Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  2. புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    13683
    Posts
  3. இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    6
    Points
    7596
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    32002
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/05/24 in Posts

  1. உள்ளி, இஞ்சி, மஞ்சள் எல்லா வியாதிகளையும் போக்கும் போன்ற மொட்டையான கருத்தியலை விட்டு அறிவியல் நீதியான தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும். சிறுநீரகத்தின் வேலைப் பழுவைக் குறைக்க 3 உணவுக் கட்டுப்பாடுகள் : 1. குறைவான உப்பு, சோடியம் உள்ள உணவுகளை உண்ணுதல். 2. ஒரு நாளைக்குத் தேவையான அளவான புரதம். இது அதிகமாகவும் இருக்கக் கூடாது குறைவாகவும் இருக்கக் கூடாது. இறைச்சி வகைகளைக் குறைத்து தாவர புரதங்களையும் உண்ணலாம். இறைச்சி மூலம் குறிப்பாக இரத்த இறைச்சி மூலம் இரும்பு மற்றும் அத்தியாவசிய புரதங்கள் கிடைப்பதால் முற்றாகத் தவிர்க்க வேண்டாம். கோழி மீன் வகைகள் போன்றவற்றை மாறி மாறி உண்ணலாம். 3. பொஸ்பரஸ் அதிகமான உணவுகளைக் குறைவாக உண்ணுதல் (இறைச்சி, மீன், பால் பொருட்கள், பயறு வகைகள்) இவை தவிர பொட்டாசியம் அதிகமாக உள்ள உணவுகளைப் போதிய அளவில் எடுத்துக் கொள்வதும், பழங்களையும் ஒலிவ் எண்ணை போன்ற தாவர எண்ணைகளையும் (பச்சையாக) போதிய அளவிலும் சேர்த்துக் கொள்வது நல்லது. ஒவ்வொரு நாளும் போதிய அளவு நீர் அருந்த வேண்டும்.
  2. சிவலிங்கம் மாஸ்ரரின்ர மகன்..! பெயர் சிவானந்தன். இவர் குடும்பமே ஈழ ஆதரவாளர்கள். எதிரிகளை நாமே எனக்குள் உருவாக்க வேண்டாமே..!
  3. யாழ் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்ததை நினைவூட்டும் சரத் விஜேசேகர, இலங்கையின் சுதந்திர தினத்தில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையில் நிற்பதை மறந்துவிட்டார். இதைவிட புலிகளுடன் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கலாம்.
  4. எனக்கும் இதனைப் பார்க்கும் பொழுது ஒரு mixed emotionsதான் வருகிறது. பார்வையாளர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையாக இருந்திருக்கும். இரண்டாவது, இப்படி நிறைய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு அரைகுறையாக நிறுத்தப்பட்டதால் நம்பிக்கையின்மையும் காரணமாக இருக்கலாம். மேலும் இந்த வீடியோ கூட அங்கே நடந்த முழுவிடயத்தையும் கூறவில்லை என்பதால் ஆர்வமின்மை என கூறலாமா தெரியவில்லை. திரு ராஜ் ராஜரட்ணத்திற்கு கூட வடக்கு கிழக்கு தமிழர்கள் எதில் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள், அதற்கு என்ன காரணம் என்பதும் கூட கட்டாயம் விளங்கி இருக்கும் என நம்புகிறேன். ஆனாலும் அவர் ஆரம்பிக்க நினைக்கும் விடயங்கள் பயனளிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
  5. உண்மை தான் ஆனால் சுதந்திரம் என்பது கொடி பிடிப்பது இல்லை அதாவது சிங்கம் உள்ள கொடி உந்த சிங்கம் உள்ள கொடியை இறக்கும் நாள் தான் தமிழனின் சுதந்திர தினம்
  6. இவரது கருத்தை பார்க்கும்போது நிறைய இலங்கைத்தமிழருக்கு உதவி செய்திருக்கிறார் என்று ஊகிக்கலாம். உண்மையாகவே இலங்கையில் பல்கலை கலக்கம் வரிக்கும் இலவச கல்வியை பெற்று நிறைய பேர் வெளி நாடுகளில் மிகவும் நல்ல பதவிகளில், நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். ஆனாலும் 90 % இட்கும் அதிகமானோர் இவரை போல உதவி செய்திருக்கவில்லை என்று கூறலாம். அப்படி என்றால் வடக்கு கிழக்கு மக்களின் நிலைமை இன்று இருப்பது போல இருப்பதட்கு சந்தர்ப்பம் இல்லை. எப்படியோ இப்படியான நல்ல உள்ளங்கள் இருப்பது பாராட்ட தக்கது.
  7. எங்களுக்கு சுதந்திரம் கிடைச்சிட்டு ஆனால் உங்களுடைய சுதந்திரம் பரிபோய்விட்டதே இந்தியாவிடம் சேகரா.... அதை கொஞ்சம் கவனியுங்கோ..... ஜனதிபதியை தெரிவு செய்வதே அயல் நாடும் ,உங்களை அடிமைபடுத்திய ஏனைய நாடுகளும் என்பதை நீங்கள் இன்னுமா புரிந்து கொள்ளவில்லை
  8. அலாஸ்காவில் ஏரி ஒன்று உறைந்து காணப்படும் காட்சி இது. ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதும் உறைந்து சுமார் 3 மீட்டர் அளவுக்கு தண்ணீரில் உள்ளது அப்படியே தெரிகிறது. ஏரி தண்ணீர் கண்ணாடி போன்று காட்சியளிக்கும் இந்த நிகழ்வு அரிதினும் அரிதாக பார்க்கப்படுகிறது.
  9. குளிரான கால நிலையிலும் ஒரு 20, 30 பேர் வந்திருக்கிறார்கள் - பாராட்டுக்குரியது! அதை "பாரிய ஆர்ப்பாட்டம்" என்று கனடா நாட்டு ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளதாக ஐ.பி.சி நக்கல் அடித்திருக்கிறது.
  10. அப்பா ஒரு அதிசயமான புத்தகம் தான். ஏனென்றால், இந்த புத்தகம் நமது கையில் இருக்கும் போது, அதை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. புரிந்துகொள்ள நினைக்கும் போது, அந்த புத்தகம் நம் கையில் இருப்பதில்லை. இது தான் உண்மையும் கூட. நம்முடையும் வாழ்க்கையும் ஒரு புத்தகம் தான். இந்த வாழ்க்கையின் முதல் மற்றும் கடைசி பக்கங்கள் கடவுளால் எழுதப்படுகிறது. ஆனால், நடுவில் உள்ள அனைத்து பக்களையும் நாம் தான் நிரப்ப வேண்டும். இந்த பக்கங்கள் சந்தோசத்தாலும், உயர்வினாலும், கண்ணீரின்றி, கவலையின்றி நிரப்பப்பட வேண்டும் என்றால், அதற்கு நமக்காக கஷ்டப்பட்டு, கண்ணீர் சிந்தி, நம்மை சரியான வழியில் நடத்த வேண்டும். தந்தையின் அன்போடு இணைந்து வாழ்பவர்களை விட, தந்தையின் அன்பை இழந்து அல்லது பிரிந்து வாழும் பிள்ளைகளுக்கு தான் தெரியும், தந்தையின் அன்பு எவ்வளவு பொக்கிஷம் போன்றது என்று. எத்தனையோ அறிவுகளுக்கு பிறகும், தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும் புத்தம் இப்பரஞ்சத்தில் எங்கு தேடினாலும் கண்டெடுக்க இயலாது. அந்த வகையில் நாம் எல்லாரும் கொடுத்து வைத்தவர்கள் தான். பிறந்த போது நம்மை தோள்களிலும், வளர்ந்த போதும் நம்மை நெஞ்சிலும் சுமந்து கொண்டிருக்கும் அனைத்து தந்தையர்களும் நமக்கு தெய்வங்கள் தான். [எ] https://newuthayan.com/article/அப்பா_என்பவர்_ஓர்_அதிசயமான_புத்தகம்!
