Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87993
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46798
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    8910
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    38771
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/03/22 in all areas

  1. 1947 இல் சுதந்திரம் அடைந்தபின்னர் இலங்கையில் தமிழர்கள் இருவகையான ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும் என்று தந்தை செல்வா எச்சரித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் பேசிய தந்தை செல்வா அவர்கள் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலமும், ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் ஊடாகவும் இலங்கையில் தமிழர்களின் இருப்பிற்கு பாரிய அச்சுருத்தால் ஏற்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்களை "நில அபகரிப்பு" என்றும், ஒற்றையாட்சிக் கோட்பாட்டினை "தமிழருக்கான அதிகாரங்களைக் கொள்ளையிடல்" என்றும் அவர் விழித்துப் பேசினார். இவையிரண்டின் மூலம் தமிழர்கள் வெகு விரைவில் சிங்களவர்களுக்கு அடிமையாக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பறிப்பு இலங்கையிலிருந்து தமிழினத்தை முற்றாக அழித்துவிடும் முயற்சியின் ஒரு அங்கம்தான் என்றும் அவர் முழுமையாக நம்பியிருந்தார், அதையே மக்களிடம் கூறிவந்தார். சமஷ்ட்டி அடிப்படையிலான அரசியல்த் தீர்வொன்றே இலங்கையில் தமிழர்களின் சுதந்திரத்திற்கும் அவர்களைன் அடையாளத்திற்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் முழுமையாக நம்பினார். தனது இந்தக் கண்ணோட்டத்தை மக்களிடையே பரப்புவதற்காக சமஷ்ட்டிக் கட்சியென்று புதியதொரு அரசியல்க் கட்சியை அவர் ஆரம்பித்தார். தனது புதிய கட்சியினை 1949, மார்கழி 18 இல் ஆரம்பித்து வைத்துப் பேசிய தந்தை செல்வா அவர்கள் பல்லின, பல்கலாசார மக்கள் வாழும் இலங்கை போன்ற நாட்டிற்கு ஒற்றையாட்சி ஒருபோதுமே தீர்வாக அமையாதென்றும், இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு சமஷ்ட்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே மிகவும் சிறந்தது என்று அவர் கூறினார். அவர் மேலும் பேசுகையில், "ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் கீழ் நாம் முதலில் அரசில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பங்கினை இழந்தோம். அடுத்ததாக தேர்தலில் எமது வாக்குப் பலத்தினைக் குறைப்பதற்காக இந்தியத் தமிழ்ச் சகோதரர்களின் பிரஜாவுரிமையினை அவர்கள் பறித்தார்கள். தமிழரின் பூர்வீக தாயகத்தைச் சிதைக்கும் நோக்குடன் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்களை முடுக்கி விட்டிருக்கிறார்கள். ஆகவே, சமஷ்ட்டி அடிப்படையிலான அரசியல்த் தீர்வு தமிழருக்கு சட்டபூர்வமாகக் கிடைக்கவேண்டிய அரச அதிகாரத்தினைப் பெற்றுக்கொடுக்கும். இதன்மூலம், கட்டுபாடின்றி சட்டத்திற்குப் புறம்பான முறையில் தமிழர் தாயகத்தின் மேல் நடத்தப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்கள் முடிவிற்குக் கொண்டுவரப்படும்" என்று அவர் கூறினார். திட்டமிட்ட முறையில் அபகரிக்கப்பட்டு வந்த தமிழர் தாயகத்தைப் பாதுகாப்பதே தந்தை செல்வாவின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. அதனால், "சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரைய