Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஈழப்பிரியன்

  1. https://eservices.immigration.gov.lk/emb/eEmbarkation/'#/home-page இலங்கை போக இருப்பவர்கள் மேலே உள்ள சுட்டியை அழுத்தி Embarkation Card நிரப்பினால் அங்கே போய் மினக்கெட தேவையில்லை. ஆனால் போவதற்கு 4-5 நாட்கள் இருக்கும் போதே நிரப்ப அனுமதித்தார்கள். இப்போது எப்படியோ தெரியவில்லை.
  2. இவர்கள் தமிழருக்கு தீர்வே தேவையில்லை என்கிறார்களே? ஐக்கிய இலங்கை தான் குறிக்கோள். ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றினாலும் பாராளுமன்றைக் கைப்பற்ற முடியுமா? ஒவ்வொரு சட்டங்களையும் பாராளுமன்று அல்லவா நிறைவேற்ற வேண்டும். மிக முக்கியமாக இவர் கலந்து கொண்ட எந்த ஒரு சந்திப்பிலும் இனப்பிரச்சனை பற்றி மூச்சே விடுவதில்லை.
  3. யானைக்கும் அடி சறுக்கும். எனக்கும் யாழில் செய்தியாக வந்தபடியாலேயே விழிப்பாக இருந்தேன். எனக்கு தெரிந்த பலர் போகும்போதும் இப்படி ஒரு சங்கதி இருக்கிறது என்று சொல்லி அவர்களையும் செய்ய வைத்தேன். அத்துடன் நான் போனநேரம் ஒரே கட்டணத்தில் 6 மாதகாலம் நிற்கலாம்.எனவே ஒரு மாதத்துக்கு சற்று கூடுதலாகவே நின்று வந்தேன்.
  4. நான் அனேகமாக பயணம் செய்வது இந்த விமான சேவையில்த் தான். காரணம் 50 றாத்தல் 2 பொதிகள் விமானத்தில் வைத்திருக்க இரண்டு. அடுத்தது எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.ரத்துப் பண்ணலாம்.
  5. https://www.srilankaevisa.lk/information How to Apply for a Sri Lanka eVisa? 1. Visit the official website of Sri Lanka eVisa. 2. Create an account or log in if you already have one. 3. Fill out the online application form with accurate details. 4. Upload the required documents, including a scanned copy of your passport, a recent photograph, and any additional documents specified for your eVisa category. 5. Pay the eVisa fee securely online using the available payment options. 6. Once your application is submitted and payment is confirmed, you will receive an acknowledgment receipt and a unique application reference number. 7. Track the status of your eVisa application online using your reference number. 8. Upon approval, download and print your eVisa to present to the Immigration officer at the port of entry in Sri Lanka. இந்த தளத்தில் போய் பார்த்தால் பழைய மாதிரி சகல விபரங்களையும் போட்டு (கூடுதலாக பாஸ்போர்ட்டும் படமும் கேக்கிறார்கள்)அனுப்பினால் சரி என்கிறார்களே? வந்த விசாவை காப்பி எடுத்து கொண்டு போகட்டாம். @MEERA @goshan_che
  6. ஒ…சரியான லுச்சா கூட்டம்🤣. போவோரில் பெரும்பாலானோர் ஒன்லனில் எடுத்து விட்டே போவார்கள். அவ்வளவு பேரையும் ஒன் அரைவல் எடுக்க வைத்தால் - அமளி வந்தே தீரும்🤦‍♂️. தகவலுக்கு நன்றி எப்படிப்பட்ட கணனியை வைத்திருந்தாலும் இரண்டு விமானங்கள் ஒன்றாக வந்தால் எதிர்காலத்திலும் இப்படி மிக நீண்ட வரிசையில் நிற்க வேண்டி வரும். பணம் கூடினாலும் பரவாயில்லை என்று பேசாமல் 5 வருட மல்ரிப்பிள் விசா எடுத்து வைத்திருந்தால் பிரச்சனை இல்லைப் போல.
  7. Disembarkation card உம் on line இல் நிரப்பலாம். 23 சித்திரையில் போனபோது நேரே இமிகிரேசன் கவுண்டருக்கு போனோம். ஒரு கதையும் இல்லை.குத்திப் போட்டு தந்தார்கள். அதுதானே விடயத்தை தெளிவா சொல்லுங்க. எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இப்போது தெளிவடைந்துவிட்டேன்.
  8. இரண்டு வெய்காயங்களின் சம்பாசணை நன்றாக இருக்கிறது.
  9. எப்படி குறைந்த வயதில் எப்படி காலமானார்? ஆழ்ந்த இரங்கல்கள்.
  10. பிராண்டி விட்டு முட்டைக் கோப்பி.
  11. போற போக்கைப் பார்த்தால் இலங்கைத் தமிழரின் நிலை தமிழ் நாட்டிலும் வருமோ என எண்ணத் தோன்றுகிறது.