  11. சிவானந்தன் சிவநாதன் இப்படி இருக்கலாமென நினைக்கிறேன் அண்ணா. தகப்பன் வல்வையை சேர்ந்தவர் . Sivananthan was born in Madduvil South near Chavakachcheri in northern Ceylon.[1] His father was a Tamil scholar from Valvettithurai and his mother was teacher of religion and science.[1] He was educated at Saraswathi Maha Vidyalayam, Drieberg College and Jaffna Hindu College (1968–75).[1][2][3] After school he joined the University of Peradeniya's Science Faculty in 1976, graduating in 1980 with a BS degree in physics.[1][3][ எனது ஞாபக சக்தி சரியாகத் தான் உள்ளது. இதுக்காகவாவது என்னை நினைத்து நானே சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கிறேன். செயயேஸ்.
  12. யாழ்கள கருத்துக்கள் எதை நோக்கி போகின்றன என்பதுக்கு இந்த திரியே சாட்சி . அந்த மனுசன் சொல்லவருவதையாவது புரிந்துகொள்ள முயற்சிக்காமல் ................. தகப்பன் வல்வையை சேர்ந்தவர் . Sivananthan was born in Madduvil South near Chavakachcheri in northern Ceylon.[1] His father was a Tamil scholar from Valvettithurai and his mother was teacher of religion and science.[1] He was educated at Saraswathi Maha Vidyalayam, Drieberg College and Jaffna Hindu College (1968–75).[1][2][3] After school he joined the University of Peradeniya's Science Faculty in 1976, graduating in 1980 with a BS degree in physics.[1][3][ https://en.wikipedia.org/wiki/Siva_Sivananthan
  13. அக்காவும் ஒரு அம்மாதான், அக்கா இருப்பவர்கள் 2 அம்மாவின் அன்பில் வளர்ந்திருப்பார்கள், நான் அதை அனுபவித்தேன், நன்றி சுவி பகிர்வுக்கு
  14. அக்காவின் அக்கறை அன்பாய் என்னை அருகிலிருத்தி வலிக்காமல் தலைவாரி வகிடெடுத்த பின்னாலே சித்திரமாய் திலகமிட்டுடுவாள் தந்தையே தடியெடுத்திடினும் தானோடி வந்து தாவியெடுத்தென்னை தன்னோடணைத்து தான் அடிவாங்கி என்துயர் போக்கிடுவாள் முழுபாவாடையை முன் இடுப்பில் சொருகி எட்டுக்கால் கோட்டில் எம்பி எம்பி ஆடுகையில் பின் எல்லோரையும் தள்ளி விட்டு எஞ்ஞான்றும் அவளே ஜெயித்திடுவாள் கபடி விளையாடுகையில் கிளிபோலப் பறந்து பறந்து காலாலே கலங்கடித்து காளையரையும் விரட்டிடுவாள் எதிர் வீட்டு முகுந்தனிடம் மட்டும் எப்போதும் சண்டையும் சச்சரவும் கேலிசெய்து கொண்டு அவன் ஓட ஓட கோலிகுண்டால் எறிந்து கொண்டு பின்னாலே ஓடுவாள் முற்றத்து மாமரத்தில் கொக்கத்டியெடுத்து முற்றிய மாங்காய்களை நான் பறிக்கையில் முன்னால் வந்த அக்காளும் தடியெடுத்து தனக்கும் ரெண்டு பிஞ்சு பறித்துக்கொண்டாள் அக்காளும் முன்போல் இல்லை குறும்புத்தனமும் குறைஞ்சு போச்சு தடியெடுத்த தந்தையும் "யாரடி அவன்" என்று தளராமல் அடிக்கின்றார் அக்காளை அன்று என்னைப் பொத்திக் காத்தவளை அருகில் நெருங்கவும் என்னால் முடியவில்லை குறுக்கேவந்த அம்மாவுக்கும் குறைவின்றி அடிவிழுது வாடிய மலர்க்குவியலாய் மண்ணில் புரளும் அக்காள் படலையை தள்ளியே பதற்றமாய் வந்தாள் மாமி தந்தையிடம் தடியைப் பிடுங்கி எறிந்தாள் உன்ர பிள்ளையை நீ அடி அல்லது கொல் -ஆனால் என்ர வாரிசை வம்சத்தை அழிக்க உனக்கேது உரிமை விக்கித்து நின்ற அப்பாவை விலக்கிவிட்டு -அக்காளை அணைத்தெடுக்கையில் அருகே வருகின்றான் முகுந்தனும் இரு இறக்கைக்குள் குஞ்சுபோல் கூடவே அக்காள் செல்ல அம்மாவின் முகத்தில் நிம்மதி, அண்ணாந்து ஆகாசம் பார்க்கிறாள்......! ஆக்கம் சுவி ......! யாழ் அகவை 26 க்காக ........!
  15. பட மூலாதாரம்,VIJAY TELEVISION/YOUTUBE கட்டுரை தகவல் எழுதியவர், அஷ்ஃபாக் பதவி, பிபிசி தமிழ் 4 பிப்ரவரி 2024 “அப்பா டீக்கடைல வேலை பாக்குறாங்க... அம்மா பீடி சுத்துவாங்க. எனக்கு பீடி சுத்த அந்தளவுக்கு தெரியாது. டாக்டர் ஆகணும்னு ஆசை. கட் ஆஃப் 196.25 இருக்கு. இப்போ 198 கிட்ட கேக்குறாங்க.” கடந்த 2016ஆம் ஆண்டு நீயா நானா நிகழ்ச்சியில் சங்கவி இதைச் சொல்லி முடிப்பதற்குள்ளேயே அவரது கண்கள் குளமாகிவிடும். சங்கவியை 2022இல் மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தது நீயா நானா குழு. அப்போது அவர் பயிற்சி மருத்துவர். “இவ்வளவு சிரமத்திலும் ஏன் கட்டாயம் படிச்சிடணும்னு நினைச்சீங்க?” என வினவினார் நெறியாளர் கோபிநாத். “படிப்பு ஒன்னுதான் சார் எல்லாருக்கும் கிடைக்குது... ஏழையா இருந்தாலும் பணக்காரரா இருந்தாலும் கல்வி கிடைக்கும். படிச்சா மட்டும்தான் குடும்பம் நல்ல நிலைமைக்கு வரும். நான் படிச்சதால மட்டும்தான் இப்போ என் குடும்பமே நல்லா இருக்கு,” என யோசிக்காமல் பதிலளித்து முடித்தார் மருத்துவர் சங்கவி. நீயா நானா கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாக் ஷோ. பல முகங்களை இந்த நிகழ்ச்சி வெளிக்கொணர்ந்துள்ளது. சமூக ரீதியான பிரச்னைகளைப் பேசியிருக்கிறது. மிக நுணுக்கமான கருத்துகளும் சிந்தனைகளும் உணர்வுப்பூர்வமான கலந்துரையாடல்களும் பல நேரம் அதிர்வுகளைக் கிளப்பியுள்ளன. அதேநேரம், நீயா நானாவுக்கு எதிர்ப்புக் குரலும் எழாமல் இல்லை. நீயா நானா இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்குவது எப்படி? இந்த நிகழ்ச்சி எப்போதும் பேசு பொருளாவதன் பின்னணி என்ன? விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை. நீயா நானா உருவான கதை பட மூலாதாரம்,VIJAY TELEVISION/TWITTER கவனிக்க வைக்கும் இசையுடன் ஒரு ஓபனிங். இன்று எதைப் பற்றி நிகழ்ச்சி விவாதிக்கப் போகிறது என்பதை நறுக்கென எடுத்துச் சொல்லும் நெறியாளர். அதன் பிறகு சூடுபிடிக்கும் விவாதம். இதுதான் நீயா நானா. நீயா நானா என்கிற நிகழ்ச்சியை உருவாக்கியவரும், இன்று வரை அதைத் தயாரித்து வரும் மெர்குரி ப்ரொடக்சன்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆண்டனியிடம் பிபிசி தமிழ் பேசியது. “தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் நீயா நானா போன்றதொரு நிகழ்ச்சி அப்போது இல்லை. டாக் ஷோ என்பது வெறும் அரட்டை எனச் சொல்வதே எனக்கு அசிங்கமாக இருந்தது. தமிழ் மக்கள் அறிவுக்கூர்மை உடையவர்கள். நீண்ட திட்டமிடலுக்குப் பிறகு ஒரு டாக் ஷோவை அறிமுகப்படுத்த நினைத்தோம். 