Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20019
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8910
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/12/23 in all areas

  1. இவற்றைப் பார்க்கும்போது குழந்தைகளாகவே இருந்திடலாம் போல் இருக்கு.......! 😂
  2. பூமி சுத்துதோ இல்லையோ பார்க்க எனக்கு தலையை சுத்துது. இதைத் தானே இந்தியா முறியடித்துக் கொண்டிருக்கிறது.
  3. இல்லை, அவர் மாறமாட்டார் எனவே கருதுகிறேன். கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா வழங்கிய ஆயுதம், இரஸ்சியாவின் கண்ணிவெடிகளில் இரஸ்சிய இராணுவம் சிக்குவதாக கூறிய இரஸ்சிய அறிக்கையினை வைத்து தானாகவே ஒரு செய்தியினை தயாரித்துள்ளது போல தெரிகிறது, இந்த செய்தியினை எந்த தரப்பும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என கருதுகிறேன். நாங்கள் அணிந்து கொண்டிருக்கும் நிறக்கண்ணாடியூடாக பார்த்தால் அந்த காட்சிகள் அந்த குறிப்பிட்ட நிறத்திலே தெரியும் அதனைதான் Biased என கூறுகிறார்கள். உங்கள் நகைசுவை புரிகிறது.
  4. தனித்து நின்று போராடும் உக்ரேன் வீரர்களை பாராட்டியே ஆக வேண்டும்.
  5. என்ன பரபரப்பு ரிசியும் கட்சி மாறிட்டார் போல...??
  6. அது தண்டாவாளங்களிலெல்லோ முறியடிக்கிறது 😁
  7. கவிதைகளின் நிறம்💞 · Rejoindre Raj Sathish · · ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது. "இருவடை எடுத்து ஒருவடை என்பார் திருவோடு ஏந்தி தெருவோடு போவார்..!" மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும். இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும், இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள். ஒரு ஆட்டோவில், டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப்பட்ட வாசகம்.. ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’ இந்த வாசகம், இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல் ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு. அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம். ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், ‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?’ வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில் தான் வெற்றி இருக்கிறது. டீக்கடையின் வரிகளும், ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தை தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம் தான் அதில் வித்தியாசம். சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை. நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல், அதை செம்மை படுத்தி பேசிப்பாருங்கள்.. வெற்றி நிச்சயம். ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்... ‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.’ எண்ணங்கள் அழகானால் வார்த்தைகள் அழகாகும், வார்த்தைகள் அழகானால் சிந்தனைகள் அழகாகும், சிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும்!!!.....!
  8. காந்தியத்தை திட்டமிட்டுச் சிதைத்த சிங்களப் பேரினவாதம் சிங்களப் பேரினவாதத்தின் தூண்களில் ஒன்றான அன்றைய பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, ஜெயாருடன் வவுனியா நகருக்கான உதவிப் பொலீஸ் அத்தியட்சகராக ஹேரத் எனும் சிங்கள இனவாதி நியமிக்கப்பட்டதன் பின்னர் காந்தியத்திற்கெதிரான பிரச்சாரங்கள் வேகம்பெறத் தொடங்கின. பொலீஸ் மா அதிபரூடாக பாதுகாப்பு அமைச்சிற்கு ஹேரத் அனுப்பிய பல அறிக்கைகளில் "சட்டத்திற்குப் புறம்பான இந்தியக் குடியேற்றவாசிகளை" உடனடியாக அகற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த அறிக்கைகள் ஜனாதிபதி ஜெயார் தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களில் தொடர்ச்சியாக கவனத்தில் எடுக்கப்பட்டு வந்தன. ஆகவே, அன்று பொருளியல், வர்த்தக மற்றும் கப்பற்றுரை அமைச்சராகவிருந்த இன்னொரு பெயர்பெற்ற இனவாதியான லலித் அதுலத் முதலியிடம் காந்தியம் குறித்து விசாரித்து தன்னிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜெயார் பணித்தார். இதற்கமைய 1982 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தின் ஆரம்பத்தில் காந்தியம் பற்றி