Everything posted by ஈழப்பிரியன்
-
ஊருக்கு... "கொலிடே" போறேன்.
என்ன கஞ்சலனாக இருக்கிறான். டேய் இவ்வளவும் செய்து கடைசியில் சாராயமா ஊத்தப் போகிறாய்? கனவு காணும்போது விஸ்கி பிரண்டி ஞாபகமாவது வராதா?
-
புறா
நமக்கு தெரிந்ததெல்லாம் மாடப்புறாவும் மணிப்புறாவும் தான்.
-
காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் – அகதி முகாமில் தடுத்து வைப்பு
மிகவும் துணிச்சலான பெண். காதலன் துரிககெதியில் செயல்பட்டு காதலியை கரம்பிடிக்க வேண்டும்.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
மைத்திரி - ரணில் அரசாங்க உறவும் ஹர்த்தாலும் ******** ****** **** *இராணுவ எண்ணிக்கையை குறைக்க ரணில் முன்வைத்த யோசனை. *இராணுவ எண்ணிக்கை குறைப்பு - IMF பரிந்துரை! *முல்லைத்தீவு சம்பவத்துக்கு பின்னணி இதுதான்! *** *** *** 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சூழலில், வடக்கு கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், 2009 இற்கு முன்னரான முப்பது வருட ஆயுதப் போராட்டம் ஒட்டுமொத்த இன விடுதலை என்ற அடிப்படையில் நடந்தது. ஆயுதப் போராட்டத்துக்கு முன்னரான முப்பது வருடங்கள் அதாவது, 1950 களில் இருந்து அஹிம்சை வழியில் நடந்தன. அது சட்ட மறுப்பு போராட்டமாகவே இருந்தது. இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் யாப்புச் சட்டங்களை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்பதை மையப்படுத்தியே "தமிழ்த் தேசியம்" என்ற கோட்பாடு எழுந்தது. ஆனால், 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தால் தான், ஈழத்தமிழர் விவகாரத்தை சர்வதேச அரங்கில் பேச முடியும் என்ற புதிய கற்பிதம் ஒன்றை சில தமிழ்த் தேசிய அரசியல் பிரதிநிதிகள் முன்வைத்தனர்... இக் கற்பிதம் வேடிக்கையானது என்ற பின்னணியில், 15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்தை எப்படி நோக்குவது? தேர்தலில் தத்தமது கட்சிகளின் ஆசனங்களை அதிகரிப்பது என்ற ஒரேயொரு இலக்கைத் தவிர, வேறு அரசியல் உத்திகள் - இராஜதந்திரம் எந்த ஒரு அரசியல் கட்சியிடமாவது இருந்ததா? ஆகக் குறைந்த பட்சம் வடக்கு கிழக்கில் இராணுவ எண்ணிக்கையை குறைப்பதற்கு நிதி வழங்கும் நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே பரிந்துரைத்திருந்தன. ஆனால், இப் பரிந்துரைகள் கூட உரியமுறையில் இலங்கை அரசாங்கம் செயற்படுத்த விரும்பவில்லை என்று ஏதாவது ஒரு தமிழ்க் கட்சி பிடிவாதமாக நின்று அழுத்தம் கொடுத்ததா? இராணுவ எண்ணிக்கையை குறைப்பதற்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க, இராணுவத்துக்கான ஓய்வூதியத் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருந்ததாக எகனாமி நெக்ஸ்ட் (EconomyNext) என்ற சஞ்சிகை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரசுரித்திருந்த கட்டுரை ஒன்றில் கூறியிருந்தது. இக் கட்டுரையை மேற்கோள் காண்பித்து "த டிப்ளோமற்“ (thediplomat) என்ற ஆங்கில செய்தித் தளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்த ரதீந்திர குருவிற்ற (Rathindra Kuruwitaa) என்ற சிங்களப் பத்திரிகையாளர், ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தை (International Monetary Fund - IMF) மகிழ்விக்க, ரணில் இராணுவ எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக விமர்சித்திருந்தார். ஆனாலும் ஐஎம்எப் வழங்கிய பல பரிந்துரைகளின் பிரகாரம் அரச செலவினங்களை குறைக்க, இராணுச் செலவினங்களை குறைப்பது போன்ற ஒரு ஏற்பாட்டை ரணில் அப்போது செய்திருக்கிறார். இராணுவ எண்ணிக்கை குறைப்பு பற்றி ஐஎம்எப் ஒருபோதும் வெளிப்படையாக பரிந்துரைக்கவில்லை. அவ்வாறிருந்தும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஜேபிவியும் ரணிலின் இராணுவ எண்ணிக்கை குறைப்பு முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. ஐஎம்எப்பின் பல பரிந்துரைகளின் பிரகாரம் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமே தவிர, இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க அனுமதிக்க முடியாது என தேர்தல் பிரச்சாரங்களிலும் ஜேவிபி சொல்லியிருந்தது. எவ்வாறாயினும் வடக்குக் கிழக்கில் இதுவரை இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதேநேரம், வடக்கு கிழக்கு இராணுவ முகாம்கள் பற்றிய விடயங்களைத் தவிர வேறு பரிந்துரைகளுக்கு செவிசாய்க்க முடியும் என்ற தொனியில் கோட்டாபய ஜனாதிபதியாக இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்திடம் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டிருந்தது. ஆகவே, இப் பின்னணியில் தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்துள்ள ஜேவிபியிடம் இராணுவத்தை குறைக்கும் திட்டத்தை எதிர்பாரக்க முடியாது. ஆனாலும், மீள் நல்லிணக்கம் (Reconciliation) என ஐஎம்எப் அடிக்கடி ஞாபகப்படுத்தி வரும் மொழியின் உள்ளடக்கத்தின் (Content) பிரகாரம், வடக்கு கிழக்கில் இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். இராணுவ முகாம்கள் பலவற்றையும் மூடித்தான் ஆக வேண்டும்... ஆனால், இதற்கு அநுர அரசாங்கம் மாத்திரமல்ல வேறு எந்தவொரு சிங்கள அரசியல் தலைவர்களும் உட்படுவார்கள் என்று கூறுவதற்கு இல்லை. எவ்வாறாயினும் உள்ளகத் தகவல்களின் பிரகாரம், இராணுவ எண்ணிக்கைகள் குறைக்கப்பட வேண்டும் என ஐஎம்எப் அநுர அரசாங்கத்திடம் மறைமுகமாக பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகிறது. இல்லையேல் நிதி கிடைக்காது போலும். ஆகவே இதனை அறிந்துதான் ஹர்த்தால் ஏற்பாட்டை சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் செய்திருக்கக் கூடும்....என்ற சந்தேகங்கள் இல்லாமில்லை.... அவ்வாறு இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட்டால், தமது போராட்டமே காரணம் என காணிப்பித்து தமிழரசுக் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கமாகவும் அது இருக்கலாம். ஆனால், இராணுவ எண்ணிக்கை குறைப்பிற்கு அநுர அரசாங்கம் தயாராக இல்லை என்பதை சமீபகால அணுகுமுறைகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இப் பின்புலத்தோடு---- 2015 ஆம் ஆண்டு ரணில் - மைத்திரி அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து இலங்கையை பிணை எடுத்தது சம்பந்தன் தலைமையிலான அப்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டும். இந்த ஞாபகப்படுத்தலின் பிரகாரம் ---- முல்லைத்தீவு இராணுவ முகாமுக்குச் சென்ற ஐந்து இளைஞர்கள் தாக்கப்பட்டு ஒருவர் மரணித்தமைக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியதற்கு யார் பொறுப்பு என சிந்திக்க வேண்டும்! ஏனெனில் 2015 இல்தான் இராணுவ முகாம் விஸ்தரிப்பு - காணி அபகிரிப்பு- புத்த கோவில் கட்டும் நகர்வுகள் போன்ற ஆக்கிரமிப்புகள் சட்ட ரீதியாக மாற்றப்பட்டன. அதாவது கொழும்பை மையமாகக் கொண்ட அரச திணைக்களங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகள் இன்றுவரை முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே ----- 2015 இல் இழைத்த இக் குற்றத்துக்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்டாலும், வரலாறு மன்னிக்காது. இயற்கை நீதி பதில் சொல்லும். ஹர்த்தால் நடத்தி சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்காமல், இராணுவ எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் தொடர்பாக கொழும்பில் உள்ள ஐஎம்எப் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளை சந்திப்பது பற்றிச் சிந்திப்பதே சிறந்த பரிகாரம். இராணுவ எண்ணிக்கை குறைப்பு பரிந்துரை தமிழர்களுக்கானது அல்ல. இலங்கையின் பொருளாதார நெருக்கடி மீட்சிக்கானது. இருந்தாலும், அழுத்தம் கொடுத்து குறைந்த பட்சம் இராணுவ எண்ணிக்கை குறைக்கும் பணியையாவது உருப்படியாக செய்ய வேண்டும். அத்துடன், ஜெனீவா மனித உரிமை சபைக்கு எழுத்து மூலம் உடனடியாகவும் கூட்டாகவும் அறிவிக்கவும் வேண்டும். மாறாக... இது இன அழிப்பு என்று தமிழ் ஊடகங்களுக்கு மாத்திரம் போலியாகக் கருத்துச் சொல்லி, கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் வியூகங்களை வகுக்க வேண்டாம். இப் பிழையான அரசியல் உத்திகள் ஊடே சர்வதேசச் சட்டங்கள், புவிசார் அரசியல் தன்மைகளை அறிந்து அதன் ஊடாக காய் நகர்த்தும் இராஜதந்திர முறைமை, 2009 இற்குப் பின்னர் தமிழ்த் தரப்பிடம் அற்றுப் போயுள்ளது என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. இராணுவ ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றம் என்பதன் ஊடாக தமிழ் மரபு அடையாள அழிப்பு நடவடிக்கைகள் வெவ்வேறு வடிவங்களில் 2009 இற்குப் பின்னரும் அரங்கேறுவதற்கு இதுவே காரண - காரியம் என்பதும் பட்டவர்த்தனம். ஆனால் இயற்கை நீதியும் மக்களின் சமகால பட்டறிவு - உணர்வுடன் கூடிய புரிதல்களும் பலருடைய வாக்கு வங்கிச் சரிவை ஏற்படுத்தும் என்பது கண்கூடு... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid033Brh5tG5HfTNqrkELWcoZy3LPn39sDRg411GtATRu2PzgKsDEEy7EivmTZLyB53il/?
-
ஜெனீவா தீர்மானமும் சுமந்திரனின் சதிக்கூட்டணியும்.
2015 இல் சுமந்திரன் தொடக்கியதை 2025 இல் கஜேந்திரன் முடித்து வைக்கிறார். ஆணையாளரின் பதில் கடிதம் சொல்லும் சொல்லாத செய்திகள்! - --- --- --- ---- ----- *உள்ளகப் பொறிமுறையே பிரதானம். *தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கோரிக்கைகளை முன்வைக்கக்கூடாது. சொல்லாது சொல்லும் செய்தி என்ன? *ஜேவிபி அரசாங்கத்தை உருப்பெற வைப்பது! *சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இலங்கை தானாக இணைந்தால் சிறப்பு, ஆனால்...! *இன அழிப்பைப் பற்றி மேலோட்டமாக கதைக்கலாம். குறிப்பாகவோ வலுவாகவோ அதைக் கேட்கக் கூடாது. *சுமந்திரன் 2015 இல் ஓடிக் கொடுத்த Relay Race, 2025 இல் கஜேந்திரகுமார் நிறைவு செய்தார். --- ----- --- --- ------ கஜேந்திரகுமாருக்கு அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில் உள்ள பிரதான இரண்டு ஆங்கிலச் சொற்களின் பிரகாரமும், கொழும்பில் உள்ள