Leaderboard
-
nunavilan
கருத்துக்கள உறவுகள்9Points53011Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்8Points33600Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்6Points87990Posts -
பெருமாள்
கருத்துக்கள உறவுகள்5Points15741Posts
Popular Content
Showing content with the highest reputation on 12/24/23 in all areas
-
சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
அனேகமான மேற்கு நாட்டு விமான சேவைகளில் துப்பாக்கியையும் சன்னங்களையும் வேறாக்கி Hold luggage (UK) அல்லது Checked-in luggage (US/Canada) இல் எடுத்துச் செல்லலாம். கையோடு கொண்டு செல்லும் (hand luggage) பயணப் பொதியில் எடுத்துச் செல்ல முடியாது. செக்ட் இன் லக்கேஜில் கொண்டு செல்பவர், அதை விமானப் பொதியை விமான சேவையிடம் கையளிக்கும் போது அறிக்கையிட (declare) வேண்டும். "ஏதாவது அறிக்கையிட வேண்டிய, தடை செய்யப் பட்ட பொருட்கள் இருக்கின்றனவா?" என பொதியை ஏற்கும் விமான சேவை ஊழியர் கேட்க வேண்டியது அவரது சட்டக் கடமை. பயணி "இல்லை" எனப் பதில் அளித்தால் பொதியை அங்கேயே திறந்து பரிசோதிக்கும் உரிமை (search power) விமான சேவையின் ஊழியருக்கு இல்லை. அதோடு அவர் பணி முடிந்தது. துப்பாக்கி எடுத்துச் செல்லும் பயணி பொய்யைச் சொன்னால் அடுத்து என்ன நடக்கும்? விமான சேவையின் ஊழியர் நிறையைச் சரிபார்த்து, லேபலைப் போட்டு கவுண்டருக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் கொன்வேயர் பெல்ட்டில் பயணைப் பையைப் போடுவார். அது ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கும் பகுதிக்குச் செல்லும். ஹீத்ரோவில் நவீன முப்பரிமாண (3D) ஸ்கேனர் 2022 இல் இருந்து பயன்பாட்டில் இருக்கிறது. இந்த ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்வது விமான சேவையின் பணி அல்ல, அது விமான நிலையைப் பாதுகாப்பு அதிகாரிகளின் பணி. இந்தப் பாதுகாப்பு ஊழியர்களுக்கு பிரச்சினைக்குரிய பொதிகளைத் திறந்து சோதனை செய்யவும், பயணியையும், பொதியையும் விமானத்தில் ஏற்றாமல் தடுக்கவும் உரிமை இருக்கிறது. இந்தச் சோதனையில் ஒரு பிரச்சினைக்குரிய பொருள் தப்பினால், அது விமானம் ஏறி இலங்கை போயிருக்கும். இலங்கையில் ஸ்கானர் பாவிக்கின்றனரா தெரியாது, ஆனால் "அறிக்கையிட எதுவும் இல்லை" என்று நிறையப் பொதிகளை உருட்டிக் கொண்டு செல்ல முயற்சித்தால் நிச்சயம் நிறுத்தி எல்லாப் பைகளையும் திறந்து சோதிப்பர் - இது சுங்க அதிகாரிகளின் சோதனை. உணர்ச்சி மயப்பட்டு நாம் எதுவும் எழுதலாம். ஆனால், தரவுகளைப் பரிசோதித்த பின்னர் எழுதினால் இது போன்ற திரிகளில் பயணம் செய்யும் மக்களுக்குத் தெளிவையூட்டலாம் . நான் மேலே குறிப்பிட்ட தகவல்கள், பிரிட்டனின் அரச வலைத் தளத்திலேயே இருக்கும் தகவல்களில் இருந்தும், என் பயண அனுபவங்களில் இருந்தும் பெற்றவை.4 points
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
4 points
-
தமிழ் மக்கள் உறுதியான முடிவெடுக்க வேண்டிய நேரமிது
தமிழ் மக்கள் உறுதியான முடிவெடுக்க வேண்டிய நேரமிது | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ்3 points
-
கருத்து படங்கள்
3 points3 points
- துறவியாகும் டயானா கமகே?
3 pointsஎன்ன... பொசுக்கெண்டு இப்பிடி, சொல்லிப் போட்டீங்க. இவ தானே கஞ்சா பயிர் செய்கை செய்ய வேண்டும் என்றும், விபச்சாரதை நவீனப் படுத்த வேண்டும் என்றும், மது பானக் கடைகளை நீண்ட நேரம் திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் சொன்ன ஆள். பெளத்த துறவியாக இவ நடித்தால்... அந்தப் புத்தனை அவமதிக்கிற மாதிரி இருக்காதா.3 points- பக்கத்து வீடு
2 pointsநாங்கள் இந்த வீட்டுக்கு வந்து இருபது ஆண்டுகள் முடியப்போகிறன. காலம் தான் எத்தனை வேகமாக எல்லாவற்றையும் கடந்துபோக வைக்கிறது. ஆசைகள் தான் மனிதனை ஆட்டிப் படைக்கின்றது. எனினும் பல ஆசைகள் நிராசையாகியும் போயிருக்கின்றனதான். நல்ல ஆசைகள் முயற்சியின் காரணமாக நிறைவேறி மனதுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுப்பதோடு மட்டுமல்லாது திருப்தியுடன் வாழ்வை நகர்த்திச் செல்கின்றன. திருப்தி எப்போது இல்லாது பேராசை மேலோங்குகிறதோ அதன்பின் மனிதன் வாழ்வின் இன்பமான நாட்களைத் தொலைத்து இன்னும் இன்னும் என்று வசந்தங்களை எல்லாம் தொலைத்து ஒன்றுமில்லாதவனாகி விடுகிறான். நான் மகிழ்வாகவும் நிம்மதியாகவும் தானே இப்பொழுது இருக்கிறேன் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். சுற்றிவர கண்ணாடி அறையினுள் தொங்கும் பூங்கன்றுகளை ஆசைதீரப் பார்க்கிறேன். எத்தனை தடவைகள் பார்த்தாலும் அலுக்காத பச்சைப் பசேல் எனவும் வண்ணவண்ண நிறங்களுடனும் பூத்துக் குலுங்கும் இந்தச் செடிக்கொடிகளை நாள் முழுதும் பார்த்துக்கொண்டே இருந்தாலும் எனக்குச் சலிப்பதில்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன் இதைக் கட்டியபோதும் சரி அதன்பின் சில மாதங்களாக நான் பட்ட மன வேதனையையும் எண்ண இப்போ சிரிப்புத்தான் வருகிறது. என் நீண்ட நாள் ஆசையான குளிர் காலத்திலும் பூங்கன்றுகள் வளர்ப்பதற்கான கண்ணாடி அறை ஒன்றை அமைப்பது குறித்து கணவருடன் பலநாட்கள் தர்க்கம் செய்தாகிவிட்டது. அந்தாளும் அசையிற மாதிரி இல்லை. நானும் விடுவதாய் இல்லை. “உதெல்லாம் வீண் செலவு. கொஞ்ச நாள் சும்மா இருக்க உன்னால முடியாது. காசை கரியாக்கிறதெண்டால் முன்னுக்கு நிப்பாய்” “இருந்தாப்போல செத்திட்டால் என்ர ஆசை நிறைவேறாமல் போயிடுமப்பா” “நீ ஒண்டைச் செய்ய நினைச்சால் செய்து முடிக்குமட்டும் விடவே மாட்டாய். உப்பிடிச் சொல்லிச் சொல்லியே எல்லாத்தையும் நிறைவேற்றிக் கொள்” “நான் என்ன நகை நட்டு வாங்கித் தாங்கோ என்றா கேட்கிறன்” “என்னவோ செய்து முடி” அடுத்த நாளே நான் வேலையைத் தொடங்கியாச்சு. சாதாரணமாக எந்தச் சிறிய கட்டட வேலை செய்வதாயினும் கவுன்சிலில் அதற்கான வரைபைக் கொடுத்து சிறிது பணமும் செலுத்தி அதற்கான அனுமதியைப் பெறவேண்டும். சாதாரணமாக மூன்று அடி உயரமும் மூன்று அடி நீளமும் இருந்தால் சரி. சரிவான கூரைக்கு அனுமதி தந்திருக்க, வேலை ஆரம்பிக்க வேலைகளைச் செய்வதற்கு ஒரு தமிழர் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டி ருந்தார். சமரில் முழுவதும் திறப்பதுபோல் மடியும் கதவுகள்வரை போட்டாச்சு. கூரை வேலை மட்டுமே மிகுதியாக இருக்க விக்டோரியன் ஸ்டைல் கூரை இன்னும் நன்றாக இருக்கும் அக்கா என்கிறார் அந்தத் தமிழர். எனக்கும் ஆசை எட்டிப்பார்க்க கவுன்சிலில் சாய்வான கூரை என்றுதானே கொடுத்துள்ளோம் என்கிறேன். பக்கத்து வீட்டுக்காரர் பிரச்சனை இல்லையோ என்கிறார். அந்தக் கிழவன் கொஞ்சம் துவேஷம் தான். ஆனால் கிழவி நல்லது என்கிறேன். அப்ப நான் விக்டோரியன் கூரையே போட்டு விடுறன். ஒரு ஆயிரம் பவுண்டஸ் தான் அதிகம் என்கிறார். அப்ப கவுன்சிலுக்கு அறிவிக்கத் தேவை இல்லையோ என்கிறேன். அவங்களுக்கு அறிவிச்சு திருப்ப பிளான் கீறி காசும் நாளும் விரயம் அக்கா என்கிறார். அந்தக் கூரையை எத்தனை பதிவாகப் போட முடியுமோ போடுங்கோ என்கிறேன். அவர்களும் எவ்வளவு பதிவாக்கமுடியுமோ அவ்வளவு பதித்தேதான் போட்டுவிட்டுப் பார்த்தால் மிக அழகாக இருக்க என் கண்ணே பட்டுவிடும்போல் கண்ணாடி அறை ஒளிர்கிறது. எதற்கும் ஒருக்கா அளந்து பார்ப்போம் என்று அலுமினிய அளவுநாடாவை எடுத்து அளந்து பார்க்க மூன்று மீற்றர் இருக்கவேண்டிய உயரம் முப்பது சென்ரிமீற்றர் அதிகமாக இருக்கிறது. என் மகிழ்ச்சி எல்லாம் ஒரு நொடியில் வடிந்துபோக ஒப்பந்தக்காரருக்கு போன் செய்கிறேன். அது பெரிய பிரச்சனை இல்லை அக்கா. நீங்கள் வீணாப் பயப்படாதைங்கோ என்கிறார். இதுக்கு மிஞ்சி என்ன செய்ய வருவது வரட்டும் என்று நான்கு மாதங்கள் பயத்துடனேயே கழிய குளிரும் குறைந்துகொண்டு வர சிறிது சிறிதாகப் பூங்கன்றுகள் எல்லாம் வைத்து கண்ணாடி அறை மிக அழகாகக் காட்சிதருகிறது. இலைதுளிர் காலமும் வந்துவிட எனக்கு அந்த அறையுள் நிற்பதும் இரசிப்பதுமாக காலம் நகர வெயிலும் எறிக்க ஆரம்பிக்கிறது. கணவர் கண்ணாடி அறையின் கதவுகளை முழுவதுமாகத் திறந்துவிடுகிறார். அந்தக் கண்ணாடி அறையின் அழகு தோட்டம் முழுதுமே பிரதிபலிக்கிறது. சமையல் செய்தபடியே நான் அவற்றை இரசித்தபடி இருக்க, அங்கு ஒரு சிறிய வட்ட மேசையும் கதிரைகளுமாய் நாம் உணவை அங்கு இருந்து இயற்கையை இரசித்தபடி உண்பதும் மனதுக்கு மகிழ்வாய் இருக்கிறது. வீண் காசு என்ற கணவரே உன்ர ஐடியா நல்லாத்தான் இருக்கு என்று கூற என் மனம் நிறைந்துபோகிறது. பிள்ளைகளும் படங்கள் எடுத்து அம்மாவின் பூங்கன்றுகள் என்று இன்ஸ்ரகிறாமில் படங்கள் போட எனக்குப் பெருமிதமாயும் இருக்கு. பறவைகளும் அணில்களும் போடும் உணவுகளைக் கொத்தி உண்பதும் ஒலி எழுப்புவதுமாக இருக்க அவற்றை இரசித்தபடி பார்த்துக்கொண்டிருக்கவே பொழுது போய்விட ஆறு மாதங்கள் முடிந்து போயிருந்தது. ஒருநாள் நானும் கணவரும் மட்டும் மதிய உணவை இரசித்துச் சுவைத்து உண்டு கொண்டு இருக்கிறோம். பக்கத்து வீட்டுக்கு அவர்களின் நண்பர்கள் யாரோ இருவர்கள் வந்திருக்கிறார்கள் போல. பெரிதாக சிரித்துக் கதைப்பது கேட்கிறது. சாதாரணமாக யாருமே வந்து நான் பார்ப்பதில்லை. யாராய் இருக்கும் என்கிறேன் கணவரைப் பார்த்து. நான் என்ன சாத்திரம் தெரிஞ்ச ஆளே. உன்னை மாதிரித்தான் நானும் என்று கணவர் சிரிக்க, அவர்கள் பக்கமிருந்து எமது கண்ணாடி அறையின் பக்கம் ஒரு தடி நீள்கிறது. நான் தான் அதை முதலில் பார்க்கிறேன். அங்க பாருங்கோப்பா. எங்கட சுவரை அளக்கினமோ என்கிறேன். அதுகள் என்ன செய்யுதோ. உனக்கு எப்பவும் வீண் பயம் என்றபடி அவர் திரும்பிப் பார்க்க மறுபடி மறுபடி கண்ணாடிச் சுவரில் ஒரு தடியை வைத்துப் பார்ப்பதைக் கணவரும் கண்டுவிடுகிறார். நீ சொன்னது சரிதான். உதுகள் எங்கடை சுவரை அளந்துதான் பார்க்குதுகள். பொறு பார்ப்போம் என்றுவிட ஏன் அளக்கிறீர்கள் என்று அஞ்சலாவிடம் கேட்கட்டா என்கிறேன். பேசாமல் இரு, சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி எண்டதுபோல நீ கேட்கப்போய் பெரிசுபடுத்தாதை என்றுவிட்டு எழுந்துவிட நானும் யோசனையோடு எழுகிறேன். அடுத்துவந்த ஒவ்வொருநாளும் எனக்கு நிம்மதி இன்றிக் கழிய சரியாக ஒரு மாதத்தின் பின் ஒருநாள் கவுன்சிலில் இருந்து நான் எதிர்பார்த்த கடிதம் வந்திருக்க படபடப்புடன் கடிதத்தை உடைக்கிறேன். நீங்கள் கவுன்சிலில் தந்த பிளானில் இல்லாத விக்டோரியன் ஸ்ரையில் கண்ணாடி அறையைக் கட்டியுள்ளதாக எமக்கு முறைப்பாடு வந்துள்ளது. வருகிற வெள்ளி கவுன்சிலில் இருந்து ஒருவர் அதைப் பார்க்க வருவார் என்று போட்டிருக்க, எனக்குக் கோபம், அவமானம், ஏமாற்றம் எல்லாம் ஒன்றாக எழுகின்றன. மனிசனுக்கு போன் செய்கிறேன். “அண்டைக்கே சொன்னனான். உதுகளின்ர குணத்துக்கு வளவுக்குள்ள வந்த ஆமையை அடிச்சுச் சாப்பிடாட்டிலும் எங்கேயாவது கொண்டுபோய் விட்டிருக்கவேணும். நீயும் மேளும் தடுத்திட்டியள்” “ஆமையின்ர பாவம் எங்களுக்கு எதுக்கப்பா? எப்பிடி உதுகளுக்கு நாங்கள் சாய்வான கூரைக்குத்தான் குடுத்தனாங்கள் எண்டு தெரிஞ்சது?” “நாங்கள் கட்ட முதலே கவுன்சில் அவர்களுக்கும் கடிதம் போடும்” “அப்ப முதலே உவை எங்களுக்குச் சொல்லி இருக்கலாம் தானே” “அவை உன்ர சொந்தக்காரரே. சரி வீட்டை வந்து கதைக்கிறன்” என்றபடி கணவரின் போன் நிறுத்தப்பட யோசனையோடு நானும் போனை வைக்கிறேன். . இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது நினைவில் வருகிறது. பக்கத்து வீட்டார் ஒரு ஆமையை வளர்க்கின்றனர். நாம் வந்தநாள் முதல் சமரில் பகலில் அவர்கள் பின் வீட்டுத் தோட்டத்தில் அங்கும் இங்குமாய் திரியும் இரவில் அதைப் பின் வளவில் உள்ள கட்டடத்தின் உள்ளே விட்டு அடைத்துவிடுவார்கள். ஆனால் அந்த கட்டட அமைப்பு எப்படி இருக்கு என்று பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தாலும் இதுவரை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததே இல்லை. ஒருநாள் பக்கத்து வீட்டு ஆமை எங்கள் வளவுக்குள் வந்துவிட்டது. இந்தப் பத்து ஆண்டுகளில் இதுதான் முதல் தடவை. மகள் கண்டுவிட்டு கணவரைக் கூப்பிட்டுக் காட்ட கணவர் அதைக் கையில் எடுத்து இரண்டு கிலோ இருக்கும் போல. கறி வைத்தால் எப்பிடி இருக்கும் என்கிறார் கணவர். நானும் மகளும் ஒரே நேரத்தில் உங்களுக்கு விசரா என்கிறோம். கிழவன்ர கொழுப்புக்கு உதுதான் செய்யவேணும் என்கிறார் மீண்டும். கடைசிவரை உதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று நான் கூற லபக் என்று மகள் ஆமையைக் கணவரின் கைகளிலிருந்து வாங்கி விடுவவிடுவென்று கொண்டுசென்று அவர்களிடம் கொடுத்துவிட்டு வருகிறாள். அடுத்தநாள் என்னைக் காணும்போது இரண்டு மூன்று தடவை ஆமையைக் கொடுத்ததற்கு அஞ்சலா என்னிடம் நன்றி கூற எனக்கே ஒருமாதிரியாகிப்போகிறது. ************ கவுன்சில்க் கடிதம் வந்த அடுத்தடுத்த நாட்கள் வெளியே செல்லும்போது அஞ்சலாவையோ கணவனையோ கண்டும் காணாமல் செல்லவாரம்பிக்கிறேன். கணவனும் யாருக்கும் எதுவுமே சொல்வதில்லை என்று கூற நான் வணக்கம் சொல்கிறனான் என்கிறாள் மகள். அதற்கு நான் எதுவும் கூறாது அமைதி காக்கிறேன். நீங்கள் அவர்களைக் கோபித்து என்ன பயன். முதலே சரியாகச் செய்திருக்க வேண்டும். அவர்கள் இந்த நாட்டவர். நாம் வெளிநாட்டவர். சட்டதிட்டத்துக்கு அமையச் சரியாக நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன குற்றம் அம்மா என்கிறாள். என்னிடம் அதற்குப் பதில் இல்லைத்தான். எம் வீட்டுக்கு பின்னால் உள்ள எத்தனையோ வீடுகளுக்கு நாம் கட்டியதிலும் உயர்வான நான்கு மீற்றர் உயரக் கண்ணாடி அறைகள் கூடக் கட்டப்பட்டிருக்க இந்தக் கேவலம் கெட்டதுகள் எரிச்சலில் கவுன்சிலுக்குச் சொல்லியிருக்குதுகள் என்று மனதுள் பொருமியபடி அடுத்த வாரத்துக்காகக் காத்திருக்கிறேன். ஒரு வாரத்தின் பின் வந்த கவுன்சில் பொறியியலாளர் நீங்கள் கூரையை மாற்றவே வேண்டும். உயரத்தைக் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறேன். ஆனால் எல்லாம் சரி என்ற பத்திரத்தை என்னால் வழங்க முடியாது என்கிறார். இந்தளவோடு விட்டாரே என மனதில் நிம்மதி ஏற்பட வேறுவழியின்றிக் கூரை மாற்றிய செலவு 1500 பவுண்டஸ் நட்டமாகியதுதான் மிச்சம் என்று கணவர் புறுபுறுத்ததை கேட்டும் கேளாதாவளாய் இருக்க மட்டுமே முடிந்தது. மாற்றிய கூரையைப் பார்க்கும் நேரம் எல்லாம் பக்கத்து வீட்டின் மேல் வரும் கோபம் மாறாமலே