விசாரிக்கவென்று இப்பகுதிக்குச் சென்றிருந்தார் லலித் அதுலத் முதலி. காந்தியம் தொடர்பான தனது விசாரணைப் பயணம் பற்றி வெளித்தெரியாதிருக்க, அப்பயணத்தை அமைச்சர் ஒருவரின் சாதாரண பயணமாகக் காட்டிக்கொண்ட லலித் அதுலத் முதலி, மாங்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சந்தையொன்றைத் திறக்கவே தான் வந்ததாகக் காட்டிக்கொண்டார். அமைச்சரின் இந்தப் பயணத்தைப்பற்றிய செய்திகளைச் சேகரிக்க அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர் குழுவில் நானும் இருந்தேன். மாங்குளம் விருந்தினர் மாளிகையில் நாம் தங்கவைக்கப்பட்டதோடு சனிக்கிழமை இரவு ஒன்றுகூடல் ஒன்றும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அந்த ஒன்றுகூடலில் வவுனியா நகரின் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ஹேரத்தும் பங்குகொண்டிருந்தார். பத்திரிக்கையாளர்களிடையே பேசிய ஹேரத், வவுனியாவில் இடம்பெற்றுவரும் விவசாயக் குடியேற்றங்களினால் ஏற்பட்டுவரும் பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிட்டார். இலங்கையில் வாழத் தகுதியில்லாத இந்திய வம்சாவளித் தமிழர்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகமும், காந்தியமும் சட்டத்திற்கு முரணான வகையில் வவுனியா மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான காணிகளில் குடியேற்றிவருவது பாரிய குற்றமாகும் என்று அழுத்தமாகக் கூறினார். பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்தவுடன், தனிமையில் என்னுடன் உரையாடவேண்டும் என்று அழைத்த ஹேரத், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவனான என்னிடம், இக்குடியேற்றங்கள் தொடர்பாக, யாழ்ப்பாணத்தவன் என்கிற ரீதியில் எனது உணர்வுகளை அறிந்துகொள்ள எத்தனித்தார், "இக்காணிகள் யாழ்ப்பாணத்து விவசாயிகளுக்குத்தான் கிடைக்கப்பட வேண்டும். ஆனால், அவர்களோ இந்தியர்களைக் குடியமர்த்துகிறார்கள்" என்று என்னைப் பார்த்துக் கூறினார். மறுநாள் அப்பகுதியில் வியாபாரம் செய்துவந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர்களிடம் நான் பேசியபோது, வவுனியாவில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் குடியேற்றப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தவர்கள் கிளர்ந்தெழவேண்டும் என்று தம்மை ஹேரத் நச்சரித்துவந்ததாகக் கூறினார்கள். மாங்குளத்தில் லலித்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சந்தையினைத் தொடர்ந்து நாம் வவுனியாவில் காந்தியத்தினால் அமைக்கப்பட்டிருந்த விவசாயக் குடியேற்றக் கிராமங்களைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கே விளைச்சல் மிகுந்த காணிகளில் செழிப்பாக விவசாயம் செய்துவரும் இந்திய வம்சாவளித் தமிழர்களை நாம் கண்டோம். லலித் அதுலத் முதலியோ ராணுவத்துடனும், பொலீஸாருடனும் ரகசியச் சந்திப்புக்களை அவ்வேளை நடத்திக்கொண்டிருந்தார். இந்த கூட்டங்களிலேயே இந்திய வம்சாவளித் தமிழர்களை இந்த விவசாயக் குடியேற்றங்களிலிருந்து வெளியேற்றுவதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக பின்னர் அறிந்துகொண்டோம். ஆனால், தமது இந்த நாசகாரத் திட்டத்தினை உடனடியாகச் செய்ய அரசு எத்தனிக்கவில்லை. ஆகவே, தமது சதிச் செயலுக்கான உகந்த சூழ்நிலையினை தமது செய்தி ஊடகங்களைக் கொண்டு சிறுகச் சிறுக அரசு உருவாக்கத் தொடங்கியது. இவற்றுள் ஒன்றுதான் இக்குடியேற்றங்களூடாக காந்தியம் அமைப்பு மலையகத் தமிழர்களை புளொட் அமைப்பிற்காக சேர்த்துவருவதான பிரச்சாரம். சித்திரை 6 ஆம் திகதி வவுனியா நகரில் இயங்கிவந்த காந்தியம் அலுவலகம் பொலீஸாரினால் முற்றுகையிடப்பட்டதோடு, வைத்தியர் ராஜசுந்தரமும் கைதுசெய்து இழுத்துச் செல்லப்பட்டார். அவரது அமைப்பினால் வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டு வந்த அலுவலகங்களும் பொலீஸரினால் மூடப்பட்டன. கொழும்பு வை எம் சி ஏ கட்டிடத்தில் தங்கியிருந்த திரு டேவிட் அவர்களும் கைதுசெய்யப்பட்டார். குருநகர் ராணுவ முகாமில் கடுமையாக விசாரிக்கப்பட்ட பின்னர் வைத்தியர் ராஜசுந்தரமும், டேவிட் அவர்களும் பணாகொடை ராணுவ முகாமிற்கு மாற்றப்பட்டனர். அங்கு கடுமையான சித்திரவதைகளூடாக