Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    19109
    Posts
  2. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    1223
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    7044
    Posts
  4. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    10206
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/12/25 in all areas

  1. பிபிசியில் தகவலைப் பார்த்த பின்னர், கிருபன் மேலே இணைத்த காணொலியைப் பார்த்தால், விமான இறக்கைகளின் flaps பகுதி இறக்கைகளோடு ஒரே தளத்தில் இருப்பது தெரிகிறது. விமானங்கள் மேலெழும் போது, இறக்கைகளின் பின் ஓரத்தில் இருக்கும் flaps நன்கு கீழிறங்கி இருக்கும். இதனால், மேலுதைப்பு உருவாகி விமானம் இலகுவாக மேலே எழ உதவும். இது நியூட்டனின் மூன்றாம் இயக்க விதியின் ஒரு சிறந்த பிரயோக உதாரணம். ஏதோ காரணத்தால், இந்த விமானத்தில் விமானம் ஏறிக் கொண்டிருக்கும் போதே flaps பழைய நிலைக்கு மீண்டு விட்டது. பாரிய விமானங்களில் ஒரு 3000 அடிகள் உயரம் போகும் வரை flaps பழைய நிலைக்குத் திரும்பாது. இதன் பௌதீகவியலை விளக்கும் ஒரு காணொலி:
  2. இவ்வாறு கூறி விட்டு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டது. தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்…..
  3. 2ம் நாள் ஆட்ட முடிவில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகள் தலை கீழ் மாற்றத்தை தந்து விட்டிருந்தன. முன்னாள் முதல்வர் பதவி இழக்க அவர் இடத்தை கெட்டியா பிடித்து கொண்டு சத்தமில்லாமல் முதல்வர் கதிரையில் அமர்ந்து கொண்டார் நேற்றைய துணைமுதல்வர் சுவி அவர்கள். ஆனால் இன்றைய துணை முதல்வரோ, இது நிரந்தரமில்லை, நாளை தானும் அதையே செய்வேன் என தன் ஆதரவாளர்களிடம் சூளுரைத்ததாக தகவல்கள் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளன. இவ்வாறு பலரும் பலவாறு தடுமாறிய போதும், எதற்கும் கலங்காத உறுப்பினர் செம்பாட்டான் தொடர்ந்து இரெண்டாம் நாளாக கேண்டீனில் உட்கார்ந்து ஹாயாக முட்டை கோப்பி குடித்துகொண்டிருந்தார் என்பது மேலதிக செய்தி. சுவி 30 🪑 வாதவூரான் 30 ரசோதரன் 30 வீரப்பையன் 20 ஏராளன் 20 கிருபன் 20 புலவர் 20 ஈழப்பிரியன் 20 வசி 20 வாத்தியார் 20 அல்வாயான் 20 எப்போதும் தமிழன் 20 கோஷான் 20 கந்தப்பு 20 நுணாவிலான் 10 பிரபா 10 செம்பாட்டான் 00 🐥 இப்போ இருக்கும் 218 ஐ அடிக்க வே திணற வேண்டி வரும். ஆனால் பிட்சில் எந்த பிழையும் இல்லை. தெ. ஆ - இதை ஒரு ஒருநாள் ஆட்டம் போல அணுகினால் வெல்லலாம். எதிர் மறை அணுகுமுறை பலந்தராது.
  4. ரசோதரன் ஒரு கிரிக்கட் சூறாவளி. IPL ல செய்த சம்பவத்தப் பார்த்தனீங்கள்தானே.
  5. மோனுக்கும் சேர்த்து 80 ரூபாய் பாஸ். கஸ்டப்பட்டு உழைச்ச காசு 🤣. ஆனால் இப்பவெல்லாம் app தானே. ஆட்டம் நடக்காவிடில் (மினிமம் 15 ஓவர் full refund க்கு, 30 ஓவர் 50% refund க்கு) அவர்களாகவே refund ஐ பாங்கில் போட்டு விடுவார்கள். அலைய வேண்டி வராது. என்ர லக்குக்கு 4ம் நாள், 16 ஓவர் அல்லது 31 ஓவர் விளையாட்டு நடக்கும் என நினைக்கிறேன்🤣. இப்படித்தான் போன WTC final, 5ம் நாள், ஒவல் ஹாஸ்பிடாலிட்டி டிக்கெட் இலவசமாக கிடைத்தது. இந்தியாவின் 6 விக்கெட்டை லஞ்சுக்கு முன்பே ஊதி தள்ளி விட்டது அவுஸ். வார நாட்களில் மகனை ஸ்கூல் கட் அடித்து கூட்டி போகலாம், ஆனால் வீட்டில அவன் என்ன பிழை விட்டாலும், கால் தடக்கி விழுந்தாலும் அதைத்தான் காரணம் என்பார்கள் 🤣.
  6. கிருபன் 20 (1) 🪑 சுவி 20 (2) ஈழப்பிரியன் 20 (3) வாதவூரான் 20 (4) ரசோதரன் 20 (5) எப்போதும் தமிழன் 20 (6) வீரப்பையன் 10 (7) ஏராளன் 10 (8) புலவர் 10 (9) வசி 10 (10) வாத்தியார் 10 (11)) அல்வாயான் 10 (12) பிரபா 10 (13) கோஷான் 10 (14) கந்தப்பு 10 (15) நுணாவிலான் 00 (16) 🐥 செம்பாட்டான் 00 (17) 🐥 எங்கள் தலைவன் கிருபன். அணி திரள்வோம்
  7. முதலாவது நாள் ஆட்டத்தின் முடிவில் யாழ்கள வேட்பாளர்களது தரநிலை பட்டியல். பலத்த ஆறுமுனை போட்டிக்கு இடையே - சபாநாயகர் கிருபன் ஜி யை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். வீரப்பையன் 10 (7) ஏராளன் 10 (8) கிருபன் 20 (1) 🪑 புலவர் 10 (9) சுவி 20 (2) நுணாவிலான் 00 (16) 🐥 ஈழப்பிரியன் 20 (3) வசி 10 (10) வாத்தியார் 10 (11)) செம்பாட்டான் 00 (17) 🐥 அல்வாயான் 10 (12) வாதவூரான் 20 (4) ரசோதரன் 20 (5) பிரபா 10 (13) எப்போதும் தமிழன் 20 (6) கோஷான் 10 (14) கந்தப்பு 10 (15)
  8. வைகாசி பிறந்தவுடன் தலைக்கச்சான் தொடங்கிவிடும். தென்மேற்குத் திசையிலிருந்து சீறிக்கொண்டுவரும். சித்திரை வெயில் புழுக்கத்தில் கிடந்தவர்களுக்கு சீதளக்காற்று சுகமாகத்தான் இருக்கும். ஆனால் அடுத்த வாரமே வெம்மை கூடிவிடும். மரங்களைத் தலைவிரித்தாட்டிவிடும். பூவையும் பிஞ்சுகளையும் விழுத்திவிட்டு வாழை இலைகளை நார் நாராகக் கிழித்துவிடும். கானல் பயிர்கள் விளைந்து முற்றி விழுவதும் இந்த நாட்களில்தான். வட்ட விதானையின் மனைவி, அம்பலவி மாமரத்திற்கு கீழ் நின்று வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இலைகொள்ளாமல் பிடித்திருந்த பிஞ்சுக் காய்களை புரட்டி எடுத்து விழுத்திவிட்டிருந்தது. நூற்றுக்கணக்கான பிஞ்சுகள் விழுந்து, மண்ணில் புரண்டு கிடந்ததை நெஞ்சு பதறப் பார்த்தாள்……. பனையாற்றுக்கு மேலே நாணல் புதர்கள் தாண்டியுள்ள மேட்டு நிலத்தில் எள்ளு விதைத்திருந்தது. அறுவடை முடிந்து கதிர்கள் அடையப் போட்டிருந்தது. தலைக்கச்சான் காற்று புரட்டி எடுத்துவிடும், என்பதற்காக பாரம் ஏற்றிவிட்டு வருகிறேன் என்று போனவர், இன்னும் வரவில்லை… இனி வரும் நேரம்தான்…… தெற்குப் பார்த்த வீடு. தலைக்கச்சானுக்கும் சரி, சோளகத்திற்கும் சரி வீட்டு வாசலுக்கூடாக் காற்று பிய்ச்சுக்கொண்டு போகும். வாசலை ஒட்டினாற் போல பெரிய அறை. மாட்டுக்காலில் சூடடித்து, சணல் சாக்கில் நெல்லை இறுக்கமாகக் கட்டி அந்த அறையில்தான் வைப்பார். விதை நெல்லுக்கென்ற ஏற்பாடு அது. அதற்கு எதிரே விறாந்தை. அதில்தான் அவர் உட்கார்ந்து அலுவல்களைப் பார்ப்பார். அதை ஒட்டியுள்ள திண்ணையில்தான் அமர்ந்து சாப்பிடுவார். சாப்பிடும் போது அவரோடு யாராவது இனசனம் இருக்க வேண்டும். குறைஞ்சது வயல் செய்கைக்காரர் யாராவது இருக்க வேண்டும். வேளாண்மை, ஊர் நடப்பு பற்றி பேச வேண்டும்… அவருக்கென்று