Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87988
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20010
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    19112
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/11/25 in Posts

  1. இலங்கையின் வடக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் பரவலாகக் காணப்படும் "நாள்பட்ட சிறுநீரக வியாதி-CKD" பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும். கீழே இது பற்றி அமெரிக்க பல்கலையொன்றின் ஆய்வு இருக்கிறது. Think Global HealthThe Mysterious Kidney Illness Rising Among Sri Lankan Far...Are pesticides in drinking water to blame for kidney disease among young farmers? சுருக்கமாக, கல்சியமும், மக்னீசியமும் உயர்வாக இருக்கும் தண்ணீரில், கிளைபொசேற் , பராகுவாட் போன்ற களை கொல்லிகள் நீண்டகாலம் தங்கி நிற்பதால் நாள்பட்ட சிறுநீரக வியாதி உருவாகலாம் என ஊகிக்கிறார்கள். எளிமையான வழிகளாக, வரட்சிப் பிரதேசங்களில் வாழ்வோர் நீரிழப்பைக் குறைப்பதும், சுத்திகரித்த தண்ணீரைக் குடிப்பதும் சிறுநீரக நலனுக்கு உதவலாம்!
  2. நீங்கள். அடிபடுங்கள் அவர்கள். பிள்ளைகளை. நிறையப் பெற்று. நான்கு. திருமணங்களச்செய்து. பெரும்பான்மை. ஆகி விடுவார்கள் அடுத்து. மாநகரசபை. மேயர். வடமாகண முதலமைச்சர். முஸ்லிம்கள். தான். தமிழர்கள். படிப்படியாக. குறைந்து கொண்டு போகும்போது. அவர்களுக்கு. தீர்வும். கிடையாது. புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதை எற்றுக்கொண்டு. பால். சோறு. சாப்பிட்டு விட்டு மன்னிக்கும்படி. எப்படி. கோர. முடியும் ? தேவை. எனில். டக்கிலஸ். மன்னிப்பு. கேட்பார்.
  3. முஸ்லிம்கள் ஒருபோதும் தமிழர்களின் நியாயமான போராட்டதை ஆதரித்தது கிடையாது. மாறாக சிங்கள அரசுகளுடன் சேர்ந்து ஊர்காவல் படைகளில் இணைந்து பெரும் அட்டுழியங்களைதமிழ்மக்களுக்கு எதிராக செய்துள்ளனர். முஸ்லிம் தலைவர்களும் மெைச்சுப்பதவிகளைப் பெற்று முஸ்லிம் நாடுகளை தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிரான நிலைபாட்டை எடுக்க வைத்தனர்.ஆனால் தமிர்கள் இரத்தம் சிந்தி போராடி ஆயுத வலுச்சமநிலையில் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது தங்களுக்கு தனியான அலகு வேண்டும் என்று பேச்சுவார்ததைகளில் ஈடுபட்னர்.புலிகள் அவர்களது கோரிக்கையையு; சாதகமாகவே பேச்சு வாரத்தைகளில் அணுகினார்கள். அதிகம் போவானேன்.கிழக்குமாகாண சபைத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு முஸ்லம் தலைவர்களை அணுகிய போது முதலசை;சர் பதவியையே விட்டுத்தரத்தயார்என்று விட்டுக்கொடுத்த பொழதும் இனவாத சிங்களக்கட்சியுடன் இiஒந்து ஆட்சி அமைத்தனர். இதெல்லாம் வரலாறு. இதை விட்டு புலிகள் முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றிய ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு முஸ்லிம்கள் தங்கமானவர்கள் தமழிர்கள்தான் முஸ்லிம்களுக்கு எதிராக எப்போழுதும் செயற்படகிறார்கள் என்று எழுதுபவர்கள் புலிகளுக்கு எதிரான மாற்றுக்கருத்தாளர்கள்தான். உண்மையில் முஸ்லிம்கள் சிங்கள அரசோடு சேர்ந்து முள்ளிவாய்க்கால்வரையும் செய்த துரோகத்து புலிகள் அவர்களை மன்னித்தாலும் தமிழர்களால் மன்னிக்க முடியாத வடுக்களைச் சுமந்து நிற்கிறார்கள்.இருந்தாலும் தமிழ்கள் தங்கள் பெருந்தன்மையைக் காட்டும் பொழுதும் நேசக்கரங்களைத்தட்டி விட்டு சிங்கள அரசேடு சேர்ந்து தமிழ்களுக்கு எதிராகவே செயற்பட்டிருக்கிறார்கள் செயற்படுவார்கள். இவையெல்லாம் இந்த மாற்றுக்கருத்து புலிஎதிர்ப்பு மாணிக்கங்களுக்கு கண்களுக்குத் தெரியாதமாதிரி சைக்கிள் கைப்பில் புகுந்து விளையாடுவார்கள்.இவர்களைத்தமிழ்மக்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.
