Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. தமிழ் இனிமை என்று அளவுக்கு மிஞ்சி அள்ளிப் பருகியதால் வந்த மயக்கத்தின் (வெறி) விளைவாக இருக்குமோ?? சிலர் தங்கள் வெறிக்கு, வாய்குரிசியாக வறுவல் தேடுவதுண்டு, கிந்தியும் ஒரு வறுவலாக இருக்குமோ??🤔
  2. எனது தவறான புரிதலைச் செம்மைப் படுத்திய இருவருக்கும் நன்றிகள்.🙏🙏
  3. முரட்டு ஆண்மையைத்தான் பெண்மை விரும்பும் என்று உடற்கூற்று நிபுனர்கள் வெளியிட்ட செய்தியைப் படித்துள்ளேன். இங்கு ஆண்மை மலராகி பெண்மையை சாய்க்கிறது. டைவேசில்தான் முடியுமோ…..😳😩
  4. நாங்கள் உண்ணும் உணவு வயிற்றுக்குள் சென்று பல இரசாயன மாற்றங்கள் அடைந்து உடலுச் சக்தியைக் கொடுத்து எம்மை வாழவைப்பதையும், சில உணவுகள் நோய்களைக் கொடுத்து எம்மை வருத்துவதையும் அனுபவத்திலும் அறிந்துள்ளோம். பயித்தம் பணியாரம் பயறு வறுத்து உருட்டிச் செய்வது. அந்தப் பயறு வயிற்றுக்குள் சென்று கெட்ட நாற்றமுள்ள காற்றை உற்பத்தி செய்து வெளியேற்றுவதும் நாம் அனுபவத்தில் கண்ட உண்மை. எங்கள் அன்புக்கும், அபிமானத்திற்கும் உரிய தமிழ் சிறித் தம்பி பயித்தம் பணியாரம் உண்டு கெட்ட காற்றும் உற்பத்தியாகி வெளியேறினால்….. அந்த நாற்றம்…. கட்டையோ, குட்டையோ, நெட்டையோ அழகிகளையும் அவர் அருகேகூட நிற்கவிடாமல் துரத்தியடித்து அவருக்கு மன நோயை ஏற்படுத்திவிடும் என்று எண்ணியதால்…. பயித்தம் பணியாரத்தைப் பார்சலில் இருந்து எடுத்துவிட்டேன். தமிழ் சிறி! தம்பி உங்கள் வருகைக்காக பலகாரப் பார்சல் எங்கள் வீட்டில் காத்துக் கிடக்கிறது.😌😀
  5. கொஞ்சமென்ன நிறையவே அங்கு வழங்கிய பலகாரப் பைகளை… பிள்ளைகளுக்கு, பேரன் பேத்திகளுக்கு என்று நானும் என் பதிவிரதையும் கேட்டுப்பெற்று பெரிய பாசல் கட்டுமளவுக்கு பலகாரங்கள் கொண்டுவந்துள்ளோம். உங்களுக்கும் ஒரு பார்சல் கட்டியிருக்கு, ஆனாலும் உங்கள் பார்சலில் உள்ள…. நீங்கள் விரும்பும் பயித்தம் பணியாரங்களை உங்கள் நன்மைக்காக வெளியே எடுத்துவிட்டேன். ஏன்? என்பதை நீங்களும், சில கள உறவுகளும் யோசித்து மண்டையைப் போட்டு உடைத்தபின்பு, ஆறுதலாக எழுதுகிறேன்.😆
  6. வாழ்த்துக்களுக்கு வாழ்த்துக் குறிகளைக் “!!” காணவில்லை, வயிற்ரெரிச்சலில் சொல்வதுபோல் உள்ளது.😩
  7. எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் மகளுக்குத் திருமணம், எங்ளுக்கு அழைப்புவந்து நாங்கள் அங்கு புறப்படுகின்றோம், நண்பருக்கு சாமியாரைத் தெரியாது, சிறியரும் வைத்தியசாலையில் இருப்பதால் அவரால் வரமுடியாது, வந்தாலும் மூக்கு அறுபட்டிருப்பதல்….அவரால் மூக்குமுட்ட சாப்பிடவும் முடியாது, கவலையோடு செல்கிறேன்.😒
  8. நான் இன்னும் இளமையானவன்தான் தம்பி. என் வயது 18. சஎழுத்துக்கு “அ” முன்னலை வகிப்பதுபோல் எண்ணுக்கு “1” முன்னலை, அதனால் 1றை முன்னுக்குப் போட்டேன்.🤪
