Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87993
    Posts
  3. nilmini

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    929
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    38771
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/04/23 in all areas

  1. இந்த பிள்ளை புதுசா கள்ளடிக்கிற மாதிரி தெரியலை. @nilmini உம் இப்படி ஒருநாள் படம் எடுத்து போடுவா என நம்புவோம்.
  2. கந்தையர்......நீங்கள் இலக்கண சுத்தமாக சொல்லுறியள் ........ஆனால் கதைக்கிற பாமர மக்களுக்கு வல்லினம் மெல்லினம் பலவீனமாய் இருந்தால் என்ன செய்யிறது......நாதத்தில பிழையில்லை தானே .....! 😁
  3. ஆடுகளுக்கு ஏறும் திறமையுண்டு. மலையேறும் ஆடுகள் போல . சில சமயம் மரத்தின் உச்சி பற்றைகளுக்கு மேல் நின்று மேயும்.
  4. இந்த விளம்பரம் எப்படி இருக்கு.
  5. தனிமையிலே இனிமை காண முடியுமா........! 😍
  6. நன்றி இணைப்புக்கு சுவியர் இவ்வளவுதானா இன்னும் இருக்கே இங்குள்ள வயது போன வெள்ளைகள் செத்தால் ஐந்து கார் பின்னால் வெறுமனே போகும் யாரும் உறவினர்கள் தனது செத்த வீட்டுக்கு வந்தால் சுடலை மட்டும் பயனிப்பதுக்கு உயிரோடு இருக்கும்போது புக் பண்ணியிருப்பார்கள் ஆனால் ஆனாதை போல் கடைசி காரியங்கள் நடைபெறுவது சர்வசாதாரணம் இந்த நாடுகளில் . ஆனால் நம்ம நாடுகள் அப்படியா இழவு வீடே அறுந்த உறவுகளை சேர்த்து வைக்கும் களமாக மாறும் என்னதான் இழப்பின் சோகம் என்றாலும் பெண்கள் வாய் விட்டு அழுது கூடவே இருந்து இழப்பின் நெருங்கிய நபரை சகஜநிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள் கடைசியில் படையல் அது இது என்று ஓடித்தான் அடங்கும் .
  7. போராட்டத்துடன் தன்னை இணைத்துக்கொண்ட அன்டன் பாலசிங்கம் *************************************************************************************************** செய்திக்குறிப்பு : திரு சபாரட்ணம் அவர்களுக்கு அவரது வாசகர் ஒருவர் அனுப்பிய தகவல் ஒன்றினை சபாரட்ணம் இணைத்திருந்தார். அதன் விபரங்கள் கீழே. 1978 முதல் 1979 வரையான காலப்பகுதியில் புலிகளும் டெலோ அமைப்பும் இளைஞர்களுக்கான மென்பந்து கிரிக்கெட் ஆட்டங்களையும், உதைபந்தாட்டங்களையும் வட மாகாணத்தில் ஒழுங்கு செய்திருந்தனர். கல்வி உயர்தரப் பரீட்சை நடந்துவந்த காலப்பகுதியில் வடமராட்சியின் வதிரி, துன்னாலை மற்றும் கரணவாய் ஆகிய பகுதிகளில் இந்த ஆட்டங்கள் நடந்தன. யாழ்ப்பாணம் மற்றும் அதனோடு அண்டிய பகுதிகளிருந்து வந்த அணிகளுடன் வடமாராட்சி அணிகள் போட்டிகளில் கலந்துகொண்டனர். இந்தப் போட்டிகளில் கலந்துகொண்ட முக்கியமானவர்களில் பொன்னமான் (குகன் - யோகியின் சகோதரர்) யாழ் இந்துக்கல்லூரியில் பயின்றுவந்த திறமையான கிரிக்கெட் வீரர். அப்படியான போட்டியொன்றில் நான் பிரபாகரனைக் கண்டேன். போட்டியின் பின்னர் வீரர்களும், பார்வையாளர்களும் கலந்துரையாடுவதுடன் உணவுவகைகளையும் பகிர்ந்துகொள்வது வழக்கம். இப்படியான கலந்துரையாடல்களில் அரசியலும் வழமையாக இடம்பெறுவதுடன் ஒரேவகையான கருத்தினைக் கொண்டவர்கள் ஒன்றிணைந்து பயணிப்பதும் வழமையானது. கடல்ப்புறா எனும் சரித்திர நாவல் சோழர்களின் பெருமையினைப் பற்றியும், அவர்களின் கடலறிவு பற்றியும் பேசுகிறது. இந்த நாவலின்ன் பெரும்பகுதி கடாரம் எனப்படும் பகுதியினை மையப்படுத்தியே கூறப்படுகிறது. மேலும், அகூதா எனும் பிரபலமான