முடியும்" எனும் சுலோகத்தினை அவர் முன்வைத்து வந்தார். தமிழர் தாயகம் அவர்களின் கைகளில் இருந்தால் மட்டுமே இனத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்க முடியும் என்று அவர் தொடர்ச்சியாக வாதாடி வந்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பிரதேசமான பட்டிப்பளை கல்லோயா எனும் சிங்களக் குடியேற்றமாக அரசினால் கபளீகரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தந்தை செல்வா மிகத் தீவிரமாக தமிழர் தாயகம் காக்கப்படல் வேண்டும் என்கிற கோரிக்கையினை முன்வைத்து பேசத் தொடங்கினார். இலங்கையின் இரு பிரதமர்களுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கைகளின் கருப்பொருளாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துவதே அமைந்திருந்தது. 1957, ஆடி 25 இல் பிரதமர் பண்டாரனாயக்கவுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி, தமிழர் தாயகத்தில் இடம்பெறும் குடியேற்றங்களை நிர்வகிக்கும் அதிகாரம் பிரதேச சபைகளுக்கே வழங்கப்படவேண்டும் என்று அவர் கோரினார். அவ்வுடன்படிக்கையின் சரத்து "பி" இவ்வாறு கூறுகிறது, "புதிதாக மேற்கொள்ளப்பட்டும் குடியேற்றத் திட்டங்கள் அப்பிராந்திய அதிகார சபைகள் ஊடாகவே நிர்வகிக்கப்படவேண்டும் என்பது ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த குடியேற்றங்களை யார் யாருக்கு வழங்குவதென்கிற அல்லது யார் யார் இத்திட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவர் என்கிற தீர்மானத்தினை இந்த பிராந்திய நிர்வாகங்களே தீர்மானிக்கும். தற்போது கல்லோயா திட்டத்தை நிர்வகிக்கும் கல்லோயா சபையின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கப்படல் அவசியம்". அதேபோல 1965 , பங்குனி 24 இல் தந்தை செல்வா அவர்கள் அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்கவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தமிழரின் தாயகம் தமிழர்களினால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுவதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று கோரியிருந்தார். அவ்வொப்பந்தம் பின்வருமாறு கூறுகிறது, சரத்து 4 ) நிலங்களை அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரச் சட்டம் சீர்திருத்தப்பட்டு இலங்கையின் குடிமக்கள் நிலங்களை உரிமையாக்கிக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்படும். மேலும் தந்தை செல்வாவின் கோரிக்கைகளுக்கு இணங்கிய டட்லி, குடியேற்றத் திட்டங்களின் மூலம் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படும்பொழுது பின்வரும் விடயங்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கவனிக்கப்படுதல் அவசியம் என்றும் ஏற்றுக்கொண்டார். 1) வடக்குக் கிழக்கில் பகிர்ந்தளிக்கப்படும் நிலங்கள், இம்மாவட்டங்களில் வாழும் மக்களுக்கே முதலில் வழங்கப்பட வேண்டும். 2) இந்நிலங்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். 3) வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் ஏனைய தமிழ் பேசும் மக்களுக்கு அடுத்ததாக முன்னுரிமை வழங்கப்படுதல் அவசியம். ஆனால், தமிழரின் தாயகத்தை காக்கவேண்டும் என்கிற நோக்கில் தந்தை செல்வா அவர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் இந்த இரு ஒப்பந்தங்களையும் சிங்களவர்கள் தூக்கியெறிந்ததன் மூலம் உருக்குலைந்து போயின. இவ்வொப்பந்தங்களின் தோல்வியே சிங்களத் தலைவர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வடக்குக் கிழக்கில் தமிழரின் நிலங்களை கூறுபோட்டு அபகரிக்கவும், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கவும் வழியமைத்துக் கொடுத்தன. இதன்மூலம் இப்பிரதேசங்களில் இருந்த தமிழருக்கான தேர்தல் பலமும் மிகப் பலவீனமான நிலைக்கு இழுத்து வீழ்த்தப்பட்டு, இப்பகுதிகள் சிங்களத் தேர்தல்த் தொகுதிகளாக மாற்றப்பட்டன. 1881 இலிருந்து 1981 வரையான நூற்றாண்டுக் காலத்தில் தமிழர் தாயகம் எவ்வாறு இனப்பரம்பல் மாற்றத்தை எதிர்கொண்டது என்பதை பின்வரும் அட்டவணை காட்டுகிறது. இதன்படி கிளிநொச்சி மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் அடங்கியிருந்தது. அத்துடன் 1965 இல் உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகத் தனியே காட்டப்பட்டிருக்கிறது. அம்பாறை மாவட்டம் என்பது தமிழ்பேசும் மாவட்டமான மட்டக்களப்பிலிருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்டு சிங்கள மாவட்டமாக உருவாக்கப்பட்டதென்பது குறிப்பிடத் தக்கது. Table-1 Demographic Change in the North-East Province 1881- 1981 Year 1881 1946 1981 District Sinhalese Tamils Muslims Sinhalese Tamils Muslims Sinhalese Tamils Muslims Jaffna 0.3 98.3 1.0 1.07 96.3 1.3 0.60 95.3 1.7 Mannar 0.67 61.5 31.1 3.76 55.1 33.0 8.10 50.6 26.6 Vavuniya 7.4 80.9 7.3 16.6 69.3 9.3 16.6 59.9 6.9 Batticoloa 0.4 57.5 30.7 4.0 69.0 27.0 3.2 70.8 24.0 Ampara 18.24 30.0 50.4 16.7 28.3 54.9 37.6 20.1 41.5 Trincomalee 4.2 63.6 25.9 20.7 40.1 30.6 33.6 33.8 29.0 The most significant change was in the Amparai District. Table 2- Demographic Change in the Amparai District – 1911- 1981 Year Sinhalese Tamils Muslims 1911 4762 7.0% 24733 37% 36843 55% 1921 7285 25203 31943 1953 26459 39985 37901 1963 62160 29% 49220 23.5% 97990 45.6% 1971 82280 30.% 60519 22% 126365 47% 1981 146371 38.01% 78315 20% 126365 47% Next comes the Trincomalee district. Table 3- Demographic change in the Trincomalee district 1901-1981 Year Tamils Muslims Sinhalese Others 1901 17069 60% 8258 29.90% 1203 4.2% 1921 6.8% 1911 17233 57.8% 9714 32.6% 1138 3.8% 1700 5.7% 1921 18556 54.5% 12846 37.7% 1501 4.4% 1179 3.5% 1946 33795 44.1% 23219 30.6% 15706 20.7% 3501 4.7% 1953 37517 44.7% 28616 34.1% 15296 18.2% 2488 3% 1963 54050 39.1% 42560 30.8% 39950 28.9% 1600 1.2% 1971 71749 38.1% 59924 31.8% 54744 29.1% 1828 1.0% 1981 93510 36.4% 74403 29.2% 86341 33.4% 2536 1.10%
  2. பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தினை 2002 ஆம் ஆண்டிலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் சங்கம் இணையத்தளத்தில் எழுதிவந்தார். செய்திச் சேகரிப்பில் பல்லாண்டுகள் பயணித்த சபாரட்ணம் அவர்கள், இனச் சிக்கல் தோன்றியதற்கான மூலக் காரணங்கள் தொட்டு, போரினூடான காலம், இனச்சிக்கலின் பின்னால் இருந்தவர்கள், அவர்களின் செயற்பாடுகள் ஆகியவற்றினை ஒரு செய்தியாளன் எனும் நிலையில் இருந்துகொண்டு எழுதுகிறார். முதலாவதாக, இவரால் தொகுக்கப்படும் செய்திகளின் விபரங்கள் வேறு