  9. வணக்கம் வன்னியரே! உங்கள் மனம் வெள்ளை மனம், அதுதான் எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகிறீர்கள், ஆனாலும் இதனால் எங்களுக்கு வரக்கூடிய ஆபத்தையும் நீங்கள் உணரவில்லையா? எங்கள் மூவரையும் உருக்கி உருமாற்றி விற்கவா, அடகுவைக்கவா என்று பல கள உறவுகள் கூட்டம்போட்டுத் திட்டமிடுவதை இன்னுமா அறியவில்லை???😲🤭
  10. இண்டையோடு விட்டன் கொண்டலடி. மூக்குள்ளவரை சளி இருக்கும், இலங்கையில் சிங்களர் நிர்வாகம் இருக்கும்வரை கடன் இருக்கும்.🤧
  11. அத்தியடில் குத்தியன் இருப்பதாக எண்ணிவந்தேன்…. நல்ல கவிஞர் இருப்பதையும் இன்று கண்டேன், வாழ்த்துக்கள்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அவர்களே!!🙌 பெயர் எழுதிக் களைத்துவிட்டேன். வணக்கம்!👋
  12. மெஸ்சியை ஆபிரிக்கா எப்போ வாங்கியது? பாவம் அந்தக் கண்டத்தின் சூட்டிலை நல்லா கறுத்துப் போனார்.🥶😮‍💨
  13. பிந்தியதால் என்வரையில் நில்மினி தங்கைக்கு சிறிது இளமையைக் கூட்டிவிட்ட மகிழ்வோடு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!🙌 இதுவரை வாழ்த்தத் தவறிய கள உறவுகள் அனைவரின் பிறந்த நாளுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக!🙌🙌
  14. அதுதான் சம்பந்தர் பிரிந்துவிட்டாரே….இனியும் பிரிப்பதற்கு யார்தடை?? சம்பந்தரின் வாரிசுகள் யாராவது.???🧐
  15. இலங்கையில் தற்போது 10 பெரும் செல்வந்த அரசியல்வாதிகளின் பட்டியலைப் பார்த்தோம். பிச்சைப் பாத்திரம் ஏந்தியபின்பு பத்து இருபது என்று அதற்கு மேலும் பெருகுவது உறுதி.🤔
  16. அதிசாலை ஐந்து மணிக்கு எழுந்து தூக்கக் கலக்கத்தில் எங்கள் சாமியாரைச் சாடிவிட்டேன். மன்னித்தருளுக.😔🙏
  17. மாம்பழம் கிடைக்காத கவலையில் எங்கள் சாமி முருகன் அங்கியைத் துறந்தாலும் அங்குள்ளதை மற்றவருக்கு காட்டாமல் கோமணத்துடனாவது நின்றார்.😌 எங்கள் குமாரசாமியோ தனது தீவிர பக்தனென்றும் பாராமல் என் அங்கியைக் காரணம் காட்டினாலும்… எனது கோமணத்தையும் உருவி அனைவருக்கும் காட்டிக் கொடுத்துவிட்டாரே என அவரது பின்னூட்டம் எண்ண வைக்கிறது.!!🤔😳😂
  18. நீங்கள் தவறாகவே செய்திருந்தாலும் என்மனம் அதனை நிறைவாகவே ஏற்றுக்கொள்ளும் கவி அவர்களே.!😌
  19. என் சுயநினைவால் ஓரளவு உலகைப் புரிந்துகொள்ள வந்ததும், இந்துமதத்தில் அதன் சுய புராண ஏமாற்றுகளில் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது ஆயினும் அவற்றில் சில கோட்பாடுகள் வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய உபதேசங்களைக் கொண்டிருப்பதை மறுக்கவும் முடியாது. “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்”. பெற்றோரும், சுற்றத்தாரும் கடவுள்கள் பற்றியும், ஆலயவழிபாடு பற்றியும் என்னைத் தொட்டிலில் ஆட்டும்போதே ஊட்டியவை என் அறிவில் கல்மேல் எழுத்துப்போல் பதிந்துவிட்டது. தவிர திருநெல்வேலி பழங்கிணற்றடி பிள்ளையார் கோவிலில் அதன் பூசை புணர்கார வழிபாடுகளை என் பெரியப்பா ஒருவர், அவர் உடம்பு இயலாமல் போகும்வரை மேற்கொண்டு