Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    2958
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    7054
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  4. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    9308
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/08/24 in Posts

  1. 7 points
    மிரிசா கடற்கரைக்குச் சென்றோம். வெளிநாட்டவர்கள் அதிகமாக இருந்தார்கள். “போதைப் பொருள் இங்கே தாராளம்” என்றும் சொன்னார்கள். அழகான கடற்கரை என்பதை மறுப்பதற்கில்லை. உல்லாசப் பயணிகளை கவர்வதற்காக பெரிய பெரிய ஹொட்டல்களைக் கட்ட முயன்றிருக்கிறார்கள். பொருளாதார அலைக்குள் சிக்குண்டு இப்பொழுது அவை பாதியிலேயே அநாதைகளாக, கடல் காற்றும் வெய்யிலும் பட்டு கறுத்துப் போய் நிற்கின்றன. அடுத்து காலி. இலங்கையின் இரு முனைகளில் ஒன்று பனை முனை (பருத்தித்துறை). மற்றது தெய்வேந்திர முனை(காலி). காலியில் கோட்டைக்குள்ளேயே அரச அலுவலகங்களை வைத்திருந்தார்கள். நகரின் பழமையை நன்றாகப் பராமரித்து வெளிநாட்டவர்களை க் கவர்ந்து கொண்டிருக்கிறார்கள். காலியில் இருந்த பராமரிப்பு பருத்தித்துறை (முனை)யில் எங்களிடம் இல்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு பனை, ஒரு வெளிச்ச வீடு, இவை மட்டுந்தான் எங்களிடம் இருக்கின்றன. இருந்தாலும் பல சிங்களச் சுற்றுலாப் பயணிகளை பருத்தித்துறை வெளிச்ச வீட்டின் அருகே என்னால் காண முடிந்தது. காலியில் கடற்கரை ஓரமாக, ஒரு வீட்டை இரண்டு நாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருந்தோம். “இங்கே சிங்கறால் (Lobster) கிடைக்காதா?” என்று சும்மாதான் மணியனிடம் கேட்டேன். மாலையில் வெளியே போய்விட்டு வந்து பார்த்தால், சட்டிக்குள் இரண்டு சிங்கறால்கள் துடித்துக் கொண்டிருந்தன. “களுத்துறையும் நல்லதொரு இடம். அங்கே அனந்தரா ஹொட்டல் என்று ஒன்று இருக்கிறது. அந்தக் ஹொட்டலை வடிவமைத்தது ஒரு பிரெஞ் ஆக்கிடெக். நல்லாயிருக்கும். நான் அங்கே அடிக்கடி போவேன்” என்று மணியன் களுத்துறைக்கு அழைத்துப் போனான். மணியன் சொன்னதில் உண்மை இருந்தது. ஹொ ட்டலின் வாசலில் நான்கு இளம் பெண்கள் காத்திருந்தார்கள். நாங்கள் ஹொட்டலுக்குள் நுளைந்தவுடன், சிங்கள இசை முழங்கப் பாடியபடியே தங்களது பாரம்பரிய நடனத்துடன் எங்களை வரவேற்றார்கள். உண்மையிலேயே எங்களுக்குத்தான் அந்த வரவேற்பு நடனமா என முதலில் எனக்குச் சந்தேகம் வந்தது. திரும்பிப் பார்த்தேன் எங்களுக்குப் பின்னால் யாரும் இல்லை. ஆக அந்த வரவேற்பு நடனம் எங்களுக்குத்தான் என்பது தெளிவான பிறகு ஒரு உற்சாகம் பிறந்தது. ஹொ ட்டலின் நிர்வாகத்தில் உள்ள ஒருவர் வந்து, பணிவுடன் இரு கரம் கூப்பி வணங்கி ஆயுபவன்( ayubowan)சொல்லி வரவேற்பறையில் உட்கார வைத்தார். இருக்கையில் அமர்ந்து ஹொட்டலின் அழகை உள்வாங்கிக் கொண்டிருக்கையில் ஆடிய ரம்பைகளில் ஒருத்தி கையில் பானங்களுடன் வந்து நின்றாள். தேங்காய்ச் சிரட்டைகளில் சிவந்த குளிர் பானங்களுடன் சிதம்பரத்தை பூ வைத்த தட்டை வைத்துக் கொண்டு புன்னகைத்தாள். தேங்காய் சிரட்டைகளைக் கண்டவுடன் சட்டென்று எனது நினைவுக்கு வந்தவர்கள் அன்றைய பிள்ளைவாள்களும் முதலியார்களும்தான். 100க்கு மேற்பட்ட அறைகள். பழமைவாய்ந்த பொருட்களை காட்சிக்கும், அழகிய கலைப்படைப்புகளை சுவர்களிலும் மாட்டியிருந்தார்கள். லிப்றில் மேல் நோக்கிப் போகும் அடையாள விளக்கில் புத்தர் இருந்தார். வரவேற்பு இடத்துக்கு அருகேயே ‘பார்’ இருந்ததால் மணியன் பெரும்பாலும் அங்கேயே இருந்து விட்டான். அங்கிருந்த அழகை எல்லாம் ரசித்து விட்டு மணியனிடம் வந்தால். “ நாங்கள் இஞ்சை வாறதெண்டால் இரண்டு நாள் தங்குவம். இப்பிடி நல்லா என்ஜோய் பண்ணி Buffet இலே ஒரு பிடி பிடிச்சிட்டுப் போவம். நீயும் இருகிறாய். யேர்மனியிலை என்னத்தைத்தான் கிழிச்சியோ?” என்று என்னைக் கிண்டல் செய்தான். மாலையில் சூரிய அஸ்தமனத்திலும் நீச்சல் தடாகத்தின் அருகே ஒரு நடனம் இருந்தது. மஞ்சள்வெயிலில் பளபளக்கும் நீச்சல் குளத்தின் அருகே அந்த நடனம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. இரண்டு நாட்களின் பின்னர் அனந்தரா ஹொட்டலில் இருந்து புறப்படும் போது வாசலில் வைத்து மந்திரம் சொல்லி வழியனுப்பி வைத்தார்கள். அங்கிருந்தவர் சொன்ன மந்திரம் அச்சு அசலாக எங்கள் ஐயர் சொல்லும் மந்திரம் போலவே இருந்தது. நாவூறு பட்டுவிடும் என்ற எச்சரிக்கையோ? அல்லது ரம்பைகளை மறந்து விடச் சொல்லிய மந்திரமோ? திரும்பி வரவழைவைக்கப் போகும் (வசிய) மந்திரமோ? தெரியவில்லை.
  2. என்ன சொல்கிறீர்கள்? நெடுக்கரின் குடியேறி எதிர்ப்பு மனநிலை அவர் குடியேறியாக இருந்த போதே அவரது எழுத்தில் வெளிவந்திருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர் மீதான காண்டு போலி விஞ்ஞானக் கட்டுரையை இணைத்து வாதிடும் அளவுக்கு வெளிப்பட்டிருக்கிறது. இறந்தது பெண், கொன்றது ஆண் என்பதால் கொன்றவரை விட்டு விட்டு, எல்லாரையும் கை காட்டியிருக்கிறார்! இது பழைய நெடுக்கர் தான்! புதிதாக ஒன்றுமில்லை😎. நோர்வே ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை, ஆனால் ஐரோப்பிய ஒன்றிய பயண ஏற்பாடான செங்கன் (Schengen) நடைமுறையில் இருக்கிறது. எனவே, செங்கனில் இல்லாத பிரிட்டனின் பிரஜைகள் நடந்து தான் போக வேணும்! "போலந்துக் காரன் சட்டரீதியாக பிரிட்டனுக்குள் வரவும் கூடாது - எனவே ஐ.ஓவில் இருந்து நாம் அவுட், ஆனால் பிரிட்டன் பிரஜைகளை ஐரோப்பிய நாடுகளில் திறந்த வீட்டினுள் செல்லப் பிராணி செல்வது போல அனுமதிக்கவும் வேண்டும்!" இரண்டையும் எப்படி எதிர்பார்க்க முடியும்😎?
  3. இந்த றோ அதிகாரியினை தேன் பொறி (Honey Trap) எனும்முறையில் தம்பக்கம் அமெரிக்கா ஈர்த்திருந்ததாக கூறப்பட்டது, இந்திய இலங்கை ஒப்பந்தம் நிக்ழ்ந்த 3ம்ணித்தியாலத்திற்குள் அமெரிக்க அரசு அதனை வரவேற்றதன் பிண்ணனியிலேயே அவரினை இந்தியா அடையாளம் கண்டு கொண்டதாக பத்திரிகைகளில் வாசித்தாக நினைக்கிறேன். அவ்வாறாயின் இலஙகை அரசிற்கும் இந்த ஒப்பந்த விவகாரம் ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது, இலங்கை அரசு இலங்கை அரச தொலைக்காட்சியில் ஒரு ஆவணம் (Documentary) ஒன்றினை வெளியிட்டிருந்தது அதன் தலைப்பு அக்கோடிங் அன்ட் வித்டோரவல் என நினைக்கிறேன் சரியாக தெரியவில்லை, ஒப்பந்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்ன நிகழும் எனும் தொனியிலான ஒரு ஆவணம்.
  4. தமிழர்களுக்குள் நடந்த கொலையில் பாதிக்கப்பட்டது அப்பாவி தமிழ் பெண். கொலையாளி தமிழர். கொலையாளி மீது கோபம் வரவில்லை. ஆனால், நோர்வே இமிக்கிறேசனை திட்டுகின்றீர்கள். பாகிஸ்தானியரை, சோமாலியரை கிழக்கு. ஐரோப்பியரை, உக்கிரேனரை கேய், லெஸ்பியனை எல்லாம் இதற்குள் இழுத்து அவர்கள் தான் இதற்கு காரணம் போல்…….. என்ன டிசைனப்பா நீங்கள்.
