Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இந்த திரியில் என்ன கருத்தை எழுதினீர்கள் அது எடுபடாமல் போக? நான் ஒரு ஐந்தாம்படை என எழுதினீர்கள். அதை விளக்கி நான் பதில் எழுதியுள்ளேன். இதில் எங்கே சாத்ஸ் கருத்து எழுதினீர்கள்?
  2. ஒன்றில் நீங்கள் மனதில் ஒன்றை நினைத்து, ஆனால் அதை எழுதாமல் எழுத்தில் வேறு எதையோ எழுதுகிறீர்கள்…. அல்லது…. You are moving the goal post as the game unfolds….. இதை முன்பும் நான் உட்பட பலர் அயர்சி தரும் தர்க்கம் என யாழில் குறிப்பிட்டுள்ளோம். மெளனம் சம்மதம்.
  3. 👆மாரடைப்பு கேஸ் இலக்கம் 1 🤣. நம்ம சாத்ஸ் முன்பு புலிகளின் அதி தீவிர அனுதாபி. இப்ப எப்படி அனுரவுக்கு முட்டு கொடுப்பாரோ அப்படி புலிகளுக்கு முட்டு கொடுப்பார் (வேறு ஐடி). எனது புலி விமர்சனம் அவரையும் என்னையும் முரண்பட வைத்தது. ஐடி மாறினாலும் மனிசன் என்மேல் வைத்த பார்வை மாறவில்லை. மாற வேண்டிய அவசியமும் இல்லை.
  4. வழவனுக்கு இன்னொரு திரியில் புலிகளின் கட்டாய ஆட்சேர்பு பற்றி எழுதிய பதிலை கண்டிருப்பீர்கள். அந்தளவுக்கு உறவினருக்கு நடந்தது வரைக்கும் போக தேவை இல்லை… என் தந்தைக்கு சொந்தமான மிக விலை உயர்ந்த வாகனத்தை எடுத்து போனார்கள். நாங்கள் பாஸ் எடுத்து வந்த பின்னும், குடும்பத்தில் ஒருவரும் தமது பகுதியில் இல்லை என கூறி மிக பெறுமதியான எமது வீட்டை எடுத்து கொண்டனர். இரண்டையும் மீட்க போன எனது பெற்றாரை அலைகழித்து, அவர்கள் முகாமில் இருக்கும் போது அது வான் தாக்குதலுக்கு உள்ளாகி கிட்டதட்ட இதனால் என் தாயார் உயிரை கூட இழக்கும் நிலை ஏற்பட்டது. இந்த இரு விடயங்களும் அதி உச்ச தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும் பயனிருக்கவில்லை. இத்தனைக்கும் பின் சமாதான காலத்தில் ஊருக்கு போன போது, அலுவலகம் அழைக்கப்பட்டு, வெளிநாட்டு விலாசம் தமது பங்களிப்பு ரெஜிஸ்டரோடு சரிபார்க்கப்பட்டே விடப்பட்டேன். இப்படியான அனுபவங்கள் பலருக்கும் இருக்கும். ஆனால் இவற்றால் அவர்கள் மீது கோவம் வந்தாலும் வன்மம் வரவில்லை - பின்னாளில் சட்டத்துக்கு உட்பட்ட உதவிகள் கேட்டபோதும் மறுக்கவில்லை. ஏன் என்றால் அவர்கள் இதை என்ன குறிக்கோளுக்காக செய்கிறார்கள் என்ற தெளிவு இருந்தபடியால். இந்த நம்பிக்கைதான் அவர்களுக்கும் அசாத்துக்கும் உள்ள வித்தியாசம். அசாத் புலிகள் செய்ததை போல் நூறு மடங்கு அநியாயத்தை தன் குடும்ப நலனுக்காக செய்தார். புலிகள் செய்த அநியாயங்கள் அநேகம் இன நலனை நோக்கியே இருந்தது. இதை தவிர்த்து விட்டு ஒத்த கோடு கீற முடியாது. தலைவர் இறந்த போது உலகம் தமிழர் அத்தனை பேரும் (சிலர் நீங்கலாக) துக்கித்தானர். அசாத்? அவரது அலவி சமூகமே ஆர்பரித்து வரவேற்கிறது. இதுதான் வித்தியாசம்.