அவர்களிடமிருந்து பலவந்தமாக வாக்குமூலங்களை பொலீஸார் பெற்றுக்கொண்டனர். இவர்கள் இருவருக்காகவும் வாதாடிய வழக்கறிஞர் குமாரலிங்கம், ஜனாதிபதி ஜெயாருக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் டேவிட் அவர்கள் கடுமையான மலச்சிக்கலினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடலிலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறிவருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், நீதிமன்ற ஆணை ஒன்றினூடாக டேவிட் அவர்களை தான் சந்திப்பதற்கான அனுமதியினையும் பெற்றுக்கொண்டார். இதன்படி, நீதிமன்றம் கொழும்பு நீதிமன்ற வைத்தியர் சல்காடோ ஆவர்களை டேவிட் அவர்களையும் ராஜசுந்தரத்தையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்தது. வைத்தியர் சல்காடோ வழங்கிய அறிக்கையில் ராஜசுந்தரம் மீது கடுமையான சித்திரவதைகளும், தாக்குதல்களும் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் அவரது உடலில் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அமைச்சர் சிறில் மத்தியூ ஊடாக தடுத்துவைக்கப்பட்டிருந்த ராஜசுந்தரம் மற்றும் டேவிட் ஆகியோர் மீது கடுமையான பிரச்சாரத்தை பொலீஸார் முடுக்கிவிட்டிருந்தனர். திரு டேவிட் அவர்களுக்கு அபகீர்த்தியை உருவாக்கும் விதத்தில் நடந்துகொண்ட சிறில் மத்தியூ, டேவிட் தங்கியிருந்த கொழும்பு யை எம் சி ஏ அறையிலிருந்து பாலியல் உணர்வினைத் தூண்டும் சஞ்சிகைகள் பலவற்றை பொலீஸார் கண்டெடுத்ததாகக் கூறி சில சஞ்சிகைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஆனால், பொலீஸாரினால் சாட்சியங்களாக கைப்பற்றப்பட்ட அச்சஞ்சிகைகள் தன்னிடம் எவ்வாறு கிடைக்கப்பட்டன என்பதை அவர் கூற மறுத்துவிட்டார். மேலும், ஊடகங்களை தனது பிரச்சாரக் கருவிகளாகப் பாவித்த பொலீஸார், புலிகள் இயகத்திற்கும், புளொட் அமைப்பிற்கும் இடையிலான பிணக்கினைத் தீர்த்துவைக்க ராஜசுந்தரம் முயன்றுவந்ததாகவும், பிரெஞ்சு அதிகாரிகளை தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கும்படி கோரியிருந்ததாகவும் பொய்ச் செய்திகளைக் கசியவிட்டிருந்தனர். ஆனால், பொலீஸாரினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைத் தண்டிக்க போதுமானவை அல்ல என்று சட்ட மா அதிபர் அலுவலகம் அறிவித்தது. இவ்வகையான சட்டச் சிக்கல்கள் தொடர்ந்துகொண்டிருக்க இலங்கை தனது சரித்திரத்தை நிரந்தரமாகவே மாற்றப்போகின்ற 1983 ஆண்டு தமிழினம் மீதான அரச ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட இரத்தக்களரி நோக்கிச் சாய்ந்துகொண்டிருந்தது.
  9. காந்தியம் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடையில் சிங்களப் பொலீஸாராலும், சிறைக் காவலர்களாலும் படுகொலை செய்யப்பட்ட வைத்தியர் ராஜசுந்தரம் (காந்தியம்), குட்டிமணி மற்றும் தங்கத்துரை காந்தியத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான கட்டட வடிவமைப்பாளர் திரு டேவிட் அவர்கள் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தினால் ஆதரிக்கப்பட்ட ஒரு அமைப்புத்தான் காந்தியம். இவ்வமைப்பு இரு இலட்சியவாதிகளான வைத்திய கலாநிதி எஸ் ராஜசுந்தரம் மற்றும் கட்டிட வடிவமைப்பாளர் எஸ் அருளானந்தன் டேவிட் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. 1970 களின் ஆரம்பித்திலிருந்தே அகதிகளை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளில் இவர்கள் இருவரும் ஈடுபட்டு வந்திருந்தபோதும், 1977 ஆம் ஆண்டில் தமிழர் மேல் அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளின் பின்னரே காந்தியம் அமைப்பை இவர்கள் உருவாக்கினார்கள். மீள்குடியேற்றப்பட்ட அகதிகளுக்கான விவசாய ஆலோசனைகள், உதவிகள் மற்றும் விவசாயம் சம்பந்தமான பொருட்கள் ஆகியவற்றினை காந்தியம் வழங்கி வந்தது. குடியேற்றப்பட்ட அகதிகளின் பிள்ளைகளுக்கான பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்களை இவ்வமைப்பைச் சேர்ந்த தான்னார்வத் தொண்டர்கள் நடத்தி வந்தனர். அமெரிக்க தொண்டர் நிறுவனமான கெயர் இச்சிறுவர்களுக்கு திரிபோஷா போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட நிறையுணவினையும் வழங்கி வந்தது. இதற்கு மேலதிகமாக நோவிப் மற்றும் ஒக்ஸ்பாம் ஆகிய வெளிநாட்டு தொண்டர் அமைப்புக்களும் இந்த அகதிகளுக்கு உதவிவந்தன. இக்குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு இருவருடங்களுக்குள் தம்மைத்தாமே பராமரித்துக்கொள்ளவும், தமக்குத் தேவையான உணவினை தாமே தயாரித்துக் கொள்ளும் நிலைமைக்கும் வளர்ந்திருந்தன. வைத்திய கலாநிதி ராஜசுந்தரமும், மனைவியான வைத்திய கலாநிதி சாந்தி காராளசிங்கமும் 1967 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமது பட்டப்படிப்பினை நிறைவுசெய்துவிட்டு லண்டனுக்குக் குடிபெயர்ந்து சென்று வாழ்ந்து வந்தனர். 