Everything posted by ஈழப்பிரியன்
-
ஒரே மேடையில் மோதி, ஷீ ஜின்பிங், புதின் - டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?
புடினுக்கு செங்கம்பளம் விரித்து கைலாகு கொடுத்து வரவேற்ற அமெரிக்க அதிபரை எப்படி விளிக்கப் போகிறீர்கள்?
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
எங்களை மாதிரியே ஆங்கிலம் பேசுகிறார்கள்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இந்தப் பணத்தை கொடுக்க அங்கே பாடசாலை இருக்க வேண்டும். பாடசாலை இருந்தாலும் மாணவ மாணவியர் இருக்க வேண்டும்.
-
ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது
ம் வடை போச்சா.
-
கச்சத்தீவு ஏன் இந்தியாவை விட்டு போனது.
ஐக்கிய நாடுகள் சபையில் போர் நடந்த இடங்களில் வேலை செய்தவருடன் ஆவுடையப்பன் செவ்வியின் போது ஆரம்பத்தில் பல நாடுகளில் வேலை செய்த அனுபவத்தைப் பற்றி பேசுகிறார்கள். 17வது நிமிடத்திலிருந்து கச்சதீவு பற்றிய பேச்சு வருகிறது. மீன்பிடி பிரச்சனை பற்றியும் பேசுகிறார்கள். கச்சதீவை இந்தியா கொடுத்திருக்க கூடாது என்று வாதாடும் ஆவடையப்பன் ஒரு சுட்டக்காய் நாடு எப்படி இந்தியாவை மிரட்டி வாங்கிக் கொண்டது என்று ஆச்சரியப்படுகிறார். தமிழ்களுக்கு தமிழீழம் அமைவதை இலங்கை ஒத்துக் கொண்டாலும் இந்தியா ஒத்துக் கொள்ளாது என்று அடித்துக் கூறுகிறார். சீனாவில் இருந்து இலங்கை பாகிஸ்தான் நேபால் மாலைதீவு போன்றவையை எப்படி பிரித்து வைக்கலாம் என்பதில் இந்தியா முயற்சி உள்ளது. பாகிஸ்தானில் தோற்றுவிட்டோம். மாலைதீவிலும் அப்படி. நேபாலில் நிலமை மோசமாகிறது. 70 வீதமான வாகனங்கள் சீனாவின் மின்சார வாகனங்கள். அண்மையில் 100 மின்சார பேரூந்துகளை இலவசமாக வழங்கியுள்ளனர். இந்தியாவால் இப்படி கொடுக்க முடியுமா? நேரமிருந்தால் நீங்களும் கேட்டுப் பாருங்கள்.
-
சீன இராணுவ அணிவகுப்பில் புட்டின், பிற தலைவர்களுடன் கிம்மும் இணைகிறார்!
இதில் இந்திய தலைவரும் இணைகிறாரே. ஏன் அவர்பற்றி எதுவும் பேசப்படவில்லை?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- தமிழரசுக் கட்சியின் கடிதம்.பத்திரிகை ஆசிரியர் நிக்ஸன்
தமிழரசுக் கட்சி அனுப்பிய கடிதம்! ------- --- ---------- *சமகால அரசியல் புத்துணர்ச்சி *செம்மணியை உள்ளடக்கிய இன அழிப்பு விசாரணைக்கு முக்கியத்துவம்... *சர்வதேச நீதிமன்றத்தை நோக்கி... *"on" - "newly" என்பதற்கும் இடையில் "a" வேண்டும் என்றே தவிர்க்கப்பட்டதா? --- --- --- ----- ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஆணையாளருக்கு தமிழரசுக் கட்சி நான்கு விடயங்களை பிரதானப்படுத்தி கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது. இக் கடிதத்தின் ஆங்கில பிரதி ஒன்றை கிழக்கு மாகாணத்தில் உள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார். ஆச்சரியம் என்னவென்றால்... ”இன அழிப்பு” என்ற விடயத்தை மற்றும் சில அரசியல் காரணிகளின் அடிப்படையிலும், கட்சிக்குள்ளேயே முரண்பட்டுக் கொண்டிருந்த ஒரு பின்னணியில், இக் கடிதத்தின் உள்ளடகத்தை நோக்கினால், ஏதோ ஒரு புள்ளியில் ஈழத்தமிழர்கள் சார்ந்து இவர்கள் ஒன்றிணைந்திருக்கின்றனர் என்பது புரிகிறது. என்னைப் போன்ற பத்திரிகையாளர்கள் சிலரின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும் இவர்களை மாற்றியிருக்கலாம். இன அழிப்பு என்பது ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிற பேரவலம். இதை, உட்கட்சிப் பூசலுக்கும் கட்சிகளுக்கிடையிலான மோதல்களுக்கும் உட்படுத்தி அரசியல் ஆக்க வேண்டாம் என்று எழுதி வந்துள்ளோம். இது எங்கோ சுவறியுள்ளது போல் தெரிகிறது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மையப்படுத்திய தமிழ்த் தேசிய பேரவை ஆணையாளருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பான ஆக்கபூர்வமான விமர்சனங்களும், தமிழரசுக் கட்சியின் அரசியல் போக்கில் மாற்றத்தைத் தூண்டியிருக்கலாம். “வரவேற்க வேண்டியது“ - “குறை கூற வேண்டியது” என்ற இரண்டு விடயங்கள் கடிதத்தில் உண்டு. முதலில் வரவேற்பது என்றால்--- A) ”இன அழிப்பு” என்பதை போர்க் குற்றங்கள் - மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற இரு வகைக் குற்றங்களில் இருந்தும் வேறுபடுத்திக் காண்பித்துள்ளமை