குரக்கன் பிட்டு அவித்து வைத்திருக்கிறது. மெல்லிதாக தேங்காய்ப்பூ போட்டு கட்டித் தயிரோடு குழைத்து சாப்பிடுவார். சாப்பிடும் போது அவர் உருட்டித் தரும் உருண்டைகளுக்காக கினிக் கோழிகள் நான்கும் காத்துக் கொண்டிருக்கும். நாவற் காய்களை உருட்டித் தள்ளும் வேகத்தோடு வீசுகின்ற தலைக் கச்சானுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாம்பிஞ்சுகள் ‘பொத் பொத் ‘தென்று விழுவதை வருத்தத்தோடு பார்த்துக்கொண்டிருந்தவள் புதுக்கோலத்தோடு, படலையைத் தள்ளித் திறந்து உள்ளே நுளைகின்ற அவரைக் கண்டதும் விக்கித்துப் போனாள்…… சண்டிக்கட்டு கட்டிய சாரம் முழுவதும் ஈரமாகி தண்ணீர் சொட்ட, காலெல்லாம் சேரும் சக்தியுமாகி, முகம் இருண்டு புதிர் காட்ட…. சாத்திய சைக்கிள் வேலியைத் தாண்டி கீழே விழ – நேரே கிணற்றடிக்குச் சென்று விட்டார். சைக்கிளை சரியாக நிறுத்தி, படலையைப் பூட்டி, தலைக்கயிறை போட்டுவிட்டு உள்ளே நுளைந்தவள். அவரது முகத்தை நேராகப் பார்க்கும் தைரியமின்றி, துவாயை எடுத்து நீட்டினாள். “யாரும் தேடி வந்தால் இல்லை என்று சொல்லி விடு” “ஏனப்பா?” “உனக்கு எல்லாம் விளக்கமாகச் சொல்லணுமோ? சொன்னதைச் செய் நான் கொஞ்சம் படுக்கப்போறன்” “சாப்பாடு குரக்கன்ல அவிச்சு வெச்சிருக்கன்” “அதெல்லாம் ஒன்னும் வேணாம் என்னைக் கொஞ்சம் தனிய விடு. யாரையும் உள்ள விடாத என்ன?” “வெளிக்காரர் யாரோடையும் சண்டையா?” ” ஓம் …… ஓம்…. நான் சண்டை புடிக்கிற ஆள்தான்…… கொலைகாரன் தான்….. நீ சாட்சிக்கு வாரியோ?” அவர் இப்படிப் பேசிப் பார்த்ததில்லை. இன்று இது புதுனம். பட்டு நெய்தது போல வார்த்தைகள் மென்மையாக வரும். சித்திரைப் புழுக்கத்தில் புரடியில்படும் வேப்பங் காற்றுப் போல ஆதரவாகப் பேசுவார். சுடுசொல் வராது……. அவருடன் பேசிக் கொண்டிருப்பது புறங்கைத் தேன் நக்குவது போல ஒரு சுகமான அனுபவம். இன்று என்ன நடந்தது?…. நடந்து வந்த முறையும் வித்தியாசம்… காலெல்லாம் சேறு சுடு சொல். அவருக்கு எப்போதாவது கோபம் வராமலும் இல்லை. முற்கோபம். முணுக்கென்று கோபிப்பார். ஆனால் அஞ்சு நிமிசந்தான். அதற்குள் ஆறி விடும். அடுத்த நிமிசம் இந்த மனுசனா இப்படிக் கோபித்தார் என்று ஆச்சரியப்படும்படி…. அன்பாகி விடுவார். பனை நுங்கின் மென்மையும் பால் நுரையின் கலகலப்புமாக……. இப்படித்தான் ஒருமுறை…. தென்னங்காணிக்குள் யாரோ கள்ளமாக தேங்காய் புடுங்குகிறார்கள் என்று கேள்விப்பட்டு வெள்ளாப்பிலேயே புறப்பட்டுப் போனார். கதை சரிதான். கள்ளன் ஒருவன் தேங்காய் புடுங்கிக் கொண்டு வட்டுக்குள் தலை மறைத்துக்கொண்டு இருந்திருக்கின்றான். இவருக்கு வந்ததே கோபம். உச்சாணிக் கோபம். ஆத்திரம் தலைக்கேறி கண்ணை மறைத்துவிட்டது. பக்கத்தில் கிடந்த கிடுகுமட்டை, தென்னம்பாளை, விறகுக்கட்டை முழுவதையும் சேர்த்து, கள்ளன் ஏறி இருந்த மரத்தைச் சுற்றி நெருப்புக் கொடுத்துவிட்டார். மரத்தைச் சுற்றி திமுதிமுவென்று தீச்சுவாலை கொழுந்து விட்டெரிய கள்ளன் அலறிய அலறலில் மரண பயம் தொக்கி நிற்க – அவருக்கு மனம் மாறிவிட்டது. மறுகணம், வெள்ளங்கம்பு நாரில் திரித்திருந்த கயிற்றை பக்கத்துத் தென்னையின் வட்டில் இறுகக் கட்டி மறு நுனியை இவனுக்கு எறிந்து அவனது மரத்தில் சேர்த்துக் கட்டிக்கொள்ளச் சொல்லி, கயிற்று வழியே ஆளை இறக்கிய போது, கள்ளன் மறுகி நின்றான். அவர் தாமதிக்கவில்லை. கீழே கிடந்த தேங்காய்களையெல்லாம் பொறுக்கி, மட்டை உரித்து நாரில் கோர்த்து அவனிடம் கொடுத்த ‘சரி போய்வா என்று அனுப்பி வைத்தார். அரணைக் குணம் அது. ஆத்திரம் கொண்டு எதிரியைத் தாக்கவரும். அரணை கடித்தால் மரணம் என்பார்கள். அத்தனை விசம். அதிலும் செவ்வால் அறணை கடும் விசம். வாய் வைத்ததென்றால் கதை முடிந்துவிடும். பல் கிட்டிவிட மரணம்தான். மறுபேச்சில்லை. அதனால் ஆத்திரம் கொண்டு வாய் வைப்பதற்குள் அதன் கோபம் ஆறிவிடும். சாதுவாகிவிடும். நெளிந்து வளைந்து பின்னோக்கி விடும். அற்ப நேரக் கோபம். அதற்குள் மனம் குளிர்ந்து, கோபப்பட்டதற்காக வெட்கப்பட்டு ஓடிவிடும். ‘இன்றைக்கும் அப்படி ஏதும் நடந்திருக்குமோ’ அடையப் போட்டிருக்கும் எள்ளுக் கதிர்களை யாராவது களவாடிப் போயிருப்பார்களோ?.. அல்லது ஆற்றைக் கடக்கையில் மாடு, கன்றுகள் எதையும் முதலை பிடிச்சிருக்குமோ? – அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. அரணைக் குணம் வந்து யாருக்காவது அறைந்துவிட்டு வந்து, மனவலியில் படுக்கிறாரோ?…… இவரது தம்பி மகள் ஒருத்திக்கு யாரோ பையன் கடுதாசி கொடுத்தான் என்று கேள்விப்பட்டு – அந்தக் கணத்திலேயே ஆத்திரப்பட்டு அவனைப் பிடித்து அடிஅடியென்று அடித்து துவைத்து நிமிர்ந்த போது – அவன் மூச்சுக் காற்றுக்காக அவஸ்தைப்பட்டான். அவரது கோபம் அடங்கிவிட்டிருந்தது. அவனை அவரே ஆசுப்பத்திரிக்குத் தூக்கிக்கொண்டு போய் வைத்தியரைப் பார்த்து, சுகப்படுத்தி, பின்னர் கல்யாணம் செய்து வைத்து. வீடொன்றைக் கட்டி, அதில் இருப்பாட்டி.. ஓ.. எவ்வளவு தாராளம்………. இந்த மனசுக்குள் கணப்பொழுதில் வந்து ஆட்சி செய்துவிட்டுச் செல்கின்ற அந்த மூர்க்கத்தனம் எங்கே ஒழிந்துகொண்டு இருக்கிறது?…….. இன்றைக்கு என்ன நடந்திருக்கும்?…. எதற்கும், படுத்து ஆறுதலாக எழும்பட்டும்…… படலையடியில் நிழலாடுகிறது. கிராம சேவகர்! “வட்டவிதான் இருக்கிறாரா” அவளுக்கு நெஞ்சு குறுகுறுக்கிறது. “இல்லியே, வெளியே போனவர். இன்னும் வரல” வேலியடியில் சார்த்தியிருந்த சைக்கிளில் அவர் பார்வை சென்று மீளுகின்றது. “வந்தால் ஆசுபத்திரிப் பக்கம் வரச்சொல்லுங்கோ” “ஏனுங்க யாருக்கும் சுகமில்லையோ…….. “உங்கட மேட்டுக்காணிப்பக்கம் ஒரு பையன் அடிபட்டு இறந்து கிடக்கிறான். ஆசுபத்திரிக்குக் கொண்டு போறாங்க. வசதியெண்டால் வரச்சொல்லுங்க” அவள் சில்லிட்டுப் போனாள். காலையில் அவர் அங்கே தான் போனவர்…. இப்பத்தான் பதறி அடித்துக்கொண்டு வந்திருக்கிறார்…. அங்கே ஒரு பையன் செத்துக் கிடக்கிறான், இது என்ன வில்லங்கம்…. அந்தப் பையன் எப்படிச் செத்தான்?…. செவ்வால் அரணையொன்று வேலிக்கிடுகுக்குள் மறைந்து நழுவி ஓடுகிறது….. அவளுக்கு அடிவயிற்றில் குமைச்சல் எடுக்கத் தொடங்கியது…. விறாந்தையை ஒட்டிய திண்ணையில் படுத்திருந்தவருக்கு கிராமசேவகர் வந்து விசாரித்துப் போனது தெளிவாக காதில் விழத்தான் செய்தது. அவருக்கு உடம்பு சில்லிடத் தொடங்கியது. தொண்டை வரண்டு, நாவு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. அவர் அறியாமல் கண்ணில் நீர் வழிந்து காதோரம் வழிந்து சென்றது. இது என்ன சோதனை?