வந்தார், தும்பிக்கையான்மேல் அவர் எனக்கு ஏற்படுத்திய பக்தியும், நம்பிக்கையும் இன்றுவரை ஏற்பட்ட பெரும் துன்பங்களையும் நீர்த்துபோக வைத்துள்ளது. யேர்மனி சுற்காட் நகரில் ஆரம்பிக்கப்பட்ட சித்திவினாயகர் ஆலயத்தில் பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவானவர்கள் அதிகம் இருந்தும் அதற்கு எதிரானவர்கள்களின் கைகளிலேயே நிர்வாகம் இருந்ததினால் குழப்பங்கள் ஏற்படத் தொடங்கிது, நிர்வாகத்தைக் கையேற்று அதனைச் சீர்செய்ய முயன்ற வேளை பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது, அதன் பின்னரே விடுதலைக்கு ஆதரவுதந்த சிலரின் உண்மைச் சொரூபம் வெளிவரத் தொடங்கியது. இதனால் ஏற்மபட்ட மனவுளைச்சலில் மௌனமாக இருந்த வேளையில்தான் பிள்ளையார் தன் தம்பி பாலமுருகன் பெயரில் ஒரு கோவிலை எங்கள் இல்லத்தின் அருகே நிறுவினார். அந்தக் கோவிலுக்கு நான் சென்றதும் அதன் அழகும் நிர்வாகமும் என் மனவுளைச்சலுக்கு ஒரு ஆறுதல் தந்ததை உணர்ந்ததால் தொடர்ந்து அங்கு செல்ல முடிவுசெய்து செல்கிறேன். தமிழையும் அதன் கோட்பாடுகளையும் அழித்துவரும் வடவர் மொழியையும் அவர்கள் மதமான இந்து சமயக் கோட்பாடுகளையும் உணர்வுபூர்வமாக உள்வாங்கிய நிலைதான், நான் திருவிழாவில் மேலங்கியுடன் நிற்பதும், சில சமயப் பிறழ்வுகழும் இங்கு சில கள உறவுகளின் கண்களை உறுத்தியுள்ளது. கேலிச் சித்திரம் வரைவதில் புகழ் பெற்ற என் மதிப்புக்குரிய நண்பர் கவி அவர்கள் எனக்கு சித்திரம் வரைந்து என்னைக் கோமாளியாக்காமல் இருப்பதற்கு நன்றி!!🙏🙌
  20. அப்படி அல்ல சுவைப்பிரியரே! துஷ்டரைக் கண்டால் தூர விலகு. அவர்கள் தமிழர்கள் இத்திரியிலும் துஷ்டர்களைக் கண்டு விலகி நிற்கிறார்கள். 😔
  21. காமத்தின் உச்சமே அறியாது கருத்தரித்துக் குழந்தைகள் பெற்ற அன்னையர்களும் உண்டு எனச் செய்திகளும் வந்துள்ளன. 5 வருடங்களாக காதலித்து ஒன்றிணைந்த போதும் காணமுடியாத அந்த உச்சத்தைக் கலியாணம் செய்து காணமுடியுமா… என்ற ஏக்கமும், ஆதங்கமும் மன உளைச்சலை ஏற்படுத்தி அந்தக் காரியத்தைச் செய்ய வைத்திருக்கலாம். அவர் டாக்டர் பயிர்ச்சி பெறுபவர் படித்தவர், கல்லானாலும் கணவன் என்கிற பழைய பஞ்சாங்கம் அவரிடம் அற்றுப் போயிருக்கும். 🤔
  22. சம்மபந்தர் மட்டுமா தூக்கிப் பிடிக்கிறார்????😳🤔 பாம்பின் நஞ்சு கொடியது உயிரைக் கொல்லும். ஆனால் அதுவே மனிதரின் கொடிய நோய்களைத் தீர்ப்பதற்கு ஒரு மருந்தும் ஆகிறது. சம்பந்தரின் தமிழின துரோகத் தலைமை வாழ்க்கையும் தமிழினத்திற்கு ஒரு மருந்தாகட்டும். சம்பந்தரின் ஆத்மா சாந்திபெற வேண்டுவதோடு, அவர்போன்றோர் இனிப் பிறவாதிருக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏
  23. அங்கே பனைமரங்கள் இருந்தால் இன்னும் பெருமை, பனைமரத்தில் ஏறி ரம்பாவைப் பார்க்கலாம், அத்தோடு யாழ் இந்துமகளிர் கல்லூரியையும் பனைமரத்திலிருந்தே பார்க்கலாம்.🧐🤩😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.