2006 மே மாதம் நீயா நானா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி இத்தனை ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து பேசப்படுவதற்குக் காரணம் இங்குள்ள மக்கள்தான். மிகச் சிறந்த கருத்துகளை, நுட்பமான சிந்தனைகளை தமிழர்களால் எளிதாகச் சொல்லிவிட முடியும். ஆங்கிலத்தில் வரும் டாக் ஷோவில் பங்கேற்பவர்கள் சாமானியர்கள் அல்ல. மொழிப்புலமை, குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் தமிழகத்தில் அறிவார்ந்த கூட்டம் நிரம்பியுள்ளது. சாமானிய மக்களிடமும் கூர்மையான பார்வை உள்ளது. அதனால்தான் எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து வந்தவரால்கூட நீயா நானாவில் கருத்துகளை எடுத்து வைக்க முடிகிறது,” என்றார் ஆண்டனி. மேலும், சமூகத்தைத் தொடர்ந்து கவனிப்பதாகவும் அதைப் பேசவேண்டும், கேள்வி கேட்க வேண்டும் என நினைப்பதாகவும் கூறும் ஆண்டனி, "உதாரணமாக, இங்கு நவீன ஏழைகள் அதிகமாகிவிட்டனர். இங்கு பல இளைஞர்களின் வருமானம் 15,000 ரூபாயைத் தாண்டுவதாக இல்லை. அவன் பிரச்னைகளைக் கவனிக்கிறோம். அது பேசப்பட வேண்டும் என நினைக்கிறோம். அதுதான் நீயா நானா நிகழ்ச்சியாக மாறுகிறது. சமநிலையுடன் பேசுகிறது,” எனக் குறிப்பிட்டார். பிற மொழிகளில் நீயா நானா? பட மூலாதாரம்,VIJAY TELEVISION/TWITTER “நீயா நானா நிகழ்ச்சியை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு சென்று, இதர மொழிகளில் ஒளிபரப்ப திட்டமிட்டு அது தோல்வியில் முடிந்தது. அதற்குக் காரணம் அங்குள்ள சாமானிய மக்களால் பெரியளவில் தங்கள் கருத்துகளை, சிந்தனைகளை வெளிக்கொணர முடியவில்லை. அப்படி இருந்தால் ஷோவை நகர்த்த முடியாது,” என ஆண்டனி கூறுகிறார். இதேபோல நீயா நானாவை ‘காப்பி கேட்’ செய்ய முடியாது எனவும் நம்புகிறார் ஆண்டனி. “ஒரு நிகழ்ச்சியை ‘காப்பி கேட்’ செய்பவர்களால் ஜெயிக்க முடியாது. இதற்குப் பின்னால் பலரது உழைப்பும், அறிவுப்பூர்வமான தேடலும் அடங்கியிருக்கிறது. உதாரணமாக, எங்கள் நிகழ்ச்சி அரங்கைக் குறிப்பிடலாம். நீயா நானா தொடங்கிய காலத்திலேயே அது தனித்துவமாக வடிவமைக்கப்பட்டது. சாதாரண பட்டிமன்ற, விவாத நிகழ்ச்சிகளைப் போல மண்டபத்தை தேர்வு செய்யாமல், மக்களுக்காகவே பிரத்யேகமான அரங்கை அமைத்தோம். இந்த யோசனையை தலைமை தயாரிப்பாளர் பிரதீப் முன்வைத்தார். மக்களுக்கான நிகழ்ச்சியைத் தொடங்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தபோதுதான் கோபியும் கிடைத்தார். அவரும் நாம் எதை யோசிக்கிறோம், என்ன செய்ய நினைக்கிறோம் என்பதை விரைவாகவே புரிந்துகொண்டார். ஒரே நேர்கோட்டில் நீயா நானா குழு பயணிக்கத் தொடங்கியது,” என்றார் ஆண்டனி. படக்குறிப்பு, ஆண்டனி 'இது மக்களுக்கான மேடை' கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியை 17 ஆண்டுகளாக நெறியாள்கை செய்து வருகிறார் கோபிநாத். முன்பு பத்திரிகையாளராகப் பணியாற்றிய கோபிநாத், இன்று வரை நீயா நானாவுடன் பயணித்து வருவதோடு பிரபல தொகுப்பாளராகவும் அறியப்படுகிறார். பட மூலாதாரம்,GOBINATH CHANDRAN/FB படக்குறிப்பு, கோபிநாத் "அடிப்படையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதையும் கடந்து நீயா நானா பார்க்கப்படுகிறது. இது வெறும் டாக் ஷோ என்பதையும் தாண்டி மக்கள் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது" என்கிறார் இந்த நிகழ்ச்சியின் முகமாகத் திகழும் கோபிநாத். “நீயா நானா பார்க்கவில்லை எனில் அந்த நாளே முழுமையடையாது என்ற அளவுக்கெல்லாம் சிலர் என்னிடம் சொல்வதுண்டு. இதைத் தங்கள் வாழ்வியலோடு மக்கள் ஒப்பிடுகின்றனர். பெரிய நிபுணர்கள் யாரும் வந்து தங்களுக்குள் பேசி கலைந்து செல்லும் நிகழ்ச்சி அல்ல இது. முழுக்க முழுக்க இது சாமானியர்களுக்கான நிகழ்ச்சி என்பதால் எப்போதும் பேசப்படுகிறது,” என்கிறார் கோபிநாத். சமூக ஊடகங்களில் இந்த நிகழ்ச்சி குறித்த காணொளிகள் அதிகம் பகிரப்படுவதுண்டு. சில நேரம், இந்த வைரல் காணொளிகள் அதிகார மட்டத்திலும் எதிரொலித்திருக்கிறது. வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 2023ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கிடைத்த மருத்துவ சேவை குறித்து இந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அதே ஆண்டு மார்ச் மாதம் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரவியபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இந்த நிகழ்ச்சியையும் வடமாநில பெண் பேசியதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். “எதையும் நாங்கள் வைரலாக்குவதில்லை. சமூக ஊடகங்களில் ஒரு சிலர் தாமாக முன்வந்து நிகழ்ச்சியின் ஒரு சிறிய பகுதி குறித்துப் பேசுகின்றனர், காணொளிகளைப் பரப்புகின்றனர். அப்படியெனில், அவர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கிறார்கள் என்றுதானே அர்த்தம்,” என்கிறார் கோபிநாத். நீயா நானா எப்படி தயாராகிறது? படக்குறிப்பு, திலீபன் "இதர நிகழ்ச்சிகளைக் காட்டிலும் நீயா நானா தனித்து தெரிவதற்கு, நாங்கள் எப்போதும் முன்னோக்கியே யோசிப்பதும் ஒரு காரணம்" என்கிறார் இணை இயக்குநர் முத்து. “நீயா நானா இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்கிற விவாதத்தை உருவாக்கியது. திருநங்கைகளுக்கான உரிமைகள் குறித்துப் பேசியது. இப்படி யாரும் பேசாத, பேச முன்வராத விஷயங்களை விவாதிப்போம்,” என முத்து கூறினார். நிகழ்ச்சியின் தயாரிப்புப் பணிகள் குறித்து தற்போதைய இயக்குநர் திலீபனிடம் பேசினோம். நீயா நானாவுடனான திலீபனின் பயணம் மிக நீண்டது. 2006இல் உதவி இயக்குநராகப் பணியாற்றத் துவங்கிய அவர், 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது வரை நீயா நானா நிகழ்ச்சிக்காகப் பணியாற்றி வருகிறார். 