  5. 3 points
    கொழும்பில் இருந்து கொண்டே அவ்வப்போது மணியனைக் கூட்டிக் கொண்டு வெளியிடங்களுக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். விடுமுறைக்கு வருபவர்கள் ‘எலா’விற்கு விரும்பிப் போவார்கள். நாங்களும் போனோம். எலாவின் இயற்கையான சூழல் என்னை மிகவும் கவர்ந்தது. தெறித்து விழும் அருவியின் சாரல் படும் போது உடல் குளிர்ந்தது. சாரல் பட்டு நனைந்து வீதி ஓரத்தில் ஆங்காங்கே இருந்த குரங்குகளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. இராவணனை பெரிதாக, பலமானவனாக வடிவமைத்திருந்தார்கள். ‘இராவணன்’ ‘இராவணா’வாக மாறி மஹா வம்சத்தில் ஏற்கனவே இணைக்கப் பட்டுவிட்டாரா அல்லது இனித்தானா என்பது தெரியவில்லை. Flying Ravana விலும் பறந்து பார்த்தேன். பறப்பதற்கு முன்னர் பாதுகாப்பிற்காக பட்டி இட்டு தலைக்கவசத்தையும் மாட்டி விட்டார்கள். பலரின் வியர்வைகள் சங்கமித்த அந்த தலைக்கவசம் கொஞ்சம் அசெளகரியமாக இருந்தது. சத்தி வந்து விடுமோ என்ற அச்சமும் கூடவே இருந்தது. “கவனம், அட்டைகள் இருக்கு. மழையும் பெய்கிறது. புல் தரைக்குள் போகாதீர்கள் ” என்று எச்சரித்தார்கள். எவ்வளவு கவனமாக இருந்த போதும் இரண்டு அட்டைகள் உடலில் ஏறி விட்டன. ஒன்றை உடனடியாகக் கண்டதால் அப்புறப் படுத்தி விட்டேன். மற்றொன்று துணிச்சலாக எனது கையில் ஏறி இரத்தம் குடித்து விட்டது. எலாவில் இருந்து வரும் வழியில் நுவரெலியாவுக்குப் போனோம். குட்டி இலண்டன் என்று அழைக்கப்படும் நுவரெலியா அந்தப் பெயருக்குப் பொருத்தமாக இருந்தது. குளிருக்கு ஏற்ப சுடச்சுட கிடைத்த சிற்றுண்டிகள் சுவை சேர்த்தன.
  6. நொச்சி அவர்களே, உங்கள் கருத்திற்கு நன்றிகள்! ஆனால், நெடுக்கர் காட்டமாகச் சொன்ன கருத்தை யாரையும் நோகடிக்காமல் அழகு தமிழில் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கருத்தோடு பெரும்பாலும் முரண்படுகிறேன்: சட்டம்: LGBTQ+ சார்ந்து அப்படி என்ன சட்டத்தை அரசுகள் உருவாக்கி , பண்பாட்டைக், கலாச்சாரத்தைச் சீரழித்து விட்டார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் அறிந்த வரையில், ஆண் பெண் உறவிற்கு இருக்கும் சாதாரண தன்மையை, அங்கீகாரத்தை ஒரு பால் உறவிற்கும் வழங்க வேண்டுமென்ற சமத்துவம் பேணும் சட்டங்கள் தான் உருவாக்கப் பட்டிருக்கின்றன. திரியில் இருக்கும் கொலைச் சம்பவத்தில் நிகழ்ந்தது போல, அரசுகள், மக்கள் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி "நீயும் உன் குடும்பமும் ஒரு பால் உறவில் ஈடுபட வேண்டும்" என்று சட்டம் இயற்றியதாக நான் அறியவில்லை! எனவே, உலகின் இன்னொரு பகுதியில், இயற்கையாகத் தமிழர் அடையாளத்தோடு பிறந்த எம்மை, ஒதுங்கியிருக்கும் படி செய்த சட்டங்களை விட்டு விலகி, லிபரல் ஜனநாயக நாடுகளில் "யாரும் எப்படியும் முன்னேறலாம்" என்ற சமத்துவ சட்டங்களால் ஈர்க்கப் பட்டு குடியேறிய நாம், இன்று இன்னொரு இயற்கையான அடையாளத்திற்கு சமத்துவம் கொடுப்பதை சீரழிவு என்கிறோம் , அதற்கெதிராக வலதுசாரிகளோடு கை கோர்த்து எதிர்ப்பைக் காட்டுகிறோம். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பி.கு: கொசுறுக் கேள்வியொன்று- உலகில் 35 நாடுகள் மட்டும் தான் ஓரின உறவை அங்கீகரித்திருப்பதால், பரந்து விரிந்த உலகம் இன்னும் இந்த LGBTQ+ விடயங்களை விரும்பாதோருக்கு திறந்திருக்கிறதல்லவா? அப்படியானால், ஏன் இன்றும் கூட அந்த 170+ நாடுகளில் இருந்து இந்த 35 நாடுகளுள் சில நோக்கி மட்டும் மக்கள் கும்பல் கும்பலாகக் குடியேறுகிறார்கள்? நாணயப் பரிமாற்ற வீதமா, சோசியல் காசா, அல்லது வேறேதுமா?
  7. அதுமட்டுமல்ல, இறந்தவர்களது நல்ல பண்புகளைப்பற்றிக் கதைப்பதுதான் இதுவரை நமது கலாசாரத்தில் நடைமுறையில் உள்ள பழக்கம்.
  8. நடந்த கொலை நீங்கள் சொன்ன எந்த காரணிகளுக்குள்ளும் வராது.
  9. வருமானத்தில் வீழ்ச்சி என்று சொல்ல முடியாது. சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். ஆனால் , அளவுக்கதிகமான வரிகள், உட்பத்தியின்மை என்பவைகளே மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம். சோமாலிய போன்ற ஒரு நாட்டில் மேற்கத்திய நாடுகளின் வரி விதிப்பு கொள்கையை நடைமுறை படுத்தினால் எப்படி இருக்கும்? அதே நிலைமைதான் இங்கும்.
  10. ஜெயவர்த்தனவின் ஆலோசனைகள் இந்திரா காந்தியுடனான தனது சந்திப்பு நிறைவுபெற்று மூன்று வாரங்களின் பின்னர் ஆடி 23 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டின் கட்சித் தலைவர்களுடன் கூட்டம் ஒன்றினை ஜெயார் நடத்தினார். இணக்கப்பாட்டிற்கு வரமுடியாத இரு விடயங்களினால் சர்வகட்சி மாநாட்டின் கலந்துரையாடல்கள் தடைப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஒருபகுதியினர் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக எதனையும் கொடுக்கக் கூடாது எனும் வேளை, இன்னொரு பகுதியினர் அதிகாரம் மிக்க பிராந்தியங்களுக்குக் குறைந்த எந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறிவருகிறார்கள். ஆகவே, இவ்விரு பகுதியினரினதும் அடிப்படை கொள்கைகளைப் பாதிக்காவண்ணம் இரு பகுதியினரும் சந்திக்கக் கூடிய சமரச நிலைப்பாடு ஒன்றிற்கு வருவது அவசியம் என்று அவர் கூறினார். பின்னர் "இரண்டாவது சபையினை" அமைக்கும் ஆலோசனையினை ஜெயார் முன்மொழிய சர்வகட்சி மாநாட்டு உறுப்பினர்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள். மேலும், ஏலவே அமைக்கப்பட்டிருந்த இரு குழுக்களும் சமர்ப்பிக்கவிருக்கும் அறிக்கையினை அடுத்துவரும் அமர்வில் விவாதிக்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஜெயார் முன்மொழிந்த இரண்டாவது சபை யோசனையினை எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி உடனடியாகவே நிராகரித்தது. "அதனை கருத்திக் கொள்ளக் கூடத் தேவையில்லை" என்று சிறிமாவோ கூறினார். இரண்டாவது சபைக்கான முன்மொழிவை ஆரம்பத்தில் அமிர்தலிங்கமும் அதிகம் விரும்பவில்லை. "இந்த ஆலோசனைகள் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யப் போதுமானவை என்று நாம் நம்பவில்லை" என்று அமிர் கூறினார். ஆனால் லங்கா சம சமாஜக் கட்சியும், கம்மியூனிஸ்ட் கட்சியும் இந்த ஆலோசனையினை வரவேற்றிருந்ததுடன், நாட்டி வாழும் அனைத்து இனக் குழுமங்களினதும் கருத்துக்களும், விருப்பு வெறுப்புக்களும் இதற்குள் உள்வாங்கப்படவேண்டும் என்றும் அவை கேட்டுக்கொண்டன. ஆவணி மாதத்தின் முதலிரு வாரத்தில் இரண்டாவது சபை பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. ஆவணி 17 ஆம் திகதி அரசியல் நடைமுறைபற்றிய குழுவின் அறிக்கையினை பிரேமதாச மாநாட்டில் முன்வைத்தார். ஆனால், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான கலந்துரையாடலினை அவர் வேண்டுமென்றே தவிர்த்திருந்தார். அதிகாரப் பரவலாக்கம் நடைபெறப்போகும் அலகு மாவட்ட சபையா அல்லது மாகாணசபையா என்பதை மாநாட்டு உறுப்பினர்களே தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறினார். பிரேமதாச முன்வைத்த அறிக்கையினை சர்வகட்சி மாநாட்டு உறுப்பினர்கள் நான்கு நாட்களாக விவாதித்தனர். ஆவணி 21 ஆம் திகதி தான் வழங்கிய அறிக்கையில், மாவட்ட சபைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு என்பதை தான் நிராகரிப்பதாக அமிர்தலிங்கம் கூறியிருந்தார். உயிர்வாழ்தலுக்கான பாதுகாப்பும், தமது