய.. அவளோ கொஞ்சம் பதறித்தான் போயிட்டாள். ஓடிப்போய் தன்ர கெட் டை கூட்டிக்கொண்டு வந்து.. விமானக் கூரையை தொட்டுத் தடவினால்.. ஒரே தண்ணி. என்ன ராயிலட் லீக்கான தண்ணியான்னு கோவமாக் கேட்க.. இல்லை இல்லை.. இது சிலவேளை நடக்கிறது.. ஆக்கள் விடுற மூச்சுக் காத்தில உள்ள தண்ணி ஒடுங்கி நின்று பிளைட் ஏறேக்க.. இப்படி ஒழுகிறது தான் என்றாள். நான் அதுக்கு.. என் வாழ்க்கையில் இப்படி முன்னம் எப்பவும் நடக்கவேயில்லையே.. இதென்ன பழைய பிளைட்டா என்று தொடர்ந்து கேள்வி கேட்டு.. அவளுக்கு தொந்தரவு கொடுக்க.. இன்னொருத்தி.. புதிய போர்வை.. தலையணை எல்லாம் கொண்டு வந்து தந்து.. தண்ணியையும் துடைச்சுவிட்டு.. நம்மளை குசிப்படுத்தி.. சமாதானப் படுத்தினாள். சரி சரி.. போங்கடி.. நடிச்சது காணுமுன்னு.. மனசுக்க தோனினாலும்... கொஞ்சம் விட்டுத்தான் பிடிப்பமேன்னு விட்டால்.. அதுக்குப் பிறகு நம்ம மேல கவனிப்போ.. தனி தான். ஒரு மாதிரி.. ஒழுகிற பிளைட்டை சமாளிச்சு அரபுதேசம் ஒன்றில் இடைத்தங்கலுக்கு இறங்கினால்.. மனசுக்க.. பழைய நினைப்பில்.. ஒரே எதிர்ப்பார்ப்பு. அங்க டியுரிபிறில.. அரபிக் சொக்கலேட்டும்.. ஊரில உள்ள சில பேருக்கு.. தண்ணியும் (பச்சத்தண்ணி இல்லை.. பிறவுன் தண்ணி) வாங்கிட்டுப் போவம் என்று.. மனசு பல திட்டங்களைப் போட்டிச்சு. ஆனாலும்.. பிளேன் இறங்கின கையோட.. அதை தூரத்தில நிப்பாட்டிட்டாங்கள். பிறகு ஒரு அரைமணி நேரம் எல்லாரையும் பிளைட்டுக்க வைச்சிருந்திட்டு... பேரூந்துகளில் ஏத்திக் கொண்டு போய்... ஒரு வழிப் பாதையில விட்டாங்கள். அங்க இறங்கினால்.. அம்புக் கோடுகள் காட்டிற வழியில மட்டும் தான் போகலாம் என்டாங்கள். அரபுக்காரன் தேசத்தில எனி உதுக்கு சண்டை பிடிக்கேலுமோ.. இல்லைத்தானே.. அவன் சொன்னதை வாயை மூக்கை பொத்திக்கிட்டு கேட்டுட்டு நடந்தால்.. அது நேராக் கொண்டு போய் அடுத்த பிளைட் எடுக்கிற இடத்தில விட்டிச்சு. டியுரிபிறி எல்லாம் அடைச்சு காத்துக்கூட போக முடியாத அளவுக்கு மூடிக்கிடக்கு. அட கறுமமே.. இங்க டியுபிரில ஏதாவது வாக்கிட்டுப் போவம் என்று தானே இந்த ரான்சிட் போட்டது.. அதுவும் பாழாப் போச்சா.. என்றிட்டு.. குறைஞ்சது.. மாஸ்கை மாத்திட்டு.. மூஞ்சியைக் கழுவிட்டு.. நம்பர் 1 க்காவது போயிட்டுப் போவம் என்று போனால்.. அங்கையும்.. கியூ. கியூவை தாண்டி.. எப்படி போனது பயணம்.. தொடரும்..
  6. பார்வை ஒன்றே போதுமே...... (7). இப்பொழுது சாமிநாதனுக்கும் மனதில் ஒரு நிம்மதி உண்டாயிற்றுது. இனி இந்தக் குடும்பம் முன்னேறிவிடும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. அவரும் இங்கு வந்தபின் குடிப்பதையும் விட்டு விட்டார். ஒரு ஆம்பிளை இல்லாத வீட்டில் தான் இருக்க அவர்கள் அனுமதித்ததே பெரிய விஷயம். மேலும் தான் குடித்துக் கொண்டும் இருந்தால் நன்றாக இருக்காது என்று விட்டு விட்டார். இப்பொழுது தாடி மீசை எல்லாம் வளர்ந்து அவரது முகத்தோற்றமே மாறிவிட்டிருந்தது. எப்போதாவது முத்துதான் அவரை வற்புறுத்தி சலூனுக்கு அழைத்துச்சென்று கூட்டி வருவான். எப்போதும் அவன் கூடவே இருப்பதால் அவனிடம் ஒரு தனிப் பாசம் உண்டாகியிருந்தது. இப்பொழுது அவர்கள் வேலை செய்யும் இடங்களும் சுற்று சூழல்களும் மாற்றமடைந்து வந்து கொண்டிருக்கின்றது. மக்கள் நடமாட்டமும் பெருகி வருகின்றது. "மழைக் காலக் காளான்கள்" போல் அவ்விடத்தில் பல கடைகள் திறக்கப் படுவதும் சில கடைகள் வருமானமின்றி பூட்டப்படுவதுமாக இருந்தது. நடைபாதையில் வியாபாரம் செய்பவர்களை போலீசார் வந்து விரட்டி விடுவதும் பின் அவர்கள் சென்றதும் மீண்டும் இவர்கள் வியாபாரம் செய்வதுமாக இருந்தார்கள். அந்த வகையில் இவர்களது சப்பாத்து கடையும் பாதிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. இப்படி இருக்கையில் முன்பு சாமிநாதன் ஒரு கடைத் தாழ்வாரத்தில் படுத்து தூங்கியிருந்தபொழுது இவர் தலையில் தண்ணீர் ஊற்றிய சிப்பந்தி சோமு இப்பொழுது இவரோடும் நல்ல பழக்கமாகி இருந்தான்.