Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. நீர்வேலியானுடனான சந்திப்பில் இந்த வீதியின் இன்னும் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். உதாரணத்துக்கு அரபுதேச பாலைவனத்தில் மணல் மேடுகள் உள்ளது போல இந்த வீதியிலும் இருந்தது.கோடை காலத்தில் பெரிய வாகனங்கள் கொண்டுவந்து பல விளையாட்டுக்கள் நடைபெறுவதாக சொன்னார்.
  2. நன்றி கொழும்பான். சிறி 1490களில் கொலம்பஸ் அமெரிக்காவை வந்தடைந்தார். ஆனாலும் அவர் ஏதோ இந்தியாவின் ஒரு கரையில்த் தான் வந்திறங்கியதாக நம்பினார்.
  3. நல்லதொரு விளக்கம்.இத்தனையும் நடந்திருக்குதா? நன்றி நீர்வேலியான். புங்கை நல்லகாலம் நான் அரைகுறையாக சொன்னதை நீர்வேலியான் முழுமையாக சொல்லியுள்ளார்.
  4. பகலவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  5. மேலே உள்ளது தான் நெடுஞ்சாலையின் பெயர்.பெயர் தான் நெடுஞ்சாலை ஆனால் ஒற்றையடிப் பாதையே.வேகமும் ஒரு சில இடங்கள் 55 மைல்கள்.கூடிய தூரம் 15-20-25 இப்படியாகவே இருந்தது.நாங்கள் விரும்பினால்க் கூட வேகமாக ஓட முடியாது. படங்கள் எடுக்கக் கூடிய இடங்கள் இருந்தன.ஆனாலும் எமது கைபேசியினால் பரந்த தேசங்களை எடுக்க முடியாது.ஆரம்பத்தில் இருந்து முடியும்வரை மிகவும் ரசிக்கக் கூடிய இடமாக இருந்தது.நின்றுநின்று போகிறபடியால் தொடர்ந்து கார் ஓட வேண்டாமென்று பிள்ளைகள் இடையில் ஒரு கொட்டேலும் போட்டிருந்தனர். பிற்பகல் 6 மணிபோல் கொட்டலை சென்றடைந்தோம்.இரவு நல்ல சாப்பாடு நல்ல தூக்கம்.நீண்ட தூரம் கார் ஓடுவதானால் நிறைய சாப்பிடுவதில்லை.காலை சாப்பாடு கொட்டேலில் மீண்டும் பகல் 9.30 போல புறப்பட்டோம்.அன்றைய தினம் அதிகம் நின்று செல்லவில்லை.ஒரேஒரு இடம் தான் பார்க்க திட்டமிட்டிருந்தோம்.வேறோன்றுமில்லை வண்ணாத்தி பூச்சிகளே. குறிப்பிட்ட ஒரு அரைமைல் சுற்றளவில் தேனீக்கள் எப்படி இருக்குமோ அதே மாதிரி வண்ணாத்தி பூச்சிகள்.மிகவும் ஆச்சரியமாக இருந்தது.படமெடுக்கலாம் என்று கைபேசியில் பார்த்தா எல்லா வண்ணாத்தி பூச்சிகளும் சிறிய தேனீக்கள் போல தெரிந்தன. அங்கிருந்கு நேராக மகளாக்கள் நின்ற இடத்துக்கு போய் சேர்ந்தோம். அடுத்த நாள் கொலிவூட் என்ற பெரிய எழுத்துக்கள் உள்ள விளம்பரத்தை பார்க்க போனோம். நான் நினைத்திருந்தது வேறு.கண்ட காட்சியோ வேறு. இதுவரை நான் நினைத்தது கொலிவூட் நடிகர் நடிகைகள் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களே அந்தப் பகுதியில் இருப்பார்கள்.உள்ளே போய் பார்க்க கட்டணம் அறவிடுவார்களோ பெரிய கட்டுப்பாடுகள் இருக்கும் என்று கனக்க எண்ணியிருந்தேன்.