…. நான் அவனைக் காப்பாற்ற அல்லவா பாடுபட்டேன்…. அவர் எழுந்து உட்கார நினைக்கிறார். முடியவில்லை. கைகள் உதறத் தொடங்கிவிட்டன. இதைப்பற்றியே பேசிக்கொண்டு சனங்கள் ஆசுபத்திரிக்கு விரையும் காட்சி, வேலியடைப்புகால் மங்கலாகத் தெரிகிறது. செய்தி அறியவென்று அவள் படலையடியிலேயே நிற்கிறாள் போலும், நானும் காலையில் கோபப்பட்டு விட்டேன்.. எனக்கிருக்கின்ற ஒரே ஆறுதல் அவள்தானே. அவளிடமாவது உண்மையைச் சொல்லிவிடுவோமா? காலையில் அவர் மேட்டுக்காணிக்கு செல்லும்போது அந்தப் பையன் தனக்கு முன்னால்தான் ஆற்றைக் கடந்து சென்று கொண்டிருந்தான். சின்னப்பையன், நாரைகள் பிடிப்பது முசுப்பாத்தி. வைகாசி பிறந்தால் செங்கால் நாரைகள் முட்டை இட்டு குஞ்சு பொரிக்க இடம் தேடத் தொடங்கி விடும். ஓங்கி வளர்ந்துள்ள நாணல் புதர்கள் மூன்று நான்கை ஒன்றாக இணைத்து அவை ‘அவதி’ தயாரித்து விடும். அதற்குள் மெல்லிசாகக் கூடு கட்டி நாணற் பூக்களை மெத்தையாக இட்டு, முட்டையும் இட்டு அடைகாக்கத் தொடங்கி விடும். அடர்த்தியாக வளர்ந்துள்ள நாணற் புதர்களுக்குள் கூட்டை கண்டு பிடிப்பது மலைப்பாம்புகளுக்கு கஷ்டம். அப்படியே கண்டு பிடித்தாலும் கூடுகள் இருக்கும் இடத்திற்கு ஏறுவது கஷ்டம். இதனால் நாரைகளும் குஞ்சுகளும் மலைப்பாம்பு அபாயத்தில் இருந்து தப்பி விடும். ஆனால் நாரைக்கொக்கு பிடிக்கும் சிறுவர்கள் வேறு உபாயங்களைக் கையாளுவார்கள். நாணல் புதர்களுக்குள் ஓசைப்படாமல் புகுந்து கூடுகளை அடையாளம் கண்டுகொள்வார்கள். கூடுகளைத் தாங்கிநிற்கும் நாணல்களை திடீரென விலக்கிவிட, கூடும் நாரையும் கீழே விழுந்து, நாணல் அடர்த்திற்குள் சிக்குண்டு விடும். அதனைலாவகமாக ‘லபக்’ என்று பிடித்து சிறகுகளை மேல்நோக்கி இணைத்து கட்டுப்போட்டு விடுவார்கள். மேட்டுக் காணிக்குள் அடையப் போட்டிருந்த எள்ளுக் கதிர்களுக்கு பாலை மரக்குற்றிகளை பாரம் ஏற்றி வைத்தவிட்டு நிமிர்ந்தபோது, பொழுது வெப்பங்கொள்ளத் தொடங்கியிருந்தது. ஆற்றைக் கடக்குமுன் நாணல் மண்டிக் கிடந்த பகுதிகளைப் பார்வையிட்டுக்கொண்டு வந்தபோது அந்தப் பையன் கொக்குக் கூடுகளைத் தேடிப் பதுங்குவது தெரிகிறது. அவர் பார்வை நிதானிப்பதற்குள் அது நடந்துவிட்டது. ஆளுயர மலைப் பாம்பொன்று பையனது கால்கள் வழியாக ஏறி, உயர்ந்து தலைவரை முன்நோக்கி, உடலை ஒரு சுற்றுச் சுற்றி முறுக்கத் தொடங்கிவிட்டது. பையன் ஹீனமாக முனகத் தொடங்கினான். கைகளை ஆட்டி ஆட்டி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த வேளை பாம்பு அவனைக் கீழே விழுத்தியிருந்தது. இனி தாமதிக்க நேரமில்லை. இன்னும் சிறிது நேரத்தில் உடலை முறுக்கி எலும்புகளை உடைத்து கூழாக்கி விழுங்கத் தொடங்கிவிடும். அவர் மின்னலாகச் செயல்பட்டார். எருமைக் கன்றுகளை கட்டிப் போடவென நட்டு இருந்த காட்டாமணக்கு கணுவொன்றைப்புடுங்கி. பையன் கிடத்தப்பட்டிருந்த இடத்திற்கு ஓடினார். பாம்பின் தலைக்குக் கீழ், கழுத்துப் பக்கமாக ஓங்கி திசை பார்த்து அடித்தவேளை, பாம்பு தன்பலம் கொண்ட மட்டும் பையனை உருட்டிப் புரட்டிவிட, அடி, பையனின் பிடரியில் பழுவாக இறங்கியது. அதற்குள் பாம்பு பையனை கைவிட்டு விட்டு நழுவி மறைந்து விட்டது. பையன் தலையை ஆட்டிக் கொண்டிருந்தது கொஞ்ச நேரந்தான். உயிர் முடிச்சில் அடி விழுந்திருக்க வேண்டும். அவன் ஆவி பிரிந்துவிட்டிருந்தது. வட்ட விதானையார் நிலைகுலைந்து போனார். காப்பாற்றப்போய் தாமே அவனைக் கொன்றுவிட்டோமே என்று நெஞ்சு பதைக்கத் தொடங்கினார். ஊர் நம்பப் போகிறதா?.. தன்மீது பழியைப் போட்டு தாக்கி நசுக்கி விடாதா? ஓடி மந்த மலைப்பாம்பு வந்து சாட்சி சொல்லப் போகிறதா? பையனின் தலையை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு விக்கி விக்கி அழத் தொடங்கி விட்டார். தொண்டையில் முடிச்சொன்று திரண்டு-தலை முடிக்கற்றையொன்று பொறுத்துக் கொண்டதுபோல – சிக்கலாக வலிக்கத் தொடங்கியது. நெஞ்சுக் கூட்டுக்குள் யாரோ பிராண்ட…. கழுத்தை நெரிக்க…. கண்கள் குளமாக… குழந்தை போல தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டார். இரண்டு கைகளையும் முன்னால் இணைத்து விலங்கிட்டு பொலிஸ் பிடித்து இழுத்துச் செல்வது போல….. மனைவி தலைவிரி கோலமாக பின்னால் ஓடி வருவது போல…….. கைகள் உதறத் தொடங்கி விட்டன. அரைவாசி திறந்திருந்த பையனின் கண்களை கசக்கி மூடிவிட்டார். இனி கண்கைளத் திறக்கவே மாட்டான்…. வாய் பேசவே மாட்டான்…. பட்டியில் இருந்து எருமைப் பால் கறந்து காவில் தூக்கி வரும் பால்காரர்களின் பேச்சொலி கேட்கிறது. இனி தாமதிக்க நேரமில்லை. இந்த வழியாகத்தான் வந்து ஆற்றைக் கடப்பார்கள். நாணற் புதர்களை விலக்கிக்கொண்டு, குறுக்கு வழியாக ஆற்றைக் கடந்து, சேற்றில் புதைந்து, சைக்கிளைத் தள்ளிக்கொண்டு அப்படியே வீடு வந்தவரை மனசாட்சி கேட்டது. ‘நீ செய்தது நியாயந்தானா?’ அவரால் பதில் சொல்ல முடியவில்லை நெஞ்சுக் கூட்டுக்குள் நெருஞ்சி முட்கள் உருளத் தொடங்கின. தம்பி வந்துவிட்டான். ‘ஏதும் கேள்விப்பட்டிருப்பானோ…. எப்படிக் கேள்விப்பட்டிருப்பான்?’ “ஏதும் சுகமில்லையா? ஏன் படுத்திருக்கிறீங்க?” “இல்லையே….” – குரலில் தடுமாற்றம் “வெள்ளாப்பிலே மேட்டு நிலப்பக்கம் போனீங்களா?” “ஏன் தம்பி கேட்கிற?” “நாரைக் கொக்கு பிடிக்கிற பொடியன் இறந்து கெடந்தவனாம். தூக்கிக்கொண்டு வந்திருக்கிறாங்க. புரடியில் அடிப்பட்டிருக்கு. செத்திட்டான். பொலிசு விசாரிக்கிறது.. நீங்கள் போன நேரம் நடந்ததோ…. கண்டிருப்பீங்களோ….அதான் கேட்டன்.” அவர் ஒன்றும் பேசவில்லை. மோட்டு வளையையே வெறித்துப் பார்த்தார். செவ்வால் அரணை யொன்று இரைதேடி நெளிந்து நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. தம்பி…தம்பி…. விலகு. “காலையில் அலவரைக்குள்ள போய் வந்தனான். வெள்ளாமை பாலேறி அன்னம் வாத்துக் கெடக்குது. கலவன் கதிரெல்லாம் தலப்பு நெல் பழுத்து, கொப்புச் சவண்டு வருது. அதுக்குள்ள அறக்கொட்டியான் தத்துவெட்டி அடிக்கிற குணம் தெரியுது. ஒரு நாளைக்குள்ள அடிச்சு சாம்பலாக்கிவிடும். அதுதான் நாளைக்கு அடிப்பயிர் ஒதுக்கி எண்ணெய் அடிக்கலாம் எண்டு இருக்கன். எண்ணெய்ப் பம்பைக் கொண்டு போக வந்தனான்” அறக்கொட்டியான் என்றதும் தீயை மிதித்தவர் போல அரளத் தொடங்கினார். மனம் அரட்டத் தொடங்கியது. ஐந்து வருசத்து முந்திய நிகழ்ச்சி அது. இந்த முன்கோபத்தால் வந்தவினை அது. மோட்டு வளைவில் நிலைக்குத்தியிருந்த பார்வை இப்போது அசவில் சாத்தியிருந்த பாய்ச் சுருணையில் பதிகிறது. கண்களில் ஓரங்கட்டியிருந்த உப்பு நீர் வழிய, கேவத் தொடங்கினார். தம்பி, ஆதரவாகத் தோளைப் பற்றிக் கொண்டான். “சும்மா ஆறுதலா இருங்க. அழாதேங்க. தைரியமா இருங்க உங்கட குணம் இந்த ஊருக்குத் தெரியும். நீங்க செய்திருக்கமாட்டீங்க…..” “நான் செய்ய இல்லடா தம்பி. என்னை நம்புடா தம்பி. பொலிஸ் வந்திருக்குமோ…. தம்பி வெளியில என்னடா கதைக்கிறாங்க? நான் பாம்புக்குத் தான்டா அடிச்ச நான்…. “எனக்கு எல்லாம் தெரியும். நீங்க அமைதியா இருங்க.” “உனக்கு நடந்தது தெரியுமோ?