1977 ஆம் ஆண்டு தமிழர் மேல் சிங்கள அரசு திட்டமிட்ட வகையில் மேற்கொண்ட தாக்குதல்களினால் மன உழைச்சலுக்குள்ளான இவர்கள் இருவரும் வன்னிக்குத் திரும்பி வந்து ராஜசுந்தரம் முன்னர் ஈடுபட்டிருந்த அகதிகளைக் குடியேற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுவதென்று தீர்மானித்தனர். அதற்கமைய, சாந்தி காராளசிங்கம் வவுனியா நகரில் மருத்துவ சேவை நிலையமொன்றினை ஆரம்பிக்க, ராஜசுந்தரமோ காந்தியத்தின் தலைமைக் காரியாலயம் அமைந்திருந்த வவுனியா நகரிலிருந்து அகதிகளுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வைத்தியர் ராஜசுந்தரத்தின் மனிதாபிமானச் செயற்பாடுகள் வவுனியாவில் பணிபுரிந்து வந்த சிங்கள அரச அதிகாரிகளுக்கும் பொலீசாருக்கும் வெறுப்பினை ஏற்படுத்தி வந்தது. ஆகவே, அவருக்கெதிராகவும், காந்தியம் அமைப்பிற்கெதிராகவும் திட்டமிட்ட விஷமப் பிரச்சாரத்தினை அவர்கள் மேற்கொண்டு வந்தனர். காந்தியம் அமைப்பின் செயற்பாடுகளுக்கெதிரான விஷமத்தனமான பிரச்சாரங்களை சிங்கள ஆங்கிலப் பத்திரிக்கைகள் காவி வெளிவரத் தொடங்கின. இப்பிரச்சாரங்களின் அடிப்படையாக காந்தியம் அமைப்பின் மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் அரசுக்குச் சொந்தமான காணிகளை அபகரித்து வருகிறார்கள் என்பதாகவே இருந்தது. ஆனால், ராஜசுந்தரம் அவர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு, குறிப்பாக அதன் தலைவர் அமிர்தலிங்கத்திற்கெதிரான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார் என்பதனை அவருக்கெதிராகப் பிரச்சாரங்களை திட்டமிட்டு பரப்பி வந்த பொலீஸார் அறிந்திருக்கவில்லை. மேலும், புலிகளுடன் அன்று செயற்பட்டு வந்த உமாமகேஸ்வரன் தலைமையில் புலிகள் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் பண்ணையொன்றினை நடத்திவருவதையும், உமாமகேஸ்வரனுடன் ராஜசுந்தரம் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பதனையும் பொலீஸார் அறிந்திருக்கவில்லை. 1978 ஆம் ஆண்டு மார்கழி மாதமளவில் முதலாவது உழுந்துப் பயிர்ச்செய்கை மிகுந்த விளைச்சலைக் கொடுத்திருந்தது. இதன்மூலம் வைத்தியர் ராஜசுந்தரம் தலைமையிலான குடியேற்றத்திட்டம் வெற்றிகரமாக இயங்கிவருவது தெரிந்தது. ஒருமுறை ராஜசுந்தரம் அவர்கள் வெளிநாட்டு விருந்தினர் ஒருவரை தனது பண்ணைக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தபோது, அவர் வியந்துபோனார். பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த கொட்டில் ஒன்றிற்குள் அந்த வெளிநாட்டு விருந்தினரை அமரவைத்து அருந்துவதற்கு சிற்றுண்டிகளை வழங்கிக்கொண்டே தனது உள்ளக்கிடக்கையினை அவரிடம் வெளிப்படுத்தினார் வைத்தியர் ராஜசுந்தரம். "இத்திட்டம் தொடர்பாகக் கடுமையான அழுத்தங்கள் தெற்கிலிருந்து வந்துகொண்டிருக்கின்றன. பொலீஸாரும், சிங்கள அதிகாரிகளும் இத்திட்டத்தினைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். மதவாச்சியிலிருந்து சிங்களக் காடையர்களை அழைத்துவந்து எமது பண்ணைக் குடியேற்றத்தை அழித்து, அகதிகளை விரட்டப்போவதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன" என்று தான் நம்புவதாக அவர் கூறினார். "இதிலிருந்து தப்பித்துக்கொள்ள எமக்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது. இக்குடியேற்றத்திலிருந்து சில இளைஞர்களைத் தெரிவுசெய்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியினை வழங்குவதன் மூலம் தம்மைத்தாமே அவர்கள் பாதுகாத்துக்கொள்ளமுடியும்" என்று அவர் கூறினார். புளொட் அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் இவ்வாறான ராணுவப் பயிற்சிகளை குடியேற்ற இளைஞர்களுக்கு வழங்க ராஜசுந்தரம் ஆவண செய்தார்.