  4. இந்த இன எம்பிகளுள் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது ஒவ்வொரு மாதமும் அகில இலங்கை ஜமாத் நிவாகிகளும் , பிரதி அமைச்சர் முளப்பர் தலைமையில் என்.பி.பி...அமச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடாத்தி தங்கள் கோரிக்கைகளை வைத்து பெற்றுக் கொள்வர்கள் .. இது இவர்களூடைய இரகசிய நடவடிக்கை ...எப்படி ஊர்வலம் நடந்தாலும் ஒரு முசுலிம் எம்ப்யும் போகமாட்டார்கள் .. கக்கீம் , புல்லா ,ரிசாத்து உட்பட எல்லா எம்பிமார்டமும் ஊழல் மலிந்திருக்கு ..ஒரு நடவடிக்கையும் ஒரு வருடமாயிற்று நடந்ததா..இல்லை ..இதைவிட அண்மையில் ஞானசார தேரர் முள்ப்பர் மீது காய்ந்து துப்பியது இதற்குத்தான் ...விளங்கினால் சரி
  5. சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு - யாருக்கெல்லாம் வரும்? அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 10 நவம்பர் 2025, 02:22 GMT இந்தியாவில் 13.8 கோடி பேருக்கு சிறுநீரக நோய் பாதிப்பு இருப்பதாக சமீபத்திய லான்செட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் சிறுநீரக நோய் பாதிப்புகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம் பதிவாகியுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990-ஆம் முதல் 2023 வரையிலான தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2023-ஆம் ஆண்டு உலகளவில் 20 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 78.8 கோடி பேருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு இருந்தது. 20 வயதுக்கு மேலானவர்களில் 14% பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் மூன்று தசாப்தங்களில் உலகளவில் இந்த எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. (1990-இல் 37.8 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்) 2023-ஆம் ஆண்டு 14.8 லட்சம் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அதிக மரணங்களை ஏற்படுத்திய நோய்களில் சிறுநீரக நோய் 9வது இடத்தில் உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. சீனாவில் 1,53,000 பேரும் இந்தியாவில் 1,24,000 பேரும் சிறுநீரக நோயால் உயிரிழந்துள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. உலகில் அதிகபட்சமாக சீனாவில் 15.2 கோடி பேரும், அதற்கு அடுத்த இடத்தில் உள்ள இந்தியாவில் 13.8 கோடி பேரும் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரத்தில் முன்னேறிய, வளர்ந்த நாடுகளில் சிறுநீரக நோய் பாதிப்பு விகிதம் குறைவாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் சிறுநீரக நோயால் இறப்பவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை முன்னாள் தலைவரும், தற்போதைய தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலருமான மருத்துவர் கோபாலகிருஷ்ணனிடம் பிபிசி தமிழ் பேசியது. "சிறுநீரக செயலிழப்பு என்பது இரண்டு வழிகளில் நடைபெறுகிறது. ஒன்று திடீரென உடனே சிறுநீரகம் செயலிழப்பது, இரண்டாவது படிப்படியாக சிறுநீரகம் செயலிழப்பது. இதை தான் நாள்பட்ட சிறுநீரக நோய் என சொல்கிறோம். பெரும்பாலானவர்களுக்கு இந்த இரண்டாவது வகை பாதிப்பு தான் ஏற்படுகிறது." என்றார் அவர். படக்குறிப்பு, மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் மாறி வருகின்ற வாழ்வியல் முறைகளால் சிறுநீரக நோய் வருவதாக அவர் குறிப்பிட்டார். "நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன், அதிக