எந்த இணையத்திலோ அல்லது அச்சாகவோ இதுவரை வெளிவரவில்லை என்பதாலும், இவரால் சங்கம் இணையத்தில் தரவேற்றப்பட்ட இத்தொடரின் சில அத்தியாயங்கள் அழிந்துவிட்டதனாலும், இவரால் பதியப்பட்ட பல பிரச்சினைகள் இன்றுவரை அவ்வாறே உயிர்ப்புடன் இருப்பதாலும் இத்தொடரினை முழுமையாக மீள்பிரசுரம் செய்கிறோம் என்று சங்கம் இணையம் கூறுகிறது. திரு சபாரட்ணம் அவர்கள் நீண்டகால செய்தியாளராக கடமையாற்றியதால் தமிழர் சரித்திரத்தின் மிக முக்கியமானவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை அவர் பெற்றிருந்தார் என்றும், ஒரு வரலாற்றாசிரியராக அவரால் எமது போராட்டம்பற்றியும், தேசியத் தலைவர் பற்றியும் இதுவரை எவரும் எழுதாதாத கோணத்திலிருந்து எழுத முடிந்ததாகவும் சங்கம் கூறுகிறது. மூன்று பாகங்களாக இத்தொடரினை எழுதிய சபாரட்ணம் அவர்கள் , பாகம் ஒன்றினை 1954 இலிருந்து 1983 வரையான காலப்பகுதியென்றும், பாகம் இரண்டினை 1983 இலிருந்து 1986 வரையான பகுதியென்றும், பாகம் மூன்றினை 1985 இற்குப் பிற்பட்ட காலத்திலிருந்தும் எழுதி வந்திருந்தார். ஆனால், 2010 இல் அவரது மறைவுடன் பாகம் 3 பதிவேற்றப்பட முடியாது போய்விட்டது. பாகம் மூன்று பதிவேற்றப்படாதுவிட்டாலும் கூட, பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகியவற்றின் தொகுப்பினை யாழில் பதிவிடலாம் என்று நான் நினைக்கிறேன். எமது போராட்டச் சரித்திரம், தலைவர் மற்றும் போராளிகள் பற்றிய பதிவொன்று எம்மிடம் இருப்பது நண்மையானதே. இத்தொடர் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்படுவது தேவையானது என்று யாழ்க்கள நண்பர்கள் நினைக்குமிடத்து, இதனைத் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்து எழுத யோசிக்கிறேன். உங்களின் கருத்துக்களைச் செவிமடுக்க விரும்புகிறேன், ரஞ்சித் https://sangam.org/pirapaharan-volume-1-and-2-by-t-sabaratnam-reposted/
  3. சமீபத்தில் திரைக்கு வந்துள்ள "பொன்னியின் செல்வன்" படத்தை பார்த்து பலரும் இணையத்தில் சோழர்களின் வரலாற்றை பற்றிய தேடல்களை ஆரம்பிக்க.. இப்பொழுது பல காணொளிகளை யூடுயூபில் காணக்கூடியதாக இருக்கிறது.. அவற்றில் கவர்ந்த இந்த இரு பேட்டிகளும் மிகவும் சுவாரசியமானவை..! இக்கால தமிழர்கள், மறந்த அல்லது தெரியாத பல விடயங்களை அறியக்கூடியதாக உள்ளது இக்காணொளிகளின் சிறப்பு. இருவருக்கும் நன்றிகள்..👌 ஆரிய மாயையை விலக்க, வரலாற்று திரிப்புகளை இனம் காண இம்மாதிரி காணொளிகள்/பேட்டிகள் இன்னும் பல வரவேண்டும்..!
  4. கடற்கரும்புலி கப்டன் செவ்வானமும் கடற்புலிகளின் கடற்புலிகளின் மகளீர் படையணி சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் நளாயினியும் தலைவர் மாமாவுடன் 1994 'இ: மேஜர் மங்கை; வ: லெப் கேணல் நளாயினி'
  5. ரஞ்சித் அவர்களே காலத்தேவைகருதியதும், நாம் அறியாத பகுதிகளையும், உரையாடல்களையும் உள்ளடக்கியதாக உள்ளன. இது எமது இளைய தலைமுறை படித்தறிய வேண்டிய விடயமுமாகும். உங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுகள். தமிழ்த்தலைவர்களில் பெரும்பகுதியானோர் இனத்துக்கான பேரம்பேசல்களில் ஈடுபடுவதில்லைத்தானே. அவர்கள் தமக்கான பெட்டிகளுக்கான பேரம்பேசல்களில் இருப்பதால் இனமாவது நிலமாவது....... தேவையேற்பட்டால் அவர்கள் பெயரைக்கூட மாற்றிக்கொண்டு வாழ்ந்துவிடுவர். அப்படியான சுயநலமிகளிட நீங்கள் எதிர்பார்க்கலாமா?