என்பது, தமிழரசுக் கட்சியின் சமகால அரசியல் புத்துணர்ச்சி. B) ஒஸ்லாப் எனப்படும் (OHCHR Sri Lanka Accountability Project - OSLAP) விசாரணைப் பொறிமுறையை விரைவாக முடிவுறுத்த வேண்டும் என்பதுடன், அதற்கு முன்னதாக இனப் படுகொலை மற்றும் இனப் படுகொலை நோக்கத்தைச் சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் சேகரிப்பதை விரைந்து செய்ய செய்வது பற்றி ஆராயத் தலைப்பட வேண்டும் என கேட்டிருப்பது... குறைபாடுகள் - மன்னிக்க முடியாத விடயங்கள் என்பது---- 1) (International, Impartial and Independent Mechanism - IIIM) என்ற விசாரணைப் பொறிமுறை கோரவில்லை. 2) ரோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டால் போதும் என்ற மன நிலை... 3) புதிய யாப்பு தொடர்பான மயக்கமான விளக்கம் இம் மூன்றும் தமிழரசுக் கட்சியின் பழைய போக்கையும் ஞாபகப்படுத்தியுள்ளது என்ற முடிவுக்கும் வரலாம்.. எவ்வாறாயினும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மையப்படுத்திய தமிழ்த் தேசிய பேரவை அனுப்பிய கடிதத்துக்கும், தமிழரசுக் கட்சி அனுப்பிய கடிதத்துக்கும் “இன அழிப்பு” என்ற விடயத்தில் கணிசமான வேறுபாடு உண்டு. அதாவது, இன அழிப்புக்கான அரச பொறுப்பு சர்வதேச நீதிமன்றில் (International Court of Justice - ICJ) விசாரிக்கப்பட வேண்டும் என்பதை மியான்மார் அரசுக்கு செய்ததைப் போன்று ”தீவிரமாக பரிசீலித்தல்” என்பதை கடித்தின் முதலாவது கோரிக்கையாக தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இக் கோரிக்கையை 2021 ஆம் ஆண்டில் இந்த இரண்டு கட்சிகளும் அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தவில்லை. ஆனால், இம் முறை தமிழரசுக் கட்சி இதை வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியப் போரவை முதலாவது கோரிக்கையின் இறுதி வரியில், பட்டும் படாமலும் சொல்லிச் சென்றிருக்கிறது. குறிப்பாக செம்மணியை மையப்படுத்தி தமிழரசுக் கட்சி மாத்திரமே, இன அழிப்புக்கான நோக்கம் என்ற சொற் பிரயோகத்தை பயன்படுத்தி அதற்கான ஆதாரங்களை ஒஸ்லாப் பொறிமுறை திரட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஆனால், தமிழ்த் தேசிய பேரவையோ, ஒஸ்லாப் எல்லாம் போதும், தனி நபர் குற்றவியல் விசாரணையை பாதுகாப்புச் சபை ஊடாக ஐசிசிக்கு பாரப்படுத்தினால் போதும் என்று மிகவும் பலவீனமாக கடிதத்தில் கையாண்டுள்ளது. புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும் தமிழ்த் தரப்புடன் பேசிய விடயங்கள் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ள நான்காவது கோரிக்கை மயக்கமாகவுள்ளது. அதாவது, தமிழ்த் தரப்புடன் ஏற்கனவே பேசப்பட்ட விடயங்களா? அல்லது இனிமேல்தான் தமிழ்த்தரப்புடன் பேசி முடிவெடுக்கவுள்ள விடயங்களா? என்பது குழப்பமாகவுள்ளது. அதன் ஆங்கில மூலப் பிரதி----- Continue to persuade Sri Lanka to enact a new federal constitution with extensive power sharing in the North-East on newly negotiated agreement with the Tamil People as a measure of non – recurrence. As an immediate step urge the Sri Lankan state to hold the provincial council elections without any further delay. இதற்கு தமிழரசுக் கட்சியின் செய்திகளை பிரத்தியேகமாகவும், உடனுக்குடனும் வழங்கும் ”மாலை முரசு என்ற மின் இதழில் நேற்று புதன்கிழமை வெளிவந்த தமிழாக்கம் பின்வருமாறு உள்ளது--- “மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான ஒரு நடவடிக்கையாக தமிழ் கட்சிகளுடன் புதிதாக பேச்சு நடத்தி இணக்கம் கண்டு வடக்கு கிழக்கில் விரிவான அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய புதிய சமஷ்டி அரசியல் யாப்பை உருவாக்க இலங்கைக்கு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்” ”உடனடி நடவடிக்கையாக மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்” இங்கே பிரச்சினை என்னவென்றால்---- தமிழில் இனிமேல்தான் புதிதாக உடன்படிக்கை செய்ய வேண்டும் என தெளிவாக சொல்லப்படுகின்றது. ஆனால், ஆங்கிலத்தில் ”Power sharing in the North-East on newly negotiated agreement” என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆங்கிலத்தில் "on" - "newly" என்பதற்கும் இடையில் "a" வேண்டும் என்றே