அளவில் கலோரிகளை உட்கொள்வது மற்றும் குறைந்த அளவிலான உடல் சார்ந்த வேலைகள் ஆகியன சிறுநீரக கோளாறு ஏற்பட காரணமாக அமைகின்றன." எனத் தெரிவித்தார். சிறுநீரக நோயின் அறிகுறிகளை பட்டியலிட்ட அவர், ஆட்களைப் பொருத்து அறிகுறிகள் வேறுபடலாம் என்றும் தெரிவித்தார். அறிகுறிகள் என்ன? கால் மற்றும் தலை வீக்கம் சிறுநீர் வெளியேற்றம் குறைவது சோர்வு பசி வாந்தி ரத்த சோகை தூங்கும் முறை மாறுவது தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டாலும் சிறுநீரக கோளாறு ஏற்படும் என்று அவர் கூறினார். யாரை அதிகம் பாதிக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கட்டுமான பணியாளர்கள் (கோப்புப்படம்) விவசாயம், கட்டுமானம் போன்ற திறந்தவெளியில் பணிபுரியும் முறைசாரா தொழிலாளர்கள் தான் இதனால் அதிகமாக பாதிக்கப்படுவதாக கோபாலகிருஷ்ணன் கூறினார். "வெப்ப அழுத்தம், நாள்பட்ட நீரிழப்பு, காற்று மாசுபாடு மற்றும் ரசாயனங்களை நுகர்வது போன்ற காரணங்களால் சிறுநீரக நோய் ஏற்படுகிறது. நீண்ட நேரம் திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது நிழலில் இளைப்பாறுவதையும் சுத்தமான குடிநீர் எடுத்துக் கொள்வதையும் தவறாமல் செய்ய வேண்டும்," என்றார். இதய நோய்க்கும் சிறுநீரக நோய்க்கும் உள்ள தொடர்பு இதய நோயால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு சிறுநீரகம் செயலிழந்து போவதும் முக்கிய காரணமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. நீரிழிவு நோயும் உடல் பருமனும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணிகளாக உள்ளன. சிறுநீரக பாதிப்பில் ஐந்து கட்டங்கள் இருக்கின்றன. பெரும்பாலானவர்கள் 1-3 கட்ட பாதிப்பிலே உள்ளனர். நாள்பட்ட சிறுநீரக நோயும் இதய நோயும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்கிறார் கோபாலகிருஷ்ணன். சிறுநீரக பாதிப்பு அதிகரிக்கையில் இதய நோய் ஆபத்தும் அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார். ஆய்வறிக்கையின் படி, வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் பாதிப்பும் கூடுகிறது. முதியவர்களிடம் மிகத் தீவிரமான கட்டம் காணப்படுகிறது. ஆனால் அதற்கு மாறாக வயது கூடக்கூட டயாலிசிஸ் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது குறைகிறது. பரிசோதனை அவசியம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரத்த பரிசோதனை (கோப்புப்படம்) சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்களில் 30% பேருக்கு அது இருப்பதே தெரிவதில்லை என ஆய்வறிக்கை கூறுகிறது. "காலநிலை மாற்றத்தால் சராசரி வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளால் சிறுநீரக நோய் ஏற்படும். உகந்த வெப்பநிலை இல்லாததால் சிறுநீரகத்தின் செயல் திறனும் நாளடைவில் குறையும்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஒவ்வொரு ஆண்டும் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனை மூலம் சிறுநீரக நோய் பாதிப்பை கண்டறிய முடியும். இதனை குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்." என்றார் கோபாலகிருஷ்ணன். சிகிச்சைகள் என்ன? சிறுநீரக நோய்க்கு டயாலசிஸ் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என இரண்டு வாய்ப்புகள் உள்ளன. டயாலிசிஸ் முறை செலவு அதிகம் என்றாலும் தற்போது பெரும்பாலான காப்பீடுகளின் கீழ் டயாலிசிஸ் சிகிச்சை கொண்டு வரப்பட்டுள்ளது, அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது. யாரெல்லாம் சிறுநீரக