ஒரு ஆண்டு ஓடிப்போக வேலை முடிந்து ஒருநாள் வந்து இறங்கும்போது பக்கத்து வீட்டின் முன் ஆம்புலன்ஸ் நிற்க என்னவாக இருக்கும்என்று யோசித்தபடி உள்ளே செல்கிறேன். அடுத்தநாள் மாலை கடைக்குச் செல்வதற்காக வெளியே சென்றபோது வழியில் அஞ்சலா வந்துகொண்டிருப்பது தெரிய நானாகவே வணக்கம் என்றுவிட்டு யாருக்கு என்ன பிரச்சனை? நீ ஓகே தானே என்கிறேன். அஞ்சலாவின் முகம் சோர்ந்து போய் இருக்கிறது. மார்க்குக்கு நேற்று காட் அற்றாக் வந்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவர்கள். இன்று கண் திறந்துவிட்டார். ஆனால் ஒரு காலும் கையும் இயல்பாக இல்லை என்கிறார். அவருடன் ஆறுதலாகக் கதைத்துவிட்டு வந்தாலும் நீ எனக்குச் செய்ததுக்கு வேணும் என்று என் மனம் எண்ண, அற்ப மகிழ்ச்சிகூட எட்டிப்பார்க்கிறது. அதன்பின் எப்போதாவது மார்க்கை பிரத்தியேக வாகனம் வந்து அழைத்துப்போகும். அதுதவிர வெளியே அவரைக் காணவே இல்லை. ஆனாலும் அஞ்சலாவை சுகம் கேட்பதை நான் நிறுத்தவில்லை. நாம் முதல் முதல் அந்த வீட்டுக்கு வரும்போதே வீட்டின் வாசலுக்கு அண்மையில் மிகப் பெரிய ஊசி இலை இன மரம் ஒன்று நீண்டு நெடிதாய் வளர்ந்திருந்தது. பார்ப்பதற்கு அழகாய் இருந்ததுதான். ஆனாலும் வீட்டுக்கு அண்மையில் இதை ஏன் வைத்தார்கள் என்னும் அளவு அதன் கிளைகள் வாசல் கதவைத் திறக்க முடியாதபடி பெரிதாகிக் கொண்டிருந்தன. நாம் கதவைத் திறந்து உள்ளே செல்லாது அந்த மரத்தை வெட்டுவோமா என்று கதைத்துக்கொண்டு நிற்க, பக்கத்து வீட்டு வெள்ளைக்காரர் ஒரு அறுபது வயதாவது இருக்கும் வணக்கம் என்கிறார். நாமும் வணக்கம் சொல்லி முடிய நீங்கள் தான் இங்கு குடிவருக்கிறீர்களா என்கிறார். ஓம் என்று என் கணவர் தலையாட்ட வாடகைக்கு இருக்கப்போகிறீர்களா என்கிறார் மீண்டும். இல்லை இதை நாம் வாங்கிவிட்டோம். எமது சொந்த வீடு என்று கூறி முடிய முதலே இந்தமரத்தை வெட்டிவிடுங்கள். இதன் வேர் என் வீட்டு அத்திவாரத்தையும் வெடிக்கச் செய்துவிடும் என்கிறார். என்னடா இது வந்து வீட்டுக்குள் செல்லவே இல்லை. இந்த மனிதன் மரத்தை வெட்டச் சொல்கிறதே என்கிறேன். நீயும் வெட்டுவது பற்றிக் கதைத்தாய் தானே. பிறகெதற்கு கிழவனைக் குறை சொல்கிறாய் என்று கணவர் என்னை கடிந்துவிட்டு வெட்டத்தான் வேண்டும். நாம் இன்றுதான் வந்திருக்கிறோம். நிறைய வேலைகளிருக்கு. முடிந்தபிறகு பார்ப்போம் என்று கூறி உள்ளே செல்கிறோம். ஒரு ஐந்து நிமிடங்கள் ஆகவில்லை. கதவின் அழைப்பு மணி அடிக்க யார் என்று பார்த்தால் பக்கத்துவீடுக்காரர் மரம் அரியும் வாள் ஒன்றுடன் நிற்கிறார். நான் கீழே உள்ள கிளைகளை வெட்டிவிடுகிறேன் மிகுதியை நீங்கள் வெட்டுங்கள் என்று சிரித்தபடி கூற, சரி வெட்டுங்கள் என்கிறார் கணவர். நாம் உள்ளே சென்று வேறு விடயங்களைக் கதைத்துவிட்டு வந்து பார்த்தால் மரத்தின் அரைவாசிக் கிளைகள் வெட்டப்பட்டு எம் வீட்டின் முற்றத்தில் குவிக்கப்பட்டிருக்க இனி நீங்கள் வெட்டுங்கள் என்று கூறி வாளையும் எம்மிடம் தந்துவிட்டு அவர் உள்ளே போக, நானும் கணவரும் சேர்ந்து மிகுதியை வெட்டிக் குவித்துவிட்டோம். பக்கத்து வீட்டுக் கணவன் மனைவி இருவரும் வெளியே வந்து இப்போதுதான் வீட்டைப் பார்க்க நன்றாக இருக்கு என்று முகமெல்லாம் பல்லாய் கூறிவிட்டுச் செல்ல நாமும் நல்லதொரு சனம் பக்கத்தில என்று மகிழ்ந்துதான் போனோம். அந்தமரத்தின் கிளைகளை அகற்ற நான்கு தடவை காரில் கொண்டுசெல்லவேண்டி இருந்தது வேறு கதை. அதன் பின் எம்மைக் கண்டால் ஒரு வணக்கம் சொல்வதோடு சரி. அவர்களுக்கு ஏதும் எம் உணவு செய்துகொண்டுபோய் கொடுப்போமா என்கிறேன் கணவரிடம். நாங்கள் குடுக்க, அவை தர எதுக்கு உதெல்லாம் பேசாமல் இரு என்று கணவர் சொன்னது எனக்கும் சரியாகவே படுகிறது. அதன்பின் ஐந்து ஆண்டுகள் வணக்கம் சொல்வதுடனேயே கழிகிறது. நத்தார் தினத்துக்கு இரு வாரத்துக்கு முன்னர் வாழ்த்து மடல் போட, நாமும் திருப்ப அவர்களுக்குப் போடுவதுடன் எங்கள் உறவு நிறைவடைந்துவிடும். மூன்று பிள்ளைகளுடன் இருந்த எமக்கு சமையலறை மிகச் சிறிதாக இருக்க வீட்டைப் பின்புறமாக நீட்டுவதற்கு ஆலோசித்து அந்த வேலைகளில் இறங்க, சைனீஸ் வேலையாட்கள் கூறிய பொருட்களை கடைகளில் ஓடர் செய்ய, அவர்கள் வாகனங்களில் கொண்டுவந்து இறக்குகின்றனர். மரக் குற்றிகள், நீளமான பலகைகள் என்பன வந்து இறங்குகின்றன. அவர்கள் நடைபாதையில் அவற்றை இறக்கி வைக்கின்றனர். சில பலகைகள் ஆறு மீற்றர் நீளம் கொண்டவை, அவை பக்கத்து வீட்டு வாசலைக் கடந்து நிற்கின்றன. இன்னும் சிறிது நேரத்தில் வேலையாட்கள் வந்துவிடுவார்கள். அதன்பின் அவர்கள் இறக்கியவற்றை உள்ளே கொண்டு செல்வார்கள். “நாங்கள் அதை எடுத்துக்கொண்டு போய் உள்ளே வைப்போமா” என்று கணவரைக் கேட்கிறேன். “நீ உன்ர அலுவலைப் பார். அவங்கள் தூக்கி வைப்பாங்கள்” என்று கணவர் சொல்லி முடிக்குமுன்னரே எங்கள் அழைப்புமணி கோபத்துடன் அழுத்துப்பட கணவர் சென்று கதவைத் திறக்க, பக்கத்து வீட்டு மனிதர் தன் வளவில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நிற்கிறார். “நீயா மணியை அழுத்தினாய்” “ஓம் நான் தான். நீ உடனடியாக உந்தப் பலகைகளை எடு. எனக்கு இடைஞ்சலாக இருக்கு” “உனக்கென்ன இடைஞ்சல்? உன் வீட்டுக்குள்ளா வைத்திருக்கிறோம்” “என் வாசல் வரை வந்திருக்கு. நான் வெளியே செல்லவேண்டும்” “உனக்கு அவசரம் என்றால் கடந்து செல். இன்னும் 10 நிமிடங்களில் வேலையாட்கள் வந்து தூக்குவார்கள்” “நான் போலீசுக்கு போன் செய்யப் போகிறேன்” “தாராளமாகச் செய்” கணவர் கதவை அடித்துச் சாத்திவிட்டு வருகிறார். “என்னப்பா பிரச்சனை” “பக்கத்து வீட்டுக் கிழடு சரியான துவேஷம். மரங்கள் தனக்கு இடைஞ்சலாம். உடனே தூக்கு என்கிறது” “அதுக்குத்தான் நான் முதலே நாங்கள் தூக்குவம் என்றனான்” “நீ உன்ர அலுவலைப் பார். அவர் போலீசுக்கு அடிக்கமாட்டார். எங்களை வெருட்டுறார்” “இத்தனை ஆண்டுகளாய் இருக்கிறம். ஒரு சத்தம் கூடப் போட்டதில்லை. அடிமனதில் நாங்கள் கறுப்பர் எண்டது உதுகளுக்கு இருக்கு. அதின்ர வெளிப்பாடுதான் இது” “சரியப்பா டென்ஷன் ஆகாமல் பெல் அடிக்குது. திரும்பக் கிழவன்தானோ தெரியேல்லை. போய் கதவைத் திறவுங்கோ” அடுத்தநாள் காலை நான் வேலைக்குச் செல்ல வெளியே வர, நான் எப்ப வருவேன் என்று பார்த்துக்கொண்டு இருந்ததுபோல் பக்கத்துவீட்டுப் பெண் கதவைத் திறந்து வணக்கம் என்கிறார். அவருக்கும் வயது ஒரு ஐம்பத்தைந்து அறுபது இருக்கலாம். குறை நினைக்காதை டியர். என் கணவர் கொஞ்சம் முசுடு. நேற்று அப்படிக் கதைத்துவிட்டார். மன்னித்துக்கொள் என்கிறார். எனக்கு உடனே மனது இளகிப்போக அதனால் என்ன. நாம் எதுவும் நினைக்கவில்லை என்று கூற அஞ்சலாவின் முகம் மலர்ந்துபோக நான் பாய் என்றுவிட்டுக் காரில் ஏறுகிறேன். அதன்பின் என் கணவர் பக்கத்து வீட்டுக்காரருக்கு வணக்கம் எதுவும் சொல்வதில்லை. ஆனால் என்னை கண்டால் அவர் வணக்கம் சொல்ல நானும் சொல்வேன். அஞ்சலாவைக் கண்டால் மட்டும் நின்று கதைபேன். அவவும் நானும் பிள்ளைகளின் படிப்பு என் வேலை இப்படி இரண்டு மூன்று விடயங்களைக் கதைத்துவிட்டு போய்விடுவோம். நாம் மூன்று பிள்ளைகள் என்பதால் வாரத்தில் இரு நாட்கள் உடைகளைத் துவைத்துக் காயவிடுவோம். கோடை காலங்களில் வெளியே போட்டால் அன்றே காய்ந்துவிடும். குளிர் காலத்தில் வீட்டின் உள்ளே இரண்டு நாட்கள் எடுக்கும். கொடி முழுவதும் எம் ஆடைக்களால் நிரம்பி வழியும். ஆனால் அவர்கள் வீட்டில் இரண்டு மூன்று ஆடைகளே காயப்போட்டிருக்கும். பணத்தை ஏன் இப்படிமிச்சம் பிடிக்கின்றனர். வெள்ளைகள் வாழ்வை நன்றாகத்தானே அனுபவிக்கின்றனர். இவர்கள் மட்டும் ஏன் இப்படி என்று எண்ணிக்கொள்வதோடு சரி. கேட்பதற்கு முடியவில்லை. நாம் ஒருதடவை நானும் கணவரும் கிரேக்கத்துக்குச் சென்று வந்தபோது எம்மைக் கண்ட அஞ்சலா “ஓ விடுமுறைக்குச் சென்று வருகிறீர்களா” என்றுமட்டும் கேட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அடுத்த நாள் என்னைக் கண்டபோது எங்கே சென்றீர்கள்? என்றார். நான் கிரேக்கம் என்றதும் வாயைப் பிளந்தபடி பயமின்றிப் போய் வந்தீர்களா என்றார். நீங்கள் அங்கு சென்றிருக்கிறீர்களா? மிக அழகிய இடம். எந்தப் பயமும் இல்லை என்கிறேன். நான் லண்டன் நகருக்கே இதுவரை சென்றதில்லை. என் கணவருக்கு எங்கு செல்வதும் பிடிக்காது என்றுகூற எனக்கு நம்பமுடியாததாக இருக்கிறது. கோடை மாரி குளிர் வெயில் என்று காலங்கள் எத்தனை விரைவாகச் சென்றுவிட்டன. *********************************** நாம் லண்டன் வந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதை நம்பத்தான் முடியாமல் இருக்கு. பதினெட்டு ஆண்டுகளா என்னும் மலைப்போடு பல யுகங்கள் ஆகிவிட்டதான ஆயாசமும் சேர்ந்துகொள்கிறது. இத்தனை ஆண்டுகளில் பக்கத்து வீட்டுக்கு ஒருநாள் கூட நாங்கள் போக முடியவில்லையே என்னும் ஆதங்கம் மனதில் ஏற்படுகிறது. சில நண்பர்கள் அயல் நாட்டுப் பக்கத்து வீட்டாரைப் பற்றிச் சொல்லும்போது எமக்கும் ஒரு நல்ல நட்பான பக்கத்து வீடு அமைந்திருக்கலாமோ என்னும் எண்ணம் எழும். நாம் மட்டும் எல்லோரோடும் நட்போடுதான் பழகினோமா என்னும் கேள்வியும் கூடவே எழும். பிடித்தவர்களுடன் மட்டும்தானே நெருக்கமாகினோம். எமது பக்கத்து வீட்டாருக்கும் எமக்கும் நல்ல பொருத்தங்கள் இல்லைபோல என நானே என்னை ஆற்றிகொள்கிறேன். ஒருநாள் அவர்கள் வீட்டுக்கு இரண்டு மூன்று வெள்ளை இனத்தவர் வந்துபோக ஏதும் விசேடமாக இருக்குமோ என்று எண்ணியபடி செல்கிறேன். மூன்றாவது வீட்டில் வசிக்கும் ஆபிரிக்கப் பெண்மணி எப்பவாவது கண்டால் நின்று கதைப்பார். அன்று கண்டவுடன் மார்க் எப்படி இறந்தார் என்று கேட்கிறார். இறந்துவிட்டாரா? எனக்கு இதுவரை தெரியாதே என்கிறேன். நேற்று இரவு நான் வேலை முடிந்து வந்தபோது அம்புலன்சில் ஏற்றினார்கள். முகத்தை மூடியிருந்தது. அதனால்தான் கேட்டேன் என்கிறார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஊரில் என்றால் ஒருவர் இறந்தால் அடுத்தமணியே அனைவருக்கும் தெரிந்துவிடும். பக்கத்து வீட்டில் இருந்தும் எனக்குத் தெரியவில்லை என்பது வெட்கமாகவும் குற்றஉணர்வாகவும் இருக்க கணவருக்குப்போன் செய்கிறேன். கணவர் போனை எடுக்கவில்லை. அஞ்சலாவின் வீட்டுக் கதவைத் தட்ட அவரே வந்து திறக்கிறார். “நான் மார்க் பற்றிக் கேள்விப்பட்டேன்” “ஓ நேற்று மாலை இறந்துவிட்டார். இரவு ஏழு மணிவரை வீட்டில் வைத்திருந்தோம். அதன்பின் கொண்டுசென்றுவிட்டார்கள்” “ஏலாமல் இருந்தாரா” “ஆறு மாதங்கள் படுத்த படுக்கைதான். ஒரு நர்ஸ் வந்து பார்த்துவவிட்டுச் செல்வார். எனக்கு அவரை கோமில் கொண்டுபோய் விட விருப்பம் இல்லை. என் பிள்ளைகள் பலதடவை சொன்னார்கள்” “உனக்குப் பிள்ளைகள் இருக்கின்றார்களா??” “ஓம் இரண்டு ஆண் பிள்ளைகள். ஒருவன் திருமணமாகி மான்சஸ்ரரில் இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறான். மற்றவன் திருமணம் செய்யவில்லை. அவனும் தூரத்தில்த்தான்.” “நான் அவர்களை ஒருநாளும் கண்டதில்லையே” “அவர்களுக்கு எங்கே நேரம். கடைசி மகன் அப்பப்ப வந்துவிட்டுப் போவான். அவனுக்கும் தகப்பனுக்கும் சரிவாராது” “அவர்கள் வந்திருக்கிறார்களா?” “இல்லை நாளைதான் வருவார்கள்” “தனியாகத்தான் வீட்டில் இருக்கிறாயா? யாரும் துணைக்கு இல்லையா?” “இல்லை எனக்குப் பழகிவிட்டது” “உனக்கு உணவு ஏதும் கொண்டுவந்து தரட்டுமா??” “வேண்டாம், வேண்டாம். என்னிடம் உணவு இருக்கிறது” “ஏதும் தேவை என்றால் என்னைக் கூப்பிடு” “நன்றி தேவை என்றால் அழைக்கிறேன்” வீட்டுக்கு வந்தபின் மனதில் எதுவோ அடைத்ததுபோல் இருக்க அஞ்சலா என்னை வீட்டுக்குள் வா என்று அழைக்காததும் மனதை எதுவோ செய்ய மனிசிக்கும் என்ன பிரச்சனையோ என்று மனதைத் தேற்றிக் கொள்கிறேன். ஒரு வாரத்தின் பின் மார்க்கின் மரண வீடுக்கு நானும் கணவரும் சென்றிருந்தோம். எல்லோருடனும் கை குலுக்கிய பிள்ளைகள் எம்முடனும் அடுத்த வீட்டு ஆபிரிக்கப் பெண்ணிடமும் கை குலுக்காததை கவனித்தபின் மனதில் சிறிது ஆசுவாசம் ஏற்பட்டதுதான். ஒரு மாதம் செல்ல மீண்டும் இலைதளிர் காலத்தில் கடைசி மகன் தாயுடன் வசிக்க வந்துவிட பக்கத்து வீட்டில் பேச்சும் சிரிப்புமாக அஞ்சலாவின் வாழ்கை மாறியிருந்தது. கொடிகளில் விதவிதமாக அழகிய ஆடைகள் காய்ந்தன. எழுபத்தைந்து வயதான முகத்தில் ஒரு பளபளப்பும் மலர்ச்சியும் தெரிந்தன. கிழவியைப் பாத்தியே. விதவிதமாய் உடுப்புப் போடுது என்று கணவர் நக்கலாகக் கூற எனக்குக் கோபம் வருக்கிறது. அந்தக் கிழவன் சரியான அடக்குமுறையாளனாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்பவாவது அந்த மனிசி தன் ஆசைப்படி வாழட்டுமன். உங்களுக்கு அதில் என்ன நட்டம் என்கிறேன். கடந்தவருடம் இலங்கை சென்று ஆறு மாதங்களின் பின் தான் நான் திரும்பி வந்தேன். அடுத்தநாள் நான் வெளியே செல்ல என்னைக் கண்ட அஞ்சலா “ஓ டியர் உன்னை இத்தனை நாள் நான் காணவில்லை. எங்கே சென்றாய், உனக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்று நான் பயந்துவிட்டேன்” என்றபடி கட்டியணைக்க நான் திக்குமுக்காடிப்போய் பேச்சற்று நிற்கிறேன்.2 points- பராமரிப்பில்லாத ஆரியகுளம்!
2 pointsஇந்த ஆரியர் குளத்தை திருத்தும்போது நான் நிறைய இடங்களில் கண்டனம் செய்திருக்கிறேன் காரணம் யாழ் மாநகரசபைக்கு அப்படி எதையும் தொடர்ந்து பராமரிக்கும் வளமோ அல்லது தொழில்நுட்ப அறிவோ அறவே இல்லை என தவிர அங்கு அதிகாரிகள் உட்பட தொழிலாளர் வரைக்கும் அசமந்தப்போக்குடன் நடப்பவர்கள் தைவிடக் கேவலம் யாழ் குடாநாட்டில் அதுவும் யாழ் மாநகர சபை எல்லைக்குள்ளும் அதன் சுற்றுப்புறங்களிலும் வதிவோர் கொஞ்சமேனும் சமூக அக்கறை இல்லாத கூட்டம். யாழ் பேரூர்ந்து நிலையத்தைச் சுற்றி நடக்கும் அக்கிரமமும் குற்றச்செயல்களும் சொல்லி மாளாது. இப்போது இருக்கும் கார்கிள்ஸ் பூட்சிற்றிக்கு அருகாமையில் வெளியூர் செல்வதற்காக ஒரு தரிப்பு நிலையம் கட்டினார்கள் ஆனால் நாங்கள் அங்கு வண்டிகளை நிறுத்தமாட்டோம் என தனியார் மற்றும் அரச போக்குவரத்தாளர்கள் அடம்பிடிக்கிறார்கள்.2 points- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
2 pointsஇன்றைய தினம் பிறந்த நாள் காணும் ஏராளனுக்கு உடல் உள நலனை இறைவன் தர வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் ( இந்தக் காலண்டரை யாரோ ஒளிச்சு வைத்து விடடார்கள். யாருக்கு எப்ப பிறந்த நாள் என்று பார்க்க முடியாமல் இருக்கு )😃2 points- பராமரிப்பில்லாத ஆரியகுளம்!