சில இராஜதந்திர வட்டாரங்களோடு இன்று சனிக்கிழமை உரையாடிய விளக்கத்தை மையப்படுத்தியும் இக் கட்டுரையை எழுதுகிறேன்... ஜெனீவா மனித உரிமை சபையின் ஆணையாளருக்கு தமிழ்த்தேசிய பேரவை அனுப்பிய கடிதத்திற்கு பதில் கிடைத்திருப்பதாக பெருமைப்படுகிறார்கள். ஆனால், உண்மை நிலையோ வேறு! அந்த பதில் கடிதத்தின் உள்ளடக்கம் - பொருள் என்ன என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆணையாளர் தன்னுடைய பதில் கடிதத்தில் இலங்கையும், மனித உரிமை சபையும் செய்யவுள்ள “பொறுப்புகள்” பற்றி இரண்டு ஆங்கிலச் சொற்களில் வரைவிலக்கணம் செய்கிறார். 1) Comprehensive Process (SL) 2) Complementary Strategies (OHCHR & UNHRC) இந்த இரண்டு சொற்களையும் விரிவாக ஆராய்ந்தால்-- 1) Comprehensive Process (SL) என்ற ஆங்கிலச் சொல்லின் உள்ளடக்கம் என்பது இலங்கையின் ‘விரிவான செயல்முறையை’ குறித்து நிற்கிறது. அதாவது, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையையும் சர்வதேசத்தின் நம்பிக்கையையும் இலங்கை முதலில் வென்றெடுக்க வேண்டும் என்ற தொனியில் அச் சொல் அமைகிறது.. இன்னும் அழுத்திச் சொல்வதானால் பொறுப்புக்கூறல் என்ற முறையில் இலங்கைக்கு இருக்கக்கூடிய ஆகக் குறைந்த செயல் வடிவம் அது. 2) Complementary Strategies என்ற ஆங்கிலச் சொல்லின் உள்ளடக்கம் என்பது ‘குறை நிரப்புகின்ற மூலோபாயம்’ என்பதைக் குறித்து நிற்கிறது. அதாவது, இலங்கை நடத்துகின்ற உள்ளக விசாரணைகளின் பற்றாக்குறைகள் அல்லது விடுபட்டுள்ளதாக கருதப்படுகின்ற விவகாரங்கள் சிலவற்றுக்கு குறுகிய சில நடவடிக்கைகளை பொது நியாயாதிக்கம் எனப்படும் (Universal Jurisdiction System) முறை ஊடாக சில நாடுகளின் நீதிமன்றங்கள் வேண்டுமானால் பார்த்துக்கொள்ளலாம். மனித உரிமைச் சபை உப்புச் சப்பற்ற தீர்மானத்தைக் கவனிக்கும் அல்லது அந்த விசாரணைகளுக்கான ஏற்பாடுகளை செய்யும் என்ற பொருளில் அது அமைகிறது. அதேநேரம், இலங்கை செயற்படுத்த வேண்டிய, விரிவான செயல்முறை என்ற Comprehensive Process என்ற ஆங்கிலச் சொல்லில் இருந்தும், ஆணையாளர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ள சில விடயங்களில் இருந்தும் மேலும் சில கற்பிதங்களை புரியக் கூடியதாகவுள்ளது. அதாவது, செயல் திறன் மிக்க நியாயமான(Independent fair) அதுவும் சர்வதேச சட்டங்களின் நியமங்களை முழுமையாக திருப்பித்திப்படுத்தக் கூடியதாக இலங்கை நடத்தவுள்ள உள்ளக விசாரணை அமைய வேண்டும் என்ற தொனி தெரிகிறது. அதாவது ஆணையாளர் மறைமுகமாக என்ன சொல்ல வருகிறார்? சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court - ICC) இலங்கை முதலில் வேண்டுமானால் இணைந்து கொள்ளலாம். மனித உரிமைகள் பற்றி சர்வதேச மட்டத்தில் ஏற்கப்பட்டுள்ள மனித உரிமைகள் விதிகள் அனைத்தையும் இலங்கை ஏற்றுக்கொள்வது நல்லது. ஆனால், இவையெல்லாம் பழைய குற்றங்களுக்கு செல்லுபடியாக வேண்டியது இல்லை. எதிர்காலம் மட்டுமே முக்கியம். கடந்தகாலப் பொறுப்புக்கூறல் கண்துடைப்பாக இருந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை. ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய ஐ நா உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டிருக்கிறது. ஆகவே, எதிர்வரும் காலத்தில் எப்போதோ ஒரு நாள் ICC இல் இலங்கையை இணைத்த பின்னர் நடத்தவுள்ள விசாரணை எப்படிப்பட்டதாக இருக்கும்? இலங்கை இணைந்தாலும் ஈழத்தமிழர்கள் கோருகின்ற விசாரணைகள் நடைபெறக் கூடிய வாய்ப்புகள் இருக்காது. அப்படி நடந்தாலும் கூட ஜேவிபி என்பிபி அரசாங்கத்தின் காலத்தில் இருந்து தான் விசாரணைகள் நடைபெறலாம். ஏனெனில், ஆட்சி மாற்றம் என்பதை அமெரிக்கா போன்ற மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகள் நம்புகின்றன. Universal Jurisdiction System என்ற முறைமை ஜெனீவாவினால் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவ உயர் அதிகாரிகள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அந்தந்த நாடுகளில் வைத்து அவர்களை விசாரணை செய்யும் முறை. ஆகவே, Universal Jurisdiction என்ற இந்த மாதிரியான பலவீனமான முறைமைகள் நடைமுறையில் சில மேற்கு நாடுகளிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இருப்பதால், அந்த நடைமுறைகளையும் வைத்துக் கொண்டு, இனிமேல் பழைய குற்றங்கள் பற்றிய பொறுப்புக்கூறலை நீர்த்துப்போகச் செய்வதே மேற்குலகத்தின் பிரதான இலக்கு. ஆனால், மனித உரிமை பேரவையில் இதைத் தொக்க வைத்திருந்தால், இலங்கையில் எதிர்பாராத நிலை ஏதும் ஏற்பட்டால் மீண்டும் அழுத்தத்தை அதிகரிக்கலாம். ஆனால் இப்போதைக்கு இல்லை. அதாவது, புதிய ஆட்சியில் புதிய நகர்வுகளை மேற்கொள்ளும் திட்டமாகவே (Comprehensive Process (SL) (Complementary Strategies -OHCHR & UNHRC) என்ற இந்த இரண்டு ஆங்கிலச் சொற்களும் அமைந்துள்ளன என்றால் அதில் மாற்றுக் கருத்தில்லை. அதாவது, பழைய விவகாரங்களைக் கைவிட்டு புதிய அணுகுமுறையில் சென்று தமக்குரிய புவிசார் அரசியல் - பொருளாதார நலன்களில் மேற்கு - ஐரோப்பிய நாடுகள் செயற்படுவதற்கு ஈடாகவே ஆணையாளரின் பதில் அமைந்துள்ளது. அதற்கு ஏற்பவே தமிழ்த் தேசிய பேரவையும் கடிதத்தை தயாரித்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஐ.நா அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு அல்லது அவர்களின் ஆலோசனையின் (Advice) பிரகாரம் கடிதம் எழுதியிருக்கலாம் என்பதிலும் சந்தேகம் இல்லாமலில்லை. இன அழிப்பு விவகாரம் பற்றி சர்வதேச நீதிமன்றத்தில் (International (Court of Justice -ICJ) ஈழத்தமிழர்கள் ஏதேனும் ஒரு நாட்டை பிடித்து வழக்குத் தாக்கல் செய்தால், இலங்கை, அமெரிக்க- இந்திய அரசுகளின் புவிசார் அரசியல் - பொருளாதார நலன்களுக்கு ஒத்திசைவாக இருக்காது என்ற நோக்கில், ஈழத்தமிழர் விவகாரத்தை ஐநா இவ்வாறு கையாளுகிறது. இப் பின்புலத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் 2015 இல் ஓடிக் கொடுத்த அஞ்சல் ஒட்டத்தை (Relay Race) 2025 இல் கஜேந்திரகுமார் நிறைவு செய்துள்ளார் என்றே பொருள் கொள்ள முடியும். பிரபல ஜிகாதியாக அறியப்பட்ட அல்-ஜூலானி என்பவரின் தலைக்கு பத்து மில்லியன் கொடையாக சில வருடங்களுக்கு முன் அறிவித்திருந்தது அமெரிக்கா. தற்போது, அப்படியான பயங்கரவாத ஜிகாதியோடு அதே அமெரிக்கா கைகோர்த்து சிரியாவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, ஜேவிபியோடு கூட்டு வைப்பதில் மேற்கு - ஐரோப்பிய நாடுகளுக்கு எந்த ஒரு வில்லங்கமும் இருக்காது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர் https://www.facebook.com/1457391262/posts/pfbid03ddadDcotUwMxUHCdKHhsMJT5ctijLnSzg8gpUfndY4oydbKoVGi6Mv6CS1rGqE6l/?