தவிர்க்கப்பட்டுள்ளதா என்ற வினர எழுகிறது... கடிதத்தின் முகவுரையில்----- *ஈழத்தமிழர்களின் அரசியல் விவகாரங்களை குறிப்பாக ஐரோப்பிய இனவத்தவர்களின் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் இலங்கைத்தீவில் மூன்று இராஜ்ஜியங்கள் இருந்ததன. *தமிழர்களுக்கு தனி இராஜ்ஜியம் இருந்தது என்பதை மையப்படுத்தி தொலைந்துபோன இறைமையை (Sovereignty) தான் தமிழர்கள் மீள் உருவாக்கம் செய்வது தமிழர்களுக்கான பாதுகாப்பு என்ற நல்ல கருத்து வெளிப்படுகிறது. அதாவது, 1976 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த வட்டுக்கோட்டை தீர்மானம் என்று நேரடியாக சுட்டிக்காட்டாமல், 1976 இல் இருந்து என்று அந்த ஆண்டைக் குறிப்பிட்டு, தமிழர்கள் தொலைந்து போன இறைமையை தேடுகிறார்கள் என்று கடிதத்தில் பொருள் கோடல் செய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்புக்குரியது--- அதேநேரம்---- இன அழிப்பு நோக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதையும் கடிதம் கனதியாகக் காண்பிக்கிறது. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க ஐநா பாதுகாப்புச் சபை ஊடாக மாத்திரமே போக வேண்டும் என, தமிழ்த் தேசிய பேரவை அனுப்பிய கடிதத்தில் கோரப்பட்டிருந்தது. அதேநேரம், ஆயர்கள் - சைவ மதத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது நிலையினர் ஆகியோர் இணைந்து அனுப்பிய கடிதத்தில் IIIM என்ற விசாரணைப் பொறிமுறை முதன்மையாக இருந்தது. அக் கடிதத்தில் 2002 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட குற்றங்களும் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆணையாளர் அரசாங்கத்துக்கு அனுப்பியுள்ள முன்னோடி அறிக்கையில் இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டவில்லை. ஓகஸ்ட் 4 ஆம் திகதி தமிழ்த் தேசியப் பேரவை அனுப்பிய கடிதத்துக்கு அதற்கு அடுத்த நாளே ஆணையாளர் பதில் வழங்கியிருந்தார். அவரது பதில் கடிதத்திலும் அவர் உள்ளக விசாரணைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். ஆனால், தமிழ்த் தேசியப் பேரவை இன்று வரை, அவரது பதிலுக்கு எந்தவித மறுப்போ கவலையோ தெரிவித்து பதில் கடிதம் எழுதவில்லை. இது ஏன் என்ற கேள்வி எழுகின்றது... அதேபோன்று---- தமிழரசுக் கட்சியின் கடிதத்தில் எந்த ஒரு இடத்திலும் ஆணையாளரின் கடிதத்தில் உள்ள குறைபாடுகள் சுட்டிக் காண்பிக்கப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட ஓஎம்பி (Office on Missing Persons -OMP) எனப்படும் காணாமல் போனோர் அலுவலகத்தை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோரும் உறவினர்களும் நிராகரித்துள்ளனர். ஆனால், ஆணையாளரின் கடிதத்தில் அந்த அலுவலக செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது - இதனை தமிழரசுக் கட்சியின் கடிதமும் ஏற்றுக் கொள்கிறது. இந்த ஏற்பு வேடிக்கையானது. *ரோம் சாசன கையொப்பம் சாத்தியமா? சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவம் பெறுவதற்கான ரோம் சாசனத்தில் கைச்சாத்திட வேண்டும் என ஆணையாளரின் அறிக்கையும் தமிழரசுக் கட்சியின் அறிக்கையும் கேட்கப்பட்டுள்ளன. ஆனால், இலங்கை அவ்வாறு கைச்சாத்திட்டாலும், 2002ஆம் ஆண்டுக்கும் 2025 ஆம் ஆண்டுக்கும் இடையில் நடைபெற்ற எந்தக் குற்றங்களும் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்காது. அதற்கான விசேட ஒழுங்கு ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும். அதை ஆணையாளரும் சொல்லவில்லை, தமிழரசுக் கட்சியின் கடிதமும் சொல்லவில்லை. இது கவலைக்குரியது... இந்தியா கூட இதுவரை இணையாமல் இருக்கும் ரோம் சாசனத்தில் இலங்கை இணையும் என்று எதிர்பார்க்க முடியுமா? பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் இருந்து நிதிகளை பெறும் நோக்கில், சிலவேளை இலங்கை ரோம் சாசனத்தில் கைச்சாத்திடலாம். அவ்வாறு இலங்கை இணைந்துவிட்டால், அந்த மகிழ்ச்சியில் மனித உரிமைச் சபையும் உறுப்பு நாடுகளும் அமைதியாகிவிடும் ஆபத்தும் உண்டு... இரு கட்சிகள் பற்றிய விளக்கக் குறிப்புகள்--- 1) ஒட்டுமொத்தமாக இன அழிப்புக்கான அரச பொறுப்புக் கூறலுக்கான நீதியை குறிப்பாக கோருவதில் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய பேரவையை விட ஒருபடி மேலே சென்றுள்ளது... 2) தனிநபா் பொறுப்புக் கூறலை கோருவதில் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய பேரவையை விட ஒருபடி கீழே இறங்கியுள்ளது. 3) எப்போது இந்த இரண்டு கட்சிகளும் ஒத்திசைந்து உயர்வான பணியில் ஒன்றாக ஏறி நிற்கப் போகின்றன என்ற கேள்வி தொக்கி நிற்கின்றது... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/share/p/1JZNefTxvF/?mibextid=wwXIfr- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