2017 முதல் நீயா நானாவின் இயக்குநராகச் செயல்படுகிறார். "ஒரு மாதத்திற்கு முன்பே தலைப்பை முடிவு செய்துவிடுவோம். தலைப்பையொட்டி ஆய்வுகளை மேற்கொள்வோம். அதற்கேற்ப பேசுவோரை அழைக்கிறோம். பெரும்பாலும் நிகழ்ச்சியில் பேச ஆர்வம் உள்ளவர்கள் எங்களைத் தொடர்பு கொள்வார்கள். சில நேரங்களில் எங்கள் செய்தியாளர் குழு பொருத்தமானவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து வருவார்கள். ஒரேநாளில் 2 எபிசோட்கள் வீதம் வாரத்தில் 6 எபிசோட்களை ஷூட் செய்துவிடுவோம். நிகழ்ச்சி 3 முதல் 4 மணிநேரம் வரை செல்லும். படத் தொகுப்பில் ஒரு மணிநேரமாக சுருக்கிக்கொள்வோம்," என திலீபன் கூறினார். நீயா நானாவும் சர்ச்சைகளும்... பட மூலாதாரம்,VIJAY TELEVISION/TWITTER ஜூலை 2022இல் சமூக ஊடகங்களில் பிரபலமாக விரும்புவோருக்கும் பொதுமக்களுக்கும் இடையே விவாதம் நடந்தது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் சில விமர்சனங்களும் எழுந்தன. நீயா நானா நிகழ்ச்சி நடந்த விதம் குறித்து அதிருப்தி தெரிவித்து யூடியூபர்கள் சிலர் காணொளிகளை வெளியிட்டனர். "தலைப்பைக் குறிப்பிடாமலேயே நிகழ்ச்சியில் பேச அழைத்தனர். நிகழ்ச்சி தாமதமாகத் தொடங்கியது. நாங்கள் பேசியது நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவில்லை," என்பது அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. நிகழ்ச்சிக்கு எதிராகப் பேசியவர்களைத் தற்போது தொடர்பு கொண்டோம். ஆனால் பதிலளிக்கவில்லை. Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு "யாருக்கும் நாம் சார்புடையவர்கள் அல்ல. இது மக்களுக்கான மேடை என்பதால் எதிரெதிர் திசையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் கருத்துகளைப் பறிமாறிக்கொள்ள வாய்ப்பளிக்கிறோம். தலைப்புக்கு ஏற்றவாறும் நெறியாளரின் கேள்விக்குத் தகுந்த பதிலை அளிப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்குகிறோம். சிலர் சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டே செல்வார்கள். அதை படத்தொகுப்பில் சரி செய்துவிடுவோம்," என்றார் இயக்குநர் திலீபன். கடந்த 2017ஆம் ஆண்டில் தமிழ் – கேரளா பெண்கள் இருவருக்கு இடையிலான விவாத நிகழ்ச்சியும் கடுமையான சர்ச்சைக்கு வித்திட்டது. நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானதும், மகளிர் அமைப்புகள் இந்த நிகழ்ச்சி, பெண்களை அழகுப் பொருளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. எதிர்ப்பு வலுத்ததால் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. 'நீயா நானாவே தெரியாது; ஆனால் வாழ்க்கை மாறுச்சு' பட மூலாதாரம்,VIJAYTV கடந்த 2016ஆம் ஆண்டின் ஒரு நீயா நானா நிகழ்ச்சியில், மருத்துவராக வேண்டும் என கண்ணீரோடு நா தழுதழுக்கப் பேசி, தற்போது மருத்துவராகவே ஆகிவிட்ட சங்கவியிடம் பேசினோம். “நீயா நானா என்கிற நிகழ்ச்சி பற்றி எனக்கு அப்போது எதுவுமே தெரியாது. வீட்டில் தொலைக்காட்சி இல்லாததும் ஒரு காரணம். பக்கத்து வீட்டு அண்ணன் மூலமாகத்தான் நிகழ்ச்சிக்குச் சென்றேன். நான் பேசியது இந்தளவுக்கு ’ரீச்’ ஆகும் என நினைக்கவில்லை. நாங்கள் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. என் வாழ்க்கையை மாற்றிய தருணம் அது,” என்றார் சங்கவி. “பேசுவதற்கு நேரம் இல்லை என்கிற குறையும் அவ்வப்போது எழுவதுண்டுதான். ஆனால் எல்லோரும் கலந்துகொள்ளும் இடமாக நீயா நானா இருந்திருக்கிறது,” என பெண்கள் செயற்பாட்டாளரும் பத்திரிகையாளருமான கவின் மலர் கூறுகிறார். “நீயா நானா தேர்வு செய்யும் தலைப்புகள் சில நேரங்களில் மேலோட்டமாகவும் இருந்திருக்கிறது. சமூகத்தில் பேச வேண்டியது நிறைய இருக்கும்போது இதை ஏன் விவாதிக்கிறார்கள் என்றுகூட விமர்சனங்கள் எழும். தமிழ் பெண்கள் vs கேரள பெண்கள் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகவிருந்த சமயத்தில் அதைக் கடுமையாக விமர்சித்தவர்களில் நானும் ஒருவர். அதேநேரம், விமர்சித்தவர்களாக இருந்தாலும் பின்னாட்களில் நிகழ்ச்சியில் பங்கேற்க நீயா நானா குழு அழைத்திருக்கிறது,” என கவின் மலர் கூறுகிறார். 'கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்' பட மூலாதாரம்,KAVIN MALAR/FB படக்குறிப்பு, கவின் மலர் “வடமாநில தொழிலாளர்கள், திருநங்கைகள் எனப் பலருக்கும் மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறது. திருநங்கை சார்ந்த உரையாடல்கள் மட்டுமின்றி இதர தலைப்புகளில் விவாதிக்கும்போதுகூட அனைவரையும் உள்ளடக்கிய நிகழ்ச்சியாக, திருநங்கைகள் பேச இடமளித்திருக்கிறது. ரியாலிட்டி ஷோக்கள் பெரும்பாலும் செயற்கைத்தனமாக ஒருவரை அழ வைத்து, பின்னணி இசையில் ஒளிபரப்பும். ஆனால் நீயா நானா இதில் விதிவிலக்கு. சாதித் திமிருடன், மத துவேசத்துடன், பெண்களைப் பற்றி இழிவாக, பிற்போக்குத்தனமான அல்லது ஆட்சேபகரமான கருத்துகளை பங்கேற்பாளர்கள் கூறினால், கோபிநாத் மெளனம் காக்காமல் உடனடியாக பதில் பேசி தெளிவுபடுத்துவது நல்ல விஷயம் என நினைக்கிறேன். நீயா நானா நிகழ்ச்சியை மக்கள் குடும்பமாக அமர்ந்து பார்க்கின்றனர். கூடுதல் பொறுப்புணர்வுடன் குழுவினர் செயல்பட வேண்டியது அவசியம்,” என்கிறார் கவின் மலர். https://www.bbc.com/tamil/articles/cd1le9qwgjlo
  16. Economic growth is the key to recovery | Raj Rajaratnam speech at Jaffna University
  17. இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் உதவி என 118 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை வெளியிட்டது அமெரிக்க செனட் ! எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்கும் மற்றும் இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் போர்க்கால உதவியை வழங்கும் வகையிலும் அமெரிக்கா 118 பில்லியன் டொலர் ஒப்பந்தம் ஒன்றினை எட்ட தீர்மானித்துள்ளது. பல மாதங்களாக குடியேற்ற பிரச்சினை மற்றும் கியிவ் ஆதரவு தொடர்பான சர்ச்சைகளுக்குப் பின்னர் குறித்த சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்றுமாறு ஜனாதிபதி ஜோ பய்டன் காங்கிரஸை வலியுறுத்தியுள்ளார். உக்ரைனை போர்க்கால உதவியுடன் மீண்டும் வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் செனட்டில் உள்ள ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதேநேரம் மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றங்களைச் சமாளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பழமைவாத குடியரசுக் கட்சி தொடந்து வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட சட்டமூலத்தில் உக்ரைனுக்கு 60 பில்லியன் டொலர் உதவியும் இஸ்ரேலுக்கு 14.1 பில்லியன் டொலர் இராணுவ உதவியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1368425