பெயர் ஒன்றும் இக்கதையில் கூறப்பட்டிருக்கிறது. திரு பிரபாகரன் இந்த நாவலை வாசித்திருந்தார். சோழர்களின் கடல்வலிமை பிரபாகரனை மிகவும் கவர்ந்திருந்தது. இதனாலேயே கேர்ணல் சங்கர் முதலாவது கப்பலை புலிகளுக்காக அமைத்தபோது அதற்கு பிரபாகரன் கடல்ப்புறா என்று பெயரிட்டார். பின்னாட்களில், 1987 ஆம் ஆண்டு புலிகளின் மூத்த தளபதிகளான லெப்டினன்ட் கேணல்கள் குமரப்பாவும் புலேந்திரனும் கடல்ப்புறாவில் பயணித்துக்கொண்டிருந்தவேளை இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். நான் இந்தச் சம்பவம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் நன்கு அறிந்திருந்தேன். அதுலத் முதலியுடன் இக்காலப்பகுதியில் அடிக்கடி தொடர்புகொண்டு வந்திருந்தேன். அதுபற்றிய தகவல்களை இங்கே தருகிறேன், குமரப்பாவின் தற்கொலையோடு தொடர்புபட்ட விடயம் ஒன்றைப்பற்றியும், அது என்னை எவ்வளவு தூரத்திற்குப் பாதித்திருந்தது என்பது பற்றியும் கூறுகிறேன். காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையில் பொறியியலாளராகப் பணியாற்றிவந்த ஒருவரின் மனைவி தனது கணவருக்கு என்ன நடந்தது என்பற்றி அறிந்துகொள்ள டெயிலி நியூஸ் காரியாலயத்திற்கு வந்திருந்தார். மூத்த ஆசிரியர் மணிக் டி சில்வா அவரை என்னிடம் அழைத்து வந்திருந்தார். அந்தப்பெண் எனக்கு முன்னால் அமர்ந்துகொண்டார். நான் யாழ்ப்பாண அரசாங்க அதிபரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, அந்த இளம் பொறியியலாளர் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறினார். அந்த பொறியியலாளரை நான் கண்டிருக்கிறேன், கைத்தொழில் அமைச்சரான சிறில் மத்தியூ காங்கேசந்துறைக்கு விஜயம் செய்தவேளை நானும் அவருடன் சென்றபொழுது அந்தப் பொறியியலாலறைச் சந்தித்திருந்தேன். அவர் இறந்த செய்தி எனக்குக் கண்ணீரை வரவழைத்தது. ********************************************************************************************* இனப் பூசலின் அரசியல் 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னைப் பலப்படுத்திக்கொண்ட ஜெயவர்த்தனவின் பலம் சிறிமாவை மேலும் பலவீனப்படுத்தி மக்கள் முன் அவரது நம்பகத்தன்மையை வலுவிழக்கப்பண்ணியதன் மூலம் இன்னும் பலமடைந்து வந்தது. அவரது அடுத்த இலக்காக இருந்தது இரண்டாவது தடவையும் ஜனாதிபதியாகுவதுதான். புதிய அரசியலமைப்பின் மூலம் அவர் நாட்டின் தலைவராகவும், அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவராகவும், முப்படைகளின் பிரதான கட்டளையிடும் தளபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு பங்குனி 20 ஆம் திகதி விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்து சிறிமாவின் அரசியல் நம்பகத்தன்மையினை வெகுவாக அழித்திருந்தார். 1970 இலிருந்து 1977 வரையான காலப்பகுதியில் பிரதமராக இருந்த சிறிமா அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்று ஜெயவர்த்தன குற்றஞ்சாட்டியிருந்தார். அவரது முதலாவது பதவிக்காலம் 1960 இலிருந்து 1965 வரை நடைபெற்றிருந்தது. அவருக்கெதிராக முன்வைக்கப்பட்டிருந்த முக்கியமான குற்றச்சாட்டு என்னவென்றால், அளவுக்கதிகமான விவசாயக் காணிகளை வைத்திருக்கும் நிலச் சுவாந்தர்களிடமிருந்து அவற்றினை கையகப்படுத்தி மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் சட்டத்தினை சிறிமா கொண்டுவரவிருந்த சமயத்தில் தனக்குச் சொந்தமான தென்னங்காணிகளின் ஒருபகுதியினை