  5. நான் எதையும் போட்டியாக எடுப்பதில்லை. ஆனால் இங்கே நான் சொன்னது…ஆரம்பம் முதலே உங்கள் அசாத்-புலிகள் ஒத்த கோடு வரைதல் என்பது பிழையானது, விசமத்தனமானு என்பதை மட்டுமே. அதற்கு ஆதாரம் என பாலசிங்கம் கூறிய பேட்டி என second, third hand interpretation ஐ காட்டியவர் நீங்கள். அதற்கான ஆதாரத்தை கூட நானும் இன்னும் ஒருவரும்தான் பதிந்தோம். உங்கள் கோடு வரைதல் பிழை என பலர் எழுதிய பின் “எல்லாரும் என் கருத்தோடு ஒத்து போகிறார்கள் என்று எழுதினீர்கள்🤣”. உங்களுடனான தர்க்கங்கள் வழமையாகவே இப்படி என்ன கையை பிடிச்சு இழுத்தியா என்றே முடியும் என்பது என் அனுபவம். அதைத்தான் சொன்னேன். இவை பட்டங்கள் பெயர்கள் இல்லை. யாழில் உடைக்கப்பட்ட குட்டு. நான் மட்டும் இல்லை - பலரும் இதை அவதானித்தனர். மேலே நான் எழுதியதற்கு வந்த பின்னூட்டங்கள் இதை சொல்லும். ———- நான் புலிகளுக்கு கண் மூடித்தனமான ஆதரவை கொடுக்கிறேன் என நீங்கள் எழுதியதை வாசித்து பல பழைய காய்களுக்கு மாரடைப்பு வராத குறை🤣. கீழே விளக்கத்தை பார்க்கவும்.
  6. உண்மையில் எனக்கு ஐரோப்பா ஒரு நட்பு சக்தியாக இருக்கும் ரஸ்யாவையும் சேர்த்து கொண்டு அமெரிக்காவுக்கு நிகரான பொருளாதார சக்தியாக வளர்வதில் விருப்பம் உண்டு. 2008 ஆண்டு கிட்டதட்ட சமனாக இருந்த ஈயூ அமேரிக்க பொருளாதாரங்கள் இப்போ 1:3. ஆனால் புட்டின் இருக்கும் மட்டும் இது சரிவராது.
  7. காரணங்கள் பல 1. சுமந்திரனின் வாய். இனப்படுகொலை வரைவிலக்கணம் முதல், புலிகள் மீது அவர் பொதுவெளியில் முன் வைத்த பல விமர்சனங்கள். இதுதான் புலம்பெயர் தேசத்தில் பலர் சுமனை மூர்க்கமாக எதிர்க்க காரணம். இன்று வரை கோஷானை சிலருக்கு யாழ் களத்தில் கண்ணில் காட்ட ஏலாது. காரணம் புலிகளை விமர்சிப்பது. ஆனால் கோஷான் கருத்தாளர். சுமந்திரன் மக்கள் பிரதிநிதி. கோஷானை போல் சுமந்திரன் வாயை விட முடியாது, கூடாது. 2. சுமனின் ஈகோ, நடக்கும் பாங்கு - நீங்களே எழுதியதுதான். கூடவே மாறி மாறி ஆட்களை கவிழ்ப்பது. கட்சிக்குளே சில்லறை பொலிடிக்ஸ் செய்வது. 3. சுமன் ரணில் உள்ளே அனுப்பிய ஐந்தாம் படை என்ற சந்தேகம். மேலே சொன்ன சில்லறை பொலிடிக்ஸ் மூலம், தமிழர் ஒற்றுமையை ரணிலின் ஏஜெண்ட்டாக இவர் குலைக்கிறார் என்ற சந்தேகம். 4. மதம் - மிக சிலருக்கு இது ஒரு பிரச்சனை. கேட்டால் இல்லை என்பார்கள். ஆனால் இதே ஆட்கள் சாணாக்கியனையும் கட்டம் கட்டுவார்கள். சிலவேளை அவர்களே அறியா unconscious bias ஆக இருக்கலாம் 5. எம்மை போல் அல்லாதவர் - கோட் சூட், நல்ல ஆங்கிலம், கொழும்பு வளர்ப்பு, மீசை இல்லை - இதை ஒரு typical முதல் தலைமுறை புலம்பெயர் தமிழ் மனிதனோடு ஒப்பிட்டால் - பலத்த வித்தியாசம் இருக்கும். இந்த வேற்றுமை சந்தேகத்தை கொடுக்கிறது. 6. ஶ்ரீயின் அடிப்பொடிகள் - அவர் மீதான அட்டென்சனை திசை திருப்ப சுமனை அடிப்பது. 7.மேலே சொன்ன பலதில் ஶ்ரீ அமசடக்கியாக இருப்பதால், சுமன் அளவு மோசமானவராக இருப்பினும் அவர் வாங்குல் அடி குறைவு.