  18. நல்ல தம்மசு...2009 ல் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் கலந்து டொரொன்ரோ மாநகரையே அதிர் வைத்தவர்கள்..அப்போது சி .ரி .சி இன் செயலாளர் செய்த கரணமடிப்பால் சன்ம் நம்பீகை இழந்தார்கள்.. அதன்பின் படிப்படியாக நடந்த சம்பவங்களால் ..சி.ரி.சி நம்பிக்கை இழக்கத் தொடங்கியது...அது இப்பொது முற்று முழுதாக ..இழந்துவிட்டது...இந்த விபரங்களை ஆதாரத்துடன் பதிவிடமுடியும்...அது எனக்கு தேவையற்ற விடையம்... ஒரு யூ டியூப்பை பிரட்டி பிரட்டி முகம் தேடியும்...ஆள் எண்னும் தன்மை கொண்ட உங்களை நம்பி யாழில் கருத்திடுவது எவ்வளவு ஆபத்தானது...இப்படிப்பல காரணம் இருக்கும்...பல காலத்துகு முன்னர் கூட ஒரு சூடான திரியில்.. (நானல்ல) பலருக்கு மிரட்டல் சவால் கூட விட்டதை ..நான் வாசித்திருக்கின்றேன்..இந்த யாழில் பலரும் பல கருத்தை ..சொல்வர் ..அதற்காகவன்முறையாளான் என்று கை நீட்டமுடியுமா...ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்திருக்கும் ..உங்கடை கை குற்றவாளீ என்று சுட்டுவதுதான் தப்பு.. இங்கு கனடாவில் ஒருவர் கெட்கின்ற கேள்விகட்கு விடைதரார்..கேள்வி மேல் கேள்வி கேட்டுஅவரைப்பற்றிய தரவுகள் சேர்ப்பதே அவர்வேலை..அவர் இடைக்கிடை மிரட்டல் விடுவார்...கொலஐ மிரட்டல்கூட..இலகுவாக விடுவார்... உண்மையில் இந்த யாழ்களம் சிலஆன்ன்டுகளுக்கு முன்னர் ஆக்க பூர்வமான தளமாகவே காண்ப்பட்டது...இப்போது புலனாய்வுத் தளமாகிவிட்டது என்பதுதான் வேதனை...நேற்றையில் இருந்துந்து யாழில் நுழைவதுஇல்லை என்று ..நினைத்திருந்தேன்...வேலையி இருக்கையில் ஒரு மொனிட்டர் யாழைக்காட்டி விட்டது...அதும் இந்த்தப் பதிவை பார்த்தௌம் பதில் எழுத வைத்துவிட்டது...நிவாகிகளுக்குக்கூட இது பிடியாமல் போகலாம்..அவர்களாௐஆ விலத்தினால்கூட சந்தொசமாக விடை பெறுவேன்...நன்றி
  19. துரோகி என யாழ் களத்தில் நேர்டியாக குற்றம் சாட்டவில்லை என நான் நினைக்கிறேன்... இனி இவரை துரோகி என தமிழ்ர்கள் கூறுவார்கள் என சிலர் தங்கள் விசமதனமான கருத்தை கூறி பின் அதை தாங்களே விவாதிப்பது போல் எனக்கு புரிகின்றது
  20. காலம் பதில் சொல்லும்.....என்பது இதை தான்... இவரது கட்சி பிரதிநிதிகள் ஒருகாலத்தில் 77/83 இனகலவரங்களின் பொழுது "அப்பட்ட எப்பா மசால வட ,தோசை,பருப்பு" என கூறி தமிழர்களை புறந்தள்ளியவர்கள் தமிழர்கள் ஊடாக இந்தியா தமது விரிவாக்கத்தை செய்யும் என சிங்கள மக்களை தூண்டிவிட்டவர்கள் இந்திய பொருட்களுக்கு தடை விதிக்க வேணும் பிரச்சாரம் செய்தவர்கள் இவர்களின் முன்னாள் தோழர்களை (71 ஆம் ஆண்டு) அழித்து சிரிமாவின் ஆட்சியை காப்பாற்றிய இந்தியாவுடன் பேச்சுவார்த்தை..... தமிழர் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுப்பதை விட சிங்கள இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுத்தால் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தலாம் என இந்திய‌ புலனாய்வு அதிகாரிகள் நினைக்கின்றனர் போலும் நீ ஆட்சிக்கு வந்தால் முதலில் எங்க நாடுக்குத்தான் முதல் உத்தியோக விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் ....பீளிஸ்....மாலை தீ ஜனாதிபதி செய்தது போல் வேறு நாடுகளுக்கு போய் விடாதே .....
  21. குறிப்பிட்ட அமைப்பினர் மீது ஏற்கனவே அமெரிக்கா தாக்குதல் தொடங்கிவிட்டது, இதனை ஒத்த ஒரு சம்பவம் 90 களில் சோமாலியாவின் தலைநாகர் பகுதியில் அமெரிக்க இராணுவத்தினால் விமான தரையிறக்கம் மூலம் நடத்தப்பட்டு அது தோல்வியில் முடிவடைந்தது, சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சோமாலியரை சந்தித்த போது அந்த விபரம் கேட்டேன், அவர் பிறப்பதற்கு முன்னர் இச்சம்வம் நிகழ்ந்தாக குறிப்பிட்டார் அந்த விபரம் தெரியவில்லை ஆனால் ஒரு புதிய தகவல் ஒன்றினை கூறினார் அதனை வழமையான ஒரு சதிக்கோட்பாட்டு விடயமாக கடந்து சென்றுவிட்டேன், அவர் கூறிய விடயம் சோமாலியாவின் இயற்கை வழங்கல்களை சுரண்டும் பல மேலைத்தேய நிறுவனங்களு க்கும் அங்குள்ள குழுக்களுகும் உள்ள வாய்க்கால் தகராறின் வெளிப்பாடு என்பதானது. 1953 இல் ஈரானில் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியினை கலைத்து மீண்டும் அரச ஆட்சியாளர்களை சி ஐ ஏ ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு பிண்ணணியில் அந்த மக்களாட்சிக்கும் இங்கிலாந்து எரிபொருள் நிறுவனமான வி பி நிறுவனத்திற்குமிடையேயான தகராறு காரணம் என கூறப்படுகிறது. ஆனால் நீங்கள் கூறும் இக்குழுக்களின் பிண்ணனியில் ஈரான் இருப்பதால் அமெரிக்கா ஈரானை தாக்கிறதா என தெரியவில்லை, ஆனால் இந்தியர்கள் இந்த மத்திய கிழக்கு பிரச்சினக்கு பின்னால் சீனா இருப்பதாக நம்புகிறார்கள். இவற்றை பற்றி இந்த திரியில் பேசுவதனை தவிர்க்கிறேன் ( திரியின் தலைப்பிலிருந்து வேறுபட்ட விடயம்), ஏனெனில், பின் எனது கருத்தும் ஒரு கள உறவு ஒன்று கூறும் கருத்து போல சம்பந்தா சம்பந்தமில்லாமல் இருக்கும். அண்மையில் ஒரு பிறந்ததின நிகழ்வொன்றிற்கு சென்றிருந்தேன், பெருமளவில் குழந்தைகளும் பெண்களும் மட்டும் அந்த பார்க்கில் இருந்தார்கள்,நண்பரின் தந்தையுடன் சேர்த்து 4 ஆண்கள் மட்டும் ஓரிடத்தில் இருந்தார்கள், வேறுவழியின்றி அவர்க்ளுடன் போய் அமர்ந்து கொண்டேன் அதில் அனைவரும் என்னை விட வயது கூடியவர்கள், ஒருவர் மட்டும் எனது வயதொத்தவராக இருந்தார், அதுவும் அவர் தன்னை எனது அண்ணனுடன் படித்தவர் என அறிமுகப்படுத்திய பின்னரே உணர்ந்து கொண்டேன். சிறிது நேரத்தின் பின்னர் அவரை விட ஒரு வயது கூடிய ஒருவரின் பெயரினை கூறி நிங்கள் அவருடன் படித்தீர்களா என கேட்டார், இல்லை அவர் எனது மற்ற அண்ணாவுடன் படித்தவர் எனகூற இன்னுமொரு பெயரை கூறி அவருடன் படித்தீர்களா என கேட்டார் இப்போது எனக்கு குழப்பமாகிவிட்டதுஅவர் முன்னர் கூறியவரை விட இரண்டாவதாக கூறியவருக்கு இன்னொரு வயது அதிகம், ஆரம்பத்தில் எனது அண்ணனுடன் படித்தவர் என அறிமுகம் செய்துவிட்டு எதற்காக இப்படி குழப்பமாக கதைக்கிறார் எனக்கு அதிர்ச்சி, ஒருவாறு, நீங்கள் எனது அண்ணாவுடன் படித்தவர் என கூறிய பின்பு தனது தவறை உணர்ந்து கொண்டார். எந்த திரியானாலும் ஒரே விதமான கருத்தினை தொடர்ந்தும் பதிகிறார், நீங்கள் உள்ளடங்கலாக பலரும் அவரது கருத்தினை கண்டும் காணாமலும் கடந்து செல்வதனை போலவே நானும் கடந்து செல்வதுண்டு ஆனலும் மனதளவில் அனைத்து கள உறவுகளையும் மதிப்பதுண்டு முடிந்தவரை அனைத்து கள உறவுகளின் கருத்திற்கும் பதிலழிப்பதுண்டு, அனைவரிலும் கரிசனை உண்டு.
