Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. அவனவன் பணத்தை சுருட்டிக் கொண்டு போகிறான். ஏமாளிகள் மண்சோறு சாப்பிட்டு மண்டையைப் போடப் போறாங்கள்.
  2. ரம் எப்படியாவது போர்நிறுத்தத்தைக் கொண்டுவந்து சரித்திரத்தில் இடம்பெற எண்ணுகிறார்.(நோபல் பரிசு) பூட்டினைப் பொறுத்தவரை உக்ரேன் நேட்டோவில் சேர முடியாது. பிடித்த இடத்தை விட முடியாது. இரண்டுக்கும் ரம் தலையசைப்பார் என்றே எண்ணுகிறேன்.
  3. வணக்கம் வாங்கோ. பிரபல சப்பாத்தின் பெயருடன் வந்துள்ளீர்கள்.
  4. பொலிஸ் போய் சொல்லித் தான் அவர் இந்த பெண் வந்த விடயத்தை தெரிந்து கொள்ள போகிறாரோ?
  5. ஆணையாளரின் முன்னோடி அறிக்கை வெளியானது *** **** *** **** *2015 ஆம் ஆண்டு போன்று 2025 இலும் அதே நகர்வு...! *அநுர அரசாங்கம் மீது நம்பிக்கை.... *உள்ளக விசாரணைக்கே முன்னுரிமை.....! *தமிழர் விவகாரம் பத்தோடு பதினொன்றாக மாறியது. *ICC யில் இலங்கை இணைந்தால் பழைய குற்றங்கள் கைவிடப்படும்..... - --- ------ --- ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் 12 திகிதியிட்ட பதிப்பிக்கப்பட்டிராத முன்னோடிப் பிரதி ஒன்று புதன்கிழமை அவரது அலுவலகத்தின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் பிரதி ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பிரதியாகும். இதற்கேற்ப இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள திட்டம் எதிர்வரும் நாட்களில் அல்லது வாரங்களில் தெரியவரும். ஆணையாளரின் 16 பக்க அறிக்கைய தொனிப்பொருள் என்ன என்பதைப் பார்க்கும் போது ஒரு விடயம் தெளிவாகப் புரிகிறது. அதாவது, 2015 ஆம் ஆண்டு அப்போதைய ரணில் - மைத்திரி அரசாங்கம் அமெரிக்காவோடு இணைந்து ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றிய 301 தீர்மானம் போன்ற ஒரு நிலைமை 60 ஆம் கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்படுவதற்கான நிகழ்தகவு, பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2025 இல் ஏற்படலாம் என்ற கற்பிதம் தொனிக்கிறது. ஜேவிபி என்பிபி எனப்படும் புதிய அரசாங்கத்தின் மீது அனைத்து மக்களும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்ற அடிப்படையில் பொறுப்புக் கூறல் விவகாரம் முழுவதையும் இலங்கையிடம் இருந்தே ஆணையாளர் எதிர்பார்க்கிறார். இது வடக்கில் என்.பி.பி எனப்படும் ஜேவிபிக்கு வாக்களிக்கும் நிலைக்கு மக்களை தமிழ்த் தேசியக் கட்சிகள் இட்டுச் சென்றதன் நேரடி விளைவு ஆகும். அத்துடன் ஐசிசி எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court, ICC) இலங்கை இயல்பாகவே இணைவது நல்லது என்ற கோணத்திலும், இலங்கை கடந்தகால குற்றங்களில் இருந்து விடுபடுவதற்கான ஒரு வாய்ப்பாக புதிய முன்னேற்றங்கள் அமையும் என்ற வியூகத்திலும் அறிக்கையின் உள்ளடக்கம் பொதிந்துள்ளது. இதை நான் ஏற்கனவே செய்தி உளவியல் தன்மையின் பிரகாரம் ஊகித்துச் சுட்டிக்காட்டியிருந்தேன். இலங்கை செய்ய வேண்டிய பொறுப்புக் கூறல்கள் தொடர்பாக சிறிய சிறிய விடயதானங்கள் அடங்கிய பரிந்துரைகள் இம்முறை எண்ணுக்கணக்கில் அதிகளவாக அறிக்கையின் முடிவுரையில் காணப்படுகின்றன. ஆனால், கடந்தகால