2 pointsஇந்த ஆரிய குளம் புனரமைக்கப்பட்ட போது, நாக விகாரைக்கு வரும் சிங்கள யாத்திரிகர்கள் வந்து இளைப்பாறுவதற்கே மேயர் மணிவண்ணன் இதை புனரமைக்கிறர் என்று வசைபாடி பேட்டி கொடுத்து தனது இனவாதத்தை கக்கினார் கஜேந்திரகுமார். இன்று பராமரிப்பின்றி குளம் மீண்டும் அசுத்தமடையும் போது எந்த தமிழ் அரசியல்வாதியோ தமிழ் தேசியம் பேசும் எவரோ கவலைப்பட்டப் போவதில்லை. அதை திரும்பிக்கூடப் பார்க்கப போவதில்லை யாராவது அரச ஆதரவுடன் இதை மீண்டும் புரனமைத்து பரமரித்தால் மீண்டும் தமது இத்துப்போன அரசியலுடன் அதனை வசைபாடி அவருக்கு துரோகிப்பட்டம் கொடுக்க வருவார்கள்.2 points- சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
அடிப்படையே தெரியாமல் தான் வாழ்ந்து வருகிறீர்கள் போலும். கையில் கொண்டு போபவை எல்லாம்.. நேரடியாகவும்.. உதிரப்படும் பிரதான பெரிய பொதிகள் ஸ்கான்.. உட்பட பல்வேறு சோதனைகளுக்கு அப்புறம் தான் விமானத்தில் ஏறும். இதில் எயார்லைனின் பங்களிப்பும் உள்ளது. ஆக.. இந்த துப்பாக்கி ஒன்றில் பிரித்தானியாவில் அனுமதி பெற்று பிரதான பொதியில் கொண்டு செல்லப்பட்டிருக்கும். சொறீலங்காவில் ஸ்கான் செய்து பொதிகள் வெளியே விடப்படும் பொறிமுறை இருந்தால்.. அல்லது பிரித்தானியாவில் இருந்து அறிவிக்கட்டிருந்தால்.. சொறீலங்கா.. ஆட்கள் காசுக்கு இவரை பிடிச்சு வெருட்டி இருக்கலாம். அவர் மசிய மாட்டார் என்றால்.. உடனடியாக.. சொறீலங்கா.. புலனாய்வுத்துறையிடம் கையளிப்போம் என்று வெருட்டு. அப்படி நிகழ்ந்திருக்கவே வாய்ப்பிருக்குது. ஏனெனில்.. ஒரு பயணி என்னென்ன பொருட்களோடு பயணிக்கிறார் என்பது எயார் லைன்சுக்கு தெரியும்.2 points- சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
அது பழைய காலம் சாமியார் ஆனாலும் விசா இல்லாதவர் கூட ஒரு மணி நேர விமான சுத்திகரிப்பு வேலையில் ஏஜென்ட் மூலம் வருகிறார்கள் அதில் பிளாக் லிஸ்ர்ரில் உள்ள நாடுகளை சேர்ந்தவர்களும் வருகிறார்கள் ஏதோ ஒரு நாள் பிரச்சனை வெடிக்கும் ஆனலும் பாதுகாப்பு ஐந்தடுக்கு உள்ளபடியால் அமைதியாக போகுது . இது ஒரு செட்டப் ஆக இருக்கலாம் கொஞ்சம் வெயிட் பண்ணுவம் .2 points- பக்கத்து வீடு
2 pointsஇது உங்க வீடாக்கா, அல்லது இந்த படம் எங்காவது சுட்டதா. காலம் கெட்டு கிடக்கு நீங்கவேற. சொந்த வீட்டு படத்தை இணையத்தில இணைக்கிறது உங்க விலாசத்தை கொடுக்கிறதுக்கு சமனானது. நான் உங்க இடத்தை சேர்ந்தவன் கிடையாது ஆனாலும் இந்த படத்தை வைச்சு நீங்க இருக்கிற இடத்தை என்னால் சொல்ல முடியும். இனிமேல் பாத்து பண்ணுங்கக்கா.2 points- சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
54 வயது இங்கிலாந்துப் பிரஜை என்டோன்ன வெள்ளை போல என்று நினைத்தால் கொம்பனி பொறுப்பில்லை. யாராவது, தீவிர தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருந்த ஒருத்தரை, உள்ளுக்கு போட்டு, அவரது இயக்கத்தை தடுக்க, இது, புனையப்பட்டிருக்காலம். ஹீத்ரோ விமான நிலையத்தில், டெர்மினல் 5 பிராஜெக்ட் ஒன்றில் வேலை செய்திருப்பதால், உள்ளே, கன்வேயர் பெல்ட் எப்படி இயங்குகிறது என்று, எமது மென்பொருள் பிராஜெக்ட் டீம் போய் பார்த்தது. மனிதர்கள் பரிசீலனை செய்வதிலும், மென்பொருள், ஸ்கேன் பக்காவாக பிடித்து விடும். மேலும், விமான நிலையங்களில் உள்ள பலவீனங்களை கண்டறிய, அரச, ரகசிய அனுமதியுடன், சிலர் துப்பாக்கி, கைக்குண்டுகள் கொண்டு போய் அவ்வப்போது பரிசோதனை செய்வார்கள். இது, என்ன கதை என்று விரைவில் தெரியவரும்.2 points- கருத்து படங்கள்
2 points2 points- துறவியாகும் டயானா கமகே?
2 pointsஅவங்களுக்கு புத்தம் என்றால் தமிழனை கொலை செய்வது என்பது மட்டுமே தெரிந்த ஒன்று தயவு செய்து சிங்களவர்களை நல்லவனாக்கி விடாதிர்கள் 2௦௦9 பால்சோறு தின்றவர்களுக்கு படியளக்கனும்காலம் காத்து கொண்டு இருக்குது .2 points- மாயாவி எங்கிருந்தாலும் காட்டுக்கு வரவும் டும் டும் டும்- phantom -mayavi comics
முகமூடி வீரர் மாயாவி எனது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் நூலகத்தை இதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். நான் மட்டுமல்ல என் வயதை ஒத்த பலரது கனவு நாயகனாக வலம்வந்தவர் முகமூடி வீரர் மாயாவிதான். நூலகத்தில் கழுத்துவலிக்கும் அளவிற்கு தொடர்ந்து வாசித்திருக்கின்றேன்.மாயாவியில் அவ்வளவு பைத்தியம். நூலகத்தில் ஒரு அலுமாரியில் முழுவதுமாக மாயாவியின் புத்தகங்கள்தான் இருக்கும்.அந்தப்புத்தகங்களுக்கென்று ஒரு வாசமும் இருக்கின்றது அது இப்பொழுதும் நினைவில் இருக்கின்றது. முரட்டுக்காளை கார்த்,லக்கிலூக்,ஜேன்ஸ்பொண்ட்,இரும்புக்கை மாயாவி,கரும்புலி என்று பல ஹீரோக்கள் வலம் வந்தாலும் பிடித்ததென்னவோ மாயாவியைத்தான்.எனக்கு அறிமுகமான முதலாவது ஹீரோ அவர்தான்.காட்டுக்குள்தான் மாயவியின் ராட்சியம்,குரன்,அழிக்கமுடியாத மண்டையோட்டு சின்னம், மாயாவியின் குதிரை அவரது மண்டையோட்டு குகை.அவரது மண்டையோட்டு மோதிரம் இன்னொரு உலகத்தையே காட்டியது.ஊரில் நடக்கும் திருவிழாக்களில் கோவில் கோவிலாக சென்று அங்கு திருவிழாவிற்காக போடப்பட்டிருக்கும் சிறிய கடைகளில் "மண்டையோட்டு மோதிரம் இருக்காண்ணா?" ..தனுஸ் ஒரு படத்தில் பைக்வாங்குவதாக சென்று மனோபாலாவை கடுப்பேற்றியது மாதிரி வருடா வருடம் கடைபோடுபவர்களைக்கடுப்பாக்கியிருக்கின்றேன் நான். http://4.bp.blogspot.com/-wX3ow7iileQ/UDSyv5hbmDI/AAAAAAAAKxo/MKsYHVTrKqs/s400/1.JPG காட்டுக்குள் நுழையும் எவனுக்குமே மாயாவி என்ற பெயரைக்கேட்டால் கதிகலங்குமென்று நினைத்தால் மாயவி ஒரு தடவை தனது காதலி டயானாவிற்காக நகரத்திற்கு வந்திருந்தார் அங்கு நடைபெற்ற கொள்ளைகள் கடத்தல்கள் எல்லாம் ஸ்தம்பித்துப்போயின.அனைவரது தாடையிலும் அழிக்கமுடியாத மண்டையோட்டுக்குறி பொறிக்கப்பட்டது.ஒருதடவை மாயாவி ஒரு மன்னனுக்கு முன்னால் ஒரு தடியனுடன் மோதவேண்டியிருந்தது.அவன் ஒரு முட்டையை கையில் எடுத்து உடைத்துக்காட்டிக்கொண்டே கூறினான்:இந்த முட்டையை நொருக்குவதுபோல் உன்னை நொருக்கிவிடுவேன்" மாயாவி உடனே ஒரு தேங்காயை கையில் எடுத்து நொருக்கிக்கொண்டே கூறினார்"இந்த தேங்காயை நொருக்குவதுபோல் உன்னை நொருக்கிவிடுவேன்" அசத்தலாக இருந்தது. மாயாவியின் சாகசங்களுக்கு லொஜிக்கைகொடுப்பதற்காக ஒருவிடயம் சேர்த்திருந்தார்கள்.மாயாவி தான் மாயாவி ஆகுவதற்கு முன்னர் பல விளையாட்டுக்களில் பங்குபற்றி மிகவும் முன்னிலையில் இருந்து பின்னர் காணாமல் போனார் என்பதுதான் அது. http://2.bp.blogspot.com/-g90ePXv__hQ/UDSy3PeirNI/AAAAAAAAKxw/afyMZEFm-Gs/s400/2.JPG "ஒவ்வொரு அடியும் இடி என விழுந்தது"இந்த வார்த்தைகள் நரம்புக்கு முறுக்கேற்றிய வார்த்தைகள். அவன் மாயாவியை சுடுவதற்கு துப்பாக்கியை எடுத்தான் அதற்குள்" டுமீல்" "டுமீல்" "டுமீல்" எதிரே இருக்கும் எதிரியின் துப்பாக்கியைமட்டும் குறிவைப்பது மாயாவியின் தனி ஸ்டைல்.ஆர்வக்கோளாறில் ஒன்று இரண்டு புத்தகங்களை சுட்டகதையும் நடந்தது. http://4.bp.blogspot.com/-IIqKW2aGASo/UDSy-PXMUiI/AAAAAAAAKx4/BcPYiEbfnXY/s320/3.JPG http://4.bp.blogspot.com/-dD8jOzjgZQQ/UDS0SxrKloI/AAAAAAAAKzY/Z3nhPkEieLs/s320/Phantom%5B3%5D.jpg பாடலையில் மாயாவிபுத்தகங்கள் காமிக்ஸ்கள் கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.மாணவ முதல்வர்களிடம் அகப்பட்டுக்கொண்டால் அவ்வளவுதான்.மாணவமுதல்வர் அறை என்று ஒன்று இருக்கின்றது. போனால் உயிரோடு திரும்புவோமோ என்று பயப்படும் அளவிற்கு இருக்கும் அந்த அறை.அந்த அறைக்குள் அழைத்துச்சென்று அடி பின்னிவிடுவார்கள்.ஆசிரியர்களிடம் அகப்பட்டால் புத்தகம் வகுப்பறைக்குவெளியே பறப்பதுடன் அனைத்து மாணவர்களுக்கு முன்னால் அடிவாங்கவேண்டி வரும் முட்டிபோட்டு நிற்கவேண்டிவரும்.சோ ஏதோ கள்ளக்கடத்தலில் ஈடுபடும் மாஃபியாக்கும்பல் மாதிரி மிகவும் ரகசியமாக நண்பர்களிடையே மாயாவிப்புத்தகங்கள் கடத்தப்படும்.ஒருதடவை வகுப்பறைக்கு ஆசிரியர் வந்துவிட சகபாடிகள் எழுந்து நின்றுவிட்டார்கள் பாவம் ஒரே ஒரு அப்பாவிஜீவன் மட்டும் தனதுனோட்புக்குக்குள் இருக்கும் மாயாவியின் புத்தகத்தினுள் மூழ்கியிருந்தான்.சுற்றியிருந்த அனைத்துமே அந்த ஜீவனுகு இருட்டாகவே தெரிந்திருந்தது மாயாவியின் புத்தகத்தைத்தவிர.திடீர் என்று சட சட வென அடி தொடர்ந்துவிழுந்தது அப்பொழுதுதான் சுயனினைவு வந்தவானாக நிமிர்ந்துபார்க்கின்றான்.ஆசிரியர் அடித்துவிட்டு சென்றுவிட்டார்.பின்னர் அவன் அவனாகவே எழுந்து ஏன் அடித்தீர்கள்? என கேட்கும்போது வகுப்பே சிரித்துவிட்டது.அத்துடன் ஆசிரியர்அவனிடமிருந்த மாயாவிப்புத்தகத்தை வாங்கி படிப்பதற்கு இலகுவாக 4 துண்டாக கிழித்துஅவனிடம் கொடுத்துவிட்டார்.சரி வெளிப்படையாகவே கூறுகின்றேன் அது நான்தான். http://1.bp.blogspot.com/-POiKzLXbjnQ/UDS0dWsULEI/AAAAAAAAKzg/kdtQpKyDJpw/s320/Fantomencover.jpg ஆரம்பகாலங்களில் மாயாவி தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தது ஆனால் விசாரித்ததில் இப்பொழுதெல்லாம் வருவதில்லையாம். முத்துகாமிக்ஸ்,முத்துமினிகாமிக்ஸ்,இந்திரஜால் காமிக்ஸ் என்று பல காமிக்ஸ்களில் மாயாவிவெளிவந்தாலும் மாயாவியை எனக்கு அறிமுகம் செய்தது என்னவோ ராணிகாமிக்ஸ்தான். ராணிகாமிக்ஸ் 1984 இல் ஆரம்பமானது.ஜேம்ஸ் பொண்ட்,மாயாவியால் பிரபலமான ராணிகாமிக்ஸ் தனது 500 ஆவது இதழுடன் சகலத்தையும் நிறுத்திக்கொண்டது.கம்பனியை மூடிவிட்டார்கள்.வெளி நாடுகளில் காமிக்ஸ்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப்போல் நம்மவரிடம் வரவேற்புக்கிடைப்பதில்லை என்பது வருத்தம்தான்.இணையத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களில் ஒன்று நூலக வாசிப்பு இல்லாமல்போய்க்கொண்டிருப்பது.இதே பாதிப்புத்தான் ராணிகாமிக்ஸையும் வீழ்த்திவிட்டது. http://3.bp.blogspot.com/-ehRaGRwG-Ao/UDSzEiWz9MI/AAAAAAAAKyA/0HWiSJhQScU/s320/5.JPG உண்மையில் மாயாவி தமிழில் வெளிவந்த ஹீரோவே அல்ல.மாயவியின் உண்மையான பெயர் Phantom.இந்த கற்பனைக்கதாப்பாத்திரத்தை உருவாக்கியவர் லீ போல்க். பான்ரொம் டி.விக்கள்,பத்திரிகைகள்,கேம்கள் என பல இடங்களைத்தொட்டு சக்கைபோடு போட்டது. பான்ரொம்(மாயாவி) ஆபிரிக்காவின் பங்காலா என்னும் நாட்டில் காட்டில் இருப்பவராகவும் அங்கு நடைபெறும் அநியாயங்களுக்கு எதிராகப்போரிட்டு பழங்குடி இனத்தவரைபாதுகாப்பவராகவும் உருவாக்கப்பட்டார். கதைகளில் நாம் காணும் பான்ரொம்(மாயாவி) தனது மாயாவி பரம்பரையின் 21 ஆவது நபர்.அதாவது 21 ஆவது மாயாவி. பான்ரொம் என்ற கதாப்பாத்திரம் 1536 இல் உருவானது.பிரிட்டிஸ் கப்பலோட்டியான கிரிஸ்ரோபர் வோல்கர் என்பவர் கடற்கொள்ளையர்களால் கொல்லப்படுகின்றார்.இதனால் இவரது மகன் வோல்கர் இறந்த தன் தந்தையின் மண்டையோட்டின் மீது தீமைகளுக்கெதிராக நான் போராடுவேன் என்று சத்தியம் செய்கின்றார்.இவரால் தொடங்கப்பட்டதுதான் பான்ரொம் தலைமுறை. இது பரம்பரை பரம்பரையாக தந்தையிடம் இருந்து மகனுக்கு கடத்தப்படுகின்றது.ஒரு பான்ரொம் இறந்ததும் அவரது மகன் அடுத்த பான்ரொம் ஆகிவிடுவார்.இது சாதாரண மக்களுக்கு தெரியாது ஆகையால் பான்ரொமை/மாயாவியை மக்கள் மரணமில்லாதவராக கருதினார்கள். http://3.bp.blogspot.com/-iqE5EHW4sWI/UDStiM_DvDI/AAAAAAAAKvw/yaetl9M9GGc/s640/05.jpg ஏனைய பல ஹீரோக்களைப்போல் மாயாவிக்கு எந்த சூப்பர் பவர்களும் இல்லை.அவரது பலம்,புத்திசாலித்தனம்,மரணமில்லாதவர் என்ற மற்றயவர்கள் இவர் மீது வைத்திருக்கும் பயம் இவற்றைக்கொண்டுதான் மாயாவி எதிரிகளை வீழ்த்துவார்.21 ஆவது மாயாவியின் பெயர் கிற் வோல்கர்.மாயாவியிடம் 2 முத்திரை அடையாளங்கள் உள்ளன.இவை அவரின் மோதிரங்களில் பொறிக்கப்பட்டிருக்கும்.இதில் ஒன்று குறொஸ் அடையாளம்.இதற்கு தனி மரியாதை இந்த குறி உள்ளவர்களுக்கு எங்கும் உதவி கிடைக்கும் அத்துடன் இந்தஅடையாளமிடப்பட்ட இடத்தில் யாராவது அடாவடி செய்தால் தொலைந்தார்கள். அடுத்த குறி மண்டையோட்டுக்குறி. இது தீயவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய பரிசு.பழங்குடி இனத்தவர்களும் சரி ஏனையோரும் சரி தாடையில் பதிக்கப்பட்டிருக்கும் இந்தக்குறியின் மூலமாக தீயவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள். http://3.bp.blogspot.com/-4PrNZnMlGUk/UDSzXZIzqmI/AAAAAAAAKyI/p61Pcmt1Fhc/s320/1+(1).jpg மாயாவிக்கு உதவியாக 2 மிருகங்கள் இருக்கும்.இதை மாயாவி பயிற்றுவித்து வைத்திருக்கின்றார்.ஒன்று குதிரை அதன் பெயர் ஹீரோ.மற்றையது ஒரு ஓநாய்(என்னது ஓநாயா? அது நாயாச்சே? அது தமிழ் தொடர்களில் நாயாக மாறிவிட்டது பான்ரொமில் அது ஓநாயாகத்தான் இருந்தது).மாயாவி டயானா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.அமெரிக்காவில் மாயாவி கற்கும்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது.இருவருக்கும் 2 குழந்தைகள் கூட இருக்கின்றார்கள்.கிட்,ஹோலோஸ் அவர்களது பெயர்கள்.மாயாவியின் மண்டையோட்டு குகை அதற்குள் தங்க கருவூலம்(இதை திருடவும் சதி நடந்தது மாயாவியின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் கொள்ளையர்கள் புகுந்தாலே செமத்தையாக கவனிக்கப்படுவார்கள் அவர்கள் மாயாவியின் குகைக்குள் சென்று திருடமுயன்றால் பெரிதாக ஒன்றும் நடைபெறவில்லை 1க்கு 3 ஆக சின்னங்களை வாங்கிக்கொண்டார்கள்), http://1.bp.blogspot.com/-jRnnVntoHYM/UDS0E43GAiI/AAAAAAAAKzQ/3yz__xRUnPE/s400/ThePhantom.jpg பழைய புத்தகங்களைக்கொண்ட நூலகங்கள்,மர வீடு,மாயாவியின் முன்னோரின் சமாதிகள்,பல ஆண்டுகளாக உருகிக்கொண்டிருக்கும் மெழுகுதிரி,குரன் மாயாவி நிச்சயம் உங்களை இன்னொரு உலகத்திற்கே அழைத்து சென்றுவிடுவார்.இறக்கும் ஒவ்வொரு மாயாவியும் மண்டையோட்டு குகைக்குள்ளேயே அடக்கம் செய்யப்படுவார்.மர வீட்டில் ரேடியோ இருக்கின்றது,இதன் மூலம் இலாகா அதிகாரிகள் மாயாவியுடன் தொடர்புகொள்வார்கள்.ஏதாவது தீர்க்கமுடியாத பிரச்சனைகள் இருந்தால் இதன் மூலம் தொடர்புகொள்வார்கள். மாயாவி நகருக்குள் செல்லவேண்டிய நிலை வந்தால் இவர் தனியே வேறொரு உடையை அணிந்துகொள்வார்.