நான் தான் இதை ஒருதரமாவது பார்க்க வேண்டும் என்று சொல்ல பிள்ளைகள் சிரிக்கிறார்கள்.இதைப்போய் என்னத்தை பார்க்க போறீங்கள் என்று. ஒரு மலைப் பிரதேசத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.காரில் போக பல பாதைகள் இருக்கும் என எண்ணுகிறேன்.நாங்கள் போன பாதை மலையில் கொஞ்ச தூரம் போனபின் குடிமனைகள் உள்ள இடத்தால் ஒரு கார் மட்டுமே போக கூடியவாறு வீதிகள் இருந்தன.அங்குள்ள மக்கள் இதை பார்க்க வருபவர்களின் தொல்லை தாங்க முடியாமல் இந்த றோட்டால் போக கூடாது தனியார் றோட்டு வாகனம் நிறுத்தக் கூடாது என்று பலவாறு எச்சரிக்கை பலகைகள் தொங்கவிட்டிருந்தனர். ஓரளவுக்கு மேல் எமக்கும் யோசனை.ஏதோ கிடைத்த இடத்தில் நிறுத்திவிட்டு மலையில் சிறிது தூரம் ஏறி போய் பார்த்தோம்.வழமையில் நல்ல காலநிலையாக இருந்த இடம் நாங்கள் போனகிழமை மிகவும் குளிராக இருந்தது.காலநிலை நன்றாக இருந்தால் நிறைய கூட்டம் அந்த கொலிவூட் என்ற விளம்பர பலகையிலேயே ஏறி படங்களெல்லாம் எடுப்பார்களாம். இதனிடையே நீர்வேலியானை சந்தித்தது பற்றி எழுதியிருந்தேன். கடைசியாக ஒரு கோவிலுக்கு போய் தரிசனத்துடன் எமது லாஸ் அங்கிலஸ் சுற்றுலாவை முடித்துக் கொண்டு புறப்பட்டோம். வரும்போது நெடுஞ்சாலை 5 வழியாக 6 மணிநேரத்தில் வீடு வந்து சேர்ந்தோம். நன்றி. இனிவராது. யாராவது கலிபோர்ணியா போனால் நிச்சயம் இந்த பாதையில் பயணித்து பாருங்கள்.
  6. உண்மை தான் சிறி. பேரப்பிள்ளைகள் வந்து எமது சுதந்திரம் பறி போகிறது. கணனியோ போனோ விளையாட விடுவதில்லை. அதைக் கண்டாலும் எடுத்து தந்துவிட்டு போவார்கள். சில பிள்ளைகள் போன் ரிவி இல்லாவிட்டால் தொலைஞ்சுது. நாங்களும் பழக்க வேண்டாமே என்று கவனமாக இருக்கிறோம். என்னா பெரிசு கடையை பூட்டாவிட்டால் கல்லெறி விழும் போல இருக்கே. கெதியில் பூட்ட முயற்சி செய்கிறேன்.
  7. ஒரு காலத்தில் இந்தியன் இருந்தார்கள். பின்னர் ஸ்பானிஸ்(கூடுதல் மெக்சிக்கன்ஸ்). 1850களில் திடீரென தங்கம் கண்டுபிடிக்க உள்ள வெள்ளை இனத்தவர் குடியேறிவிட்டனர். எல்லோரும் படங்கள் படங்கள் என்றால் சுட்டுத் தான் போட வேண்டும். கடந்த வருடம் எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்தது. இங்கு பாடப் புத்தகங்களிலேயே இவை பற்றி இருந்ததால் மிகவும் ஆர்வமாக இருந்தேன். அத்தோடு அமெரிக்காவின் மிகவும் புகழ் பெற்ற களியாட்ட நகரமான லாஸ்வீகசும் ஒன்றாக பார்க்க கிடைத்தது. இரண்டையும் பார்த்தது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது.