  8. அண்ணையான சொல்லுறன்… உந்த ஹோட்டல் காரன் ரூபவாகினியில மணிக்கொரு தரம் விளம்பரம் போட்டாலும் உங்கள் அளவுக்கு அவர்கள் வியாபாரத்தை பிரபல்ய படுத்தி இருக்க முடியாது🤣
  9. சில சுவாரசியமான தகவல்கள்: 1. அசாத் இலண்டனில் ஒரு கான்சர் டாக்டர் (ஒன்கோலொஜிஸ்ட்) வேலை பார்த்த சமயம் இங்கே பிறந்து வளர்ந்த சிரிய பெண்ணை மணம் முடித்தார். மாமனார் குடும்பமும் இங்கேதான். அப்போதெல்லாம் அதிர்ந்து பேசாத, தானுண்டு வேலை உண்டு என இருக்கும் மனிதனாம் அசாத். இவரின் சகோதரந்தான் அரசியல்வாரிசாக வளர்க்கப்பட்டார். அவர் கார் விபத்தில் இறக்க இவர் சிரியா போய் அவர் இடத்தை நிரவினார். 2. அசாத் ரஸ்யாவில் கிட்டதட்ட பணய கைதியாக இருக்கிறாரோ என நான் நினைக்கிறேன். சிரிய அதிபரின் டெலிகிராம் சேனலில் அசாத்தினது என ஒரு அறிக்கை வந்துள்ளதாம் -அதில், தான் எப்போதும் நாட்டை விட்டு ஓட முயலவில்லை, சிரியாவில் உள்ள ரஸ்ய தளத்தை மேற்பார்வை செய்ய சென்ற இடத்தில், ரஸ்யர்கள் எனது பாதுகாப்புக்கு இதுவே சரியான முடிவு என கருதி என்னை மஸ்கோ அனுப்பினர் என எழுதியுள்ளாராம்.
  10. அனுரவுக்கு நல்லாத்தெரியும் இது தனியே மொழிப்பிரச்சனை இல்லை என ஆனால் அப்படி சுருக்கி வைப்பதுதான் அவர்களின் பாணி இனவாதம். ரணிலை கேட்டால் இது பொருளாதாரம், அபிவிருத்தியின்மை பிரச்சனை என்பார். ஜேவிபி இது வெறும் மொழிபிரச்ச்னை என்று சொல்லும். ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.
  11. 🤣 உப்பு அறவே கூடாது…ரோசம் கீசம் வந்து தொலைச்சால் கோஷ்சனால் யாழில் எழுதேலுமே🤣
  12. என்மேல் கடுப்பு எண்டால் நேரா எனது பிழைகளை எழுதி என்னை ஏசலாம்… பிழை எனில் மன்னிப்பு கேட்பேன். இல்லை எனில் மறுத்துரைப்பேன். பந்தி பந்தியா ரணிலை வச்சு செய்து போட்டு, கடைசில ஒருவரி கோசானை போல என எழுதாமல்🤣.
  13. தினேஷ் ஷாப்டர் வழக்கை துப்பு துலக்கிய இரெட்டை குழல் துப்பாக்கிகள் நீங்களும் சாத்ஸ்சும் @satan யாழ்கள ஜேம்ஸ்பாண்ட் + எம். நீங்களே எங்களை சுட்டினால்? அந்த ரக்பி பிளேயர் பெயர் வசீம் தாஜுடீன்.