  10. மலிவு விற்பனை. 😂 டாலரில் மட்டுமே... கொடுக்கல் வாங்கல் ஏற்றுக் கொள்ளப்படும். 🤣
  11. ஊழல் செய்யாமல்... ஒதுக்கிய நிதி, அவ்வளவையும் பாலத்துக்கே செலவழித்துள்ளார்கள். நம்மூரில்... அரசியல்வாதியிலிருந்து உள்ளூர் கவுன்சிலரின் புருசன் வரை பங்கு கொடுத்தால் பாலம் ஒரு மழைக்கே அடித்துக் கொண்டு போய் விடும். மேலே படத்தில் உள்ளது பாலம் அல்ல வீதி. அதன் தார், மழைக்கு கழன்று அருகில் போய் இருக்கின்றது. 😂
  12. தமிழர் தாயகத்தைப் பாதுகாக்க செல்வா முயன்ற தடுப்புச் சுவரும், அவரை இருமுறை ஏமாற்றிய சிங்களவர்களும் செல்வாவை ஏமாற்றுமுன் நமட்டுச் சிரிப்புடன் கைகொடுக்கும் சிங்கள இனவாதத்தின் பிதாமகன் பண்டாரநாயக்க 1957 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கவுடன் தந்தை செல்வா செய்துகொண்ட ஒப்பந்தத்தில், குடியேற்றத்திட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த ஒப்பந்தத்தின்படி அமைக்கப்படவிருக்கும் பிராந்திய கவுன்சில்களுக்கே வழங்கப்படவேண்டும் என்று அவர் கேட்டிருந்தார். இதுகுறித்த ஒப்பந்தத்தின் பகுதி "பி" இன் சரத்து 6 பின்வருமாறு கூறுகிறது, 6. குடியேற்றத்திட்டங்களில் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் அதிகாரமும், இத்திட்டங்களில் ஆட்களை வேலைக்கு அமர்த்தும் அதிகாரமும் பிராந்தியக் கவுன்சில்களுக்கே இருக்கும். இந்த ஆணையினை நடைமுறையில் இருக்கும் கல்லோயாக் குடியேற்றத்திட்டத் திட்டத்தில் பயன்படுத்துவது குறித்தும் ஆராயப்படும். மேலும், 1965 ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்கவுடன் செல்வா செய்துகொண்ட உடன்படிக்கையில் தமிழர் தாயகத்தை பாதுகாப்பதற்காக மேலும் இரு விடயங்களை கோரி டட்லியின் இணக்கப்பாட்டினையும் பெற்றிருந்தார். அவையாவன, 4. நடைமுறையில் இருந்த காணி அபிவிருத்திச் சட்டம் மாற்றப்பட்டு, இலங்கைப் பிஜைகளுக்கு காணிகளைப் பகிர்ந்தளிக்கும் நடைமுறையினை சட்டத்தினுள் கொண்டுவருவது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் குடியேற்றத்திட்டங்களில், 1. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் குடியேற்றத் திட்டங்களில் அந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுகே முன்னுரிமை அளிக்கப்படும். 2. அதன் பின்னர், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு இக்குடியேற்றத்திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். 3. மூன்றாவதாக இலங்கைப் பிரஜை ஒருவருக்கு, குறிப்பாக தமிழ் பேசும் பிரஜை ஒருவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆகிய மூன்று சரத்துக்களுக்கும் தந்தை செல்வாவிடம் தனது சம்மதத்தை டட்லி வழங்கியிருந்தார். ஆனால், இந்த ஒப்பந்தங்களின் தோல்வியின் மூலம் தந்தை செல்வா செய்ய எத்தனித்த தமிழர்களின் தாயகத்தைப் பாதுகாக்கும் தடுப்புச் சுவர் எனும் நோக்கம் முற்றாக இல்லாமலாக்கப்பட்டது. இதன் மூலம் சிங்களத் தலைவர்கள் தாம் விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்தில் தமிழர் தாயகத்தைப் பகுதி பகுதியாகச் சிங்கள மயமாக்கவும், தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலினைச் சிதைக்கவும் வழிசமைத்துக் கொடுக்கப்பட்டது. இலங்கை - இனப்பரம்பல் வரைபடம் தமது தாயகம் பறிபோவதைத் தடுக்க தம்மாலான வழிகளில் முயன்ற தமிழர்கள், சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வந்த பகுதிகளுக்கு அண்மையாகத் தாமும் குடியேறத் தொடங்கினர். இவ்வாறானவர்களின் அருளரின் தகப்பனாரான அருளப்பு முக்கியமானவர். ஆசிரியராகக் கடமையாற்றி வந்த அருளப்பு ஒரு தீவிர சமஷ்ட்டிக் கட்சி ஆதரவாளர். மன்னார் மாவட்டத்தில், கண்ணடிப் பகுதியில் அமைந்திருந்த