அறிக்கைகளிற் பலவற்றில் குறைந்த எண்ணுக்கணக்கில் ஆனால் கடுமையான விடயதானங்கள் கையாளப்பட்டிருந்தது போன்று இம்முறை அனுப்பப்பட்டுள்ள அறிக்கை அமையவில்லை. மாறாக புதிய அரசாங்கத்தின் மீது ஒரு மென்போக்கையே அது வெளிப்படுத்துகின்றது. ஏற்கனவே 46-1 தீர்மானத்தை இலங்கை நிராகரித்திருந்தது. எந்த ஒரு பரிந்துரைகளும் இலங்கையினால் நடைமுறைப்படுத்தப்படவுமில்லை. அதன் பின்னர் தீர்மானிக்கப்பட்ட அலுவலகப் பொறிமுறை எனப்படும் ஒஸ்லாப் (OHCHR Sri Lanka Accountability Project ) திட்டத்தைக்கூட இலங்கை உரிய முறையில் செயற்படுத்தவில்லை. புதிய அரசாங்கம் என ஆiணாயளர் நம்புகின்ற அநுர தலைமையிலான நிர்வாகம், பதவியேற்று ஒரு வருடமாகும் நிலையிலும், ஜெனிவாவின் எந்த ஒரு பரிந்துரைகளிலும் கவனம் செலுத்தப்படவில்லை. ஆகவே, புதிய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை ஆணையாளர் எந்தப் புள்ளியில் இருந்து வெளிப்படுத்துகிறார் என்ற கேள்வி எழுகிறது! பொது நியாயாதிக்கம் எனப்படும் (Universal Jurisdiction) விசாரணை முறை கூட பயனற்றது. அதாவது போர்க்குற்றவாளி எனப்படும் நபர் வெளிநாடுகளுக்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் அங்கு வைத்து விசாரணை நடத்துவது. இத் திட்டம் சர்வதேச விசாரணை முறையும் அல்ல. ஆனால் இத் திட்டம் பற்றிய நம்பிக்கையை ஆணையாளர் பிரஸ்தாபித்துள்ளார். இதன் காரண - காரியமாவே பொது நியாயாதிக்கம் என்பதை தமிழர்கள் தமது கோரிக்கையாக முன்வைக்கக்கூடாது என்ற கருத்துருவாக்கம் தமிழ்ப் பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்க காலத்தில் நிலைமாறுகால நீதி என்று மார் தட்டி நம்பி எதுவுமே நடக்காத ஒரு பின்னணியில், எந்த அடிப்படையில் 2025 ஆம் ஆண்டிலும் புதிய அரசாங்கம் என்று ஆணையாளர் சித்தரித்து நம்பிக்கை வைக்கிறார்? போர்க்குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்றும், அதற்கான சர்வதேச விசாரணைகள் எனவும் முன்னைய அறிக்கைகளில் மிகக் கடுமையாகச் சுட்டிக்காட்டிருந்தனர். ஆனால் ----- இம்முறை மனித உரிமை மீறல்கள் தொடருகின்றன என்ற கருத்தையும், பொறுப்புக்கூறலுக்கு இதுவரை இலங்கை ஒத்துழைக்காவிடினும், இனியாவது ஒத்துழைக்கவேண்டும் என்பது போலவும் பயங்கரவாத தடைச் சட்டம் இதுவரை நீக்கப்படாமை பற்றியும் ஆங்காங்கே எடுத்தியம்பும் இந்த அறிக்கை பற்பல சிறிதும் பெரிதுமான குற்றச்சாட்டுகளை மாத்திரம் அறிக்கையில் முன்வைக்கிறது. ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புக்கான சர்வதேச நீதி பற்றிய தெளிவான பரிந்துரைகள் அறிக்கையில் இல்லை. விசேடமாக, இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணையை கோருவதாகத் தமிழ்த் தேசிய பேரவை கூறியிருந்தபோதும், அந்த விடயங்கள் அல்லது தமிழ்த் தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள் இணைந்து கடிதம் அனுப்பியமை தொடர்பான எந்த ஒரு பதிவும் அறிக்கையில் இல்லை. அது ஏற்கனவே ஆணையாளர் அனுப்பியிருந்த பதிலோடு கரைந்து போய்விட்டது போலும்..... உண்மையில் இன அழிப்புக்கான நீதியை மையப்படுத்தி அந்தக் கடிதத்தை