  14. உண்மைதான்…2/3, மீதி எல்லோர் மீதும் வெறுப்பு ….இதை வைத்து, இவர்களை கொண்டே வேலையை முடிப்போம் என இந்தியா நினைப்பது போல் உள்ளது. மேற்கின் அரசியலில் only Nixon can go to China. என ஒரு விடயம் சிலாகிக்கப்படும். சீனப்புரட்சிக்கு பின் மேற்கின் குறிப்பாக அமெரிக்க ஒழுங்கில் இருந்து சீனா வெகு அந்நியப்பட்டு நின்றது. 1965 களில் பலரும் அமெரிக்கா சீனாவுடன் நேரடி உறவை ஆரம்பிக்க வேண்டும் என கருதினர். ஆனால் கம்யூனிச சீனாவை ஏற்பது முதலாளிதுவ, பனிப்போர் கால அமெரிக்காவில் உள்ளூர் அரசியலில் ரிஸ்க்கான விடயம். இடது சார்பு ஜனநாயக கட்சி இதை செய்தால் எதிரிக்கு விட்டு கொடுப்பதாக பிரச்சாரம் செய்யப்படும். ஆகவே கடும் கம்யூனிச எதிர்பாளரான நிக்சந்தான் இதை செய்யமுடியும் என்பதே இதன் பொருள். அப்படித்தான் நிக்சன் அமெரிக்க-சீன உறவை மீள ஸ்தாபித்தார். அதே போல் ஜேவிபி அளவுக்கு புலிகளை தவிர இலங்கையில் இந்தியாவை எதிர்தவர்கள் எவரும் இல்லை. ஆகவே தாம் கேட்பதை அதிக எதிர்பின்றி தர ஜேவிபியால் முடியும் என இந்தியா நினைக்கக்கூடும்.
  15. என்ன புலவர் இதெல்லாம் - குல தெய்வம் கோவிலில் எது ஐயர்? போனது ஆகம முறைப்படியான கோவிலுக்கு. அங்கே ஐயர் சமஸ்கிருத மொழியில்தான் முழுவதும் செய்தார். அண்ணை பவ்வியமாக நின்றார். யாழில் ஒரு திரியே ஓடியது. தேவையான வீடியோக்கள் முழுவதும் அதில் உண்டு.
  16. எல்லாமும் எமது சமூகத்தின் அங்கம்தானே. யாழில் அண்மையில் நடந்த நல்ல விடயங்களில் ஒன்று நீங்கள் எழுத தொடங்கியது. முதுகு சொறியவில்லை. நீங்கள், @பகிடி, தில்லைவிநாயகம் ஐயா போன்றோர் யாழுக்கு புது ரத்தம் பாச்சுவதாக நான் உணர்கிறேன். இப்போ @RishiKயும் காத்திரமான கருத்துக்களை எழுதுகிறார். கடந்த ஆறு மாதத்தில் யாழ் ரொம்பவே பன்முகபட்டு மெருகேறியுள்ளது. முட்டல் மோதல் தவிர்க்கவியலாது ஆனால் பலர் தெண்டித்து குழு வாதத்தை தவிர்கிறார்கள். அனுர காதல் கடிதத்தை சுக்கல் சுக்கலாக கிழிக்கும் போது பொலிடோல் குடிக்காமல் விட்டால் சரி🤣
  17. 🤣 நீங்க எழுதுற ஒசிலுக்கு காசு வேற தரோணுமாக்கும்🤣 வாலி அந்த காலத்தில் போட்ட “ரோ மாமா” அபிநய வீடியோக்கள் யாரோ ஒரு மனிசனின் வியூவர்ஸை கூட்டி இருக்கும்🤣.
  18. @நன்னிச் சோழன் என்னடா தம்பி சிரிப்பு🤣. நீங்கள் மட்டும் இல்லை என்றால் - நான் இண்டைக்கு வரைக்கும் நம்பி உரையாடிக்கொண்டிருப்பேன்🙏.