சரி தூக்கி விடுவது யாராம்?- சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு
1) பார் சிறி 2) ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளக விசாரணை போதும் என்று சிங்களத்துக்கு சேர்டிபிக்கட் வாங்கி கொடுத்த சுமந்திரன் 3)மக்களுக்காகவே என்று கோடிக் கணக்கான ரூபாய்களை ரணிலிடம் பெற்றுக் கொண்ட சாணக்கியன் இவர்கள் மூவரும் பகிரங்க விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.- ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!
Here’s the current situation: Yes, Exxon Mobil is exploring a potential re-entry into Russia’s Sakhalin-1 oil and gas project, but no official deal is in place yet. These discussions are contingent on evolving geopolitical conditions and regulatory approvals. Here’s what’s happening in more detail: What’s Going On 1.Confidential Talks with Rosneft Exxon Mobil has conducted back-channel negotiations with Russia’s state oil giant Rosneft about possibly returning to the Sakhalin-1 project. These talks hinge on a potential peace process progress in Ukraine and would require approvals from both U.S. and Russian governments. 2. Legal and Political Conditions U.S. licenses from the Treasury Department allow Exxon to discuss “stranded assets” with Russian counterparts. Any formal re-entry would need U.S. government approval amid existing sanctions. 3. Russian Legal Framework On August 15, 2025, Russian President Putin signed a decree that conditionally reopens the Sakhalin-1 project to foreign investors—including Exxon—provided they: Supply foreign-made equipment, Assist in lifting Western sanctions, and Invest capital into the project. Russia also extended the deadline to 2026 for Exxon to claim its unclaimed stake in the project. 4. Strategic and Market Considerations Sanctions remain a significant obstacle, complicating any return even though Sakhalin-1 itself isn’t directly sanctioned. U.S. officials and the Trump administration have floated this as part of broader diplomatic incentives in Ukraine peace talks. On the other hand, some industry experts doubt a full-scale U.S. return, citing tremendous past losses and unstable political risks. ஆம் என்று தான் சாட் ஜிபிரியும் சொல்கிறது. இது தான் இந்தியாவின் குற்றச்சாட்டும். அமெரிக்கா ரசியாவுடன் எத்தனையோ வியாபாரங்களை இப்போதும் செய்கிறது. ஆனால் எங்களை செய்விடாமல் தடுக்கிறது.- சிந்தனைக்கு சில படங்கள்...
கறுப்பு எம்ஜிஆர்.- டபள் கேம் ஆடுகிறதா ரஷ்யா..?
சாதாரண இந்தியர்களை வைத்தே இஸ்ரேல் பல புலனாய்வுகளை செய்துள்ளதாக சொன்னார்கள். தவிர ஈரானில் பல யூதமக்களும் வசிக்கிறார்கள்.- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
முதலில் டாக்ரர் வழங்கிய தகவல்கள் எல்லாமே உண்மையா என்று உறுதிப்படுத்துங்கள். மேல்நிலையில் உள்ள அதிகாரிகள் அனைவருமே இதுவரை ஆண்ட கட்சிகளின் அடிப்படையிலேயே பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள். எனவே அவர்கள் தமது தலைவர்களுக்காகவே செயல்படுவார்கள். வைத்தியசாலையில் மட்டுமல்ல பல துறைகளிலும் இந்தப் பிரச்சனையை என்பிபி அரசு எதிர்கொண்டுள்ளது.- ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!
ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டு யூரோ நாணயம் வந்த போது டாலரை வீழ்த்தவே என்று பேசிக் கொண்டார்கள். இதை நம்பி ஈராக் ஜனாதிபதியும் யூரோவில் வியாபாரம் செய்யப் போய் ஆளும் இல்லை நாடும் இல்லை.- ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!
உலகத்தில்அமைதி ஏற்பட்டால் அமெரிக்கா ஐரோப்பா எப்படியாம் பிழைத்துக் கொள்வது? வல்லரசுகளின் ஆதரவு இல்லாமல் உலகத்தில் ஏதாவது யுத்தம் நடந்ததா? இல்லை என்று தான் எண்ணுகிறேன். அரபு நாடுகளை பொறுத்தவரை வாகனம் உள்ளது. ஆனால் ஓட்டத் தெரியாது.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன்.- மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும் ; சட்டத்தரணி வி. மணிவண்ணன்
வடக்கில் ஒரு சர்வதேச துடுப்பாட்ட மைதானம் தேவை தான். ஆனால் அதற்கு மண்டைதீவு சரியான இடமா? ஒருநாளும் அந்தப்பக்கம் போனது கிடையாது. இந்த இடம் உண்மையில் மக்கள் போவார்களா? அல்லது நாளடைவில் கட்டாக்காலி மாடுகள் தங்குமிடம் ஆகுமா?- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தனிமடல் பகுதியில் பதிலெழுத வழமையில் கீழே காணும் பெட்டியைக் காணவில்லை.- ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!
இவர்களை உள்வாங்கினால் இஸ்ரேலின் எண்ணம் சுலபமாக நிறைவேறாதா? ஓரிரு நாடுகள் தமது நன்மை கருதி நண்பர்களுக்கு தோள்கொடுக்கிறோம் என்றே உதவுகின்றன. தென்னாபிரிகா இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுவதற்கு அரபு நாடுகள் பின்னால் நிற்கின்றன. தாங்களால் நேரே செய்ய முடியாததை இன்னொரு நாட்டை வைத்து முயற்சி செய்கிறது.- ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!
உக்ரேனுக்கு உதவுவது அயலவர்கள் அல்ல ரசியாவை குறிவைத்து நேட்டோ நாடுகள் உதவுது. இஸ்ரேலுக்கு பின்னால் அமெரிக்கா உள்ளபடியால் அரபுநாடுகள் மட்டுமல்ல உலக நாடுகளே வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல இஸ்ரேலுக்கு உதவுகிறார்கள்.(இந்தியா உட்பட)- சமஸ்டி சர்வதேச விசாரணையை கைவிட்ட தமிழரசுக்கட்சி.
80 ஆண்டு காலமாக சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் நடந்த ஒப்பந்தங்கள் பற்றி விலாவாரியாக பாராளுமன்றில் பேசிய சிறிதரன் அதற்கு தீர்வாக எந்தத் திட்டத்தையும் வைக்கவில்லையே என்று கஜேந்திரகுமார் ஆதங்கம்.- பிள்ளையானின் மற்றுமொரு சகா ஒருவர் மட்டக்களப்பில் கைது
இவர்களுக்கு கட்டளையிட்டவர்கள் யார் என்பதை அறிய ஆவலாகவும் இருக்கலாம். தூக்கவும் சுலபமாக இருக்கும்.- யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் மீட்பு!
பிரியன் என்ன கொட்டடி விதானையா?- தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள் குழப்பங்கள்.எழுதியவர் நிக்ஷன்.