அண்டர்டேக்கரின் கோட் தொப்பியுடனான உடை அது. இப்படி ஒரு முறை மாயாவி நகரத்திற்குள் வந்ததால் பலர் தாடையில் மண்டையோட்டுக்குறியுடன் திரிந்தார்கள். 1936 பெப்ரவரி 17 இல் பான்ரொம் தினசரிப்பத்திரிகையில் வெளிவரஆரம்பித்தது.1939 மே 28 இல் வர்ணச்சித்திரங்களுடன் வெளிவந்தது.சராசரியாக இன்றுடன் 76 வருடங்கள்.ஆனால் இன்றும் பான்ரொம் தொடர்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.இது எவ்வளவு பிரபலம் தெரியுமா? ஒரு நாளில் மட்டும் உலகில் பான்ரொம் காமிக்ஸ்ஸை வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை 100 மில்லியன்.இதை ஆரம்பித்த லீ போல்க் தான் 1991 இல் இறக்கும்வரை பான்ரொம்தொடரை வெளியிட்டுக்கொண்டிருந்தார். http://1.bp.blogspot.com/-XZFSWgcPIXQ/UDSzfAS8u6I/AAAAAAAAKyQ/dkHUngC5D84/s320/Photo-005.jpg http://3.bp.blogspot.com/-VXhcUvB7BGo/UDSzgY7WAgI/AAAAAAAAKyY/Xwhlg3c-BQY/s320/Photo-008.jpg மாயாவிதான் முதல்முதலில் உடலுடன் இறுக்கமான உடையைஅணிந்த முதல் ஹீரோ.இவருக்குப்பின் வந்த ஏனைய ஹீரோக்களுக்கு மாயாவி அணிந்ததைபோன்ற உடையே சட்டமாகிப்போனது.அத்துடன் ஏனையோர் தன்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக முகமூடியை அணிந்த முதல் ஹீரோவும் மாயாவிதான்.பான்ரொமை உருவாக்கும் யோசனை பான்ரொம் கிரியேட்டரான போல்க்கிற்கு எப்படி வந்தது? போல்க் Mandrake the Magician என்ற பத்திரிகை கொமிக்ஸ்ஸை கிங்க்ஸ் ஃபெயூச்சேர்ஸ் என்ற பத்திரிகையில் வெளியிட்டிருந்தார்.அது வாசகர்களிடம் அதிக வரவேற்பைப்பெற்றது.அது முடிவடைந்த பின்னர் பத்திரிகை வேறு ஒரு கதையை கதாப்பாத்திரத்தை உருவாக்குமாறு கேட்டது.உடனே போல்க் கிங்க் ஆதரும் அவரது இரவுகளும் என்ற தலைப்பில் ஸ்கிரிப்ட்களை எழுதி சில சாம்பிள்களை வரைந்தும்ககொடுத்தார்.ஆனால் பத்திரிகை அதை நிராகரித்துவிடவே உருவான பாத்திரம்தான் பான்ரொம். 2 மாதங்கள் பான்ரொம் கதையை யோசித்தார்.2 வாரங்கள் சாம்பிள்களை வரைந்து கொடுத்தார். பான்ரொம் முதன்முதலில் The Singh Brotherhood என்ற தலைப்பில் வெளிவந்தது.போல்க் கதாப்பத்திரங்களை தானே வரைந்தார். http://3.bp.blogspot.com/-88TZpmG_Wy0/UDPL5Ke9lCI/AAAAAAAAKfo/J0u1_zCIg5w/s400/14_144805_0_ThePhantomFrewPublications918A.jpg இதை வாசிப்பதற்கு இங்கே கிளிக். 1039 இல் பான்ரொம் கலர்ஃபுல்லாக வெளிவந்தது. http://1.bp.blogspot.com/-MvzhfVCuQdQ/UDPNYulyXqI/AAAAAAAAKfw/oQEUnZMoUZk/s400/First_Phantom_Sunday_strip.jpg 2 ஆம் உலக்ப்போரில் போல்க் வெளி நாட்டு ரேடியோ மொழிபெயர்ப்புப்பிரிவில் சீஃப்ஃபாக பணியாற்றியபோது அவர்கள் பயன்படுத்திய இரகசியக்குறியீடு என்ன தெரியுமா? ...."பான்ரொம்".2 ஆம் உலகப்போரில் பங்குபற்ற போல்க் செல்லும்பொழுது தனது காமிக்ஸ்வேலையை தனது உதவியாளரான வில்ஸனிடம் விட்டு சென்றார்.இன்றைய பான்ரொமின் ஸ்கிரிப்ட் எழுத்தாளர்கள் மற்றும் வரைபவர்கள் Tony DePaul , Paul Ryan (Monday-Saturday) ,Terry Beatty (Sunday) DC கொமிக்ஸ் 1988-1990 வரை பான்ரொமை வெளியிட்டது. http://1.bp.blogspot.com/-S2U-zNhitvM/UDPO7AHBlZI/AAAAAAAAKf4/z84jzP9sM0c/s320/DC_Phantom.jpg பான்ரொம் ராணிகாமிக்ஸில் மாயாவி என்றபெயரில்வெளிவந்துகொண்டிருந்தபோது முத்துகாமிக்ஸ்,கொமிக்வேர்ல்ட்,இந்திரஜால் காமிக்ஸ்களில் வேதாளர் என்ற பெயரில் பான்ரொம் வெளிவந்தது. http://2.bp.blogspot.com/-YgSl6wWsb4k/UDSUjB9xkYI/AAAAAAAAKo0/1C1l0HZ7WE0/s1600/RaniComics1stPahntomMay19903_thumb%5B1%5D.jpg ராணி காமிக்ஸின் முதலாவது மாயாவி புத்தகம் 1943 இல் பான்ரொம் 15 பாகங்களைக்கொண்ட தொடராகவெளிவந்தது. http://1.bp.blogspot.com/--aimtOPQyN4/UDSX4_LxjcI/AAAAAAAAKsI/ROX1xHzdoW4/s1600/Phantomserial.jpg இதில் பான்ரொமாக நடித்தவர் TomTyler http://4.bp.blogspot.com/-tNFMhdPHuP0/UDSYhZv35vI/AAAAAAAAKsQ/yyLmekd2MoI/s320/TomTyler.jpg இத்தொலைக்காட்சித்தொடர்தொடர்பானவிடயங்கள் இங்கேகிளிக் The Phantom என்ற திரைப்படம்கூட வெளிவந்திருக்கின்றது.1996 இல் வெளிவந்தது.இயக்கியவர் Simon Wincer http://1.bp.blogspot.com/-jSXCZAR7uTo/UDSfS3gTWyI/AAAAAAAAKuA/hGjEwQAZSas/s320/Phantompost.jpg இத்துடன் நின்றுவிடாது Phantom 2040 என்ற வீடியோகேம்கூட வெளிவந்தது. நீதன் மாயாவியா உனக்கு அழிவே இல்லையாமே? அதையும் ஒருகைபார்த்துவுடுவோம்.... மாயாவி-மன்னிக்கவும் என்னை உங்களால் அழிக்கமுடியாது... டுமீல்...டுமீல்.....டுமீல்.... http://3.bp.blogspot.com/-4M-lQvasfZE/UDSzy7qQKhI/AAAAAAAAKyg/-TNB4txp8_s/s320/Photo-0084.jpg http://2.bp.blogspot.com/-bkSLPVPLdSM/UDSz0OlpsZI/AAAAAAAAKyk/m_s8-qCnG3g/s320/Photo-0091..jpg http://2.bp.blogspot.com/-sSYXbkWQPfs/UDSz1YTiS4I/AAAAAAAAKyw/gpRk2P2PemI/s320/Photo-0113.jpg http://3.bp.blogspot.com/-5vvvDdGen00/UDSz2UlmY9I/AAAAAAAAKy0/EGsJ-qrTkHE/s320/Photo-0155.jpg http://4.bp.blogspot.com/-U-PAETK00zU/UDSz3njwdNI/AAAAAAAAKzA/bhHDwgESXVQ/s320/Photo-0262.jpg http://4.bp.blogspot.com/-7-qZ5P7OsOY/UDSz5VnLw0I/AAAAAAAAKzI/fIwkgBo9GeY/s320/THE_PHANTOM_17.jpg பின்வரும் தளங்களில் மாயாவியைப்பற்றிய புத்த்கங்கள்,விடயங்களை தெரிந்துகொள்ளலாம்... (மாயாவி/வேதாளர் கதைகளை முதல்முதலில் வெளியிட்ட தகவல்,அட்டைப்படங்களுக்கு க.கொ.க.கூட்டமைப்புக்கு நன்றி) https://www.manithanfacts.com/2021/09/mayavi comics rani comics phantom.html mokkaicomics kakokaku இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம் (ராணி காமிக்ஸ-பேய்க்காடு) வைரத்தின் நிழல் -முகமூடி வேதாளர் -தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் ஜூம்போ டயானா மாயாவியின் திருமணம் பூவிலங்கு: முத்திரைமோதிரம் பான்ரொம்1 point- போராளியின் இறுதி வெடி !
1 pointபோராளியின் இறுதி வெடி ! எல்லாம் முடிந்துவிட்டது. முன்னால் கடல் பின்னால் நிலம். இதுதான் நான் இறுதியாக காணப்போகும் விடியும் வானம். நிலம் பூராவும் எதிரிகள். கந்தகமணம். சிறு பற்றைகள். அவற்றுக்கப்பால் நம் நிலம்பூராயும் எதிரிகள். எதிரிகள் பேசும் சத்தம் கேட்கிறது.வானம் வெளித்ததும் அவர்கள் முழுமையாக பிடித்துவிடுவார்கள். சிலவேளை இறுதியாய் இருப்பது நாம் இருவராக இருக்கலாம். எங்கள் தரப்பின் துப்பாக்கி வேட்டுகள் பூராகவும் ஒய்ந்துவிட்டது. திடீரென ஏற்பட்ட புவி அதிர்வில் உதிர்ந்த கோட்டைபோல் ஆகிவிட்டது எங்கள் தேசம். அருகே கபிலன். அவன் கட்டாய ஆட்சேர்ப்பில் வந்த பிள்ளை. ஆனால் கடைசிவரை என்னோடு வந்துவிட்டான். நீ போய்விடு என்றால் அடம்பிடித்துவிட்டான். என்னோடு ஒரு வருடமாகத்தான் இருந்தான். சரணடைய மறுத்தே விட்டான். எத்தனையோ போராளிகளை சந்தித்தேன். இவன் வாழ வேண்டிய பிள்ளை. ‘அண்ண உங்களுக்கு என்ன முடிவோ அதுவே எனக்கும் என்கிறான்.’ கபிலன் அறிவான பிள்ளை. ஒரு முழுமையான போராட்ட வாழ்வில் என் இறுதி கணம் கபிலன் அருகில் முடியப்போகிறது. எம்மை உயிரோடு எதிரி பிடிக்க முடியாது. இரண்டு குப்பிகள், இரண்டு கைத்துப்பாக்கி. இதுபோதும். நளாவும் வீரச்சாவு என்று அறிந்தேன். முக்கியமான அந்தத்தாயுடன் சேர்ந்து நளா வெடித்துச்சிதறிவிட்டாள். பிள்ளைகளோடு எவ்வளவு பிரியமாக இருந்தாள் ? அவளால் இதை எப்படிச்செய்ய முடிந்தது ? அவள் தியாகங்களுக்கு உலகில் உதாரணம் கிடையாது. தாயை விட்டுவிட்டு போர்க்களம் சென்ற பிள்ளைகள் இருந்தார்கள். தன் குழந்தைகளை விட்டுவிட்டு களமுனை சென்று வெடிக்கும் தாயை யாரும் அறிந்ததுண்டா ? தன் வீரச்சாவவைக்கூட மக்கள் அறியார் என்று தெரிந்தும், போராட்டம் இன்றோ நாளையோ வீழ்ந்துவிடும் என்று அறிந்தும் அவள் தன் மண்ணுக்காக வீழ்ந்தாள். அவளை இந்த இறுதி நேரத்தில் நினைக்கவேண்டும். என் மனம்போல இருந்தாள். பிள்ளைகளை உறவுகளுடன் விட்டுவிட்டு களமுனையில் கடைசிவரை நின்ற தாயாக நளா இருப்பாள். அது யாருக்கும் தெரியாமல் இருக்கும். இப்போது நடக்கும் எந்தக்காவியத்தையும் சொல்பவர்கள் உயிரோடு இருக்கப்போவதில்லை. நானே ஒருமுறை , ‘நீ பிள்ளைகளோடு வெளியேறு’ என்றபோது, மறுத்துவிட்டு கோள்சறோடு களமுனை சென்றாள். அன்பு நளா ! உன் திண்மை என்னிடம் இல்லை. உனக்கு என் நன்றி. நான் போராளியாக மட்டும் இருந்தேன். நீ தாயாக, போராளியாக, மனைவியாக.. என் விழுப்புண்கள் வலிதரும்போது தாதியாக.. உன் மனபலம் எந்த இரும்பையும் நொருக்கும். எந்த வலியையும் தாங்கும். நான் வலியால் துடிக்கும்போது ‘ஒருதளபதி இப்படி துடிப்பதா’ என்பாய். ஒருபோதும் உனக்கு வலித்தபோதும் நீ துடித்ததில்லை. எத்தனை மகத்தான துணையாக இருந்தாய் ? உன் உடல் எங்கு சிதறியதோ நானறியேன். ஆனால் இந்த நிலத்தில் மிக அருகில் எங்கோ வெடிகுண்டு கட்டி வெடித்தாய் என்பது மட்டும் தெரியும். சூரியன் வரமுதல் உன்னை என் ஆன்மா சந்திக்கும். மறுமுறை பூரணவாழ்வு கிடைத்தால் உன்னோடு வாழவேண்டும். நாம் குறைந்த நாட்கள் வாழ்ந்து, நிறைய நாட்கள் போராளியாக இருந்தோம். ஓ.. என் பிள்ளைகள் ! ஆகரன் ! சிந்துசை ! நீங்கள் இப்போது வவுனியா அகதி முகாமில் இருப்பீர்கள். என் பிள்ளைகள் என்று இராணுவம் கண்டுபிடிக்காமல் இருக்கவேண்டும். நீங்கள் கேட்ட பரிசுப்பொருட்களை தமிழீழம் கிடைத்தததும் வேண்டித்தருவேன் என்றேன். உங்கள் அடிமைப்பட்ட இனத்தின் தந்தையால் அதை செய்ய முடியவில்லை. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். ஆனால் அப்பாவையும், அம்மாவையும் நினைத்தபடியே இருப்பீர்கள். உங்களை அனாதையாக்கி விடப்போகிறோம். இந்த பாவப்பட்ட பெற்றோரை பற்றி என்ன நினைப்பீர்களோ தெரியவில்லை. எப்போதும் உங்களை பேரன்போடு வருடும் உங்கள் அம்மா நேற்று மாலை இறந்துவிட்டார். உங்கள் அப்பா இன்னும் சிறிய நேரத்தில். அப்பா, அம்மாவின் கனவுகளை மறக்க மாட்டீர்கள். எப்படியும் உங்களை என் தம்பி லண்டன் அழைத்துவிடுவான். நீங்கள் உறுதியோடு வளருங்கள். நம் மக்கள் உங்களை கைவிட மாட்டார்கள். அந்த நம்பிக்கையில்தான் நாம் போகிறோம். ஓ.. எத்தனை தியாகங்கள் ? எத்தனை உயர்த வீர புருசர்கள் ? எத்தனை தியாகங்களால் தேசம் உருவானது. இதோ.. இதோ.. எல்லாம் முடியப்போகிறது. இந்த முடிவு வேறொன்றின் தொடக்கம் ஆகலாம். ஆனால் இந்த உலகு அதர்ம அச்சிலே சுழல்கிறது. அதை மாற்றும் மனிதன் வருவான். காலம் எல்லாவற்றையும் உருவாக்கும். இந்தப்போராட்டம் உயிர்களை கொல்லத்தோன்றியதில்லை. கொலைகளை நிறுத்தத்தோன்றியது. அவர்கள் தமிழர்களை தேடித்தேடி வேட்டையாடியபோது விரும்பா பிறப்பாகத்தானே பிறந்தது. இத்தனை இளைஞர்களின் உயிர்களும் இந்தத்தோல்விக்காகவா கொடுக்கப்பட்டது ? இத்தனை இறப்புகளும் நம் விடுதலைக்காகவே விதைக்கப்பட்டது. எப்படி இது தோற்றது? காலம் ஆராய்ந்து கருத்திடட்டும். அது காலத்தின் வேலை. நான் நம்மக்களுக்காக உண்மையாய் இருந்தேன். இந்த மரண நொடிவரை. என்னைப்போலவே உயிர் கொடுத்த என் வீரர்களும். இது நம் கடன். அதை நாம் தவமாக செய்தோம். இங்கினியாகலையில் காடையர்கள் 150 இளைஞர்களை வெட்டியதில் ஆரம்பித்தார்கள். அதன்பின் எத்தனை கொலைகளை மக்கள் சந்தித்தார்கள். ? ஆண்டாண்டு காலம் வாழ்ந்த எங்கள் மண்ணில் எங்கள் மக்கள் முப்பது ஆண்டுகளாக துரத்தப்பட்டும், கொல்லப்பட்டதால்தானே ஆயுதம் ஏந்தினோம். ! அன்று அந்தக்கொலைகளை தடுத்திருந்தால் இந்த கொலைத் தொழிலை நாம் விரும்பி ஏற்றிருப்போமா ? எனக்கு அந்த நாள் நினைவுக்கு வருகிறது.. வவுனியா எல்லைக்கிராமத்தில் நாம் இருந்தோம். எப்போதும் பதட்டத்துடனே ஐயா, அம்மா இருப்பார்கள். காடையர்கள் எப்போது வருவார்கள் ? வந்தால் மொத்த உயிரும் சிரச்சேதம் செய்யப்படும் என்று தெரியும். எமக்கு பாதுகாப்பென்று அன்று யாருமில்லை. நம்முயிரை எப்போதும் பறிக்கும் உரிமை சிங்களக்காடையருக்கு இருந்தது. முதலில் எனக்கு ஏன் இப்படி நடக்கிறது ? மனிதர்களை மனிதர்கள் கொல்ல எப்படி முடிகிறது ? சிங்களவர்களுக்கு நாம் என்ன செய்தோம் ? என்று புரியவில்லை. ஒருநாள் அருகே இருந்த கிராமத்தில் புகுந்து வெட்டிவிட்டு சென்றுவிட்டனர். அம்மா கண்ணீரோடு இருந்தார். அப்போதுதான் அம்மாவிடம் ‘ஏன் அம்மா சிங்களவர் எம்மை கொல்கிறார்கள் ? ’ என்று கேட்டேன். அம்மாதான் கொலைகாலக்கதைகளைச்சொன்னார். என் மனமெங்கும் வேதனையும், கொடும் கோபமும் இருந்தது. இதற்கு சிறுவனான என்னால் எப்படி தடுக்க முடியும் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டிருந்தேன். இந்தச்சம்பவம் நடைபெற்று சரியாக ஒருமாதம் கழிய எம் கிராமம் தாக்கப்பட்டது. என் அப்பா படுகாயத்தோடு தப்பியிருந்தார். மாட்டுப்பட்டவர்கள் வீடுகள் கொழுத்தப்பட்டு தலைகளை வேலிகளில் குத்திவிட்டு சென்றனர். பள்ளிக்கூடத்தால் வந்த எனக்கு கிடைத்த காட்சி மனிதத்தலைகளும், எரிந்த வீடுகளும். எங்கள் வீடும் எரிந்திருந்தது. முதல்நாள் என்னோடு விளையாடிய பத்துவயதான சிவதாசன் தலை வேலியில் குத்தப்பட்டிருந்தது. பிள்ளைத்தாச்சியாக இருந்த வக்சலா அக்காவின் வயிறு கிளிக்கப்பட்டு சிசுவை எடுத்து தடியில் குத்தி வைத்திருந்தார்கள். ஆண்களின் உடலங்கள் அங்கம் அங்கமாக வெட்டப்பட்டிருந்தது. இந்தக்காட்சிதான் என்னை ஆயுதம் ஏந்த தள்ளியது. வன்னியில் மாத்தையா அண்ணரின் தொடர்புள்ளவர்களோடு தொடர்பை கடுமையான பிரயத்தனத்தில் ஏற்படுத்தி புலிகள் இயக்கத்தில் இணைந்தேன். எனது நோக்கம் எங்கள் மக்களை காப்பதே. அதைவிடுத்து எந்த மாற்றமும் என்னிடம் இருந்தால் மரணம்தான். என்று நானே முடிவெடுத்திருந்தேன். இயக்கத்தினுள் நடந்த சூறாவளிக்காலத்தில் என் மனம், உடல் வதங்கியகாலம். என் விரல் நகங்கள் பிடுங்கப்பட்டபோதும் நான் உண்மையான என் கனவில் உறுதியாக இருந்தேன். போராட்டம் என்பது எவ்வளவு கடுமையானது என்பதை சொல்லித்தந்தது அந்த நாட்கள். உயிரையும் கொடுத்து காக்க வேண்டியவரே தவறு செய்திருந்தால் உங்களால் என்ன செய்யமுடியும் ? எந்த நிலையிலும் இறுதிவரை களமுனையில் போராடிச்சாவதே என் நோக்கம். நான் பார்த்த இனக்கொலைக்காட்சி எப்போதுமே