கத்தோலிக்கத் தேவாலயத்திற்குச் சொந்தமான காணியொன்றினைக் கொள்வனவு செய்த அருளப்பு, 1964 ஆம் ஆண்டு அங்கு ஒரு பண்ணையை நிறுவி நடத்தி வந்தார். மேலும், இனப்பற்றும், ஆர்வமும் உடைய தமிழர்களை விவசாயம் செய்வதற்கு செழிப்பான வளங்களைக் கொண்ட வன்னிப் பகுதிக்கு வந்து குடியேறுமாறும் ஊக்கப்படுத்தி வந்தார். இரு வருடங்களுக்குப் பின்னர், சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் அணியினரால் திருகோணமலை மாவட்டத்தின் கித்துள் ஊற்று எனும் பகுதியில் தமிழர்களைக் குடியேற்றுவதற்கான முயற்சியொன்று எடுக்கப்பட்டது. அப்பகுதியில் புணரமைக்கப்பட்ட குளம் ஒன்றினைச் சுற்றிச் சிங்களவர்களைக் குடியேற்ற அரசு எடுத்துவந்த முயற்சியினால் கோபமடைந்த தமிழ் இளைஞர்கள் இப்பகுதியில் குடியேறிக்கொண்டனர். திருகோணமலை மாவட்டத்தின் அரச அதிபராக இருந்த சிங்களவர் தமிழ் இளைஞர்களை உடனடியாக அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார். அவரின் கோரிக்கைக்கு தமிழ் இளைஞர்கள் செவிமடுக்க மறுக்கவே ராணுவத்தினரையும் பொலீஸாரையும் அனுப்பி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களின் கொட்டகைகளும் எரியூட்டப்பட்டன. ஈற்றில் அந்த இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டனர். டட்லி சேனநாயக்கவின் அரசில் பங்காளிக் கட்சியாகவிருந்த சமஷ்ட்டிக் கட்சி, இக்குடியேற்றத் திட்டத்தில் சில பகுதிகள் தமிழர்களுக்கும் ஒதுக்கப்பட டட்லியின் சம்மதத்தைப் பெற்றுக்கொண்டது.
  13. குடியேற்றங்களுக்கான தமிழரின் எதிர்ப்பு சிங்களக் குடியேற்றங்களின் பிதாமகன் - டி எஸ் சேனநாயக்க தமிழர் மீதான சிங்களவர்களின் ஆதிக்கத்திற்கெதிரான தமிழர்களின் எதிர்ப்பென்பது கல்லோயா குடியேற்றத்திட்டத்தினை சேனநாயக்க ஆரம்பித்து வைத்த ஆறு மாதங்களின் பின்னர், 1950 ஆம் ஆண்டு பங்குனி மாதம் முன்னெடுக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டு மார்கழி 18 ஆம் திகதி தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட சமஷ்ட்டிக் கட்சி, கல்லோயாக் குடியேற்றத்திட்டத்தில் முதலாவது தொகுதி சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டபோது தனது போராட்டத்தினை ஆரம்பித்தது. மேலும் தமிழருக்குச் சொந்தமான பட்டிப்பளை ஆற்றினை கல்லோயா என்று சிங்களத்தில் பெயர் மாற்றம் செய்யப்படுவதையும் சமஷ்ட்டிக் கட்சி எதிர்த்தது. சமஷ்ட்டிக் கட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் தமிழரின் மனதில் ஆளமாக வேரூன்றிக் கொண்டதுடன், தமது தாயகத்தினை கபளீகரம் செய்யவே சிங்களவர்கள் முனைகிறார்கள் என்பதனையும் உணரச் செய்தது. இந்த உணர்வே அவர்களை ஒற்றுமையாகப் போராடும் மனோநிலைக்குக் கொண்டுவந்தது. கல்லோயாக் குடியேற்றத் திட்டத்திற்கெதிரான தமிழர்களின் போராட்டம் தமிழர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் இணைத்து வடக்குக் கிழக்குத் தமிழர்களிடையே சகோதரத்துவத்தையும் தோழமையினையும் ஏற்படுத்தியது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் வாழ்ந்துவந்த தமிழர்கள் இப்போராட்டங்களில் மும்முரமாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர். தமது தாயகத்தை அபகரிக்கும் சிங்களவரின் ஆக்கிரமிப்பிற்கெதிராகத் தமிழர்கள் இரு வழிகளில் தமது எதிர்ப்பினைக் காண்பிக்கத் தொடங்கினர். அரசு தொடர்ச்சியாக தமிழர் தாயகத்தில் சிங்களவர்களைக் குடியேற்றுவதைத் தடுப்பதற்காக ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்தியதுடன், சிங்கள அரசுத் தலைமைகளோடு ஒப்பந்தங்களை செய்துகொண்டபோது, குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான சரத்துக்களையும் சேர்த்துக்கொண்டனர். அடுத்ததாக, சிங்களக் குடியேற்றங்களில் எல்லைகளில் தமிழ் விவசாயிகளை