சொத்துக்களைப் பாதுகாத்துக்கொள்ளுதலுமே தமிழர்களின் தற்போதைய அதிமுக்கியமான பிரச்சினைகளாக மாறியிருப்பதாக அவர் கூறினார். அன்றைய நாளுக்கு ஒருநாள் முன்னதாகக் கூட கிளிநொச்சியில் இரு விவசாயிகளைச் சுட்டுக் கொன்றுள்ள இராணுவம் இன்னுமொருவரை படுகாயப்படுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதற்கு முதல்வாரம் மன்னாரின் விவசாயக் கிராமம் ஒன்றிற்குள் நுழைந்த இராணுவம், அங்கிருந்த அப்பாவி மக்களைக் கொன்று, அவர்களின் சொத்துக்களை அழித்து, அவர்களின் பெறுமதியான பொருட்களைக் களவாடிச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் (இப்படுகொலைகள் குறித்த மேலதிக விபரங்கள் இனிவரும் அத்தியாயங்களில் விபரிக்கப்படும்). "தமிழர்களின் தாயகத்தின் ஒருமைப்பாட்டையும், தனித்தன்மையினையும் பாதுகாப்பதூடாகவே தமிழர்கள் தமது வாழ்தலுக்கான பாதுகாப்பையும், சொத்துக்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்" என்று அமிர்தலிங்கம் அங்கு கூறினார். "தமிழ் மக்கள் தமது தாயகத்தில் அரசியல் அதிகாரத்தையும், உள்ளக சட்டம் ஒழுங்கு மீதான அதிகாரத்தையும், பொருளாதார அபிவிருத்தி மற்றும் காணி பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தையும் கொண்டிருப்பது அவசியமாகும். இத்தகைய பொறிமுறையினை உள்ளடக்கிய ஆலோசனையொன்றினை சர்வகட்சி மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்திருக்கிறது. ஆகவே, இந்த பொறிமுறையினைக் கொண்டிராத எந்த அரசியல்த் தீர்வையும் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அவர் மேலும் கூறினார். மேலும் இரண்டாவது சபைக்கான முன்மொழிவையும் இரு காரணங்களை முன்வைத்து அமிர்தலிங்கம் எதிர்த்திருந்தார். முதலாவது காரணம், இரண்டாவது சபை எனும் கருதுகோள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் அடிப்படை நிர்வாக அலகான மாவட்ட சபைகளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருந்தது. இரண்டாவது காரணம், இரண்டாவது சபை உருவாக்கப்படுவதன் நோக்கமே மத்தியில் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தினை உறுதிப்படுத்தி அதனை மேலும் பலப்படுத்தும் நோக்கத்திற்காகவே முன்வைக்கப்படுகிறது என்பதாகும். அமிர்தலிங்கம் கூறியதன்படி, இரண்டாவது சபையின் முன்மொழிவே மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை பலப்படுத்துவதும், நடைமுறையில் இருக்கும் பொறிமுறையினை நீட்டிப்பதும்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இரண்டாவது சபை எனும் அமைப்பை வெறும் பிரச்சார அழகுப் பொருளாகவே அரசாங்கம் பாவிக்க விரும்பியது. சிங்கள மக்களுக்கு இருக்கும் முற்றான ஆட்சியதிகாரத்தினை பரவலாக்குவதற்குப் பதிலாக, அதனை மேலும் மேலும் மத்திய அரசின் கைக்குள் இறுகச் செய்வதுதான் இதன் உண்மையான நோக்கம். மாவட்ட அதிகார சபைகளுக்கும் அப்பால் சென்று இலங்கையரசு தமிழர்களுக்கு அதிகாரங்களை வழங்கவே இரண்டாவது சபையினை உருவாக்கியிருக்கிறது என்று சர்வதேசத்தை அரசு ஏமாற்ற முயலும் அதேவேளை சிங்களவர்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் நாடு முழுவதற்குமான ஆட்சியதிகாரத்தை மேலும் மேலும் பலப்படுத்திக் கொள்ளவும் இதனைப் பாவிக்க நினைத்தது. தன்னால் அமைக்கப்பட்ட குழுக்கள் முன்வைத்த அறிக்கையினையும், இரண்டாவது சபைக்கான கருத்துக்கள் தொடர்பாகவும் ஆவணி 21, 29 மற்றும் புரட்டாதி 1, 3 ஆகிய நாட்களில் சர்வகட்சி மாநாட்டு கட்சிப் பிரதிநிதிகளுடன் ஜெயார் உரையாடினார். இறுதிநாளான புரட்டாதி 3 ஆம் திகதி அதிகாரப் பரவலாக்கம் செய்யப்படவேண்டிய அலகு குறித்து சபை உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டது. மாவட்ட சபை மற்றும் மாகாண சபை நடைமுறையினை முற்றாக நிராகரித்த அமிர்தலிங்கம், அதிகாரம் மிக்க பிராந்திய அலகே தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது என்று கூறினார். "அதிகாரம் மிக்க பிராந்திய அலகு எனும் தமிழர்களின் கோரிக்கை அரசால் நிராகரிக்கப்படுமிடத்து, தமிழர்களின் உயிர்களைப் பாதுகாக்கவும் அவர்களது உடமைகளைப் பாதுகாக்கவும் ஒன்றுபட்ட, தனியான தமிழர்களின் தாயகத்தினை விடுவிப்பதற்கான சாத்வீக வழிப் போராட்டத்திற்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதைத் தவிர தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வேறு தெரிவுகள் இல்லை" என்று அவர் மேலும் அரசை எச்சரித்தார். அமிர்தலிங்கம் முன்வைத்த பிராந்திய அலகுக் கோரிக்கையினை குமார் பொன்னம்பலமும் தொண்டைமானும் ஏற்றுக்கொண்டனர். சர்வகட்சி மாநாட்டின் அடுத்த அமர்வு புரட்டாதி 21 ஆம் திகதி இடம்பெற்றது. தனது அறிக்கையினை சபையில் முன்வைத்த ஜெயார், புரட்டாதி 30 ஆம் திகதிக்கு அதனை ஒத்திவைத்தார். எட்டுப் பக்கங்கள் அடங்கிய அவரது அறிக்கை கடந்த எட்டு மாதங்களாக இடம்பெற்றுவரும் மாநாட்டில் எட்டப்பட்ட விடயங்கள் குறித்துப் பேசியிருந்தது. மேலும், நான்கு விடயங்கள் குறித்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அவையாவன, 1. அடிமட்ட ஜனநாயக வழி அமைப்புக்களுக்கான அதிகாரம் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. 2. நாடற்றவர்கள் எனும் நிலையினை ஒழிப்பது. 3. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் முற்றாக அழிப்பது. 4. இரண்டாவது சபையினை உருவாக்குவது. ஒரு மாகாணத்திற்கு இருக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட மாவட்ட சபைகள் இணைந்து, ஒருங்கிணைந்த மாவட்டங்களாக செயற்பட முடியும் என்றும், இவ்வாறான மாவட்ட சபைகளுக்கு இரண்டாவது சபையினூடாக சட்டவாக்கல் அதிகாரங்கள் வழங்கப்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். சர்வகட்சி மாநாட்டின் மிகப்பெரிய வெற்றி என்று இதனை அரச ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு குறித்து பேச்சுக்களில் முன்னேற்றம் கண்டிருப்பதாக டெயிலி நியூஸ் எக்காளப்படுத்திச் செய்தி வெளியிட்டிருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ இதுகுறித்து மிகுந்த அதிருப்தியடைந்திருந்தது. புரட்டாதி 30 ஆம் திகதி அமிர்தலிங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட முடியுமென்றாலும் கூட, அவை தற்போதும் வெறும் அடிப்படை அலகுகள்தான் என்று அவர் கூறினார். மாவட்டங்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் கூட, ஒருங்கிணைந்த மாவட்டங்களின் அலகுகளுக்கு தனியான அதிகாரம் ஏதும் பகிரப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆனாலும், முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளை முற்றாக நிராகரித்துவிடவும் அவர் விரும்பவில்லை. இவற்றினை முற்றாக நிராகரிக்காது இருப்பதன் மூலம் தொடர்ச்சியான பேரம்பேசலுக்கான கதவுகளை திறந்தே வைத்திருக்கலாம் என்று அவர் எண்ணினார். வடக்கையும் கிழக்கையும் இணைத்த தமிழ்பேசும் தனியான அதிகாரம் மிக்க அலகே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையும் என்று அவர் ஆணித்தரமாக விவாதித்தார். இதன்பின்னர் மாநாட்டினை கார்த்திகை 15 ஆம் திகதிவரை ஜெயார் ஒத்திவைத்தார். ஆனால், ஜெயார் எதிர்பார்த்ததற்கு மாறாக புரட்டாதி, ஐப்பசி ஆகிய மாதங்களில் வன்முறை தலை விரித்தாடியது. குறிப்பாக கிழக்கிற்கும் வன்முறைகள் பரவத் தொடங்கியிருந்தன.