தமிழ்த் தேசியப் பேரவை வரைந்திருக்கவில்லை. அதனாற்தான் அதை இலகுவாகத் தட்டிக்கழிக்க முடிந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலும் நல்லிணக்கமும் என்று தொடங்கிய ஆணையாளரின் அறிக்கையிடல், தற்போது மனித உரிமை நிலைமை என்று குட்டிச் சுவராகியுள்ளது. கடந்த கால சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் பத்தோடு பதினொன்றாகிவிட்டது. இம்முறை அறிக்கையின் தாக்கம் குறைவடைந்து, ஒட்டுமொத்த இலங்கை மக்களின் மனித உரிமை மீறல் விவகாரம் பற்றியதாகவும் மக்களின் ஜனநாயகப் பாதுப்பு என்ற தொனியிலும் அமைந்துள்ளது. ஆணையாளர் கடந்த யூன் மாதம் இலங்கைக்கு வந்தபோது யாழ் செம்மணி மனிதப் புதைகுழியையும் பார்வையிட்டிருந்தார். இதை அறிக்கையில குறிப்பிட்டபோதும், இதை ஓர் இன அழிப்புக்கான குற்றங்களில் ஒன்றாக அவர் எடுத்தாளவில்லை. அதேநேரம்---- ஆணையாளர் எதிர்ப்பார்ப்பது போன்று ஐசிசி இல் இலங்கை இணைந்தாலும், 2002 ஆம் ஆண்டுக்கும் 2025 ஆண்டுக்கும் இடையான குற்றங்களை அதன் அடிப்படையில் அது விசாரிக்காமல், எதிர்காலத்தில் நிகழக்கூடிய குற்றங்களைத் தண்டிக்கும் உரிமையை வழங்குவதாகவே இலங்கை வாக்குறுதி அளிக்கும். ஆகவே ----- இதுவா பொறுப்புக்கூறல்...? இதுவா சர்வதேச நீதி...? இதனை நம்பி கடந்தகாலக் குற்றங்களை மறப்போம் மன்னிப்போம் என நல்லிணக்க அடிப்படையில் நீக்கம் செய்து விட்டு இலங்கை ஐசிசி இல் இணைந்த காலத்தில் இருந்து நடைபெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் பற்றி மாத்திரமே விசாரணைகள் நடைபெறலாம். ஆகவே ஈழத்தமிழர்கள் மீண்டும் ஏமாற்றப்படப் போகின்றனர் என்ற முடிவுக்கே வர வேண்டும். தேசிய இனப் பிரச்சினை விவகாரம் கூட பத்தோடு பதினொன்றாகவே மதிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கே கேள்வி என்னவென்றால்-- 1) 2012 ஆம் ஆண்டு முதல் நிறைவேற்றப்பட்டு வரும் தீர்மானங்களை இந்த ஆணையாளர் வாசிக்கவில்லையா? 2) அல்லது கவனிக்கவில்லையா? 3) அல்லது மேற்கு - ஐரோப்பிய நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப பணியாற்றுகிறாரா? அரசு அற்ற இனங்களுக்கான நீதி என்பது புவிசார் அரசியல் தேவைகளின் அடிப்படையிலேயே அமைகின்றது என்பதற்கும், தமிழர் பிரதிநிதிகள் இறுதி நேரத்திலும் தமக்குள் முரண்பட்டுக் கொண்டிருப்பது ஆணையாளருக்கு இப்படியான அறிக்கைகளை முன்வைக்க இடமளிக்கிறது என்பதற்கும் இந்த அறிக்கை சிறந்த உதாரணம்.... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid0p9oEGWQhJAXzxYzrRLe3ZnpWRQTW5gEhDK1kUT6kpsncrj8nLuVmPXnAdMkVmp3Al/?mibextid=wwXIfr
  6. 70 களின் கடைசியில் இருந்தே சிறிய சங்கிலி ஒன்று இப்போதுவரை அணிந்துள்ளேன். யாராவது அறுத்தால் அதன் பின் அணியமாட்டேன்.
  7. உக்ரேன் ஜனாதிபதியை யாருமே கணக்கெடுப்பதாக தெரியவில்லை.
  8. ஹர்த்தால் உண்ணாவரதம் என்று ஈடுபட்டாலே தமிழ் மக்களின் மனங்களைக் கவரலாம் அப்போ தான் முதலமைச்சர் பதவியை எட்டிப் பார்க்கலாம் என்று யாரோ சொல்லிவிட்டார்கள். மாகாணசபை தேர்தல் மட்டும் இப்படி நிறையவே நடக்கும். முதலமைச்சராகிய பின்பு இதே இராணுவமே எனக்கு பாதுகாப்பு வழங்கும்.