*அரசாங்கத்திற்குள் குழப்பம்! *உள்ளக முரண்பாடுகள் என்பது அநுரவை கவிழ்க்கும் நோக்கம் கொண்டதல்ல... *தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் சிலரின் தீவிர போக்கு அநுரவுக்கு ஆபத்தாக அமையும்...! *முடங்கியுள்ள மக்களுக்கான சில திட்டங்கள்...! *பிரதமர் ஹரிணியை மையப்படுத்தி அநுர கையாளும் அமெரிக்க - இந்திய உறவில் சந்தேகம் கொள்ளும் ஜேவிபியின் தேசிய நிறைவேற்றுக் குழுவின் சில உறுப்பினர்கள்... ---- ---- ----- ----- ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள் குழப்பங்கள் என சிங்கள நாளிதழ்கள், சிங்கள சமூக வலைத்தளங்களில் செய்திகள் - தகவல்களைக் காண முடிகிறது. ஆனால் அந்த தகவல்களில் உண்மையில்லை என அரசாங்கம் பல தடவைகள் மறுத்திருக்கிறது. தொடர்ந்தும் மறுதலித்து வருகின்றது. இலங்கைத்தீவின் தேசியக் கட்சிகள் என அழைக்கப்படும் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி ஏறத்தாள 76 வருடங்கள் ஆட்சி அமைத்திருந்தன. 2000 ஆம் ஆண்டின் பின்னர் கடந்த 24 வருடங்களில் இந்த இரண்டு கட்சிகளும் வேறு சிறிய கட்சிகளுடன் இணைந்தும் ஆட்சி அமைத்திருந்தன. 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ராஜபக்ச குடும்பத்தினர், உருவாக்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும், தேசியக்கட்சி என்ற அந்தஸ்தை பெற்று ஆட்சி அமைத்திருந்தது. எவ்வாறாயினும் தேசியக் கட்சி என அழைக்கப்படும் இக்கட்சிகளின் மூத்த உறுப்பினர்கள் பலர் கட்சி மாறி அமைச்சுப் பதவிகள் மற்றும் அரச திணைக்களங்களில் பதவிகளை வகித்திருந்தனர். 76 வருட ஆட்சிகளின் போது அரச ஊழியர்களும் இக் கட்சிகளின் மூத்த அமைச்சர்களினால் நியமிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட அரச ஊழியர்கள் தான் தற்போதும் பதவிகளில் உள்ளனர். சிங்கள நாளிதழ் ஒன்றின் கணிப்பின் பிரகாரம், ஏறத்தாள மூன்றில் இரண்டு பகுதி அரச ஊழியர்கள் இந்தத் தேசியக் கட்சிகளின் ஆட்சியின் போது நியமனம் பெற்றவர்கள். ஏனையவர்கள் கட்சி சாராமல் நியமனம் பெற்றவர்கள். அல்லது ஜேவிபி எதிர்க்கட்சியாக இருந்தபோது அமைத்த தொழிற் சங்கங்களின் உறுப்பினர்களாக மாற்றம் பெற்றவர்கள் எனலாம். இவ்வாறான பின்னணியுடன் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவிக்கு வந்த அரசாங்கம், ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், உள்ளக முரண்பாடுகளை சந்தித்து வருவது உண்மைதான். இதனை சில மூத்த உறுப்பினர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், இந்த முரண்பாடு அல்லது குழப்பம் என்பது அநுர அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நோக்கம் கொண்டதல்ல என்றும் அந்த மூத்த உறுப்பினர்கள் கற்பிதம் செய்கின்றனர். ராஜபக்சக்களின் அரசாங்கத்தில் அல்லது மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் எழுந்த உள்ளக முரண்பாடுகள் குத்துவெட்டுகள் போன்றதல்ல அரசாங்கத்துக்குள் எழுந்துள்ள முரண்பாடுகள் எனவும் அவர்கள் செய்தியாளர்கள் சிலரிடம் மிகப் பக்குவமாக விளக்குகிறார்கள். அந்த விளக்கத்தில் உண்மை உண்டு. ஏனெனில் 76 வருடங்கள் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்த மேற்படி தேசிய கட்சிகளின் மூத்த தலைவர்கள், அவர்களின் வாரிசுகள், தற்போது அரச கௌரவ பதவிகள் இன்றித் தவிக்கின்றனர். அத்துடன் ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்படுகின்றனர். அதாவது, இவர்களின் அரச இராஜ்ஜியம் பூண்டோடு ஒழிக்கப்படும் ஆபத்துகளும் உண்டு. இதனால் அநுர அரசாங்கத்துக்குள் குழப்பம் - முரண்பாடுகள் என்று இவர்கள் கதை கட்டுகிறார்கள் என்பதை பகிரங்கமாக உணர முடிகிறது. அரசாங்கத்தின் மீது குறிப்பாக ஜேவிபி மீது மக்களுக்கு தற்போது அதிருப்திகள் இருக்கலாம். ஜேவிபியின் தமிழ் உறுப்பினர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் வெறுப்புகள் உண்டு. 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால், இலங்கையின் பொருளாதார மீட்சி, ஊழல் அதிகார துஷ்பிரயோகம் அற்ற ஆட்சி என்று நோக்கினால், தற்போதைக்கு அநுர அரசாங்கத்தை பதவி கவிழ்க்க சிங்கள மக்களில் அதிகமானோர் விரும்பமாட்டார்கள் என்பது கண்கூடு. ஆனாலும், மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரும் மேற்படி தேசிய கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை விமர்சித்து நல் அபிப்பிராயங்களை குழப்பும் ஆபத்துகள் இல்லாமலில்லை. அரசாங்கம் உள்ளக ரீதியாக எதிர்நோக்கும் முரண்பாடுகளை மூன்று வகைப்படுத்தலாம். 