  8. ஏன்.? என்ன காரணம் . இப்போது முகம் எப்படி இருக்கிறது? காரில் வேகமாக போகலாமா இது எனக்கு நடந்ததல்ல.எனது அண்ணனின் மகனுக்கு நடந்தது.கோடைகாலம் மிகவும் வெப்பமாக இருக்கும் போது காரின் மூடியை திறந்துவிட்டு ஓட நன்றாக இருந்திருக்கும்.அனல்காற்று அடித்ததே தெரிந்திருக்காது. பெருமாள் அமைதி பிளீஸ்.
  9. தொடரும் ஆனால் மெதுவாக. நீங்கள் இருக்கிற நம்பிக்கையில்த் தான் கிறுக்கத் தொடங்கியுள்ளேன். நாங்கள் போன அந்தக் கிழமை மிகவும் குளிர்.சிலசில இடங்களில் நின்று பார்த்ததோடு சரி.படங்கள் எடுக்கவில்லை.கடற்கரை ஓட்டமென்றதால் கடற்காற்றும் அதிகமாக இருந்தது.காற்றில்லாவிட்டால் குளிரைத் தாங்கலாம்.
  10. நீண்ட நாட்களாக சன்பிரான்ஸ்சிஸ்கோவில் இருந்து லாஸ் அங்கிலஸ் கடற்கரை ஓரமாக உள்ள ஒற்றையடிப் பாதையில் (அனேகமான இடங்கள்)போக வேண்டுமென்று ஒரு கனவு இருந்தது. ஒரேஒரு முறை ஒரு 50 மைல் தூரம்வரை குடும்பமாக ஒரு நிகழ்வுக்கு போயிருந்தோம்.அப்போதே இந்த பாதையின் மகத்துவம் பற்றி சொன்னார்கள்.அப்போதே எல்லாவற்றையும் கேட்ககேட்க கடற்கரையையும் பார்க்க ஒருமுறை இந்த பாதையில் போனால் என்ன என்று யோசித்தேன். அதன் பின் 2012-14 (சரியாக ஆண்டு நினைவில் இல்லை)ஆண்டளவில் அவுசிலிருந்து அண்ணனின் மகன் நண்பியுடன் வந்திருந்தான்.அவனும் இந்த பாதையை கேள்விப்பட்டோ ஏதோ இதே பாதையில் கொன்வேட்டர் கார் வாடகைக்கு எடுத்து அதுவும் கோடை காலத்தில் மேலே துறந்துவிட்டுட்டு அவ்வளவு தூரமும் இருவரும் பயணம் செய்தனர்.பயணம் முடிந்து அடுத்தநாள் தூக்கத்தால் எழும்பினால் முகம் முழுக்க தோலுரிந்து இருந்தது வேறுகதை. ஏற்கனவே எனக்குள் இருந்த ஆசை இவனும் போன அனுபவங்களை சொல்லசொல்ல இன்னும் வேகம் கூடியது.ஆனாலும் நடக்குமா இல்லையா பத்தோடு பதினொன்றாக இதுவும் போயிடுமா என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில்த் தான் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவும் முழு தூரமும் நானே கார் ஓடிக் கொண்டு போவேன் என்று நினைத்திருக்கவில்லை. ஒருநாள் காலை 9 மணிபோல புறப்பட்டோம்.ஆங்காங்கே தங்கிதங்கி இடங்கள் பார்த்து போவதற்காக மகளும் மருமகனும் முக்கியமான இடங்கள் என்று 8 இடங்கள் வரை படத்தில் அடையாளமிட்டிருந்தனர்.இந்த பாதையில் பல இடங்களில் கைபேசி வேலை செய்யாது.எனவே வரைபடத்தையும் முன்னரே சேமித்துக் கொண்டேன். வழமை போன்று போகும் பாதையை தேடினால் நெடுஞ்சாலையையே காட்டும்.நெடுஞ்சாலை ஐந்தரை மணிநேரமும் 101 ஆறரை மணிநேரமும் ஆகும்.ஆனால் நான் விரும்பிய பாதையில் தொடர்ந்து ஓடினால் 9 மணிநேரமாகும். இதுதான் நாங்கள் போனபாதை மிகுதி தொடரும்.