தானம் செய்ய முடியும்? சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையைப் பொருத்தவரை, இரண்டு சூழல்களில் மட்டுமே ஒருவர் உறுப்பு தானம் செய்ய முடியும் என்கிறார் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலரான மருத்துவர் கோபாலகிருஷ்ணன். அவரது கூற்றுப்படி, ஒன்று சிறுநீரக தானம் செய்யும் நபர் நோயாளியின் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது நோயாளிக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பதோடு மட்டுமல்லாது அதனை நிரூபிக்கவும் வேண்டும். அப்போது தான் அவரது சிறுநீரக தானம் ஏற்றுக்கொள்ளப்படும். இவை போக யாரேனு மூளைச் சாவு அடைகின்ற சமயங்களில் அவர்களின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் உடல் உறுப்புகள் மாற்றுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டில் ட்ரான்ஸ்டான் என்கிற உறுப்பு மாற்று ஆணையம் உள்ளது. தடுக்கும் வழிகள் என்ன? பட மூலாதாரம், Getty Images ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவு பழக்கம் போன்ற, சிறுநீரக நோய் வராமல் தடுப்பதற்கான வழிகளையும் அவர் குறிப்பிட்டார். தினசரி 45 நிமிட நடை பயிற்சி உடல் பருமனை தவிர்ப்பது குறைவான அளவில் உப்பு மற்றும் சோடியம் எடுத்துக் கொள்வது பொட்டாசியம் அதிக அளவில் எடுத்துக் கொள்வது தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது அதிக அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வது புகையிலை நுகர்வை தவிர்ப்பது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn7epvpzd8lo
  6. பாரஊர்தி பயணிகள் வாகனங்கள் ஓட்டுபவர்கள் கூடுதலானோர் வெற்றிலை பாக்கு பாவிக்கிறார்கள். இதில் சிலர் போதையூட்டப்பட்ட பாக்கு பாவிப்பதாக சொல்கிறார்கள். இலங்கை போனால் நானும் எப்போதாவது வெற்றிலை பாக்கு போடுவேன்.
  7. இவர்கள் அப்பவே சிறியருக்கு முன்னோடியாய் இருந்திருக்கிறார்கள் . ......! 😂
  8. Vikadam.com · டாக்டர் - என்ன பிரச்சினை உங்களுக்கு...? எனக்கு என்ன வயசுன்னு தெரியாதது தான் பிரச்சனை டாக்டர்... அப்படியா...!? ஆமா டாக்டர்... இப்ப பொண்டாட்டி புள்ள குட்டிகளோட வசதியாயிருந்தாலும்... சின்ன வயசுல அப்பா, அம்மா இல்லாமலயே வளந்துட்டதால வயசு தெரியல... இப்ப என்ன உங்க வயசு தெரியனும் அவ்ளோதானே...? ஆமா டாக்டர்... ஆமா...? சரி இப்ப நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம்... சிஸ்டர் இங்க வாங்க நான் சொல்றத எழுதிக்குங்க... உங்க பேரென்ன... ராமநாதன்... என்ன தொழில் பண்றீங்க... பைனான்ஸ்... நைட்டு நல்லா தூங்குவீங்களா...? கடவுள் புண்ணியத்துல படுத்தவுடனே தூங்கிடுறேன் டாக்டர்... சந்தோஷம்... தூக்கத்துல கனவுலாம் வருமா... நெறய டாக்டர்.... அந்த கனவுல நடிகைகளெல்லாம் வர்றாங்களா...? ஆமா டாக்டர்.. எந்த மாதிரி நடிகைங்க... ரேவதி, அமலா மாதிரியான நடிகைங்க.... சிஸ்டர்... 45ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்... சரி வேற எந்த நடிகைகளும் வரமாட்டாங்களா...!!?? சிலசமயம் அம்பிகா, ராதா மாதிரியான வங்களும் வருவாங்க... சந்தோஷம்... சிஸ்டர் 48 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்... அப்புறம் வேற யாரெல்லாம் வருவாங்க...? ஷகிலா... ஊஹூம்... ஷகிலாலாம் எவர்கிரின்... அதவெச் செல்லாம் வயச கணிக்க முடியாது... வேற...