1) அரசாங்கத்தின் திட்டங்களை செயல்படுத்த தயங்கும் அரச உயர் அதிகாரிகள். அதாவது, ஊழல் மோசடி அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களில் முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்படுவதால், தற்போது பதவி உயர்வு பெற்ற உயர் அதிகாரிகள் பலரும் உரிய ஆவணம் இல்லாமல் அபிவிருத்தி திட்ட வரைபுகளில் கையொப்பமிட தயங்குகின்றனர். இதனால் பல திட்டங்கள் காலதாமதம் அடைகின்றன. சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள சமூக சேவைகள் திணைக்களத்துக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுடன் உரையாடியுள்ளார். சமுர்த்தி நிதி பல குடும்பங்களுக்கு வழங்கப்படாமல் தேங்கியிருப்பதை அறிந்து கொண்டார். அதற்கான காரணத்தை அநுர வினவியபோது, உரிய ஆவணங்கள் சரி பார்க்கப்படுவதால் கால தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் விளக்கியுள்ளனர். ஊழல் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு இடமளிக்கக் கூடாது என்ற அரசாங்கக் கொள்கையினால், இவ்வாறு கால தாமதம் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். சமுர்த்தி நிதியை வழங்க கால தாமதம் ஏற்பட்டால், மக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்படைவார்கள் அல்லவா என அநுர பதிலுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார். ஒரு வகையில் அதிகாரிகளின் விளக்கமும் அநுராவின் கேள்வியும் நியாயமானது தான். இதேபோன்றுதான் ஏனைய அரச திணைக்களங்களில் மக்கள் சேவைக்கான ஏற்பாடுகள் கால தாமதமடைந்திருக்குமோ என்று அப்போது அநுர உணர்ந்திருக்கலாம். உண்மை அதுதான் என்கிறார்கள் சில உயர் அதிகாரிகள் 2) பிரதமர் ஹரிணி தொடர்பான உள்ளக முரண்பாடுகள். குறிப்பாக ஹரிணி, அமெரிக்க இந்திய ஆதரவுக் கொள்கை உடையவர். இதனால் அநுரகுமார திஸாநாயக்க, ஹரிணியை நன்கு பயன்படுத்துகிறார். இந்தோ – பசுபிக் விவகாரம் உள்ளிட்ட புவிசார் அரசியல் போட்டிச் சூழலில் மேற்கு – ஐரோப்பிய நாடுகளுடன் உறவை பேண வேண்டிய அவசியம் உண்டு. இந்தியா ஊடாக இந்த உறவை சமநிலை செய்கிறார் அநுர. அதாவது, ரசிய – சீன கூட்டுக்குள் இந்தியா இருக்கிறது. அதேநேரம் மேற்கு – ஐரோப்பிய நாடுகளுடன் குறிப்பாக அமெரிக்காவுடன் இந்தியா உறவை பேணுகிறது. இந்திய அரசின் இந்த இரட்டை வெளியுறவு கொள்கையை, பிரதமர் ஹரிணியை மையப்படுத்தி, அநுர இலங்கையின் பொருளாதார நிலைமைகளை சீர்ப்படுத்தும் உத்திகளை கையாளுகிறார். குறிப்பாக ஈழத்தமிழர் விவகாரத்தை ஜெனீவாவில் இருந்து முற்றாக நீக்கம் செய்ய அல்லது போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை பொறிமுறையை உருவாக்க, இந்தியா ஊடாக மேற்கு – ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு அநுர அரசாங்கத்துக்கு அவசியமாகிறது. இதன் காரணமாக ஹரிணி மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை அநுர, கன கச்சிதமாக பயன்படுத்துகிறார். ஆனால், அநுரவின் இந்த உத்தியை ஜேவிபியின் அடிப்படைக் கட்டமைப்பு அதாவது, ஜேவிபியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலர் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் ஹரிணி போன்ற உறுப்பினர்கள் மீது சந்தேகப்படுகின்றனர்.- 3) அரசாங்க செயற்பாடுகளில் பாரிய அளவு மாற்றங்கள் ஏற்படாமையினால், ஜேவிபியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் அதாவது, அரசாங்கத்தில் எந்தவொரு பதவியிலும் அங்கம் வகிக்காமல் ஜேவிபியின் அடிப்படைக் கொள்கையை மாத்திரம் வடிவமைத்து வரும் உறுப்பினர்கள் மனதுக்குள் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டனர். தேர்தல் பிரச்சாரங்களில் வாக்குறுதி வழங்கியதன் பிரகாரம், உடனடியாக அநுரகுமார திஸாநாயக்க செயல்படவில்லை என அவர்கள் உள்ளக ரீதியாக குற்றம் சுமத்த ஆரம்பித்துள்ளனர். ஆனால் “இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற கட்டமைப்பும் அதன் யாப்பும் சட்டங்களும் மற்றும் புவிசார் அரசியல் பொருளாதார