  11. பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்துள்ளவர்களும் இரண்டு காலில் தானே நடக்கின்றார்கள்? உங்களுக்கு பிரித்தானிய கடவுச்சீட்டுடன் சென்றபோது நோர்வே விமான நிலையத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லையோ? இந்தப்பெண்ணின் தந்தை மாஸ்டர் என காணப்பட்டது, பெயர் வரதராஜன் (வரதர்) என உள்ளது. நான் யாழில் பிரபலமான பொருளியல் ஆசிரியர் பெண்ணோ என நினைத்தேன். இது வேறோர் வரதர் பொண்ணு. தமிழ் பல் மருத்துவர் மீது துப்பாக்கி சூடு அதுவும் நோர்வேயில் இது அரிதான சம்பவம். அதற்காக நோர்வேயை இழுத்து வைத்து கும்மக்கூடாது. கடந்த வருடம் என நினைக்கின்றேன் தனது மனைவியை இன்னோர் ஆள் மூலம் சுட்டுக்கொன்ற தமிழருக்கு கனடா நீதிமன்றத்தில் தண்டனை கொடுக்கப்பட்டது என ஒரு செய்தி வாசித்த ஞாபகம். இதுவும் ஒரு உறவுநிலை சம்மந்தப்பட்ட மரணம் போலுள்ளது. தனிப்பட்டவர்களின் மனநல பிரச்சனைகளுக்கு அடைக்கலம் கொடுத்த நாட்டை குறை சொல்லலாமா?
  12. மாதங்களில் நான் மார்கழி. வீதியெங்கும் மாவிலைத் தோரணங்கள் வாசலெல்லாம் வண்ணக் கோலங்கள் பூசணிப் பூக்கள் மத்தியிலே சாணியில் பிள்ளையார் பூவினிலே மெல்லிய பனியுடன் மழைக்காலம் வகை வகையாய் பறவைகள் இசைக்கோலம் நிரை நிரையாய் எறும்புகள் ஊர்வலம் அவசர கதியில் மாந்தர் நகர்வலம் கோடை முடிந்தால் வந்திடும் மார்கழி வாடைக்காற்றும் வந்து வாட்டிடும் பீடை மாதமென்பார் பேதையர் சாடையினால் தை பிறக்கட்டுமென்பர் சோதிடர் பெருவிழாக்கள் குறைந்தாலும் திருவிழாக்கள் களை கட்டும் ஓதுவார் இறைபுகழ் ஓதிச் செல்ல சாதுக்கள் பஜனையில் கூடிச்செல்வர் அடிகளின் திருவெம்பாவை திக்கெட்டும் ஒலிக்க கோதையின் திருப்பாவை காற்றினில் தவழுவதால் மாதங்களில் நான் மார்கழி என்றே பகல்கின்றான் மாதவனும் .......! ஆக்கம் : சுவி ......!
  13. அந்தப் பிள்ளையின் இறப்பால் துயர் உற்று இருக்கும் குடுமபத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு..🙏 இதில் கருத்து பகிரும் உறவுகள் தயவு செய்து இந்தப் பதிவோடு விட்டு விடுங்கள்..ஒரு பெண் பிள்ளையின் இறப்பில் கூட உங்களுக்கு வேண்டாத விமர்சனம் வேணுமா..உங்களால் ஏன் அந்த பிள்ளையை உங்கள் சகோதரியாக இல்லை ஒரு பெண் பிள்ளையாக தன்னும் நினைக்க முடியாதிருக்கிறது..?தவறாக நான் எதுவும் பகிரவில்லை..கடந்த சில நாட்களாக இந்தப் பகுதி படும் பாட்டை பார்த்து விட்டு தான் இந்தக் கருத்தை பகிர்கிறேன்.
  14. கனடாவில் ஏற்கனவே உள்ள நடைமுறைதான். பாரிய மாற்றங்கள் என்று எதுவும் கூறக்கூடிய அளவில் இல்லை. 👇 Artificial Intelligence (AI) இப்போது எல்லாவற்றிற்கும் பாவிக்கிறார்கள். இது மிகவும் முக்கியமான விடயம். இதில் எம்மவர்கள் கோட்டை விட்டுவிடுகிறார்கள்.
  15. 1 point
    கந்தையர் நீங்களும் பக்கததில தானே அடுத்த முறை சேர்ந்தே போனால் மணியனை வெட்டிவிட்டு இரண்டு பேரும் ரம்பைகளை போய் பார்த்து வரலாம்.
  16. தவறு ஆயுதம் ஏந்திய எவருக்கும் அகதி உரிமை எடுப்பது கடினம். ஆனால் அதற்கான காரணம் ஐநாவின் அகதிகள் கோரிக்கைக்கு இணங்க இருந்தால் அகதியாக ஏற்கப்படும் (அநேகமான எம்மவர் சொல்வது கட்டாய சேர்ப்பு அல்லது சந்தர்ப்பம் அல்லது மாட்டிக் கொண்டேன் அதன் காரணமாக ஏற்பட்ட இலங்கை அரசின் அச்சுறுத்தல்)
  17. 1 point
    விலாசத்தையும் போட்டுவிட்டால் விரும்பியவர்கள் போய் ரம்பைகளை பார்க்கலாமே. கையோட கம்மாரிஸ்.
  18. காணொளி பார்க்கவில்லை. இது அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஏதாவது புதிய நடைமுறையா அல்லது ஏற்கனவே உள்ள விடயமா? பிரான்சில் விடுதலை புலிகள் முன்னாள் போராளிகளுக்கு அகதி உரிமை இலகுவாக எடுக்கலாம் என்று கேள்விப்பட்டேன் (ஊரில் உலவும் கதை) உண்மையா?
  19. தாம் இலங்கையர் என பெருமையாக கூறுபவர்கள் அவமானப்படும் வகையில், இலங்கை ஒரு சிறுபான்மையினரினை அடக்குவதற்காக கடன் வாங்கி; இப்போது அதனை செலுத்த முடியாமல் திணறுகின்றது. இலங்கையில் இன்னமும் பயங்கரவாத சட்டத்தின் பின்னே மறைந்து கொண்டே அரசுகள் இயங்கும் கேவலமான நிலையிலேயே இலங்கை உள்ளது, இதனை பற்றி படித்த, பாமர மக்கள் கூட கவலைப்படுவதில்லை, காரணம் அந்தளவிற்கு இனவாதம் கண்ணை மூடியுள்ளது, அந்த அவமானகரமான நிலையினை கூட உணரமுடியாதவாறு எருமை மாட்டின் மேல் மழை பெய்வது போல இருக்கும் இலங்கை குடிமக்களுக்கு, அவர்கள் அரசு கொடுக்கும் பரிசு என்ன என்பதனை காலம் தீர்மானிக்கும். இலங்கை எவ்வாறான கடன் மீழ்சீரமைப்பிற்கு தயாராகிறது என்பதனை இதுவரை தெரிவிக்கவில்லை, 87 பில்லியன் கடனினை எவ்வாறு தீர்க்கவுள்ளது? debt swap 1:1 அல்லது 1:2 என்பது கூட தெரிவிக்கபடவில்லை. நாடுகளின் கடன் மறுசீரமைப்பு தெரியவில்லை, ஆனால் நிறுவனங்கள் தமது கடன் மறு சீரமைப்பிற்கு 1:1 என்றால் $100 கடனிற்கு $100 செலுத்துவது 1:2 என்றால் $100 கடனிற்கு $200 செலுத்துவது. ஏற்கனவே 87 பில்லியன் கடன் நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 131% இந்த 87 பில்லியனை 1:2 என செலுத்துவதாயின் 174 பில்லியன் கடனாகிவிடும், அது தற்போதய கடனினை விட இரட்டிப்பானது. இந்த கடன் சுமைகள் அனைத்தும் மக்கள் மேலேயே சுமத்தப்படும், ஆரம்பத்தில் 10 வருட பணமுறியினை பயன்படுத்தி கடன் மீழழிப்பு செய்யப்படும் என கூறப்பட்டது, இலங்கையின் கிரடிட் தரம் தாழ்வாக உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் எவ்வாறு ஆர்வம் காட்டுவார்கள்? இலங்கை பணமுறியில் முதலிட? அல்லது அதிக வட்டி செலுத்த வேண்டும் (ஆபத்தான முதலீடு). வட்டி அதிகம் செலுத்தினால் ஒரு கட்டத்தில் மீண்டும் இலங்கை கடன் செலுத்த முடியா முறிவு நிலைக்குள்ளாகும் (குறைந்த கால முதிர்ச்சி கடன்), உதாரணமாக 30 வருட வீட்டுக்கடனை 10 வருடத்திற்குள் செலுத்துவதென்றால் மீள செலுத்தும் மாதாந்த கட்டணம் அதிகரிக்கும் அதனை போல ஒரு நிலைதான். இலங்கை தொடர்ந்தும் கடன் வாங்கி கடன் செலுத்தி ஒரு ஐந்தாறு வருடங்களின் பின்னர் மீண்டும் தற்போதுள்ளதனை விட அதிக கடனுக்கு வட்டி கூட செலுத்தமுடியாமல் தற்போதுள்ள நிலையினை விட இன்னும் மோசமானநிலையில் முறிவடையலாம். இதற்கு காரணம் அரசுகள் மட்டுமல்ல அங்குள்ள மக்களின் மனங்களும்தான் காரணம். பொதுவாக பார்க்கும் போது இலங்கை இந்த நச்சுவட்டத்திற்குள்ளே தொடர்ந்திருக்க வாய்ப்புள்ளது அல்லது ஏதாவது புரட்சிகரமான மாற்ற்ம் நிகழ வேண்டும்.
  20. சிறு விளக்கம்; விடுதலைப் புலிகள் என்றில்லை, வன்முறையை ஊக்குவிக்கும் அல்லது வன்முறை மூலம் அரசியல் இலக்கை அடைய முயற்சிக்கும் அமைப்பிற்கு ஆதரவளித்த அல்லது உறுப்பினராக இருந்த எவருடைய அகதிக் கோரிக்கையையும் கனேடிய குடிவரவு, குடியகல்வு, அகதிகளுக்கான அமைப்பு ஏற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் உண்டு. அதன் அர்த்தம் கனடாவில் முன்னாள் விபு க்கள் அகதிக் கோரிக்கையை முன்வைக்க முடியாது என்பது அல்ல. அகதிக் கோரிக்கையை முன்வைக்கலாம் ஆனால் அதில் வெல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் இலங்கையில் உயிராபத்துக்கள் இருப்பதனால் முன்னாள் விபு க்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது என Canadian courts தீர்ப்பளித்த பல உதாரணங்கள் உள்ளன.
  21. அகதியாகப் புலம்பெயர்ந்த பெற்றோர், தமது பண்பாட்டு வாழ்வியலை இழந்த சூழலிற் பிள்ளைகளை ஆளாக்கி எடுக்கப்படும்பாடு புலத்திலே வாழும் அனைவரும் அறிந்ததே. மனித வாழ்வில் காதல் ஒரு அர்த்தமுள்ளதாகவும், அன்பின் வழிப்பட்டதாகவும் இருந்தகாலம் ஒன்று இருந்தது. இன்று அந்தநிலை இருப்பதாகத் தெரியவில்லை. காதலிக்கும்போதே, அன்பு ஒரு கட்டத்தில் அடக்குமுறையாக மாறுகிறது. சில காதல் திருமணம்வரை போய்ப் பின்னர் அது மணமுறிவில் போய் நிற்கிறது.(தற்கொiயாளி) அவர் முன்பே சில காதல் முறிவுகளுக்குட்பட்டவர் என்பதாற் கொல்லப்பட்டவர் விரும்பாது கூறிவிட்டு விலத்தி நடந்துள்ளார். அதனை ஏற்காது தொடர்சியாகப் பின்தொடர, அது காவற்றுறைவரை சென்று தண்டனையும் பெற்றிருக்கிறார் என அறியமுடிகிறது. இங்கே காதலால், காதல் முறிவால் நடந்திருப்பது ஒரு கொலையும், தற்கொலையுமாகும். (பெண்ணின்) கொலையுண்டவரின் முறைப்பாட்டாற் தற்கொலை செய்துகொண்டவர் நீதித்துறையால் தண்டிக்கப்பட்டுள்ளார். தற்கொலையாளி வெளியே வந்தகாலத்தில் ராகவி வீட்டில் குடும்ப நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது. அவ்வேளை தொடர்புகொண்டு இதுதான் உனது கடைசிக்கொண்டாட்டம் என்றும் எச்சரித்துள்ளார். காதல் முறிவை ஏற்காத மனநிலையில், அது பழிவாங்கும் மனநிலையாக மாறிக் கொலையிலும்,தற்கொலையிலும் போய்முடிந்திருக்கிறது. இரண்டு குடும்பங்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன என்பது எவளவு துயரமானது என்பதை மனங்கொள்ள வேண்டியது அவசியமாகும். குமுகாய நோக்கு நிலையில் இது ஒரு பெரும் அவலமான சூழல். புலத்திலே தமிழர் நிறுவனங்கள் விடுதலை மற்றும் தமிழ் கற்பித்தலுக்கப்பால் குமுகாயம் தொடர்பான ஊடாட்டமின்மையும் இந்தத் தேய்வுநிலைக்குக் கரணியமாகும். ஒருபுறம் திருமணத்தில் ஆர்வமின்மை மறுபுறம் மாற்றுபால் திருமண வளர்ச்சி வீத அதிகரிப்பு. அத்தோடு, அதன் மீதான ஒருவகைப் புதுமைக் கவர்ச்சியும் உள்ளமை நோக்குதற்குரியதாகும். மனித வளர்ச்சியும், அறிவியல் வளர்ச்சியும் உலகை இன்று பல்வேறு வகைமைகளுள் நகர்த்திவருகின்ற சூழல் அது இயற்கையா, செயற்கையா என்பதற்கப்பால் தவிர்க்க முடியாத நிலையை உலகம் எட்டிவிட்டது. இதிலே ஒருபால் விருப்போ, இருபால் விருப்போ, முப்பால் விருப்போ நாடுகளும்; மக்களும் படிபடிப்படியாக மாற்றம் பெற்று வருகின்றனர். மேலைநாடுகளில் மட்டுமல்ல, பண்பாட்டில் மேலோங்கிய நாடெனப்படும் இந்தியாவிலும்(மறைமுகமாக)குழுநிலைப் பாலியல் செயற்பாடுகள் அரங்கேறுகின்றன. நாளை இதுகூடச் சட்டமாகலாம். பின் வெளியே போன கணவனோ, மனைவியோ வரும்வரை காத்திருக்கும் நிலை தோன்றினாலும் ஆச்சரியப்பட முடியாது. சட்டங்களுக்குள் உடல் கட்டுப்படுகின்ற நிலையில் இல்லைத்தானே. ஆனால், அவர்களது வாழ்வியல் மற்றும் பண்பாட்டு நெறிமுறைகளின் வழியாகவும், அரசுகள் மற்றும் அரச நிறுவனங்கள் சட்டமெனும் சட்டகங்கள் வழியே வழிநடாத்தப்படுதல் வழியாக மனிதர்கள் கட்டுப்படுகிறார்கள் என்பதே உண்மை. ஒருபாலினச் சேர்க்கையை உலகம் நாடுகளெதும் தாமாக முன்வந்து அறிமுகப்படுத்திய பொறிமுறையல்ல. மக்களிடையே ஆங்காங்கே மறைவாக நடைபெற்ற விடயத்தைத் தடுத்தபோது எழுந்த கொந்தளிப்புகளே பின்னாளில், அங்கீகாரமாகிச் சட்டமாக்கி அதற்கொரு குமுகாய ஏற்புநிலையைப் பெறவைக்கப்பட்டது. ஐ.நா. சபையில் அங்கத்துவம் வகிக்கும் 193இற்கு மேற்பட்ட நாடுகளைக் கொண்ட உலகில், 35நாடுகள் மட்டுமே ஒருபாலினச் சேர்க்கையை அங்கீகரித்துள்ளன. எனவே இது உலகம் தானாக முன்வந்து கொண்டு வந்த பொறிமுறையென்றோ அல்லது உலகம் தோன்றியது முதல் உள்ளதாகவோ கருதமுடியாது. குமுகாய நோக்கு நிலையிற் பார்த்தால் ஓருபாற் திருமணங்கள் இனத்துவ அழிவுக்கும், மனிதர்களின் சுயவிருப்பின் நிறைவுக்கும்(உலகினது தனிமனித சுதந்திரத்தை அனுபவித்தல்) பாலியற் துணைப்பொருள் உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் துணைபுரியலாம். இந்த நிறுவனங்களே ஊக்குவிக்கும் நிலையும் உள்ளது. இரு தமிழ்க் குடும்பங்களின் அவலமான சூழலை, அதனது அர்த்தபரிமாணத்தில் நோக்குதலே பொருத்தமானது. காதல் ஏற்பும் மறுப்பும் உயிரிழப்புகளில் முடிந்கிறது என்பது நோர்வே போன்ற வளர்ந்த நாட்டின் கல்விப்புலத்திலே பயின்றவர்களில் ஒருவர் கொலைவரை சென்றிருப்பது எப்படி? குழந்தைகளைக் கண்டித்தாலே வந்து காவிச்சென்றுவிடும் நோர்வே அரச நிறுவனங்கள் இந்த அவலங்களைத் தடுக்கவும் முயல வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  22. காத்தான்குடியில் இருந்து ஒரு Satellite 🛰️ தயாரித்து விண்ணுக்கு அனுப்பினால் எப்படி இருக்கும்? நெனச்சு பாக்ககுரதுக்கே ரொம்ப திரிலிங்கா இருக்கு இல்ல ? என்ன சொல்றீங்க? இது சாத்தியமா? (வெங்காயம், பச்ச கொச்சிக்கா பிரச்சினை வேற போயிகிட்டு இருக்கு எண்டு நீங்க நினைக்கிறத‌ கொஞ்சம் கட்டுப்படுத்தி போட்டு தொடர்ந்து வாசிங்க ) ஆம், இது சாத்தியமே! வாங்க செல்றன். சாட்டிலைட் 🛰️, ராக்கெட் 🚀 என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அமேரிக்காவின் NASA நிறுவனம்தான். ஆனால் அண்மையில் ஈலோன் மாஸ்க்கின் SpaceX நிறுவனம், Russia, China மற்றும் இந்தியாவின் ISRO நிறுவனமும் தனது புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. நான் இங்கே பேச முனைவது உலகெங்கிலும் இருந்தும் மாணவர்களினால் தயாரிக்கப்பட்டு விண்ணுக்கு ஏவப்படுகின்ற மாணவர் சேட்டிலைட்டுகள் 🛰️ ஆகும். இவ்வகையான மாணவர் சேட்டிலைட்டுகள் satellite 🛰️ நிறைய விண்ணுக்கு ஏவப்பட்டு கொண்டிருக்கிறது. Please Google, YouTube பன்னி‌ பாருங்க. இந்த சேட்டிலைடினை காத்தாங்குடி மாணவர்களினால் தயாரிக்கப்பட்டு விண்ணுக்கு அனுப்பி வைப்பதே எனது ஆசை. இந்த சாட்டிலைட்டுக்கு நான் வைத்திருக்கும் பெயர் "KATSAT" 🛰️ ஆகும் (Kattanakudy Satellite என்பதன் சுருக்கம்). இந்த Satellite 🛰️ உடன் தொடர்பு கொள்வதற்கும் தொடர்ச்சியாக விண்வெளி 🌌 ஆராய்ச்சிகளை செய்வதற்கும் காத்தான்குடி மத்திய கல்லூரியில் "Kattanakudy Space Research Institute 📡" (KSRI)‌ என்ற‌ நிறுவனம் நிறுவப்படும். பெயரும் நல்லா இருக்கு இல்ல 😃. இந்த KATSAT 🛰️ திட்டத்தில் இரண்டு பிரிவு காணப்படும். 