  6. ரஞ்சித் உங்கள் நேரத்திற்கும், மொழி பெயர்ப்புக்கும் மிக்க நன்றி. திருகோணமலையில் 1901´ம் ஆண்டு இருந்த தமிழரின் சனத்தொகை விகிதத்திற்கும், தற்போது (2022) உள்ள நிலைமையையும் நினைக்க கவலையாக உள்ளது. இது... மெதுவாக... புதிய விகாரைகள் அமைப்பதன் மூலம் தமிழரின் இருப்பு... மற்றைய மாவட்டங்களுக்கும் பரவிக் கொண்டுள்ளது. இதனை... ஒரு பெரிய விடயமாக, தமிழ் அரசியல் கட்சிகள் சர்வதேசத்திடம் கொண்டு செல்லாதது.. மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகின்றது.
  7. மேலேயுள்ள மருத்துவர்.காந்தராஜ் அவர்களின் செவ்விக்கான காணொளியில் திரு.குமார் இட்டுள்ள இந்த பின்னோட்டம், கவனத்திற்குரியது.. ***** அமரர் கல்கி எழுதி ஜெயமோகன் திரைக்கதை வசனத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கிற பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஆர்வமாக எதிர்பார்த்து "புல்லரிப்போடு" இருக்கின்ற அனைவருக்கும்... 1. முதலில் பொன்னியின் செல்வன் என்பது கற்பனை கதை. வரலாற்றில் இருந்து சில சம்பவங்களை வைத்துக் கொண்டு எழுதப்பட்ட புனைவு. இந்தக் கதையையே வரலாறு நினைத்துக் கொள்ள வேண்டாம் . வரலாறு இந்த புனைவுகளை எல்லாம் தாண்டி பிரம்மாண்டமானது. 2. அமரர் கல்கி எழுதியபோதே வரலாற்று கல்வெட்டுகளில் காணப்படும் ஆதித்த கரிகாலன் கொலை பற்றி உள்நோக்கத்தோடு எழுதியுள்ளார் என்பதான விமர்சனங்கள் அந்தக் காலத்திலேயே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஆதித்த கரிகாலன் படுகொலை என்பது பார்ப்பனர்களால் நிகழ்த்தப்பட்டது என்றும் அதை மட்டுப்படுத்தவே நந்தினி என்ற கற்பனைக் கதாபாத்திரத்தை முன்வைத்து "நந்தினி- ஆதித்த கரிகாலன் காதல்" என்பதான கற்பனைக் கதை ஓட்டத்தை அமரர் கல்கி எழுதினார் என்றும் அது பெரு மாவீரனான ஆதித்த கரிகாலன் புகழுக்கு எதிரான செயல் என்பதான விமர்சனங்கள் அப்போதே உண்டு.எனவே புல்லரிப்பாளர்கள் 'விக்ரம் - ஐஸ்வர்யா ராய்' ஜோடியை பார்த்துவிட்டு இதுவே தமிழரின் வரலாறு என்று நினைத்து விடாதீர்கள். 3. இது ஒரு திரைப்படம் என்பதோடு மட்டுமே நிறுத்திக் கொள்ள வேண்டும். எப்போதுமே வரலாற்றை தழுவி மணிரத்னம் செய்கிற ஆக்கங்களில் அவருக்கென்றே உரித்தான மேல்தட்டு வலதுசாரி 'அரசியல்' இருக்கும் என்கிற கவனத்தோடு இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஈழத்தின் வீர வரலாற்றை ஆயுத வியாபாரிகளின் மோதல் என இழிவுபடுத்திய மணிரத்னம் , எடுத்துள்ள 'பொன்னியின் செல்வனில்' அல்ல..அல்ல PS-1 ல் ( ப்ளே ஸ்டேஷனா என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள்.) நல்லவற்றை எடுத்துக்கொண்டு அல்லவற்றை விமர்சிக்கிற மனப்பாங்கு பார்வையாளர்களுக்கு வேண்டும். 