அவர் தனியாருக்கு விற்றிருந்தார் என்பது. இதனால் அவரை ஒரு எமாற்றுப்பேர்வழி என்று மக்கள் அக்காலத்தில் தூற்றி வந்திருந்தனர். ஜே ஆர் இனால் நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகளான வீரரட்ண, சர்வானந்தா, அல்விஸ் ஆகியோர் அடங்கிய ஆணைக்குழுவினருக்கு, ஆணைக்குழு அமைக்கப்பட்ட ஆண்டிற்கு முன்னதாக நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்றினை விசாரிக்கும் அதிகாரம் இல்லையென்று சிறிமா தாக்கல் செய்த வழக்கினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால், சிறிமா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க தன்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொண்ட ஜெயவர்த்தன, நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்தார். 1978 ஆம் ஆண்டு கார்த்திகை 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜே ஆர் முன்வைத்த திருத்தத்தினை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. இதன்மூலம் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியினால் அமைக்கப்படும் விசேட விசாரணைக் குழுக்களின் தீர்ப்புக்களுக்கெதிராக மேல்முறையீடு செய்யமுடியாது என்ற திருத்தம் அரசியல் யாப்பில் இணைக்கப்பட்டது. 1982 இல் ஜெயவர்த்தனவினால் அரசியல் யாப்பில் சேர்க்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழு பற்றிய சட்டத் திருத்தம் தன்னை அடுத்துவரவிருந்த ஜனாதிபதித் தேர்தலில் பங்கெடுக்காது தடுக்கவே என்று கடுமையாகக் குற்றஞ்சாட்டிய சிறிமா, இந்த விசாரணைகளில் பங்குகொள்வதை நிராகரித்திருந்தார். தனது காரணத்தை விவரித்து சிறிமா எழுதிய கடிதத்தினை உதாசீனம் செய்த விசாரணை ஆணைக்குழு அவரது பிரசன்னம் இன்றியே விசாரணைகளை நடத்தினர். மூன்று நீதிபதிகளடங்கிய குழு, சிறிமா தனது அதிகாரத்தினைத் துஷ்பிரயோகம் செய்திருந்தார் என்று தீர்ப்பளித்திருந்தனர். 1980 ஆம் ஆண்டு புரட்டாதி 24 ஆம் திகதி பாராளுமன்றம் இந்த ஆணைக்குழுவின் தீர்ப்பினை முழுமையாக ஏற்றுக்கொண்டது. ஜோன் கொத்தலாவலை முன்னாள் பிரதமர் ஜோன் கொத்தலாவலை உட்பட பல பிரமுகர்களின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் சிறிமாவுக்கெதிரான சிவில்த் தடைகளை பாராளுமன்றத்தின் ஆதரவுடன் ஜெயவர்த்தன நடைமுறைப்படுத்தினார். சாதாரண பொதுமகன் ஒருவருக்கிருக்கும் உரிமைகள் பறிக்கப்பட்ட சிறிமா 7 வருடங்கள் அவதிப்பட்டிருந்தார். சிறிமாவுக்கெதிரான உரிமை மறுப்பு நடவடிக்கைகளை அமிர்தலிங்கம் கடுமையாகக் கண்டித்திருந்தார். ஆனால், சிறிமாவின் உரிமைகளுக்கெதிரான தீர்மானம் 139 இற்கு 19 வாக்குகள் என்கிற அடிப்படையில் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும், சுதந்திரக் கட்சியும் எதிர்த்து வாக்களித்தன. சிறிமாவின் மீதான உரிமை மறுப்பு நடவடிக்கை இரு கட்சி ஜனநாயக அரசியலினை ஒரு பக்கமாகச் சரிக்கவே எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றால் அது மிகையில்லை. சிறிமாவின் நெருங்கிய நண்பராக இருந்த இதிரா காந்தி, சிறிமா மீதான தடையினை ஜனநாயகத்திற்கெதிரான நடவடிக்கை என்று விமர்சித்திருந்தார். ஜெயவர்த்தனா அமெரிக்கா நோக்கிச் சாய்ந்துவருவதை உணர்ந்துகொண்ட இந்திரா, அதனை மாற்றுவதற்கு அடுத்த தேர்தலில் சிறிமா மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என்று விரும்பினார். ஆனால், அது