…. “நான் எல்லாம் விசாரிச்சுக் கொண்டுதான் வாறன். யாரோ நாரைக் கொக்கு பிடிக்கிற பையன்தான் தூரத்தில் நின்டு பார்த்தணென்டு சொல்றான். உங்கமாதிரி எண்டுதான் அவன்ட கணிப்பு. நீங்தான் என்டு குறிப்பாகச் சொல்லயில்ல. எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்க ஏன் அந்தப் பையனை அடிக்கப் போறீங்க? எல்லாம் நான் பார்த்துக் கொள்றன். நீங்க கொஞ்சம் அமைதியா இருக்கணும்.” அதற்குள் அவள் வந்துவிட்டாள். அவளுக்கு செய்திகள் சாடைமாடையாக அருக்கொடுத்துத்தான் இருக்க வேண்டும்… கண்கள் சிவந்திருந்தது. மூக்குச் சிந்தத் தொடங்கி இருந்தாள். கைகளில் நடுக்கம்…. “பார்த்துக் கொள்ளுங்கோ.நான் வெளியிலே வெசவளம் என்னென்று விசாரிச்சுக்கொண்டு வாரன். பசளைக் கடையில அறக்கொட்டியான் எண்ணெயும் வாங்கிட்டு வாரன்.” தம்பி விலகிச் செல்கிறான். அவர் கண்கள் மயங்கி நினைவிழக்கத் தொடங்கினார். ‘தம்பி என்ன சொன்னவன்? அறக்கொட்டியான் மருந்தா? அறக்கொட்டியான் மருந்து ஆளைக் கொல்லுமோ?”….. நினைவுப் பிசிரில் ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த அந்த நிகழ்ச்சி, மெல்லிய மின்வெட்டில் தெரியும் மழை இருட்டுக் காட்சி போல மங்கலாக நிழலாடுகிறது. அறுவடை நிலையில் இருக்கும் வேளாண்மையைத்தான் அறக்கொட்டியான் தாக்குவது வழக்கம். ஒரு பொழுதில் ஒரு வயல் மூலையில் தொட்டமாகக் காணப்படும். இரண்டு நாட்களுக்குள் வயல் பூராகவும் பரவி நெல்மணியைப் பதம் கெடுத்து, மாவாக்கி விடும். எதுவும் மிஞ்சாது. செய்கைக்காரனின் நெஞ்சையும் சேர்த்து சுருக்கி விடும். இவர் அவசர அவசரமாக எண்ணெய் வாங்கி அடிக்க ஆயத்தமானார். அதற்கு முன் வயலிலுள்ள நீர் முழுக்க வடிய வைக்க வேணும். தண்ணீர் நின்றால் எண்ணெய் பலனளிக்காது. அறக்கொட்டியான் மடங்காது. அடுத்த வயல்காரனுக்கும் அறக்கொட்டியான் பிரச்சினை. இவருக்கு முதல் நாளே அவன் தண்ணீரை வடியவிட்டு எண்ணெய் அடித்துக் கொண்டிருந்தான். ஆனால் இவருடைய நீர் வடிச்சல் அவனது வயலுக்குள்ளாலதான்! “ரெண்டு நாள் பொறுங்களன் வட்ட விதானையார். அதுக்குள்ள எண்ணெய் அடிசசு முடிச்சிர்றன். அதற்குப் பிறகு என்ர வயலுக்கால தண்ணிய வடியவிட்டு நீங்க எண்ணெய் அடிங்களன்.” “அதுக்குள்ள என்ட வயல அறக்கொட்டியான் அடிச்சு துவைச்சுப் போடுமே.” “ஒருநாள் பொறுங்க நான் பயிரெல்லாம் ஒதுக்கி, தண்ணிய வடியவிட்டு இன்டைக்குள்ள எண்ணெய் அடிக்கப் போறன். நாளை – ஒருநாள் பொறுங்க அதுக்குப்பிறகு நீங்க தண்ணியை என்ற வயலுக்கால வடியவிட்டு, பயிரை ஒதுக்கி எண்ணெய் அடிங்க. அவருக்கு விறுவிறுவென்று சூடு ஏறுகிறது. “உன்ர வயல் தப்ப வேணும். என்ர வயல் அழிய வேணும். அப்படியே… ஒரு கீற்றால தண்ணிய வடிய விடன். நானும் பயிர் ஒதுக்கி எண்ணெய் அடிக்கிறன்.” “நீங்க வட்ட விதானையார். நீங்கதான் எங்கட வயலையும் காப்பாத்தித் தரணும். அதை விட்டுப் போட்டு மல்லுக்கு நிக்கறீங்க” “நான் சண்டைக்காரன் என்று சொல்றியாடா?” “மரியாதையாப் பேசுங்கோ. ‘டா’ போட்டு பேசக் கூடாது. உங்க வயசுக் குத்தான் நான் மரியாதை தாறன்…….. கவனம்.” இவருக்கு பிடரி மயிர் சிலிர்க்கிறது…… ‘விறுவிறு’வென்று விலங்குக் கூட்டமொன்று எட்டுக் கால் பாய்ச்சலில் வேகம் கொண்டு கைகளில் வலுக்கொள்கிறது…. “இங்க, தண்ணிய தட்ட விடறியோ இல்லையோ” “முடியாது. இண்டைக்கு முடியாது போ. ஏலாது” “என்னடா சொன்னனீ?” முதல் அடி கன்னத்தில் விழுகிறது. கட்டிப் புரண்டதில் யாருக்கு அடி. யாருக்கு உதை என்று புரியவில்லை. விலங்குக் கூட்டம் மறுபடி மறுபடி பாய்ந்து “மனிதனை” விரட்ட…. “எனக்காடா கை வெச்ச ?” இளமையும் முதுமையும் மோதிக்கொள்ள முதுமை பழிதீர்க்கப் பாய்கிறது. “எனக்காடா கை வெச்ச”…… மறுபடிமறுபடி ஆக்காண்டிப்பறவை வட்டமிட்டுக் கீச்சிடுகிறது. “எனக்காடா கை வெச்ச?” கையில் அகப்பட்ட கிருமிநாசினிப் போத்தலில் அரைவாசியை அவனது வாய்க்குள் ஊற்றி முடிந்த போதுதான் அவரது ஆத்திரம் தணிகிறது…. நிலமையின் கொடூரம் புரியத் தொடங்கிய போது….. எல்லாமே முடிந்து விட்டிருந்தது. செவ்வால் அறணை தான் நோக்கிய திசையில் இருந்து பின்வாங்கி நகரத் தொடங்கியது. அவரை ஆட்சி செய்திருந்த விலங்குக் கூட்டம் தனது பேய்ப் பாய்ச்சலை குறுக்கிக்கொண்டு மனக் கூட்டுக்குள் கடிவாளம் இட்டுக்கொண்டது. ஆனாலும் எல்லாமே முடிந்திருந்தது! குற்றத்தின் வெப்பச்சுடர் அவரை தீய்க்கத் தொடங்கியது. ஒரு கொலைகாரனாக மாறிவிட்ட கொடூரம் அவரை அணு அணுவாக பிராண்டத் தொடங்கி விட்டது. கண நேரத்தில் தன்னை ஆக்கிரமித்துச் செல்கின்ற முன்கோபம் செய்து விட்டிருந்த அட்டூழியம் அவரைக் குற்றவாளியாக்கி “நீ கொலைகாரன். நீ கொலைகாரன்” என்று விரல் நீட்டி குதறி எடுத்தது. கொலைகாரனாக மாறிவிட்ட நிலையில் அதற்கான பொறுப்பைத் தட்டிக் கழிப்பதோ – தண்டணையில் இருந்து தப்பிக்கொள்வதோ அவருக்குச் சரியாகப் படவில்லை. பாவத்திற்குரிய தண்டணையை தானே வழங்கிக் கொள்ளவே விரும்பினார். கையில் மிகுதியாக வைத்திருந்த கிருமிநாசினி, தானே தண்டனை அளிக்கின்றேன் என்று கூறிற்றா?….. போத்தலை உயர்த்தி வாய்க்குள் ஊற்ற வெளிக்கிட்ட போது, தம்பி ஓடி வருகின்றான். “உங்களுக்கு விசரே” போத்தல் எகிறிப் போய் விழுந்து கவிழ்ந்து கொள்கிறது. “நீங்களென்ன வேணுமென்டா செய்தனீங்க? அவனும் அடிச்சான். நீங்களும் அடிச்சீங்க. சண்டையில் இது சகஜம்… அவன் உங்கட வயசுக்கும் மரியாதை தரயில்லியே….” “என்டாலும் நான் செய்திருக்கப்படாது. என்ர கோபம் கண்ணை மறச்சுப் போட்டுது” “கை கால் கழுவிக் கொண்டு நீங்க மேட்டு நிலத்துக்குப் போங்க…. அங்கேயே ரெண்டு நாள் இருந்து மாடுகன்றைப் பாருங்க.