என் மனதில் இரும்புத்திரையாக நிற்கும். அதனாலே உறுதியோடு இருந்த என் நிலையால் 1994 இல் மீண்டும் இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டேன். அதைவிட கொடுமையான காலத்தை நான் சந்தித்ததில்லை. இதோ இப்போது நாம் முற்றாக அழியும் நிமிடங்களானாலும் நாம் நம் மக்களுக்காக இறக்கின்றோம் என்ற நிம்மதி உண்டு. போராடப்புறப்பட்டவர்களின் ஆசைகளால் ஏற்படும் தவறுகளால் இழந்த உயிர்களும், தவறும் இலட்சியச்சியத்தை விட கொடிய விசம் வேறொன்றுமில்லை. எந்தச்சூழலிலும் என்கிராமத்தில் நான் கண்ட காட்சிதான் எத்தடையையும் தாங்கி இந்த மக்கள் இலட்சியத்தில் என்னால் இந்த நிமிடம்வரை நிற்க முடிந்தது. எங்கள் மக்களுக்கு என்ன சொல்வது ?! உங்கள் இயக்கம் உங்களை விட்டுப்போகிறது. உங்களில் இருந்துதோன்றிய இந்த வீரர்களில் சில தவறுகளும் பல தியாகங்களும் நிகழ்ந்தன. எந்த சமூக அமைப்பிலும் குழப்பமானவர்கள் இருப்பார்கள். அவர்களின் செயல்களால் உங்களுக்காக உயிர்கொடுத்த அந்த உன்னதங்களை மறந்து விடாதீர்கள். உங்களை மீண்டும் ஒரு அனாதை நிலையில் விட்டுவிட்டு நாம் செத்துப்போகிறோம். நீங்கள் பட்ட துயர்களுக்கு உண்மையானவர்கள் உண்மையாக இறுதிவரை போராடினோம். எங்களை மீறிய முட்கள் உங்களை குத்தியதை நாம் அறிவோம். உங்களின் நல்வாழ்வுக்காக உண்மையோடிருந்த உங்கள் பிள்ளைகளின் ஏக்கங்கள் ஒருநாள் உங்களுக்கு நிம்மதியான வாழ்வைத்தரும். நீங்கள் ஒற்றுமையாக காத்திருங்கள். உங்கள் பிள்ளைகளை அறிவானவர்களாக வளர்த்தெடுங்கள். வரலாறு உங்கள் கைகளில் ஒருநாள் வந்துசேரும். மனிதனை மனிதன் கொல்வது கொடிது. இந்த கொடிய காலம் எங்கள் கரங்களில் திணிக்கப்பட்டது. கொலைவெறியற்ற சிங்களம் உருவானால் மட்டுமே தமிழர்கள் பாதுகாப்பாக வாழமுடியும். அதன் வழிமுறைகளை கண்டுபிடிக்க உங்கள் குழந்தைகள் முயலட்டும். எங்கள் மரணத்தின் பின்னாவது உலகம் உங்களை காக்கும். விடமாட்டார்கள் ! எங்கள் மக்கள் விடமாட்டார்கள் ! நம் தமிழக உறவுகள் கொதித்தெழுவார்கள் ! புலம்பெயர் உறவுகள் சேர்ந்தெழுவார்கள். இந்த இழப்பு. இன்னொன்றை பிறப்பிக்கும். நிச்சயம் நம் மக்களின் கொடிய வாழ்வு முடிவுக்கு வரும். எங்கள் மக்களே ! சென்று வருகிறோம். மண்ணே ! உன்மடியில் நீண்ட ஓய்வெடுக்கப்போகிறேன். ‘’கபிலன் ! கபிலன் ! வானம் வெளிக்கிறது.. தயாராகு… இதோ நான் தயாராகிவிட்டேன் . குப்பியை வாயில் கடித்ததும் காதுக்குள் பிஸ்ரலால் சுட்டுவிடு. அடுத்த நொடி உடல்மட்டும் மிஞ்சும்.’’ வலப்பக்கத்தில் தென்னைமரம் ஒன்று நின்றது. காகம் ஒன்று பதட்டத்தோடு குறுக்கே பறந்து சென்றது. அலை வீசிய கடல் அழுதுகொண்டிருந்தது. எங்கள் கடலில் எதிரிகளின் போர்க்கப்பல் தெரிந்தது. எங்கும் துப்பாக்கி இயங்கிக்கொண்டே இருந்தது. அவை இராணுவத்தின் துப்பாக்கிச்சத்தங்கள்தான். அவர்கள் வீரர்கள் வாழ்ந்த காற்றுக்கும் சுட்டுக்கொண்டிருந்தார்கள். மேகங்கள் ஒன்றையும் காணவில்லை. அதிகாலைக்குருவிகளின் சத்தம்கூட இல்லை. அவை எங்கு பறந்து போயினவோ தெரியவில்லை. தங்களோடு வாழ்ந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று பறவைகள் அழுதிருக்கும். மனிதர்களை நினைத்து அவை குளம்பிப்போயிருக்கும். ‘இவர்கள் அறிவற்றவர்கள்’ என்று அவை நினைத்திருக்கும். மனிதனை மனிதன் கொல்வதை பார்க்கும் பறவைகளால் வேறெதை நினைக்க முடியும். ?! அண்ணருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. வரலாறு ஒரு பெருமகனை இழந்துகொண்டிருக்கிறது. வரலாற்றில் இருந்து மனிதர்கள் கற்காவிட்டால் அவை மீண்டும் மீண்டும் நிகழும். ‘’ கபிலன்…. கபிலன்.. சத்தம் அருகே கேட்கிறது. நிலம் வெளிக்கிறது, தயாராகு ! நாம் உயிருடன் பிடிபடக்கூடாது.. நாமிருவரும் இந்த மண்ணில் வாழும் நிமிடங்கள் இவைதான். ‘’ இருவரும் தயாரானார்கள். குப்பி கொடுப்பில் வைக்கப்பட்டது. வலக்கையில் இருந்த பிஸ்ரல் காதோரம் வந்தபோது, இடக்கை அருகே இருந்த அறுகம்புல்லோடு சேந்த தாய்மண்ணை அள்ளி நெஞ்சில் வைத்துக்கொண்டு தளபதி ஜெயம் 1994 இல் தலைவரால் மீண்டும் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியை தன் காதோரம் வைத்து விசையை அமத்தினார். பட்ட்டீர்ர்….பட்ட்டீடர்ர்.. ! ‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் ‘ என்று கூற அதன்பிறகு அந்த நிலத்தில் யாரும் இருக்கவில்லை. - அகரன் பூமிநேசன் https://www.facebook.com/profile.php?id=615541812228051 point- சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள். பொதியில் உள்ள பிரச்சனைய பொறுத்து அவர்கள் சுங்க அதிகாரிகளை அழைப்பார்கள். ஆனால் சாதாரணமாக அவர்கள் முதலில் தெரிவிப்பது விமான சேவை ஊழியர்களுக்கு. சொன்னதில் தவறு ஏதும் இல்லை. Heathrow இல் இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் சாதாரணமாக ஹிந்தி மொழியில் வேலையின் போது ஊரையாடுவதை கண்டுள்ளேன்.1 point- சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
ரவைக்களின் உள்ளே வெடி மருந்து இருக்கிறது ... வெடி மருந்து கீத்ரோ விமான நிலையத்தை கடந்து விமானத்தில் ஏறி இருக்கிறது என்றால் .... கொஞ்சம் அதிர்ச்சியான தகவல்தான். எனது ஊகத்தில் இதன் உரிமையாளர் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் வைத்திருப்பவர் உரிமத்தின் பிரதி ஒன்றையும் பாக்கில் வைத்திருந்து இருக்க சாத்தியம் உண்டு அதனோடு பொதியை பூட்டு போட்டு பூட்டியிருக்கலாம் குறித்த பொதியை ஆட்கள் யாரும் பார்க்க தேவையில்லை .... அதை ஸ்கேனர் தானகவே தடுத்து இருக்கும் அதை மீள் பரிசோதனை செய்தவர்கள் குறித்த நபர் பதிவு செய்து கொண்டு போகிறாரா? இல்லையா? எனும் குழப்ப நிலையில் அதனால் விமானத்தில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதால் ஏற்றி இருப்பார்கள் ஆனால் குறித்த நபரின் (பெயருடன்) பொதி ஒன்றில் துப்பாக்கி இருக்கிறது என்பது முதன்மை விமானிக்கும் கொழும்புக்கும் அறிவித்து இருப்பார்கள். இந்த தகவலின் அடிப்படையிலில்தான் கொழும்பில் குறித்த பொதி சுங்க அதிகாரிகளிடம் சேரும். இந்தியர்கள் பலர் டுபாய் அபுதாபியில் இருந்து தங்கத்துடன் சென்று இந்தியாவில் பிடிபடுவார்கள் தலைக்குள் வைத்தது பெண்கள் உள்ளாடைக்குள் வைத்து கொண்டு சென்று எல்லாம் பிடிபடுவார்கள் அவர்களை இந்திய அதிகாரிகள் எதோ சாமர்த்தியம் செய்து பிடித்ததுபோல செய்தி போடுவார்கள் உண்மையில் அதன் பின்னனியில் இருப்பது துபாய் அபுதாபி ஸ்கேனர்கள்தான். 24 கரட் சுத்த தங்கம் மெடல் டெக்டாட்டோரில் (Metal Detectors) பிடிபடாது அதனுடன் செப்பு கலந்த பின்தான் மெடல் டெக்டோட்டோர் சத்தம் செய்யும். இதனை சாதகம் ஆக்கியே தங்கம் கடத்துபவர்கள் செயல்படுகிறார்கள். ஆனால் துபாய் அபுதாபி ஸ்கேனர்கள் இவற்றை துல்லியமாக காட்டுகிறது ...... அவர்களுக்கு தங்கம் விற்றாயிற்று அதன் பின்பு ஒரு இந்தியரை பிடித்து சிறையில் வைத்து வழக்கு வைத்து உணவு கொடுப்பது வீண் செலவு என்பதால் இந்தியாவுக்கு தகவல் அனுப்பிவிட்டு இருந்துவிடுவார்கள் ....... விமானம் போய் இறங்குமுன்பே யார் தங்கத்துடன் வருகிறார் என்பது அவர்களுக்கு தெரிந்துகொண்டுதான் மிகுதி ஸீன் எல்லாம் உருவாக்குவார்கள் (Scene create) .1 point- இமாலயப் பிரகடனமும் மகா சங்கமும் – நிலாந்தன்.
Canadian Tamil Congress · இலங்கையில், குறிப்பாகப் போரின் இறுதிக் கட்டங்களில், இலங்கையில் நடந்த மனித உரிமை அநியாயங்களுக்கு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை அடைவதற்கு உழைப்பது கனடியத் தமிழர் பேரவையின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையில் நிலையான நீண்டகால சமாதானத்தை உருவாக்குவதற்கான செயல்முறைக்கும் ஆதரவளிக்கும் போது, கனடியத் தமிழர் பேரவையானது இலங்கைத் தமிழ் மக்களின் நலன்களுக்கான ஆணையை விட்டுக் கொடுக்காது, சமரசம் செய்யாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றோம். கனடிய தமிழர் பேரவையின் முழுமையான ஊடக அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது. ----------------------------------------------------------------- கனடிய தமிழர் பேரவை ஊடக வெளியீடு 21/12/2023 கனடியத் தமிழர் பேரவை (CTC) இமாலயப் பிரகடனத்தைக் கையளிப்பதற்காக மகிந்த ராஜபக்சாவை சந்தித்தமையால் எமது மக்களுக்கு ஏற்பட்ட வலியை உணர்ந்து ஆழமாக வருந்துகிறது. இந்த ஆண்டு 2023 ஏப்ரலில் உலகத் தமிழர் பேரவையின் (GTF) பிரதிநிதிகள் மற்றும் இலங்கையில் உள்ள பல்வேறு பௌத்த உயர் மதபீடங்களின் மூத்த பௌத்த பிக்குகள் நேபாளத்தின் நாகர்கோட்டில் உரையாடல்களை மேற்கொண்டு இமாலயப் பிரகடனத்தை உருவாக்கினார்கள். (பிரகடனத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது). இந்த நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, இரு தரப்பினரையும் உள்ளடக்கிய தூதுக்குழு இலங்கையில் பல்வேறு சந்திப்புகளை நடத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிஸ் மற்றும் கனடா நாட்டு இராஜதந்திரிகள் உட்பட இலங்கையின் முக்கியமான அனைத்து மதத் தலைவர்கள், சிவில் சமூகத் தலைவர்கள், இலங்கை ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், பெரும்பாலான தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள், இன்னாள் சபாநாயகர்கள், அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் தூதுக்குழுவினர் சந்தித்து உரையாடியிருந்தார்கள். இமாலயப் பிரகடனத்தைக் கையளித்து, தேசிய உரையாடலை ஆரம்பிக்க நாடு முழுவதும் உள்ள மக்களிடம் இந்த முன்னெடுப்பு எடுத்துச் செல்லப்படும் என்பதைத் தெரிவிப்பதே இந்தச் சந்திப்புகளின் பிரதான நோக்கமாகும். இமாலயப் பிரகடனத்தைப் பெற்றுக்கொண்ட அனைவரும் இந்த முன்னெடுப்புக்குத் தமது முழு ஆதரவைத் தருவதாக கூறியதோடு மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ்த் தலைவர்கள் தலைமையில் இலங்கையில் நிரந்தர சமாதானத்துக்கான அரசியல் முன்னெடுப்புகள் நடைபெறக்கூடிய சூழலை உருவாக்க இத் தேசிய உரையாடல் உபயோகமாக அமையுமெனவும் குறிப்பிட்டிருந்தார்கள். இமாலயப் பிரகடனத்தின் பன்மைத்துவ ஈடுபாட்டிற்கான ஆணையின் ஒரு பகுதியாக, தற்போதைய இலங்கை நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவையும் தூதுக்குழுவினர் சந்தித்திருந்தனர். இமாலயப் பிரகடனம் மற்றும் அர்த்தமுள்ள உரையாடலுக்கான முக்கியத்துவத்தைப் பற்றி இலங்கையில் செல்வாக்குள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக மட்டுமே இந்தக் கூட்டம் இடம்பெற்றிருந்தது. இந்தச் சந்திப்பு மற்றும் சந்திப்பின் படங்கள், புலம்பெயர் தமிழர்களிடமும், கனடியத்தமிழர்களிடமும் வேதனை தரும் வகையில் தீவிரமாக உணர்வுகளைத் தூண்டியுள்ளன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். கனடியத் தமிழர் பேரவை உண்மையிலேயே இது குறித்து ஆழமாக வருந்துகிறது. இவ்வாறான வேதனை உணர்வினை எமது மக்களுக்கு ஏற்படுத்துவதைக் கனடியத் தமிழர் பேரவை தனது நோக்கமாக கொண்டிருக்கவில்லை. இமாலயப் பிரகடனத்தின் முதன்மையான நோக்கமும், அதைத் தொடர்ந்து நடைபெறும் அனைத்துச் சந்திப்புகளும், ஈழத்தமிழர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வை அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய உரையாடலை ஆரம்பிப்பதாகும். அத்துடன் தீவில் உள்ள அனைத்து முக்கிய பங்குதாரர்களையும் இந்த முயற்சியில் ஈடுபடுத்துவதாகும். நாங்கள் அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை. அவ்வாறான வேலைத்திட்டம் இலங்கையில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தலைவர்களைச் சார்ந்த விடயமாகும். கனடிய தமிழர் பேரவை 2009 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) பங்கேற்பது உட்பட உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், அதற்கான பொறுப்புக்கூறல் மற்றும் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்காகக் கடுமையாக முன்னின்று உழைத்து வருகின்றது. இலங்கையில், குறிப்பாகப் போரின் இறுதிக் கட்டங்களில், இலங்கையில் நடந்த மனித உரிமை அநியாயங்களுக்கு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை அடைவதற்கு உழைப்பது கனடியத் தமிழர் பேரவையின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையில் நிலையான நீண்டகால சமாதானத்தை உருவாக்குவதற்கான செயல்முறைக்கும் ஆதரவளிக்கும் போது, கனடியத் தமிழர் பேரவையானது இலங்கைத் தமிழ் மக்களின் நலன்களுக்கான ஆணையை விட்டுக் கொடுக்காது, சமரசம் செய்யாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றோம். தூரதிர்ஷ்டவசமாக, இமாலயப் பிரகடனத்தின் உண்மையான நன்நோக்கம் குறித்துத் தவறான விளக்கங்கள் பரப்பப்பட்டுக் கனடியத் தமிழர் பேரவை அலுவலகர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராகத் தேவையற்ற தாக்குதல்கள் நடந்துவருகின்றன. நீண்டகாலமாக கனடியதமிழர் பேரவையின் பொறுப்புக்கூறல், நீதியை நிலைநாட்டுதல் மற்றும் சமாதானத்துக்கான பணியையும் முன்னேற்றத்தையும் இழிவுபடுத்தும் இத்தகைய செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேலதிக தகவல்கள் மற்றும் ஊடக விவரங்களுக்கு, கீழுள்ள மின்னஞ்சல் முகவரியோடு தொடர்பு கொள்ளவும்: info@canadiantamilcongress.ca1 point- போராளியின் இறுதி வெடி !
1 pointதளபதி ஜெயத்துக்கும், நளா அக்கா, கபிலனுக்கும் வீர வணக்கம். உலக அமைதிக்காய் சிலுவை சுமந்தவர் பிறந்த நாளில்… எமது உரிமைக்காய் சிலுவை சுமந்தவகளை நினைவூட்டிய பகிர்வு. அழவைத்தாலும்…பகிர்வுக்கு நன்றி @nunavilan @முதல்வன் உங்கள் பதிவு பிள்ளைகள் நன்றாக இருக்கிறார்கள் என்ற தகவலை தருகிறது நன்றி🙏.1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- நகைச்சுவைக் காட்சிகள்
1 point- அக்குட்டியும் பிச்சுமணியும். (யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நகைச்சுவை காணொளிகள்.)
வெளிநாட்டு போத்தலிற்கு ஆசைப்பட்ட பிச்சுமணி - கடுப்பான அக்குட்டி1 point- களைத்த மனசு களிப்புற ......!