நடைபெறாமல்ப் போய்விட்டது. சிறிமாவை அரசியலிலிருந்து முற்றாக அகற்றியதன் பின்னணியில், அமெரிக்காவின் பக்கம் நோக்கிச் சாய்ந்துவரும் இலங்கையை எப்படியாவது வழிக்குக் கொண்டு வந்திடலாம் என்று இந்திரா எதிர்பார்த்ததும் நிகழாது போய்விட்டது. புது தில்லியிலும், கொழும்பிலும் என்னுடன் பேசிய சில இந்திய அதிகாரிகள், சிறிமாவின் அரசியல் மீள்வருகை முற்றாக அழிந்துவிட்டதன் மூலம் இந்தியாவின் நலன்களுக்கு எவ்வகையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைப்பற்றி தனக்கு விரிவான அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு இந்திரா தம்மைக் கேட்டிருந்ததாகவும், அந்த அறிக்கையில் அலசப்பட்ட விடயங்களிலிருந்து இலங்கையினை மீளவும் அணிசேரா நாடுகளின் அமைப்பிற்குள் எப்படிக் கொண்டுவரலாம் என்பதுபற்றிய திட்டங்களையும் வகுத்துக்கொண்டதாகவும் கூறியிருந்தனர். இந்த தேடுதல்களின் விளைவாகவே தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு உதவுவதன் மூலம், அவர்களைக் கருவியாகப் பாவித்து, ஜெயவர்த்தனவின் அரசுமீது அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம் என்று இந்திரா முடிவெடுத்ததாகவும் கூறியிருந்தனர். சிறிமாவை 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலி பங்குபற்றுவதிலிருந்து அகற்றுவது மட்டுமே ஜனநாயத்திற்கெதிரான செயலாக ஜெயவர்த்தனவினால் செயற்படுத்தப்படவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தனக்கு அடிபணிய வைக்கவும் ஜெயவர்த்தன அதனைச் செய்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதான எதிர்க்கட்சியாகவும், அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகவும் பாராளுமன்றத்தில் அமர்ந்தபோது ஜெயவர்த்தனா அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததெல்லாம் தனக்கு அடிபணிந்து தான் செய்வதை ஆமோதிக்கக் கூடிய ஒரு பொம்மை எதிர்க்கட்சியைத்தான். ஆனால், தான் எதிர்பார்த்தது நடக்காது போகவே தமிழர்களுக்கு ஒரு பாடத்தைப் புகட்டவும், அமிர்தலிங்கத்தை அச்சுருத்தி தனக்கு அடிபணிய வைக்கவும் 1977 ஆம் ஆண்டு ஆவணிக் கலவரத்தை ஜெயவர்த்தனா திட்டமிட்டு நடத்தினார். தான் இரண்டாவது முறையும் ஜனாதிபதியாவதற்கு சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை முற்றாகப் பலவீனப்படுத்துவதும் தமிழர்களின் வாக்குகள் அனைத்தையும் தனக்கே விழும்படி பார்த்துக்கொள்வதும் அவசியம் என்பதை ஜெயவர்த்தனா உணர்ந்திருந்தார். இதனை விடவும், காலம் காலமாக சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்துவரும் சிங்கள கடும்போக்குத் தேசியவாதிகளின் வாக்குகளையும் கவர்வதன் மூலம் 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று தனது வெற்றியை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிந்துவைத்திருந்தார். புதிய அரசியலமைப்பின்படி தேர்தலில் முதலாவது சுற்றில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளரே ஜனாதிபதியாகமுடியும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
  8. ஐய்க்... நம்ம ஊரு... அப்படியே பழம் றோட்டாலை போய், வலதுபக்கம் வாற, பிள்ளையாருக்கும் கும்புடு போட்டு, அரசடி ரோட்டில், ஒரு ரைட், 10 மீட்டரில், கந்தபுராண வீதியில் ஒரு லெப்ட்... நம்ம வீடு. அரசடி ரோட்டில் லெப்ட் எடுத்தால், நல்லூர் போகலாம். போறவழியில் இடது பக்கம் மடத்து பள்ளிக்கூடம்.