மற்றதெல்லாம் நான் கவனிச்சுக் கொள்றன்.” அப்படியேதான் நடந்தது. அவர் மேட்டு நிலம் போனார். பாதுகாப்பு இல்லாமல் கிருமி நாசினி பாவித்ததால மரணம் சம்பவித்தது என்று முடிவானது. தண்டனை தப்பிப் போனது. குற்றம் அமுங்கிப் போனது. உண்மை அடங்கிப் போனது. நீண்ட நாள் அவர் பேச்சற்றுப் போனார். மனசாட்சி குறுகுறுப்புக் காட்டியது. இரவில் புலம்பத் தெடங்கினார். கண்விழித்து அரட்டத் தொடங்கினார். தம்பி எல்லாவற்றையுமே மறைத்து விட்டான். செத்தவனின் பிள்ளைகளுக்கு தர்ம காரியங்கள் என்று உதவி புரிந்தார்கள். ஆனால் அவையெல்லாம் செய்த பாவங்களுக்குரிய பிராயச்சித்தம் ஆகிவிடுமா…? இந்த ஐந்து வருட காலப்பகுதியில் நெஞ்சின் ஓரத்தில் தனித்திருந்து எப்போதாவது அவரை வாட்டி வதைத்துக் கொண்டுதானிருந்தது. அன்று செய்த குற்றத்திலிருந்து தப்பிவிட்டார். இன்று செய்யாத குற்றம் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறது. தண்டணைகள் தாமதிக்கலாம். ஆனால் தப்பவிடாது போலும். விதானைாயர் வந்து விட்டார். “வட்ட விதானை, எனக்கெண்டா நம்பிக்கையில்ல. நீ கொலை செய்ற ஆள் இல்லை. ஆனால் அந்தப் பையன் நீ அடிச்சதெண்டுதான் சொல்றான்.எனக்கெண்டா என்ன செய்றதெண்டு விளங்குதில்லை. நீங்க ஒரு நடை பொலிசுக்கு வாங்களன். நடந்ததை சொல்லிப்போட்டு வந்துருவம்.” அதற்குள் தப்பி வந்து விட்டான். “யாரோ ஒரு பையன் சொன்னான் எண்டதுக்கா அவரை பொலிசுக்கு வரச் சொல்றீங்க…. என்ன நியாயம் விதானை?……. அவர் என்ன கொலைகாரனா?…. நாரைக் கொக்குப் புடிக்கிற பொடியனை நாங்க ஏன் கொல்ல வேணும்….. அவர் வரமாட்டார்….. நீங்க போங்க…” மனைவி விசும்பத் தொடங்கிவிட்டாள். உச்சிப் பொழுதின் வெம்மை யையும் சேர்த்துக்கொண்டு காற்று சுழன்று அடிக்கிறது. வெள்ளை கொழும்பான் மாமரத்திலிருந்து கொப்பொன்று முறிந்து படலைப் பக்கம் விழுந்து வழியை மறைத்து நிற்கின்றது. “நாங்களாகப் போய் உண்மையைச் சொல்லிட்டா நமக்கு நல்லது. அவங்களாக வந்து இழுத்துக் கொண்டு போனா வில்லங்கமாகப் போயிடும். நலவுக்குத்தான சொன்னன்.” “அதெல்லாம் நாங்க பாப்பம். பொலிஸ், கோடு கச்சேரி என்று நாங்களும் ஒரு கை பாப்பம். நீங்க போய்வாங்க.” மாமரக்கொப்பை விலக்கிக் கொண்டு விதானையார் படலை தாண்டுகிறார். தம்பி விறாந்தை நோக்கி வருகிறான். “விதானைக்கென்ன விசறா?….. அவர் வேலையை அவர் பாத்துக் கொண்டு போக வேணும். முந்திரிக் கொட்டை. நீங்க சும்மா இருங்க, நான் எல்லாம் பாக்குறன். பாம்புக்குத்தான் அடிச்சது. அது தவறிப் போச்சு. நீங்க அதையும் சொல்ல வேண்டாம். எனக்குத் தெரியாதெண்டே சொல்லிப் போடுங்க.” “அதெப்படிடா தம்பி’ அவரால் பெச முடியவில்லை. தொண்டடைக்குள் வார்த்தைகள் சிக்குண்டு உறைகிறது. வாந்தி எடுக்கிறார். கண்களில் மயக்கம்…….. செவ்வால் அறணைக் குட்டிகள் தவழ்ந்து ஊர்ந்து செல்வது போலவும் நாரைகள் அவற்றைக் கவ்விக் கொண்டு பறப்பது போலவும் காட்சிகள் அடிமனதில் தோன்றுகின்றன… கோழிக்குஞ்சொன்றை கறுப்புக்காகமொன்று தூக்கிக் கொண்டு கூட்டில் வைத்து தனது குஞ்சுக்கு இரை ஊட்டுவது போல சலனக்காட்சி… இது என்ன நியாயம்? கிருமி நாசினிப் போத்தலை மலைப்பாம்பொன்று விழுங்கி, விழுங்கி வெளியே துப்புகிறது. பாம்பு முட்டைகள் உடைந்து உடைந்து தீப்பற்றிக் கொள்கிறது……. அவர் பார்வையில் சலனங்கள் தீர்ந்து, ஒளி பரவுகிறது. “தம்பி, நான் பொலிசுக்குப் போறன்” “உங்களுக்குப் பைத்தியமா? புடிச்சு கூண்டுல போட்டு நீங்கதான் செய்தது என்டு தண்டனை தந்திடுவாங்க” மனைவி கையை பிசைந்து கொள்கிறாள். “தம்பி நானே செய்ததாகத்தான் சொல்லப் போறன். அதுக்கு பிறகு விசாரணை தேவையில்லை. அஞ்சு வருசத்துக்கு முன் நடந்த அறக்கொட்டியான் சண்டையை நினைச்சுப்பார். அதற்குரிய தண்டனையே இன்னும் எனக்குப் பாக்கி இருக்கிறது. இப்போது நான் போவது தண்டனை பெறுவதற்காக அல்ல. பிராயசித்தம் பெறுவதற்காக” தம்பி மலைத்து நின்றான். இப்போது அவன் தடுக்கவில்லை. அவரைத் தடுக்கலாம். ஆனால் அவரது மனச்சாட்சியை தடுக்க முடியாது என்பதை அவன் அறிவான். – கலாச்சார அமைச்சு தேசிய மட்டத்தில் அரச ஊழியர்களுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு (2002) – வரால் மீன்கள் (பரிசு பெற்ற சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2013, வானவில் வெளியீட்டகம், திருக்கோணமலை. https://www.sirukathaigal.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%a3%e0%af%88/
  9. இந்த மட்ச் போகின்ற போக்கைப் பார்த்தால் 3 நாளுக்குள் முடியும். யார் வெல்வார்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் ட்ராவில் முடியாது! . நாலாம் நாள் ரிக்கெற் £60 க்கு வாங்கி refund க்கு அலையவேண்டுமா! நேற்று வேலையிடத்திற்கு போயிருந்தேன். திரும்பும் பக்கம் எல்லாம் இருக்கும் ரிவிக்களில் கிரிக்கெட்தான் போய்க்கொண்டிருந்தது.. ஆனால் ஒரு ஓவர் ஆறுதலாகப் பார்க்கமுடியாத வேலை!
  10. யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்காலத்தில் மாகாணசபை முதலமைச்சர் என்ற உயர் பதவிக்கு போட்டியிட இருக்கும் அர்சனா ஒரு கொலை நிகழ்வுக்கு ஆதரவாக அதை ஒரு funny யாக மகிழ்ச்சியாக எப்படி நனது நண்பியுடன் உரையாடுகிறார் பாருங்கள். மாகாணத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் ஒரு பதவிக்கு வர விரும்பும் ஒருவரால் இப்படி உரையாட முடிகிறதென்றால் வன்முறையை, ஒரு குற்றச்செயலை வெளிப்படையாக ஆதரித்தாலும் தமிழ் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை தான் இதற்கு காரணம். https://youtu.be/RyiniZWcsAA?si=QCmSOFuqBStO9450
  11. ஆரிடம் கேட்டனியள் வாக்கரிடமோ? டேனியலிடமோ🤣
  12. லோர்ட்ஸ் மைதானத்தில் முதல் இரு நாட்களிலும், கடைசி இரு நாட்களிலும் ஆடுவது சிரமம். மூன்றாம் நாள் வெயில் வேறு அதிகமாக உள்ளதால் தென்னாபிரிக்கா துடுப்பாட்டத்தை விரைவில் ஆரம்பித்தால் வெல்ல வாய்ப்பு உள்ளது. தென்னாபிரிக்கா வென்றால்தான் எனக்கு இனி புள்ளிகள் வரும்! வரத்தானே வேணும்😃 அவுஸ் வெல்லும் என்றது நாளைய காலநிலையை ஆராயாமல் சொன்னது! தென்னாபிரிக்கா வெல்லும் என்று சொல்வது கிரிக்கெட் ஜாம்பாவான்களின் கருத்தைக் கேட்டபின்!🤪
  13. தலைவர் வேலை களைப்பு தீர சோமபானத்தை அருந்தி விட்டு…தென்னாபிரிக்கா என்னா, அந்தாட்டிக்கா கூட நாளைக்கு வெல்லும் எண்டு சொல்லுவார்…அதை எல்லாமுமா நம்புவது🤣.