  22. திராவிடம் என்றதும் கிண்டல் செய்பவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள பொறுமையாக வாசிக்க வேண்டிய கட்டுரை. அரசியல் ஊழல் மோசடிகளைத் தாண்டி திராவிட இயக்கங்கள் மக்களுக்கு அறிவியல் சிந்தனையைத் தூண்டியதன் மூலமே தமிழ்நாடு சமூகவியல் பொருளாதார முன்னேற்றத்தை அடைவதில் முக்கிய பங்காற்றியுள்ளது என்று நம்புகிறேன். திராவிடக் கொள்கைகள் மூலம் தமிழர் இன்று உலகளவில் தலைநிமிர்ந்து நிற்பதையிட்டுப் பெருமைப்பட வேண்டும். நியூயோர்க் டைம்ஸ் பத்திதிகை புகழாரம் சூட்டியதால் அப்படி எண்ணுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஐடி , பொருளாதார முன்னேற்றங்கள் மட்டுமல்லாது சமூகவியல் முன்னேற்றம் போன்றவற்றையும் கணிப்பில் எடுத்துள்ளனர். 1960 களின் பின்னரே மாற்றங்கள் உருவானதாகவும் பெண்கள் உரிமைப் போராட்டமும் அன்றே வலுவடைந்ததாகவும் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது
  23. அக்கா, தம்பிக்கு இன்னும் ஒரு அம்மா
  24. மாதங்களில் நான் மார்கழி. வீதியெங்கும் மாவிலைத் தோரணங்கள் வாசலெல்லாம் வண்ணக் கோலங்கள் பூசணிப் பூக்கள் மத்தியிலே சாணியில் பிள்ளையார் பூவினிலே மெல்லிய பனியுடன் மழைக்காலம் வகை வகையாய் பறவைகள் இசைக்கோலம் நிரை நிரையாய் எறும்புகள் ஊர்வலம் அவசர கதியில் மாந்தர் நகர்வலம் கோடை முடிந்தால் வந்திடும் மார்கழி வாடைக்காற்றும் வந்து வாட்டிடும் பீடை மாதமென்பார் பேதையர் சாடையினால் தை பிறக்கட்டுமென்பர் சோதிடர் பெருவிழாக்கள் குறைந்தாலும் திருவிழாக்கள் களை கட்டும் ஓதுவார் இறைபுகழ் ஓதிச் செல்ல சாதுக்கள் பஜனையில் கூடிச்செல்வர் அடிகளின் திருவெம்பாவை திக்கெட்டும் ஒலிக்க கோதையின் திருப்பாவை காற்றினில் தவழுவதால் மாதங்களில் நான் மார்கழி என்றே பகல்கின்றான் மாதவனும் .......! ஆக்கம் : சுவி ......!
  25. இல்லை புங்கை, அப்பொழுது நீங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்திருக்கிறீர்கள் ........இப்பொழுது பண்பட்டு விட்டீர்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.......! 😂 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ......!
  26. மிகவும் அழகிய கவிதை, சுவியர்..! குளிர் அறியாத காலத்தில்....மார்கழி மாதம் மனதைக் கவர்ந்தது என்பது உண்மை தான்...! மார்கழியைக் குழந்தையாக்கிய குளிர்களைக் கண்ட பின்னரும், மார்கழியின் காதல் இன்னும் மாறவில்லை..! மார்கழி என்றவுடன், வேற வேற நினைவெல்லாம் வருகுது..! வெட்கம் கெட்ட மனசு..!
  27. இஸ்ரேல் மட்டுமில்லை. நிறைய நாடுகள் பதிக்கப்பட்டுள்ளன. அதாவது சூயஸ் கால்வாயுடான கப்பல் பயணம் 40 % ஆல் குறைவடைந்துள்ளது. அதாவது இஸ்ரேல் அல்லாத மற்றைய நாடுகளுக்கான பயணங்களும் தடைபட்டுள்ளன. எனவே இது மற்றைய நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் நடவடிக்கை. எனவே இது விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும். அன்கொன்றும் , இன்கொன்றுமாக நடந்தாலும் முடிவு உண்டாகும்.
  28. மலர்கள் கேட்டேன் & நிலா காய்கிறது -- சுகன்யா வரதராஜன்
  29. 1) அது சிங்களத்தின் சாணக்கியம்,. அவர் போன்ற ஆழுமைகளைப் பயன்படுத்த முடியாமல் வைத்திருப்பது எங்கள் சாபக்கேடு. 2) எனது நளினம் எனது இனத்தைப் பார்த்து அல்ல. துரோகி முத்திரை குத்தும் ********* பார்த்து. 3) ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு 4) ✅ உங்கள் சிந்தனை பிறருக்கும் பரவ வாழ்த்துக்கள். 🙏 5) உங்கள் -1 க்கான காரணம் நியாயமானது. . ஆனாலும், நிலத்தில் நன்மை நடைபெறுவதற்கு குறுக்கே நிற்கும் எல்லோரையும் மிகக் கடுமையாக எதிர்ப்பதென்று முடிவெடுத்துள்ளேன்.
  30. இந்த வருட சுதந்திர நாள் கொண்டாத்திற்கு புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களை அழைத்து படம் காட்டுவதில அந்த நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகம் மிகவும் முனைப்புடன் செயல் பட்டது
  31. இவர் படிக்கும் போது ஒரே வகுப்பில் நானும் பின் வாங்கில் இருந்தேன். மிகவும் பெருமையாக உள்ளது. இவரது பெயர் சிவானந்தன் என்றே இன்னமும் ஞாபகம் உள்ளது. சிங்களம் எப்டியெல்லாம் சுழியோடுகிறது.