வேற...? வேற... சில சமயம் கனவுல ராதிகா வருவாங்க... திடீர்னு ஶ்ரீபிரியாக்கூட வருவாங்க... ம்ம்... சிஸ்டர் 54ன்னு நோட் பண்ணிக்குங்க.. ம்... அப்புறம் ராமநாதன்... அப்புறம்... அப்புறம்... ம்... என்னைக்காவது நான் ரொம்ப உற்சாகமா இருந்தா அன்னைக்கு கனவுல சிம்ரன், நயன்ஸ் வருவாங்க... சிஸ்டர் 40 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம் சொல்லுங்க ராமநாதன்... ம்ம்... அவ்ளோதான் டாக்டர்... அவ்ளோதானா... சரி சிஸ்டர் நான் சொன்ன நம்பரை யெல்லாம் சொல்லுங்க... 45, 48, 54, 41... நாலு ரிசல்ட்டையும் கூட்டி நாலால வகுத்தா வர்ற ரிசல்ட் 47... மிஸ்டர் ராமநாதன் உங்க வயசு நாற்பத்தேழு... அட கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க டாக்டர்...!! என்ன கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டேனா...? அப்ப ஏற்கனவே உங்க வயசு தெரியுமா...? தெரியும் டாக்டர்... பக்கத்து பார்பர் ஷாப்புக்கு முடிவெட்டிக்க வந்தேன்... அங்கே ஒரே கூட்டம் ஒருமணி நேரமாகும்னுட்டாங்க... திரும்ப வீட்டுக்கு போகவும் மனசில்ல... பக்கத்துலயே மனோதத்துவ டாக்டர் நீங்க சும்மா உக்காந்திருந்நீங்களா... அதான் சும்மா ஒரு டைம்பாசுக்கு... ரொம்ப தேங்ஸ் டாக்டர்...! அடேய்... இந்தாடா... அடப்பாவி... போய்ட்டானே!! Voir la traduction
  9. மருத்துவ பீடத்திற்கு பேருந்து! adminNovember 11, 2025 யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவ பீடம் வரையில் அரச பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மருத்துவபீட மாணவர்கள் விடுதி, மருத்துவ பீடத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள, யாழ். நகர் பகுதியில் போதனா வைத்திய சாலைக்கு அருகில் காணப்படுகிறது. அத்துடன் மாணவர்கள் உள்ளக பயிற்சிகளுக்காக போதனா வைத்திய சாலைக்கு மருத்துவ பீடத்திற்கு வர வேண்டிய தேவையுள்ளது. இதனால் மாணவர்கள் போக்குவரத்தில் பல இடர்களை எதிர்கொண்டு வந்தனர். அந்நிலையில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து, மருத்துவ பீடம் வரையில் பேருந்து சேவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவையின் ஆரம்ப நிகழ்வில் மருத்துவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர். யாழ். மத்திய பேருந்து நிலையம் https://globaltamilnews.net/2025/222545/
  10. ஈழப்பிரியன், போலி வங்கி ஒன்றையே நடத்தி இருக்கின்றார்கள். 😂
  11. ஆள விடுங்க. ஒவ்வொரு வார்த்தையையுமா விளக்க முடியும். என்னால் இதுக்கு மேல எழுத முடியாது. இத்தோட முடிச்சுக்கிறேன். நன்றி.
  12. அவுஸ்திரேலியாவிலும் பல முக்கிய தாதாக்கள் துபாய், துருக்கி, லெபனான், தாய்லாந்து போன்ற நாடுகளிலே ஒளித்திருந்து கொண்டு நடவடிக்கைகளை இயக்குகிறார்கள். இப்படியான ஒரு தாதா தனது இன்ஸ்டாகிராமில் போட்ட தகவலின் அடிப்படையில் அவுஸ் போலீஸ் இங்கிருந்து துருக்கி போய் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.
  13. உங்கள் மகளுக்கு திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
  14. இதற்கு ஒரு தீர்வு உள்ளது. புகையிரத பாதையின் இருமருங்கிலும் இரும்பு வேலி அடைக்க வேண்டும். குறிப்பாக மக்கள் செரிந்து வாழும் பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடவைகள் உள்ள இடத்தில் பாதையின் இருமருங்கும் இரும்பு வேலி அமைக்கப்படவேண்டும். வெளிநாடுகளில் இப்படித்தான் செய்கின்றார்கள். இரும்பு வேலி சேதப்படாமல் கண்காணிப்பது காவல்துறையின் கடமை. கண்காணிப்பு கமெராவும் போடலாம்.