  9. தனி மடலில் அவர்களின் தொடர்பு அனுப்பியுள்ளேன் வைபர் ல தொடர்பு கொள்ளுங்க . உங்களின் வேலை விபரங்களை அவர்களிடம் சொல்லி வந்து பார்க்க சொல்லி அவர்களின் மதிப்பீட்டினை பெற்று பின்னர் வேலைகளை ஆரம்பியுங்கள் , பொருட்களை நீங்களே வாங்கி குடுத்தால் அவர்கள் கூலி contract ல செய்து தருவார்கள்
  10. அவருக்கு எது அவசிய தேவையோ அதை சொல்கிறார்........ஜென்டில்மேன் ......! 👍
  11. போடச்சொன்னால் போட்டுகிறேன்......! 😍
  12. "எய்தவன் இருக்க, அம்பை நோகக் கூடாது" ஈழப்பிரியன். 🤣
  13. எழுதிவைத்திருக்கிறேன் இன்று வீட்டுக்கு போய் இன்னும் கொஞ்சம் கூட எழுதி பதிவிடுகிறேன் சிறி. நீங்கள் எல்லோரும் ஆவலாக வாசிப்பதால் நிறைய புதினங்களை சேர்த்து எழுதுகிறேன்.
  14. கு சா அண்ணா, கோடாலித்தைலத்தை பற்றி பதில் போட்டுவிட்டு, வேலைக்கு வந்து பார்த்தால் என்ர மேசையில உங்கட ஊர் ICE Eau de Colongne இருக்கு.
  15. நாங்கள் எல்லோரும் இப்பவும் பாவிக்கிறோம். சிங்கப்பூரில் வாங்குவது மிகவும் விசேஷமாக இருக்கும்.
  16. அய்யய்யயோ நாங்கள் கந்தர்மடம் காப்புரிமை எடுக்க முதல் சுவி வீட்டில் இருந்து யூரோப் முழுவதும் பிரபல்யம் ஆகி விட்டதே (தோட்டுரிமையோட😂) ஆனால் உண்மையிலேயே உடையார் ஒழுங்கை நாவலர் குடும்பம் எல்லோரும் சேர்ந்து அப்பம்மாவின் வளவில் ஆறு மாதத்துக்கு போதுமான தூள் சம்பல் இடிப்பித்து எல்லாக்குடும்பக்களிடையும் பிரித்து எடுத்ததைப்போல நான் வேறெங்கும் பார்க்கவில்லை. நாலு மா இடிக்கும் பெண்கள் விடியவே வந்து கடலைப்பருப்பு, உளுந்து, பயறு, செத்தல் மிளகாய், கருவேப்பிலை எல்லாம் வறுத்து கல்லுரலில் அருவல் நெருவலாக இடிப்பார்கள். நிறைய தேங்காய் துருவி கருக வறுத்து கொஞ்ச தூள் சம்பலுக்கு அதையும் சேர்த்து செய்வார்கள். இது,தென் இந்தியாவில் செய்யும் இட்லி தோசை பொடி மாதிரி இருக்கும். தோசை, சோறு, பால் சோறு எண்டு எல்லாத்துக்கும் அதையும் சேர்த்து சாப்பிடலாம்
  17. எல்லோருடைய கொமெண்ட்ஸ்க்கும் ஊக்கத்துக்கும் மிகவும் நன்றி. எப்பவோ எழுத நினைத்தது. அங்கு வாழும் மக்களில் 95 வீதமானோர் 500 வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கை தான் வாழ்கின்றனர். மிகவும் வறுமை. வரும்போது அநேகமான கொண்டுபோன பொருட்களை அங்கு விட்டுட்டு அழகான கலை பொருட்களை வாங்கி வந்தோம். இந்த சிறுமிகள் மாலையில் பவோபாப் என்னும் ராட்சத மரத்தில் இருந்து பெறும் மணிகளை கொண்டு செய்த மாலைகளை விற்றுத்தான் பள்ளிக்கூடம் போகிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் கடிகாரம் நான் குடுத்தது. இந்த மரம் நெடுந்தீவு மற்றும் மன்னாரில் போர்த்துக்கீசரால் ஆபிரிக்காவில் இருந்து கொண்டுவந்து நடப்பட்டது. இந்த இலைகள் தண்ணிப்பிடிப்பானவை. அரேபியார்களுக்கு குதிரை விற்கும் காலத்தில் குதிரைகள் இந்த மரத்தின் கீழ் இளைப்பாறி தண்ணிக்காக இலைகளையும் சாப்பிட்டதாக நெடுந்தீவு சென்றபோது சொன்னார்கள். யாழ்ப்பாணத்தில் செய்யும் பனை சார்ந்த கைவினை பொருட்களின் தரம் பத்தாது. இந்த வறிய மக்கள் செய்து வைக்கும் பொருட்கள் மிகவும் உறுதியான நல்ல தரமானவை. ஏனெனில் அதை செய்வதற்கு பயிட்சியாளர்கள் இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் அப்படி செய்தா நல்லம். அகப்பைகள் எல்லாம் கொஞ்ச காலத்துக்கு தான் பாவிக்கலாம். நான் ஒவ்வொரு முறையும் வேண்டும்போது அவர்களுக்கு சொல்லியிருக்கிறேன். தரமானதாக செய்தால் எல்லோரும் நிறைய வேண்டுவார்கள் (வெள்ளைக்காரர் உற்பட) யாழ் சந்தையில் எனக்கு சில வெள்ளைக்காரர்கள் அப்படி அவர்களுக்கு சொல்லுமாறு கேட்டுக்கொண்டனர். நிறைய எழுத இருக்கு. நான் பாவிக்கும் கூகிள் மொழி பெயர்ப்பு அவ்வளவு நல்லம் இல்லை. நீங்கள் எல்லோரும் எப்படி தமிழில் எழுதுகிறீர்கள்?