  32. மாதுரு ஓயா அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்திற்கு முற்றான ஆதரவினை வழங்கிய அரச இயந்திரம் மாதுரு ஓயாச் சிங்களக் குடியேற்றத்தின் நாயகர்கள் காமிணியும் ஜெயவர்த்தனவும் மாதுரு ஓயா பகுதியில் பிக்கு தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சிங்களவர்களின் அடாத்தான நிலஅபகரிப்பிற்கு அரசால் வெளிப்படையாக ஆதரவு கொடுக்க முடியவில்லை. தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட கலவரங்களுக்குப் பின்னரும் ஜெயவர்த்தனவை ஆதரித்து நின்ற ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் கூட மாதுரு ஓயா ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. திட்டமிட்ட இனக்கலவரங்களினால் சர்வதேச அனுதாபத்தினைப் பெற்றுவந்த தமிழர்களுக்கு மாதுரு ஓயாவின் ஆக்கிரமிப்பை அரசு ஆதரிப்பதென்பது அவர்களது நிலையினை இன்னும் பலப்படுத்தியிருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்தியாவையும் இது ஆத்திரப்படுத்தியிருக்கும். ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும் மாதுரு ஓயா ஆக்கிரமிப்பை இரகசியமாக, மெதுமெதுவாகவே செய்ய விரும்பியிருந்தனர். ஆனால், மகாவலி அபிவிருத்திச் சபையில் பணியாற்றிய சிலர் மிகவும் வெளிப்படையாகவும் மூடத்தனமாகவும் மிகப்பெரிய செயற்பாடு ஒன்றினை முன்னெடுத்ததன் மூலம் ஜெயாரின் திட்டத்தினைப் போட்டுடைத்துவிட்டனர். இது ஜெயாரின் அரசையும் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியிருந்தது. புரட்டாதி 8 ஆம் திகதி தேவநாயகம் கூட்டிய பத்திரிக்கையாளர் சந்திப்பு அவர் எதிர்பார்த்ததற்கு நேர் எதிரான விளைவினை ஏற்படுத்தியிருந்தது. மாதுரு ஓயாவின் சிங்கள ஆக்கிரமிப்பை மகாவலி அபிவிருத்தி அமைச்சு துரிதப்படுத்தியது. திம்புலாகலை பிக்குவை அணுகிய அதிகாரிகள், சிங்களக் குடியேற்றத்தினைத் துரிதப்படுத்துமாறு கோரினர். பிக்குவும் மிக வெளிப்படையாகவே இக்குடியேற்றதைச் செயற்படுத்தத் தொடங்கினார். அதன் ஒரு அங்கமாக தவச எனும் சிங்கள நாளிதழில் விளம்பரம் ஒன்றினை வெளியிட்ட திம்புலாகலை தேரை, மகவலி நீர்ப்பசணத் திட்டத்தின் மூலம் நண்மையடையப்போகின்ற காணிகளில் விவசாயம் செய்ய விரும்புவோர் தன்னைத் தொடர்புகொள்ளலாம் என்கிற அறிவிப்பினை அந்த விளம்பரம் தாங்கி வந்தது. மேலும், நாட்டிலுள்ள அனைத்து பெளத்த‌மத பீடங்களின் நாயக்கர்களுக்கும் திம்புலாகலை பிக்கு அனுப்பிய கடிதத்தில் தத்தமது பகுதிகளில் இருந்து குறைந்தது இரு காணிகளற்ற விவசாயிகளையாவது தெரிவுசெய்து தருமாறு கேட்டிருந்தார். இவ்வாறு 700 காணிகளற்ற சிங்கள விவசாயிகளைச் சேர்த்துக்கொண்டு மாதுரு ஓயாவிற்குச் சென்றார் திம்புலாகலை தேரை. இவரது இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை மட்டக்களப்பு அரசாங்க அதிபரையும், ஏனைய அதிகாரிகளையும் அதிர்ச்சியடையச் செய்திருந்தது. தமிழர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட காணிகளை ஆக்கிரமித்து நின்ற 700 சிங்கள விவசாயிகளையும், பிக்குவையும் அவ்விடத்தில் இருந்து அகன்றுவிடுமாறு அரசாங்க அதிபர் கோரியபோது அவர்கள் அவரைச் சட்டை செய்யவில்லை. அரசாங்க அதிபர் பொலீஸாரின் உதவியை நாடியபோது அவர்களும் கைவிரித்து விட்டனர். ஆகவே, வேறு வழியின்றி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் கல்க்குடா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அமைச்சர் தேவநாயகத்திற்கு இதுகுறித்த கடிதம் ஒன்றினை அரசாங்கதிபர் அந்தோணிமுத்து அனுப்பிவைத்தார். தமிழர் காணிகளை அடாத்தாகக் கைப்பற்றி ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட திம்புலாகலைப் பிக்குவின் உருவச்சிலையினைத் திறந்துவைக்கும் போர்க்குற்றவாளி சவீந்திர சில்வா மகாவலி அபிவிருத்திச் சபையும் வெளிப்படையாகவே தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது. திம்புலாகலை விகாரையிலிருந்து மாதுரு ஓயா ஆக்கிரமிப்புப் பகுதிக்கு சிங்கள விவசாயிகளை ஏற்றிச்செல்ல அமைச்சின் பாரவூர்திகளை அமைச்சு அனுப்பி வைத்தது. இப்பகுதியில் அத்துமீறிக் குடியேறும் சிங்கள விவசாயிகள் வீடுகளை அமைக்கவென தடிகள், பிளாத்திக்கு துணிகள், வேயப்பட்ட ஓலைகள் மற்றும் ஏனைய கட்டடப்பொருட்களையும் அமைச்சகத்தின் பாரவூர்திகள் கொண்டுவந்து சேர்த்தன. இதற்கு மேலதிகமாக சீமேந்துப் பக்கெற்றுக்களும் ஏனைய பொருட்களும் அமைச்சகத்திலிருந்து இப்பகுதிக்கு ஏற்றிவரப்பட்டன. மகாவலி ஆற்றில் பணியில் ஈடுபடுத்த வரவழைக்கப்பட்ட உழவு இயந்திரங்களும், புல்டோசர்களும் மாதுரு ஓயாப் பகுதியில் சிங்களவர்கள் அடாத்தாகப் பிடித்து வைத்திருக்கும் காணிகளை துப்பரவாக்கி சமப்படுத்தும் பணியில் அமர்த்தப்பட்டன. புரட்டாதி 15 ஆம் திகதி தேவநாயகத்துடன் மீண்டும் தொடர்புகொண்ட அரசாங்க அதிபர் அந்தோணிமுத்து, மாதுரு ஓயாவில் அத்துமீறி நுழைந்து, தமிழர் காணிகளைக் கைப்பற்றி இருக்கும் சிங்களவர்களின் தொகை 40,000 ஆக உயர்ந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார். ஆகவே தனது இரண்டாவது பத்திரிக்கையாளர் சந்திப்பினை மறுநாளே கூட்டிய தேவநாயகம் நிலைமை மிகவும் மோசமாகி வருவதாகக் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் இந்த நிலைமையினால் மிகுந்த அதிருப்தியடைந்து வருவதாகவும் மோதல்கள் உருவாகும் சூழ்நிலையொன்று உருவாகி வருவதாகவும் அவர் கூறினார். மகாவலி அபிவிருத்தி அமைச்சு சூழ்ச்சிகளில் ஈடுபட்டிருப்பதாக தேவநாயகம் குற்றஞ்சாட்டினார். தனது குற்றச்சாட்டினை நிரூபிக்க புகைப்பட ஆதாரங்களை அவர் காட்டினார். மகாவலி அமைச்சுக்குச் சொந்தமான பாரவூர்திகள் விவசாயிகளையும், கட்டடப் பொருட்களையும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்குக் கொண்டுவந்து இறக்குவதைப் புகைப்படங்கள் காட்டின. மேலும், மகாவலி அமைச்சின் அதிகாரிகள், பணியாளர்கள், ஒப்பந்தக் காரர்கள் என்று பெரும் பட்டாளமே இக்குடியேற்றத்தை செயற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவருவதையும் புகைப்படங்கள் காட்டியிருந்தன. புகைப்படங்களுக்கு மேலாக இந்த செயற்பாடுகளை நேரடியாகக் கண்டவர்களும் ஊடகவியலாளர்களிடம் தமது சாட்சியத்தைப் பகிர்ந்துகொண்டனர். மாதுரு ஓயாவில் தற்போது காணப்படும் நிலைமை அப்பகுதியில் பாரிய விழா ஒன்று நடைபெற்றுவருவது போன்று காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். "நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் திம்புலாகலை