  19. நீங்கள் புதிசுதானே? 🤣 சில விடயங்கள் யாழ் கள உறவுகள் குறைந்தது நால்வர் தனி தனியாக கையாளப்பட எத்தனித்து - எதேற்சையாக அது வெளி வந்து - ஒரு குட்டு உடைக்கப்பட்டது. குட்டை உடைத்தவர்களுக்கு யாழ் நிர்வாகமும் நன்றியை சொல்லி இருந்தது. இது நடந்தது அநேகம் திண்ணையில். அநேக யாழ்கள உறுப்பினர்களிற்கு குறித்த நபர் யாரென்பதும் - அவர் இயற்பெயர், வெளி உலகில் அவர் நடத்தும் இந்திய சார்பு இணையத்தளம் என்ன என்பதும் தெரியும். யாழில் இந்திய எதிர்ப்பு வேஷம். ஆனால் உண்மையான நோக்கம் மேற்கை நோக்கி புலம்பெயர் தமிழர்களை திருப்புவது. சும்மா சொல்லக்கூடாது - மஹாராசன் - தொழில் ரொம்ப சுத்தம். வாங்குவற்கும் மேலாலயே கூவிறாண்டா கொய்யால ரகம். மற்றையவர் தான் இந்திய இராஜதந்திரிகளிடம் பேசுவதாக அவரே யாழில் கூறி உள்ளார். இவர் காசு வாங்காமலே கூவும் ரகமாக இருக்க கூடும் என்பது என் அனுமானம். இலங்கையில் இவ்வளவு மினக்கெடும் இந்தியா - யாழ் போன்ற ஒரு தளத்தில் ஊடுவாது விட வாய்ப்பே இல்லை. அது யார் என்பதை உய்தறிவது கஸ்டம் ஆனால் முடியாத காரியமில்லை. Rule of thumb - 1. யார் இந்தியாவை கடுமையாக எதிர்ப்பது போல் காட்டி கொள்கிறார்களோ, குறிப்பாக ஹிந்தியா போன்ற வார்த்தைகளை பயன்படுத்திகிறார்களோ - அவர்கள் மீது ஒரு கண் வைக்க வேண்டும். (நெடுக்காலபோவான் விதி விலக்கு). 2. கணக்குகள் 2009 க்கு பின் உருவானவையாக இருக்கும்.
  20. பிரபல டவாலி கோசானின் கருத்துப்படி… ஒப்பந்தங்கள் வாய்மூல ஒப்பந்தங்களாகவும் இருக்கலாம். அதே போல் இந்த உறுதிமொழியும் வாய்மூலமாக இருப்பினும் அது அமல்படுத்தபடலாம்…ஆனால் அது தகுந்த அதிகாரியால் கொடுக்கப்பட்டதா, அந்த அதிகாரம் அவருக்கு இருந்ததா, இதனால் சபைக்கு வியாபாரிகள் கொடுத்த அனுகூலம் என்ன உட்பட பல விடயங்கள், சூழமைவு தெரிந்த பின்பே இது செல்லும், செல்லாது என சொல்ல முடியும். இது முன்னர் இருந்த நடைமுறையாயி இப்போ இதை ஏன் கைவிட்டனர் என்பதை சபை விளக்க வேண்டி வரும்.
  21. தம்பி…. அந்த வடை (பாலசிங்கம் கொடுத்த பேட்டியின் நகல்) இன்னும் வரவில்லை. அது வரும் வரைக்கும் நீங்கள் வாயால் வடை சுடுவது அம்பலம் ஏறாது. புலிகள் தமது இருப்புக்காக அல்ல இனத்தில்ல்ன் இருபுக்ககாகவே மாற்று இயக்கங்களை தடை செய்தனர். அசாத், புட்டின் தம் தனிமனித இருப்புக்காக ஒப்பிடவே முடியாத பெரும் மனித அழிவுகளை உருவாக்கினர். இரெண்டும் ஒன்றே - புலிகளின் தலைவரின் இருப்புக்காகவே அவர்கள் மாற்று இயக்கத்தை தடை செய்தானர் என்பது உங்கள் வாதம். உங்கள் co-conspirator தவிர வேறு யாரும் இதை யாழில் ஆதரிக்கவில்லை.