-
சிறீதரன் எம். பி. சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டு - பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை
நொச்சியாகமவில் இலக்கு வைக்கப்பட்ட சிறிதரன் எம்.பி! புலனாய்வு விசாரணை தீவிரம்!
-
நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை
இறைவன் ரொம்பவும் பிசி பாஸ். கள்வருக்கு பின்னால் எல்லாம் ஓட அவருக்கு நேரமில்லை. எவ்வளவு பிகருகளெல்லாம் வந்து குவியும் போது அவர் பொறுமையாக இருந்து ரசிக்க வேண்டாமோ?
-
சிறீதரன் எம். பி. சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டு - பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை
கொள்ளையடிக்கும் எவரும் தங்களது பெயரில் எதுவுமே வைத்திருப்பதில்லை. இந்த துணிவில்த் தான் சொல்கிறாரோ?
-
சிறீதரன் எம். பி. சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டு - பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை
முறைப்பாடு செய்தவரிடம் பேட்டி எடுக்கிறார்கள். இது நம்மாள் யாரோ போட்டுக் கொடுத்துள்ளனர். இருந்தாலும் நல்ல விடயம்.
-
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” ”போலி வாக்காளர்கள், முகவரிகள், புகைப்படங்கள்: வாக்குத் திருட்டு புகார் குறித்து ஆதாரங்களுடன் ராகுல் விளக்கம்
தமிழ்நாட்டிலேயே தேர்தல் நேரங்களில் அண்டா குண்டா குக்கர் பணம் என்று பகிரங்கமாகவே கொடுக்கிறார்கள். ஆனாலும் எங்காவது யாரையாவது பிடித்தார்களா என்றால் அது ஓரிரு எதிர்க் கட்சிகளாகவே இருக்கும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தேர்தல் ஆணையம் ஊழலில் ஊறிவிட்டது.
-
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: என்னால் உத்தரவாதம் வழங்க முடியாது - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
இவர்கள் என்ன குற்றங்கள் செய்தார்கள் என்றாவது வழக்கைப் பதிவு செய்து அவர்களுக்கான தண்டனைகளைக் கொடுக்கலாமே? இதைச் செய்தால் அவர்களுக்கு தண்டனையே வழங்க முடியாது. ஒரு காலத்தில் பயங்கரவாத சட்டத்திற்கு எதிராக துள்ளிக் குதித்த ஜேவிபி இன்று அதைஒத்த பயங்கரவாத சட்டத்தை இயற்றி அதில் குளிர்காய்கிறது.
-
யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா!
கிராமங்களில் அடிக்கடி வந்து கோம்மை நிமிர்ந்து கிடக்கு அது இது என்று குற்றம் அறவிடுவதில் மிகவும் கறாராக இருக்கிறார்கள். இதையே யாழ் வைத்தியசாலைச் சுற்றி ஸ்ரான்லி வீதி இரும்புக்கடைகள் உதிரிப்பாகங்கள் விற்கும் கடைகள் இருக்குமிடங்கள் என்று பல இடங்களில் கழிவுநீர் ஓடாமல் தேங்கி நின்று நாற்றமும் எடுக்கிறது.
-
"மூன்று கவிதைகள்"
பெண்களால் ரொம்பவும் நொந்து போனவரின் கவிதை போலிருக்கே? பாராட்டுக்கள் தில்லை.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
புரட்சி ஏன் சார் எந்திரிக்கணும்? அவசர சிகிச்சைப் பிரிவினர் வண்டியில் ஏற்றிக் கொண்டு போவார்கள்.