1. சாட்டிலைட்‌ satellite 🛰️ தயாரிப்பு 2. ராக்கெட் 🚀 தயாரிப்பு இந்த satellite 🛰️ இனை இரண்டு வழியில் விண்வெளிக்கு அனுப்ப‌ முடியும். 1. சர்வதேச விண்வெளி நிலையத்தினால் (International Space Station) அனுப்பப்படுகின்ற Cargo Spaceship 🚀 மூலம் இவ்வாறு மாணவர்களினால் தயாரிக்கப்படுகின்ற சேட்டிலைட் இணை அனுப்பி அங்கே இருக்கின்ற Astronaut உதவியுடன் விண்ணில் Manual ஆக‌ launch செய்வது. இது சம்பந்தமான‌ ஆராய்ச்சிகளை‌ நாம் இன்றிலிருந்து தொடங்க வேண்டும். நான்‌ தொடங்கிட்டன்.. 2.‌ அல்லது நாமே ராக்கெட்டினை 🚀 தயாரித்து அதனுள் நமது Satellite யினை 🛰️ வைத்து விண்ணுக்கு அனுப்புவது. இதற்கான தேடல்கள், நல்ல முன் உதாரணங்கள்‌ தமிழ் நாட்டில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். Google பன்னி‌ பாருங்க. நாம் அனுப்ப இருக்கின்ற இந்த KATSAT 🛰️ ஆனது காலநிலை சம்பந்தமான தரவுகளை சேகரித்து அனுப்புகின்ற வேலையினை பிரதானமாக செய்யும். அவ்வப்போது காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப: - இலங்கை சார்ந்த சேட்டிலைட் படங்களை எடுத்து அனுப்புதல், - அவசரகால warning ⚠️ யினை‌ முன்கூட்டியே கூட்டியே தெரியப்படுத்துதல், - மாணவர்கள் எப்படி ஒரு செய்மதியுடன்‌ தொடர்பாடல் (satellite communication) செய்தல் போன்ற பயிற்சிகளை (training) வழங்குவதற்காக இந்த சாட்டிலைட் பயன்படுத்தப்படும். இதனுடைய fun factor ஆக: - தானாகவே விண்வெளி புகைப்படங்கள் எடுத்து அனுப்புவது. - ஒவ்வொரு ஆண்டினை பூர்த்தி செய்கின்ற பொழுதும் Kattanakudy Satellite 🛰️ என்ற LED யினை விண்ணில் ஒளிரச் செய்து வீடியோ எடுத்து அனுப்புவது. - விண்வெளியில் கிடைக்கின்ற ஒலிகளினை record (30 second) செய்து அவ்வப்போது அனுப்புதல்.‌ - தனக்கான ட்விட்டரை (X தளம்) அக்கவுண்ட் தொடர்ச்சியாக தானாகவே அப்டேட் செய்தல். - KATSAT இருக்கும் AI தொழில்நுட்பத்தின் மூலம் விண்வெளி சம்பந்தமான கேள்விகளுக்கு email மூலம் பதில் அளித்தல் போன்ற பல செயற்பாடுகளை நமது KATSAT 🛰️ செய்மதி கொண்டிருக்கும். இந்த சாட்டிலைட் launch 🚀 ஆனது NASA or ISRO இல் இருந்து காத்தான்குடியின் முதல் செய்மதி KATSAT 🛰️ விண்ணுக்கு ஏவப்படுகின்ற அதே தருணம் காத்தான்குடி மத்திய கல்லூரியில் இருந்தும் மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டும் அதே நேரத்தில் விண்ணை நோக்கி ஏவப்படும். இந்த வரலாற்று நிகழ்வினை கண்டுகளிக்க காத்தான்குடியில் அனைத்து மாணவர்களும் மத்திய கல்லூரி கிரவுண்டில் ஒன்று கூடி இருப்பர். இந்த ராக்கெட் லான்ச் ஆனது காத்தான்குடியில் எந்த மூலையில் இருந்தும் மக்கள் பார்வையிடக் கூடியதாகவே அமைந்திருக்கும். இதனது நேரடி ஒளிபரப்பும் குட்வின் ஜங்ஷனில் அமைந்திருக்கும் திரையிலும் மக்கள் பார்வைக்கு காட்டப்படும். 2019 ம் ஆண்டு எனது மனதில் தோன்றிய அந்த எண்ணம் இன்று அது முழு திட்டமாக உருவாகி வருகிறது. இறைவனின் உதவியினால் இந்த திட்டம் நான் மரணிப்பதெற்கு முன்னர் Project Lead ஆக இருந்து இந்த சாதனையை நம் மண்ணில் நிகழ்த்த வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. நீங்களும் உங்கள் பிராத்தனைகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். "வரலாறுகளுக்காக காத்திருக்கக் கூடாது அதனை நாமே தொடங்கி வைக்க வேண்டும்" கனவு காணுங்கள் என்ற‌ அப்துல் கலாம் ஐயாவின் வரிகளினை‌ உதாரணமாக கொண்டு நீங்களும் உங்களது பிள்ளைகளுக்கு ஆர்வம் ஊட்டுங்கள். கொச்சிக்கா பிரச்சினை தானாகே தீரும். "அறிவியல் வளர்ச்சியே எமது எழுச்சி" இர்ஷாத் இஸ்மாயில் https://www.madawalaenews.com/2024/01/satellite.html
  23. நடந்த மரணங்களைப் பற்றிய உத்தியோகபூர்வமான விபரங்கள் வராமல், அவற்றைப் பற்றி எதுவித ஆதாரங்களும் இல்லாமல் எழுந்தமானத்திற்கு எழுதுவதும், சம்பந்தமில்லாத விடயங்களை (உறுதி செய்யப்படாத) எழுதி திசையைத் திருப்புவதும் ஆர்வக்கோளாறு அல்லது விடுப்புக்கேட்கும் மனநிலை என்றுகொள்ளமுடியாது. அதையும் தாண்டி ஏதோ ஒரு வெறுப்பு இருக்கின்றது. குடும்பத்தினருக்கு மேலும் வேதனைகளைக் கொடுக்காமல் இருக்க முயற்சிக்கவேண்டும்.
  24. சின்ன வயதில் பழைய VHF & UHF video cassette player இனை செய்மதி அலைகளை பெறுவதற்காக செய்த கோமாளித்தனங்கள் நினைவுக்கு வருகின்றது இந்த கட்டுரையினை வாசிக்கும் போது😁.
  25. ஜேர்மனியில் இன்று அரசின் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடக்கம் பல்வேறு தொழில் இயக்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். நாடளாவிய ரீதியில் வீதி முடக்கங்களை செய்ய உள்ளார்கள். எனவே ஒட்டு மொத்த ஜேர்மனியும் இன்று (8.01.2024) முடக்கப்படலாம்.
  26. அவர்களை மீறி (இந்தியா) ஈழத்தமிழர்களால் எதுவுமே செய்ய முடியாது என்பதை 2009 சம்பவங்கள் நிரூபித்து காட்டி விட்டது. இதை சிங்களம் நன்றாகவே தெரிந்து வைத்துக்கொண்டு நெஞ்சை நிமிர்த்தி,தலையை நிமிர்த்தி சர்வதேசத்தில் ஓடி விளையாடுகின்றார்கள்.
  27. ஒரு படத்தில் ஒரு காட்சியில் விஜயகாந்தை பார்த்து வருங்கால முதல்வர் என வடிவேல் சொல்லும் காட்சி அமைக்கப்பட்டதாம். அதற்கு வடிவேலு மறுக்கவே அங்கிருந்துதான் பிரச்சனை புகைய ஆரம்பித்ததாக பல வருடங்களுக்கு முன் வாசித்த ஞாபகம்.
  28. இது குடியேறி எதிர்ப்பு மனநிலை அல்ல.. குடியேறி.. குடியேறிய நாட்டின் உயர் பண்புகளை ஏற்றுக் கொள்ளாமல்... தங்கள்.. தாய் நாட்டில் செய்த அதே கீழ்த்தரமான செயல்களை குடியேறிய நாட்டிலும் அரங்கேற்றும் செயல்களுக்கு எதிரான மனநிலை. செங்கனில் இல்லாத போதும்.. நோர்வே உட்பட ஐரோப்பிய பிரஜைகளை பிரிட்டன் தானியங்கி மூலம் உள்நுழைய அனுமதிக்கும் போது தாராளவாதம் பேசும் நோர்வே உட்பட்ட ஐரோப்பிய நாடுகள்.. பிரிட்டன் மீது காட்டும் இந்த வேற்றுமைக்கு என்ன காரணம்.. செங்கனா..??????! ஓரினச் சேர்க்கை என்பது...இப்போ இயற்கை சார் விடயமாக அன்றி.. புகுத்தப்படும் விடயமா மாறி கனகாலமாயிட்டுது. நீங்கள் இன்னும் உங்கள் பழைய நிலைப்பாட்டில் நின்று தொங்குவதற்கு நாம் என்ன செய்ய முடியும். அந்தளவு தான் தாங்கள் விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கடந்து செல்வதைத் தவிர.