4. எல்லாவற்றிற்கும் மேலாக 'அதீதமாக ஒலிக்கும் இந்த திரைப்பட விளம்பரத்தின் மூலமாக திடீரென கவனம் பெற்று இருக்கிற 'ராஜராஜ சோழன்' இதோ கும்பகோணத்தில் அருகே இருக்கிற உடையாளூரில் எவ்வாறு பராமரிப்பின்றி படுத்து கிடக்கிறார்' என்கின்ற காட்சியை பொன்னியின் செல்வன் படம் பார்ப்பவர்கள் அனைவரும் ஒருமுறை அவசியம் நேரில் வந்து பார்த்துவிட்டு சென்றால், இக்கதை, திரைப்படம், விளம்பரம், வணிகம் இவைகளுக்கு ஊடாக இருக்கிற 'அரசியல்' புரியும். 5. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை அவரே இக்கதையின் முன்னரையில் சொன்னது போல சோழ வரலாற்றை ஆய்வு செய்த சதாசிவ பண்டாரத்தார், கே ஏ நீலகண்ட சாஸ்திரி போன்ற பெரும் அறிஞர்களின் உழைப்பிலிருந்து எழுத்தாளப்பட்ட சில வரலாற்று செய்திகளை கொண்டு எழுதப்பட்ட கற்பனை கதை. இதில் ஆழ்வார்கடியான் நம்பி பூங்குழலி நந்தினி குடந்தை ஜோதிடர் என பல கற்பனை கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். சாண்டல்யன் எழுதிய கடல்புறா போன்றது தான் பொன்னியின் செல்வனும். இது வரலாறு அல்ல. இந்த புரிதலோடு திரைப்படத்தை அணுக வேண்டும். 6. வரலாற்று நிகழ்வுகளை திரைப்படமாக எடுக்கும் போது இருக்க வேண்டிய கவனம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருக்கிறதா என்பதை எல்லாம் திரைப்படம் சொல்லட்டும். ஆனால் வரலாற்றில் பொன்னியின் செல்வனில் இடம்பெறும் சம்பவங்கள் நடந்த போது அருள்மொழி வருமனுக்கு 16 17 வயது இருக்கலாம். ( ஜெயம் ரவியை பார்த்தால் அப்படி தெரியவில்லை என்றெல்லாம் நினைக்க வேண்டாம். கற்பனை என்பதோடு நிறுத்தினால் இந்த பிரச்சனை இல்லை.) ஆதித்த கரிகாலனுக்கு 20 21 இருக்கலாம் .( 20 21 வயது இளைஞனுக்கு விக்ரம் போல தாடி மீசை முளைக்குமா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம் ‌. இது கற்பனை. அவ்வளவுதான்.) எனவே இதை சோழர் வரலாறாக திரைப்படம் பார்க்க வரும் குழந்தைகள் மனதில் பதிய வைத்து விடாதீர்கள். அவர்களுக்கு இந்த திரைப்படம் சோழர் வரலாறு பற்றிய ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். வரலாற்றை உண்மையான ஆவணங்கள் மூலம் நாம் படித்தறிந்து நம் பிள்ளைகளுக்கு கடத்துவோம். பிழையான வரலாறுகளால் தான் இன்னும் இந்த தமிழினம் அடிமையாக கிடக்கிறது என்கிற புரிதல் முதலில் நமக்கு வேண்டும். திரைப்படங்களை வரலாறாக புரிந்து கொண்ட பேதமையால் தான் இங்கே 'வீரபாண்டிய கட்டபொம்மன்' ஓடியது. மருது பாண்டியர்கள் வரலாற்றை அசலாக பேசிய " "சிவகங்கைச் சீமை" தோற்றது. காணொளி
