Everything posted by ஈழப்பிரியன்
-
நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை
இறைவன் ரொம்பவும் பிசி பாஸ். கள்வருக்கு பின்னால் எல்லாம் ஓட அவருக்கு நேரமில்லை. எவ்வளவு பிகருகளெல்லாம் வந்து குவியும் போது அவர் பொறுமையாக இருந்து ரசிக்க வேண்டாமோ?
-
சிறீதரன் எம். பி. சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டு - பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை
கொள்ளையடிக்கும் எவரும் தங்களது பெயரில் எதுவுமே வைத்திருப்பதில்லை. இந்த துணிவில்த் தான் சொல்கிறாரோ?
-
சிறீதரன் எம். பி. சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டு - பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை
முறைப்பாடு செய்தவரிடம் பேட்டி எடுக்கிறார்கள். இது நம்மாள் யாரோ போட்டுக் கொடுத்துள்ளனர். இருந்தாலும் நல்ல விடயம்.
-
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” ”போலி வாக்காளர்கள், முகவரிகள், புகைப்படங்கள்: வாக்குத் திருட்டு புகார் குறித்து ஆதாரங்களுடன் ராகுல் விளக்கம்
தமிழ்நாட்டிலேயே தேர்தல் நேரங்களில் அண்டா குண்டா குக்கர் பணம் என்று பகிரங்கமாகவே கொடுக்கிறார்கள். ஆனாலும் எங்காவது யாரையாவது பிடித்தார்களா என்றால் அது ஓரிரு எதிர்க் கட்சிகளாகவே இருக்கும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தேர்தல் ஆணையம் ஊழலில் ஊறிவிட்டது.
-
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: என்னால் உத்தரவாதம் வழங்க முடியாது - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
இவர்கள் என்ன குற்றங்கள் செய்தார்கள் என்றாவது வழக்கைப் பதிவு செய்து அவர்களுக்கான தண்டனைகளைக் கொடுக்கலாமே? இதைச் செய்தால் அவர்களுக்கு தண்டனையே வழங்க முடியாது. ஒரு காலத்தில் பயங்கரவாத சட்டத்திற்கு எதிராக துள்ளிக் குதித்த ஜேவிபி இன்று அதைஒத்த பயங்கரவாத சட்டத்தை இயற்றி அதில் குளிர்காய்கிறது.
-
யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா!
கிராமங்களில் அடிக்கடி வந்து கோம்மை நிமிர்ந்து கிடக்கு அது இது என்று குற்றம் அறவிடுவதில் மிகவும் கறாராக இருக்கிறார்கள். இதையே யாழ் வைத்தியசாலைச் சுற்றி ஸ்ரான்லி வீதி இரும்புக்கடைகள் உதிரிப்பாகங்கள் விற்கும் கடைகள் இருக்குமிடங்கள் என்று பல இடங்களில் கழிவுநீர் ஓடாமல் தேங்கி நின்று நாற்றமும் எடுக்கிறது.
-
"மூன்று கவிதைகள்"
பெண்களால் ரொம்பவும் நொந்து போனவரின் கவிதை போலிருக்கே? பாராட்டுக்கள் தில்லை.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
புரட்சி ஏன் சார் எந்திரிக்கணும்? அவசர சிகிச்சைப் பிரிவினர் வண்டியில் ஏற்றிக் கொண்டு போவார்கள்.
-
சமையல் செய்முறைகள் சில
இப்போ யார் தான் சோறு வடித்து சாப்பிடுகிறார்கள்?
-
இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!
இளைப்பாறிய பின் வீட்டு வேலைகளில் இருந்து தப்புவதற்கு ஏற்பாடு செய்கிறீர்களோ?
-
2026 இல் இலங்கை மீது சர்வதேச விசாரணை - இறுக்கமடையும் சூழல்.
தமிழ்நெற் ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான கோபிநாத் ஜெயச்சந்திரனுடனான செவ்வி.
-
இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!
இது எங்கே இறங்கும்? கட்டுநாயக்காவிலா? அறுகம்பேயிலா?