சில மகிழ்ச்சியான தருணங்களில் சோமுவும் முத்துவும் சேர்ந்த இவரைக் கிண்டல் கேலி செய்து கலாய்ப்பார்கள். அந்த நேரங்களில் வீட்டில் வந்து இரவு எல்லோரும் சேர்ந்திருந்து சாப்பிடும்போது முத்து அதைச் சொல்ல எல்லோரும் சிரிப்பார்கள் அதில் சாமிநாதனும் சேர்ந்து கொள்வார். அவர்கள் போனதும் மகேஸ்வரி வந்து தனியாக இவரிடம் " ஐயா பிள்ளைகள் எதோ தெரியாமல் விளையாடுதுகள் நீங்கள் அதை மனசில் வைத்திருக்கக் கூடாது மன்னிக்க வேணும்" என்று சொல்லுவாள். இவரும் இல்லையம்மா எனக்கும் அதுதான் மிகவும் பிடித்திருக்கு நீங்கள் யோசிக்க வேண்டாம் என்று ஆறுதல் சொல்லுவார். (அவருக்கு தெரியும் தன்னோடு பத்து நிமிடங்கள் சந்திப்பதற்கு அனுமதி வேண்டி வாரங்கள் மாதங்கள் என்று காத்திருந்தார்கள் பல பிரமுகர்கள். அந்த யந்திர வாழ்க்கை ஒரு பொன்விலங்கு போல் என்னைக் கட்டிப் போட்டிருந்தது. இப்பொழுதுதான் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டு சுதந்திரமாய் மூச்சு விட முடிகிறது. சின்ன சின்ன சந்தோசங்களை அனுபவிக்கவும் மனம் விரும்புகிறது). முத்து கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து கடைக்கு வருவது குறைந்திருந்ததால் சோமு வந்திருந்து இவரோடு கொஞ்சநேரம் கதைத்து விட்டு போவான். இன்று கடையில் முத்துவும் வந்திருந்ததால் சோமுவும் வந்து கதைத்துக் கொண்டிருந்தான். அப்போது முத்து சோமுவிடம் என்ன சோமு இப்ப போலீஸ் கெடுபிடி எல்லாம் இங்கு அதிகமாகி இருக்காம். அடிக்கடி வந்து தொந்தரவு செய்கிறார்களாம் என்று சொல்ல, ஓம் முத்து வாரத்தில் நாலைந்து தடவை வந்து எல்லோரையும் விரட்டி விட்டு போவார்கள். இப்ப எங்கட கடையின் நிலமையைப் பார்க்கும்போது எனக்கும் வேலை போய் விடும்போல் இருக்கு. ஏண்டா என்ன விஷயம் என்று முத்து கேட்க, சோமுவும் இப்ப கடையில் வருமானமும் குறைவு. ஐயா வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்கவே சிரமப் படுகின்றார். எனக்கே இரண்டு மாதமாக சம்பளம் வரவில்லை. அவரும் கடையை யாருக்காகவாது விற்று விடுவதற்கு முயற்சி செய்கிறார். நல்ல பார்ட்டி இருந்தால் சொல்லுபடி தனது நண்பரோடு போனில் பேசிக்கொண்டிருந்தவர். இந்த இடத்தில நல்ல பேரோடு இருக்கிற கடை இனி யார் எடுப்பார்களா தெரியாது. இப்படி இவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போது சிரத்தையுடன் வேலை செய்து கொண்டிருந்த போதிலும் சாமிநாதனின் வியாபார மூளை உள்ளுக்குள் சில கணக்குகளைப் போட்டபடி இருந்தது. இங்கு வந்து தங்கிய இவ்வளவு காலத்தில் அந்தப் பக்கத்து கடைகள் காணிகளின் மதிப்புகள், வியாபாரங்களில் பெறுமதிகள் எல்லாம் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. கை வேலை செய்துகொண்டிருக்க மெதுவாக சோமுவிடம் பேச்சுக் குடுத்தார். ஏன் சோமு, உங்க முதலாளிக்கு இப்ப கடையை விக்க வேண்டிய அவசரம் என்ன. சோமுவும் அது வேறொன்றுமில்லை ஐயா இப்ப வியாபாரத்தால் வருமானமில்லை.அவருடைய பிள்ளைகளும் நகரத்தில் வசிக்கிறார்கள்.இனி அவர்களும் இங்கு வந்து கடையை கவனிக்கப் போவதில்லை. இவர்களுக்கும் வயதாகுதுதானே அதுதான் அவர்கள் இவைகளை வித்துவிட்டு தங்களோடு வந்திருக்கும்படி வற்புறுத்திக் கொண்டிருக்கினம். ஓமோம்....அதுவும் சரிதான் இப்ப இந்தக் கடை என்ன ஒரு பத்து லட்சம் போகுமோ. என்ன ஐயா நீங்கள் விவரம் புரியாமல் கதைக்கிறியள் அவர் போனில் இருப்பது லட்சம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.... சரி முத்து நேரமாச்சு நான் போட்டு பிறகு வாறன் என்று சொல்லிவிட்டு சோமு போகிறான்........! பார்ப்போம் இனி.........! ✍️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.