  14. இப்ப நாங்கள் எத நம்பிறது. ஓரு தலைவனா மதிச்சு, நாங்கள் பின்னால் நிக்கிறம். தென்னாபிரிக்கா வென்றால்தான் எனக்கும் புள்ளி. இல்லாட்டி நிரந்தர முட்டை. பாத்துச் சொல்லுங்க
  15. ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் - நிபுணர்கள் விளக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES 12 ஜூன் 2025, 14:34 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று கிளம்பிய சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. மேகானி நகரில் ஒரு மருத்துவர்கள் விடுதியின் மீது விழுந்து நொறுங்கிய இந்த விமானம் விபத்துக்கு உள்ளானதற்கு "மனிதப் பிழை" காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் பிற மீட்புப் படையினர் உள்ளனர். மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன. "ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே மதியம் 1:38 மணிக்கு குடியிருப்புப் பகுதியில் (மேகானி நகர்) மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் 232 பயணிகள் இருந்தனர். அதில் பெரியவர்கள் 230 பேர், விமான பணியாளர்கள் 10 பேர், விமானிகள் இருவர் என மொத்தம் 242 பேர் இருந்தனர்" என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா விமான விபத்தில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES விமானம் விபத்துக்குள்ளானபோது வானிலை தெளிவாக இருந்ததாக விமானப் பாதுகாப்பு நிபுணர் மார்கோ சான் கூறுகிறார். METAR என்றழைக்கப்படும் விமான வானிலை முன்னறிவிப்பின்படி, அந்தப் பகுதியில் மேற்பரப்பு காற்று குறைவாகவும், தெரிவுநிலை (Visiblity) ஆறு கிலோமீட்டர் தூரம் என்ற அளவிலும் இருந்தது. விமானக் கண்காணிப்பு தளமான ஃப்ளைட் ரேடார் 24-இன் (FlightRadar24) கூற்றுப்படி, விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமான கண்காணிப்பு தரவின்படி, விமானம் தரையில் இருந்து 425 அடி உயரத்தில் இருந்தபோது கிடைத்ததுதான் கடைசி சிக்னல். அந்த உயரத்தில், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விமானம் சிக்னலை இழந்ததாக ஃப்ளைட் ரேடார் 24 தெரிவித்துள்ளது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி 'மேடே அழைப்பு' (உயிருக்கு ஆபத்தான அவசர நிலையைக் குறிக்கும் சொல்) விடுத்ததாக இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகாரி தெரிவித்தார். அதன் பிறகு விமானியிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. விமானம் மேகானி நகர் என்ற குடியிருப்புப் பகுதியில் விழுந்தது. அது மருத்துவர்கள் விடுதியின் மீது விழுந்து நொறுங்கியதாக போலீசார் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தனர். விமான விபத்திற்குக் காரணம் மனிதப் பிழையா? விமானம் புறப்படும்போது அதன் இறக்கை மடிப்புகள் (Airplane wing flaps) ஒரு சிக்கலான நிலையில் இருந்திருக்கலாம் என்று விமான நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். பிபிசி சரிபார்த்த ஒரு காணொளியில் விமானம் கீழே இறங்குவதையும், அது தரையில் மோதும்போது ஒரு பெரிய வெடிப்பு ஏற்படுவதையும் காண முடிகிறது. "இதைப் பார்க்கும்போது, இறங்கமைப்பு (Undercarriage) இன்னும் கீழே உள்ளது. ஆனால் மடிப்புகள் பின்வாங்கிய நிலையில் உள்ளன என்பது தெரிகிறது" என்று விமான ஆய்வாளர் ஜெஃப்ரி தாமஸ் கூறுகிறார். இதன் பொருள் மடிப்புகள் இறக்கையுடன் ஒன்றிப்போன நிலையில் இருந்துள்ளன, விமானம் புறப்பட்ட உடனேயே இவ்வாறு இருப்பது மிகவும் அசாதாரணமானது என்று அவர் கூறுகிறார். "இறங்கமைப்பு பொதுவாக 10-15 விநாடிகளுக்குள் பின்வாங்கப்படும். பின்னர் மடிப்புகள் 10-15 நிமிடங்களுக்குள் பின்வாங்கப்படும்," என்று விளக்குகிறார் அவர். மற்றொரு நிபுணரான டெர்ரி டோசர், "ஆனால், காணொளியில் பார்த்து 'மடிப்புகள் நீட்டிக்கப்பட்டிருப்பது போலத் தெரியவில்லை' என்று உறுதியாகச் சொல்வது மிகவும் கடினம். ஒருவேளை அவ்வாறு இருந்திருந்தால், ஒரு விமானம் அதன் புறப்பாட்டுச் செயல்முறையை முழுமையாக முடிக்கவில்லை என்பதே அதன் அர்த்தம்" என்கிறார். "இறக்கையின் மடிப்புகள் சரியான நிலையில் இல்லையென்றால், அதற்கு மனிதப் பிழை ஒரு சாத்தியமான காரணமாக இருக்கும். ஆனால் அதை உறுதிப்படுத்தும் அளவுக்கு காணொளி தெளிவாகவும் தரமாகவும் இல்லை" என்று பக்கிங்ஹாம்ஷையர் நியூ பல்கலைக் கழகத்தின் முன்னாள் விமானியும் மூத்த விரிவுரையாளருமான மார்கோ சான் கூறுகிறார். போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஃபிளைட் ரேடார் 24-இன் கூற்றுப்படி, விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஆகும். ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த விபத்தில்தான் போயிங் 787 விமானம் முதல் முறையாக விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த மாடல் விமானம் 14 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஆறு வாரங்களுக்கு முன்புதான் விமானத் தயாரிப்பு நிறுவனம், டிரீம்லைனர் என்று அழைக்கப்படும் இந்த மாடல் ஒரு பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்று ஒரு மைல்கல்லை எட்டியதாகத் தெரிவித்தது. அந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், 1,175க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்ட உலகளாவிய 787 விமானக் குழு, 30 மில்லியனுக்கும் அதிகமான விமான நேரங்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் விமானங்களை இயக்கியுள்ளதாக நிறுவனம் கூறியது. இந்த விபத்து, அதன் 737 திட்டங்களுடன், ஆபத்தான விபத்துகள் உள்படப் பல்வேறு சிக்கல்களைச் சமாளிக்கப் போராடி வரும் போயிங் நிறுவனத்திற்கு ஒரு பெரிய அடியாக விழுந்துள்ளது. தனது பணியில் ஓர் ஆண்டு நிறைவைக் குறிக்கவுள்ள தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி ஆர்ட்பெக்கிற்கு இது மற்றொரு சோதனையாக இருக்கும். அமெரிக்க விமானத் தயாரிப்பாளரான இந்த நிறுவனத்தின் எதிர்காலம் குறித்துக் கேள்விகளை எழுப்பும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்த்து வைக்க அவர் இந்தப் பணியில் அமர்த்தப்பட்டார். ஏர் இந்தியா நிறுவனம், பயணிகள் தொடர்பான பிரத்யேக அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. மேலும் தகவல் பெற விரும்பும் இந்திய குடும்பங்கள் 1800 5691 444 என்ற எண்ணை அழைக்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yqnwwjj3zo
  16. 🙃............................ நானா அது.................... அதுவரை வேறு எவரும் கமிண்சை தெரிவு செய்யாமல் இருந்ததால் அவரை நான் தெரிவு செய்திருந்தேன். மற்றபடி அதே கிளி தான்................🤣.
  17. லாட்ஸ் மைதானம் எப்பவுமே விருந்தினர்களுக்கு கடினமான மைதானம். போன வருடம் நடந்த இரண்டு போட்டிகள். இலங்கை 196, 292 ஓட்டங்கள் மேற்கிந்தியத் தீவுகள் 121, 133 ஓட்டங்கள் தென்னாபிரிக்கா கடைசியாக 2022ல் இங்கு விளையாடி இருந்தது. இங்கிலாந்து அணியை 165 மற்றும் 149க்கு உறுட்டி வெற்றி பெற்றார்கள்
  18. கடைசியில பூச்சியமே எங்கள் மூச்சு என்டுதான் வரும் போல கிடக்கு
  19. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.ஆனால் இந்த விடையங்களை ஒரு வைத்தியரது பக்கத்தில் பார்த்தேன்.இந்த மருத்துமனையிலும் சில ஊழல்கள் நடை பெற்றுள்ளதால் மல்லாகம் நீதி மன்றில் வழக்கு போய் கொண்டு இருக்கிறது..அது மட்டுமல்ல காலை 9 மணிக்கு வைத்தியசாலைக்கு போன நோயாளியை இரவு 11 மணிக்கு பின்னர் தான் வைத்தியர் ஒருவர் பார்த்துள்ளார்.உண்மையாக அந்த நோயாளியை வைத்தியசாலைக்கு போனதும் பார்த்திருக்க வேண்டிய நிலை(நெஞ்சு வலி வந்திருக்கிறது அந்த நோயாளிக்கு).பயிற்சியிலிருப்பவர்களுக்கு (எவருக்கும் )சில நிபந்தனைகள் இருக்கிறது.அதனை மீறனால் தண்டனைகளுக்கு முகம் குடுக்க வேண்டி வரும் இல்லயா..அப்படித் தான் இந்த நோயாளியை பார்த்தவரும் நாட்டை விட்டு தப்பி ஓடும் முயற்சியிலிந்து தடுக்கபட்டுள்ளார்.இப்படி பல பிரச்சனைகள் நீதி மன்றில் போய் கொண்டு இருப்பதாக பகிர்ந்திருந்தார் வைத்தியர்.