  11. பார்சல் விலையை பார்க்க பழைய கதை மாதிரி தெரியுது. உங்கள் கதை மாதிரி சில குறும் படங்களும் வந்தன.
  12. பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா கம்பன் தமிழோ பாட்டினிலே சங்க தமிழோ மதுரையிலே கம்பன் தமிழோ பாட்டினிலே சங்க தமிழோ மதுரையிலே பிள்ளை தமிழோ மழலையிலே நீ பேசும் தமிழோ விழிகளிலே நெஞ்சம் முழுதும் கவிதை எழுது கொஞ்சும் இசையை பழகும் பொழுது துள்ளும் இளமை பருவம் நமது தொட்டு தழுவும் சுகமோ புதிது கண் பார்வையே உன் புதுப்பாடலோ பொன் வீணையே உன் பூமேனியோ பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா பிள்ளை பருவம் தாய் மடியில் பேசும் பருவம் தமிழ் மடியில் பிள்ளை பருவம் தாய் மடியில் பேசும் பருவம் தமிழ் மடியில் கன்னி பருவம் என் வடிவில் காலம் முழுதும் உன் மடியில் பன்னீர் மழைதான் விழி மேல் பொழிய தண்ணீர் அலை போல் குழல்தான் நெளிய தன்னந் தனிமை தணல் போல் கொதிக்க தஞ்சம் புகுந்தாள் உன்னைதான் அணைக்க பொன்னோவியம் என் மனமேடையில் சொல்லோவியம் உன் ஒரு ஜாடையில் பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா ம்ம்ம்.ம்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்.ம்ம்.. ம்ம்ம்.ம்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்.ம்ம்.. ம்ம்ம்.ம்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்.ம்ம்.. ம்ம்ம்.ம்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்.ம்ம்.. Song : Pournami Nilavil Movie/Album Name : Kanni Penn 1969 Star Cast : Jaishankar and Vanisri Singer : S. P. Balasubrahmanyam and S. Janaki Music Composed by : M. S. Vishwanathan Lyrics written by : Vaali
  13. இதுவே அமெரிக்கா என்றால் அந்த தளமே பூட்டியிருப்பார்கள். இத்தனை கடிகளுக்கும் ஒரு தொகையும் கிடைத்திருக்கும். பேன் பேன் பேன்.
  14. ஆகா ஆகா சூடு பிடிக்குது.எழுதுங்கோ எழுதுங்கோ.
  15. ஆஆஆ ஒரு சரத்துக்கு ஒரு சங்கிலியா? நானென்றால் அப்பாவின் முழு உடுப்பையுமே தூக்கிக் கொடுத்திருப்பேன். சுவி அருமையாக போகிறது. தொடருங்கள். சாமிநாதன் ஒரு புளியங்கொப்பு போல உள்ளது.
  16. https://fb.watch/bmKIQk6BIt/ சுவாமிஜி நித்தியானந்தாவின் சோகக்கதை. கேக்க ரொம்பவும் பாவமாயிருக்கு.
  17. 90க்கு முன் வெளிநாடுவந்த பலரின் நிலை.
  18. தம்பி நெடுக்ஸ்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறி. சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.
  20. கொழும்புகாரர் வந்த மாதிரி அவுசிலிருந்து நீங்களும் போய் படம் காட்டேலாமல் போட்டுதென்ற கவலை தெரியுது. பரவாயில்லை முருகன் எங்கே போயிடப் போறார். “புத்தா சீ யூ நெக்ஸ் இயர்” என்று சொன்னவர் கேட்டதோ?
  21. ஆச்சரியமாக இருக்கிறது. இணைப்புக்கு நன்றி வன்னியர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.