  15. காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் ரெஸ்ட் ரூம்புக்குள் நுழைந்துவிட்டது. பதட்டத்துடன் இருந்த அந்த புலி டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு பசி எடுத்தது. நான்காவது நாள் பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த ஒருவரை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் காணாமல்போனது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது, யாருமே கண்டுகொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி. அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். அவரையும் யாரும் தேடவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்!. இதனால் குளிர்விட்டுப் போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது. அடுத்த நாள் வழக்கம்போல் ஒரு நபரை அடித்துக் கொன்றது. அவர் அந்த அலுவலகத்தின் பியூன். அலுவலக ஊழியர்களுக்கு காபி வாங்குவதற்காக பிளாஸ்கை கழுவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார். சிறிது நேரத்தில் காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லையே என்று மொத்த அலுவலகமும் சல்லடை போட்டு தேடியது. நெடுநேர தேடுதலுக்குப் பின் ரெஸ்ட் ரூம்பில் உயிரிழந்து கிடந்த பியூனையும், அந்த ஆட்கொல்லி புலியையும் கண்டுபிடிக்கிறார்கள். புலி பிடிபடுகிறது. ஆம் _ உங்கள் மீதான மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ, வசதி வாய்ப்போ அல்ல. நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது... 💝 அகவி விஜி
  16. மாகாணசபைக்கு அப்போதிருந்த அதிகாரங்களை விட இப்போது குறைவாகவே உள்ளது. எப்போதாவது நடைமுறைப்படுத்தினாலும் என்பதால் அதிகாரங்களை மெதுமெதுவாக மத்திக்கே நகர்த்துகிறார்கள். இவர்களிடம் போய் அதிகாரத்தை பகிர்ந்தளிக்குமாறு சொல்வது செவிடன் காதில் ஊதிய சங்கு தான்.
  17. இந்தியாவில் ஐந்து வருடமாக ஒருவன் நீதிமன்றமே நடத்தியிருக்கிறான் என்று கேள்விப்பட்ட பின் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற மாதிரி உள்ளது.
  18. அததெரண கருத்துப்படம்.
  19. எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே ---------------------------------------------- என்ன சத்தம் அது எலியாக இருக்குமோ இரவிரவாக விறாண்டியதே என்று பல வருடங்களின் பின் பரணுக்குள் ஏறினேன் எலி என்றில்லை ஏழு எட்டு டைனோசர்கள் அங்கே நின்றாலும் கண்டே பிடிக்க முடியாத ஒரு காடு அது என்று அங்கே நான் விக்கித்து நிற்க 'என்ன, மேலே எதுவும் தெரியுதோ............' என்றார் காடு வளர்த்து எலி பிடிக்க என்னை மேலே ஏற்றிய என்னுடைய கங்காணி முப்பது வருடங்களுக்கு முந்தி இருந்த வாழ்க்கையின் அடையாளம் கூட அங்கே தெரிந்தது பழைய சாமான்களாகவும் சட்டி பெட்டிகளாகவும் இந்தப் பூகம்ப தேசத்தில் தலைக்கு மேல கத்தி பரண் தான் போல மொத்தத்தையும் அள்ளி விற்றாலும் சில பணம் கூட தேறாது அள்ளுகிற கூலி நூறு அது அவ்வளவும் நட்டம் ஒரு மூலையில் கிடந்த முதலாவது சூட்கேசை இன்னும் இது இருக்குதே என்று நினைவில் உருகி மெல்லிதாக தொட இரண்டு சாம்பல் எலிகள் பாய்ந்து பறந்தன சூட்கேசின் அடுத்த பக்கத்தில் அவை போட்டு வைத்திருந்த ஓட்டையால் 'என்னப்பா, அங்கே சத்தம்............ ஏதோ ஓடுதோ.................' 'காலில் தடக்கி ஏதோ சாமான் உருளுது..................' புலியையே முறத்தால் அடித்துக் கலைத்தவர்கள் அவர்கள் நான் எலியையே ஓடவிட்டவன் ஆகக் கூடாது சிஞ்ஞோரே.
  20. 'என்ன பிடிக்கிறாய் அந்தோனி எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே பொத்திப் பொத்திப் புடி அந்தோனி பூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரே...............' சின்ன வயதில் தெரிந்து கொண்ட இந்த நையாண்டிப் பாடல் அதன் உட்பொருள் தெரியாமலேயே மனதில் தங்கிவிட்டது. இது அந்நியருக்கு எதிரான ஒரு நையாண்டி என்று அன்று எவரும் சொல்லித்தரவில்லை................