  9. இந்த தொழில்நுட்பத்தை வழங்கிய கம்பனியே இதை எப்படி நிற்பாட்டுவதென்றும் ஒரு கணக்கு பேசியிருப்பார்கள்.
  10. மாட்டுவண்டி ஊர்போய் சேருவது மாத்திரமல்ல இடைஇடை கள்ளுக்கடையிலும் நிற்கும்.
  11. இணைப்புக்கு நன்றி சுவி. சிறிய வயதாக இருந்தபோது எப்போதும் கொத்தமல்லி அவித்து குடிக்கவென்றே ஒரு சட்டி இருக்கும். இதை வாசிக்கும் போது அந்த ஞாபகம் தான் வந்தது.
  12. வளர்ந்த நாடுகளில் காற்றாலை அமைக்கும் போது அண்மையில் குடியிருப்புக்கள் இல்லாத காற்று விழக் கூடிய இடங்களில் பாதுகாப்பான வேலிகள் போட்டு அமைக்கிறார்கள். மன்னாரில் எப்படியான இடங்களில் இந்த காற்றாலைகள் அமைக்கப் போகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா?
  13. என்ன கஞ்சலனாக இருக்கிறான். டேய் இவ்வளவும் செய்து கடைசியில் சாராயமா ஊத்தப் போகிறாய்? கனவு காணும்போது விஸ்கி பிரண்டி ஞாபகமாவது வராதா?
  14. நமக்கு தெரிந்ததெல்லாம் மாடப்புறாவும் மணிப்புறாவும் தான்.
  15. மிகவும் துணிச்சலான பெண். காதலன் துரிககெதியில் செயல்பட்டு காதலியை கரம்பிடிக்க வேண்டும்.
  16. மைத்திரி - ரணில் அரசாங்க உறவும் ஹர்த்தாலும் ******** ****** **** *இராணுவ எண்ணிக்கையை குறைக்க ரணில் முன்வைத்த யோசனை. *இராணுவ எண்ணிக்கை குறைப்பு - IMF பரிந்துரை! *முல்லைத்தீவு சம்பவத்துக்கு பின்னணி இதுதான்! *** *** *** 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சூழலில், வடக்கு கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், 2009 இற்கு முன்னரான முப்பது வருட ஆயுதப் போராட்டம் ஒட்டுமொத்த இன விடுதலை என்ற அடிப்படையில் நடந்தது. ஆயுதப் போராட்டத்துக்கு முன்னரான முப்பது வருடங்கள் அதாவது, 1950 களில் இருந்து அஹிம்சை வழியில் நடந்தன. அது சட்ட மறுப்பு போராட்டமாகவே இருந்தது. இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் யாப்புச் சட்டங்களை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்பதை மையப்படுத்தியே "தமிழ்த் தேசியம்" என்ற கோட்பாடு எழுந்தது. ஆனால், 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தால் தான், ஈழத்தமிழர் விவகாரத்தை சர்வதேச அரங்கில் பேச முடியும் என்ற புதிய கற்பிதம் ஒன்றை சில தமிழ்த் தேசிய அரசியல் பிரதிநிதிகள் முன்வைத்தனர்... இக் கற்பிதம் வேடிக்கையானது என்ற பின்னணியில், 15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்தை எப்படி நோக்குவது? தேர்தலில் தத்தமது கட்சிகளின் ஆசனங்களை அதிகரிப்பது என்ற ஒரேயொரு இலக்கைத் தவிர, வேறு அரசியல் உத்திகள் - இராஜதந்திரம் எந்த ஒரு அரசியல் கட்சியிடமாவது இருந்ததா? ஆகக் குறைந்த பட்சம் வடக்கு கிழக்கில் இராணுவ எண்ணிக்கையை குறைப்பதற்கு நிதி வழங்கும் நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே பரிந்துரைத்திருந்தன. ஆனால், இப் பரிந்துரைகள் கூட உரியமுறையில் இலங்கை அரசாங்கம் செயற்படுத்த விரும்பவில்லை என்று ஏதாவது ஒரு தமிழ்க் கட்சி பிடிவாதமாக நின்று அழுத்தம் கொடுத்ததா? இராணுவ எண்ணிக்கையை குறைப்பதற்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க, இராணுவத்துக்கான ஓய்வூதியத் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருந்ததாக எகனாமி நெக்ஸ்ட் (EconomyNext) என்ற சஞ்சிகை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரசுரித்திருந்த கட்டுரை ஒன்றில் கூறியிருந்தது. இக் கட்டுரையை மேற்கோள் காண்பித்து "த டிப்ளோமற்“ (thediplomat) என்ற ஆங்கில செய்தித் தளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்த ரதீந்திர குருவிற்ற (Rathindra Kuruwitaa) என்ற சிங்களப் பத்திரிகையாளர், ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தை (International Monetary Fund - IMF) மகிழ்விக்க, ரணில் இராணுவ எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக விமர்சித்திருந்தார். ஆனாலும் ஐஎம்எப் வழங்கிய பல பரிந்துரைகளின் பிரகாரம் அரச செலவினங்களை குறைக்க, இராணுச் செலவினங்களை குறைப்பது போன்ற ஒரு ஏற்பாட்டை ரணில் அப்போது செய்திருக்கிறார். இராணுவ எண்ணிக்கை குறைப்பு பற்றி ஐஎம்எப் ஒருபோதும் வெளிப்படையாக பரிந்துரைக்கவில்லை. அவ்வாறிருந்தும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஜேபிவியும் ரணிலின் இராணுவ எண்ணிக்கை குறைப்பு முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. ஐஎம்எப்பின் பல பரிந்துரைகளின் பிரகாரம் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமே தவிர, இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க அனுமதிக்க முடியாது என தேர்தல் பிரச்சாரங்களிலும் ஜேவிபி சொல்லியிருந்தது. எவ்வாறாயினும் வடக்குக் கிழக்கில் இதுவரை இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதேநேரம், வடக்கு கிழக்கு இராணுவ முகாம்கள் பற்றிய விடயங்களைத் தவிர வேறு பரிந்துரைகளுக்கு செவிசாய்க்க முடியும் என்ற தொனியில் கோட்டாபய ஜனாதிபதியாக இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்திடம் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டிருந்தது. ஆகவே, இப் பின்னணியில் தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்துள்ள ஜேவிபியிடம் இராணுவத்தை குறைக்கும் திட்டத்தை எதிர்பாரக்க முடியாது. ஆனாலும், மீள் நல்லிணக்கம் (Reconciliation) என ஐஎம்எப் அடிக்கடி ஞாபகப்படுத்தி வரும் மொழியின் உள்ளடக்கத்தின் (Content) பிரகாரம், வடக்கு கிழக்கில் இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். இராணுவ முகாம்கள் பலவற்றையும் மூடித்தான் ஆக வேண்டும்... ஆனால், இதற்கு அநுர அரசாங்கம் மாத்திரமல்ல வேறு எந்தவொரு சிங்கள அரசியல் தலைவர்களும் உட்படுவார்கள் என்று கூறுவதற்கு இல்லை. எவ்வாறாயினும் உள்ளகத் தகவல்களின் பிரகாரம், இராணுவ எண்ணிக்கைகள் குறைக்கப்பட வேண்டும் என ஐஎம்எப் அநுர அரசாங்கத்திடம் மறைமுகமாக பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகிறது. இல்லையேல் நிதி கிடைக்காது போலும். ஆகவே இதனை அறிந்துதான் ஹர்த்தால் ஏற்பாட்டை சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் செய்திருக்கக் கூடும்....என்ற சந்தேகங்கள் இல்லாமில்லை.... அவ்வாறு இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட்டால், தமது போராட்டமே காரணம் என காணிப்பித்து தமிழரசுக் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கமாகவும் அது இருக்கலாம். ஆனால், இராணுவ எண்ணிக்கை குறைப்பிற்கு அநுர அரசாங்கம் தயாராக இல்லை என்பதை சமீபகால அணுகுமுறைகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இப் பின்புலத்தோடு---- 2015 ஆம் ஆண்டு ரணில் - மைத்திரி அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து இலங்கையை பிணை எடுத்தது சம்பந்தன் தலைமையிலான அப்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டும். இந்த ஞாபகப்படுத்தலின் பிரகாரம் ---- முல்லைத்தீவு