-
சமையல் செய்முறைகள் சில
இப்போ யார் தான் சோறு வடித்து சாப்பிடுகிறார்கள்?
-
இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!
இளைப்பாறிய பின் வீட்டு வேலைகளில் இருந்து தப்புவதற்கு ஏற்பாடு செய்கிறீர்களோ?
-
2026 இல் இலங்கை மீது சர்வதேச விசாரணை - இறுக்கமடையும் சூழல்.
தமிழ்நெற் ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான கோபிநாத் ஜெயச்சந்திரனுடனான செவ்வி.
-
இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!
இது எங்கே இறங்கும்? கட்டுநாயக்காவிலா? அறுகம்பேயிலா?
-
தமிழ்நாட்டை விட எமது கலைஞர்களுக்கு முதலிடம் கொடுங்கள் .
முற்றத்து மல்லிகை "அக்குட்டியும் - பிச்சுமணியும்"--- தமிழ்நாட்டை விட எமது கலைஞர்களுக்கு முதலிடம் கொடுங்கள் *பேச்சு வழக்கில் வெளிப்படும் சிலேடைச் சொற்கள். --- ----- ----- ------ நகைச்சுவை தமிழுக்கே உரிய சிறப்பு. அக்குட்டி - பிச்சுமணி என்று அழைக்கப்படும் “Valvai Sulax” -“கஜன் தாஸ்” என்ற இருவரும் தொடர்ச்சியாக, தமது நகைச்சுவை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி வரும் கதாபாத்திரங்கள் யதார்த்தத்தை உணர்த்தி நிற்கிறது. “இடுக்கண் வருங்கால் நகுக" என்பது திருவள்ளுவர் வாக்கு. இதன் பொருள், "துன்பம் வரும்போது மனம் தளராமல் சிரிக்க வேண்டும் என்பதாகும். ஆகவே, துன்பத்தை வெல்ல மகிழ்ச்சியைவிட சிறந்த வழி வேறில்லை என்ற பொருளில் நகைச்சுவையின் மேன்மை அமைந்துள்ளது. மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தால், எந்த துன்பத்தையும் எளிதாக கடந்து விடலாம் என்று வள்ளுவர் அன்றே கூறிவிட்டார். ஆகவே, வள்ளுவர் வாக்கை மையப்படுத்தி துன்பத்தை வெல்ல “மகிழ்ச்சி” ஓர் ஆயுதம் என்பதை அக்குட்டி - பிச்சுமணி என்ற இரு கலைஞர்களும் நிறுவியுள்ளனர். ஈழத் தமிழர்களை மையப்படுத்திய கதாபாத்திரங்களில், சிலேடைச் சொற்கள் சில, தூய தமிழில் - சாதாரண பேச்சு மொழியில் இவர்களின் வார்த்தைகளில் இருந்து இவர்களை அறியாமலேயே வெளிப்படுகின்றன. அதுவும் ஆங்கில கலப்பில்லாத பேச்சு மொழி. அந்த சிலேடைச் சொற்கள் பல கற்பிதங்களை உணர்த்துகிறது. முகபாவங்கள் கூட வாழ்வியல் அர்த்தங்கள் பலதை தருகின்றன. அதாவது, ஒரு குடும்பத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் - சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள், இந்த இரு கலைஞர்களின் முகபாவங்களில் இருந்து வெளிப்படுகின்றன. இருவரும் வெளிப்படுத்தும் முகபாவங்கள் இயல்பான நகைச்சுவை தன்மை கொண்டது. வாழ்வியல் உண்மைகளும் புடம்போட்டு காண்பிக்கின்றன. ஆகவே, சமுதாய வாழ்வியல் சீர்திருத்தங்கள் எளிய முறையில் நகைச்சுவை உணர்வுடன் கையாளப்பட்ட வேண்டும் என்பதற்கு அக்குட்டியும் - பிச்சுமணியும் என்ற பாத்திரங்கள் சிறந்த வகிபாகத்தை கொடுத்துள்ளன. அதுவும் தாயகத்தில் இருந்து ... யூரியுப் போன்ற சமூக வலைத்தளங்களை பலர் தவறாகப் பயன்படுத்தி பிழையான கருத்தியல்களை சமூகத்தில் விதைத்து வரும் சூழலில், அக்குட்டி - பிச்சுமணி என்ற இரு கலைஞர்களும் சமூக யதார்த்தங்களை நகைச்சுவையாக வெளிப்படுத்தி சீர்திருத்தங்களுக்கு வழி வகுப்பது