-
தமிழ்நாட்டை விட எமது கலைஞர்களுக்கு முதலிடம் கொடுங்கள் .
முற்றத்து மல்லிகை "அக்குட்டியும் - பிச்சுமணியும்"--- தமிழ்நாட்டை விட எமது கலைஞர்களுக்கு முதலிடம் கொடுங்கள் *பேச்சு வழக்கில் வெளிப்படும் சிலேடைச் சொற்கள். --- ----- ----- ------ நகைச்சுவை தமிழுக்கே உரிய சிறப்பு. அக்குட்டி - பிச்சுமணி என்று அழைக்கப்படும் “Valvai Sulax” -“கஜன் தாஸ்” என்ற இருவரும் தொடர்ச்சியாக, தமது நகைச்சுவை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி வரும் கதாபாத்திரங்கள் யதார்த்தத்தை உணர்த்தி நிற்கிறது. “இடுக்கண் வருங்கால் நகுக" என்பது திருவள்ளுவர் வாக்கு. இதன் பொருள், "துன்பம் வரும்போது மனம் தளராமல் சிரிக்க வேண்டும் என்பதாகும். ஆகவே, துன்பத்தை வெல்ல மகிழ்ச்சியைவிட சிறந்த வழி வேறில்லை என்ற பொருளில் நகைச்சுவையின் மேன்மை அமைந்துள்ளது. மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தால், எந்த துன்பத்தையும் எளிதாக கடந்து விடலாம் என்று வள்ளுவர் அன்றே கூறிவிட்டார். ஆகவே, வள்ளுவர் வாக்கை மையப்படுத்தி துன்பத்தை வெல்ல “மகிழ்ச்சி” ஓர் ஆயுதம் என்பதை அக்குட்டி - பிச்சுமணி என்ற இரு கலைஞர்களும் நிறுவியுள்ளனர். ஈழத் தமிழர்களை மையப்படுத்திய கதாபாத்திரங்களில், சிலேடைச் சொற்கள் சில, தூய தமிழில் - சாதாரண பேச்சு மொழியில் இவர்களின் வார்த்தைகளில் இருந்து இவர்களை அறியாமலேயே வெளிப்படுகின்றன. அதுவும் ஆங்கில கலப்பில்லாத பேச்சு மொழி. அந்த சிலேடைச் சொற்கள் பல கற்பிதங்களை உணர்த்துகிறது. முகபாவங்கள் கூட வாழ்வியல் அர்த்தங்கள் பலதை தருகின்றன. அதாவது, ஒரு குடும்பத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் - சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள், இந்த இரு கலைஞர்களின் முகபாவங்களில் இருந்து வெளிப்படுகின்றன. இருவரும் வெளிப்படுத்தும் முகபாவங்கள் இயல்பான நகைச்சுவை தன்மை கொண்டது. வாழ்வியல் உண்மைகளும் புடம்போட்டு காண்பிக்கின்றன. ஆகவே, சமுதாய வாழ்வியல் சீர்திருத்தங்கள் எளிய முறையில் நகைச்சுவை உணர்வுடன் கையாளப்பட்ட வேண்டும் என்பதற்கு அக்குட்டியும் - பிச்சுமணியும் என்ற பாத்திரங்கள் சிறந்த வகிபாகத்தை கொடுத்துள்ளன. அதுவும் தாயகத்தில் இருந்து ... யூரியுப் போன்ற சமூக வலைத்தளங்களை பலர் தவறாகப் பயன்படுத்தி பிழையான கருத்தியல்களை சமூகத்தில் விதைத்து வரும் சூழலில், அக்குட்டி - பிச்சுமணி என்ற இரு கலைஞர்களும் சமூக யதார்த்தங்களை நகைச்சுவையாக வெளிப்படுத்தி சீர்திருத்தங்களுக்கு வழி வகுப்பது சிறப்பு. சம்மந்தப்பட்டவர்களை உணர வைத்து திருந்த வழி வகுக்கும் ஏற்பாடு என்று கூடச் சொல்ல முடியும். இந்தியக் கலைஞர்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வரும் கலைஞர்கள், பாடகர்கள் போன்றோரை விடவும் உள்ளூர் கலைஞர்கள் என்று பெருமைப்படக்கூடிய அக்குட்டி - பிச்சுமணி மற்றும் உள்ளூரில் உள்ள ஏனைய நகைச்சுவை கலைஞர்கள், பாடகர்கள் போன்றோரை ஈழத்தமிழர்கள் முதலில் வரவேற்க வேண்டும். உற்சாகப்படுத்த வேண்டும். எமது வீட்டு முற்றத்து மல்லிகையின் வாசத்தை நுகர பழக வேண்டும். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid0KJ3F44wkhyAUbiSbFhAYSNHP8UnKW9H9PxhKi8pUHf7HBQXX7bBsjc6crbUXMFBVl/? நானும் இவர்களின் காணொளிகளைக் கண்டு கொள்வதில்லை. இனிமேல் தொடர்ந்து பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்.