  20. விசித்திரமான ஒரு வியாதி தான் இந்த "சுமந்திரன் லவ்வர்சுக்கு" வந்திருப்பது. மண்டையன் குழுவை வழி நடத்தியவரை ஏற்றுக் கொள்வார்கள். ஏற்கனவே பார் இருந்த பெண்ணுக்கு இன்னொரு பார் லைசென்ஸ் எடுத்துக் கொடுத்த விக்கி ஐயாவை ஏற்றுக் கொள்வார்கள். "நான் பார் லைசென்ஸ் எடுத்துக் கொடுக்கவில்லை" என்று ஒரு வரியில் ஒப்புக் கொள்ள முடியாமல் வெட்டியோடும் சிறிதரனையும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், "ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைக்கவில்லை" என்று சொன்ன சுமந்திரனை ஒதுக்க தலையால் கிடங்கு கிண்டுவார்கள். கிடங்கு கிண்டுவோர் அனேகம் பேர் யார் என்று பார்த்தால், "ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்கிறோம்" என்று சொல்லி விட்டு, தாயகத்தில் வசிக்காமல் புலத்தில் அடைக்கலம் தேடிய "வீர தீரர்" களாக இருப்பர்😂!
  21. நேற்று என் பேரனுடன் இந்த விளையாட்டு எனக்கு ஏற்பட்டது .......... செம கஷ்டம்டா சாமி . ........ ! 😂
  22. அனுரகுமார அரசாங்கம் அதன் முன்னைய அரசாங்கங்களில் இருந்து வேறுபட்டதாக தெரியவில்லை - பொறுப்புக்கூறுவதற்கான அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜேர்மனி அழுத்தம் கொடுக்கவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் Published By: RAJEEBAN 12 JUN, 2025 | 11:52 AM இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாரிய அட்டுழியங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்கான அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜேர்மனி அழுத்தம் கொடுக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சூழ்நிலையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இலங்கை குறித்த நீண்டகால கரிசனைகளை புறக்கணிக்க முடியாது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜேர்மனிக்கான இயக்குநர் பிலிப்ப்ரிஷ் வேண்டுகோள் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் ஜேர்மனியிலும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் அதிகாரத்தில் உள்ளனர், ஆனால் இலங்கை ஜனாதிபதியை ஜேர்மன் சான்சிலர் பிரெட்ரிக் மேர்ஸ் சந்திக்கும்போது எழுப்பவேண்டிய கரிசனைகள் நீண்டகாலத்தவை என அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை அரசாங்கமும் தமிழீழ பிரிவினைவாத விடுதலைப்புலிகளும் 1983 முதல் 2009 வரை இலங்கையில் ஒரு கொடுரமான உள்நாட்டு போரில் ஈடுபட்டனர், அதில் இருதரப்பினரும் கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உட்பட பரவலான துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டனர். குறிப்பாக யுத்தத்தின் இறுதிமாதங்களில் அரசபடையினர் பொதுமக்கள் மீதுதாக்குதலை மேற்கொண்டனர், போராளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை பலவந்தமாக காணாமலாக்கினர். விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதுடன், ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறையை நிறுவியுள்ளது. ஆனால் திசநாயக்க அரசாங்கம் அதன் முன்னைய அரசாங்கங்களில் இருந்து வேறுபட்டதாக தெரியவில்லை, முன்னைய அரசாங்கங்கள் யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளை பாதுகாத்தன, பேரவையின் தீர்மானங்களை நிராகரித்தன. இலங்கையர்களை ஒன்றிணைத்து பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ளும்நோக்கில் கடந்த செப்டம்பர் மாதம் திசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார், ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ள போதிலும் தொடரும் மனித உரிமை மீறல்களிற்கு அவரது அரசாங்கம் தீர்வை காணவில்லை, கடந்த கால அநீதிகளிற்கு நீதி வழங்குவதை நோக்கி முன்னேறவில்லை. இலங்கை அரசாங்க நிறுவனங்கள் தமிழ், முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்தும் பாகுபாடுகளை காட்டிவருகின்றன, பலகாரணங்களை முன்வைத்து நிலங்களை அபகரிக்கின்றன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடும் போக்கு பௌத்தமதகுருமாரும் பாதுகாப்பு படையினரும் பல இந்து ஆலயங்களை கைப்பற்றி அவற்றை பௌத்த ஆலயங்களாக மாற்றியுள்ளனர். 2017 முதல் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை மூலம் பயனடைந்துள்ளது. 27 மனித உரிமை தொழிலாளர் உரிமை சூழல் பாதுகாப்பு பிரகடனங்களை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்காக இந்த வரிச்சலுகை வழங்கப்படுகின்றது. இலங்கை இந்த விடயத்தில் இன்னமும் பேரம் பேசுவதில் தோல்வியடைந்து வருகின்றது. ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினை பயங்கரவாத தடைச்சட்டம், இது ஒரு மோசமான துஸ்பிரயோக சட்டமாகும், இது நீண்டகாலமாக சித்திரவதை மற்றும் தடுப்புக்காவலிற்கு காரணமாக விளங்குகின்றது. இது பெரும்பாலும் தமிழர்கள், முஸ்லீம்களை இலக்குவைக்கின்றது.. தேர்தலிற்கு முன்னர் அனுரகுமாரதிசநாயக்க இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்தார். 2017 முதல் இலங்கையின் ஆட்சியாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இவ்வாறான வாக்குறுதியை வழங்கிவந்துள்ளனர். இதேவேளை எந்த வித ஆதாரமும் இன்றி பொதுமக்களை கைதுசெய்து தடுத்துவைப்பதற்கு திசநாயக்க அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்துகின்றது. ஐக்கியநாடுகளில் இலங்கை குறித்த தீர்மான விடயத்தில் ஜேர்மனி முன்னர் தலைமை வகித்தது எனினும் 2020 ஆண்டிற்கு பின்னர் இதிலிருந்து பின்வாங்கியுள்ளது. பொறுப்புக்கூறலிற்கான அழுத்தத்தை பேணவும், ஆதாரங்களை சேகரிப்பதை உறுதி செய்யவும், இலங்கை குறித்த தீர்மானம் இந்த ஆண்டின் இறுதியில் புதுப்பிக்கப்படுவது அவசியம். ஐநா முயற்சிகள் மற்றும் ஜிஎஸ்பிளஸ் வரிச்சலுகைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு திசநாயக்க பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை சீர்திருத்தங்களிற்கான தனது உறுதிமொழிகள் கடமைகளை நிறைவேற்றவேண்டும் என ஜேர்மன் சான்சிலர் வலியுத்த வேண்டும், இதுபோன்ற வாய்ப்புகளை தவறவிடக்கூடாது. https://www.virakesari.lk/article/217245
  23. நான் சொன்னது தெளிவா விளங்காமல் பேசும் ஆழ்வார்பேட்டை ஆண்டவரை🤣
  24. பிந்திய தகவல் 3ம் நாள் இரவு இடியுடன் கூடிய மழைக்கு வாய்புண்டாம். நான் 4ம் நாள் டிக்கெட் வாங்கும் போதே நினைத்தேன்🤣. ஒன்றில் மழை குழப்பும் அல்லது 3ம் நாளே நேட்ச் கிட்டதட்ட முடிந்து விடும் போல உள்ளது😔
  25. ஓம்…பொதுவாகவே லோர்ட்சில் முதல் நாள் முதல் பேட்டிங் விரும்பபடுவதில்லை. அத்தோடு இன்று மேகமூட்டம் வேறு. ஆனாலும் ஆரம்ப ஆட்டக்காரர்கள், 1 டவுனை தவிர அடுத்து வீழந்த 3 விக்கெட்டும் shot selection தவறியதாலே அவுட் ஆகின. இரெண்டாவதாக பேட்டிங் எடுத்ததின் பிரதிகூலம், 4 வதாக பேட் பண்ண வேண்டி வரும். முதல் இனிங்சில் சறுக்கினாலும், அவுசின் பேட்டிங் வரிசை, தென்னாபிரிகாவினதிலும் வலிமையானகாக தெரிகிறது. குறைந்த பட்சம் முதல் இனிங்சில் 300 ஐ நெருங்காவிடில் தெ.ஆ 4ம் இனிங்சில் 250+ அடித்து வெல்ல வேண்டி வரலாம். கஸ்டமாய் இருக்கும். அநேகமாக முடிவு வருவது உறுதி என நினைக்கிறேன். 3 ம் நாள் சில சமயம் மழை தூறலாக பெய்யலாம். ஆனால் பாதிக்காது. போட்டி சம நிலை என போட்டவர்களுக்கு 20 புள்ளிகள் லம்பாக போக போகுதோ? பயத்தில ஆள் இந்த பக்கம் வரவே இல்லை🤣
  26. கிருபர் ஜீ க்குப் பின்னால் நிற்பவர்கள் ஒன்றில் முன்னால் நிற்பவர்களை அழைத்துக் கொண்டு பின்னே செல்பவர்கள் அல்லது முன்னாலே நிற்பவரைத் தள்ளிக் கீழே வீழ்த்துபவர்கள். 😇 எது நடந்தாலும் கிருபன் ஜீக்கு ஆபத்து தான் 🤣 என்ன நடக்குது என்று பாப்போம் 😅 .