சிறப்பு. சம்மந்தப்பட்டவர்களை உணர வைத்து திருந்த வழி வகுக்கும் ஏற்பாடு என்று கூடச் சொல்ல முடியும். இந்தியக் கலைஞர்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வரும் கலைஞர்கள், பாடகர்கள் போன்றோரை விடவும் உள்ளூர் கலைஞர்கள் என்று பெருமைப்படக்கூடிய அக்குட்டி - பிச்சுமணி மற்றும் உள்ளூரில் உள்ள ஏனைய நகைச்சுவை கலைஞர்கள், பாடகர்கள் போன்றோரை ஈழத்தமிழர்கள் முதலில் வரவேற்க வேண்டும். உற்சாகப்படுத்த வேண்டும். எமது வீட்டு முற்றத்து மல்லிகையின் வாசத்தை நுகர பழக வேண்டும். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid0KJ3F44wkhyAUbiSbFhAYSNHP8UnKW9H9PxhKi8pUHf7HBQXX7bBsjc6crbUXMFBVl/? நானும் இவர்களின் காணொளிகளைக் கண்டு கொள்வதில்லை. இனிமேல் தொடர்ந்து பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்.
-
மலையக மக்களின் அடையாளமான காமன் கூத்தும் கிழக்கில் காமண்டியும் – கிரிஜா மானுஶ்ரீ.
இணைப்புக்கு நன்றி யாயினி.
-
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட வருகைப் பதிவு சேவை கருமபீடத்தில், இரண்டு நாட்களுக்குள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 120 தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் தங்கள் விசா செல்லுபடியாகும் தன்மை மற்றும் சொந்த நாட்டு உரிமத்தின் அடிப்படையில் தற்காலிக அனுமதி அனுமதி பத்திரங்களைப் பெற தகுதியுடையவர்களாவர். 10 நிமிடங்களுக்குள் இருப்பினும் முச்சக்கர வண்டி மற்றும் கனரக வாகன உரிமங்களுக்கான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வந்தவுடன் 10 நிமிடங்களுக்குள் தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. Tamilwinஇலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட வருகைப் பதிவு சேவை கருமபீடத்தில், இரண்டு நாட்களுக்குள் வெள...
-
ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடுவதை நிறுத்தாவிட்டால் திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் - சீமான்
தமிழர்கள் முடிந்தால் தெலுங்கரை கெட்டவர்களாக சித்தரிக்கும் ஒரு படத்தை எடுத்துக் காட்டட்டும் . தெலுங்கானாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் கூட ஓடவிட மாட்டார்கள். தெலுங்குப் படத்தை ஓடவிடாமல் தடுத்தால் தமிழ்ப் படங்களை ஓடவிடாமல் தடுத்து விடுவார்கள் என்ற வியாபார புத்தியினால்த் தான் தமிழர்கள் குப்புற படுத்து விட்டார்கள்.
-
கோடிகளில் புரளும் சிறிதரன் எம்.பி
சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு செய்தவரிடமே பேட்டி
-
19 வருடங்களிற்கு முன்னர் அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்ட அக்சன்பாம் மனிதாபிமான பணியாளர்கள்
உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
வடக்கின் கல்வித் துறை பின்னடைய நிர்வாக பிரச்சனையே காரணம்!
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid05T8HEpVbVkwY6XCvdX9Qi7jaudn62heNv5Lyg81quTffnC9CZvsCHSBSSaPazq2ml&id=100030148033723&mibextid=wwXIfr மேலே உள்ள சுட்டியை அழுத்தி பார்த்தால் உண்மை புரியும்.