1 point1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointசர்வகட்சி மாநாடு - ஜெயவர்த்தனவின் சூழ்ச்சி சர்வகட்சி மாநாட்டிற்கான அழைப்பு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு வந்து சேரும்வரைக்கும் அனைத்து விடயங்களும் சிற்ப்பாக நடந்துவருவது போன்ற தோற்றப்பாட்டினையே உருவாக்கியிருந்தது. மக்கள் விடுதலை முன்னணி, நவ சம சமாஜக் கட்சி ஆகிய கட்சிகள் ஜெயாரினால் தடைசெய்யப்பட்டிருந்ததையடுத்து ஏனைய அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வந்த ஜெயார், தான் தில்லியில் நடத்திய பேச்சுக்கள் குறித்து அவர்களுக்கு விளக்கியதுடன், அவைகுறித்த ஒருமித்த கருத்தினை ஏற்படுத்தவே தான் சர்வகட்சி மாநாட்டினை கூட்டவிருப்பதாக கூறத் தொடங்கினார். அரசியல்க் கட்சித் தலைவர்களை சந்தித்து வந்த அதேவேளை பல பெளத்த மதகுருக்களின் அமைப்புக்களையும் அவர் சந்திக்கத் தவறவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் தம் பங்கிற்கு சில சந்திப்புக்களை மேற்கொண்டனர். எம்.ஜி.ஆர், கருநாநிதி உட்பட பல தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைச் சந்தித்த அவர்கள் ஜெயவர்த்தனவுக்கும் பாரத்தசாரத்திக்கும் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு குறித்து விளக்கமளித்தனர். மேலும், ஆயுத அமைப்புக்காளான புலிகள், புளொட், டெலோ, ஈரோஸ் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடமும் இதுகுறித்துப் பேசினர். அதிகாரம் கொண்ட பிராந்திய அலகுகள் மற்றும் அவற்றுக்குக் கொடுக்கப்படவிருக்கும் மிகக்குறைந்த அதிகாரங்கள் குறித்த தமது கடுமையான அதிருப்தியினை போராளி அமைப்புக்கள் முன்னணியினரிடம் தெரிவித்தனர். இதன்பின்னர், போராளி அமைப்புக்கள் இந்த முயற்சிகளுக்கான தமது எதிர்ப்பினை முன்னணியின் தலைவர்களிடம் முன்வைத்தனர். குறிப்பாக, பிரபாகரன் தனது விமர்சனத்தில் "தமிழ் மக்களின் ஆணையினை நிராகரிக்க முன்னணியினருக்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று வாதிட்டார். போராளிகளைச் சமாதானப்படுத்த எத்தனித்த அமிர்தலிங்கம், ஜெயவர்த்தனவுடன் தாம் சமரசம் செய்யவேண்டி வந்தமைக்கான காரணங்களை முன்வைக்கத் தொடங்கினார். அவர் முன்வைத்த முக்கிய மூன்று காரணங்களும் பின்வருமாறு அமைந்திருந்தன, 1. இந்திரா காந்தியின் அழுத்தத்தினாலேயே தாம் சமரசத்தில் ஈடுபட வேண்டி வந்தது. 2. சிங்களவர்கள், தமிழர்களுக்கு ஒருபோதும் நியாயமான தீர்வினைத் தரமாட்டார்கள் என்பதனை உலகிற்குக் காட்ட இச்சந்தர்ப்பத்தைப் பாவிப்பதோடு, தமிழர்களின் விடுதலைக்கு ஆயுதப் போராட்டமே சரியானது என்பதை நியாயப்படுத்த சர்வகட்சி மாநாட்டினைப் பாவிப்பது. 3. தமிழர்கள்மீது அரசு நடத்திவரும் படுகொலைகளை வெளிக்கொணரவும், தமிழர்கள் எதிர்நோக்கும் அவலங்களை உலகறியச் செய்யவும் சர்வகட்சி மாநாட்டினைக் களமாகப் பாவிப்பது. ஆனால், அமிர்தலிங்கம் முன்வைத்த இக்காரணங்கள் எவற்றையும் போராளி அமைப்புக்கள் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஜெயவர்த்தனவை நம்பவேண்டாம் என்று போராளி அமைப்புக்கள் அமிர்தலிங்கத்தை எச்சரித்தன. தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ளவே ஜெயவர்த்தன சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டுவதாக அவர்கள் கூறினர். தமிழ்ப் போராளி அமைப்புக்களை முற்றாக அழித்துவிடவே அவர் முயல்கிறார் என்றும் அவர்கள் வாதாடினர். 1983 ஆம் ஆண்டு மார்கழி 21 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல்க் கட்சிகளின் மாநாடு ஒன்றினை ஜெயார் கூட்டினார். பின்வரும் அரசியற் கட்சிகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இலங்கை சுதந்திரக் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி, கம்மியூனிஸ்ட் கட்சி, மகஜன எக்சத் பெரமுன, தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்பனவே அக்கட்சிகளாகும். இக்கூட்டத்தினை இரு முக்கிய விடயங்கள் குறித்த அவர்களின் கருத்தினை அறிந்துகொள்ளவே தான் நடத்துவதாகக் கூறினார். முதலவாது விடயம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேச்சுக்களை மீளவும் ஆரம்பிப்பது. இவ்விடயத்தில் கட்சிகள் தமது சம்மதத்தினைத் தெரிவித்தன. சுதந்திரக் கட்சியின் குழுவிற்குத் தலைமை தாங்கிய சிறிமா, "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பேச்சுக்களுக்கு அழைக்கப்பட வேண்டும் என்பதனை நாம் தொடர்ச்சியாகக் கூறியே வந்திருக்கிறோம்" என்று பதிலளித்தார். இரண்டாவது விடயம் சர்வகட்சி மாநாடு நடத்துவதற்கான இடம், காலம், பேசப்படும் விடயங்கள் குறித்ததாக அமைந்தது. சுமார் 90 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சர்வகட்சி மாநாட்டினை 1984 ஆம் ஆண்டு தை மாதம் 10 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்துவதென்று கலந்துகொண்டவர்களால் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்க் காங்கிரஸைச் சேர்ந்த குமார் பொன்னம்பலம் கூட்டத்தில் பேசும்போது, "தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை அடைந்துகொள்வதற்கு சர்வகட்சி மாநாட்டிற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?" என்று ஜெயாரைப் பார்த்து வினவினார். பொன்னம்பலத்திற்குப் பதிலளித்த ஜெயார், தை மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கும் சர்வகட்சி மாநாடு தொடர்ச்சியாக 10 நாட்கள் நடைபெறும் என்றும், சுமார் 30 மணித்தியாலங்களுக்கு நடக்கப்போகும் கலந்துரையாடல்களின் மூலம் தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தான் நம்புவதாகவும் கூறினார். சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்படவிருக்கும் விடயங்கள் குறித்து பேசப்பட்டபோது, இந்தியாவில் ஜெயார் மேற்கொண்ட பேச்சுக்களின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து சிறிமா ஜெயாரிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜெயார், தில்லியில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து 10 நாட்களில் தான் பேசுவதாகக் கூறினார். பின்னர் நீலன் திருச்செல்வத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜெயார், சர்வகட்சி மாநாட்டிற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை அழைக்க தான் முடிவெடுத்திருப்பதாகக் கூறினார். இதனையடுத்து சென்னையில் அறிக்கையொன்றினை வெளியிட்ட அமிர்தலிங்கம் ஜெயாரின் இம்முடிவு குறித்த தமது கட்சியின் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பது எவ்வாறு என்கிற கேள்வி எழுந்தபோது சிக்கலொன்று உருவாகியது. சர்வகட்சி மாநாட்டின் செயலாளரான பீலிக்ஸ் டயஸ் அபயசிங்கவிடம் பேசிய நீலன் திருச்செல்வம், சென்னையிலிருக்கும் அமிர்தலிங்கத்திற்கு அழைப்பினை நேரடியாக அனுப்பலாம் என்று ஆலோசனை வழங்கினார்.ஆனால், முன்னணியினருடன் பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்கிற அமைச்சரவை தீர்மானம் இன்னமும் நடைமுறையில் இருப்பதனால், சென்னைக்குத் தனது பிரதிநிதியொருவரை நேரடியாக அனுப்பி அமிர்தலிங்கத்திடம் அழைப்பினை வழங்குவதை அரசு விரும்பவில்லை. இவ்வேளையில் மார்கழி 30 ஆம் திகதி தில்லிக்குப் பயணமாகும் ஏற்பாடுகளில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சத்வால் ஈடுபட்டிருந்தார். முன்னணியினருக்கான அழைப்பினை வழங்குவது குறித்த சிக்கலின்போது உதவுவதற்கு அவர் முன்வந்தார். தில்லிக்கான தனது பயணத்தின்போது சென்னையில் தரித்துச் சென்ற சத்வால், சர்வகட்சி மாநாட்டிற்கான அழைப்பினை அமிர்தலிங்கத்திடம் கையளித்துச் சென்றார். சர்வகட்சி மாநாட்டிற்கு அமிர்தலிங்கத்திற்கு அனுப்பப்பட்ட அழைப்பில் இரு சேர்க்கைகள் அடங்கியிருந்தன. முதலாவது சேர்க்கையில் பகிரங்கமாக வெளியிடப்பட்ட ஐந்து ஆவணங்கள் அடங்கியிருந்தன. அவற்றுள் முதலாவது ஆவணம் ஆடி இனக்கொலை முடிவுற்ற ஒரு சில நாட்களின் பின்னர் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நரசிம்ம ராவின் விஜயம் குறித்து வெளியிடப்பட்ட அரச ஊடக அறிக்கை. இரண்டாவது, ஜெயாரின் விசேட தூதராக இந்தியா சென்ற அவரது சகோதரரான இன்னொரு ஜெயவர்த்தன, சண்டே ஒப்சேர்வர் பத்திரிகைக்கு ஆவணி 14 ஆம் திகதி வழங்கிய செவ்வி. மூன்றாவது ஆவணம், பார்த்தசாரதியுடன் ஆவணி 25 முதல் 29 வரையான நாட்களில் இலங்கை அரசாங்கம் முதன்முதலாக நடத்திய பேச்சுக்கள் தொடர்பாக ஜனாதிபதிச் செயலகம் வெளியிட்டிருந்த அறிக்கை. நான்காவது ஆவணம் கார்த்திகை மாதத்தில் பார்த்தசாரதியுடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் தொடர்பாக ஜனாதிபதிச் செயலகம் வெளியிட்ட அறிக்கை. ஐந்தாவது ஆவணம் தில்லியிலிருந்து திரும்பியபின்னர் மார்கழி முதலாம் திகதி ஜெயார் வெளியிட்ட அறிக்கை என்பனவாகும். அழைப்பிதழின் இரண்டாவது இணைப்பு பின்வரும் தலையங்கத்தைக் கொண்டிருந்தது. சர்வகட்சி மாநாட்டில் பேசப்படும் விடயங்களை தீர்மானித்துக்கொள்ள பின்வரும் விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதன்படி பின்வரும் 14 விடயங்களை இரண்டாவது இணைப்பு கொண்டிருந்தது, 1. தனிநாட்டிற்கான கோரிக்கையினை முற்றாகக் கைவிடுவது. 2. ஒரு மாகாணத்திற்குள் அமைந்திருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை அம்மாகாணத்தில் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாகவும் அம்மாகாண சபை உறுப்பினர்களின் சம்மதத்தினூடாகவும் இணைத்துக்கொள்வது. 3. பிராந்திய சபைகளைக் கொண்டிருக்கும் பிராந்தியங்களில் பெரும்பான்மைப் பலத்தினைக் கொண்டிருக்கும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியினால் அப்பிராந்தியத்தின் முதல்வராக நியமிக்கப்படுவார். அவரால் அமைக்கப்படும் பிராந்திய சபை உறுப்பினர்களுடன் இணைந்து அவர் செயற்படுவார். 4. மத்திய அரசிடமிருந்து பிராந்திய சபைக்கு வழங்கப்படாத எந்த அதிகாரமும் ஜனாதிபதியினாலும், பாராளுமன்றத்தாலும் பொறுப்பேற்கப்பட்டிருக்கும். நாட்டின் இறையாண்மை,ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வளர்ச்சி, அபிவிருத்தி ஆகியவை தொடர்ந்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். 5. பிராந்திய சபைகளுக்கு வழங்கப்படவிருக்கும் பொறுப்புக்கள் பற்றி இனிமேல்த்தான் தீர்மானம் எடுக்கப்படும். இவ்விடயங்கள் தொடர்பாக தகுந்த சட்டங்களை இயற்றுவதற்கு அப்பிராந்தியங்களுக்கு அதிகாரம் தரப்படும். வரி அறவிடுதல், கட்டணங்களை அறவிடுதல், மத்திய அரசாங்கத்திடமிருந்து கடன்களை பெற்றுக்கொள்ளுதல் ஆகிய விடயங்களுக்கு பிராந்திய சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படும். 6. திருகோணமலைத் துறைமுகத்தினை மத்திய அரசாங்கமே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். 7. பிராந்தியங்களில் உயர் நீதிமன்றங்கள் செயற்பட அதிகாரம் கொடுக்கப்படும் அதேவிடத்து உச்ச நீதிமன்றம் நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் மேலான, அரசியலமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்ட அதிகாரத்தைக் கொண்டிருக்கும். 8. பிராந்தியங்களில் கடமையில் ஈடுபடுவோருக்கும், வேறுபகுதிகளிலிருந்து அப்பிராந்தியத்தில் கடமைக்கு வருவோருக்கும் பிராந்திய யாப்பின்படி அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும். 9. பிராந்தியத்திற்குள் ஆட்சேர்ப்பிற்கும், ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கும் என்று பொதுமக்கள் சேவைகள் ஆரம்பிக்கப்படும். 10.அரச சேவைகளிலும், முப்படைகளிலும் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப பணியமர்த்தல்கள் நடைபெறும். 11.பிராந்தியத்தின் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப பிராந்தியத்திற்கான பொலீஸ் படைப்பிரிவிற்கு பணியாளர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். 12. காணிப் பங்கீடு தொடர்பாக தேசியக் கொள்கையொன்று வரையறுக்கப்படும். 13. உத்தியோகபூர்வ மொழியான சிங்களம், தேசிய மொழியான தமிழ் ஆகியவை தொடர்பாக அரசியல் யாப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவதோடு தேசிய கீதம், தேசியக் கொடி தொடர்பாகவும் மாற்றங்கள் உள்வாங்கப்பட்டு யாப்பில் சேர்த்துக்கொள்ளப்படும். 14. அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்ட எதிர்ப்பினை அனைத்துக் கட்சிகளும் முன்னெடுக்க வேண்டும். என்று அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
அதை விட டபிள் றிபிள்.. சவுத்கோல் ஹைஸ் பக்கம் போனா கவுன்சிலே றோட்டில லைட் எல்லாம் கட்டி தீபாவளி கொண்டாடும்.. என்னடா குஜராத்தில நிக்கிறமா எண்டு நினைப்பு வரும்..1 point- இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ள வேண்டுகோள்
அடுத்த தேர்தலில் இந்தியாவின் ஆதரவு ஜனாதிபதி வெற்றி பெற்றால் இவரின்ட கனவு சில சமயம் பலிக்கும் இல்லை என்றால் மீண்டும் வேதாளம் ...Murunga1 point- துறவியாகும் டயானா கமகே?
1 point- சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
பொத்தம் பொதுவா எல்லா விமானா சேவையையும் இங்கு எழுத முடியாது எழுதினால் யாழ் படுத்து விடும் அவ்வளவு தரவுகள் .1 point- தமிழ் மக்களை, ஜனாதிபதி தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறார்!
இனியும் ஏமாற்றத்தான் போகிறார்கள். தமிழ் மக்களும் ஏமாறத்தான் போகிறார்கள்.1 point- இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ள வேண்டுகோள்
இப்போது கஜேந்திரகுமார் அவர்கள் ஒரு நடைமுறை சாத்தியமான இடத்துக்கு வந்திருப்பதாக தெரிகின்றது. நல்ல முன்னேற்றம்.1 point- முள்ளிவாய்க்கால் - காஸா ஒப்பிட்ட "யுனிசெப் பேச்சாளர்"
சரியாக சொன்னீர்கள். காசாவுக்காக எத்தனை தடவைகள் பாதுகாப்பு சபை, அந்த சபை இந்த சபை என்று கூட்டுகிறார்கள். தமிழர்களுக்காக ஒரு நாலாவது கூட்டி இருப்பார்களா? இப்போது பெரிதாக ஒப்பிட்டு பேசுவதில் என்ன பலன். எல்லாவற்றிட்கும் லஞ்சம் கொடுத்தால்தான் ஏதாவது செய்வார்கள். மற்றபடி அது ஒரு பிரயோசனமற்ற அமைப்பு. காசேதான் கடவுளடா.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointராணுவத்தைப் பலப்படுத்த சர்வகட்சி மாநாடு நடத்திய ஜெயாரும், தமிழ் ஈழத்தைக் கைவிட்ட அமிர்தலிங்கமும் அமிர்தலிங்கம் எதிர்பார்த்ததைப் போலவே அவர் தில்லியில் இருந்து சென்னை திரும்பும் போது கடுமையான எதிர்ப்பினைச் சந்திக்க நேர்ந்தது. வடக்குக் கிழக்கினை இணைப்பதை ஜெயாரின் திட்டம் முற்றாக நிராகரித்திருந்தமையினால் ஆயுத அமைப்புக்கள் அதனை கடுமையான எதிர்த்திருந்தன. தமிழ் மக்களையும், அவர்களின் ஒரே கோரிக்கையான தமிழ் ஈழத்தையும் அமிர்தலிங்கம் பலிகொடுத்துவிட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். இதற்குப் பதிலளித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர், ஜெயார் முன்வைத்திருக்கும் யோசனைகள் வடக்குக் கிழக்கு இணைந்த பிரதேசத்தை தனி அலகாக ஜெயார் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், வடக்குக் கிழக்கில் நீதிமன்ற மொழியாக தமிழ் மொழியினை ஏற்றுக்கொள்ள அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் வாதாடத் தொடங்கினர். 1983 ஆம் ஆண்டு மார்கழி 1 ஆம் திகதி கொழும்பு திரும்பிய ஜெயவர்த்தன பின்வரும் பத்திரிகை அறிக்கையினை வெளியிட்டார், பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டிற்காக நான் புது தில்லி சென்றிருந்தபோது தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தியுடன் பேசினேன். தில்லியிலிருந்து நாடு திரும்புவதற்கு முன்னர் இப்பிரச்சினை குறித்து இலங்கையைச் சேர்ந்த பல அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டேன். இந்திரா காந்தியின் விசேட தூதுவரான பார்த்தசராதியும் இலங்கைக்குத் தான் மேற்கொண்ட பல விஜயங்களின்போது இதுகுறித்து என்னுடன் பேசியிருந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் மீளவும் பேச்சுவார்த்தைகளை எனது அரசாங்கம் ஆரம்பிப்பதற்கு நிபந்தனையாக அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையினை முற்றாக கைவிட்டு விடவேண்டும் என்கிற கோரிக்கையினை எனது அரசாங்கம் முன்வைத்திருந்ததது என்பதை நான் தொடர்ச்சியாகக் கூறிவந்திருப்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆகவே, எனது நிபந்தனையை ஏற்று, தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை எட்டுவதற்காக தமது தனிநாட்டுக் கோரிக்கையினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கைவிட்டு விட்டனர் என்பதனை மகிழ்வுடன் இத்தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். மேலும், இலங்கையின் ஒருமைப்பாட்டினையும், இறையாண்மையினையும், சுதந்திரத்தையும் இந்தியா முழுமையாக ஏற்றுக்கொள்கிறது என்பதையும், இலங்கை பிளவுபடுவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்பதையும் இவ்விஜயத்தின்போது இந்தியாவின் பிரதமர் என்னிடம் உறுதயளித்தார் எனும் செய்தியையும் இத்தருணத்தில் மகிழ்வுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். கடந்த கார்த்திகை மாதம் கொழும்பில் என்னுடன் திரு பார்த்தசாரதி அவர்கள் மேற்கொண்ட பல பேச்சுவார்த்தைகளில் கலந்துரையாடப்பட்ட பல விடயங்கள் குறித்து தில்லியில் அவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேசினார். அப்பேச்சுக்களின்போது முன்னணியினர் தெரிவித்த பதில்களையும் அவர் பெற்றுக்கொண்டார். நான் முதலாவதாக இப்பிரச்சினை குறித்து அனைத்து அரசியல்க் கட்சிகளினதும் தலைவர்களிடமும் கலந்துரையாடுவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்யவிருக்கிறேன். அதன் பின்னர், பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கப்பட்டிருக்கும் பல ஆலோசனைகளை இக்கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பிவைத்து அவைகுறித்து அவர்கள் தெளிவான விளக்கத்தினை அடைந்துகொள்ள கால அவகாசம் ஒன்றினை வழங்கி, தக்க தருணத்தில் சர்வகட்சி மாநாட்டினை அழைத்து இதுகுறித்து அனைவரும் பேசக் கூடிய களம் ஒன்றினை உருவாக்கவிருக்கிறேன். என்று அவ்வறிக்கையில் கூறியிருந்தார். இதன் பின்னர், தனது இராணுவத்தினருக்கான ஆயுத தளபாடக் கொள்வனவுகளை முடுக்கிவிட்ட ஜெயவர்த்தன, அதற்கான கால அவகாசத்தைக் கணக்கிட்டு, சர்வகட்சி மாநாட்டினை ஒழுங்குசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தொடங்கினார். சர்வகட்சி மாநாடு எனும் போர்வைக்குள் கால அவகாசத்தை எடுத்துக்கொண்ட ஜெயார், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிடும் கைங்கரியங்களில் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினார்.1 point- சிந்தனைக்கு சில படங்கள்...
1 point- இமாலயப் பிரகடனம் – பின்னணியும் வரலாறும்
உங்களது நிக்சன், யதீந்திரா தவிர்ந்த இதர கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.1 point- பக்கத்து வீடு
1 pointநன்றி பகிர்விற்கு…. அக்கோய் தமிழ் ஆட்கள் அவசரத்திற்கு வந்து வேலை செய்வார்கள் ஆனால் உயரத்தால அகலத்தால கூட்டி குறைத்து சிக்கலில மாட்டி விடுவினம் அதோட bill உம் தர மாட்டினம். நீங்கள் பரவாயில்லை எமது வீட்டிற்கு பின் வீட்டுக்காரர் இறந்தது 4 வருடங்களிற்கு பின்னரே எமக்கு தெரிந்தது.1 point- சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
Heathrow விமான நிலையத்தின் பரிசோதனைகள் எந்த கேவல நிலையில் உள்ளன என்று தெரிகிறது.1 point- சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
சொறீலங்கா எயார் லைன்ஸ் பிரித்தானியாவில் வைச்சே இதை தடுத்திருக்கலாமே. காசுக்கு பார்த்தும் பார்க்காமலும் ஏத்திறது.. ஏத்திப் போட்டு கொழும்பில வைச்சு மிச்சம் மீதியை புடுங்கிறது. சொறீலங்கா உல்லாசப் பயணத்துறைக்கு உகந்த நிர்வாக முறைமையற்ற நாடாகி விட்டது.1 point- தமிழ் மக்களை, ஜனாதிபதி தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறார்!