விகாரைக்கு மக்கள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றனர். பாரவூர்திகளும், மினிவான்களும் மக்களை கொண்டுவந்து இறக்கிக் கொண்டிருக்கின்றன. அங்கிருந்து மாதுரு ஓயாவின் பல பகுதிகளுக்கு அம்மக்களை மகாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளே அனுப்பி வைப்பதோடு அம்மக்களுக்குத் தேவையான கட்டடப் பொருட்களையும் கொடுத்து வருகின்றனர். துப்புரவு செய்யப்படும் காணிகளில் மக்கள் தங்குமிடங்களை அமைத்துக்கொள்ள அதிகாரிகளே உதவுகின்றனர். பல தனியார் அமைப்புக்கள் இம்மக்களுக்கான உணவுப் பொட்டலங்களை விநியோகித்து வருகின்றனர்" என்று பொலொன்னறுவைக்கான லேக் ஹவுஸின் நிருபர் கூறினார். . திம்புலாகலை விகாரை மகவலி அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரிகளின் திரைக்குப் பின்னரான இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றிய வதந்திகள் கொழும்பின் உயர்வர்க்க மட்டத்தில் பரவிவரத் தொடங்கின. மேலும் இத்திட்டத்தின் நடத்துனராகச் செயற்பட்டு வந்த ஹேர்மன் குணரட்ண மகவலி அபிவிருத்தி அமைச்சரான காமிணி திசாநாயக்கவிடம் மாதுரு ஓயாச் சிங்கள குடியேற்றத்திற்கு இராணுவப் பாதுகாப்பினை வழங்குமாறு கோரியபோதும், இராணுவத்தினருக்கு வேறு வேலைகள் இருக்கின்றன என்று கூறி காமிணி அக்கோரிக்கையினை நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் வந்தன. குணரட்ணவிடம் பேசிய காமிணி இராணுவத்திற்குப் பதிலாக வேறு ஒழுங்குகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் இத்திட்டத்தின் பிதாமகர்களில் ஒருவரான பண்டிதரட்ண, பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புகொண்டு ஆடிக் கலவரத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்ததற்காகவும் பல தமிழர்களைக் கொன்றதற்காகவும் பதவியிலிருந்து விலக்கப்பட்ட‌ கடற்படைவீரர்களை, சட்டவிரோதமாக நடந்துவந்த மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கேட்டுக்கொண்டதாகத் தெரிய வருகிறது. மிகுந்த கோபத்துடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேவநாயகம் எச்சரிக்கை ஒன்றினையும் அங்கு விடுத்தார். "மீண்டுமொருமுறை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இனமோதல் ஒன்று ஏற்படுவதைத் தடுக்க வேண்டுமானால், மாதுரு ஓயாவில் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வரும் சிங்களவர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். எனது கோரிக்கைகுச் சாதகமான பதில் ஒன்றினை இந்த அரசாங்கத்தினால் தரமுடியாது போனால் நான் எனது பதவியில் இருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார். தேவநாயகத்தின் இந்த எச்சரிக்கைகள் ஊடகங்களில் வந்ததையடுத்து ஜெயார் கோபப்பட்டார். இன்னொரு இனக்கலவரத்தையோ அல்லது தேவநாயகம் விலகிச் செல்வதையோ ஜெயாரினால் அப்போது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. தமிழர்கள் தனது ஆட்சியில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்று சர்வதேசத்திற்குக் காட்டுவதற்கு தேவநாயகமே ஜெயாருக்கு உதவிவந்தார். தேவநாயகமும், தொண்டைமானுமே தமிழர்கள் மீது ஜெயார் கருணையுடன் இருக்கிறார் என்று காட்டுவதற்காகப் பாவிக்கப்பட்ட நடிகர்களாக அன்று இருந்தார்கள். தேவநாயகத்தின் பதவி விலகலும், இன்னொரு இனக்கலவரமும் மாதுரு ஓயாச் சிங்களக் குடியேற்றத்தின் பின்னால் தான் இருப்பதை உலகிற்குக் காட்டிவிடும் என்று அவர் அஞ்சினார். ஆகவே, தேவநாயகத்துடன் நேரடியாகப் பேசிய ஜெயார், "நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் பொறுமையாக இருங்கள்" என்று கெஞ்சினார்.
  33. முதலாவது சுய ஆக்கத்தைப் கவிதையாகப் பதிவிட்ட சுவி அண்ணாவுக்கு வாழ்த்துகள்.
  34. இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிச்சை எடுக்கும் சிங்கம்.
  35. அமெரிக்கா மேற்குநாடுகளின் கதை முடிய வேண்டும். ஈரானின் இன்பம் மிகுந்த ஆட்சி உலகு எங்கும் மலரவேண்டும் அதற்கான ஆற்றலையும் உறுதியையும்கடவுள் ஈரானுக்கு வழங்க வேண்டும் என்று மேற்குலநாடுகளில் நிரந்தரமாக குத்தியிருக்கும் ஈழதமிழர்கள் பிரார்தனை செய்கின்றனராம்.
  36. மொத்தத்தில் அக்கா ஒரு தளபதி.
  37. Published By: DIGITAL DESK 3 03 FEB, 2024 | 05:04 PM (எம்.நியூட்டன்) பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்றுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு இன்று சனிக்கிழமை நண்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து, சாந்தன் இலங்கை வந்து தன் வயதான தாயாரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரட்னாயக்கவுக்கு, சந்திப்பின் போதே ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதம் மற்றும் மேலதிக தகவல்களை தருமாறும் ஜனாதிபதி சிறீதரன் எம்.பியிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  38. நுவரெலியாவில் வீதி ஓரத்தில் (கண்டி வீதி) உள்ள ஒரு மரக்கறி கடை.
  39. கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும்......! 😍
  40. பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம் --- சத்யபிரகாஸ்
  41. The Tamil diaspora is planning to field Lyca Mobile owner Subaskaran Allirajah as a candidate at the next presidential election. Allirajah, an international businessman with Sri Lankan origins, has already bought a plantation political party, ‘Arunalu People’s Alliance’. Its chairman and general secretary is Dr. A.R. Krishan. Allirajah is to launch his media campaign next month. (deshaya.lk) https://english.theleader.lk/news/7156-subaskaran-allirajah-to-contest-for-presidency இங்கு விசாரித்தபோது செய்தி உண்மையில்லை என்கிறார்கள் இரண்டு மூன்று நாளில் உண்மை தெரியும்தானே .
  42. ஊரென்றால் உளமுருகும் திரு வெம்பாவை புலமென்பதால் உயிருருகும் பனிப்பாவை மாரி கழிகின்ற மார்கழியாள் என்றாலே மனதினிலே குளிரூடுருவிக் குறுக்கிவிடும் மாரியிலும் கதகதப்பில் களிப்பேற்றும் காலமதாய் யாவருக்கும் குதூகலமாய் அமையாது போனாலும் யாருக்கும் காத்திருக்காக் காலச் செயலதனைக் களிப்போடு நுகர்கின்ற காதலர்போல் பூமியிலே யாவரும் களிப்படைந்து களைப்படையச் செய்யாளோ நிறை மாதமெனும் மார்கழியாள்! மார்கழிக் கவிதந்த சுவியவர்களுக்குப் பாராட்டுகள்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.