  8. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  9. சிறு பிள்ளையாக பிரபாகரன் தொண்டைமான் பற்றி நான் முன்னர் பதியாத இன்னொரு முக்கியமான விடயம் அடுத்த வருடம் நடந்தேறியது. 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் தரையிறங்கும் என்று கூறப்பட்டது. பலாலி வினாமப்படைத் தளத்தில் வந்திறங்கிய விமானங்களிலிருந்து இறக்கப்பட்ட டிரக் வண்டிகளில் இந்திய ராணுவத்தினர் வந்திறங்கினர். பலாலி யாழ்ப்பாண வீதியில் அவர்கள் பவணி வந்தபோது பலத்த ஆரவாரத்துடனான வரவேற்பு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால், பிரபாகரனை இந்திய அரசு தில்லியில் ஒரு கைதியைப் போல அடைத்து வைத்திருக்கிறது என்கிற செய்தி பரவியபோது இந்திய ராணுவத்தை வரவேற்ற தமிழ் மக்களின் மனோநிலை மாறத் தொடங்கியது. அவர்கள் இந்திய ராணுவத்தின்மீது தமது எதிர்ப்பினைக் காண்பிக்கத் தலைப்பட்டனர். இந்திய ராணுவ வாகனங்களை வீதிகளில் வழிமறித்தனர்.தமது தலைவர் மீளவும் பாதுகாப்பாக தம்மிடம் திருப்பியனுப்பப்படவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். பிரபாகரன் மீது தமிழர்கள் வைத்திருந்த பாசத்தினையும், நம்பிக்கையினையும் கொழும்பிலிருந்தே அவதானித்துக்கொண்டிருந்த தொண்டைமான் அதிசயித்துப் போனார். "பிரபாகரன் ஒரு மக்கள் தலைவனாக உருவாகிவருகிறார்" என்று அவர் என்னிடம் கூறினார். பிரபாகரன் தொடர்பாக தொண்டைமான் அதுவரை வைத்திருந்த கண்ணோட்டத்தில் இது மிகப்பெரிய வேறுபாட்டினைக் கொண்டிருந்ததாக நான் அப்போது உணர்ந்தேன். அதுவரை பிரபாகரனை ஒரு ராணுவ வல்லுனனாக, ஒரு சிறந்த ராணுவத் திட்டமிடலாளனாகவே அவர் எண்ணியிருந்தார். ஜெயவர்த்தனாவின் அரசையும் ராணுவத்தையும் ராணுவப் பலத்தின் மூலம் முடக்கி சமாதான மேசைக்குக் கொண்டுவருவதில் பிரபாகரன் முயலும் அதேவேளை, ஜனநாயக தமிழ் அரசியல்வாதிகள் அரசியலமைப்பினை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்றே அவர் நம்பியிருந்தார். பிரபாகரன் தொடர்பாக நீங்கள் கொண்டிருந்த கண்ணோட்டம் மாறக் காரணம் என்ன என்று அவரிடம் வினவினேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார், "மக்கள் அவருடன் இருக்கிறார்கள்". 1989 ஆம் ஆண்டிலிருந்து பிரபாகரனுடன் அவர் தொடர்ச்சியான தொடர்பாடல்களில் ஈடுபட்டு வரத் தொடங்கினார். தனது சரிதையினை விரிவாக்க அவர் என்னை இரண்டாவது முறை அழைத்தபோது பிரபாகரனுக்கும் தனக்கும் இடையே இருந்த உறவினை தனது வாழ்வின் மிக முக்கிய விடயமாகக் குறிப்பிடவேண்டும் என்று என்னிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
  10. மிராஜ் வகுப்புக் கடற்கலத்தில் கரும்புலித் தாக்குதல் பயிற்சியின் போது கடற்கரும்புலிகள் கலப்பெயர்: முத்துமணி "சக்கைவண்டி தன்னிலேறிச் சரித்திரங்கள் போவார் - தமிழ்ச் சந்ததியின் வாழ்வுக்காகத் தங்களுயிர் ஈவார்." முதன்மைச் சுடுகலன்: எம்2 பிரௌனிங்கு (.50)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.