காலம் காலமாக இது தான் நடக்கிறது. பேச்சுவார்த்தைக்கென்று போகிறர்கள் ஏன் ஒரு நிகழ்ச்சிநிரலில் போகிறார்கள் இல்லை. சிலவிடயங்களில் கஜேந்திரனை போற்றியே ஆக வேண்டும். இணைப்புக்கு நன்றி கிருபன்.1 point- துபாயில் இருந்து 303 இந்தியர்களுடன் பயணித்த விமானம் பிரான்ஸில் தரையிறக்கம்; கடத்தலா என விசாரணை
1 pointஓட்டை உடைசல் கப்பலாக இல்லாமல் ஒழுங்காய் பறக்கிற விமானமாய் பிடித்திருக்கிறார்கள்......! 😁1 point- மாயாவி எங்கிருந்தாலும் காட்டுக்கு வரவும் டும் டும் டும்- phantom -mayavi comics
பிள்ளைப் பராயத்திற்கே அழைத்துச் செல்லும் கதைகள்.........! 👍 பகிர்வுக்கு நன்றி வெங்காயம் ........!1 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 09 அண்ணாவின் வித்துடலை குருதியூறும் நிலத்தினுள் விதைத்து மூன்றாம் நாள் அதிகாலையில் பெருங்குரலெடுத்து அழுதாள் அம்மா. திகைப்படைந்து எழுந்தவர்கள், மங்கலான உறக்கக் கலக்கத்தோடு பார்த்தார்கள். நீராடி விரிந்திருந்த ஈரக் கூந்தலோடு அண்ணாவின் புகைப்படத்துக்கு முன் அமர்ந்திருந்தாள். சிறிய குத்து விளக்கில் அணையாச் சுடர் ஈகித்திருந்தது. நேற்றிரவு படைக்கப்பட்ட சாப்பாட்டில் ஈரம் விலகியிருந்தது. அம்மா தண்ணீர் செம்பைத் தூக்கி கவிழ்த்துக் காட்டினாள். ஒரு சொட்டு நீரில்லை. மீண்டும் அழத்தொடங்கினாள். வாதையின் செதில்கள் அகலமறுத்துப் பெருகிய பொழுதாயிற்று. “என் நிழலில் மரணத்தின் நித்தியம் முழுமரமாய் வளர்ந்து நிற்கிறது. ஆனாலும் உதிரும் ஓரிலையின் நடுக்கம் கூட என் இதயத்தில் இல்லை. மீளவும் சொல்கிறேன். பீரங்கிகளினதும் போர்விமானங்களினதும் தாக்குதல்களால் பீதியாகமாட்டேன். விடுதலைக்காக போரிட்டு மடியுமிந்த வாழ்வு மகத்தானது. தெளிந்த வானத்தை விடவும் ஆகிருதியில் வலுத்தது என் பெருங்கனவு. இதோ இக்கணத்தில் தியாகத்தின் பலிபீடத்தில் கிடத்தப்பட்டுள்ளேன். என் விழுப்புண் மீது அழுந்தப் பதிந்திருக்கும் ரத்த வரிகளை மேற்கு வானில் தாழும் சூரியன் பார்க்கிறது. நெருப்பேந்தி நாளையது கிழக்கில் தோன்றுகையில் என் முகத்தைச் சூடி வரும். ஆகுதியின் இனிமையை அருளும் நிலத்தை எதனாலும் விழுங்கிவிட முடியாது.” வீரச்சாவு எய்துவதற்கு முன்பாக அண்ணா திரும்பத் திரும்ப சொன்ன வார்த்தைகள் இவையென களமுனையிலிருந்து வந்த படையணிக்காரர்கள் சொன்னார்கள். அண்ணா நன்றாக உரையாற்றுவான். கவிதைகள் எழுதவும் செய்வான். விடுப்பில் வந்திருந்த நாட்களில் எழுதிய சில கவிதைகளை அம்மாவிடம் கையளித்திருந்தான். ஒருநாள் நானும் அவனும் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்பிய போது கொந்தளிப்பாக சிலவற்றைக் கதைத்தோம். “போரால் எதையும் பெறமுடியாது போனால், இத்தனை இழப்புகளும் வீண் அல்லவா” என்றேன். இத்தனை தியாகங்களும் வெறும் இழப்பாகவே எஞ்சுமென உன்னால் நினைத்துப் பார்க்க முடிகிறதா! போரை நம்பியதல்ல இந்தப் போராட்டம். எங்கள் வாழ்வுரிமையை போரின் வழியாக மட்டுமே வலியுறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை நம்பமுடியாதபடி காலம் தருவித்துவிட்டது. நீ சொல்வதைப் போல இழப்புக்கள் வீண் போனாலும் மிஞ்சியிருப்பவர்கள் நினைவு கூருவர். மாண்டவர்கள் இங்கேயே தான் இருப்பார்கள். ஏனென்றால் இந்த மண் அவர்களின் மேனி. எஞ்சியவர்களை அவர்கள்தான் சுமப்பார்கள். இறுதியில் இழப்பைத் தான் பெறுவோமென்றால் ஞாலத்தின் அறம் புழுத்துப்போகும். குமட்டல் வாடை மனுஷகுலத்தின் மீது ஈயெனப் பெருகும். அற்பமான நோய்களில் உலகு நொடியும். எம் இனத்தின் புராதனக் கண்ணீரும் குருதியும் அறத்தை விடவும் மேன்மையான ஆற்றலோடு தீவிரமாகும். இழப்பின் ஞாபகங்கள் பரம்பரை பரம்பரையாக எங்கள் மாதர்களின் ஆதிக்குகையுள் அனற்குழம்பெனக் கனன்று கருவாகி வெளியுமிளும். பூர்வீகச் சந்ததி பெருகும்” என்றான். உடலீரம் காய்ந்திருந்தது. அண்ணாவின் சொற்கள் சுதந்திரத்தின் பிரசங்கமென என்னுள்ளே வலுவாக உருகி இறங்கியது. “தியாகங்கள் எல்லாமும் ஞாபகங்களாய் எஞ்சினால், பாழான போரை பூமி நினைவில் வைத்துக் கொள்ளும். அது நன்மைக்கே” என்றேன். “போரை விடவும் பூமி பாழானது. ஏனெனில் போர் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வழி மட்டுமே” என்ற அண்ணா நாயுண்ணிப் பழங்களைப் பிடுங்கி வாயில் போட்டான். இனிப்புச் சுரந்து இதமாய் உடல் மொழிந்தான். அன்றிரவு நேரமாகியும் நான் விழித்திருந்தேன். குப்பி விளக்கு வெளிச்சத்தில் ஓவியமொன்றை வரைந்து கொண்டிருந்தேன். வீட்டின் வெளியே அமர்ந்திருந்து அம்மாவும் அண்ணாவும் கதைத்துக் கொண்டிருந்தார்கள். களமுனையாகவிருக்கும் சொந்தவூரின் கோவில்களுக்கு விளக்கு வைக்குமாறு சொன்னாள். அண்ணாவுக்கு இறை பக்தி அதிகம். சிறிய வயது முதலே சைவ மடத்தில் தீட்சை பெற்று நடராஜருக்கு பூசை செய்தவன். அவனுடைய ஆச்சார நெறிகள் தீவிரமானவையாக இருந்தன. இயக்க வாழ்க்கையில் எல்லாமும் நொறுங்குண்டு தலைகீழானது. மாட்டிறைச்சியை விடவும் ருசியானது எதுவுமில்லை என்பது அண்ணாவின் உச்சாடனமாய் ஆகியிருந்தது. அண்ணாவுக்கு எட்டாம் நாள் படையல் வைக்கும் போது அம்மா மாட்டிறைச்சியையும் சேர்த்துக் கொண்டாள். சொந்தக்காரர்கள் சிலர் முகம் சுழித்து வேண்டாமென்றனர். “பிள்ளைக்கு பிடிச்சததான் வைக்கோணும், உங்களுக்கு பிடிச்சத வைக்க வேணுமெண்டால் நீங்கள் மோசம் போன பிறகு செய்து வைக்கிறன்” என்ற அம்மாவின் கூற்று பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. செம்பு தளும்ப தண்ணீர் வைக்கப்பட்டு தலை வாழை இலையில் மாமிசக் குழம்புகள் எல்லாமும் படைக்கப்பட்டன. முச்சந்தியில் கழிப்புக் கழித்து பூசணியை இரண்டாகப் பிளந்து குங்குமம் தடவி, எல்லாவற்றையும் சுளகொன்றில் பரப்பி வைத்துவிட்டு வந்தோம். வீட்டில் அனைவரும் நிறைவாகச் சாப்பிட்டனர். அம்மா உபசரித்து கவனித்தாள். தண்ணீர் என்று சபையில் யாரும் கேட்காத வண்ணம் எல்லோருக்கும் வழங்கப்பட்டுக் கொண்டே இருந்தது. வீட்டைச் சுற்றியும் புதுக்குடங்களில் குடிதண்ணீர் நிறைத்து வைத்திருந்தாள். அம்மாவுக்கு சித்தம் குலைந்திற்றோவென நொந்த சிலர் சிறிய தலையசைப்போடு எழுந்து சென்றனர். பிள்ளையின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள் அம்மா. “நான் சாகத் தயாரானவன், வீரச்சாவு அடைந்தால் அழாதேங்கோ. நீங்கள் என்னைப் பிரசவித்த தருணத்தை விடவும் பூமிக்குள் விதைக்கும் போது மங்கலம் கொள்வீர்கள்” என்றுரைத்த அண்ணாவின் குரல் அம்மாவின் ஞாபகத்தில் பொங்கி நுரைத்தது.”வந்து கொண்டிருக்கிறான், தேவலோகத்திலிருந்து என் மகன் வருகிறான்” அம்மா ஆனந்தித்து உறுதியாகச் சொன்னாள். பரவசமாகி தன்னுடைய முலைகளை எடுத்து வெளி நோக்கி விரல்களால் பிசுக்கி “பிள்ளைக்கு சரியான தண்ணி விடாய்” என்றாள். இரவு முழுதும் நிலவும் பனியும் விழித்திருந்தது. அம்மா அடிக்கடி குடங்களையும், படையலில் வைக்கப்பட்டிருந்த செம்பையும் சென்று பார்த்தாள். அளவு குறையவில்லை. வீட்டின் வாசலை விட்டு ஒதுங்கியிருந்தாள். அண்ணா உள்ளே செல்ல ஏதும் தடையாக இருக்கவே கூடாது என ஒழுங்குகள் செய்திருந்தாள். ஆவியாய் அலைக்கழியும் அண்ணாவுக்காக சொந்தக்காரர்கள் சிலரும் காத்திருந்தனர். அற்புதங்களுக்காக காத்திருந்த சனங்களின் கதைகள் இரவைத் தீண்டியது. வீட்டினுள்ளே ஒரு பல்லி சொன்னது. அதன் நீளவொலி எல்லோரையும் தன்பக்கம் திருப்பியது. செய்வினைகள் அறுப்பதில் வல்லவளாக இருந்த புறாக்குட்டி அத்தை “காயப்பட்டு துடிதுடித்து பங்கருக்குள்ள தாகமெடுக்க, தண்ணியில்லாமல் தன்ர ரதத்தையே அள்ளி நக்கியிருக்கிறான். அந்தச் சீவன்ர தாகம் பூலோகத்தில தான் இருக்கு. அவன் வருவான்” என்றாள். நான் பொறுமையிழந்து “ எங்களுடைய ஊகத்திற்கும் ஆசைக்கும் எதுவும் நடக்காது. விசர்த்தனமாய் கதைக்கிறத விட்டிட்டு எல்லாரும் போய் படுங்கோ” என்றேன். “இந்தப் பூமியில இரவு வாறதே ஆவிகளுக்காகத் தான். அதுகள் நடமாடுகிற ஒரு பொழுது இது. நீ நம்பாட்டி உள்ள போய் படன்ரா” என்ற கனகு பெரியப்பா சுருட்டை புகைக்கத் தொடங்கினார். “அவன் வந்து தண்ணி குடிப்பான். அதுவரைக்கு நான் முழிச்சிருப்பன்” அடைகாத்திருக்கும் தாய்மையின் தழல் குழம்பு வெடித்தது. “எடியே விசரி. இப்பிடி செத்த இயக்கப் பிள்ளையள் வந்து தண்ணி குடிக்க வெளிக்கிட்டால் எங்கட கடல் தண்ணி வத்தியிருக்குமெல்லே. உள்ளே போய் படு” என்று முஸ்பாத்தியாகச் சொன்ன காங்கேசந்துறை மாமாவை திரும்பிக்கூடப் பார்க்காமல் அம்மா தவிர்த்தாள். “உன்னுடைய முஸ்பாத்திக்கு அந்த செவிட்டுப் பரத்தை சிரிக்கலாம். இஞ்ச ஆரும் சிரிக்க மாட்டினம். எழும்பிப் போடா பு***ண்டி” கனகுப் பெரியப்பாவின் பேச்சில் எச்சரிக்கை தொனி தெரிந்தது. காங்கேசந்துறை மாமா பேச்சிழந்து வெட்கி நின்றார். அம்மாவுக்கு விழித்திருப்பது ஆறுதலாகவிருந்தது. ஆமை போலூர்ந்த இரவு தீர்ந்து போனது. ஆனாலும் செம்பிலோ, குடங்களிலோ தண்ணீர் அப்படியே இருந்தது. அம்மா செம்பு நீரை எடுத்து பூக்கன்றின் அடியில் ஊற்றிவிட்டு புதிய நீர் நிறைத்து வைத்தாள். அவளுக்குள் பிரார்த்தனையின் அழுகுரல் பூகம்பமாய் ஒட்டிக்கிடந்தது. தன்னையிழந்த ஞாபகமாய் அம்மா வீட்டுக்குள் நடமாடினாள். கல்லறைகளும் நடுகற்களும் நிறையும் விதியின் வசியத்தை வாழ்வென எண்ணும் வருத்தம் எனக்குமிருந்தது. சாவளிக்கும் அடைக்கலம் அரணாகவிருந்தது. “அண்ணா வந்து தண்ணி குடிக்கவில்லையெண்டு, கவலைப்படாதேயம்மா. அவன் உன்ர விரும்பத்தை விளங்கிக் கொள்வான்” என்றேன். “அவனுக்கு தண்ணி விடாய், பிள்ளையைத் தெய்வம் அப்பிடி கூட்டிக் கொண்டு போயிருக்க கூடாது. சீவனுக்கு தாகமிருக்கிறது சிவனுக்கு தெரியாமல் போச்சே” “அதுக்காக அவர் ஆவியா வந்து தண்ணி குடிப்பாரே ” “அடேய், அண்டைக்கு வந்து தண்ணி குடிச்சது அவன் தான். அவன் ஆவியில்லை. என்ர பிள்ளை தேவர். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு நிகர்த்த முதலாமவன்” மறக்கவியலாத தழும்பென பதில் உரைத்தாள் அம்மா. முகம் வெளிறி இயல்புக்கு வர முயன்றேன். தீ பெருகும் காலத்தின் முற்றுகையில் உதிர்காலத்து இலையென கணங்கள் பொசுங்கின. அலைகளின் ஓயாத முறையீடு போல அம்மா பெரும் பொழுதுக்காய் காத்திருந்தாள். பெருங்கூவலோடு மழையின் பெருவிழிகள் திறந்தன. உப்புதிர்க்கும் கடல் காற்று கூரையூடே புகுந்தது. கொடுஞ்சாபமென உறைந்திருந்த நிலப்புழுதி மணமெழுந்தது. இடியதிர மிகுந்து பரவிய மின்னல் ஒளியிழந்து உலர்ந்தது. அண்ணாவின் புகைப்படத்து குத்துவிளக்குத் திரியில் குருதியின் சுளிப்பு நிறம் கொண்டெரிந்தது. “அற்புதங்களின் வருகையை நிரூபிக்க அதிகம் சிரமப்படவேண்டியதில்லை” என்றாள் அம்மா. ஒழுகும் தாழ்வாரத்தின் கீழ் நின்று சிறுநீர் பொழியும் நாயின் கண்கள் சலனமடைந்திருந்தன. நிழல் மரவள்ளி மரத்தில் அடைந்திருந்த கோழிகள் நனைந்து நடுங்கின. அம்மா மழையில் நனைந்தபடி வீட்டுப் படலையைத் திறந்து வைத்தாள். “அவன் வருகிறான், தண்ணி விடாய்ல வருகிறான். இந்தத் தண்ணி போதாது.” என்றாள். துயர் ததும்பும் ஒரு முதுமுரம் மண்ணில் வேரூன்றி மழையில் நனைந்து கிளையசைப்பதைப் போல கையசைத்து சொல்லிக்கொண்டே இருந்தாள். “அவன் வருகிறான் அவனுக்கு சரியான தண்ணி விடாய்” அடுத்தநாள் காலையில் குடங்களில் தண்ணீர் இல்லை. செம்பு காய்ந்திருந்தது. வரலாற்றை தேடுபவளைப் போல வீட்டின் வாசல்வரை அண்ணாவின் காலடித்தடம் தேடி கண்ணீர் கசிந்தாள். கரைக்க இயலாது திணறும் சாம்பல் சேற்றில் அவள் கால்கள் புதைந்து விடுபட மறுத்தன. “அவன் வந்திருக்கிறான். ஆனால் நடந்து வரேல்ல. பறந்து வந்திருக்கிறான். பூமியில் தேவர்கள் நடக்க மாட்டார்கள் அல்லவா” என்றாள். இது நீண்டால் அம்மாவுக்கு சித்தம் பிசகிவிடுமென எண்ணிப் பயந்தேன். எங்கள் சொந்தக்கார பரியாரியிடம் விஷயத்தைச் சொல்லி மருந்து கேட்டேன். “அவளுக்கு சித்தம் நன்றாகவே இருக்கிறது. எங்களுக்குத் தான் பிசகிவிட்டது மோனே. நீ எழும்பிப் போ” என்றார். அம்மா வீட்டுக்குளேயே இருந்தாள். ஊரிலுள்ள குளங்களில் இருந்து கிணறுகள் வரை தண்ணீர் சுத்தமாக இருக்கிறதாவென கூலிக்கு ஆள் வைத்துப் பார்த்தாள். ஒவ்வொரு இரவும் அவள் அண்ணாவுக்காக காத்திருந்தாள். குடங்களையும், செம்பையும் வற்றிய நீரோடு கனவில் கண்டாள். அன்றைக்கு ஊரில் இன்னொரு வீட்டில் வீரச்சாவு. இரவு முழுவதும் அங்கிருக்கலாமெனத் தோன்றியது. ஆனாலும் அம்மாவை தனியாக விடுவது பயமாகவுமிருந்தது. நள்ளிரவு வீட்டுக்கு புறப்பட்டு வந்தேன். இரண்டு நாய்கள் தெருவின் முடக்கில் படுத்திருந்தன. ஒரு நாயின் குழைவொலி கொஞ்சம் துணையாகவிருந்தது. வீட்டின் படலையைத் திறந்து உள்ளே நுழைந்தேன். தாழ்வாரத்தின் கீழே அமர்ந்திருந்த அண்ணா சிதைந்து அறுந்து தொங்கும் காலைப்பிடித்தபடி குடத்திலிருந்து தண்ணீரைக் குடிக்கிறான். இரண்டு கால்களும் சிதைந்து ரத்தம் விலகித் தேங்கியிருந்தது. விடாய் அடங்காது நிலமெனக் கிடக்கும் குருதியை அள்ளி பருகுகிறான். அண்ணா….என்று பெருங்குரலெடுத்து அழுதபடி ஓடிப்போனேன். வீட்டினுள்ளிருந்து அம்மா சொன்னாள் “ எடேய், விசரா கொண்ணா வீட்டுக்குள்ள என்னோட இருக்கிறான். உள்ள வா” வாசலில் நின்று உள்ளே பார்த்தேன். சிதைந்து தொங்கிய கால்களோடு குருதி தேங்கிய சாணத்தரையில் அண்ணாவுக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள் அம்மா. என்னைக் கண்டதும் “ இவனுக்கு சரியான தண்ணி விடாய், பா**யை விட்டு வாய எடுக்க மாட்டேன் என்கிறான்” எனச் சொல்லி மகிழ்ந்தாள். அம்மா, என்றபடி அவளருகே ஓடினேன். அவள் என்னை அணைத்துச் சொன்னாள். “சந்ததி சந்தியாய் இவனுக்கு நாங்கள் தண்ணி வைக்கவேணும். அவன் எங்கட வாசலுக்கு பறந்து வருவான்” அண்ணாவின் கால்களைத் தொட்டுப் பார்த்தேன். குருதியின் நீளக் கனியென தணல் பழுத்திருந்தது. கைகளை விசுக்கென எடுத்துக் கொண்டேன். “சரியான வெக்கை என்ன! இதுதான் எங்கட ஞாபகமடா மோனே” என்றாள் அம்மா. https://akaramuthalvan.com/?p=13591 point- நடனங்கள்.
1 point- போராளியின் இறுதி வெடி !
1 pointநன்றி நுணா பதிவிற்கு. சிந்துசையின் அண்மைய காணொளி ஒன்று பார்த்தேன். பெற்றோருக்கு பெருமை சேர்த்த பிள்ளை. ஒருகணம் ஜெயமண்ணையின் முகமும் அவரின் பொறுமையும் கண்முன்னே வந்து போகிறது. புலனாய்வுப்பிரிவால் நகங்கள் புடுங்கப்பட்ட பின்னரும் நாட்டுக்காக எந்த தயக்கமும் இல்லாமல் போராடுவது மண்ணின் மீதான பற்றை எடுத்தியம்புகிறது.🥲 வீரவணக்கம்1 point- போராளியின் இறுதி வெடி !