  12. திருப்பூர்: திருப்பூரில் தமிழக இளைஞர்களை வடமாநிலத்தவர் ஓட ஓட விரட்டியதாக வெளியான வீடியோ பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிழைப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வருகை தருவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. வடமாநிலங்களில் சம்பளம் குறைவாக உள்ளதாலும் வேலைவாய்ப்பு பெரியளவில் இல்லை என்பதாலும் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். ஹோட்டல், கட்டிட பணிகளுக்கு வெளிமாநில தொழிலாளர்களே அதிகம் இங்கு வருகிறார்கள்.. இருப்பினும், இப்படி அதிகப்படியாக வரும் வடமாநிலத்தவரால் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து கொண்டேதான் இருக்கிறது. வடமாநிலத்தவர் ஊதியம், தொடர்ச்சியாக வேலை கிடைப்பது உள்ளிட்டவற்றால் வடமாநில தொழிலாளர்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வர ஆர்வம் காட்டுகிறார்கள். இது எப்போதோ நடக்கும் சம்பவம் இல்லை.. வட இந்தியாவில் இருந்து வரும் எந்தவொரு ரயில்களைப் பார்த்தாலும் நமக்கு இது புரியும். வடமாநிலத்தவர் மார்கெட்டை காட்டிலும் குறைந்த விலையில் வேலை பார்ப்பதாகவும் இதன் காரணமாகவே தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளன. திருப்பூர் இருப்பினும், குறைந்த விலையில் ஆட்கள் தேவை இருப்பதால் வடமாநிலத்தவர் தொடர்ந்து இங்கு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். முதலில் சென்னை உட்பட பெருநகரங்களில் மட்டுமே இவர்கள் அதிகம் வந்து கொண்டிருந்த நிலையில், இப்போது சென்னையைத் தாண்டி மற்ற சிறு நகரங்களிலும் செட்டில் ஆகத் தொடங்கியுள்ளனர். குறிப்பாகத் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்றால் வடமாநிலத்தவரையே பெரும்பாலான இடங்களில் பார்க்க முடியும். பரபர வீடியோ இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தமிழக இளைஞர்களை ஓட ஓட விரட்டுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வந்தது. இது எங்கோ எடுத்தது இல்லை.. நம்ம திருப்பூரில் நடந்த சம்பவம் தான் இது. அங்கிருந்த தமிழக இளைஞர்களைப் பல நூறு வடமாநிலத்தவர்கள் இணைந்து ஓட ஓட விரட்டிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகப் புயலைக் கிளப்பியது. போராட்டம் அனுப்பர் பாளையத்தில் தமிழக தொழிலாளர்களைத் தாக்க முயன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வடமாநில தொழிலாளர்களின் செயலுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பனியன் அலுவலகத்தைத் திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் ஆய்வு செய்து போராடியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆட்சியர் அலுவலகம் முற்றுகை இருப்பினும், தமிழர்களைத் தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் நேற்று பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானப்படுத்தினர். இதனால் அங்குச் சற்று பதற்றமான ஒரு சூழல் உருவானது. இதன் காரணமாகப் பாதுகாப்பு கருதிச் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது தொடர்பாகத் திருப்பூர் போலீசார் தரப்பில் கூறுகையில், "புகை பிடித்தல் குறித்து இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை தகராறாக மாறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் சிலர் தவறான தகவல் பரப்பி வருகின்றனர்" என்றார் Read more at: https://tamil.oneindia.com/news/tiruppur/many-tamil-groups-are-protesting-against-north-indians-attacking-tamils-in-tiruppur/articlecontent-pf852979-496221.html
  13. கூட்டும் போது 300 ரூபா குறைக்கும் போது 150 ரூபா. இதுக்கு பெயர் விலை குறைப்பு.
  14. இந்திய கம்பனியே இதை நடத்துவதாக செய்தியில் கூறும்போது அவசர அவசரமாக இந்தியாவுக்கும் இதுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என ஏன் இந்திய உயர்ஸ்தானிகர் அறிக்கை விட்டார். எவ்வளவு ஒரு முக்கியமான பொறுப்பு வாய்ந்த துறையை போதிய பரிசோதனைகள் செய்யாமல் எப்படி களமிறக்கிவிட்டனர். நீங்கள் ஆச்சரியப்பட்டது தான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இன்னும் இன்னும் வரும். மயங்கி விழுந்துடாதேங்கோ.
  15. ஐயா ஏற்கனவே ரணிலுக்குத் தான் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்றார். அது சித்திரையில். இது வைகாசியில். ஆனியில் எந்த ஆணியைப் புடுங்கப் போகிறாரோ? இப்படி ஆளுக்காள் இழுபறிப்பட்டு அங்கு போய் யார் யாருக்கு வாக்கு போடப் போகிறார்களோ? அதைவிட கஜேகுழு சொல்வது போல பேசாமல் பகிஸ்கரிக்கலாம் போல இருக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.