குடியேற்றுவதையும் தமிழ் தலைமைகள் செய்ய ஆரம்பித்தன. 1951 ஆம் ஆண்டு சித்திரையில் திருகோணமலையில் நடைபெற்ற சமஷ்ட்டிக் கட்சியின் முதலாவது தேசிய வருடாந்த மாநாட்டில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்களே பிரதான பேசுபொருளாகக் காணப்பட்டது. இக்குடியேற்றங்கள் மூலம் எதிர்காலத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்துக்கள் குறித்து தந்தை செல்வா தனது பேச்சில் எச்சரித்திருந்தார். "எம்மைப்போன்ற சிறுபான்மை இனம் ஒன்றிற்கு அவர்களின் சனத்தொகையும், தாயகமுமே பாதுகாப்பு அரண்களாகும். சிங்கள அரசுகள் இவை இரண்டையும் தாக்க ஆரம்பித்து விட்டன. மலையகத் தமிழர்களுக்கான பிரஜாவுரிமையினை இரத்துச் செய்ததன் மூலம் தமிழர்களின் எண்ணிக்கையினை அவர்கள் குறைத்து விட்டார்கள். கல்லோயாவிலும், கந்தளாயிலும் சிங்களக் குடியேற்றங்களை நடத்திவருவதன் மூலம் எமது தாயகத்தின் மீதும் அவர்கள் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார்கள். இன்று கல்லோயாவிலும், கந்தளாயிலும் நடப்பது நாளை பதவியா, வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளுக்கும் பரவப் போகிறது" என்று அவர் எச்சரித்தார். தமிழரின் பூர்வீகத் தாயகத்தில் அவர்களைச் சிறுபான்மையினர் ஆக்கும் நோக்குடன் அரசினால் நடத்தப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைக் கண்டித்து பிரேரணை ஒன்றும் சமஷ்ட்டிக் கட்சியினால் நிறைவேற்றப்பட்டது. பல சந்ததிகளாக தாம் வாழ்ந்துவரும் தாயகத்தின் மீது தமிழ் பேசும் மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையினை எவராலும் அகற்றிவிட முடியாது. சிங்களவர்களை மட்டுமே குடியேற்றும் நோக்கில் தமிழரின் தாயகத்தில் அரசு மேற்கொண்டுவரும் குடியேற்றத் திட்டங்கள் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். தமிழர்களின் தாயகத்தில் அவர்கள் சரித்திரகாலம் தொட்டு வாழ்ந்துவரும் வாழ்வை அழிக்கவே சிங்கள அரசு இக்குடியேற்றங்களைச் செய்துவருகிறது என்று தனது முதலாவது தேசிய மாநாட்டில் சமஷ்ட்டிக் கட்சி கடுமையான கணடனத்தைப் பதிவுசெய்கிறது. தமிழரின் சனத்தொகைப் பலம் மீதான சிங்களவரின் தாக்குதல் என்று தந்தை செல்வா குறிப்பிட்டது டி. எஸ் சேனநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தினூடாக ஏறக்குறைய பத்து லட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதைத்தான் என்பது குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் பாராளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதுத்துவம் குறைக்கப்பட்டதோடு, அவர்களின் அரசியல்ப் பலமும் வீழ்ச்சி கண்டது. 1950 ஆம் ஆண்டு கல்லோயாக் குடியேற்றத்திட்டத்திற்கெதிரான தனது போராட்டத்தினையடுத்து, தமிழரின் தாயகத்தினைப் பாதுகாப்பதே தனது முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டதுடன், "சுவர் இருந்தால்த் தான் சித்திரம் வரையலாம்" எனும் சுலோகத்தினையும் தனது பிரச்சாரங்களில் முக்கிய கருப்பொருளாகவும் வரிந்துகொண்டார். சிங்களக் குடியேற்றங்களுக்கெதிரான தடுப்புச் சுவரைப் பாதுகாப்பதே தந்தை செல்வாவின் முக்கிய குறிக்கோளாக இருந்ததுடன், சமஷ்ட்டிக் கட்சியின் ஒவ்வொரு வருடாந்த மாநாடுகளிலும் இதனையே முக்கிய பிரச்சினையாக அவர் பேசிவந்தார். மேலும், சிங்களத் தலைவர்களுடன் அவர் செய்துகொண்ட அனைத்து ஒப்பந்தங்களிலும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக அவர் நிபந்தனைகளையும் இட்டு வந்தார். இருவேறு சிங்களப் பிரதமர்களோடு தந்தை செல்வா செய்துகொண்ட ஒப்பந்தங்களின் கருப்பொருளே இச்சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாகவே இருந்தது.