  22. நீங்கள் ஜேர்மனியில் எந்த கட்சியில் இருந்தாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை அண்ணை. ஆனால் ஜேர்மனியின் எந்த கட்சியாயினும் அவர்கள் எல்லாரும் பிரதிநிதிதுவ ஜனநாயகம். சட்டதின் ஆளுமை, ஐரோப்பிய மனித உரிமை சாசனம் போன்ற சட்டங்களும் விழுமியங்களும் மதிக்கப்படும் ஒரு நாட்டில்தான் தம் அரசியலை செய்கிறனர். நீங்கள் AfD இல்லை என நினைக்கிறேன். கிரீன்ஸ் ஆக இருக்கலாம் என ஊகிக்கிறேன். ஆனால் நீங்கள் ரஸ்யாவையும், சீனாவையும், ஈரானையும் - மேற்கில் உள்ள ஜனநாயக நாடுகளோடு ஒப்பிட்டு எல்லாம் ஒன்றே என எழுதும் போது தான் பிணக்கு வருகிறது. இப்படி எழுத: 1. நீங்கள் சும்மா டைம்பாசுக்கு எழுத வேண்டும் அல்லது 2. மேற்கின் மீதான வெறுப்பில் எழுத வேண்டும் 3. அல்லது இன்னும் இருவர் போல் சம்பளத்துக்கு எழுத வேண்டும். இதில் மூன்றாவது இல்லை என அறுதியாக தெரியும். முதலாவதை ஒரு அளவுக்கு மேல் செய்ய முடியாது, ஆகவேதான் 2வது என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. இது மட்டும் அல்ல - எமது இழப்பில் மேற்கு அளவுக்கு ரஸ்யா, சீனா வுக்கு பங்கு இருக்கிறது என உங்களை விட வேறு எவருக்கும் தெரிந்ததல்ல. இருந்தும் மேற்கை மட்டுமே பழி சொல்வதுடன், ஒரு படி மேலே போய் ரஸ்யாவுக்கு முட்டு கொடுக்க வேண்டும் என்பதால் - இந்தியா புலிகள் விடயத்தில் நடந்தது கூட சரி என்று எழுதினீர்கள். இதை வேறு எப்படி விளங்கி கொள்வது? புலிகள் விடயத்தில் இந்தியா நடந்தது சரி, என வாதாடும் அளவுக்கு உங்களுக்கு புட்டின் காதல். இப்படி காரைக்கால் அம்மையார் கடவுள் மேல் கொண்டதை ஒப்ப உங்கள் புட்டின் மீதான காதல் ஏன் வந்தது? அவர்தான் மேற்கின் எதிரி நம்பர் 1. அதே போல மேற்கில் எந்த பிழை இருந்தாலும், நாம் இலங்கையை விட பலமாக இருப்பது இங்கே மேற்கில்தான். எனவே மேற்கினூடுதான் எமக்கு ஒரு தீர்வு வர வாய்ப்பு அதிகம். ஒரு போதும் ரஸ்யா, சீனா மூலம் இது வராது. இது தெரிந்தும், பலதடவை எடுத்து சொல்லியும் நீங்கள் - தமிழருக்கு இரு தரப்பும் ஒன்றே என்ற பொய் சமன்பாட்டை மீள மீள எழுதிவருகிறீர்கள். இவை எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்தால் - நீங்கள் மிக மோசமான மேற்கு எதிர்ப்பு மனோநிலையில் அவதிபடுவது தெளிவு. இது அநேகமாக உங்களோடு முரண்படும் நான் மட்டும் கண்ட உண்மை அல்ல. இதை உங்களுடன் மிகுதி அனைத்திலும் உடன்படும் நண்பர்கள் கூட எழுதியுள்ளார்கள். பிகு தனிப்பட்டு உங்களுக்கு தனிமனித துதிபாடும் hero worshipping tendency உள்ளது எனவும் நான் அபிபிராயப்படுகிறேன். தலைவருக்கு முன்பு முட்டு கொடுப்பீர்கள் அது நியாயமானது (இப்போ எல்லாம் இதை கடந்து போய் விடுகிறீர்கள், மினகெடுவதில்லை), ஆனால் அதே வீரியத்துடன் சீமானுக்கும், புட்டினுக்கும், லேட்டஸ்டாக அனுரவுக்கும் முட்டு கொடுக்கும் போது - தொலைந்த காதலியை காணும் பெண்களில் எல்லாம் தேடும் காதலன் போல தலைவரை இவர்களில் project பண்ணுவதாகவே எனக்கு படுகிறது. இதுவும் உங்கள் மேற்கு எதிர்ப்பை வலுபடுத்துவதாக நான் எண்ணுகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.