இராணுவ முகாமுக்குச் சென்ற ஐந்து இளைஞர்கள் தாக்கப்பட்டு ஒருவர் மரணித்தமைக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியதற்கு யார் பொறுப்பு என சிந்திக்க வேண்டும்! ஏனெனில் 2015 இல்தான் இராணுவ முகாம் விஸ்தரிப்பு - காணி அபகிரிப்பு- புத்த கோவில் கட்டும் நகர்வுகள் போன்ற ஆக்கிரமிப்புகள் சட்ட ரீதியாக மாற்றப்பட்டன. அதாவது கொழும்பை மையமாகக் கொண்ட அரச திணைக்களங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகள் இன்றுவரை முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே ----- 2015 இல் இழைத்த இக் குற்றத்துக்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்டாலும், வரலாறு மன்னிக்காது. இயற்கை நீதி பதில் சொல்லும். ஹர்த்தால் நடத்தி சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்காமல், இராணுவ எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் தொடர்பாக கொழும்பில் உள்ள ஐஎம்எப் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளை சந்திப்பது பற்றிச் சிந்திப்பதே சிறந்த பரிகாரம். இராணுவ எண்ணிக்கை குறைப்பு பரிந்துரை தமிழர்களுக்கானது அல்ல. இலங்கையின் பொருளாதார நெருக்கடி மீட்சிக்கானது. இருந்தாலும், அழுத்தம் கொடுத்து குறைந்த பட்சம் இராணுவ எண்ணிக்கை குறைக்கும் பணியையாவது உருப்படியாக செய்ய வேண்டும். அத்துடன், ஜெனீவா மனித உரிமை சபைக்கு எழுத்து மூலம் உடனடியாகவும் கூட்டாகவும் அறிவிக்கவும் வேண்டும். மாறாக... இது இன அழிப்பு என்று தமிழ் ஊடகங்களுக்கு மாத்திரம் போலியாகக் கருத்துச் சொல்லி, கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் வியூகங்களை வகுக்க வேண்டாம். இப் பிழையான அரசியல் உத்திகள் ஊடே சர்வதேசச் சட்டங்கள், புவிசார் அரசியல் தன்மைகளை அறிந்து அதன் ஊடாக காய் நகர்த்தும் இராஜதந்திர முறைமை, 2009 இற்குப் பின்னர் தமிழ்த் தரப்பிடம் அற்றுப் போயுள்ளது என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. இராணுவ ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றம் என்பதன் ஊடாக தமிழ் மரபு அடையாள அழிப்பு நடவடிக்கைகள் வெவ்வேறு வடிவங்களில் 2009 இற்குப் பின்னரும் அரங்கேறுவதற்கு இதுவே காரண - காரியம் என்பதும் பட்டவர்த்தனம். ஆனால் இயற்கை நீதியும் மக்களின் சமகால பட்டறிவு - உணர்வுடன் கூடிய புரிதல்களும் பலருடைய வாக்கு வங்கிச் சரிவை ஏற்படுத்தும் என்பது கண்கூடு... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid033Brh5tG5HfTNqrkELWcoZy3LPn39sDRg411GtATRu2PzgKsDEEy7EivmTZLyB53il/?
  17. 2015 இல் சுமந்திரன் தொடக்கியதை 2025 இல் கஜேந்திரன் முடித்து வைக்கிறார். ஆணையாளரின் பதில் கடிதம் சொல்லும் சொல்லாத செய்திகள்! - --- --- --- ---- ----- *உள்ளகப் பொறிமுறையே பிரதானம். *தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கோரிக்கைகளை முன்வைக்கக்கூடாது. சொல்லாது சொல்லும் செய்தி என்ன? *ஜேவிபி அரசாங்கத்தை உருப்பெற வைப்பது! *சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இலங்கை தானாக இணைந்தால் சிறப்பு, ஆனால்...! *இன அழிப்பைப் பற்றி மேலோட்டமாக கதைக்கலாம். குறிப்பாகவோ வலுவாகவோ அதைக் கேட்கக் கூடாது. *சுமந்திரன் 2015 இல் ஓடிக் கொடுத்த Relay Race, 2025 இல் கஜேந்திரகுமார் நிறைவு செய்தார். --- ----- --- --- ------ கஜேந்திரகுமாருக்கு அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில் உள்ள