  18. ஏலம் மணக்கும் போடி · #முப்பது_வருஷத்துக்கு முன்னால ஒரு #கல்யாணவீட்டுக்கு போனோம்னா... #ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்டிருக்கும். பெண்கள் அமர கலர் கலரா பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும். #சின்ன சின்ன பசங்க எல்லாம் ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள். #பெரியவர்கள் தாம்பூலம் நிறைந்த வாயோடு அரசியல் முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள். #மண்டத்துல ஒரு ஓரமா பச்ச பெல்ட் கட்டுன பெருசுங்க எல்லாம் சட்டைய கழட்டி போட்டுட்டு ரம்மி விளையாடிக்கொண்டு இருப்பார்கள். #சட்டைப்பையில் டெஸ்ட்டரோடு அங்கேயும் இங்கேயும் திரியும் மைக்செட் காரரை ஏதோ விஞ்ஞானி மாதிரி பார்ப்பார்கள். #விஷேஷத்துக்கு வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களை பைலட் ரேஞ்சுக்கு மதித்து அவர்களை உபசரிப்பார்கள். வழ வழப்பான #சில்க்துணியில் பெரியகாலரோடு சட்டை அணிந்து ,தலை முடியை வித்தியாசமாக சீவியிருக்கும் இளைஞர்களை ஹீரோ போல பார்ப்பார்கள். #விஷேஷத்துக்கு இருசக்கர வாகனங்களில் வந்தாலே தனிமதிப்புண்டு. அதிலும் புல்லட் ,எஸ்டி, ராஜ்தூத் "சில்வர் ப்ளஸ் போன்ற வாகனங்களில் வருவோருக்கு சிறப்பு மரியாதை நிச்சயம் உண்டு. #சாப்பாட்டு பந்தியில் நிச்சயம் ஒரு சண்டையும் கோபித்து கொண்டு அடம்பிடிக்கும் நிகழ்வும் நடக்கும். இப்படியாக.. ஒரு விஷேஷத்துக்கு போயிட்டு வந்தோம்ன்னா அங்கு நடந்த நிகழ்வுகளின் நினைவு சுவடுகள் மறைய மாதங்களோ #வருடங்களோ ஆகும். எப்ப இந்த பாழாய்போன #செல்போன் வந்துச்சோ...குறிப்பா இணைய வசதியோட ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் வந்துச்சோ... அப்போ மறைந்து போனது மனித நேயமும் சக மனித நட்பு பாராட்டலும். #இப்போல்லாம்.... பஸ்சுல ,ட்ரையின்ல ,கல்யாண வீட்டுல எழவு வீட்டுல, பார்க்குல, பீச்சுல, தியேட்டர்லனன்னு....இப்படி எங்கெங்கு போனாலும் குனிந்த தலை நிமிராம பக்கத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம கைப்பேசியே கதின்னு கிடக்குறோம். #காக்கா கத்துது...மாமாவும் அத்தையும் வரப்போறாங்கடான்னு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி அந்த உறவுகளின் வருகைக்காக ஏங்க வைத்த தாய்மார்களின் குரல்கள் மழுங்கடிக்கபட்டு... வாட்சப் வீடியோ கால்களின் சத்தங்கள் சகல வீடுகளிலும் ஒலிக்க தொடங்கிவிட்டது. #விஞ்ஞான வளர்ச்சி அவசியம்தான். அதுவே நம் மெய்ஞானத்தை அழிக்கிற காரணியாக மாறிவிடக்கூடாது. (படித்ததில் பிடித்தது)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.