  27. அத திருப்பித் திருப்பிப் போடுறதில அவ்வளவு மகிழ்ச்சி. 😁
  28. எப்பிடி எங்க தொடங்கிறது முக்கியம் இல்லை. எப்பிடி எங்க முடிக்கிறதுதான் நம்ம இலக்கு. அதோட தலைவன் கிருபன் என்டா, என்ன நடந்தாலும் நமக்கு மகிழ்ச்சியே
  29. தன்ர பெயரை லிஸ்டில தானே கீழ கொண்டு போய் போட்ட மனசு இருக்கே… அதான் கடவுள் 🤣
  30. கிருபன் இப்பொழுதே முதல் இடத்தில் 20 புள்ளிகளுடன் இருக்கிறார். வாழ்த்துகள் கிருபன்.
  31. கடஞ்சா, இந்த திரியின் நோக்கம் கீழடி தொல்லியல் ஆய்வுகளையும், அதன் முடிவுகளையும் நிறுவும் அல்லது மறுக்கும் ஒன்றல்ல. மாறாக இது தமிழர் - திராவிடர் என்ற பேதத்தின் மூலம் பல துறைகளில் தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் பெரும் பணியாற்றிய சிலரை துரோகிகள் என்றும், வஞ்சகர்கள் என்றும், தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் என்றும் சிலர் அபாண்டமாகக் குற்றம் சுமத்துவதும், வேறு சிலர் அந்தக் குற்றங்களை ஆதாரங்களுடன் நிராகரிப்பதும் ஆகும். கி.ராஜநாராயணன் அவர்களுக்கும் தொல்லியியல் துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அவர் தமிழ் கண்ட ஆகச் சிறந்த கரிசல் காட்டு கதைசொல்லி. அவர் கரிசல் கதைகளை மட்டும் எழுதவில்லை, கரிசல் வட்டார அகராதியையும் அவரே உருவாக்கினார். இன்றும், என்றும் எழுதுபவர்களுக்கு இவர் ஒரு முன்னோடி. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவரால் இப்படியும் எழுத முடியும் என்பது எவ்வளவு ஒரு நம்பிக்கையை இந்த உலகத்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் ராஜ்யசபா உறுப்பினராக அறிவிக்கப்பட்ட கவிஞர் எழுத்தாளர் சல்மா எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கின்றார் என்பதும் இங்கே குறிப்பிடப்படவேண்டும். கி.ராவை ஒரு தமிழர் அல்ல என்றும், அவர் ஒரு கன்னடர் என்று சொல்லப்படுவதையும், அவர் மேல் விழும் பழிகளையுமே நான் மறுதலிக்க முற்படுகின்றேன். கோவில்பட்டியில் பிறந்து, வளர்ந்து, தன் நிலத்துக்கும் தமிழுக்கும் என்றும் நிலைத்து நிற்கும்செயல்களை செய்து முடித்து, அந்த மண்ணிலேயே மறைந்து போன ஒரு ஆசான் அவர். இதுவே தான் மேலே குறிப்பிடப்பட்டிருந்த மற்றவர்களின் நிலைமையும் கூட. இவர்கள் மேல் சுமத்தப்படும் பழிகள் அன்றாட அரசியல் சார்ந்தது. தமிழோ அல்லது வரலாறோ சார்ந்தது அல்ல. மிகவும் குறு நோக்குகள் கொண்டவை. ஐராவதம் மகாதேவனோ அல்லது பாலகிருஷ்ணனோ தொல்லியல் நிபுணர்கள் என்று நான் சொல்லவில்லை. இங்கே தொல்லியல் நிபுணர்கள் அமர்நாத் ராமகிருஷ்ணன் மற்றும் அவருடன் தமிழ்நாட்டு தொல்லியல்துறையில் பணிபுரியும் இன்னும் சிலர். நீங்கள் வழமை போலவே 'மத்தி எப்படி வேலை செய்கின்றது என்று மாநிலத்திற்கு தெரியாது............' என்று மீண்டும் ஆரம்பிக்கப் போகின்றீர்கள். அமர்நாத்தை மத்திய அரசுப் பணியிலிருந்து மாநிலத்திற்கு, மாநிலத்தில் இருந்து மத்திய அரசுப் பணிக்கு, மீண்டும் மத்திய அரசிலிருந்து மாநிலத்திற்கு என்று மாற்றி மாற்றி நியமிக்கும் போது, அமர்நாத் போன்றோர் எதையும் அறியாமலா ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போய் வந்து கொண்டிருப்பார்கள்? ** தமிழ்நாட்டில் சூடை மீனை மத்தி என்று சொல்லுவார்கள். மத்தி என்னும் சொல்லை பார்க்கும் போதெல்லாம் வலையில் தொங்கிக் கொண்டிருக்கும் சூடை மீன்கள் தான் மனதில் வருகின்றது.
  32. விசாரணயின் பின்பே எதையும் சொல்ல முடியும் என்பது சரியே. ஆனால் தலையோடு பொலிஸ் நிலையம் போய் கொலையை ஒப்பு கொண்டதால் - கொலையை இன்னார், இன்ன காரணதுக்காக செய்தார் என்பது வெள்ளிடமலை ஆகவே அந்த கொலையை கண்டிப்பதில் தவறில்லை என நினைக்கிறேன். அந்த இளைஞர் இப்படி போட்டோக்களை அனுப்பி சீண்டி இருந்தால் கொலையில் அவரின் பங்கும் உள்ளது. ஆனால் அவர் கொலையாளியை கொலை செய் என நேரடியாக தூண்டியிராத விடத்து, அவர் வழக்கில் ஒரு சாட்சியே ஒழிய குற்றவாளி அல்ல. நீங்கள் கூறியது போல் அவருக்கு அறிவுரை செய்ய மட்டுமே முடியும். வாசித்த சம்பவங்கள் உண்மையானல் - திருமணம் முடித்து விட்டு கொழும்பில் தனியாக போய் இருந்த கணவன் கணவனிடம் மணவிலக்கு பெறாமல் அவர்களை விட வயது குறைந்த இளைஞரிடம் உறவு வைத்து, கருவையும் உருவாக்கி கொண்ட மனைவி அப்படி ஒரு உறவில் இருந்தது மட்டும் அல்லாமல் கணவனுக்கே போட்டோ அனுப்பி சீண்டிய காதலன் இவர்கள் யாருமே சுத்தம் இல்லை. ஆனால் கணவன் பல நாட்களாக திட்டமிட்டு கொலை செய்தது இதை வேறு கட்டத்துக்கு கொண்டு போய்விட்டது. ஒரு நல்ல நண்பன் இருந்து - அவனிடம் மனம் விட்டு பேசி இருந்தால் கூட “தூக்கி போட்டு விட்டு, உன் வாழ்க்கையை பார்” என அவன் சொல்லி இருந்தால் கொலையை தடுத்திருக்கலாம். ஆனால் சமூகமே “வெட்டுடா, கொல்லுடா, உன் மானத்தை மீள பெறுடா” என பினூட்டம் இடுகிறதெனில் அந்த சமூகத்தில் இப்படி ஒரு அறிவுரை கணவனுக்கு கிடைக்கவும் வாய்ப்புகள் குறைவு. பிகு இங்கே பலர் சொல்வது போல இந்த மனைவி முழு அப்பாவியாகவும் இருக்கலாம். இவை எல்லாம் கணவனின் கட்டுகதைதாகவும் இருக்கலாம்.
  33. இலண்டனுக்குச் செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது ஏர் இந்தியா விமானம்தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. விமானத்தில் குறைந்தது 242 பேர் இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். விமான நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் புறப்படும் போது விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து படங்கள் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் இருப்பதைக் காட்டுகின்றன. தடுப்புகள் கொண்ட குடியிருப்புப் பகுதி போல தோற்றமளிக்கும் இடத்திலிருந்து எழும் புகையை அணைக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். விபத்து நடந்த இடத்திற்கு பல பொதுமக்கள் குவிந்துள்ளனர். மேற்கு இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. இதுவரை காயங்கள் அல்லது இறப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை. உள்ளூர் நேரப்படி பி.ப 13:10 மணிக்கு விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விமானத்திலிருந்து சிக்னல்களை இழந்ததாக ஃபிளைட்ரேடார் கூறுகிறது. அந்த நேரத்தில் தரையில் இருந்து சுமார் 190 மீட்டர் உயரத்தில் இருந்தது.
  34. விமானத்தில் இருந்தோரில் ஒருவர் நீங்கலாக ஏனையோர் பலி. தப்பியவரின் சகோதரரும் பலி. கீழே கட்டிடத்தில் இருந்தோரில் பலர் காயங்களுடன் தப்பியுள்ளனர். ஆழ்ந்த அஞ்சலிகள்.
  35. விமானத்தில் சென்ற அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.