  21. அபிநய்: தனுசுடன் ஒரே படத்தில் அறிமுகமானவர் அதன் பிறகு என்ன ஆனார்? பட மூலாதாரம், @abikinger/Instagram 10 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் அபிநய், சென்னையில் இன்று காலமானார். கல்லீரல் நோயால் அவதிப்பட்டுவந்த அவர், திங்கட்கிழமையன்று அதிகாலை காலமானார். செல்வராகவன் திரைக்கதையில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'துள்ளுவதோ இளமை'. 2002-ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம்தான் அவருக்கு முதல் படம். அந்தத் திரைப்படம் சில விமர்சனங்களைச் சந்தித்தாலும், மிகவும் கவனிக்கப்பட்ட படமாக அமைந்தது. தனுஷ் உட்பட அதில் நடித்திருந்த பலரும் வெகுவாக கவனிக்கப்பட்டார்கள். நாயகி ஷெரினுக்கு அதுதான் முதல் தமிழ் படம். தனுஷைப்போல, அபிநய்-க்கும் அதுதான் முதல் படம். விஷ்ணு என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார் அவர். துள்ளுவதோ இளமை படத்திற்குக் கிடைத்த வெற்றி, செல்வராகவன், தனுஷ், ஷெரின், அபிநய் ஆகியோருக்கு தமிழ்த் திரையுலகின் வாசலைத் திறந்துவிட்டது. பல மலையாளத் திரைப்படங்களில் நடித்திருந்த டி.பி. ராதாமணியின் மகன்தான் அபிநய். 'துள்ளுவதோ இளமை' இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்றாலும் இவர் நடித்து அடுத்தடுத்து வெளியான 'ஜங்க்ஷன்', 'சிங்காரச் சென்னை', 'பொன்மேகலை' ஆகிய திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. இதற்குப் பிறகு 'சொல்லச் சொல்ல இனிக்கும்', 'பாலைவனச் சோலை' போன்ற படங்களில் சிறிய சிறிய பாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார் அபிநய். 'கையெட்டும் தூரத்', 'சித்ரகூடம்', 'வைரஸ்' போன்ற மலையாளத் திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், தொடர்ந்து குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இதற்கிடையில் துபையில் சில ஆண்டுகள் பணியாற்றினார். இதற்குப் பின் சில விளம்பரப் படங்களில் நடித்தார் அபிநய். குறிப்பாக, ஒரு தேநீர் விளம்பரத்தில் அவருக்கு நல்ல கவனம் கிடைத்தது. பட மூலாதாரம், @abikinger/Instagram இதற்கிடையில் பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞராக, பையா, துப்பாக்கி, காக்கா முட்டை போன்ற படங்களிலும் பணியாற்றினார். 'துப்பாக்கி'யில் வில்லனாக நடித்த 'வித்யூத் ஜம்வாலுக்கு குரல் கொடுத்திருந்தார். அதில் "I dont know who you are, where you are, Once I get to you, I will kill you" வசனமும் அதற்கு விஜய் சொல்லும் பதிலான, 'I'm waiting' என்ற வசனமும் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், அவரது தாயாருக்கு ஏற்பட்ட புற்றுநோய், அதற்கான சிகிச்சைகள் ஆகியவை தன்னை கடுமையாக பாதித்ததாக பேட்டிகளில் தெரிவித்தார் அபிநய். கோவிட் பரவலுக்கு சில நாட்களுக்கு முன்பாக அவரது தாயார் மறைந்தார். அதற்குப் பிறகு தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளானார் அபிநய். இதற்குப் பிறகு வாய்ப்புகளில் கவனம் செலுத்தாதது போன்ற காரணங்களால் பொருளாதார ரீதியாக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டார் அவர். அடுத்த சில ஆண்டுகளில் அவரது கல்லீரல் செயலிழந்தது. இதனால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறிய நிலையில், கல்லீரலுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், நடிகர் கேபிஒய் பாலா உள்ளிட்டோர் அவருக்கு நிதி உதவி செய்தனர். ஆனால், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்துவந்த நிலையில், திங்கட்கிழமையன்று அவர் உயிரிழந்தார். இதற்குப் பிறகு அவரது உறவினர்கள் யாரும் வரவில்லையென அவரது வீட்டிற்கு வந்த திரையுலகினர் கூறினர். ஆனால், விரைவிலேயே அவரது தந்தை வழி உறவினர் ஒருவரும் தாய் வழி உறவினர் ஒருவரும் வந்திருந்து அவரது இறுதிச் சடங்குகளைச் செய்தனர். அபிநய் சமீபத்தில் 'கேம் ஆஃப் லோன்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியான பிறகு தனக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார் அவர். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg4p7y0dkqo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.