போட்டிச் சூழலும் இதற்கு இடம் கொடுக்காது என்ற அரசியல் தன்மை (Nature of Politics) பற்றி அநுரவினால் அவர்களுக்கு விளக்கம் கொடுக்க முடியவில்லை போல் தெரிகிறது. ஆகவே, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மேற்கொண்ட விமர்சனங்களை இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் இருந்து கொண்டு தாம் நினைத்த பாட்டுக்கு செம்மைப்படுத்த முடியாது என்ற உண்மையை, அநுர புரிந்து கொண்ட அளவுக்கு, ஜேவிபியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர்கள் சிலரினால் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதை பிரதான எதிர்க்கட்சிகள் தமக்குச் சாதகமாக பயன்படுத்த முனைகின்றன. செம்மணி மனித புதைகுழி விவகாரம் தற்போது அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. ஆனால், அது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், கொழும்பு துறைமுக வளாகத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி பற்றிய செய்திகளுக்கு அரச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஏனெனில், இன அழிப்புக்கான சர்வதேச நீதி என்று புலம்பெயர் தமிழர்களும் வடக்கு கிழக்கில் தமிழ்த்தேசியக் கட்சிகள் - சிவில் சமூக அமைப்புகளும் ஜெனீவாவுக்கு கடிதம் எழுதி வரும் பின்னணியில், இலங்கையின் கடந்த கால ஆட்சியாளர்களினால் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளன என்பதை காண்பிக்க அரசாங்கம் திட்டம் வகுக்கிறது. குறிப்பாக 1987/88 ஆம் ஆண்டுகளில் ஜேவிபி இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை கையில் எடுத்துள்ளார் அநுர. அதாவது - ஜே.ஆர், பிரேமதாச, சந்திரிகா, மகிந்த, கோட்டாபய, ரணில். ஆகியோரும் மற்றும் சில படை உயர் அதிகாரிகளும் 76 வருட ஆட்சியில் மாறி மாறி அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மோசடியுடன், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் புரிந்துள்ளனர் என்பதை நிரூபிப்பதே, அநுரவின் சமீபகால உத்தியாக மாறியுள்ளது. இந்த உத்தியின் மூலம் தமக்கு வாக்களித்த மக்களை சமாளிக்க முடியும் என அநுர நம்பக்கூடும். ஆனால், ஈழத்தமிழர்கள் 1949 இல் இருந்து தமக்கு எதிராக இன அழிப்பு கட்டவிழ்த்து விடப்பட்டது என்பதை நிறுவுவதற்கு முற்படுகின்றனர். மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பது வேறு வகையானது எனவும் ஈழத்தமிழ் தரப்பு வியாக்கியானம் செய்கிறது, இவற்றை மையமாக கொண்டு, அநுர கையாண்டு வரும் அரசியல் காய் நகர்த்தல்களை ஜேவிபியின் தேசிய நிறைவேற்றுக் குழு புரிந்து கொள்ள மறுக்கிறது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்வது போன்று அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் எழுந்து ஆட்சி பலவீனமாகும் ஆபத்து ஏற்படலாம். இப் பின்புலத்தில், அநுரவுக்கு மூன்று தெரிவுகள் மாத்திரமே உண்டு.. 1) அடுத்த மாதம் நிறைவேற்றப்படவுள்ள ஜெனீவா தீர்மானத்தை முற்றாக நிராகரித்து, இலங்கை அரசு என்ற கட்டமைப்பை புனிதப்படுத்தி சிங்கள மக்களின் ஆதரவை பெறுதல்.. 2) ஊழல் மோசடி அதிகார துஷ்பிரயோகம் என்ற அடிப்படையில் மாத்திரம் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் சிலரையும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரையும் கைது செய்தல். (அதற்கு முன்னராக ரணில் கைது செய்யப்பட்டமை என்பது, ஒரு பரீட்சாத்தமாக இருக்கலாம்) அதேநேரம் தற்போது பதவியில் உள்ள உயர் அதிகாரிகள் அச்சமின்றி பணியாற்றக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்குவது.. 3) இலங்கையின் மூத்த இராஜதந்திரிகள் மூலம், ஜேவிபியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர்கள் சிலருக்கு சமகால உலக அரசியல் ஒழுங்கு பற்றி விளக்கம் கொடுப்பது. ஆனால், இங்கே ஈழத்தமிழர் விவகாரம், மேலும் பல ஆபத்துகளை எதிர்கொள்ளும் என்பது மாத்திரம் தெளிவாகிறது. -அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0MZsCYLG9QAoQgEaC6KyL3memR3TH6m1rzGnJm2rH8rVgFWChNzUWAoVyQHx5CU4Fl&id=1457391262 - தமிழரசுக் கட்சியின் கடிதம்.பத்திரிகை ஆசிரியர் நிக்ஸன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.