பிரதான இரண்டு ஆங்கிலச் சொற்களின் பிரகாரமும், கொழும்பில் உள்ள சில இராஜதந்திர வட்டாரங்களோடு இன்று சனிக்கிழமை உரையாடிய விளக்கத்தை மையப்படுத்தியும் இக் கட்டுரையை எழுதுகிறேன்... ஜெனீவா மனித உரிமை சபையின் ஆணையாளருக்கு தமிழ்த்தேசிய பேரவை அனுப்பிய கடிதத்திற்கு பதில் கிடைத்திருப்பதாக பெருமைப்படுகிறார்கள். ஆனால், உண்மை நிலையோ வேறு! அந்த பதில் கடிதத்தின் உள்ளடக்கம் - பொருள் என்ன என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆணையாளர் தன்னுடைய பதில் கடிதத்தில் இலங்கையும், மனித உரிமை சபையும் செய்யவுள்ள “பொறுப்புகள்” பற்றி இரண்டு ஆங்கிலச் சொற்களில் வரைவிலக்கணம் செய்கிறார். 1) Comprehensive Process (SL) 2) Complementary Strategies (OHCHR & UNHRC) இந்த இரண்டு சொற்களையும் விரிவாக ஆராய்ந்தால்-- 1) Comprehensive Process (SL) என்ற ஆங்கிலச் சொல்லின் உள்ளடக்கம் என்பது இலங்கையின் ‘விரிவான செயல்முறையை’ குறித்து நிற்கிறது. அதாவது, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையையும் சர்வதேசத்தின் நம்பிக்கையையும் இலங்கை முதலில் வென்றெடுக்க வேண்டும் என்ற தொனியில் அச் சொல் அமைகிறது.. இன்னும் அழுத்திச் சொல்வதானால் பொறுப்புக்கூறல் என்ற முறையில் இலங்கைக்கு இருக்கக்கூடிய ஆகக் குறைந்த செயல் வடிவம் அது. 2) Complementary Strategies என்ற ஆங்கிலச் சொல்லின் உள்ளடக்கம் என்பது ‘குறை நிரப்புகின்ற மூலோபாயம்’ என்பதைக் குறித்து நிற்கிறது. அதாவது, இலங்கை நடத்துகின்ற உள்ளக விசாரணைகளின் பற்றாக்குறைகள் அல்லது விடுபட்டுள்ளதாக கருதப்படுகின்ற விவகாரங்கள் சிலவற்றுக்கு குறுகிய சில நடவடிக்கைகளை பொது நியாயாதிக்கம் எனப்படும் (Universal Jurisdiction System) முறை ஊடாக சில நாடுகளின் நீதிமன்றங்கள் வேண்டுமானால் பார்த்துக்கொள்ளலாம். மனித உரிமைச் சபை உப்புச் சப்பற்ற தீர்மானத்தைக் கவனிக்கும் அல்லது அந்த விசாரணைகளுக்கான ஏற்பாடுகளை செய்யும் என்ற பொருளில் அது அமைகிறது. அதேநேரம், இலங்கை செயற்படுத்த வேண்டிய, விரிவான செயல்முறை என்ற Comprehensive Process என்ற ஆங்கிலச் சொல்லில் இருந்தும், ஆணையாளர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ள சில விடயங்களில் இருந்தும் மேலும் சில கற்பிதங்களை புரியக் கூடியதாகவுள்ளது. அதாவது, செயல் திறன் மிக்க நியாயமான(Independent fair) அதுவும் சர்வதேச சட்டங்களின் நியமங்களை முழுமையாக திருப்பித்திப்படுத்தக் கூடியதாக இலங்கை நடத்தவுள்ள உள்ளக விசாரணை அமைய வேண்டும் என்ற தொனி தெரிகிறது. அதாவது ஆணையாளர் மறைமுகமாக என்ன சொல்ல வருகிறார்? சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court - ICC) இலங்கை முதலில் வேண்டுமானால் இணைந்து கொள்ளலாம். மனித உரிமைகள் பற்றி சர்வதேச மட்டத்தில் ஏற்கப்பட்டுள்ள மனித உரிமைகள் விதிகள் அனைத்தையும் இலங்கை ஏற்றுக்கொள்வது நல்லது. ஆனால், இவையெல்லாம் பழைய குற்றங்களுக்கு செல்லுபடியாக வேண்டியது இல்லை. எதிர்காலம் மட்டுமே முக்கியம். கடந்தகாலப் பொறுப்புக்கூறல் கண்துடைப்பாக இருந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை. ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய ஐ நா உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டிருக்கிறது. ஆகவே, எதிர்வரும் காலத்தில் எப்போதோ ஒரு நாள் ICC இல் இலங்கையை இணைத்த பின்னர் நடத்தவுள்ள விசாரணை எப்படிப்பட்டதாக இருக்கும்? இலங்கை இணைந்தாலும் ஈழத்தமிழர்கள் கோருகின்ற விசாரணைகள் நடைபெறக் கூடிய வாய்ப்புகள் இருக்காது. அப்படி நடந்தாலும் கூட ஜேவிபி என்பிபி அரசாங்கத்தின் காலத்தில் இருந்து தான் விசாரணைகள் நடைபெறலாம். ஏனெனில், ஆட்சி மாற்றம் என்பதை அமெரிக்கா போன்ற மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகள் நம்புகின்றன. Universal Jurisdiction System என்ற முறைமை ஜெனீவாவினால் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவ உயர் அதிகாரிகள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அந்தந்த நாடுகளில் வைத்து அவர்களை விசாரணை செய்யும் முறை. ஆகவே, Universal Jurisdiction என்ற இந்த மாதிரியான பலவீனமான முறைமைகள் நடைமுறையில் சில மேற்கு நாடுகளிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இருப்பதால், அந்த நடைமுறைகளையும் வைத்துக் கொண்டு, இனிமேல் பழைய குற்றங்கள் பற்றிய பொறுப்புக்கூறலை நீர்த்துப்போகச் செய்வதே மேற்குலகத்தின் பிரதான இலக்கு. ஆனால், மனித உரிமை பேரவையில் இதைத் தொக்க வைத்திருந்தால், இலங்கையில் எதிர்பாராத நிலை ஏதும் ஏற்பட்டால் மீண்டும் அழுத்தத்தை அதிகரிக்கலாம். ஆனால் இப்போதைக்கு இல்லை. அதாவது, புதிய ஆட்சியில் புதிய நகர்வுகளை மேற்கொள்ளும் திட்டமாகவே (Comprehensive Process (SL) (Complementary Strategies -OHCHR & UNHRC) என்ற இந்த இரண்டு ஆங்கிலச் சொற்களும் அமைந்துள்ளன என்றால் அதில் மாற்றுக் கருத்தில்லை. அதாவது, பழைய விவகாரங்களைக் கைவிட்டு புதிய அணுகுமுறையில் சென்று தமக்குரிய புவிசார் அரசியல் - பொருளாதார நலன்களில் மேற்கு - ஐரோப்பிய நாடுகள் செயற்படுவதற்கு ஈடாகவே ஆணையாளரின் பதில் அமைந்துள்ளது. அதற்கு ஏற்பவே தமிழ்த் தேசிய பேரவையும் கடிதத்தை தயாரித்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஐ.நா அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு அல்லது அவர்களின் ஆலோசனையின் (Advice) பிரகாரம் கடிதம் எழுதியிருக்கலாம் என்பதிலும் சந்தேகம் இல்லாமலில்லை. இன அழிப்பு விவகாரம் பற்றி சர்வதேச நீதிமன்றத்தில் (International (Court of Justice -ICJ) ஈழத்தமிழர்கள் ஏதேனும் ஒரு நாட்டை பிடித்து வழக்குத் தாக்கல் செய்தால், இலங்கை, அமெரிக்க- இந்திய அரசுகளின் புவிசார் அரசியல் - பொருளாதார நலன்களுக்கு ஒத்திசைவாக இருக்காது என்ற நோக்கில், ஈழத்தமிழர் விவகாரத்தை ஐநா இவ்வாறு கையாளுகிறது. இப் பின்புலத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் 2015 இல் ஓடிக் கொடுத்த அஞ்சல் ஒட்டத்தை (Relay Race) 2025 இல் கஜேந்திரகுமார் நிறைவு செய்துள்ளார் என்றே பொருள் கொள்ள முடியும். பிரபல ஜிகாதியாக அறியப்பட்ட அல்-ஜூலானி என்பவரின் தலைக்கு பத்து மில்லியன் கொடையாக சில வருடங்களுக்கு முன் அறிவித்திருந்தது அமெரிக்கா. தற்போது, அப்படியான பயங்கரவாத ஜிகாதியோடு அதே அமெரிக்கா கைகோர்த்து சிரியாவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, ஜேவிபியோடு கூட்டு வைப்பதில் மேற்கு - ஐரோப்பிய நாடுகளுக்கு எந்த ஒரு வில்லங்கமும் இருக்காது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர் https://www.facebook.com/1457391262/posts/pfbid03ddadDcotUwMxUHCdKHhsMJT5ctijLnSzg8gpUfndY4oydbKoVGi6Mv6CS1rGqE6l/?
  18. நொச்சியாகமவில் இலக்கு வைக்கப்பட்ட சிறிதரன் எம்.பி! புலனாய்வு விசாரணை தீவிரம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.