1 pointசாதாரண ஒரு பொதுமகனாலேயே இந்த தோல்வியை இத்தனை வருடம் கடந்தும் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே. உயிரை வெறுத்து ஆயுதம் தூக்கியவர்கள் எப்படி தாங்குகிறார்களோ? இது எப்போதும் எனக்குள் இருக்கும் கேள்வி. இணைப்புக்கு நன்றி நுணா.1 point- ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
1 pointபடுகொலை விரிப்புகள் New Year’s Bloody Dawn: Karativu 1985 (புத்தாண்டின் குருதி தோய்ந்த விடியல்: காரைதீவு 1985) மூலம்: https://tamilnation.org/tamileelam/muslims/0310karativu.htm வெளியிடப்பட்ட ஆண்டு: அக்டோபர்/நவம்பர் 2003 மூல எழுத்தாளர்: கே.என்.தர்மலிங்கம் - நோர்த் ஈஸ்ரேன் ஹெரால்ட் முதன் முதலில் வெளியிட்ட இதழ்: 'பியொன்ட் த வால்' இதழ், மொழிபெயர்ப்பு: This article chronicles the murder and pillage that took place in Karativu in the Amparai District in 1985 as President J. R. Jayewardene’s UNP government tried to arrest ‘terrorism’ in the east by unleashing systematic violence on Tamil villages. The article first appeared in Beyond the Wall, the quarterly journal of the Home for Human Rights, Colombo. The passages quoted above are relevant to what occurred at Karaitivu from 12 April 1985, and to the atmosphere of hatred and malevolence generated against the Tamils during the 1980s, as the state set about systematically destroying them. Of the three administrative districts in the East, the largest and the most populous is the Amparai District spread over the dry-evergreen secondary forest belt, located in the southeastern portion of Sri Lanka. Here the Tamil minority was living in harmony with the Sinhalese and the Muslims, sharing their joys and sorrows. The prosperous town of Karativu in the Karavahu–Nintavur Pattu, in the Amparai District is a Tamil enclave surrounded by the Muslim towns – Sainthamaruthu, Nintavur and Sammanthurai to the north, south and west respectively. Tamil villages in the East have derived their names from a variety of sources. Geographical features such as the rivers, the adjoining hills and places of worship, and of course events in history all these contributed to name villages. The name Amparai referring to both an administrative district and a town, is a pure Tamil word – Am - Parai – meaning ‘beautiful rock’ that stood in the centre of the ancient settlement of Tamils. Similarly, the Tamil villages of Karativu, Karungottitivu, Sainthamaruthu, Nintavur, Tirukovil and Tambiluvil, each have a history to narrate. The people at Karativu are entirely Tamil. They are either Hindus or Christians. There exists a very ancient temple of goddess Pattini, believed to have been built in the 2nd Century AD, which is held in great veneration by pilgrims. There are 10 other Hindu temples and a church in the area. There also exists a shrine devoted to the Buddha where Hindu worshippers paid homage until the armed forces occupied Karativu and took it over. Karativu has the singular honour of having produced several eminent men who served humanity (the human race, devoid of petty barriers) with distinction. They include among others, two scholarly monks of the Sri Ramakrishna Mission, one known as the Most Ven. Srimath Swami Vipulanandaji Maharaj who built several schools – both Tamil and English – – in the districts of Jaffna, Batticaloa, Trincomalee, the present Amparai and Badulla. The swami had the rare distinction of having been invited to hold the position of professor at the University of Ceylon, when established. The other monk, who earned recognition, was His Holiness Srimath Swami Natarajananda Maharaj, who functioned as the general manager of all schools managed by the Ramakrishna Mission, until the state took over all the assisted schools. Teachers of great scholarship such as K. Kanapathipillai, who authored several books, ‘Periya’ Kanapathipillai, ‘Sinna’ Kanapathipillai, Arumugam, Thangarasa, Rasiah, Velupillai, Mahadevan, Vinayagamoorthy, Krishnapillai are some of the others who contributed to the spread of liberal education. Their education was centred round “teaching everything worthwhile,” with emphasis on every aspect of the pupil, giving opportunity to develop talent and to cultivate the mind to be alert and sensitive. They helped to strengthen their faith in God. Their pupils were remarkable for orderliness. Karativu also produced civil servants, doctors, engineers, bankers and accomplished writers and poets. The people of Karativu possessed knowledge and wealth that won them respect from other communities. They lived in an atmosphere of freedom, tranquillity and ease. Politically they were identified with the UNP after the general election 1977. E. Vinayagamoorthy, an educationist from Karaitivu got elected to the district development council as a UNP candidate in 1981. At the presidential election held in 1982, Karativu in its entirety voted for President J R Jayewardene in preference to Kumar Ponnambalam, a Tamil candidate. Karativu thus remained a stronghold of the UNP. The many ethnic conflicts originating from Sinhala quarters near Amparai from about 1981 did not deter the Tamils from supporting the UNP. In 1985, Tamils were hopeful of securing life and property, even after the creation of the ministry of national security in March 1984. When a regional political party, formed in Kalmunai in 1981 began to enjoy state patronage and support after the 1983 holocaust, it became apparent that the state was pampering the party to use its membership as a wedge to keep the Muslims apart from the Tamils. The government began to execute its plan to subordinate the Tamils through deprivation and terror. The terror of killing and arson unleashed by the state were aimed at uprooting the Tamils and displacing and dispossessing them. The new political party lent its full co-operation to the government, and the attack on Tamils at Karativu is attributed to the joint endeavour by Mossad, the Jihad and government forces. Secret plans of the government under the cloak of ‘dharmista’ rule were aimed at employing the security forces to drive away the Tamils from their homelands at Karativu, Meenodaikattu, Oluvil and Akkaraipattu in Amparai, which was similar to what happened in Weli Oya after April 1984. It was evident to the people that President Jayewardene, upset by the turn of events after the 1983 violence against the Tamils, was seeking new strategies against them in the face of Tamil demands irreconcilable with ‘Dharmista’ rule. The new strategy were to create a political climate where hired goons from the Muslim community would attack, kill and maim Tamils, then loot and destroy their properties, so that the Tamils and Muslims would become divided. These plans were executed with minute precision, where unprovoked, ruthless attacks on Tamils began simultaneously at Karativu, Akkariapttu, Meenodaikattu, Oluvil and Addalaichenai after prayers at Jummah. People have alleged that the Mossad trained STF and the Jihad had attacked them while the police lent them the support. The first attack on Tamils at Karativu began at 6.00 a.m. on 12 April 1985. Even helicopters were employed in the attack. This was a day of considerable religious significance for the Tamils, who were preparing to celebrate the Tamil-Sinhala New-Year, which would be during the early hours of the following day. It was peculiar to the Tamils of Krativu to go to the more urban market town at Kalmunai to purchase all their requirements for New Year festivities. Purchases were made from their customary traders – Moors – on the very last day of the departing year. Keeping to the custom of making purchases at Kalmunai, some people left Kartivu in the early hours of 12 April. Maalikaikadhu is a small Moor settlement lying between Karativu and Sainthamaruthu. Persons travelling to Kalmunai from Karativu have to travel through Maalikaikadhu and Sainthamaruthu along the main trunk road called the Pottuvil-Kalmunai road. Tamils who were a permanent population at Sainthamaruthu for over centuries were driven away in April 1967 when aggressors stormed the Tamil division adjoining the Muslim division, set fire to homes and destroyed properties. Thereafter, Sainthamaruthu which had two divisions: the Muslim division and Tamil division, became one, an exclusively Muslims division. It became one Muslim territory. The forced expulsion of Tamils, the destruction of their Hindu kovils, the appropriation of temple lands and properties yet remain to be investigated and compensated. The attack on Tamils at Sainthamaruthu and other places were aimed at extirpation and obliteration of all signs and traces of a Hindu–Tamil identity at Sainthamarithu recorded from very ancient times. The people who travelled to Kalmunai from Karativu on the 12th morning through Maalikaikadhu were set upon and severely beaten up by the members of the Jihad and the Mossad-trained STF. The victims of the attack suffered severe injuries. However, they managed to escape death. A victim to the attack describes: “We carried much cash to purchase goods for the New Year feasts and celebrations. When we were nearing Maalikaikadhu junction, we spotted a few police vehicles being parked at the edge of the road and some policemen together with men in camouflage. A little away from policemen were a large number of men, all strangers to the area. As we proceeded near them, we found them to be Muslim youths, identified by their dress and beard. The young men appeared restive.” The witness added, “The presence of policemen, the STF (Kaluwanchikudy) and strangers at Maalikaikadhu did not invest in our minds any sense of discomfort or nervousness. I thought that the policemen were there to prevent any possible breach of peace that may occur among Muslim fundamentalists and others. Since we had no conflict with our Muslim neighbours at Maalikaikadhu we felt safe. We proceeded on our journey. When we reached the junction, a number of youths rushed at us with menacing looks and began attacking with wooden poles. Apart from the attackers there were also the others armed with deadly weapons. They were watching the attack”. “Our senses were transported with fear at the unexpected attack. We lost our money, suffered injury and mental agony. It was a damnable behaviour on the part of the youth. The attack on the users of the highway on legitimate business in the presence of the law-enforcing authority was a revolting atrocity. When attacked we cried out to attract the attention of the policemen who were very much near the scene of attack. The policemen did not respond and nor did the STF. It was our good luck that those men did not abduct us as many Tamils disappeared later while on their journey through this area. The fact was established that the state, unable to find a just solution to the problems with its own citizens resorted to promote violence between communities. Goons were brought from elsewhere to attack the native Tamils in the district of Amparai.” The writing on the wall was very clear. It indicated disaster was imminent for the Tamils. The early morning attack on the men sent an ominous message of bitter things to follow. Respect for human rights was undermined by the evil genius of those in power. In his ‘Principles of Good Governance,’ Herbert Spencer (1903) assigned only one duty to any good government when he said, “Good government exists to prevent one man from infringing upon the Rights of another”. (Substance of Politics.) By all standards, government of the day failed to stand up to this expectation. Subsequent incidents confirmed that the state was encouraging and strengthening its forces to promote violence against the Tamils with the Mossad-trained army and hired goons brought from distant places. An undergraduate from the University of Jaffna, Kandavanam Thevamanoharan, 20, was shot dead on 12 April 1985 by the Muslim attackers without any provocation. The victim was standing near his gate when he was killed. The police did not pursue the killers. The Karativu Tamil Refugees’ Society (E. Vinayagamoorthy) reported: “It was about 2.00 p.m. on the 12 April 1985, when a mob numbering about 800 Muslim youths – all strangers, stormed into Karativu, after their Friday prayers, armed with guns, petrol bombs, fuel-cans and other deadly weapons. None could stop them and they attacked homes, business establishments along the main road. People taken by surprise and alarmed at the turn of events fled from homes. “First, the attackers looted homes and shops and then set fire to the buildings. The very ancient Temple of Pattini (Kannagi Amman kovil) too was not spared. (It is a known fact that Muslims, when struck by illness or misfortunes offered various articles to propitiate the Goddess). The mob burnt a part of the temple and pulled down the perimeter wall around it. Petrol bombs were thrown on the buildings and burnt. “The Muslim youths in their frenzy of hate committed murder, arson and looted shops and homes and even the places of Hindu worship. As they moved on leaving trails of devastation by bombs, Karativu was reduced to ashes. “Many were killed by the mob and among those killed on that day included 58-year-old Nallaratnam Devaviradhan, a pensioner. He remained in his home after sending his family members to places of safety. The mob looted all the valuables they found in his house and then attacked the man. When he lay fallen on the ground, they are said to have burnt him alive with petrol. “Another case of murder committed by the mob was on a middle–aged man K. Sinnathamby who was similarly killed. Sinnathamby was both a farmer and a merchant. He prospered in both agriculture and trade. The goons first looted his shop and then consigned his shop to flames. His car, tractor and trailer were also set on fire. “When everything was set on fire, the goons dragged Sinnathamby to the highway opposite his shops, poured petrol over him and then set him alight. The man was burnt live.” A human rights activist provided the following information. A few days before the attack on Tamil villages, the police got all persons possessing licensed guns for the protection of crops and personal security, to surrender their weapons to the police. The seizure of weapons by the law enforcing authority, before the eruption of violence, is interpreted as a pre-planned strategy to expose the Tamils to the atrocities unarmed. It was a subtle scheme to have the Jihad and the STF attacking Tamils when they were defenceless. This is in contrast to an attack on Tamils at Kalmunai in 1967, when the Tamils fired at a mob and saved lives and properties. The attack in 1985 left several hundreds of families homeless at Karativu, on the eve of the New Year festival. The New Year dawned with fears and miseries never experienced before. An accusing finger pointed at the government as villain. The families rendered homeless were accommodated in schools. They had no food or clothes. In the absence of the Tamils’ right to life and security of person, and the blatant disrespect for the promotion of friendly relations between communities, exposed the government of violating the rights enshrined in Article 3 of the Universal Declaration of Human Rights (UDHR). The Tamils’ right to life, liberty, and security were in limbo when the state failed to contain the barbaric attack on innocents. The people spent the night in fear of death. For them the night was long, and when it dawned, it was the New Year’s Day! The victims waited till about 8 o’clock in the morning before planning to leave the schools where they spent the night. They were anxious to inspect the extent of damage and caused by the havoc. The people while preparing to leave the schools on 13 April, when reports from firearms were heard, which announced the goons had returned to wreak havoc in the other areas of Karativu that they could not attack on the previous evening. The people were agitated and did not know what to do. The Karativu Rehabilitation Society reported that 500 youths participated in the attack on village that day. Their report to the government agent said, “The attack on the village (Karativu) began at an hour when it was least expected. A mob numbering approximately 500 entered the limits of Karativu from three directions. The first group came through the northern gateway along the Kalmunai–Pottuvil … trunk road, causing destruction on properties all the way. “This well-organized group of criminals entered the sanctum sanctorum (of the temple), the innermost room where the golden image of the goddess Pattini was installed and consecrated, entry into which is forbidden to all except the officiating priest. They removed the golden image and broke the idols on the steeple and the surrounding temples devoted to Lord Ganesha, Murugan, and the host of other deities. The goons did not spare any house or shop. Houses and shops were looted and burnt as done on the previous day. Things they collected as loot were carried away in trucks. “The second group of the Jihads entered Karativu through the northeastern direction where the Sithanai Kutty Swami kovil stands. They were a bit cautious and seemed reluctant to engage in any attack until they made sure that there were no Tamil militants in the vicinity. They seemed to have anticipated a counterattack from Tamil militants. They took quite a while to begin attacking, and, once they were assured that there were no cadres of the Tamils, they entered the field with wild enthusiasm. “They bombed the kovils, and removed valuables. Thereafter, they turned on the shops and homes. They broke the doors and helped themselves with all what they could lay their hands upon. “In the course of their attack, everything built with bricks and cement was smashed to the ground. They smashed not only the houses, even the parapet walls of the houses and the temples. They left the area by about 2.00 p.m. and when they left the entire area was enveloped in smoke. “The third group arrived at T. Mylvaganam Lane and began plundering. At first they exploded a grenade to announce their arrival. As the people had all fled from their homes on the previous day … the attackers had no difficulty in breaking open the houses and shops. The marauding band of attackers robbed the houses and shops and thereafter, set fire to the buildings. Valuable possessions passed from one generation to the other were destroyed in a matter of minutes. “A total of 450,000 bushels of paddy harvested from the Maha crop was set on fire. They opted to burn the stored paddy, as they could not carry the 150,000 bags. “Four persons, N. Arulanandam, T. Perinpa-moorthy, V. Thangavadivel and K. Kasidurai who remained in their houses were put to death. Their deaths have not been probed. The killers got off free.” Attempts made by the people’s representatives, members of the district development council and the public to contact members of parliament, the ministers and the heads of departments were rendered futile as communications including the telephone were disconnected. A report made to the government alleged that the Jihad movement had indulged in large-scale robbery, arson, desecration of places of worship and murdered innocent Tamils. However, no action about all of what had happened appears to have been taken. That was the status to which the Tamils have been reduced to during the post-1983 period. 14 April 1985 was a Sunday. The Tamil public, which had suffered from the trauma of a most distressing nature and had unpleasant experiences of successive attacks on Karativu on the two previous days, thought that the attackers would not reappear. But it was destined that Karativu should suffer a third attack. Grenade blasts heralded the arrival of the Jihads on the third day. Remarkably, the police were found missing. It was 8 o’clock on Sunday, 14 April. The people were sheltered in the schools. They thought it was only a temporary measure to save their lives and limbs. None of them ever knew that they were going to be there at the schools for quite some time until their homes were to be rebuilt with the support of the international community, the Catholic Church, Sri Ramakrishna Mission, the ICRC, the Lions Club and the YMCA. Grenade blasts were heard from two directions, the north and east. The blast of the grenade was followed by reports of gunfire, believed to be from the sea beach. The people were alarmed and excited fearing the worst. Wondering as what to do next, the people remained in bewilderment. It was apparent that the attackers were merely serving the designs, purposes, intentions and schemes of the politicians ‘to end the Tamil problem.’ The state planned to end the problem through a systematic violation of Tamil rights. At this juncture, it might be worthwhile taking our thoughts back to a period in 1984, four months before the attack on Karaitivu was carried out. It has to be recalled the state employed the army and air force to drive about 300 Tamil families from Manal Aru, Kokkilai and Kokkuthoduwai through violence. It was a clear violation of all known cannons of justice. The state employed the same methods with little variation here too by the introduction of the Jihadies and Mossad-trained militias. The aim of the attackers was to uproot Tamils from their native soil as they had successfully carried out in other districts. Article 17 of the UN Declaration of Human Rights reads, “No one will be arbitrarily deprived of his property.” But in Sri Lanka, this was brazenly violated by the state employing all the means it commanded. Contempt for the human rights of the Tamils and permitting every type of barbarity helped to strengthen the militants. Young boys remaining with their parents climbed treetops to ascertain the facts. They looked towards the sea and found the attackers arriving in fishing craft to begin their attack from the east. The attackers, before they landed on the beach, took the precaution of ascertaining whether it was safe for them to land there. They wanted to ensure that Tamil militant cadres were not present in the vicinity to oppose them and commence a counterattack. They fired from the craft and sensing that there was no danger jumped to the shore with all their ammunition. The attackers then proceeded towards Karaditottam division and began to loot houses and shops. They attacked bakeries, dispensaries, cattle sheds with animals, rice mills, grinding mills and even the post office, the DDC (District Development Council) office and all the government institutions like the Agrarian Services Centre, the Agricultural Instructor’s Office and the Multipurpose Co-operative Society. The houses and shops were soon set on fire and clouds of smoke billowed into the air. Eighteen fishing crafts, fishing equipment and even five fishermen’s huts were burnt. They damaged the temples were sacred to Lord Ganesha, Lord Veerapathirar, Amparayan kovil and the Anaikutty kovil. They painted the words, “Allahu Akbar” on the broken walls of the attacked temples. Two government schools and a pre-school too were burnt. Their attack lasted nearly six hours. The people had neither food nor water and they were ‘more dead’ than alive consequent to fear. During the three days of savage attack on civilians and their properties at Karativu, 17 were killed, several went missing and a large number were injured. Village leaders were looking for shelter for 84 children who were orphaned. Altogether six Hindu temples had been damaged by fire and pillaged, 802 houses looted and gutted; 210 head of cattle, 332 goats and 3500 poultry were slaughtered. A government hospital and two dispensaries run by medical practitioners were totally damaged, 84 shops looted and burnt; 17 motorcars, two tractors, trailers, two motorcycles, 22 double bullock carts, and 987 bicycles were burnt. What baffled human rights activists were whether the police were conniving actively or passively with the goons who were attacking the Tamils. The “Sithirai varudap pirappu”, or, the dawn of the Hindu New Year occurring in the month of April is an event of considerable importance to the Tamils. The Hindu regards it as one with immense cultural significance. Astrologically, when the sun enters the constellation of Aeries during the ‘Vasantha ruthu,’ at springtime, auguring good luck, prosperity and happiness, Tamils in the district participate in religious activities to be absolved from the malefic effects of the planets. The New Year, it is believed, brings pleasant surprises and joyous moments in the life of the people whose fortunes are influenced by the planets. In April, nature adds beauty and glamour as the trees put out leaves and the buds begin to blossom, spreading sweet fragrance all around. The farmer is rewarded for his hard labour with a bountiful harvest from the Maha crop. He is happy after having stored his grain at home, in time to celebrate the New Year. Homes are whitewashed, utensils that are old are cast away, and, new ones purchased. It is important to understand the frame of mind in which the Tamils were when the savage attacks were launched on Karativu. This celebration, coming at this moment, had a tremendous impact on the belief system of these simple, rural communities who were steeped in astrology and the significance of time, in all what they did. The Muslim community living around Karativu shared common interests and built abiding trust and friendship of the Tamils over the years, and, had no reason to attack them. Islam teaches, “God is merciful and compassionate.” The Muslim followed the middle path, practicing hospitality and charity, and, attending the mosque for prayers five times a day on the cry of the Moozin. Fridays are of special religious significance to Tamils and Muslims who are bidden to prayers at noon. Witnesses confirmed that the state violence let loose on Karativu began on a Friday after their Jumma prayers and about 800 men joined in the attack. Helicopters fired at those who stood homeless. The identity of some of the participants to the attack was established immediately after the attack from their National Identity Cards found at the places of looting and burning. They indicated that the participants were residents of Colombo, identified with ‘Jihad’. One need not possess super intelligence to draw conclusions from what was seen in Sri Lanka from 1977 onwards. The Tamil community received a good thrashing from the state forces from August 1977. The reported attacks on the Tamils during the years 1977, 1981, 1983 and 1984-85, indicated that government was hell bent on dispossessing the Tamils and displacing them from their traditional homeland. The brute force employed by the state to uproot the Tamils in the country cannot be forgotten when the same method was adopted in the attacks on Karativu in April 1985. The government in its folly tried to show that the attack on Karativu as an isolated, spontaneous one and labelled it as a “holy war” waged by the Muslims. Wars have sometimes been called holy wars. Those holy wars were aimed at converting non-Muslims to Islam, and were called Jihad. It is claimed that the Prophet Rasool (Sal) preached such wars against idolaters. The war on Karativu was to destroy Tamils and not intended to convert! A short description of Jihad would be appropriate to grasp the potency of the direction of those who planned the destruction of Karativu in 1985. The Encyclopaedia explains, “The Jihad is the conception of waging war with swords against non-Muslims.” Islam refers to “Dar-al-Islam” (abode of Islam) Dar-al-barb, (abode of war). The sacred book demands that all adult males and able-bodied men must take part in hostilities referred to as Jihad, against neighbours who are ‘enemies’ i.e. non-Muslims. The enemies are classified as “Kajie” (non-believers of Islam) and ‘Akl-al-Vietal’ (people of books). Buddhists and Hindus belong to the second category. There are two options for the enemies. One is to embrace Islam and the other is to face execution. Other than the Jihad, there were the security forces, which attacked Karativu. They mostly comprised Buddhists. Buddhists are decreed to follow a different path, the path of compassion and kindness. Buddhism teaches its adherents to show respect for life and to extend kindness even to animals. The sprit of Buddhism, and, the three out of its eight precepts that are intended to raise levels of morality, which are repeated every time in prayers: “to refrain from taking life; to refrain from stealing, looting, and to refrain from falsehood,” were absent among those who destroyed Karativu. The destruction of Karativu echoed within the walls of the Colombo High Court when the Civil Rights Movement and Home for Human Rights with their team of leading human rights lawyers, S. Nadesan, Q.C., J. C. T. Kotelawela, I. F. Xavier, Suriya Wickremasinghe, M. Alagarajah, A. Samarajeewa and N. Fernando defended Paul Nallanayagam, president of the Citizens’ Committee Kalmunai who stood indicted with having committed offences under the Emergency Regulations, of making false statements accusing the STF of destroying the village called Karativu and the abduction of 23 Tamil youths from Natpittimunai and killing all of them at Thambiluvil. The arm of the ‘Dharmista’ government, the ministry of national security and the police were seen involved in the attack on Karativu. What was stranger, the public reported that inquests were not held for the dead. The failure of the government to punish the offenders was enough proof of government complicity in the destruction of the village. While there were public accusations of bringing several lorry loads of goons from Colombo for the destruction of Karativu, the government attempted to drag in the community of Muslims into the scene, alleging that the Muslims fought against the Tamils. The Tamils in Amparai district, though economically weak following the spate of terror from 1977, are possessed of a philosophy of the ancients, which some say is unsuited to the present cultural environment. A popular leader, two decades ago, among the Tamils told me, “Contemplate on ‘Him:’ The Timeless Thing, The Supreme Spirit, ‘OM SAT CIT ANANDAM’. Whence we are born? Whither do we go? The Pleasures and Sorrows, Wealth and Power of the World Are all transient.” This is real resignation. His words reminds me of what Jesus told his people, to give up even what they had, in order to gain the Kingdom of Heaven. Do not the Christians, in their prayers, only ask, “Give us this day our daily bread,” and the Gospel exhorts, “Lay not up for yourselves treasures upon earth?” Successive Government from 1956 have sought to destroy the Tamil community and the destruction of Karativu is a craftily manoeuvred attempt to get rid of Tamils from Karativu. It is considered useful to quote Dr. N. D. Wijesekere, who records in his ‘People of Ceylon’ (1945) as follows: The community of Tamils who lived at Anuradhapura, Kurunegala, Polonnaruwa, Kalawewa, Tambuttegama, Eppawela, and Mannampitiya have been either wiped out or assimilated. Attempts made on Mullaitivu and Trincomalee have been successful for the government. Those in authority do not seem to know the direction they are pursuing with regard to the preservation of human rights. We could only remind them of the famous Persian poet Omar Khayaam who in the Rubaiat, said: “Fools, with damnation as your destiny, Sentenced to fuel the eternal fire of Hell. “Avoid all greed and envy, unperturbed By permutation, foul succeeding fair: Soon the whole scene must vanish.” *****1 point- மாவீரர் துயிலுமில்லங்கள் இன் படிமங்கள் | Maaveerar Thuyilumillam Images
தாண்டியடி (புதுமண்டபத்தடி) மாவீரர் துயிலுமில்லம் "தாய்நிலத்தை காதல் செய்து தாலிகட்டிக் கொண்டவர்! தலைமகனை நெஞ்சினிலே தாங்கி நிற்கச் சொன்னவர்!" கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடம்:1 point - துறவியாகும் டயானா கமகே?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.