  29. இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனைகள் உலகிற்கு பிரபலமாவதற்கு முன்னரேயே தமிழர் பகுதிகள் இந்தியாவின் ஒரு மாநிலம் போலவே இருந்துள்ளது. பாட புத்தகங்கள் முதல் தெரு சிலைகள் ஈறாக உணவு,ஆடை அலங்காரம்,இசை நடனம் என சொல்லிக்கொண்டே போகலாம். ஏன் கட்டும் கோவணம் கூட.....😂
  30. சில வேளைகளில் வேலை செய்யாது. அந்த வகையில்.. Other Media (you can see it at the right bottom corner of text box where you type your message to post)---> Insert image from URL ---> copy and paste image link address---> click insert into post இப்படி செய்தால் வேலை செய்யும். நான் நினைக்கிறேன் சில ஊடகங்களில் இருந்து நேரடியாக வெட்டி ஒட்ட அனுமதிக்கினம் இல்லை.
  31. இப்போது காணொளி தோன்றுகின்றது. நன்றி! யூரியூப்பில் இணைப்பு முகவரி எடுக்கும்போது முன்பு நகல் செய்தேன். இப்போது வட்சப் பகிர்வு இணைப்பை சொடுக்கி அதை இங்கு இணைக்கும் போது காணொளி தோன்றுகின்றது. முதலாவது முறையில் முகவரி சுருக்கப்பட்டு உள்ளதோ தெரியாது.
  32. தரவுகளுக்கு நன்றி ஆனால் இது தமிழர்களின் ஒற்றுமை மற்றும் ஒரே கொள்கை சார்ந்த நிலைப்பாட்டின் பலவீனத்தை காட்டுகிறதே தவிர அவரின் தோல்வி அல்ல.
  33. வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் ஆலயங்களின் பிரச்சினைகளுக்கு, விரைவில் தீர்வு! வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகள் வழங்கப்படும் எனவும், அந்த மத ஸ்தலங்களை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை மத தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது. வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த உள்ளது. அதற்கு மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய பணிகள் பாரியதாக இருக்கும். அனைத்து மதத் தலைவர்களும் நல்லூர் ஆலய பொறுப்பாளர்களும் விரும்பினால் நல்லூர் ஆலயத்தை விட பெரிய ஆலயத்தை அமைக்க முடியும். கிறிஸ்தவ தேவாலயங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக மடு தேவாலயத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். யுத்த காலத்தில் முஸ்லிம் மக்கள் இந்தப் பிரதேசங்களை விட்டு வெளியேறியதாகவும், அவர்கள் மீள்குடியேறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இனம் மற்றும் மதம் என்ற அடிப்படையில் பிளவுபட வேண்டிய அவசியமில்லை. அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பெற்றுக் கொண்டு ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். நாட்டின் சமய மற்றும் கலாசார விழுமியங்களை முன்வைத்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என தெரிவித்தார். https://athavannews.com/2024/1365139
  34. கிரிக்கெட் கால்பந்து நானும் விளையாடுவேன், என்னுடன் வேலைபார்க்கும் வேறு இனத்தவரும் விளையாடுவார்கள், ஈழதமிழர்களும் விளையாடுவார்கள். ஆனால் இந்த மாட்டோடு சண்டை போடுவதை இலங்கை தமிழர்களிடம் திணிப்பதற்கு ஒடுக்கபட்ட ஏழ்மையான ஈழதமிழர்களை தேடிபிடித்து மாட்டோடு சண்டை போட வைக்க வேண்டும் 😟மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் இலங்கைக்கு வந்து மாட்டோடு ஒருபோதும் சண்டைபோட போவது இல்லை. இந்திய தமிழக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலன்புரி சங்கம், இலங்கையின் சுற்றுலா அதிகார சபை, ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்த பணியை செவ்வனே செய்வார்கள்.
  35. இலங்கை தமிழர்கள் சீரழிந்து போகட்டும் என்று இந்த நிகழ்வை நடத்த தொடங்கியுள்ளார்கள்.
  36. இந்திராவின் வேண்டுகோள் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கான தனது பயணத்தை முடித்துக்கொண்டு வரும் வழியில் ஜெயவர்த்தன இந்தியாவுக்கும் சென்றார். அங்கு இந்திரா காந்தியை அவர் சந்தித்தார். ஜெயாருடன் பேசுகையில், இலங்கையில் இராணுவ ரீதியில் தலையிடும் நோக்கமோ, இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கமோ இந்தியாவுக்குச் சற்றேனும் கிடையாது என்று இந்திரா கூறினார். தனது நிலைப்பாட்டினை முன்னணியினரிடம் தான் தெளிவாகக் கூறிவிட்டதாக அவர் தெரிவித்தார் அதன்பின்னர் பேசிய இந்திரா, சர்வக்ட்சி மாநாட்டின் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வாக சுயாட்சிகொண்ட பிராந்தியங்களே அமையும் என்று இந்தியா எண்ணுவதாகவும் கூறினார். இதற்குப் பதிலளித்த ஜெயார் சுயாட்சி கொண்ட பிராந்தியங்கள் எனும் தீர்வினை வழங்க எதிர்க்கட்சித் தலைவரான சிறிமாவோ பண்டாரநாயக்க தடைபோட்டுவருவதாகக் கூறினார். அதன் பின்னர் பேசிய இந்திரா, அப்படியானால் மாகாணசபை முறையினை அமுல்ப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளித்த ஜெயார், சிங்கள மக்கள் தற்போது இருக்கும் மனோநிலையில் மாகாணசபை முறையினையும் தன்னால் ஏற்படுத்த முடியாது என்று மறுத்தார். "எமக்கான ஆதரவுத் தளத்தினை நாம் இழந்துவிடுவோம், நாம் எல்லோரையும் இழந்துவிடுவோம்" என்று அவர் கூறினார். தமிழ்நாட்டில் இயங்கிவரும் தமிழ்ப் போராளிகளின் பயிற்சிமுகாம்கள் குறித்த விடயங்களை இந்திராவிடம் காண்பித்த ஜெயவர்த்தன‌ தமிழரின் பிரச்சினைக்கான தீர்வு விரைவில் கிடைக்கப்பெறுவதை தனது அரசாங்கம் விரும்புகிறது என்று இந்திரா கூறினார். இச்சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்திருந்த ஜெயார், "நான்கூட விரைவான தீர்வினையே விரும்புகிறேன். ஆனால் இலங்கையில் வன்முறையில் ஈடுபட்டு வருவோர் தீர்விற்கான முயற்சிகளுக்குத் தடங்கலாக இருக்கின்றனர். பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் தங்கியிருந்து,பயிற்சி முகாம்களை அமைத்து, இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்து சிங்கள மக்கள் கோபம் கொண்டிருக்கின்றனர்" என்று பதிலளித்தார். தமிழ்நாட்டில் போராளிகளுக்கான பயிற்சிமுகாம்கள் இருக்கின்றன எனும் ஜெயாரின் கூற்றினை இந்திரா நிராகரித்தார். ஆனால், சுமார் முப்பதினாயிரம் இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாகவும், அவர்களைப் பராமரிக்கவே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த ஜெயார், "உங்களுக்கு வேண்டுமென்றால் இது தெரியாமல் இருக்கலாம். ஆனால் எனக்கோ இம்முகாம்கள் குறித்து அனைத்து விடயங்களும் தெரியும்" என்று கூறியதுடன் தன்னுடன் கொண்டுவந்திருந்த, முகாம்கள் அமைந்திருந்த இடங்களின் வரைபடங்கள், அவற்றின் பெயர்கள், ஒவ்வொரு போராளி அமைப்பிற்கும் பயிற்சி வழங்கப்பட்ட முகாம்களின் விபரங்கள், ஒவ்வொரு முகாமிலும் பயிற்றப்பட்டு வந்த போராளிகளின் எண்ணிக்கை, பயிற்சி முகாம்களில் பயிற்றுவாளர்களாகச் செயற்பட்டு வந்த இந்திய இராணுவ அதிகாரிகளின் பெயர்கள், தரங்கள் என்று அனைத்து விடயங்களையும் ஆவண வடிவில் இந்திராவிடம் கையளித்தார். ஜெயார் தன்னிடம் காண்பித்த பயிற்சிமுகாம்கள் குறித்த விபரங்களைக் கண்ணுற்றபோது ஒருகணம் அதிர்ந்துபோன இந்திரா ஒருவாறு சமாளித்துக்கொண்டே அவ்விடயங்கள் குறித்து விசாரிப்பதாகப் பதிலளித்தார். ஜெயார் தன்னிடம் காண்பித்த விடயங்கள் சரியானவைதான் என்பது இந்திராவுக்குத் தெரியும். அவரது ஆச்சரியமெல்லாம் இவற்றினை ஜெயாருக்கு வழங்கியது யாரென்பதுதான். போராளி அமைப்புகளுக்குள் ஊடுருவிய லலித்தும், விலைபோன மலையாளி அதிகாரியும் தேசியப் பந்தோபஸ்த்து அமைச்சராகப் பதவியேற்றதும் லலித் அதுலத் முதலி செய்த முக்கியமான விடயங்களில் ஒன்று தமிழ்ப் போராளி அமைப்புகளுக்குள்ளும், இந்திய உளவுத்துறையான ரோவிற்குள்ளும் தனக்கான உளவாளிகளை உட்புகுத்திக்கொண்டதுதான். சென்னையில் செயற்பட்டுவந்த ரோவின் அலுவலகத்திற்கு மலையாளி அதிகாரியான உன்னிகிருஷ்ணன் பொறுப்பாகவிருந்தார். சி.