-
மலையக மக்களின் அடையாளமான காமன் கூத்தும் கிழக்கில் காமண்டியும் – கிரிஜா மானுஶ்ரீ.
இணைப்புக்கு நன்றி யாயினி.
-
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட வருகைப் பதிவு சேவை கருமபீடத்தில், இரண்டு நாட்களுக்குள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 120 தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் தங்கள் விசா செல்லுபடியாகும் தன்மை மற்றும் சொந்த நாட்டு உரிமத்தின் அடிப்படையில் தற்காலிக அனுமதி அனுமதி பத்திரங்களைப் பெற தகுதியுடையவர்களாவர். 10 நிமிடங்களுக்குள் இருப்பினும் முச்சக்கர வண்டி மற்றும் கனரக வாகன உரிமங்களுக்கான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வந்தவுடன் 10 நிமிடங்களுக்குள் தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. Tamilwinஇலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட வருகைப் பதிவு சேவை கருமபீடத்தில், இரண்டு நாட்களுக்குள் வெள...
-
ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடுவதை நிறுத்தாவிட்டால் திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் - சீமான்
தமிழர்கள் முடிந்தால் தெலுங்கரை கெட்டவர்களாக சித்தரிக்கும் ஒரு படத்தை எடுத்துக் காட்டட்டும் . தெலுங்கானாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் கூட ஓடவிட மாட்டார்கள். தெலுங்குப் படத்தை ஓடவிடாமல் தடுத்தால் தமிழ்ப் படங்களை ஓடவிடாமல் தடுத்து விடுவார்கள் என்ற வியாபார புத்தியினால்த் தான் தமிழர்கள் குப்புற படுத்து விட்டார்கள்.
-
கோடிகளில் புரளும் சிறிதரன் எம்.பி
சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு செய்தவரிடமே பேட்டி
-
19 வருடங்களிற்கு முன்னர் அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்ட அக்சன்பாம் மனிதாபிமான பணியாளர்கள்
உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
வடக்கின் கல்வித் துறை பின்னடைய நிர்வாக பிரச்சனையே காரணம்!
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid05T8HEpVbVkwY6XCvdX9Qi7jaudn62heNv5Lyg81quTffnC9CZvsCHSBSSaPazq2ml&id=100030148033723&mibextid=wwXIfr மேலே உள்ள சுட்டியை அழுத்தி பார்த்தால் உண்மை புரியும்.
-
ஜெனீவா தீர்மானமும் சுமந்திரனின் சதிக்கூட்டணியும்.
இனப்படு*கொ*லை | முன்னணியின் மூடிமறைப்பு அரசியல் .
-
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?
தகவலுக்கு நன்றி ஏராளன்.
-
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?
மின்னஞ்சலைக் காணவில்லை.
-
பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு
கிளவி வயசுக்கு வந்தாலென்ன வரவிட்டாலென்ன.
-
நியூயோர்க் நகரத்தில் அவசரகால சட்டம்
நான் இப்போது மேற்குக் கரையில் ரசோதரனின் மாநிலத்தில். அடபாவிகளா பப்பாவில ஏறும் வயசா?
-
ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன்
ஆரம்பம் கொஞ்சம் கஸ்டம் தான். போகப்போக பழகிவிடும்.