  14. ஒரு கடின உழைப்பாளியின் தூக்கம்.
  15. தாய்வான் நாட்டில், ஒரு நிலச் சரிவு.
  16. தமிழர்கள் மீதான சிங்களக் குடியேற்றங்களின் தாக்கம் அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்களினால் தமிழர்கள் மூன்றுவிதமான சிக்கல்களை எதிர்கொண்டார்கள். முதலாவதாக தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின், முக்கியமாகக் கிழக்கு மாகாணத்தின் சனத்தொகைப் பரம்பலினை இக்குடியேற்றங்கள் மாற்றிப்போட்டன. இரண்டாவது, தமிழரின் விளைச்சல் நிலங்கள் சிங்களவரால் ஆக்கிரமிக்கப்பட்டதனால், தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாயிற்று. மூன்றாவதாக, தமிழர் தாயகத்தில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலம் இப்பிரதேசங்களிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்படும் தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவடையலாயிற்று. கீழ்வரும் அட்டவணை 1 இல், கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட முறையில் அரசு நடத்திவரும் சிங்களக் குடியேற்றங்கள் இனவிகிதாசாரத்தினை எந்தவகையில் மாற்றியமைத்திருக்கிறது என்பது காட்டப்பட்டிருக்கிறது. Demographic change in the Eastern Province (1881- 1981) Year Sinhalese Tamils Muslims 1827 250 1.3% 34758 75.65% 11533 23.56% 1881 5947 4.5% 75408 62.35% 43001 30.65% 1891 7512 4.75% 87761 61.55% 51206 30.75% 1901 8778 4.7% 96296 57.5% 62448 33.155% 1911 6909 3.75% 101181 56.2% 70409 36% 1921 8744 4.5% 103551 53.5% 75992 39.4% 1946 23456 8.4% 146059 52.3% 109024 39% 1953 46470 13.1% 167898 47.3% 135322 38% 1963 109690 20.1% 246120 45.1% 185750 34% 1971 148572 20.7% 315560 43.9% 248567 34.6% 1981 243358 24.9% 409451 41.9% 315201 32.2% அட்டவணை 1 அட்டவணை 2 இல், தமிழரின் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்கள் சிங்களக் குடியேற்றங்களால் எவ்வகையான பாதிப்பினை கொண்டிருக்கின்றன என்பதனைக் காட்டுகிறது. Change in the racial composition in the North-East (1881-1981) 1881 1946 1981 Sinhala Tamil Muslim Sinhala Tamil Muslim Sinhala Tamil Muslim Jaffna District 0.3 98.3 1.0 1.07 96.3 1.3 0.6 97.7 1.7 Mannar District 0.67 61.6 31.1 3.76 51.0 33.0 8.1 63.7 26.6 Vavuniya District 7.4 80.9 7.3 16.6 69.3 9.3 16.6 76.3 6.9 Batticaloa District 0.4 57.5 30.7 4.0 69.0 27.0 3.4 72.0 23.9 Amparai District N/A N/A N/A N/A N/A N/A 38.1 20.0 47.0 Trincomalee District 4.2 63.6 25.9 20.7 40.1 30.6 33.6 36.4 29.0 அட்டவணை 2 தேர்தல் முறையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதையடுத்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் சிங்களவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் கிழக்கு மாகாணத்திலிருந்து இரு சிங்களவர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்கள். அம்பாறை மற்றும் சேருவில ஆகிய தொகுதிகளிலிருந்தே இவர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். 1978 ஆம் ஆண்டு தேர்தல்களின்போது, விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் மூலம் கிழக்கு மாகாணத்திலிருந்து ஐந்து சிங்களவர்களும் வட மாகாணத்திலிருந்து ஒருவரும் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
  17. உருட்டாதீங்க, உருட்டாதீங்க... என்று சொன்னால், கேட்டீங்களா... 😜 இப்ப பாருங்க, பூமியே வேகமா சுத்துதாம். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.