ஐ.ஏ இன் உதவியுடன் லலித் அதுலத் முதலி உன்னிகிருஷ்ணனை விலைக்கு வாங்கியிருந்தார். இவரே தமிழ்நாட்டில் இயங்கிவந்த போராளிகளுக்கான பயிற்சிமுகாம்களின் அமைவிடங்கள் , வரைபடங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இலங்கையின் பொலீஸ் புலநாய்வுத்துறைக்கு வழங்கியிருந்தார். இவற்றினை அடிப்படையாக வைத்தே உதவிப் பொலீஸ் அத்தியட்சகரான சிறில் ஹேரத் ஜெயவர்த்தனவுக்கான ஆவணங்களை தொகுத்து வழங்கினார். இவரது அறிக்கையில் போராளிகள் பயிற்சிகளின்போது பாவித்த ஆயுதங்களின் வகைகள் முதல் பல விடயங்கள் குறிப்பிட‌ப்பட்டிருந்தன. இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜெயாருடன் அதுலத் முதலியும் சென்றிருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது இவர்கள் இருவரும் கடுமையான தொனியைப் பாவித்தனர். பத்திரிக்கையாளர் சந்திப்புக்களின் போது தமிழர்களின் பிரச்சினை என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று உறுதியாகத் தெரிவித்தனர். அங்கிருப்பது பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே என்று பிடிவாதமாக நின்றனர். மேலும், அரசியல் ரீதியிலான‌ தீர்வொன்றிற்கு இராணுவ ரீதியிலான வெற்றி தவிர்க்கமுடியாத அங்கமாகும் என்றும் வாதாடினர். "பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை அதிகளவில் கட்டுப்படுத்தி அழித்துவிடுவதூடாக அரசியல்த் தீர்விற்கான சந்தர்ப்பத்தினை அதிகரித்துக்கொள்ள முடியும்" என்று லலித் அதுலத் முதலி பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஆதரித்து வந்த இந்துப் பத்திரிக்கை, இலங்கையில் நடக்கும் பிரச்சினைகளால் 30,000 தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக தஞ்சம் கோரி வந்துள்ள நிலையில் இதனை இலங்கையின் உள்வீட்டு விவகாரம் என்று கருதமுடியாது என்று வாதாடியது. மேலும், இலங்கையில் இருப்பது பயங்கரவாதப் பிரச்சினையல்ல என்றும் அது கூறியது. "தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தீவிரம் அதிகரித்துவருவதனாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றே பார்க்கபடுதல் அவசியம்" என்று அது மேலும் கூறியது.
  37. 1 point
    இது உங்களுக்கு மருந்து தந்த ஆயுள்வேத டொக்ரருக்கும் தெரியாது😂! (மீண்டும் கண்டது மகிழ்ச்சி!)
  38. 1 point
    காலையில் பாண் வாங்குவதற்காக மணியனும் நானும் பேக்கரிக்குப் போயிருந்தோம். அங்கே ஒரு சிறிய கூட்டம் வரிசை கட்டி இருந்ததால் மணியன் பாண் வாங்கி வரும் வரை நான் ஓரமாக ஒதுங்கி நின்றேன். பிளாஸ்ரிக் பையில் பாணை வாங்கிக் கொண்டு ஒரு புன் சிரிப்போடு வந்த மணியன், “உனக்கு பல்லெல்லாம் ஓகேதானே?” என்று என்னைக் கேட்டான். அவன் அப்படி அதுவும் காலையிலேயே என்னைக் கேட்டது ஏன் என்று புரியாமல் விழித்து நின்ற எனக்கு, அவன் தொடர்ந்து சொல்லும் போதுதான் புரிந்தது. “எனக்குப் பின்னாலே மூண்டாவதா நின்றாரே, அவர் ஒரு டென்ரிஸ்ட். ஊர் வல்வெட்டித்துறை. வெள்ளவத்தையிலைதான் அவரின்ரை டிஸ்பென்சரி இருக்கு. நான் அவரிட்டைத்தான் பல்லைக் காட்டுறனான். எனக்கு முன் பல்லிலை ஒரு ‘ஈவு’ இருந்ததெல்லோ! அந்த இடைவெளியை மறைச்சவர் இவர்தான்” என்று தன்னுடைய பல்லைக் காட்டிச் சிரித்தான் மணியன். கதைத்துக் கொண்டிருக்கும் போதே பல் வைத்தியர் பாணுடன் எங்கள் பக்கத்தில் வந்து நின்றார். “எப்பிடி, சுகமா? கனகாலமா அந்தப் பக்கம் காணேல்லே?” “ ஓம்..ஓம். ஒருக்கால் வரத்தான் வேணும். இவர் என்னுடைய பழைய சினேகிதன். யேர்மனியிலை இருக்கிறார்” மணியன் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தான். “அப்பிடியே! நல்லது. நாளைக்கு மகள் நியூசிலாந்திலை இருந்து வாறா. எயார் போர்ட்டுக்குப் போயிடுவன். வாறதெண்டால் செவ்வாய், புதனிலை வாங்கோ” சொல்லிவிட்டு, சிரித்து விடை பெற்றார். “டென்ரிஸ்ரட்டை போற எண்ணம் இருக்கோ? போறதெண்டால் சொல்லு” “ டென்ரிஸ்ற் சிரிக்கக்க பாத்தன். மேல் பல் வரிசையில் இடது, வலது பக்கங்களில் ஒன்றிரண்டு பல்லுகளைக் காணேல்லை. முதலிலே அவர் தன்ரை பல்லைக் கட்டட்டும். பிறகு பாப்பம்” என்று மணியனுக்குச்சொன்னேன். “சரி உன் இஷ்டம். இங்கை எண்டால் செலவு குறைவு” என்று மணியன் சொல்ல, “பல்லை விடு, பிறகு பாப்பம்.” என்று சொல்லிவிட்டு கதையை வேறு பக்கம் திருப்பினேன். “உன்னைக் கேக்கோணும் எண்டு நினைச்சனான். இப்ப சிறீலங்காவிலை முள் முருங்கை முற்றா அழிஞ்சு போச்சு எண்டு சொல்லுறாங்களே உண்மையோ?” மணியனிடம் இருந்து பதில் வரவில்லை. வீட்டில் காரை நிறுத்தி விட்டு “வா” என்ற ஒற்றை வார்த்தையுடன் தன் வீட்டு முற்றத்துக்கு அழைத்துப் போனான். “பார். இதுதான் முள் முருங்கை. பழைய மரம் பெருத்து உயர்ந்து நிக்கிறதாலை உன்ரை கண்ணுக்குப் படேல்லை. முள் முருங்கை மட்டுமில்லை. பனையும் வெள்ளவத்தையிலை இருக்கு. நீ மேலை இருக்கக்கை பல்கணியிலை இருந்து பார் தெரியும்” என்று சொல்லிவிட்டு, “வா சாப்பிடுவம்” என்று வீட்டுக்குள் போனான். அடுத்தநாள் மணியனின் பிறந்தநாள். கோல்பேஸ் ஹொட்டலில் மனைவி, உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடினான். அன்றுதான் நான் அந்த ஹொட்டலுக்கு முதன் முதலாகப் போனேன். வெளிநாட்டுத் தலைகள் ஹொட்டலில் அதிகமாகத் தெரிந்தன. "விரும்பியதைச் சாப்பிடு" என்று என்னிடம் சொல்லிவிட்டு நண்பர்களுடன் தன் விருந்தை அனுபவித்தான். கோல் பேஸ் ஹொட்டலில் பாரம்பரியமாக ஒவ்வொரு வருடமும் நடக்கும் கிறிஸ்மஸ் கேக் நிகழ்ச்சி நடந்தது. கிறிஸ்மஸுக்கு ஒருமாதம் முன்பே பழங்களை மது பானங்களில் ஊற வைத்து, பின்னர் கேக் தயாரிப்பார்கள். என்னிடமும் ஒரு போத்தல் விஸ்கி தந்தார்கள். பழங்களில் ஊற்றி விட்டு வந்தேன்.
  39. வேற்று மொழிக் கலப்பில்லாமல் இருந்தாலே போதும்.
  40. 1 point
    Bar இல் இருந்து Bar வேலையை பார்ப்பதனாலாக இருக்கும்.
  41. Channel 14's Israeli news anchor Lital Shemesh
  42. ஒரு பெயர் எடுப்பது எவ்வளவு கடினம் தெரியுமா......அதுவும் யாழில் "குமாரசாமி" என்னும் பெயர் எவ்வளவு வீரத் தழும்புகள், நெஞ்சில் கருத்து வடுக்கள் எல்லாம் கொண்டது என உலகறியும்.....அப்படியான ஒன்றை எதுக்காக, ஏன் மாற்றவேண்டும்......கொஞ்சம் சிந்தித்து முடிவெடுக்கவும்......! முன்பு தமிழ்சிறியும் மாற்ற வெளிக்கிட்டு தடுக்கி விழுந்த இடத்தில் இப்போ நீங்கள்....வேண்டாம் கோபால்......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.